Loading

நினைவுகள்-4

“ஸ்கூல் லெவல்ல ஃபர்ஸ்ட் த்ரீப்ளேஸ்ல கூட வரலை.” எனக் கூறிய வகுப்பாசிரியர், ராதிகாவின் வாடிய முகத்தைத் பார்த்து விட்டு, டோண்ட் வொர்ரி ராதிகா. தவுசண்ட் ஒன் செவன்டி சிக்ஸ் நல்ல மார்க் தான்… பட் உன் ஆம்பிஷன் மெடிக்கல் தானே … அதான் யோசிச்சேன். ஃபர்ஸ்ட் த்ரீ ப்ளேஸ்ல வந்தா படிப்பு செலவை நம்ம ஸ்கூல்லேயே ஏத்துப்பாங்க.

பரவாயில்லை விடுமா. மேபி நீட் எக்ஸாம் இருந்தாலும், இருக்கலாம்னு சொல்றாங்க பார்ப்போம். ஆல் த பெஸ்ட் ராதிகா.” என்றார்.

ராதிகாவின் முகமோ தெளிவில்லாமல் இருந்தது.

அவரது ஆசிரியரோ, அவளது தெளிவில்லாத முகத்தைப் பார்த்து, ” ராதிகா…” என்று அழைத்தவர், அவள் நிமிர்ந்து பார்க்கவும் தனியே அழைத்துச் சென்று சற்று நேரம் பேசினார்‌.

சண்முகமோ, மகளது கனவு மருத்துவராவது தான் என்பதை அறிந்து கவலையில் ஆழ்ந்தார்.

திரும்பி வந்த ராதிகா, தன் அப்பாவை பார்க்க. அவர் முகமோ கவலையாகத் தெரிந்தது. “அப்பா.”என அழைத்தாள்.

” இங்கே ஏதும் பேச வேண்டாம் மா. வீட்டில் போய் பேசலாம்.”என்றார் சண்முகம்.

போகும் போது இருந்த உற்சாகம், வரும் போது இருவரிடமும் இல்லை. அமைதியாக வீட்டிற்குள் நுழைந்த இருவரையும் பார்த்த சுந்தரி,”ஏன் டா? டல்லா இருக்கே. மார்க் குறைஞ்சிடுச்சா? பரவாயில்லை விடு டா.” என்று மகளை சமாதானம் படுத்தினார்.

வீட்டிற்கு போய் பேசலாம் என்ற அப்பாவும், வீட்டிற்குள் நுழைந்ததும் ஒன்றும் சொல்லாமல் அவரது ரூமிற்குள் சென்றது, அவளுக்கு இன்னும் கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது. அவர் தான் தனக்கு சப்போர்ட்டா இருப்பார் என நினைத்திருக்க, அவரின் மௌனம் இவளை கவலையில் ஆழ்த்தியது.

இதையெல்லாம் கவனிக்காமல் மகளை எப்பொழுதும் கவனித்துக் கொண்டு, தனது வட்டத்திற்குள்ளே இருந்தார் சுந்தரி.

“இந்தாடா அம்மு, ரொம்ப டயர்டா இருக்க. இதை முதல்ல குடி.” என ஒரு கப் ஆரஞ்சு ஜூஸைக் கொண்டு வந்து நீட்டினார்.

அதை வாங்கி அருந்தியவாறே,” அப்பாவுக்கு எங்கே மா?” என.

“இதோ அவருக்கு குடுக்குறேன். நீ முதல்ல குடி டா.”

” இல்லை மா. நானே போய் குடுக்குறேன். “, என்றவள், அவருக்கும் எடுத்துக் கொண்டு போய் கொடுத்து விட்டு, அவளும் அருந்தினாள்.

அவர் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள்,” அப்பா… என்னப்பா ஒன்னும் சொல்ல மாட்டேங்குறீங்க.” என அவர் கையைப் பிடித்துக் கொண்டு வினவ…

” ராது மா. நீ கேட்டு என்னால படிக்க வைக்க முடியாதுன்னு சொல்ல சங்கடமா இருக்கு. ” என மகளைப் பார்த்துக் கூற

” ஏன் பா… செலவு அதிகமாகும் என்று யோசிக்கிறீங்களாப்பா? ” என.

“அது வந்து மா… நீட் எக்ஸாம் இருந்தாலும், இருக்கலாம் என்று சொல்றாங்க. ஒரு வேளை நீட் எக்ஸாம் இருந்தா, அதுல செலக்டாகணும். அது மட்டுமில்லாமல் கவர்மென்ட் காலேஜ்ல சீட் கிடைச்சா பரவாயில்லை. அதுவே தனியார் காலேஜ்ல சீட் கிடைச்சாலும், நீ படிச்சு முடிச்சுட்டு வரதுக்குள்ளே கோடிக்கணக்கில் செலவாகும். அவ்வளவுக்கு நமக்கு வசதியில்லை மா.” என குரல் கம்ம கூறினார்.

அவர் மனமோ குன்றியது. ‘ இருப்பதோ, ஒத்த புள்ளை‌… அதை படிக்க வைப்பதற்கு கூட முடியாமல் இருக்கிறேனே!’ என தனக்குள் மறுகிக் கொண்டிருந்தார்.

அவரது முகத்தைப் பார்த்தவள் பதறி, ” அப்பா… நீங்க கவலைப் படாதீங்க. அவ்வளவெல்லாம் செலவாகாது. இங்க படிச்சா தான் நீங்க சொல்ற மாதிரி செலவாகும்.

பிலிப்பைன்ஸில் படிச்சா செலவு குறைவாகத் தான் ஆகும். ஓவெரால் தெர்டி லெக்ஸ் தான் ஆகும் பா.” என்று அலுங்காமல் அடுத்த குண்டை எடுத்துப் போட்டாள் ராதிகா.

 டங்கென்று சத்தம் கேட்டு சண்முகமும், ராதிகாவும் திரும்பிப் பார்த்தனர்.

 அங்கு சுந்தரி அதிர்ச்சியில் தன் கையில் இருந்த கிண்ணத்தை கீழே போட்டு இருந்தாள்.

 மகளுக்காக செய்த அல்வாவை கிண்ணத்தில் போட்டு எடுத்து வந்திருந்தாள். அங்கு ராதிகா கூறியதை கேட்டவள், அதை கீழே தவற விட்டிருந்தாள்.

  ராதிகாவோ அம்மாவை பார்த்ததும் தலையில் கையை வைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள்.

எப்படியாவது அம்மா வருவதற்கு முன்பு, அப்பாவை கன்வின்ஸ் செய்து விடலாம் என்று நினைத்திருக்க… இப்படி ஒரு திருப்பத்தை அவள் எதிர்பார்க்கவில்லை.

 சண்முகம் முதலில் செலவை நினைத்து தயங்கியவர், அடுத்து தனது மகள் கூறியது கேட்டதும், ” ஜயோ!” என்று ஆகிவிட்டது.

‘தனது மனைவி, தங்கள் மகளை விட்டு பிரிந்து இருக்க மாட்டாளே! இதை நன்கு அறிந்த ராதிகா எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தாள். தாங்கள் இன்னமும் அவளை சின்னக்குழந்தை என நினைத்திருக்க, அப்படி எல்லாம் இல்லை என்று நிரூபித்து விட்டாளே!’ என்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருக்கையில், சுந்தரி வந்ததும் அல்லாமல் ராதிகா பேசியதை கேட்டும் விட்டாள்.

இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் சண்முகம் மகளைப் பார்க்க. அவளோ இறுக்கமாக அமர்ந்து இருந்தாள்.

“ம்” என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட சண்முகம், ” சுந்தரி!” என அவளது தோளைத் தொட…

 அதுவரை ஸ்தம்பித்து இருந்த சுந்தரி, சுய உணர்வுக்கு வந்ததோடு அல்லாமல், தன்னை அழைத்த கணவனைக் கூட கண்டுக் கொள்ளாமல் மகளிடம் சென்றவர், ராதிகா அருகே அமர்ந்து அவளது கைகளைப் பற்றியவர்,” அம்மாடி… அம்மாவால உன்ன விட்டுட்டு இருக்க முடியாதுடா. இங்கே நீ ஸ்கூலுக்கு போயிட்டு வரும் வரைக்குமே நான் எப்படி தவிப்பேன் உனக்குத் தெரியும் தானே? கொஞ்சம் லேட்டானாலும் அம்மாவுக்கு உசுரே இருக்காதுடா… வாசல்லே வந்து நின்னுட்டு இருப்பேனே… நீ கூட ஏன் மா நிக்குறீங்க என்று திட்டுவியே… அப்போ கூட நான் கேட்க மாட்டேன் தானே… அப்படி இருக்கப்ப… உன்னை அவ்வளவு தூரம் அனுப்பிட்டு என்னால நிம்மதியாக இருக்க முடியாதுடா.” என அவர் பேசிக் கொண்டே இருக்க.

அவர் பேசப் பேச ராதிகாவின் கண்களிலிருந்து, கண்ணீர் நிற்காமல் வடிந்துக் கொண்டே இருந்தது.

“ஏன் டா தங்கம் இப்படி அழற. இங்கே படிக்கிறேன்னு சொல்லுடா. என்னை விட்டு எங்கேயும் போகாதடா.” என்று கெஞ்சியவர், திடீரென்று ஏதோ நினைவு வந்தவளாக, ” ஐயோ! கடவுளே! போன வருஷம் கூட ஒரு பொண்ணு நீட் எக்ஸாம் நினைத்து டிப்ரெஷன்ல தற்கொலை பண்ணிக்கிச்சே. அப்போதே என் பொண்ணு டாக்டருக்கெல்லாம் படிக்க ஆசை படக் கூடாது என்று சாமியெல்லாம் வேண்டிக்கிட்டேனே! அந்த கடவுளுக்கு கண் இல்லையா ” என சுந்தரி புலம்ப .

அவளோ அசைந்தாளில்லை. அவர் பேச பேச இன்னும் பிடிவாதமாக இருந்தாள்.

இன்று…

ராதிகா கிட்ட மன்னிப்பு கேட்கலைன்னா செத்துடுவேன் என்று அனன்யா கத்தியதும், விஸ்வரூபனின் முகமோ இறுகியது, ” வாட்? என்ன சொன்ன? செத்துடுவேன்னா? ஆர் யூ மேட். அவக் கிட்ட பேசலைன்னா செத்துடுவீயா? ” என்று உறும…

அவனது கோபத்தைப் பார்த்து மிரண்டாள் அனன்யா.

“ஷிட்” தன் தலையை தட்டிக் கொண்டவன், அந்த அறையை கால்களால் அளந்துக் கொண்டிருந்தான்.

ரூம் பாய் வருவதற்காக காத்திருந்தவன், அவர் கொண்டு வந்த ஜூஸை வாங்கி அனன்யாவை அருந்த சொன்னான்.

அவள் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், ” லுக் அனு… நான் அவளை இனி என் வாழ்க்கையில் எப்போதும் சந்திக்க கூடாதுனு நினைச்சிட்டு இருக்கேன். புரியுதா? ராதிகா இஸ் அவர் பாஸ்ட். என்னோட வாழ்க்கையில வந்துட்டு போன பாசிங் க்ளோவுட். இது தான் நிதர்சனம். வேறு எதுவும் பேசாமல் சீக்கிரம் கிளம்பு.”

அவனது கோபத்தை நினைத்து பயம் வந்தாலும், இப்போது பேசவில்லை எனில் அப்புறம் ராதிகாவை எப்பொழுதும் பார்க்க முடியாது என்பதை உணர்ந்த அனன்யா, தொண்டையைக் கணைத்து விட்டு பேசினாள்.

” மாமா! நான் ராதிகா கிட்ட பேசணும். நடந்த எல்லாத்தையும் சொல்லணும். அவக் கிட்ட மன்னிப்பு கேட்கணும். அப்புறம் உங்க இரண்டு பேருக்கு நடுவுல நான் எப்போதும் வர மாட்டேன். எனக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு …” அடுத்து என்ன சொல்ல வந்தாளோ, அதற்குள் விஸ்வரூபன், அவள் குடித்து விட்டு வைத்திருந்த கண்ணாடி க்ளாஸை தட்டி விட்டான்.

அந்த கண்ணாடி க்ளாஸோ, அவர்கள் இருவரது மனதைப் போல சுக்குநூறாக நொறுங்கியது.

அனன்யாவோ வாயை மூடிக் கொண்டு அதிர்ந்து நின்றாள். அவளது உடலோ வெடவெட என நடுங்கிக் கொண்டிருந்தது.

தன் தலையை கோதியவன், அந்த உடைந்த கண்ணாடித் துண்டுகளை கவனமாகத் தவிர்த்து விட்டு அவளருகில் வந்தான்.

மெல்ல அவளை ஆசுவாசப் படுத்தியவன், அவளது தலையை லேசாக வருடி, ” இதோ இந்த கண்ணாடி கிளாஸ் மாதிரி தான் எங்களுடைய காதல் உடைந்து போயிடுச்சு. இனி ஒன்று சேர்க்க முடியாது. அனும்மா புரிஞ்சுக்கோடா. நீ பேசறதை அத்தைக் கேட்டா எவ்வளவு வருத்தப்படுவாங்கத் தெரியுமா?”

மெல்ல அவனிடமிருந்து விலகியவள், அம்மா என்ன நினைப்பாங்க? பாட்டி என்ன நினைப்பாங்க? அத்தை என்ன நினைப்பாங்க? ஆட்டுக்குட்டி என்ன நினைக்கும்னு இப்படியெல்லாம் கவலைப்படுறீங்களே! உங்களை உயிருக்கு உயிராக நேசிச்சாளே ஒருத்தி. அவளைப் பத்தி ஏதாவது யோசிச்சிங்கிளா. யூ ஆர் செல்ஃபிஷ்.” என.

“ஆமாம் நான் செல்ஃபிஷ் தான் போதுமா? என்னை வளர்த்த பாட்டி, மரணப்படுக்கையில் என்கிட்ட யாசகம் கேட்க்கும் போது என்னால மறுக்க முடியலை போதுமா? நான் எடுத்த ஒரு முடிவால தான் உன் வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கு. நான் செய்த தவறின் விளைவை, நான் தானே சரி செய்ய வேண்டும்.”

“ஐயோ! மாமா. நீங்க எனக்கு நல்லது தான் செய்தீங்க. நான் தான் அவசரப்பட்டுட்டேன். அதுக்கு நீங்களும், ராதிகாவும் ஏன் சிலுவை சுமக்கணும். சொல்லுங்க மாமா.”

“திரும்பத் திரும்ப நமக்குள்ள ராதிகாவை இழுக்காதே. காதலிச்சா எல்லோரும் கல்யாணம் பண்ணிக்கணுமா என்ன? அதுவும் ஒரு வருஷ காதல் தானே… சீக்கிரம் மறந்துட்டு, வேற வாழ்க்கையை அமைச்சுக்குவா… நீ ஒன்னும் கவலைப்படத் தேவையில்லை.”

“அவளே காதலை சொன்னதால, அவளுடைய காதல் உங்களுக்கு இளப்பமா போயிடுச்சா மாமா?. உங்களுக்கு வேணா இது ஒரு வருஷ காதலாக இருக்கலாம். அவளுக்கு இது ஏழு வருஷ காதல். அந்த காதலுக்கு சாட்சியாக நான் மட்டும் தான் இருக்கேன்.

அப்புறம் இன்னொன்னு மாமா… நீங்க மறந்துட்டேன் சொல்றது பொய். நீங்க அவளை மறக்கவே இல்லைன்னு சொல்றதுக்கு என் கிட்ட ஆதாரம் இருக்கு.” என ஆக்ரோஷமாக அனன்யா கூற…

 இதயம் துடிக்க வேகமாக கைகளை பின்னால் மறைத்துக் கொண்டான். “என்ன சொல்ற புரியல ?” என மெதுவான குரலில் கூற…

” அதான் உங்க ஃபோன் ரிங்டோன். அதைத் தான் சொல்றேன். இன்னும் மாத்தாமல் வச்சிருக்கீங்களே. ” என.

சரியாக அதே நேரத்தில் அவனுடைய போன் இசைத்தது.

“யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே

கண்ணனோடோடுதான் ஆட..

பார்வை பூத்திட பாதை பாத்திட

பாவை ராதையோ வாட…” என ராதிகாவின் தேன் குரலில் ஒலித்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்