Loading

நினைவுகள் -11

அன்று…

அனன்யா ஆசைப்பட்டபடி ஹாஸ்டலில் சேர்த்து விட்டிருந்தான் விஸ்வரூபன்.

விஸ்வரூபன் பி.ஜி ஃபைனல் இயரில் இருப்பதால், அவனால் உடனடியாக பிலிப்பைன்ஸ்க்கு திரும்ப செல்ல முடியாமல் போய் விட்டது. அதனால் அவனது நண்பனின் மூலமாகவே ஹாஸ்டலை பற்றி விசாரித்து, அவளை சேர்த்து விட்டான்.

அனன்யா ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ஹாஸ்டலுக்கு ஷிப்ட் ஆக… ஆனால் நடந்ததோ வேறு.

இருந்தாலும் அதுவும் நன்றாகத் தான் இருந்தது. ஹாஸ்டலில் அவளது நட்பு வட்டம் பெருகியது.

 ராதிகாவுடன் டைம் ஸ்பென்ட் பண்ணலாம் என்று நினைத்திருந்தாள். அது மட்டும் தான் நடக்கவில்லை.

காலேஜ் டைம் முடிந்த பிறகு ராதிகா பார்ட் டைம் ஜாப்க்கு சென்று விடுவாள்.

பொதுவாக பிலிப்பைன்ஸில் மாணவ, மாணவியர்கள் பகுதி நேர வேலை செய்ய அனுமதி கிடையாது. அப்படியே வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்கான வொர்க் பர்மிட் வாங்க வேண்டும். ராதிகா அதை வாங்கியிருந்தாள்.

அதனால் காலேஜ் முடியவும், வேலைக்கு சென்று விட்டு இரவு தான் திரும்புவாள்.

ஹாஸ்டலில் இருந்த அனன்யாவுக்கு பயங்கரமாக போரடிக்க, அடுத்த அறையில் இருந்தவர்களுடன் நட்பை வளர்த்துக் கொண்டாள். நட்போடு சேர்த்து அவர்களது மொழியையும் கற்றுக் கொள்கிறேன் பேர்வழி என்று லூட்டி அடித்தாள்.

தப்பும், தவறுமாக இவள் பேசும் அழகில் எல்லோரும் தெரித்து ஓட… இவளோ விடாமல் அவர்களைப் படுத்தி எடுத்து, தெலுங்கு, கன்னடம் என்று கொஞ்சம் கொஞ்சமாக மற்ற மொழிகளைக் கற்றுக் கொண்டாள்.

தான் கற்றவற்றை இரவு வேலை முடித்து வரும் ராதிகாவிடம் கூறி, அவளது முகத்தில் புன்னகையை வரவழைத்தாள்.

இப்படி அனன்யா, ஹாஸ்டல் வாசம் வந்து ஒரு வாரம் ஆகியிருக்க,

நாளை வார இறுதி நாள்.

இந்த வாரம் எப்படியாவது ராதிகாவை அழைத்த்துக் கொண்டு ஊர் சுற்ற வேண்டும் என்று திட்டமிட்டவளோ, அவளுக்காகக் காத்திருந்தாள்.

வேலை முடிந்து களைத்துப் போய் வந்த ராதிகாவைப் பார்த்தவள்‍, ” சாப்பிட்டியா ராது?” என வினவ.

” ம். சாப்பிட்டேன் அனு. நான் போய் ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு வரேன்.”என்றவள் இரவு உடை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

சற்று நேரத்தில் வெளியே வந்தவளோ, அனன்யா அவளுக்காக காத்திருப்பதைப் பார்த்து புருவத்தை சுருக்கியவள்,” என்ன அனு… இன்னைக்கு யாரும் சிக்கலையா? எங்கேயும் போகாமல் இப்படி உட்கார்ந்து இருக்க?”என்று வினவ

” அதெல்லாம் எனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. உன் கிட்ட பேசணும் ராது. அதான் உனக்காக வெயிட்டிங்.”

” ஏய் அனு. இன்னைக்கு ரெஸ்டாரன்ட்ல செம ரஷ். ரொம்ப டயர்டா இருக்கேன். நாளைக்கு பேசலாமா. காலையில் ஃப்ரீயா தான் இருப்பேன். ஈவினிங் தான் வேலை.” என்றவள் தன்னுடைய கட்டிலில் சரிய…

“ராது… தூங்கிடாத. ரொம்ப போர்ரிங்கா இருக்கு. நாளைக்கு அவுட்டிங் போகலாம் வர்றீயா. இங்கே சுத்திப் பார்க்க நிறைய ப்ளேஸ் இருக்கு. ப்ளீஸ் ராது.”

” ஈவினிங்குள்ள வந்துடுலாமா அனு. நான் ரெஸ்டாரன்ட்டுக்கு போகணும்.” என்று யோசனையுடன் ராதிகா வினவ.

” ராது! ஹாஃப் டேல ஒன்னும் சுத்தி பார்க்க முடியாது. என்ன கிண்டல் பண்றீயா? ஒரு நாள் லீவு போடேன் டி. நான் வேணும்னா அன்னைக்குள்ள பணத்தை தரேன்” என எப்போதும் போல எதையும் யோசிக்காமல் வார்த்தைகளை விட்டிருக்க.

நொடிப்பொழுதில் ராதிகாவின் முகம் மாறியது.

நிதானமாக எழுந்தவளோ, அவளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே, ” உனக்கு இன்னும் என்னை பற்றி தெரியவில்லை. ஒரு நாள் வேலைக்கு போகலைன்னா சிரமப்படுவதற்கு. நான் ஒன்னும் தாங்க முடியாத பணக் கஷ்டத்தில் இல்லை‌ அனன்யா. என்னுடைய பெற்றோருக்கு சிரமம் கொடுக்க கூடாது என்பதற்காகத் தான் நான் வேலைக்கு போகிறேன். இப்போ எனக்கு பணம் வேண்டும் என்று மேசேஜ் செய்தாக் கூட போதும். என்னுடைய அக்கவுண்ட்ல ஆட்டோமேட்டிக்கா பணம் வந்திருக்கும். இனி மேல் இந்த மாதிரி என்னிடம் பேசாதே.” என்று விட்டு ராதிகா உறங்க முயல…

அதன் பிறகு அனன்யாவால் உறங்க முடியவில்லை. அவள் வேண்டுமென்று சொல்லவில்லை. அவளை எப்படியாவது வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆர்வக்கோளாறில் வார்த்தைகளை விட்டிருந்தாள்.

விடுமுறை தினத்தன்று தாமதமாக எழும் அனன்யா, அன்று நேரத்தோடு எழுந்து விட்டாள்.

ராதிகாவோ நேற்று நடந்ததை நினைவில் கொள்ளாமல், தன் போக்கில் எழுந்து விடுமுறை நாளில் செய்வதற்கான வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்.

அனன்யா, தான் அவள் பின்னேயே சென்று கெஞ்சிக் கொண்டிருந்தாள். “சாரி! ராது! நான் அப்படியெல்லாம் எதுவும் நினைக்கலை டி. உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணனும் தான் நினைச்சேன். வேணும்னா நானும் உன்னோட வேலைக்கு வரேன்.” என்று கண்கள் கலங்கக் கூற.

அவள் கூறியதைக் கேட்ட ராதிகா, அவளைப் பார்த்து முறைத்தாள். உள்ளுக்குள்ளோ, ‘ என்ன பொண்ணு இவ. என் மேல இப்படி பைத்தியமா இருக்கிறாளே.’ என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

ஒன்றும் பேசாமல் தன்னை முறைக்கும் ராதிகாவைப் பார்த்த அனு, ” ஏதாவது பேசு ராது.” என.

“என்ன பேச சொல்ற. நீ தெரிஞ்சுதா பேசுறீயா? இல்ல தெரியாம பேசுறீயா? ஒண்ணுமே புரியல. இதுல என்னோட வேலைக்கு வேற வரேன்னு சொல்ற. இங்கே வேலைக்கு போகணும்னா, நிறைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கு. முதல்ல அதெல்லாம் இருக்கட்டும் ஒரு பக்கம். உங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? ஏற்கனவே என்னோட வந்து ஹாஸ்டல்ல தங்குறதுக்கே உன் வீட்ல உள்ளவங்ளுக்கு பிடிக்கலை. இதுல என்னோட வேலைக்கு வரேன்னு சொன்னா அவ்வளவு தான்.” என்று அவளைப் பார்த்துக் கொண்டே கூற.

” அதுவும் சரி தான்.” என்ற அனன்யா கட்டிலில் படுத்துக் கொண்டு ரூஃபை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது பாவனையில் சிரிப்பு வர, ” ஏன் அனு அங்கே என்ன பார்க்குற? டாப் ப்ளோர் உள்ளவங்க தெரியுறாங்களா? ஆனால் என் கண்ணுக்கு எதுவும் தெரியலையே.”

“ப்ச்… உன்னோட அவுட்டிங் போகலாம் என்று ஆசையா இருந்தேன். இப்ப எனக்கு ரொம்ப டிசஃப்பாயிண்டா இருக்கு.” என்ற அனன்யாவைப் பார்த்த ராதிகாவிற்கோ வேறோரு உருவம் மனதிற்குள் வந்துப் போனது.

உடனே அனுவை சமாதானம் செய்ய வேண்டும் என்று அவளது ஒவ்வொரு அணுவும் துடித்தது.

இன்று…

கையில் ஃபோனை வைத்துக் கொண்டு யோசனையில் இருந்த ராதிகாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பினான் ஆதவன்.

“ஆமாம் உன் பேருல ஏன் ஓபன் பண்ணலை. அப்புறம் இதை பேக் ஐடி சொன்னா யாரும் நம்ப மாட்டார்கள். கிருஷ்ணனின் காதலி, ராதா ஆர் ராதிகா தானே.” என்றவன் சிரிக்க.

அவனது கேள்விக்கு இயல்பு போல பதிலளித்தாள் ராதிகா.” ஆதி! என் பேருல இருந்த ஐடியை க்ளோஸ் பண்ணிட்டேன்.” என்றவள் யோசனையில் ஆழ்ந்தாள். ‘ அப்போ அவனுக்கு நான் யாருன்னு தெரிந்திருக்குமோ . ‘ என்று குழப்பத்தில் இருக்க.

“ராதிகா! ஏன் டல்லாயிட்டா‌?” என ஆதவன் வினவ.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை ஆதி. சின்ன யோசனை. இன்னைக்கு தான் நாம ஃப்ரெண்டா ஆனோம். சோ இன்னிக்கு நாம சாப்பிட்டதற்கான பில்லை நீயேப் பே பண்ணிடு.” என்று சொல்ல.

அதற்கு மெலிதாக புன்னகைத்தான் ஆதவன். உணவு வந்திருக்க… அதை உள்ளே தள்ளிக் கொண்டு, எப்ஃபியில் நுழைந்திருந்தாள்.

அதற்குள் அவனுடைய பழைய மெசேஜ்களுக்கெல்லாம் லைக் போட்டுக் கொண்டிருந்தவள், அப்பொழுது தான் அன்று அவனின் பிறந்தநாள் என்பதை கவனித்தாள்.

” ஹே ஆதி! உனக்கு இன்னைக்கு பிறந்தநாளா ?” என்று வினவ.

“ஆமாம்.” என்று தலையசைத்தவன், அவள் இன்னும் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து, ” நீ மெதுவா சாப்பிட்டு வா. நான் பில் பே பண்ணிட்டு கிளம்பறேன்.” என்று விட்டு கிளம்ப.

” ஆதி‌! வெயிட். நானும் வரேன்.” என்றவள், உணவை அவசர அவசரமாக விழுங்கி விட்டு ஆதவனைத் தொடர்ந்தாள். அதற்குள் அவன் கேண்டீனிலிருந்து வெளியே சென்றுக் கொண்டிருந்தான்.

” ஆதி!”என்று கத்திக் கொண்டே ஓடியவள், க்ரவுண்டில் பிடித்து விட்டாள்.

” இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதி.” என்று மூச்சு வாங்கிக் கொண்டே கூற…

“தேங்க்ஸ் ராதிகா.” என்றவனின் குரலில் சுரத்தே இல்லாமல் இருந்தது.

” ஏன் இவ்ளோ டல்லா இருக்க ஆதி. உன்னையப் பார்க்கும் போது, என்னைப் பார்ப்பது போலிருக்கிறது.” என்றவள், ஆனால் ஏழு வருடங்களுக்கு முன்பு ஒரு தேவதை என் வாழ்க்கையில் வந்து வாழ்க்கையை வண்ணமயமாக்கினாத் தெரியுமா? பிறந்தநாளை அப்படிக் கொண்டாடுவா?” என்றவள், ‘ அதெல்லாம் போனவருடத்திற்கு, முந்தின வருடத்தத்தோடு முடிந்து விட்டது.’ என்பதை மட்டும் மனதிற்குள்ளே கூறிக் கொண்டாள்.

” இன்னைக்கு ஈவினிங் என்னோட ஹோட்டலுக்கு வர்ற ஆதி. என்னோட ட்ரீட்.” என்றாள் ராதிகா.

” ப்ச்‌. ராதிகா! இப்போ பர்த்டே செலிபிரேட் பண்ற மூட்ல இல்லை. ப்ளீஸ் லீவ் இட்.” என்றான் ஆதவன்.

” வாட்ஸ் யுவர் ப்ராப்ளம் ஆதி. உன்னால முடிஞ்சா என் கிட்ட ஷேர் பண்ணு. இல்லன்னா பரவால்ல. நான் சொல்றதை கேளு.ஏழு வருஷத்துக்கு முன்னாடி நானும் இப்படி தான் இருந்தேன். பிறந்தநாள் விழா கொண்டாடுறதெல்லாம் பெருசா இன்ட்ரெஸ்ட் காட்ட மாட்டேன். ஆனா அதுக்கப்புறம் எனக்கு ஒரு ஃப்ரெண்ட் வந்தா தேவதை மாதிரி. எல்லாத்தையும் தலைகீழா மாத்தி அஞ்சு வருஷம் அந்த அளவுக்கு என்ஜாய் பண்ணோம். அதுக்கப்புறம் ஒரு வருஷம் கூட ஒன்னும் தெரியல. இப்போ பழையபடி என் வாழ்க்கை ஆரம்பித்தப் புள்ளிக்கே போய் விட்டது.

நான் அதைப்பற்றி எல்லாம் மறந்துட்டு, இப்போ நான் சிரிச்சிட்டு இல்லையா? கவலைய நினைச்சுக்கிட்டே இருந்தா நமக்கு சரி வராது.

கப்பல் கடலில் போகும் போது, அந்த கடல் இருக்குற தண்ணி எல்லாத்தையும் எடுத்துக் கொண்டால், அந்த கப்பல் மூழ்கிவிடும். அது தனக்குள்ள அந்த தண்ணீரை உள்வாங்காமல் இருக்கிறதால தான் கப்பலால் சமாளிக்க முடியுது. அதே மாதிரி தான் நம்மளோட கவலையெல்லாம் நம்ம மனசுல ஏத்திக்கக் கூடாது. கவலை நம் வாழ்க்கையில் இருந்துக் கொண்டே தான் இருக்கும். நாம் அதை ஒதுக்கிட்டு வாழ்க்கையில் முன்னேறனும்.” என.

” நானும் என் கவலைகளை மறக்கணும் என்று தான் நினைக்கிறேன். பட் முடியலை. சின்ன வயசில் இருந்தே பெத்தவங்க இருந்தும், அன்புக்கு ஏங்குவோம். ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஒரு தேவதை வந்து எங்க வாழ்க்கையை நீ சொன்ன மாதிரி மாத்தினா. ஆனால் அது கானல் நீர் ஆகிப் போனது. ” என்று சொன்னவனின் கண்கள் கலங்கியது.

இருவரும் தேவதை என பேசியது ஒருவரைத் தான் என்று அப்பொழுது அவர்களுக்குத் தெரியவில்லை.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்