Loading

பாத்திரக்கலையை 

கையிலெடுத்தேன் பெண்ணியம் பேசி சுதந்திரமளிக்க – என் கைப்பட்டு சிதறிய பாத்திரங்களோ பத்திரமாய் அவளிடம் சென்று குறைகூறியது என் சமையல் கலையை !

முந்திக்கொண்டு சமைப்பவளை மறித்து முந்தானையில் முகமறைத்து நான் கற்ற கலையெப்படி வீணாகக்கூடும் !

அன்னமளவு அறிந்திடாது – நான் வடித்த சாதத்தைக்காட்டி வசவு வாங்குமுன்னே முந்திக்கொண்டு சாதனையென்று என்னை நானே கள்வனாக்கி காட்டினேன் !

ரசம் வைத்த சாதனையில் உணர்வில்லா பலரது முகத்தில் நவரசமும் நாட்டியமாட நளினநடைக் கண்டேன் !

அறுத்தெடுத்த கோழி 

அழகழகாய் பாத்திரத்தில் நிறைந்திருக்க – மீனாய் துள்ளி துள்ளாட்டம் போட்டது என் கைவரிசையில் சிக்கியதால் !

கண்ணாமூச்சி கண்கட்டு வித்தையாக 

உப்பும் காரமும் கரைந்து விளையாட விதி வசத்தில் வென்றேன் – நான் சமையலறை மந்திரத்தில் வென்ற முதல் ஆடவனாக பெருமைக்கொண்டேன் என்னவள் முன்னே !

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. அழககளாய் அப்படியென்றால் என்ன..

    ஒரு ஆணின் சமையல் கலையை சொல்லி இருக்கிறது உங்கள் கவிதை.. வித்தியாசமாக இருந்தது படிப்பதற்கு. வாழ்த்துக்கள் மா…

    1. Author

      மன்னிக்கவும் மா… சிறு எழுத்துப்பிழை காரணத்தால் அர்த்தம் இல்லா வார்த்தையாகிவிட்டது…

      மிக்க நன்றிங்க மா… தங்களின் கருத்திற்கு 🍫🍫🍫

  2. சூப்பர் சிஸ்..ஆண் தன் மனைவியிடம் சமையல்கலையை காட்டிய விதமாய் அமைந்த கவிதை…

    1. Author

      😁😁😁சிஸ் இல்லை சிஸ்…
      ஐ ஆம் ப்ரோ…

      மிக்க நன்றிங்க சிஸ்