
சமுத்திரா – 12:
கண்ணுக்கெட்டிய வரை கரையில்லாத கடலை வெறித்து பார்த்த அமரனின் மனதிற்குள் தோன்றியது ஒன்றுதான். ‘என்னால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்காமல் இதனை தவிர்த்திருக்க முடியும்! முதலையிடம் தப்பி மேலே வந்தவுடனே கரைக்கு திரும்பிருக்க வேண்டும். ஆனால்..’ என்று யோசித்தவனிற்கு தன் மீதே கோபம் வர அவனுக்குள்ளே மனத்திற்குள்ளே அரற்றிக் கொண்டிருந்தான்.
அவனின் உணர்வுகளை ஓரளவு புரிந்துக்கொண்ட ஷிவன்யா அவனின் தோளில் கைவைத்து, “ஃபீல் பண்ணாதீங்க அமர். அடுத்து என்னனு பார்க்கலாம்.” என அவனை அழைத்துச் சென்றாள்.
சுற்றிலும் உவர் நீரால் சூழப்பட்டு இருளில் மூழ்கியிருந்த கடலை பார்த்திருந்த அனைவரின் முகத்திலும் அச்சத்தின் சாயலே!
‘இது எந்த உலகம்..? இங்கிருந்து எவ்வாறு தப்பிக்க..? முதலில் தப்பிக்க முடியுமா..? அப்படியே தப்பித்தாலும் அவர்கள் வாழ்ந்துக் கொண்டிருந்த உலகத்திற்கு எப்படி செல்ல..?’ என்ற பலகேள்விகள் அவர்கள் முன் பூதாகரமாக எழுந்தது.
அவர்களின் அருகில் வந்த அமரன், “அந்த கேம் நம்மள கொஞ்சம் கொஞ்சமா உள்ள இழுத்துருக்கு. நாம தான் அதை சரியா கவனிக்கல..” என சொல்லிவிட்டு பெருமூச்சுடன் அமர்ந்தான்.
“புரியுற மாதிரி சொல்லு டா” – ப்ரதீப்.
“முதல்ல ஆமை வந்ததே நமக்கு தெரியல. சோ, விலோ அடுத்து விளையாடிருக்கா. அப்ப தான் நாம முதலைகிட்ட இருந்து தப்பிக்க மேல வந்தோம். இங்க பார்த்தா நம்ம கப்பலே மாறியிருந்துச்சு. ஆனா, நாம அப்ப வங்ககடல்ல தான் இருந்தோம். நான் அங்கயிருந்த லைட்ஹவுஸை பார்த்தேன். ஏதாவது பிரச்சனைனா கப்பலை திருப்பிடலாம்னு கூட நினைச்சேன். ப்ச், அடுத்தடுத்து பூதம், வௌவால் வந்ததுக்கு அப்புறம் லைட் ஹோஸ் தெரியல. எல்லாமே நம்ம கையை மீறி போயிடுச்சு. இப்ப நாம நம்ம உலகத்துல இருந்து வேற எங்கயோ முழுசா வந்துட்டோம்..” என்று சொன்ன அமரனின் குரலில் வெறுமையே இருந்தது.
அவன் கூறியதை கேட்டபடியே,
‘எங்காவது கரை தெரிகிறதா..?’ என இருட்டில் சுற்றி பார்த்த அனைவருக்கும் இருள் மட்டுமே முடிவென தெரிந்தது. “விடிஞ்சதும் பார்க்கலாம்!” என்று அமர் சொன்னான். ஆனால், ‘இந்த உலகத்தில் விடியல் என்ற ஒன்று இருக்கா..?’ என்ற எண்ணனும் அவனுக்குள் எழுந்தது.
“நாம வேற எங்கேயோ போய் மாட்டிக்கல அமர். இந்த விளையாட்டோட முடிவே சமுத்திரத்தின் இலக்குன்னு தான அந்த போர்டுல போட்டிருக்கு. சோ, நாம எதை நோக்கியோ தான் போய்க்கிட்டு இருக்கோம். இந்த கேமை தொடர்ந்து விளையாடினா மாட்டும் தான், நாம எதை நோக்கி போய்ட்டு இருக்கோம்னு நமக்கு புரியும்!” என ரங்கா அவனுக்கு புரிந்தவரை பகிர்ந்தான்.
“அடப்பாவிகளா! நான் என்னோட வீட்டை பார்த்து போயிருப்பேன். ட்ரிப்ன்னு என்னை கூட்டிட்டு வந்து இப்படி ஊர் பேர் தெரியாத காட்டுல.. ச்சி கடல்ல மாட்டி விட்டீங்களேடா..” என்று புலம்பிய ப்ரதீப், “அவ்வளவு தான் நம்மள முடிச்சு விட்டீங்க போங்க..” என்று சலிப்பாக கூறினான்.
“டேய் பொலம்பாத.. இந்த கேமை ஃபுல்லா முடிச்சா நம்ம உலகத்துக்கு போயிடலாம்.” என்று அமரன் சொன்னான்.
“ஐயோ! இதுல இருந்து அடுத்து என்னலாம் வருமோ..” என ப்ரதீப் பீதியுடன் சொல்லிவிட்டு, “இதோ இவதான் எல்லாத்துக்கும் காரணம். இவ தான் அங்க போய் அதை எடுத்துட்டு வந்தா..” என விலோவை முறைத்தான்.
“நீ தான என்னை போக சொன்ன..?” என விலோவும் முறைக்க,
“வாய மூடு. நான் சொன்னா..? நீ போவியா..”
“நீ வாயை மூடு..”
“நீ வாயை மூடு..”
“ஐயோ! ரெண்டு பேரும் வாயை மூடுங்க..” என கத்திவிட்டான் சக்தி. பின்பு இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தபடியே நின்றிருந்தனர்.
அணிந்திருந்த வெள்ளை சட்டை முழுவதும் குறுதியால் நிறைந்திருக்க அனைவரின் கலக்கம் நிறைந்த முகத்தையும் பார்த்த சக்தி, “இப்ப என்னாகிடுச்சு? ஜாலியா ட்ரிப் போக பிளான் பண்ணோம். இப்ப தெரியாத்தனமா இதுல மாட்டிக்கிட்டோம் அவ்வளவு தான..? நமக்கு தான் தப்பிக்க அந்த கேம் இருக்கே? அப்புறம் என்ன?” என்றான் நம்பிக்கையாக.
“டேய் சக்தி! நீ இருக்க நிலைமைல.. இப்ப இவ்வளவு பேசனுமா?” என்று அவனை அதட்டிய ரங்காவிடம், “கைல தான் டா அடிப்பட்டுருக்கு. ஒரேடிய பாசத்தை பொழியாதீங்க..” என சக்தி கடுப்பானான்.
“ஒருவேளை என்னோட ஆளு இந்த உலகத்துல கூட இருக்கலாம். அதனால கூட நாம இங்க வந்து மாட்டிக்கிட்டோம் போல..” என ப்ரதீப் யோசனையுடன் சொல்ல,
“ச்சீ இந்த நேரத்துல கூட உன்னோட புத்தி போகுது பாரு” – விலோ
“உனக்கென்னம்மா ரங்கா இங்கேயும் இருக்கான். இங்க இருந்து தப்பிச்சு நம்ம உலகத்துக்கு போக முடியலனா கூட, இந்த உலகத்துலேயே கல்யாணம் பண்ணிட்டு ரெண்டு பேரும் ஜாலியா இருப்பீங்க. நாங்க அப்படியா..” என்று சலித்தப்படியே ப்ரதீப் சொன்னான். அவர்கள் இருவரின் பேச்சு நண்பர்களை ஓரளவு இயல்புக்கு திரும்ப வைக்க அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க தொடங்கினர்.
‘ஹ்ம்ம்.. வழக்கம் போல இவங்க பேசியே பொழுதை போக்குவாங்க..’ என அவர்களை சலிப்புடன் பார்த்த ஷிவன்யா பதட்டத்துடன் தனியாக அமர்ந்திருந்த மார்ட்டினிடம் வந்தாள். “எல்லாம் சரியாகிடும் மார்ட்டின். நம்ம ஊருக்கு நாம சீக்கிரமே போய்டுவோம்.” என அவரை தேற்றினாள்.
நிமிர்ந்து அவளை பார்த்தவர், “விக்டர் மத்தவங்களை கூட்டிட்டு வர கீழ போனான். ஆனா இன்னும் வரல..” என குழப்பமாகவும் பரிதவிப்புடனும் சொன்னார்.
‘நாம நம்மள பற்றி மட்டுமே யோசிச்சிட்டு நம்ம கூட வந்தவங்களை மறந்துட்டோமே..’ என்ற எண்ணம் அந்நேரம் தான் நண்பர்களின் கூட்டத்திற்கு வந்தது.
“அவங்களையும் மேல கூட்டிட்டு வந்து நம்ம கூடவே வெச்சிக்கலாம் டா. கீழே முதலை வேற இருந்துச்சு. இப்ப வௌவாலும் அங்க இருந்து வந்திருக்கு..” என்ற சக்தி சொன்னவுடன், “நானும் ப்ரதீப்பும் போறோம்.” என்றபடி அமரன் எழுந்தான்.
அப்பொழுது கப்பலின் உள்ளேயிருந்து இரத்தக்கறை படிந்த உடையில் வெளிறிய முகத்துடன் விக்டர் வந்தான். “என்னாச்சு விக்டர்? மத்தவங்க எங்க?” என்ற மார்ட்டினின் கேள்விக்கு,
கலங்கிய கண்களை துடைத்த விக்டர், “அ.. அலெக்ஸ் இஸ் நோ மோர்” என்றபடி மார்ட்டினின் கையை பிடித்து அழுகையில் குலுங்கினான். (அவர்களுள் பயணம் செய்த அலெக்ஸ் என்ற மாலுமி இறந்து விட்டதாக கூறினான்)
“வா.. வாட்..??!!” என அனைவருமே அதிர்ந்தனர்.
“ஆமா. கீழ இரத்த காயத்தோட அவன்..” என்றவனால் மேலே சொல்ல முடியவில்லை.
“ரிச்சார்ட் அண்ட் டேனியல் என்ன ஆனாங்க..?” என மேலும் அவர்கள் குழுவில் இருந்த இருவரை பற்றி குரல் நடுங்க மார்ட்டின் கேட்டார். “அவங்களை என்னால கண்டுபிடிக்க முடியல மாஸ்டர். எங்க இருக்காங்கன்னு தெரியல..” என்ற விக்டர்,
“கப்பலை கரைக்கு விட்டுடலாம்..” என மார்ட்டினிடம் மன்றாடினான். அவன் கீழே சென்றபின் அங்கு நிகழ்ந்த அனைத்தையும் மார்ட்டின் அவனுக்கு விளக்கினார்.
அனைத்தையும் கேட்ட விக்டர் நண்பர்களிடம் வந்து, “இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க மட்டும் தான். உங்களால ஒரு உயிர் போயிடுச்சு.. இப்ப நாம எல்லாரும் திக்கு திசை தெரியாம மாட்டிக்கிட்டு இருக்கோம். இது எல்லாத்துக்கும் நீங்க தான் முழுகாரணம்..!” என அவர்களிடம் ஆக்ரோஷமாக கத்திவிட்டு சற்று தள்ளிச்சென்று அமர்ந்தான்.
இப்பொழுது சக்திக்கு கோபம் வரவில்லை. அவனை பார்க்க பார்க்க குற்றவுணர்ச்சி தான் அதிகமாகியது. ‘எங்களால உருவான பிரச்னையை நாங்களே சரி செய்கிறோம் என விராப்பாக பேசியது தான் தானே..’ என்ற எண்ணம் அவனின் மனதை அறுத்தது.
விக்டரை அப்படி பார்க்கவே நண்பர்கள் குழுவிற்கு சங்கடமாக இருந்தது. ஆனால், அவர்களை மீறி நடந்த ஒன்றுக்கு அவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
‘இது தான் விதியென்றால், இது எதற்காக நமக்கு நடக்க வேண்டும்? அவர்களால் திறக்க முடியாத பெட்டியை தங்களால் மட்டும் எப்படி திறந்து இப்படி ஒரு மீளா அகழியில் மாட்டிக்கொள்ள முடிந்தது..?’ என்ற எண்ணம் தோன்ற எதுவும் செய்ய முடியாத கையறுநிலையில் அறுவரும் ஸ்தம்பித்து நின்றனர்.
‘பிள்ளையார் பிடிக்க போய் குரங்காகிய கதையாக..’ ஆர்வத்துடனும் துடுக்குத்தனதுடனும் ஆரம்பித்த விளையாட்டின் விளைவால் ஒரு உயிர் போனது அவர்களை மனதளவில் நொறுக்கிக் கொண்டிருந்தது.
மார்ட்டினிற்குமே இது அதிர்ச்சி தான். ‘இதனால் இவ்வளவு விளைவுகள் வரும் என்று தெரிந்திருந்தால் கையில் கிடைத்த பொழுதே மீண்டும் கடலில் வீசியிருப்பேனே..!’ என்று அவரும் நினைத்துக் கொண்டார். அதிர்ந்து நின்ற நண்பர்களின் நிலையை பார்த்தவர், “அலெக்ஸ், விக்டரோட நெருங்கிய நண்பன். அதான் அலெக்சோட இறப்பை அவனால ஏத்துக்க முடியல. விக்டர் ரொம்பவே உடைஞ்சிட்டான். நீங்க எப்படியாவது இந்த விளையாட்டை முடிக்க பாருங்க. நான் விக்டரை பார்த்துக்குறேன்.” என சொல்லிவிட்டு விக்டருடன் சென்று அமர்ந்தார்.
இப்போதைக்கு அவர்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை அந்த சமுத்திரா விளையாட்டு மட்டும் தான். ‘முடிந்தளவு எந்த தடைகள் வந்தாலும், அதனை தகர்த்தெறிந்து அந்த விளையாட்டினை முடித்து அனைத்தையும் சரி செய்ய வேண்டும்.’ என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் எழுந்தது.
“அடுத்து நான் போடுறேன்.” என்று தானாகவே முன்வந்தான் ரங்கராஜன். அவனிடம் பகடையை கொடுத்தான் அமரன்.
‘என்ன வருமோ?’ என கண்களில் கலவரம் சூழ அவனை கலக்கத்துடன் விலோ பார்த்தாள். அவளின் கையை ஒருமுறை அழுத்தி பிடித்து ஆறுதல் அளித்த ரங்கா பகடையை உருட்டினான்.
ஐந்தாவதாக விளையாட வந்த ரங்காவிற்கு ஐந்து என்றே அந்த பகடையில் விழுந்தது. பின் அனைவரும் அந்த விளையாட்டு போர்டை தான் பார்த்தனர்.
அந்நேரம் மஞ்சள் நிறத்தில் இருந்த குட்டி கப்பல் முன்னிருந்த நான்கு கட்டங்களை கடந்துச் சென்று ஐந்தாம் இடத்தில நின்றது. உடனே அந்த நீர் குமிழில் எழுத்துக்கள் தோன்ற தொடங்கியது.
கொள்ளையடிக்கும் கூட்டம் வரப்போகிறது!
காப்பாற்றிக்கொள்!
என்பதை வாசித்து முடித்ததும், “ஹே! கொள்ளையடிக்கும் கூட்டம்னா பைரேட்ஸ் (கடற்கொள்ளையர்கள்) தான? இங்க பைரேட்ஸ் வர போறாங்களா? அப்ப நம்ம தலை ஜாக் ஸ்பரோ.. சாரி கேப்டன் ஜாக் ஸ்பரோ வருவாங்களா..” என்று ஆர்பாட்டமாக ஆர்பரித்தான் ப்ரதீப்.
“டேய் அவர் படத்துல தான நடிச்சாரு. இப்ப அதை மாதிரி யாரோ வர சான்ஸ் இருக்கு. ஆனா இது எதை காப்பாத்திக்க சொல்லுதுன்னு தான் புரியல?” என யோசித்த ரங்கா கப்பலின் மேல் தளத்திற்கு வரும் வாயிலை தான் பார்த்தான். ஆனால், அங்கு யாரும் வருவதற்கான அறிகுறி தெரியவில்லை.
“அதுல கூட்டத்தோட வரப்போகுதுனு போட்டிருக்கே ரங்கா. அப்படினா நம்ம கப்பல்ல இருந்து வர வாய்ப்பில்லை..” என சக்தி சொன்னான்.
விக்டருடன் அமர்ந்திருந்து அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த மார்ட்டின் அவர்களின் அருகில் வந்து “என்ன வந்தது?” என்று வினவினார்.
“பைரேட்ஸ் வரபோராங்க..” என ரங்கா சொன்னதும் அவரின் முகம் கலவரமானது. உடனே விக்டரிடம் இதனை தெரியப்படுத்த அவனும் மார்ட்டினை போல் தான் பதட்டமடைந்தான்.
மார்ட்டின் விக்டரிடம் சில விஷயங்களை கூறி அவனை கீழே அனுப்பிவிட்டு நண்பர்களிடம் வந்தார். “உடனே நம்ம கப்பல்ல இருக்க எல்லா லைட்ஸையும் ஆப் பண்ணுங்க. சீக்கிரம் எங்கயும் எந்த விளக்கும் எரிய கூடாது. ஃபுல்லா இருட்டா தான் இருக்கனும்.” என்று அனைவருக்கும் கட்டளைகளை பிறப்பித்தவண்ணம் அனைத்து விளக்கையும் அணைக்க முயன்றார்.
“இவர் என்னடா ஓவரா சீன் போடுறாரு..” – ப்ரதீப்
“சும்மா இரு ப்ரதீப்” என்று அவனை அதட்டிய அமரன் அனைத்து விளக்கையும் அணைத்தான். பின் அனைவரும் இருட்டில் ஒரே குழுவாக அமர்ந்துக் கொண்டனர்.
“டேய்! என்னடா நடக்க போகுது? எதுக்கு நாம இப்ப இருட்டுக்குள்ள இப்படி உட்கார்ந்து இருக்கோம்..?” என்று சக்தி கத்தினான்.
“ஷ்” என்று செய்கை செய்த அமரன், “கொஞ்ச நேரம் பேசாம இருக்கனும்” என்று சொல்லிவிட்டு சுற்றியும் பார்வையால் அலசினான்.
தூரத்தில் ஒரு கப்பல் கருப்புநிற பறக்கும் பாய்களுடன் வந்துக் கொண்டிருந்தது. அந்த கப்பலில் அபாயகரமான எலும்புக்கூடு முத்திரை பதித்த கொடி பறந்தப்படி இருந்தது.
“ரைட்டு. சைத்தான் கப்பல்ல வருது..” என இருட்டில் அமர்ந்திருந்த நண்பர்கள் கூட்டம் சொல்லிக்கொண்டே மெல்ல எட்டி அந்த கொள்ளைக்கார கப்பலை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“எப்படித்தான் நமக்குனே ஒரு ஒருத்தனா கிளம்பி வரானோ..” என அவர்களையே பார்த்தபடி ப்ரதீப் சொல்ல,
“சின்ன திருத்தம். நாம தான் இப்ப அவங்க உலகத்துக்கு வந்திருக்கோம்.” என ஷிவன்யா கூறினாள்.
“ப்பா செம்ம காமெடி..” என்ற ப்ரதீப், “நாம அவங்களுக்கு தெரிவோமா..?” என மேலும் எட்டிப்பார்த்தான்.
“நீ வாய மூடிட்டு அமைதியா உட்கார்ந்தா தெரிய மாட்டோம்..” என்று அமர் ப்ரதீப்பின் கழுத்தை இறுக்கி பிடித்து கீழே அமரவைத்தான்.
“டேய் விடுறா.. அவனுங்க வரதுக்குள்ள நீயே என்னை கொன்னுடுவ போல..” என கத்தினான்.
“ஷ்! அமைதியா இருங்க..” என மார்ட்டின் பள்ளிக்கூட வாத்தியார் போல் அதட்டினார்.
ஆர்ப்பரித்து சீறிக்கொண்டிருக்கும் அலைகளை கிழித்துக்கொண்டு, கருப்புநிற பாய்களையுடைய கொள்ளைக்காரக்கப்பல் கடலின் காரிருளை விலக்கிய படியே அவர்களை நோக்கி பாய்ந்து வந்துக் கொண்டிருந்தது.
என்ன தான் நண்பர்களுடன் சகஜமாக வாயடித்து கொண்டிருந்தாலும்,
விளக்கு வெளிச்சத்தில் மிதந்து வந்துக் கொண்டிருந்த கொள்ளைக்கார கப்பலை தான் அனைவரும் திகிலுடன் கண்ணை சிமிட்டாமல் பார்த்தனர்.
– சமுத்திரா வருவாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
4
+1
+1




