
“அப்போ கன்ஃபார்மா இவரைதான் கட்டப் போற. எந்த மாற்றமும் இல்லையே?”
“இல்ல,” என்று உறுதியுடன் இழை.
“ஒரு விஷயம் இடிக்குதே மச்சி.”
“என்ன?”
“கோபம் இருக்க இடத்துல குணம் இருக்கும். ஆனா குடிகாரன்கிட்ட என்ன இருக்கும்?”
“ஜீவி, என்ன பேசுற. மைண்ட் யுவர் வேர்ட்ஸ்,” என்று ஆவேசமாக நாற்காலியிலிருந்து எழுந்த இழை, “அவர் அப்படியெல்லாம் கிடையாது. இன்னொரு முறை இந்த மாதிரி சொன்னா அவ்வளோதான்,” என்று சீறினாள்.
“ஏய், அடங்கு. அன்னைக்கு பாட்டிலோடு நீயும் தானே பார்த்த. இந்த காலத்துல குடிக்காத பசங்களை விரல் விட்டு எண்ணிடலாம். ஏதோ நம்ம ஃப்ரெண்ட் குடிகாரனை கட்டிக்கிட்டு கஷ்டப்படக்கூடாதேன்னு கேட்டா ஓவரா பேசுற.”
“இல்ல ஜீவி. எனக்கு தெரியும். எங்க திருமாமா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால இதுக்கு வாய்ப்பே இல்ல. எங்கயோ தப்பு நடந்திருக்கு.”
“என்னடி ஸ்ட்ரிக்ட்? ஏய் லூசு, உன் ஸ்ட்ரிக்ட்டான மாமா கண்ணுல மண்ணை தூவிட்டு பதினொன்னாவது படிக்கிறப்பவே லவ் ப்ரொபோசல் கார்ட் கொடுத்தவர் உன் ஆளு. அதை மறந்துட்டு பேசாத,” என்று கூற, இழை மௌனமானாள்.
“என்ன, அமைதியாகிட்ட? சொல்லு. ஒருவேளை அவருக்கு குடிக்கிற பழக்கம் இருந்தா என்ன செய்வ? சோஷியல் டிரிங்கிங் னு பொண்ணுங்களே தண்ணியடிக்கிற காலமிது. அவருக்கு இருக்காதுன்னு நினைக்கிறியா?” என்று கேட்டதும், என்ன பதில் சொல்லவேண்டும் என்று தெரியாமல் இழை நின்றாள்.
“அதான் சொல்றேன். வாக்கு கொடுத்தேன் சொல்லி தப்பான முடிவு எடுத்து தப்பான ஆள்கிட்ட போய் மாட்டிக்காத. இது வாழ்க்கை. யோசிச்சு முடிவு பண்ணு,” என்றிட, இழையின் முகத்தில் சிந்தனை ரேகை படர்ந்தது.
ஆழ்ந்த யோசனையிலிருந்து சில நிமிடங்களில் மீண்டவள், “கண்டிப்பா அவரை தவிர வேற யாரையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுடி,” என்றாள் உறுதியான குரலில்.
“ஏய் லூசு, அவரை கல்யாணம் பண்ணிட்டு வசந்த மாளிகை வாணிஸ்ரீ மாதிரி, ‘கலைமகள் கைபொருளே, உன்னை கவனிக்க ஆளில்லையா’ன்னு பாடப் போறியா?”
“தெரில ஜீவி. அவர் அப்படி இருக்க மாட்டார்னு மனசு சொல்லுது. அப்படியே இருந்தாலும் என்னால மாத்த முடியும் னு நம்புறேன்.”
“ஸோ, உன் வாழ்க்கையை பணயம் வைத்து அவரை மீட்கப் போறியா? குடிகாரன்கூட வாழ்க்கை முழுக்க மல்லுக்கட்டனும் இழை. சாதாரண விஷயம் இல்லை.”
“பரவால. என்னால முடியும்.”
“ஆர் யூ சீரியஸ் இழை? நல்லா யோசிச்சுக்கோ. அவசரப்பட்டு முடிவு எடுக்காத.”
“ஏய், நீ லாயர் மாதிரி கேள்வி கேட்டு என்னை கொல்லாம, இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்துறதுன்னு ஐடியா கொடு.”
“ஏன்டி, அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி, உன்னை திரும்பிக் கூட பார்க்காத மனுஷனுக்காக ரிஸ்க் எடுத்து கல்யாணத்தை நிறுத்துறியே. உனக்கே நல்லா இருக்கா?”
“யார் சொன்னா அவர் பார்க்கலன்னு?”
“ப்ச், இதோ பார். திரும்ப திரும்ப கண்ணுல வலியோட பார்த்தார், தாங்கலைன்னு உருட்டினா கொன்னுடுவேன் உன்னை.”
“இல்ல ஜீவி. அதுக்கு முன்னமே பார்த்தார்.”
“அதுக்கு முன்னாடின்னா எங்க, எப்போ?”
“அது… அது வந்து…” என்று இழை இழுக்க,
“ஆரம்பிச்சுட்டாளே, ஆண்டவா,” என்று கண்களை மூடி தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவள், பொறுமையை இழுத்துப் பிடித்து, “சொல்லுமா, எங்க வந்து உன்னை பார்த்தார்?”
“ஜீவி, அவர் கார்ல இருந்து லகேஜ் எடுத்துட்டு இருந்தாரா. அப்போ… அப்போ நான்…” என்று ஆரம்பித்து நடந்ததை கூறி முடிக்க, வாயடைத்து போனாள் ஜீவிகா.
“அப்போ அங்க நின்னுட்டு இருந்தது அவர்தான்னு உனக்கு தெரியாது. தெரியாம காப்பாத்த வேண்டி சும்மா நின்னுட்டு இருந்தவரை இழுத்து அவர்மேல விழுந்துட்ட. அப்படிதானே?”
“எப்படி ஜீவி, நேர்ல பார்த்த மாதிரி இவ்ளோ கரெக்டா சொல்ற?”
“நான் உண்மையை சொன்னா மட்டும் நீ ஒத்துக்கவா போற? சரி, மேல சொல்லு. ஐ மீன், அவர்மேல நீ விழுந்தப்பத்தான் உன்னை பார்த்தாரா?” என்று கேட்டதும், இழையின் கன்னங்கள் சட்டென சிவக்க தொடங்கின.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
4
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஏன் கவி அதிர்ச்சி ஆகிட்டாங்க .. வசீகரா பொண்ணு கிட்ட போய் முதல்ல காதலை சொல்லாம கல்யாணத்தை நிறுத்த பிளானா ..