
அத்தியாயம் -31
சிற்பியோ மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள்.நிரஞ்சன் கண்ணாடி வழியே அவளைப் பார்த்தான்.
“பசிக்குதா?”
“இல்லை”
“பொய் சொல்லாதே!”
“இல்லையே” என்று திரும்பவும் சிற்பி அப்படியே பதில் அளித்தாள்.
நிரஞ்சன் “இன்னைக்கு உனக்கு சாப்பிட நேரமே இல்லையாம். உன்னோட கோ வொர்க்கர் இன்னொருத்தர் கிட்டே பேசிட்டு இருந்ததைக் கேட்டேன்.என்கூட சாப்பிட வர்றதுனால யோசிக்கிறியா?”
“இல்லை எதுக்கு நேரமாகுது வீட்டுக்கு போகனும்?” என்று காரணம் அவள் சொல்ல வரவும் அவனோ “என்னை எப்பவும் போல ப்ரெண்ட்டாகவோ இல்லைன்னா கோ வொர்க்கார நினைச்சுக்கோ. எதுவும் பெருசாக தெரியாது” என்று அவன் பேசி முடிக்கும் முன்னே “போகலாம்” என்றாள்.
இதற்கு மேல் மறுத்தாலும் அவன் கேட்க மாட்டான் என்று அவனுடைய பேச்சிலேயே புரிந்துக் கொண்டாள்.
சிறியதாக உள்ள ஒரு சாப்பாடு கடையில் நிறுத்தினான்.
அவளோ யோசனையாக அவனோடு வந்தவளைப் பார்த்து “இந்த மாதிரி கடைக்கு கூடிட்டு வரேன்னு யோசிக்கிறியா?’’
சிற்பி இல்லை என்று தலையசைக்கவும் “இங்கே நல்லா இருக்கும்” என்றான்.
பக்கத்தில் சில தெருவோரக் கடைகள் இருந்தது.அதில் காலணிகள் இருக்கவே “கொஞ்சம் வெயிட் பண்ணுறீங்களா? நிரஞ்சன் இந்தக் கடையில் எதாவது வாங்கிக்கிறேன்” என்று அந்தக் கடைக்குச் சென்று சில காலணிகளை எடுத்துப் பார்த்தாள்.
அவனோ “இரு நான் பார்க்கிறேன்” என்று இரண்டு ஜோடி காலணிகளை எடுத்து “இதை போட்டுப் பாரு நல்லா இருக்கும்” என்று குனிந்து அவளது கால் பக்கத்தில் அவன் எடுத்த காலணியைப் போட்டு “சீக்கிரம் போட்டு பாரு சரியா இருக்கான்னு பார்க்கலாம்” என்றான்.
அவளோ “நிரஞ்சன் ப்ளீஸ் எந்திரிங்க” என்று சொன்னாள்.
அவனோ “நீ இப்போ போட்டு பார்க்கிறியா? இல்லை நானே உன் கால்ல போட்டு விடட்டுமா?” என்று பிடிவாதமாகக் கேட்டான்.
அவளோ பதறிப்போய் காலணியில் தன் பாதங்களை வைத்து போட்டு பார்த்தாள்.சரியாக இருந்தது.
இரண்டு காலணிகளை அவள் தேர்வு செய்தாள். அவனே அதற்கு முதலில் எடுத்து பணத்தைக் கொடுத்தான்.
அவளோ “எதுக்காக திரும்ப திரும்ப இப்படி என்னை சங்கடப்படுத்துறீங்க நிரஞ்சன்?” என்று கவலையாகக் கேட்டாள்.
“அன்னைக்கு என்னை காப்பாத்தி விட்டியே அதுக்காக நான் கொடுக்கிற சின்ன கிப்ட்”என்று சொல்லவும் அவளால் பதில் பேச முடியவில்லை.
இவர்கள் கோவாவிற்கு செல்ல வேண்டிய நாளும் வந்து இருந்தது.
நால்வரும் கோவாவில் அவர்கள் பயிற்சி செய்ய வேண்டிய சங்கீத மேளா ஏற்பாடு செய்த இடத்தில் பயிற்சி செய்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுடன் அந்த பெண்களின் அணியும் சேர்ந்து பாட்டு கச்சேரி நடத்துவதால் ஒன்றாக பாடிக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது சிற்பி உள்ளே வரவும் சஹா மெதுவாக கண் அசைவினால் பார்த்தியைப் பார்த்து “நி…நிரஞ்சனோட ஆளு வந்துட்டாங்க” என்று உதட்டை அசைத்தான்.
அதைக் கேட்டு பார்த்தி ஆமாம் என்பது போல் சைகைச் செய்ய நிரஞ்சன் இருவரையும் பார்த்து முறைத்தான்.காந்தன் மூவரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க சிற்பி காந்தனைப் பார்த்து “எதுக்காக சிரிக்கிறீங்க காந்தன்?” என்று கேட்க அவனோ புன்னகையையே பதிலாகத் தந்தான்.
சிற்பியைப் பார்த்து நிரஞ்சன் வரவும் அவள் கையில் கொண்டு வந்திருந்த சில பொருட்களை பார்த்து “நாங்க சொன்னது எல்லாம் வாங்கிட்டு வந்துட்டியா?” என்றதற்கு “ம்ம்… எல்லாம் சரியா வாங்கிட்டேன்” என்று சொன்னாள். காந்தன் “சரி வந்து உட்காரு நாம எல்லோரும் ஒன்னாகவே சாப்பிடலாம்” என்று அழைத்தான். ஐந்து பேரும் கொஞ்சம் தள்ளி போனார்கள்.
இதை எல்லாம் பெண்கள் குழுவினரும் பார்த்தனர்.ஆண்கள் நால்வரும் சிற்பியை அவர்களில் ஒருவராக நடத்துவது அவர்களுக்கு ஒருவிதமான பொறாமையை தந்தது.
ஒருத்தி இன்னொருத்தி பார்த்து கண்ணசைக்கவும் அந்த பெண்களில் ஒருவளான சுபா “ஹேய் அசிஸ்டென்ட் பொண்ணு கொஞ்சம் இங்கே வா” என்று அழைத்தாள்.
உடனே சிற்பி எழுந்துக் கொள்ளப் போகும் போது அவளைப் பிடித்து உட்கார வைத்தான் நிரஞ்சன். சுப்ரியா விடாமல் “இப்போ நீ இங்கே வரப் போறியா இல்லையா?” என்று மிரட்டவும் பார்த்தி எழுந்து “ஹலோ மேம் சிற்பி எங்களுக்குத் தான் அசிஸ்டன்ட் உங்களுக்கு இல்லை அப்படி எதாவது வேலை இருந்தால் உங்க பக்கத்துல சும்மா இருக்கிற அல்லக்கை கிட்டே சொல்லுங்க” என்று மற்ற மூவரையும் பார்த்து சொன்னான்.
அதைக்கேட்டு கோபமான தீப்தி “ஹலோ மிஸ்டர் உங்களுக்கு மரியாதைன்னா என்னன்னு தெரியாதா?ஒரு அசிஸ்டன்ட்காக ரொம்ப ஓவரா ஜால்ரா அடிச்சு பேசுறீங்க” என்று சொன்னாள்.
அவளின் பேச்சைக் கேட்டு நால்வரும் முன்னால் வந்து நிற்கவும் சஹா “சி…சிற்பி அசிஸ்டன்ட் என்பது இந்த கம்பெனிக்கு மட்டும் தான். எங்களுக்கு இல்லை அவள் என்றைக்கும் எங்களுடைய அன்புத்தோழி அதனால இந்த மாதிரி நடந்துக்காதீங்க அதோட இப்போ பிரேக் டைம் தான்” என்று சொன்னதும் அங்கிருந்து நால்வரும் அவளையும் தங்களோடு இழுத்துக் கொண்டுச் சென்றனர்.
சஹா நிரஞ்சனையும் சிற்பியையும் மாறி மாறி பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.அதைப் பார்த்த நிரஞ்சன் சிற்பி முன்னால் செல்லவும் மெதுவாக “நான் என்னவோ பெரிய குற்றம் பண்ண மாதிரி ஏன்டா முறைச்சுகிட்டே இருக்கே?’’ என்று நிரஞ்சன் கேட்டான்.
சஹாவோ “சி…சின்னதா ஒரு பொறாமைடா”
“எதுக்கு?”
“சிற்பியை லவ் பண்ணுறேல்ல அதான்” என்று கவலையாகச் சொன்னான்.
அதைக் கேட்டு நிரஞ்சன் புரியாமல் “அவ இன்னும் கிரீன் சிக்னல் கொடுக்கலைடா ஓகே ஆன பிறகு பொறாமை பட்டுக்கோ” என்று கவலையாகச் சொன்னான்.
சஹா “ம்ம்… எ…எல்லாம் ஓகே ஆகும் உன்னைப் போய் வேண்டாம்னு சொல்லுவாங்களா? என்ன கொஞ்சம் மு…முன்னாடி இதைப் பத்தி நான் யோசிச்சு இருந்திருந்தால் சிற்பி” என்று அவன் பேசி முடிக்கும் முன்னே நிரஞ்சன் அவன் முதுகில் பட்டென்று ஒரு அடி போட்டான்.
அவன் போட்ட அடியில் வலிக்கவும் “ஹய்யோ கா…காதல் வந்தால் கண்ணு தெரியாதுன்னு சொல்லுவாங்களே! அது உண்மையாகிடுச்சு ஆஆஆ… முடியலை” என்று பொய்யாக முதுகை தடவிக் கொள்ள முயற்சித்து இருந்தான்.
பார்த்தியோ “நிரஞ்சா அன்னைக்கு இவன்கிட்டே சிக்குனே பத்தியா அதான் உன் நிலைமை இப்போ ரொம்ப பரிதாபம் ஆகிடுச்சு” என்றதும் நிரஞ்சனோ “ஆமாம்” என்பது போல் தலையசைத்தான்.
அன்றைய நாள் சிற்பியுடன் காலணியை வாங்கியவன் அதை சிற்பியின் வீட்டில் அவளை விடும் போது அதை கொடுக்காமல் விட்டு விட்டான்.அதனால் அந்த பொருளை தன் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தவன் எடுத்து வந்து தன் அறையில் வைத்திருந்தான்.
மறுநாள் காலையில் நிரஞ்சனின் அறைக்கு வந்த சஹா அங்கே ஓரமாக இருந்த ஒரு பொருள் இருக்கவும் அதை திறந்து பார்க்க அதில் இரண்டு காலணிகளும் ஒரு சின்னதாக ஒன்று இருக்க அதையும் திறந்துப் பார்க்கும் பொழுது அதன் மேல் “என்றும் அன்புடன் நிரஞ்சன்” என்று எழுதி இருந்தது.உள்ளே அழகான சிவப்பு கல்லால் ஆன ஹேர்கிளிப் இருந்தது.
அதைப் பார்த்தவன் மனதினுள் ‘’எங்களுக்கு தெரியாமல் லவ்ஸ் நடக்குதா? இரு வரேன்’ என்று மெதுவாக தூங்கிக் கொண்டிருந்த நிரஞ்சன் அருகில் வந்தவன் காதோரமாய் மெதுவாக “இந்த கிப்ட் நீங்க தருவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை” என்று லேசாக குரலை மாற்றி பேசினான் சஹா.
உடனே நிரஞ்சன் தூக்கத்தில் சிரித்துக் கொண்டே “உனக்கு பிடிச்சிருக்கா சிற்பி” என்று அவன் சொல்லவும் அதைக் கேட்டு அதிர்ச்சியான சஹா “ஹ…ஹய்யோ இங்கே என்ன நடக்குதுன்னு தெரியலை டேய் பார்த்தி சீக்கிரம் வாடா பகவானே இவன் என்னவெல்லாமோ சொல்றானே எனக்கு தலையே சுத்துதே!” என்று கத்தவும் நிரஞ்சன் எழுந்து உட்காந்து கொள்ள காந்தனும் பார்த்தியும் வந்தார்கள்.
காந்தன் “ஏன்டா கத்துறே? அவன் தான் தூங்கிட்டு இருக்கான்ல” என்று கோபப்பட்டான்.
சஹா “நா…நான் சொல்ற விஷயத்தை நீ கேட்டால் உன்னுடைய மொத்த கோபமும் இவன் மேல வந்திடும்”
பார்த்தி “ஹய்யோ என்ன விஷயம்னு சொல்லு?” என்று கேட்டான்.
சஹா தன் கையில் வைத்திருந்த பையை எடுத்து இருவரிடமும் காட்டினான்.நிரஞ்சன் தூக்க கலக்கத்தில் இருந்து சரியானவன் சஹா கொடுத்த பையைப் பார்த்து “ஹேய் இப்போ எதுக்கு என் பையை எடுத்து பார்க்கிறே?” என்று நிரஞ்சன் எழுந்துக் கொள்ள காந்தன் காலணி இருந்த பையையும் பார்த்தி அந்த ஹேர்கிளிப்பையும் பார்த்தான்.
காந்தனுக்கு எல்லாம் தெரியும் என்பதால் பார்த்தி “என்ன லேடீஸ் பொருளா இருக்கு? யாருக்கு வாங்கினே?”
நிரஞ்சன் விழித்தவாறு “அ…து அது” என்று திணற சஹாவோ காந்தன் எந்தவொரு உணர்ச்சியும் காட்டததால் அவனைப் பார்த்து “ஹோ விஷயம் அப்படி போகுதா? காந்தா நிரஞ்சன் சிற்பியை விரும்புறது தெரியும் தானே” என்று கேட்டான். பார்த்தியோ மூவரையும் பார்த்து அதிர்ச்சியில் நிற்க சஹாவோ “நீங்க ரெண்டுபேரும் எங்களை இன்னும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்ஸா நினைக்கலைடா அதான் மறைச்சுட்டீங்க” என்று கோபப்பட்டுக் கொண்டான்.
பிறகு நிரஞ்சனும் காந்தனும் சேர்ந்து சஹாவை சமாதானம் செய்து முடித்து இருந்தவனுக்கு இதோ இப்போ அவர்கள் செய்யும் கிண்டல் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருக்கிறான் நிரஞ்சன்.
நாளை மறுநாள் இவர்களின் நிகழ்ச்சி கச்சேரி இருந்தது.சுபா மேலிடத்தில் பேசி சிற்பியை நிரஞ்சனின் குழுவோடு இருக்கும் வரை தங்களுக்கும் சேர்த்து உதவியாளராக இருக்க பேசினாள்.அன்றைக்கு ஆண்கள் குழுவில் உள்ளவர்கள் அவர்களை அசிங்கப்படுத்தியதை சரி செய்வதற்காக இப்படி கேட்டுக் கொண்டார்கள்.அவள் பெண் என்பதால் அவர்கள் சாம்பவிக்கு அடுத்து உள்ள பொறுப்புதாரர்களிடம் பேசி சிற்பியைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள்.
அதனால் சிற்பியை உட்கார விடாமல் பெண்கள் குழு நால்வரும் அவளைப் போட்டு படுத்திக் கொண்டிருந்தனர்.
இது நிரஞ்சன் மற்றும் அவர்களின் நண்பர்களுக்கு தெரியாது.அவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு நேராக சென்று இருந்தார்கள்.
இங்கே நால்வரும் சிற்பியை தொல்லைச் செய்ததில் இரவு நேரம் பன்னிரெண்டு ஆகி இருந்தது.எல்லோரும் அறைக்குச் சென்று இருந்தார்கள்.
சிற்பி அந்த பெண்கள் குழுவிற்கு தேவையான பொருட்களை சரியாக எடுத்து வந்தவள் அவர்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு வந்தவள் உடல் சோர்வினால் பொருட்களை ஓரமாக வைத்து விட்டு அப்படியே வாசலில் கொஞ்சம் தள்ளி இருந்த சிறிய சிமெண்ட் இருக்கையில் உட்கார்ந்தாள்.
அப்பொழுது அங்கே ஏதேச்சையாக வந்த நிரஞ்சன் சிற்பி இருப்பதைப் பார்த்து “ஹேய் சிற்பி ஏன் இங்கே உட்கார்ந்து இருக்கே” என்று சொன்னாள்.அங்கிருந்து பதில் வரவில்லை.
யோசனையோடு அவள் அருகில் வந்து பார்த்தவன் உட்காரவும் சோர்வினால் அப்படியே தூங்கி சரியவும் அவளைத் தன் தோளில் சாய்த்து வைத்தான்.
அப்பொழுது அவளது கைகள் லேசாக நடுங்கியது.சிற்பியின் கையைப் பிடித்து பார்க்க அது சிவந்து போய் இருந்தது.தன் சட்டைப் பையில் எப்போதும் சின்னதாக ஒரு மருந்து வைத்திருப்பான் நிரஞ்சன்.அவன் கிடார் வாசிப்பதால் விரல்களுக்கு சில நேரம் ஆறுதலுக்கு தடவுவதற்காக வைத்திருப்பான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

