Loading

காதல் – 57

 

விஹான் மற்றும் அஸ்வதி மீண்டும் அவளின் கல்லூரி இன்ப சுற்றுலாவால் ஒன்றிணைந்து விட்டனர்……

 

அஸ்வதியின் மாணவர்கள் அனைவரும் பீவி அம்மாவோடும், விஹான்னாவோடும், சித்திக் அப்பாவோடும் நன்றாக பழகினார்கள்……

 

சுற்றுலா அழைத்து வந்தது அஸ்வதி ஆனால் அந்த மாணவர்களை பத்திரமாக பார்த்து கொள்வது விஹான்னா தான்…….

 

அஸ்வதி தன் காதல் மண்ணவனுடன் ஐந்து மாதங்கள் பேசாத பேச்சுக்களையெல்லம் பேசி கொண்டு இருந்தாள்………

 

விஹான் , சென்னைல என்னா வெயிலு தெரியுமா ? நா ஏசிய ஃபுல்லா வச்சிட்டுதான் தூங்குவேன் தெரியுமா ?

 

அப்புறம் நா ஒரு நாய் குட்டி வாங்க போறேன் , மதன்கிட்ட கேட்டுருக்கேன் அவன் நல்ல போலீஸ் நாய் குட்டியா வாங்கி தாரேன்னு சொன்னான் …..

 

போலீஸ் நாய் குட்டியா?அது எப்படிம்மா இருக்கும்?

 

அட உங்களுக்கு போலீஸ் நாய் குட்டி தெரியாதா?

 

அடியே தெரியாமதான் கேக்குறேன்….

 

இங்க பாருங்க இதான் போலீஸ் நாய் குட்டி என்று அவள் ஃபோனில் ஒரு போட்டோவை காட்டினாள்……

 

அதை பார்த்து விஹான் சிரித்து விட்டான்…….

 

என்னங்க ஏன் சிரிக்குறீங்க?அப்போவேவும் இதே மாதிரிதான் சிரிச்சீங்க…..ஏன் சிரிக்குறீங்க?

 

என் செல்ல அறிவு கொழுந்தே இதுக்கு பேரு ஜெர்மன் ஷெஃபர்ட்……

 

எதே ஜெர்மன் ஷெஃபர்ட்டா?இது போலீஸ் நாய் குட்டி……

 

அப்படியா அப்போ இதுக்கு பேரு என்ன? என்று ஒரு நாய் குட்டி போட்டோவை காட்டினான்…….

 

இது வாய் டொக்குன்னு இருக்குல்ல அதான் இதுக்கு பேரு டொக்கமோ…..

 

எதே டொக்கமோ வா என்று அவன் மீண்டும் சிரித்தான்……

 

என்ன நீங்க நா என்ன சொன்னாலும் இப்படி விழுந்து விழுந்து சிரிக்குறீங்க?

 

இந்த நாய் குட்டி பேரு பக்……

 

அட எனக்கு இது டொக்கமோதான் ….  ஆமா அப்போவே எதுக்கு சிரிச்சீங்க?

 

நீ உன்னோட ஸ்டூடண்ட்ஸ்கிட்ட கோவமா பேசிட்டு இருந்தல்ல, அப்போ உன்ன பாத்து உன்னோட ஸ்டுடென்ஸ் பயந்தாங்கல்ல அதான் சிரிப்பு வந்துடுச்சு என்று அவன் மீண்டும் சிரித்தான்……

 

போங்க உங்க கூட சண்டை நா போறேன் என்று அவள் எழுந்து செல்ல போக,அவள் எழுந்த வேகத்தில் அவன் நெஞ்சில் சாய்ந்து இருந்தாள்……

 

விஹான்தான் அவளை இழுத்து தன் நெஞ்சினில் சாய்த்து கொண்டான்…..

 

போங்க நீங்க ரொம்ப மோசம் என்ன ரொம்ப கிண்டல் பண்ணுறீங்க …..

 

என்னோட செல்ல கண்ணம்மாவ நா கின்டல் பண்ணாம வேற யாரு கிண்டல் பண்ணுவா என்று அவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்……

 

அந்த முத்தத்தில் அவளது  கோபம் சிறிது குறைந்தது…….

 

ஹலோ ஒரு கன்னத்துல மட்டும் கிஸ் குடுத்துட்டு இன்னொரு கன்னத்துல கிஸ் கொடுக்கலன்னா தெய்வ குத்தம் ஆயிரும் தெரியுமா??

 

அவள் அவ்வாறு கூறவும் அவன் சிரித்து கொண்டே அவளின் முகத்தை முத்தங்களால் நிரப்பினான்…….

 

விஹான் இத்தன நாள் உங்களை நா எவ்வளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?

 

நானும்தான்டா உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்…….

 

விஹான் நீங்க எனக்கு வாங்கி கொடுத்த சென்ட் தீந்து போச்சு ,அப்புறம் எனக்கு முடி வெட்டனும், அப்புறம்……

 

அப்புறம் என்ன?

 

மறந்துட்டேன் நா நியாபகம் வரப்போ சொல்லுறேன்……

 

ஆமா ஏன் முடி வெட்ட போற?முடி நல்லாதான இருக்கு…..

 

இல்லங்க காலைல எழுந்து கிளம்பும் போது தலை முடியை பின்னி போட ரொம்ப நேரம் ஆகுது அதான்……

 

இப்போ கொஞ்சமா நீ ட்ரிம் மட்டும் பண்ணிக்க ……..

 

எனக்கு பின்ன எரிச்சலா வருதே…..

 

இன்னும் கொஞ்ச நாள்தான்…..

 

அதுக்கு அப்புறம்?

 

நா உன்கூட வந்துடுவேன்…….

 

நிஜமாவா?

 

நிஜமா…..

 

எப்படி ???

 

அதுக்கான புராசஸ் போயிட்டு இருக்கு…..

 

என்ன பிராசஸ்?

 

நேரம் வரும்போது சொல்லுறேன்…..

 

ஓகே என்று அவள் அவனை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டாள்…….

 

அவர்கள் இருவரும் அவ்வாறு காதலாக உருகி கொண்டு இருக்கும் அனைத்து சமயங்களிலும் அதை கெடுக்க ஒருத்தி வருவாளே அவளை இன்னும் கானும்…..

 

இதோ வந்துவிட்டாளே…..

 

ஹலோ எக்ஸ்க்கியுஸ்மீ சாப்பிட வாங்க என்று விஹான்னா திரும்பி நின்றபடி கூறினாள்……

 

அவள் அவ்வாறு அழைக்கவும் அவர்கள் இருவரும் சிரித்து கொண்டே சாப்பிட சென்றனர் ……..

 

அஸ்வதி, விஹான் குடும்பத்தினர், மாணவர்கள் அனைவரும் ஒன்றாக இரவு உணவை சேர்ந்து சாப்பிட்டனர்……

 

மேடம் …..

 

சொல்லுடா ஜீவா ……

 

உங்களுக்கு பீவி அம்மா அண்ட் ஃபேமிலிய எப்படி தெரியும்?

 

இப்போ லாஸ்ட் செம் லீவ் விட்ருந்தாங்கல்ல , அப்போ நா என்னோட ஃபேமிலியோட இங்க வந்து தான் ஸ்டே பண்ணோம் , சோ அப்படி அறிமுகமாகி இப்போ எனக்கு ரொம்ப ரொம்ப நெருக்கமானவங்களா ஆகிட்டாங்க…….

 

மேடம் …..

 

சொல்லுடா விக்னேஷ்……

 

ஒன்னு கேப்பேன் என்ன அடிக்க கூடாது என்று அவன் அஸ்வதியை விட்டு தள்ளி நின்று கொண்டு கேட்டான்…….

 

அப்படி என்ன கேக்க போற?

 

மேம் , விஹான் சார நீங்க லவ் பண்ணுறீங்களா?

 

ஏன் அப்படி கேக்குற?

 

இல்ல மேம் விஹான் சார் உங்ககிட்ட வந்தாலே உங்க கன்னம் ரெண்டும் இல்ல இல்ல முகமே வெக்கத்துல சிவந்து போகுது அதான் …….

 

அடேய் எருமை,கிளாஸ்ல ஒரு சம் சொன்னா கவனிக்க மாட்ட ஆனா இதெல்லாம் உன்னோட கண்ணுக்கு தெரியுதோ என்று அஸ்வதி விக்னேஷை அடிக்க சென்றாள் அவன் ஓடி சென்று விஹான் பின்னால் ஒளிந்து கொண்டான்……

 

சார் காப்பத்துங்க ……

 

அஸ்வி போதும்மா, சின்ன பையன்…..

 

விஹான் சொன்னதும் அஸ்வதி அமைதியாக அமர்ந்து விட்டாள்……

 

பிறகு அவர்கள் அனைவரும் சேர்ந்து சிரித்து பேசி விட்டு அவர்கள் தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸிர்க்கு சென்று அனைவரும் உறங்கி போயினர் …….

 

அஸ்வதி முகம் கழுவி விட்டு பெட்டில் படுத்து தூங்க வந்தாள் , அங்கு விஹான் அமர்ந்து கொண்டு இருந்தான்……

 

விஹான் நீங்க இங்க என்ன பண்ணுறீங்க?

 

நா உனக்கு துணையா இருக்கலாமேன்னு வந்தேன் சரி டிராவல் பண்ணி டையர்ட்டாகி இருப்ப வா வந்து தூங்கு என்று அவன் அவளை கை பிடித்து அழைத்து பெட்டில் படுக்க வைத்து விட்டு அவளின் கால்களை மசாஜ் செய்து விட்டான்……..

 

விஹான் நீங்களும் என்கூட தூங்குங்க என்று அவள் அவனை அவளுடன் தூங்க வைத்து அவனின் நெஞ்சில் மேல் சாய்ந்து கொண்டு உறங்கி போனாள்…….

 

மறுநாள் காலை ஐந்து மணிக்கு அஸ்வதி வைத்த அலாரம் ஒலிக்க அவள் எழுந்து விட்டாள் ஆனால் அவள் எழமால் விஹான் அவளை இழுத்து தன் நெஞ்சினில் சாய்த்து கொண்டு அவன் உறங்கினான்……

 

விஹான் என்ன விடுங்க நா எல்லா ஸ்டுடன்ட்சையும் ரெடி பண்ண போனும்……

 

இன்னும் ஒரு ஃபைவ் மினிட்ஸ் என்று அவன் அவளை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டு உறங்கி கொண்டு இருந்தான்…….

 

விஹான் அஞ்சு நிமிஷம் ஆகிடுச்சு என்ன விடுங்க என்று அவள் அவனிடம் இருந்து எழுந்து மாணவர்களை எழுப்ப சென்றாள்……

 

அஸ்வதி செல்வதற்குள் விஹான்னா அணைத்து மாணவர்களையும் எழுப்பி கிளம்ப சொல்லி விட்டாள்……

 

விஹான்னா நீ ஏன் இவ்வளோ சீக்கிரமா எழுந்து இந்த பசங்களை எழுப்பி விட்ட?உனக்கு ஏன் சிரமம்?

 

ஒரு சிரமமும் இல்ல , நீ கொஞ்ச நேரம் போய் தூங்கு நா பாத்துக்குறேன்…….

 

ரொம்ப தேங்க்ஸ் என்று அவள் விஹான்னாவை கட்டி அணைத்து கொண்டாள்…….

 

பாச மழை போதும் போய் தூங்கு ஒரு ஆறு மணி போல எழுப்பி விடுறேன் என்று அவள் அஸ்வதியை அவள் அறைக்குள் தள்ளி விட்டு அவள் மாணவர்களை கவனித்து கொண்டாள்…..

 

அஸ்வதி மீண்டும் அவள் அறைக்குள் சென்று விஹான் நெஞ்சினில் சாய்ந்து கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள்…..

 

ஆறு மணி ஆவதற்கு ஐந்து நிமிடம் முன்னர் விஹான் அஸ்வதியை எழுப்பி விட்டான்……

 

அஸ்வி மனி ஆறு ஆக போகுது , போய் கிளம்பு போ என்று அவன் கூறவும் அஸ்வதி விஹான் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்துவிட்டு கிளம்ப சென்றாள்…….

 

அஸ்வதி கிளம்பி வந்தாள்…..

 

விஹான்னும் கிளம்பி வந்தான்…..

 

சரி எல்லா ஸ்டுடென்சும் வந்தாச்சா?விக்கி?

 

ஆமா மேடம் எல்லாரும் வந்தாச்சு…..

 

சரி இப்போ நம்ம ப்ரேக்பாஸ்ட் முடிச்சிட்டு காஷ்மீர் யுனிவர்சிடி போக போறோம் அங்க உங்களுக்கு அஸ்ட்ரோ பிசிக்ஸ் ,  ஸ்பேஸ் சயின்ஸ் அப்புறம் டெலஸ்கோப் எப்படி ஹாண்டில் பண்றது அப்படின்னு சொல்லிக் கொடுப்பாங்க சரியா?

 

சரி மேடம் என்று அனைத்து மாணவர்களும் காலை உணவை முடித்து விட்டு காஷ்மீர் யுனிவர்சிடிக்கு பஸ்ஸில் கிளம்பி சென்றனர் அவர்களுடன் விஹான் மற்றும் விஹான்னா வந்தனர்…….

 

அவர்கள் அனைவரும் காஷ்மீர் பல்கலைக்கழகத்தை அடைந்து விட்டனர்…….

 

அனுமதி கடிதத்தை விஹான் கொடுக்கவும் அவர்களை கல்லூரிக்குள் அனுமதித்தனர்…..

 

ஸ்டுடென்ட்ஸ் இந்த காலேஜ்ல தான் விஹான் சார் ஒர்க் பண்றாங்க என்று அஸ்வதி கூறினாள்……

 

சார் இந்த காலேஜ்லயா வொர்க் பண்ணுறீங்க?

 

ஆமாடா ஏன்?

 

சார் சுத்தி பணி மலை, பெரிய பெரிய நீட் நீட்டான கிறிஸ்மஸ் மரம் , இந்த இடமே சூப்பரா இருக்கு என்று மனோஜ் கூறினான்……

 

சரி சரி எல்லாரும் வாங்க என்று விஹான் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி கொண்டு இருந்தான் அப்பொழுது அங்கு வந்த ஹர்ஷாவை பார்த்த அஸ்வதி……

 

ஹே ஹர்ஷா என்று அழைக்க அவனும் அவளை பார்த்து சிரித்து கொண்டே வந்தான்…….

 

இருவரும் கட்டி அணைத்து கொண்டனர்…..

 

ஏன்டி நீ இல்லாத இந்த அஞ்சு மாசம் உன்னோட புராணம்தான் கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு …….

 

ஹர்ஷா அவ்வாறு கூறவும் அஸ்வதி சிரித்து விட்டாள், சரிடா மம்மி , டாடி எப்படி இருக்காங்க?

 

அனைவரும் நலம், நலமறிய ஆவல்…..

 

சரி ஸ்டூடண்ட்ஸ் இவங்க பேரு ஹர்ஷத் கான் இவரும் நம்ம கூட இன்னைக்கு இங்க டிராவல் பண்ண போறாங்க…..

 

முதலில் அவர்கள் அனைவரும் அங்கு எவ்வாறு வானியற்பியல் கருவிகளை கையாள்வது ,எவ்வாறு வானியல் பொருட்களைத் தேடுவது, அவற்றின் மீது தொலைநோக்கியைக் குவியப்படுத்துவது மற்றும் தரவுகளைச் சேகரிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டார்கள்…..

தரவு பகுப்பாய்வு  , ISRO-வின் அஸ்ட்ரோ சாட் அல்லது நாசாவின் தரவுகளைப் பயன்படுத்தி, விண்வெளியில் இருந்து வரும் சிக்னல்களை எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது…….

 

அடுத்து உயர் ஆற்றல் இயற்பியலில் உள்ள  கருந்துளைகளின் இயக்கம் மற்றும் அவை நட்சத்திரங்களை எப்படி ஈர்க்கின்றன என்பது பற்றிய கணித மாதிரிகளை மாணவர்கள் கற்றுக்கொன்டார்கள் பிறகு எக்ஸ்-ரே வானியலில் மனிதக் கண்களுக்குத் தெரியாத எக்ஸ்-ரே கதிர்கள் மூலம் பிரபஞ்சத்தை ஆராய்வது எப்படி என்பதைப் புரிந்துகொண்டார்கள்……

 

அடுத்து காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு வெளியில் இருந்து வரும் அதிவேக துகள்களை  கண்டறிவது எப்படி மற்றும் இந்தத் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தையும், செயற்கைக்கோள்களையும் எப்படிப் பாதிக்கின்றன என்பது குறித்த செய்முறை விளக்கங்களைக் பார்த்து கற்று கொண்டார்கள்…..

 

அடுத்து கணினி வழி உருவகப்படுத்துதல், பிரபஞ்சத்தின் தோற்றம்  அல்லது நட்சத்திரங்களின் பிறப்பு போன்ற நிகழ்வுகளை பைத்தான் (PYTHON) மற்றும் ஃபார்ட்ரான் (FORTRAN)போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தி கணினியில் ஒரு மாதிரியாக (Simulation) உருவாக்கிப் பார்ப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கப்பட்டது

 

அடுத்து துகள் இயற்பியல் அணுக்களுக்குள் இருக்கும் நுண் துகள்களின் பண்புகள் மற்றும் பிரபஞ்சத்தை இயக்கும் அடிப்படை விசைகள் பற்றி ஆழமாகப் கற்று கொண்டார்கள்………

 

இறுதியில் ஒரு மாணவர் அங்கு செல்லும்போது, பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதையும், அதை நவீன தொழில்நுட்பம் மற்றும் கணிதம் மூலம் எப்படி அளவிடுவது என்பதையும் மிகத் தெளிவாகக் கற்றுக்கொண்டார்கள்…….

 

அனைத்து மாணவர்களும் அந்த அஸ்ட்ரோ பிசிக்ஸ் ஸ்பேஸ் அப்சர்வேட்டரியில் இருந்து வெளியில் வரும்போது அவர்கள் அனைவரும் ஒரு பிரமிப்பில் இருந்தனர்……..

 

பசங்களா இன்னைக்கு அஸ்ட்ரோ பிசிக்ஸ் ஸ்பேஸ் அப்சர்வேட்டரி ட்ரிப் எப்படி இருந்தது…….

 

சூப்பர் சூப்பர் மேடம் என்று அனைத்து மாணவர்களும் சந்தோஷமாக பஸ்ஸில் ஏறி அமர்ந்து தங்களின் கெஸ்ட் ஹவுஸிற்க்கு சென்றனர்……

 

தொடரும்……

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……….

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்