Loading

அத்தியாயம் 58

அங்கு வந்த போலீஸ் நேராக சென்று ஈஸ்வரி கையில் விலங்கை  மாட்டினார்‌.

 

ஈஸ்வரி கோபமாக, “எங்க வந்து யார் கையில் விலங்கு போடுற. முதல்ல என்னோட வக்கீல் கிட்ட பேசுங்க அதுக்கு அப்புறம் முடிந்தால் என்னை அரெஸ்ட் பண்ணுங்க”  என்றாள்.

 

போலீஸ், “கமிஷனரிடம் இருந்து  அரெஸ்ட் வாரண்ட் வாங்கிக் கொண்டு தான் வந்திருக்கிறோம்” என்று சில பேப்பர்களை எடுத்து காண்பித்தார்.

 

ஆம், விக்ரம் அவன் நண்பன் கமிஷனரை நேரில் சென்று பார்த்தான்.

 

பிறகு, ஈஸ்வரி செய்த கொடுமை அனைத்தையும் கூறி அவள் மேல் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டு தான் சுஜிதா வீட்டிற்கே சென்றான்.

 

ஈஸ்வரியால் எதுவும் பேச முடியாமல் சக்தியை பார்த்து தீயை கக்கும் விழிகளால் முறைத்துக் கொண்டு இருந்தாள்.

 

பிறகு, போலீஸ் ஈஸ்வரி மற்றும் அவள் ஆட்டகல் என அனைவரையும் கைது செய்து அங்கிருந்து கூட்டிச் சென்று விட்டார்கள்.

 

சக்தி மயங்கி அங்கேயே விழுந்து விட சுஜிதா பதறிப் போனால். விக்ரம் அப்பொழுது தான் கவனித்தான் சக்தி தலையில் இருந்து வடியும் உதிரத்தை.

 

விக்ரம், நிலா மற்றும் சுஜிதா என மூவரும் சேர்ந்து சக்தியை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடலை நோக்கி சென்றார்கள்.

 

டாக்டர், சக்தியை ஐ சி யு க்கு கூட்டிச் சென்று அவனை பரிசோதித்துக் கொண்டு இருந்தார்கள்.

 

சுஜிதா பதட்டமாக கையை பிசைந்தபடி அங்கும் இங்கும் நடந்துக் கொண்டு இருந்தாள். நிலா அவளுக்கு ஆறுதல் கூறினாள்.

 

பிறகு, ஐ சி யு வில் இருந்து வெளியே வந்த டாக்டர், “ஒன்னும் பிரச்சனை இல்லை. இன்னும் கொஞ்சம் நேரத்தில் சக்தி கண்ணு முழிச்சிட்டுவாங்க”.

 

“ஒரு வாரம் கழித்து நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்” என்று அங்கிருந்து சென்று விட்டார்.

 

சுஜிதா, சக்தியை நல்லபடியாக பார்த்துக் கொண்டாள். விக்ரம், நிலாவை கூட்டிச் சென்று வீட்டில் விட்டுவிட்டு அவனும் தினமும் வந்து சக்தியை பார்த்துக் கொண்டான்.

 

அப்படியே ஒரு வாரம் மின்னலைப் போல் சென்று விட்டது. பிறகு, சக்தியை டிஸ்டார்ஜ் செய்து வீட்டிற்கு கூட்டிச் சென்று விட்டார்கள்.

 

பிறகு, நான்கு பேரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டார்கள்.

 

நிலா, “துருவ் எனக்கு இப்போது தான் நிம்மதியாக இருக்கு. சுஜிதா வாழ்க்கையை நினைத்து நானும் ரொம்பவே வருத்தப்பட்டேன்”.

 

“இனிமேல் அவ வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை. பாவம் சின்ன வயசுல இருந்து என்னைப் போல் அவளும் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா” என்று பேசிக் கொண்டே சென்றாள்.

 

நிலா அருகில் சென்ற விக்ரம் அவள் முதுகுப் புரம் சென்று இடுப்பு வளைவில் கைகோர்த்த படி கழுத்து வளைவில் முகத்தை புதைத்துக் கொண்டு.

 

மெல்லிய குரலில், “அது எல்லாம் சரி டார்லிங். நீ இப்போ ஆச்சு  என்னை கொஞ்சம் கவனிக்கலாமே” என்றான் மோகம் கலந்த காதல் குரலில்.

 

அதை புரிந்து கொண்ட நிலா வெக்கத்தில் முகம் சிவக்க வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற எண்ணி, “தள்ளி போங்க துருவ் எனக்கு ஒரே டயர்டா இருக்கு நான் போய் தூங்க போகிறேன்” என்று அவன் கையை தட்டி விட்டாள்.

 

விக்ரம் அவள் செல்லும் பொழுது அவள் கையை எட்டிப் பிடித்து இழுத்தான். அதில் நிலை தடுமாறிய நிலா விக்ரம் மார்பிலே விழுந்து சரிந்தாள்.

 

அவள் காது அருகே சென்ற விக்ரம் ஹஸ்கி வாய்ஸில், “பாத்தியா நீ வேண்டாம் என்று சொன்னாலும் உன் மனசு ஆசைப்படுது” என்று அவளை கேலி செய்தான்.

 

தன் இரு கரங்களி அவளை ஏந்தி கொண்டு கட்டிலை நோக்கி சென்றான். அன்றைய இரவு அவர்களுக்கு சந்தோஷமாகவே முடிந்தது.

 

சுஜிதா வழக்கம் போல் தட்டில் சாப்பாட்டை போட்டுக் கொண்டு சக்தி அருகில் அமர்ந்து அவனுக்கு ஊட்டி விட ஆரம்பித்தாள்.

 

சக்தி, “எனக்கு தான் இப்போ உடம்பு சரி ஆகிடுச்சு இல்ல இப்போ எதுக்கு டி ஊட்டிக்கிட்டு இருக்க” என்றான்.

 

சுஜிதா, “நீ அப்படி தான் சொல்லுவ உனக்கு ஒன்னும் தெரியாது சும்மா இரு. ஒழுங்கா நான் கொடுக்கிறதை சாப்பிடு” என்று வற்புறுத்தி ஊட்டிக் கொண்டு இருந்தாள்.

 

சுஜிதா, “இதுதான் கடைசி வாய்” என்று அவன் வாயில் தன் கைகளால் உணவை வைக்க அவன் உணவுடன் சேர்த்து அவள் கையையும் கடித்துக் கொண்டான்.

 

சுஜிதா, “கையை விடுங்க வலிக்குது” என்றாள். சக்தி அவன் நாக்கால் அவள் விரல்களில் கோலம் போட  அதில் சுஜிதா உடம்பு சிலுத்துப் போனது.

 

அவள் முக பாவனையை சக்தி ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். சுஜிதா சட்டென்று கையை அவனிடம் இருந்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடினாள்.

 

சக்தி எட்டி அவள் கையைப் பிடிக்க  முயற்சித்தான். ஆனால், அவன் கையில் பிடிபட்டது அவள் துப்பட்டா மட்டுமே.

 

சுஜிதா சட்டென்று அங்கேயே நின்று கழுத்தில் உள்ள துப்பட்டாவை பிடித்துக் கொண்டு திருதிருவென விழித்துக் கொண்டு பார்த்தாள்.

 

சக்தி அவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான். சுஜிதா தயக்கத்துடன் அந்த துப்பட்டாவை அவள் கழுத்தில் இருந்து எடுத்து சக்தி முகத்தில் சிரித்துக் கொண்டே தூக்கி போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.

 

சக்தி அவள் சினுங்களுடன் துப்பட்டாவை தன் மேல் தூக்கி போட்டு விட்டு சென்றதில் அவளுக்கும் இதில் விருப்பம் என்று புரிந்து கொண்டு அவளை துரத்திக் கொண்டே சென்றான்.

 

வெகு நேரமாக சுஜிதா அவன் கையில் சிக்காமல் ஓடிக்கொண்டே இருந்தாள்.

 

சக்தி, “ஏய் சுஜி நில்லு டி” என்று அவன் கையை நீட்டி அவள் தோல் பட்டையில் கை வைக்க சென்றான்.

 

ஆனால், கை வழுக்கி அவள் முதுகு புறம் மேல் ஆடையை பிடித்து விட்டான்.

 

சுஜிதா ஓடும் வேகத்தில் அவள் அணிந்திருந்த சுடிதார் பின்பக்கம் இருந்த ஜிப் அவிழ்ந்து விட்டது.

 

அதில் சட்டென்று சுஜிதா நின்றுவிட சக்தி வந்த வேகத்தில் அவள் மேல் மோதி தொப்பென்று இருவரும் சேர்ந்து கீழே விழுந்தார்கள்.

 

சக்தியின் கை சுஜிதா முதுகில் கோலம் போட அதில் வெக்கத்துடன் அவனுள் புதைந்து கொண்டால்.

 

மறுநாள் காலை இரு ஜோடிகளுக்கும் சந்தோஷமாகவே விடிந்தது.

 

காலையில் சீக்கிரம் கண் விழித்த சக்தி, சுஜிதா நெற்றியில் தன் இதழை பதித்து எடுத்தவன் அவளை ரசித்து அவன் முகத்தில் இருக்கும் முடியை காது ஓரம் ஒதுக்கிவிட்டு அவள் காதிலும் தன் இதழை பதித்து எடுத்தான்.

 

சுஜிதா தூக்கத்திலேயே சினுங்கினால். சக்தி அவளின் சினுங்களை பார்த்து சிரித்துவிட்டு எழுந்து குளியலறையை நோக்கி சென்றான்.

 

பிறகு, சுஜிதாவுக்காக காலை உணவை தயார் செய்துவிட்டு அவளுக்கு காஃபி போட்டு எடுத்துக் கொண்டு அவன் அறையை நோக்கி சென்றான்.

 

சக்தி, “அடிப்பாவி இன்னுமா தூங்குற” என்று காஃபியை டேபிள் மேல் வைத்துவிட்டு. சுஜிதா அருகில் அமர்ந்து அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.

 

அதில் தூக்கம் கலைந்து எழுந்த சுஜிதா அவள் இருக்கும் நிலையில் சக்தி இவ்வளவு அருகில் வெளிச்சத்தில் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து தானாகவே அவள் கன்னம் சிவந்துப் போனது.

 

சக்தி, “என்ன டி திடிர் ன்னு உன் கன்னம் எல்லாம் சிவக்குது” என்றான்.

 

சுஜிதா, “நீங்க இங்க உட்கார்ந்திட்டு என்ன பண்றீங்க? முதல்ல எழுந்து வெளிய போங்க. நான் போய் குளிக்கணும்” என்றாள்.

 

சக்தி, “நான் ஒன்னும் உன்னை பிடிச்சிக்கிட்டு இல்லையே போய் குளி. அதுக்கு முன்னாடி இந்த காபியை குடிச்சிட்டு போ” என்றான்.

 

சக்தி முன்பு அந்த  நிலையில் இருக்கவே சுஜிதாவுக்கு அவஸ்தையாகி போனது. சுஜிதா, “நான் குளிச்சிட்டு வந்து குடிக்கிறேன்” என்று எழ முயன்றாள்.

 

ஆனால், சக்தி அவள் கைகளை பிடித்துக் கொண்டு “இப்போ நான் போட்ட காஃபி நீ குடிச்சிட்டு போனால் ஒழுங்கா நீ குளிக்கலாம் இல்லை என்றால் நானும் உன்னுடன் வருவேன் குளிக்க” என்றவுடன் சுஜிதா திரு திரு என விழித்தபடி அவனையே பார்த்தாள்.

 

சக்தியின் பார்வை சுஜிதா வை நிலைகுலைய செய்தது. சக்தி கூலாக, “சரி வா நம்ம போய் குளிக்கலாம்” என்றான்.

 

அடுத்த நொடி சுஜிதா பதட்டமாக அந்த காஃபி சூடாக இருக்கு என்று கூட பார்க்காமல் ஒரே சிப்பில் குடித்து விட்டு அங்கிருந்த போர்வையுடனே குளியல் அறைக்குள் ஓடி புகுந்து கொண்டாள்.

 

சக்தி அவளின் சைகை யைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தான். இவ்வாறு இவர்கள் வாழ்க்கை ஆரம்பம் ஆனது.

பாகம் – 59

 

சில மாதத்திற்கு பிறகு,

 

விக்ரம் வீட்டில் தடபுடலாக விருந்து தயார் ஆகிக் கொண்டு இருந்தது.

 

நிலா பட்டுப் புடவையை கட்டிக்கொண்டு இருந்தாள். கீழே குனிந்து புடவையை சரி செய்ய முயற்சித்தாள்.

 

ஆனால், அவள் வயிறு பெரிதாகி விட்டதால் கீழே குனிந்தாள் அவள் கால் கூட அவள் கண்ணுக்கு தெரியவில்லை.

 

நிலா, “துருவ் இதை கொஞ்சம் சரி பண்ணி விடுங்க” என்றாள்.

 

பிறகு, விக்ரம் அவள் காலடியில் மண்டியிட்டு அவள் புடவையை சரி செய்து விட்டு அவள் வயிற்றில் ஓர் முத்தத்தையும் கொடுத்து, “பேபி அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்த கூடாது”.

 

“இன்னைக்கு அம்மாக்கு பங்க்ஷன் இருக்கு நீ அப்பா செல்லம் தானே அப்போ நான் சொல்றதை நீ கேட்கணும்” என்று மறுபடியும் ஒரு முத்தத்தை கொடுத்தான்.

 

நிலா அவன் காதை பிடித்து திருகி, “எப்போ பார்த்தாலும் பேபியை ரொம்ப தான் கொஞ்சிக்கிட்டு இருக்கிங்க”.

 

“இப்போ எல்லாம் நீங்க என்னை கண்டுக்கிறதே இல்லை” என்று கையை கட்டிக்கொண்டு கோபமாக திரும்பி நின்று கொண்டாள்.

 

விக்ரம் சிரித்துக் கொண்டே எழுந்து அவள் தாடையை பிடித்து, “ஐயோ டார்லிங் உனக்கு அப்புறம் தான் யாராக இருந்தாலும்” என்று அவளை கட்டி அணைக்க செல்ல இருவருக்கும் இடையில் நிலா வயிறு இடித்தது.

 

நிலா மறுபடியும் கோபித்துக் கொண்டு, “பார்த்திங்கலா  உங்களால் என்னை ஒழுங்கா கட்டிக் கூட பிடிக்க முடிய வில்லை” என்று மறுபடியும் திரும்பி நின்று கொண்டாள்.

 

விக்ரம் அவளை பின்புறமாக கட்டி அணைத்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

 

அந்த சமயம் மித்ரா படபடவென கதவை தட்டனாள். நிலா, “இதோ வர்றேன்” என்று குரல் கொடுத்தபடி அவசரமாக கதவை திறக்க சென்றாள்.

 

விக்ரம் கோபமாக, “ஒரு நிமிஷம் நில்லு. எங்க போற நீ பாட்டுக்கு?” என்றான்.

 

நிலா, “கதவு தட்டும் சத்தம் கேட்டுச்சு இல்ல அதான் திறக்க போறேன்” என்றாள்.

 

விக்ரம், “எனக்கும் தான் கேட்டுச்சு. நீ பாட்டுக்கு இப்படி ஸ்பீடா போற பொறுமையா நடக்கணும் தெரியாதா? உனக்கு”.

 

“டாக்டர் என்ன சொன்னாங்க  பொறுமையா தானே நடக்க சொன்னாங்க” என்று கத்தினான்.

 

பிறகு, அமைதியாக வந்து கட்டிலில் அமர்ந்து கொண்ட நிலா, “நான்   கதவையேத் திறக்கல நீங்களே போய் திறந்துக்கோங்க” என்றாள்.

 

விக்ரம் சென்று கதவை திறக்க அங்கு மித்ரா நின்றிருந்தாள்.

 

மித்ரா, “அண்ணா அம்மா உங்களை கீழே கூப்பிட்டாங்க எல்லாரும் வந்துட்டாங்க நலுங்கு வைக்க அண்ணியை கூட்டிட்டு வர சொன்னாங்க” என்றாள்.

 

விக்ரம் மற்றும் மித்ரா இருவரும் நிலாவை மெதுவாக கீழே கூட்டிச் சென்றார்கள்.

 

அனைவர் கண்களும் நிலா மேல் தான் இருந்தது. மிதமான ஒப்பனையில் மிக அழகாக காட்சி அளித்தாள்.

 

அந்த நேரம் சரியாக சக்தி மற்றும் சுஜிதா உள்ளே நுழைந்துவிட சுஜிதாவை பார்த்தவுடன் நிலா கொஞ்சம் வேக எட்டுகளை எடுத்து வைத்தால்.

 

சுஜிதாவும் அதே போல் வேகமாக ஓடி வந்தாள். இருவரும்  கட்டி அணைத்து நலம் விசாரிக்க சக்தி, சுஜிதாவை பார்த்து முறைத்தான்.

 

அதேபோல் விக்ரம், நிலாவை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தான்.

 

அதை கவனித்து இருவரும் பல்லை காட்டியபடி நைசாக அங்கிருந்து நழுவினார்கள்.

 

ராஜலட்சுமி, “நிலா மணி ஆகிடுச்சு நலுங்கு வைக்கலாம்” என்றார்.

 

நிலா, “ஒரு நிமிஷம் மா இன்னும் பத்மா அம்மாவும், ராமலிங்க அப்பாவும் வரவே இல்லையே” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுது அவர்கள் இருவரும் வந்தடைந்தார்கள்.

 

பத்மா இரு பெண்களையும்  கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்.

 

நிலா, “ஏன் இவ்வளவு லேட்டு? சீக்கிரமா வர மாட்டீங்களா? உங்க பொண்ணோட ஃபங்ஷனுக்கு நீங்களே இப்படி லேட்டா வரலாமா?” என்றாள்.

 

பத்மா சிரித்தே சமாளித்தார்.  ராஜலட்சுமி மற்றும் பத்மா நிலாவை அழைத்துச் சென்று நலுங்கு வைக்க அமர வைத்தார்கள்.

 

பக்கத்தில் விக்ரமையும் அமர வைத்து அம்மா வீட்டு சீரில் பத்மா ஒரு குறையும் இல்லாத வாறு நிலாவுக்கு பார்த்து பார்த்து அனைத்தையும் செய்தார்.

 

நிலா கண்கள் கலங்க, “இதெல்லாம் எதுக்கு மா எனக்கு?” என்றாள்.

 

பத்மா, “இந்த வலையலை வாங்கிட்டு வருவதற்கு தான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. நீயும் என் பொண்ணு தான் மா”.

 

“அதனால் வேண்டாம் என்றெல்லாம் சொல்லக் கூடாது” என்று அந்த வளையலை போட்டு விட்டார்.

 

பிறகு, நலுங்கு நல்லபடியாக முடிந்து விட நிலாவை எழுப்பியவுடன் ராஜலட்சுமி, சுஜிதா மற்றும் சக்தியை அமர வைத்து இருவருக்கும் மாலையைப் போட்டுவிட்டார்.

 

இவர்கள் இருவரும் அதிர்ச்சியாக எங்களை எதற்கு உட்கார வைக்கிறீங்க” என்றார்கள்.

 

ராஜலட்சுமி, “நீயும் எங்க வீட்டு பொண்ணு மாதிரி தான் உனக்கும் இப்போ அஞ்சு மாசம் ஆகிடுச்சு”.

 

“அஞ்சு மாசத்துல நலுங்கு வைக்கிறது எல்லாம் சம்பிரதாயம். அப்போ தான் வயித்துல இருக்க குழந்தை சந்தோஷமா இருக்கும்”.

 

“நீ சின்ன பொண்ணு உனக்கு ஒன்னும் தெரியாது” என்று மறுபடியும் நலுங்கு வைக்க ஆரம்பித்தார்கள்.

 

பத்மா, சுஜிதாவுக்கும் சீர் செய்தார். சுஜிதா, “அப்போ உங்களுக்கு முன்னாடியே தெரியுமா? இங்க எனக்கும் நலுங்கு வைக்க போறாங்க என்று” என்றாள்.

 

பத்மா சிரித்த முகமாக தெரியும் என்று தலை அசைத்து விட்டு சுஜிதா கையில் நிலவுக்கு போட்டது போலவே இரண்டு வளையலை போட்டு விட்டார்.

 

பிறகு, பங்க்ஷன் எல்லாம் முடிந்து விட சுஜிதாவும், நிலாவும் வெகு நேரமாக சிரித்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.

 

அதை சக்தியும், விக்ரமும் தூரத்தில் இருந்து பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தார்கள்.

 

அந்த இடத்திற்கு சென்ற ஆதித்யா, “என்ன அண்ணாஸ் இங்க இருந்துகிட்டு உங்க பொண்டாட்டிங்களை சைட் அடிச்சுக்கிட்டு இருக்கீங்களா?”.

 

“உங்களுக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சு இல்ல. கிட்ட போய் சைட் அடிக்கவேண்டி தானே” என்று கேலி செய்தான்.

 

சக்தி சிரிக்க விக்ரம் அவனைப் பார்த்து முறைத்தான்.

 

திடீரென நிலா வயிற்றைப் பிடித்துக் கொண்டு “அம்மா” என்று சத்தமாக கத்தினாள்.

 

விக்ரம் பதட்டமாக, “நிலா என்ன ஆச்சு?” என்றான். அனைவரும் ஓடிச்சென்று பார்க்க நிலாவுக்கு பிரசவ வலி வந்துவிட்டது.

 

அவசரமாக நிலாவை காரில் ஏற்றிக் கொண்டு விக்ரம், பத்மா மற்றும் ராஜலட்சுமி முதலில் சென்று விட்டார்கள்.

 

மற்ற அனைவரும் பின்னாடி காரில் சென்றார்கள். ஹாஸ்பிடலுக்கு சென்றவுடன் விக்ரம் கைகளில் நிலாவை ஏந்திக்  கொண்டு உள்ளே ஓடினான்.

 

டாக்டர், “நிலா பிரசவத்தில் கொஞ்சம்  சிக்கல் இருக்கு. ஆப்ரேஷன் பண்ணி தான் குழந்தையை வெளியே எடுக்கணும்” என்று கூறி விட்டார்கள்.

 

விக்ரம் ஆபரேஷனுக்கு ஒற்றுக்கொள்ளவே இல்லை. பிறகு, அனைவரும் சேர்ந்து பேசி ஒற்றுக்கொள்ள வைத்தார்கள்.

 

நிலா ஆப்ரேஷன் தியேட்டருக்குள் விக்ரம் வந்தால் மட்டும் தான் ஆப்ரேஷன் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்தாள்.

 

விக்ரம் வேறு வழி இன்றி உள்ளே சென்றான். அங்கு டாக்டர் நர்ஸ் என அனைவரும் முக மூடியுடன் ஆபரேஷன் தியேட்டர் குல் நுழைந்ததை பார்த்த விக்ரமுக்கு அடி வயிறு எல்லாம் கலங்க ஆரம்பித்தது.

 

வெளியே அனைவரும் உள்ளே சென்ற விக்ரம் நிலாவுக்கு ஆறுதலாக இருப்பான் என்று எண்ணினார்கள்.

 

ஆனால், அதற்கு மாறாக உள்ளே சென்ற விக்ரம் பயந்து நிலா கையை இருக்கி பிடித்துக் கொண்டு ஓரமாக நின்று இருந்தான்.

 

நிலா, விக்ரமுக்கு ஆறுதல் கூறினாள். பிறகு, அவள் கூறியது போலவே அழகாக ஓர் பெண் பிள்ளையையும் பெற்று எடுத்தாள்.

 

டாக்டர், “விக்ரம் கையில் குழந்தையை தூக்கி கொடுக்க அந்த உதிரத்துடன் இருக்கும் குழந்தையை கையில் வாங்கவே விக்ரமுக்கு கைகள் எல்லாம் நடுங்கியது.

 

விக்ரம் கண்களில் இருந்து ஆறாக கண்ணீர் வடிந்து ஓடியது.

 

பிறகு, சிறிது நேரம் கழித்து சுஜிதா, பத்மா, சக்தி, ராமலிங்கம், ராஜேந்திரன், ராஜலட்சுமி, ஆதித்யா என அனைவரும் வந்து மாறி மாறி குழந்தையை தூக்கி கொஞ்சினார்கள்.

 

சக்தி மெல்லிய குரலில், “எனக்கும் இதே போல் குழந்தை சீக்கிரமா வேண்டும்” என்று கிசுகிசுப்பாக கூறினான். சுஜிதா, மௌனமாக சிரித்தாள்.

 

ஆதித்யா, “ஆமாம், அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்” என்றான். விக்ரம், “என் டா?” என்றான்.

 

ஆதித்யா, “குழந்தையை கஷ்டப்பட்டு  பெற்றெடுத்தது அண்ணி தானே?. அப்போ அண்ணி தானே வலியில் அழுது இருக்கனும் அவங்க கண்ணு  தானே வீங்கி இருக்கனும்”.

 

“ஆனால், அதற்கு எதிர்மாறாக  உன்னோட கண்ணு என்ன டா இப்படி வீங்கி போய் இருக்கு”.

 

“இது தான் ஒரு வேலை உயிருக் உயிரா நேசிச்சா ஒருத்தவங்களோட வலி இன்னொருத்தவங்களுக்கும் தெரியும் என்று சொல்லுவாங்களே  அது இது தானா?” என்று கேலி செய்தான்.

 

அதில் அனைவரும் கலகலவென சிரித்து விட்டார்கள். இவ்வாறு அவர்கள் வாழ்க்கை பயணம் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

**************முடிவுற்றது************

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்