Book-purchase Archives - தூரிகை தமிழ் நாவல்கள் https://thoorigaitamilnovels.com/category/book-purchase/ Thu, 25 Apr 2024 12:11:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.2.2 https://thoorigaitamilnovels.com/wp-content/uploads/2021/08/favicon-32x32-1.jpg Book-purchase Archives - தூரிகை தமிழ் நாவல்கள் https://thoorigaitamilnovels.com/category/book-purchase/ 32 32 197060226 Y https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-3/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-3/#respond Tue, 05 Sep 2023 11:49:51 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-3/ Y

The post Y appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

]]>

Loading

Y

    The post Y appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

    ]]>
    https://thoorigaitamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-3/feed/ 0 15866
    உனதானேன் உயிரானேன் – 3 https://thoorigaitamilnovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-2/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-2/#respond Thu, 16 Jun 2022 07:42:23 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-2/    மாத்திரையை போட்டுக்கொண்டு உறங்கியவன் , நல்லதொரு உறக்கத்தில் மூழ்கி இருந்தான்.          நன்கு உறங்கிக் கொண்டு இருந்தவனின் போன் அலறி அவனை தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டது.  அவனுடைய போன் இரண்டு…. மூன்று  முறை ரிங்காகி கட் ஆனது.       தன்னுடைய கண்களை மெதுவாக திறந்து தன்னுடைய போனை எடுத்து “யார் எனக்கு அழைப்பு விடுத்து இருப்பது? என்று யோசித்துக்கொண்டே போனை பார்த்தான்”.

    The post உனதானேன் உயிரானேன் – 3 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

    ]]>

    Loading

       மாத்திரையை போட்டுக்கொண்டு உறங்கியவன் , நல்லதொரு உறக்கத்தில் மூழ்கி இருந்தான். 

            நன்கு உறங்கிக் கொண்டு இருந்தவனின் போன் அலறி அவனை தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டது. 

    அவனுடைய போன் இரண்டு…. மூன்று  முறை ரிங்காகி கட் ஆனது. 

         தன்னுடைய கண்களை மெதுவாக திறந்து தன்னுடைய போனை எடுத்து “யார் எனக்கு அழைப்பு விடுத்து இருப்பது? என்று யோசித்துக்கொண்டே போனை பார்த்தான்”. அதில் மதி டியர் என்று இருக்கவும் , மீண்டும் அந்த எண்ணிற்கு அழைப்பு விடுவித்தான். 

             அந்த முனையில் அழைப்பு ஏற்றவுடன் என்ன மது டியர் ? எதுக்காக எனக்கு இத்தனை முறை அழைத்து இருக்கிறீர்கள்? 

              “டேய் பங்கு! என்ன டா பண்ற ? ஏன் இன்னைக்கு காலேஜ் வரவில்லை? நீ வருவ …. வருவ என்று இவ்வளவு நேரம் காத்து இருந்தேன். நீ வரவில்லையா நானே உன்னுடைய பங்கு சமோசாவையும் உன்னுடைய பெயர் சொல்லி நானே சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றேன். 

            அட போ பங்கு , நைட் என்ன நடந்தது தெரியுமா? என்றவன் இரவுத் தொடங்கி இப்பொழுது வரை நடந்த அனைத்தையும் அவளிடம் ஒப்புவித்தான். 

             வாயை மூடி சிரித்தவளால் ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் போக சத்தமாகவே சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். “ஆ….ஆ ” என்ன பங்கு இப்படி மானத்தை வாங்கி இருக்க? உன்னுடைய மனதில் என்ன சின்ன குழந்தை என்று நினைப்பா? 

    உன்னுடைய அண்ணா மடியில் போய் ஒளிந்து இருக்க ? உன்னை எல்லாம் என்னுடைய கூட்டாளி என்று சொல்லவே ரொம்ப வருத்தமாக இருக்கு டா!

            வேணாம் பங்கு! நீ மட்டும் என்ன ரொம்ப தைரியசாலி என்று நினைப்போ? போன வாரம் தானே இருட்டில் உங்க அப்பா முகத்தை பார்த்து பயந்துபோய் மயக்கம் போட்டு விழுந்தாயே ? அதை மறந்து விட்டாயா? இரண்டு நாள் காய்ச்சல் வந்து லீவு எடுத்துவிட்டு வீட்டில் இருந்தாயே அதை மறந்து விட்டீயா? தன்னுடைய வரலாற்றை ஒரு முறை நினைவு படுத்திக்கொண்டு மற்றவர் வரலாற்றை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் பங்கு. 

             சரி…. சரி நமக்குள்ள என்ன பங்கு . நீ எப்ப வருவ ? 

           நாளைக்கு வந்துவிடுவேன். எனக்கு பசிக்கிறது நான் சாப்பிட போறேன் பாய் பங்கு என்று கூறி போனை கட் செய்துவிட்டு , பாத்ரூம் சென்று முகத்தை கழுவி கொண்டு வந்து நேராக தன்னுடைய அண்ணனிடம் சென்று “அண்ணா! பசிக்கிறது எனக்கு”.

           தேவ், பார்த்துக்கொண்டு இருந்த ஃபைலை அப்படியே மூடி வைத்துவிட்டு , தன்னுடைய தம்பியுடன் சேர்ந்து உணவை உண்ண ஆரம்பித்தான். 

    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

           என்னது நான் வதனியை காதலிக்கிறேனா ? அதிர்ச்சியுடன் மித்ரனை பார்த்துக் கேட்டான் பாபு.

           அந்த வழியாக போய்க்கொண்டு இருந்த வதனியின் காதுகளில் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டது கேட்க , ” இவர்கள் தன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள்! என்று அமைதியாக சற்று தள்ளி நின்று கேட்க தொடங்கினாள் வதனி “.

              எதுக்காக இப்படி ஷாக் ஆகுற ? ஷாக்கை குறை. நீ வேற அந்த பொண்ணு திரும்பியே பார்க்காமல் போகுது, எப்ப பாரு எதையோ இழந்த மாதிரி இருக்கு. யாரிடமும் சரியாக பேசாமல் இருக்கு என்று சொன்னாயா?     

    அதனால் நான் என்ன நினைத்தேன் என்றால் நீ அந்த வதனியை காதலிக்கிறாய் என்று நினைத்தேன். அதைத்தான் உன்னிடம் கேட்டேன். அதற்கு பதில் எஸ் ஆர் நோ சொல்லாமல் எதுக்கு இப்படி சத்தம் போட்டு “நாம ஊரார் கதை தான் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று எல்லோருக்கும் காட்டி கொடுக்கிற? ” 

             நான் ஒன்றும் வதனியை  காதலிக்கவில்லை. வதனி பார்க்க என்னுடைய தங்கை மாதிரியே இருக்கு. என்னுடைய தங்கையின் பெயர் வனிதா. ஆனா வீட்டில் எல்லோரும் வதனி…. வதனி தான் கூப்பிடுவாங்க. ஆபிஸ்ல வதனியை பார்க்கும் போது எல்லாம் என்னுடைய தங்கச்சி நியாபகம் தான் வரும். அதனால் தான் என்னுடைய தங்கச்சி  நியாபகம் வரும் போது எல்லாம் வதனியை பார்ப்பேன். அவங்ககிட்ட பேச வேண்டும் என்று நினைப்பேன். ஆனா அவங்க என்கிட்ட பேசாம போய் விடுவாங்க. அப்போ எல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும் . 

             நீ ஏன் இவங்களிடம் பேசவேண்டும் என்று நினைக்கிற ? நீ உரிமையா உன்னுடைய தங்கச்சியிடமே பேசலாமே! உரிமை இல்லாத இடத்தில் நாம் எதையும் செய்யவும் கூடாது! எதையும் எதிர்ப்பார்க்க கூடாது.

             நீங்க சொல்வது சரிதான். ஆனால் நான் என்ன செய்வது? நான் தான் பாவம் செய்துவிட்டேன் போல? அவள் மட்டும் நிம்மதியாக என்னைவிட்டு போய் மண்ணடியில் உறங்குகிறாள். என்னையும் அழைத்து இருந்தால் நானும் அவ கூட வே போய் இருப்பேன். நான் தான் பாவி ஆகிவிட்டேன் . அதனால் தான் என் வாழ்நாள் முழுவதும் மனதில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று என்னை விட்டு தனியா போய்விட்டாள் அந்த மகராசி. இப்ப நான் தனியா பைத்தியம் மாதிரி புலம்பிக் கொண்டு இருக்கேன். இதை கூறி முடிக்கும் போது பாபுவின் கண்களில் இருந்து கண்ணீர் சில துளிகள் வெளியே எட்டிப்பார்த்தது. 

            பாபுவை ஆதரவாக அணைத்துக்கொண்டு “கடவுள் இருக்கார் நீ கவலைப்படாதே! எல்லாம் நல்லதே நடக்கும் “. 

            பாபு , தன்னுடைய வலியை மறைத்துக்கொண்டு போலியாக வெளியே புன்னகை செய்து விட்டு , இங்க பாரு மித்ரன் என்னுடைய தங்கச்சியை என்று அவனுடைய போனை எடுத்து அதில் கல்யாண கோலத்தில் சிரித்த முகமாய் இருந்த பெண்ணைப் பார்த்து மித்ரனும் சற்று அதிர்ந்து தான் போனான். முதலில் பாபு ஏதோ சற்று பொய் கூறுகின்றான் என்று நினைத்தான். ஆனால் அவனின் கண்ணீர் இவனை கொஞ்சம் கரைத்து தான் பார்த்தது. இப்பொழுது பாபுவின் ஃபோனில் கல்யாண கோலத்தில் பாபுவின் தோளில் சாய்ந்த படி சிரித்துக்கொண்டு இருந்த வனிதா அப்படியே வதனி போல தான் இருந்தாள். 

            வதனியும் இவர்கள் இருவருக்கும் தெரியாமல் அந்த புகைப்படத்தை எட்டிப் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சி ஆனாள். சில நொடிகள் கழித்து மற்றவர்கள் தன்னை பார்க்கும் முன் தன்னுடைய இடத்திற்கு சென்று விட வேண்டும் என்று தன்னுடைய இருக்கைக்கு சென்று அமர்ந்துக் கொண்டாள்.

              தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவளுக்கு  தலையில் தீடீரென வலி தோன்ற அமைதியாக தன்னுடைய இரு கைகளையும் எடுத்து  தலையை பிடித்துக்கொண்டு , கைகளின் முட்டியை மேசையின் மீது முட்டுக் கொடுத்து இருந்தாள்.  ஏற்கனவே இதயத்தின் வலி இதயத்தை வெடிக்க செய்யும் அளவிற்கு இருக்கிறது. இதில் ஏனோ புதிய வலி தோன்றுகிறது. இதற்கு என்ன பெயர் வைப்பது என்று கூட எனக்கு தோன்றவில்லையே? எதற்காக இந்த மன வலி? வனிதா என்னைப் போன்று இருப்பதில் “ஆ”? இல்லை பாபு  இத்தனை நாட்களாக என்னிடம் பேசவேண்டும் என்று நினைத்து என் பின்னே வந்தவரை நான் கவனிக்காமல் இருந்ததில் தானா? நான் ஒன்றும்  வேண்டும் என்றே  அவரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் போகவில்லை. அவருடைய உணர்வுகள் எல்லாம் என்னை வந்த அடையவில்லை என்றே சொல்லலாம்.  

               அலுவலகத்தில் இருந்த அனைவரும் அவர்களின் வேலைச் செய்துக்கொண்டு இருந்தார்கள். பாபுவும் மித்ரனும் கூட அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டனர். 

           கீதா , என்ன டி’ என்ன ஆச்சு ? தலை எதாவது வலிக்கிறதா? ஏதாவது பிரச்சனையா ? அலுவலகத்தின் உள்ளே வந்ததும் முதலில் பார்த்தது தலையை தன்னுடைய கையால் பிடித்துக்கொண்டு இருந்த வதனியை தான். தன்னுடைய தோழிக்கு என்ன ஆச்சு ? என்ற தன்னுடைய கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டி , இத்தனை கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தாள். 

             எப்பொழுதும் போல்  தன்னுடைய தோழியை பார்த்து லேசான புன்னகை செய்து விட்டு , “எனக்கு எதுவும் இல்லை டி. ஐயம் ஆல் ரைட் “. 

              வதனியின் பதிலில் கடுப்பு ஆனவள் , உன்னை எல்லாம் திருத்தவே முடியாது டி என்று கூறிவிட்டு , நேராக கேண்டீன் சென்று இருவருக்கும் தேநீர் வாங்கிக்கொண்டு வந்தாள். ஒரு கப்பை அவளிடம் கொடுத்துவிட்டு , இன்றொன்றை கீதா குடிக்க ஆரம்பித்தாள். 

             எப்பொழுதும் தேநீர் வேண்டாம் என்று மறுப்பவள் இன்று அமைதியாக வாங்கி குடித்துக் கொண்டு இருந்தாள். 

           தேநீர் குடித்ததும் சற்று தலைவலி குறைந்தது போல இருந்தது வதனிக்கு. சில நிமிடங்கள் கண்களை மூடி இருந்தவள் மெதுவாக கண்களைத் திறந்து தன்னுடைய வேலையை பார்க்கத் தொடங்கினாள். 

           வதனியை விசித்திர பிறவி போல பார்த்துவிட்டு தன்னுடைய வேலையை பார்க்கத் தொடங்கினாள். 

            கீதாவின் வயிறு சத்தம் போட அப்பொழுது தான் தன்னுடைய கைக்கடிகாரத்தை பார்த்தாள். மணி இரண்டு என காட்டவும்”அச்சச்சோ! சாப்பிடுற நேரம் வந்துவிட்டது. அதனால் தான் என்னுடைய வயிறு அலாரம் போல சத்தம் போடுது” என நினைத்தவள் , வேலையே கண்ணாக இருக்கும் தன்னுடைய தோழியை அழைத்துக்கொண்டு சாப்பிட சென்றாள்.  

             இருவரும் மரத்தடியில் உட்கார்ந்து தங்களின் டிபன் பாக்ஸ்யை திறந்து கொண்டு  இருந்தார்கள். வதனியையே ஏக்கமாக பார்த்துக்கொண்டே போய்க்கொண்டு இருந்தான் பாபு. 

            வதனி , அவனைப் பார்த்து புன்னகை செய்ய , 

               பாபுவோ இது உண்மையா? பொய்யா? தன்னைத்தானே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டான். “ஆ” வலிக்கிறது இது உண்மை தான் என்று நினைத்தவன் மீண்டும் வதனியை பார்க்க ,

            வதனி , புன்னகையுடன் தன்னுடைய கை அசைத்து அருகில் வரும் படி அழைத்தாள். 

             முகம் முழுவதும் புன்னகையுடன் அவர்கள் அருகில் வந்து நின்றான்.  

    வதனி அவனை தனக்கு அருகில் உட்காரும் படி சைகை  செய்தாள். அவனும் மகிழ்ச்சியுடன் அவளின் அருகில் உட்கார்ந்துக் கொண்டு அவளின் முகத்தையே பார்க்க ,

          வதனி , தான் கொண்டு வந்த உணவை அவனிடம் கொடுத்து சாப்பிடு  எனக் கூற , மகிழ்ச்சியுடன் அவள் கொடுத்த உணவை எடுத்து சாப்பிட போனேன். 

             என்னுடைய சாப்பாட்டை உனக்கு தந்தேன் தானே? அதேப்போல் உன்னுடைய சாப்பாட்டை எனக்கு தர வேண்டும் என்று உனக்கு தோன்றவில்லையா? 

           வேகமாக தன்னுடைய சாப்பாட்டு பையை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு சாப்பாட்டிலே கண்ணாக இருந்தான். சாப்பிட்டு முடிக்கும் வரை அவ்வப்பொழுது அவளை புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தான்.  

      The post உனதானேன் உயிரானேன் – 3 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>
      https://thoorigaitamilnovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-2/feed/ 0 13450
      உனதானேன் உயிரானேன் – 2 https://thoorigaitamilnovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-2/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-2/#respond Thu, 16 Jun 2022 07:36:04 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-2/   இரவின் பிடியில் இருவரும்  அண்ணனும் தம்பியும் இருந்தார்கள். தன் மீது ஏதோ பாரத்தை உணர்ந்த தேவ் மெதுவாக கண் முழிக்க, தன்னுடைய அருமை தம்பிதான் தன் மீது காலையும் கையும் போட்டுக்கொண்டும், தூக்கத்திலும் தன்னுடைய அண்ணனை பிரியமாட்டேன் என்பது போல , தன்னுடைய அண்ணனுடைய கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு இருந்தான்.             அவனுடைய கையையும் , காலையும் தன் மீது இருந்து எடுத்து

      The post உனதானேன் உயிரானேன் – 2 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

      ]]>

      Loading

        இரவின் பிடியில் இருவரும்  அண்ணனும் தம்பியும் இருந்தார்கள். தன் மீது ஏதோ பாரத்தை உணர்ந்த தேவ் மெதுவாக கண் முழிக்க, தன்னுடைய அருமை தம்பிதான் தன் மீது காலையும் கையும் போட்டுக்கொண்டும், தூக்கத்திலும் தன்னுடைய அண்ணனை பிரியமாட்டேன் என்பது போல , தன்னுடைய அண்ணனுடைய கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு இருந்தான். 

                 அவனுடைய கையையும் , காலையும் தன் மீது இருந்து எடுத்து மெதுவாக கீழே பெட்டில் வைத்து விட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தான். தன்னுடைய கையை பிடித்து இருந்த அவனின் கையை மட்டும் விலக்காமல் அப்படியே விட்டுவிட்டான். 

              “ஆ, அண்ணா!” என்று கத்தியபடி அலறி எழுந்தான் . 

             தேவ் , வேகமாக எழுந்து லைட் போட்டுவிட்டு அவனின் முதுகை ஆதரவாக தட்டி கொடுத்து விட்டு , அவனுக்கு தண்ணீர் எடுத்து கொடுத்தான். 

              தண்ணீர் டம்ளரை வாங்கியவனின் கைகள் நடுங்க , அப்படியே தண்ணீர் டம்ளரை கீழே விட்டான். 

            வேகமாக கீழே விழுந்த டம்ளரை பிடித்தான் தேவ். அவன் வேகமாக பிடித்தும் தண்ணீர் சிறிது கீழே கொட்டி விட்டது.  

           “என்ன டா’ புஜ்ஜி ? என்ன ஆச்சு? மறுபடியும் வேறு டம்ளரில் தண்ணீர் ஊற்றி தன்னுடைய தம்பியை குடிக்க வைத்தான். அவன் குடித்து முடித்ததும் டம்ளரை டேபில் மீது வைத்துவிட்டு , அவனை தலையை தன்னுடைய தோளிலே சாய்த்துக் கொண்டு , அவனுடைய தலையை மென்மையாக வருடி கொடுத்தான். 

               தன்னுடைய தாய் தந்தை இருவரும் சொந்த ஊரில் உள்ள பிசினெஸ்களை பார்த்துக்கொள்ள வே நேரம் போதவில்லை. அவர்களுடைய கம்பெனியின் கிளை ஒன்று சென்னையில் இருந்தது.

              தங்களுடைய அனைத்து கம்பெனிகளையும் தன்னுடைய கண் அசைவில் வைத்து ரன் செய்துக்கொண்டு இருந்தான். தன்னுடைய தம்பிக்காக இந்த சென்னையில் இப்பொழுது வந்து இருக்கிறான். தன்னுடைய தம்பியை செல்லமாக ”புஜ்ஜி” என்றே அழைப்பான். 

             புஜ்ஜி ,சொந்த ஊரிலே டாக்டர் (எம்.பி.பி.எஸ்) படித்து விட்டு , எம்.டி படிக்க சென்னைக்கு வந்தான். சென்னையில் ஒரு பிரபளமான தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தான். 

              இருவரும் இதுவரை அதிகமாக பிரிந்து இருந்தது இல்லை. அதனால் இருவரும் முடிவு எடுத்து சொந்த ஊரில் இருந்த பிசினெஸ் எல்லாம் தன்னுடைய பெற்றோரை பார்த்துக்க சொல்லிவிட்டு , சென்னையிலே ஒரு வீடு வாங்கி , அந்த வீட்டிலே இருவரும் இருக்கிறார்கள். 

               தேவ்க்கு எப்பொழுதும் தன்னுடைய தம்பி ஒரு குழந்தை தான். 

      தேவ்க்கு சிலம்பம் , கராத்தே , வாள்வீச்சு போன்றவற்றில் எல்லாம் ஆர்வம் அதிகம் . அதனாலே அதை எல்லாம் விரும்பி கற்றுக் கொண்டான்.

      ஓட்டப் பந்தயம் நடந்தால் அதில் கலந்துக்கொண்டு தன்னுடைய திறமை எவ்வளவு உள்ளது என்று அவனே அறிந்துக் கொள்வான். அதற்காகவே அடிக்கடி ஓட்டப் பந்தயத்தில் கலந்துக் கொள்வான். ஆனால் யாருக்கும் இன்டர்வியு எல்லாம் கொடுக்க மாட்டான். ஓடும் போதும் , கோப்பையை வாங்கும் போதும் எடுக்கும் புகைப்படங்கள் மட்டும் தான் மறுநாள் செய்தித்தாளில் வரும். 

             புஜ்ஜியோ வளர்ந்த குழந்தை. நல்ல அறிவு , நல்ல படிப்பு இருந்த போதிலும் அவனை சுலபமாக ஏமாற்றி விடலாம். அவனுக்கு இளகிய மனது! அவனுடைய நண்பர்கள் சிலர் அவனின் இளகிய மனதை பயன்படுத்தி அவனிடம் ஏமாற்றி கொண்டே இருப்பார்கள்.   

                 சில வருடங்களுக்கு முன்பே தன்னை பற்றியும் தன்னுடைய நண்பர்களை பற்றியும் புரிந்துக் கொண்டான். தன்னை சுற்றி இருக்கும் இத்தனை நண்பர்களில் ஒருவன் கூட என்னுடைய நட்புக்காக என்னிடம் பழகவில்லையா? என்னிடம் உள்ள பணத்திற்காக தான் என்னிடம் பழகினார்களா? அப்போ’ அவர்களுக்கு நான் தேவை இல்லை! என்னுடைய நட்பு தேவை இல்லை! என்னுடைய பணம் மட்டும் தான் தேவை! இவற்றை எல்லாம் நினைத்து…. நினைத்து பல நாட்கள் வருத்தப்பட்டு இருக்கின்றான் . யாரிடமும் சண்டை போடாமல் அங்க இருந்து கிளம்பிவிட்டான். அதே கல்லூரியில் மீண்டும் படித்தால் பழைய நியாபகங்கள் எல்லாம் மீண்டும்… மீண்டும் வந்து என்னை வருத்தப்பட வைக்கும் என்று நினைத்து தான் எம்.டியை அங்கு படிக்காமல் சென்னையில் வந்து படிக்கிறான்.  

              தேவ், தன்னுடைய தம்பியை குழந்தை என்று நினைத்து , அவனை தன்னுடைய மடியில் கிடத்தி தூங்க வைத்துக்கொண்டு இருந்தான். தன்னுடைய தம்பியின்  முதுகை  தட்டிக் கொடுத்துக் கொண்டே அவனும் உறங்கி போய் இருந்தான் .உட்கார்ந்த நிலையிலேயே ‘ 

                விடிவதற்குள் இரண்டு …. மூன்று முறை அலறி அடித்து கொண்டு எழுந்தான். புஜ்ஜி எழும்போது எல்லாம் அவனுக்கு தாயாக மாறி , அவனுக்கு ஆறுதல் அளித்துக் கொண்டு இருந்தான். 

                சூரியனின் ஒளி கண்ணை பறிக்க , அது வரை இமை மூடாது இருந்தவன் , மெதுவாக புஜ்ஜியை விட்டு விலகி சென்று , அவனுக்கு தேவையான காலை உணவுகளை செய்ய ஆரம்பித்தான். 

                தன்னுடைய தம்பிக்கு பிடித்த காலை உணவுகளை செய்துவிட்டு , குளிக்க சென்றான். சிறிது நேரத்தில் குளித்து முடித்துவிட்டு வந்தவன் ,பூஜை அறைக்கு சென்று கடவுளை வணங்கி “தன்னுடைய தம்பிக்காக கடவுளிடம் வேண்டுதல் ஒன்றை வைத்துவிட்டு , பூஜை அறையை விட்டு வெளியே வந்தான்”. 

             ஹாலில் இருந்த ஷோபாவில் உட்கார்ந்துக் கொண்டு தன்னுடைய அலுவலக ஃபைல்களை பார்த்துக்கொண்டு இருந்தான். தன்னுடைய பி.ஏவிற்கு அழைப்பு விடுத்து “இன்று என்னால் அலுவலகம் வர முடியாது! எதாவது இம்ப்பார்ட்டன் என்றால்? எனக்கு போன் செய்யுங்கள்!” என்று கூறி தன்னுடைய போன் அழைப்பை கட் செய்துவிட்டு மீண்டும்  ஃபைல்களில்  தன்னுடைய கவனத்தை புதைத்தான். 

                மெதுவாக கண்களை திறந்தவன், சுற்றும் முற்றும் கண்களை மெதுவாக சுழல விட்டான். தலையில் வலி ஒன்று தோன்ற , தனது இரு கைகளாலும் தலையை பிடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தான். மெதுவாக வாஷ் ரூம் சென்று வந்தவன் மீண்டும் “தொப்” என்று கட்டிலில் அமர்ந்தான்.சிறிது நேரத்தில் தேவ் கையில் சூடான சுக்கு காபி போட்டுக்கொண்டு வந்து கொடுத்தான். கூடவே தலைவலி மாத்திரையும் கொடுத்து புஜ்ஜியை சாப்பிட சொன்னான். 

             தன்னுடைய அண்ணன் கொடுத்ததை மறுக்காமல் வாங்கியவன் தன்னுடைய அண்ணனை பெருமையுடன் பார்த்துக்கொண்டே “அவன் கொடுத்த மாத்திரையை போட்டுக் கொண்டு , காபியையும் குடித்தான்”. 

               அவனுடைய பார்வையை உணர்ந்தவன் “என்னடா? என்னையே பார்த்துக்கொண்டு இருக்க? வேற ஏதாவது வேண்டுமா டா?”

            எப்படி அண்ணே! எனக்கு தேவையானதை இப்படி பார்த்து…. பார்த்து செய்யுற? இப்ப கூட நான் உன்கிட்ட எனக்கு தலை வலிக்கிறது என்று சொல்லாமலே “நீயே எனக்கு மாத்திரை கொண்டு வந்து கொடுத்த?”

              தேவ் , சிரித்துக்கொண்டே “நீ எழும் போதே நான் பார்த்துவிட்டேன் டா” 

                 அப்போ’ எப்ப பாரு என்னுடைய நினைப்பாகவே இருக்கியா அண்ணா?

            தன்னுடைய பார்த்து “நீ என்னுடைய குழந்தை டா! உனக்கு தான் டா எப்பவும் என்னிடம் முதல் இடம் “

               உனக்கு கல்யாணம் ஆனாலும் நான் தான் உனக்கு பர்ஸ்ட் “ஆ”  அண்ணா!

              எனக்கு எப்பவும் நீ தான் டா பர்ஸ்ட்! போதுமா? 

             தன்னுடைய தமையனின்  வயிற்றிலே முகத்தை புதைத்துக் கொண்டு “லவ் யு அண்ணா” 

            அவனின் தலைமுடியை ஆதரவாக வருடிவிட்டு “நீ நல்லா ரெஸ்ட் எடு , எதாவது வேண்டும் என்றால் என்னை கூப்பிடு “நான் ஹாலில் தான் இருக்கேன். 

              சரி என்று தலையை வலதுபுறமாக அசைத்தான். 

              மறுபடியும் ஹாலில் வந்து தன்னுடைய ஆபிஸ் பைல்களை பார்க்க ஆரம்பித்தான்.   

      🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

            “ஹலோ” மிஸ் வதனி…. ஹலோ!!…. ஹலோ!!! மிஸ் வதனி… வதனி  “என்ன இந்த பெண் கூப்பிட…. கூப்பிட திரும்பிக் கூட பார்க்காமல் போய்க் கொண்டே இருக்காள்? “.

                இவளை எப்படி தான் அவளிடம் பேசுவது ? தனக்குள் புலம்பிக் கொண்டே அவளின் பின்னே சென்றான் பாபு. 

             பாபு , அவள் வேலை செய்யும் அதே அலுவலகத்தில் வேறொரு டீம்ல் வேலைச் செய்கின்றான். 

            இன்றும் அவள் தன்னை திரும்பிக்கூட பார்க்காமல் போனதை நினைத்து மிகவும் வருத்தத்துடன் சென்று தனது நாற்காலியில் உட்கார்ந்தான் . 

              பாபுவின் பின்னே சில அடி தூரம் இடைவெளி விட்டு நடந்து வந்தான் மித்ரன். சோகமான முகத்துடன் உட்கார்ந்துக் கொண்டு இருக்கும் பாபுவின் அருகில் சென்று , “ஹாய்” ஐயம் மித்ரன் .புதியதாக இந்த அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து இருக்கின்றேன். 

             மரியாதை நிமிர்த்தமாக பாபு எழுந்து நின்று “ஹாய் சார்! ஐயம் பாபு”

           உட்காருங்க பாபு’ எழுந்து எல்லாம் நிற்க வேண்டாம். மரியாதை மனதில் இருந்தால் போதும்.

             சார், நீங்க குருப் லீடர் . நான் குருப் மெம்பர். நான் எப்படி உங்களிடம் மரியாதை இல்லாமல் நடந்துக் கொள்வது?

              மித்ரன், அங்கு இருந்த மற்றொரு நாற்காலியை எடுத்து பாபுவின் அருகில் போட்டுக்கொண்டு , பாபுவை அவனுடைய இருக்கையில் உட்காரவைத்து விட்டு , தானும் இருக்கையில் உட்கார்ந்து பாபுவை பார்த்து சினேகமாக புன்னகை செய்தான். 

              பாபுவும் பதிலுக்கு சினேகமாக புன்னகை செய்தான். 

            என்ன ஆச்சு பாபு? ஏன் உங்க முகம் சோகமாக இருக்கிறது? ஏதாவது பிரச்சனையா ?

             அது வந்து …. சார் என்று பாபு இழுக்க ,

             என்ன பிரச்சனை என்று ஏதாவது சொன்னால் தானே தெரியும்! அப்பொழுது தானே உதவி செய்ய முடியும்.

              சற்று தயங்கி பின், நான் வதனியிடம் பேசவேண்டும் என்று முயற்ச்சி செய்துக்கொண்டு இருக்கின்றேன் . ஆனால் என்னுடைய முயற்ச்சி எல்லாம் தோல்வியிலே போய் முடிகிறது. 

            நீங்க எதற்காக மிஸ் வதனிடம் போய் பேசவேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? 

               இந்த அலுவலகத்தில் இருக்கும் எல்லோரும் அனைவருடனும் சகஜமாக பேசி பழகுவார்கள். ஆனா இதில் வதனி மட்டும் விதிவிலக்கு. அவளுடைய டீம் மெம்பர்ஸ் கிட்ட மட்டும் தான் பேசுவாள் . அதுவும் ஒன்று இரண்டு வார்த்தை மட்டும். எம்.டி கிட்டவும் அதே மாதிரிதான் ஒரு வார்த்தை இல்லை என்றால் இரண்டு வார்த்தை. இந்த அலுவலகத்திற்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது. எப்பவும் எதையோ இழந்த மாதிரி , சரியாக சொல்லவேண்டும் என்றால் நடை பிணம் போல் வாழ்ந்துகொண்டு இருக்கிறாள்.

              மித்ரன், நீங்க மிஸ் வதனியை காதலிக்கிறீர்களா ? 

            என்னது ? நானா? அதிர்ச்சியோடு மித்ரனை பார்த்து பாபு கேட்க. 

             மித்ரனும் அவனையே தான் கேள்வி பார்வையுடன் பார்த்துக்கொண்டு இருந்தான். 

        The post உனதானேன் உயிரானேன் – 2 appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

        ]]>
        https://thoorigaitamilnovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-2/feed/ 0 13447
        காதல் கணவன் https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/ https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/#comments Sun, 01 May 2022 15:47:21 +0000 https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/ அழகிய கிராமத்தில் அழகிய குடும்பத்தில் இருந்தால் மாதவி.. அவளின் அழகு பெண்களே ஆசைப்படும் அளவிற்கு இருப்பாள் அவள் வசிக்கும் இடத்தில் ஆண்கள் எல்லோரும் தனக்கு ஒரு மனைவி அமைந்தால் அது மாதவி மாதிரி இருக்கவேண்டும் என்று கற்பனை செய்துகொள்வார்கள். அவள் ஆண்களிடம் பேச மாட்டாள் அவள் பெண்களிடம் மட்டும் பேசிக்கொள்வல். மாதவி வசதியானவள் ஆனால் அவளுக்கு வறுமை தெரியாமல் வளர்ந்துவிட்டால் அவளுக்கு தம்பி ஏன்றால் அவ்வளவு இஷ்டம் இவன் ஒருவன்

        The post காதல் கணவன் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

        ]]>

        Loading

        அழகிய கிராமத்தில் அழகிய குடும்பத்தில் இருந்தால் மாதவி.. அவளின் அழகு பெண்களே ஆசைப்படும் அளவிற்கு இருப்பாள் அவள் வசிக்கும் இடத்தில் ஆண்கள் எல்லோரும் தனக்கு ஒரு மனைவி அமைந்தால் அது மாதவி மாதிரி இருக்கவேண்டும் என்று கற்பனை செய்துகொள்வார்கள்.

        அவள் ஆண்களிடம் பேச மாட்டாள் அவள் பெண்களிடம் மட்டும் பேசிக்கொள்வல். மாதவி வசதியானவள் ஆனால் அவளுக்கு வறுமை தெரியாமல் வளர்ந்துவிட்டால் அவளுக்கு தம்பி ஏன்றால் அவ்வளவு இஷ்டம் இவன் ஒருவன் மட்டுமால்லாமல் ஒரு தங்கையும் இருந்த அவளை சீட்டு என்றும் தம்பியை ரவி என்றும் அழைப்பல்.

        ஒரு நாள் மாதவி தான் பள்ளி பருவத்தை முடித்து விட்டு கல்லூரி செல்ல வேண்டும் என்று தான் அப்பாவிடம் கூறினால். அப்பா “மாதவி நான் உன்னை கல்லூரியில் சேர்க்கிறேன் ஆனால் நாம் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கல்லூரியில் படிக்க வேண்டும் ஏன்றார் அப்பா “. மாதவி அப்பாவிடம் சரி என்றால்.

        கல்லூரியில் படிக்கபோறோம் என்ற ஆசையில் தான் அம்மாவிடம் கூறினால்…

          The post காதல் கணவன் appeared first on தூரிகை தமிழ் நாவல்கள்.

          ]]>
          https://thoorigaitamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/feed/ 1 12892