அத்தியாயம் 63
நந்தேஷ் நாச்சியப்பனின் முறைப்பில் விழித்து, “டேய் இவள் விசாரிக்கணும்னு தான கூட்டிட்டு வந்தா. என்னடா அக்கியூஸ்ட் மாதிரி கேள்வி கேட்டுட்டு இருக்கா?” என மைத்ரேயனிடம் முணுமுணுத்தான்.
ஷைலேந்தரியோ, “நான் தான் பெரியம்மா கையால சாவேன்னு தப்பா நினைச்சுட்டேன்டா. ஆனா சாகப் போறது மாமா கையால” எனும் போதே குறிஞ்சி கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.
“அமைதியா இருந்தா என்ன அர்த்தம் மிஸ்டர் நாச்சியப்பன்…” அவர் முன்னே கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவளை பார்வையால் எரித்து “நான் மினிஸ்டர். எவ்ளோ தைரியம் இருந்தா என் முன்னால திமிரா உக்காருவ” என்றார் அடிக்குரலில்.
“ஹலோ நீங்க ஊருக்கு தான் மினிஸ்டர். என்னை பொறுத்தவரை நீங்க ஒரு சஸ்பெக்ட் அவ்ளோ தான். பதில்?” என அழுத்தத்துடன் அவள் வினவ, கோபத்தை அடக்கிக்கொண்டு தொடர்ந்தார்.
“அபர்ணா என் ஒரே பொண்ணு. அவள் ஆசைப்பட்டான்னு தான் கனடாவுக்கு அனுப்புனேன். கனடால இருந்து வந்ததும் கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சேன். அவள் ஒரு மிடில் க்ளாஸ் பையனைக் காதலிக்கிறது தெரிஞ்சு மறுத்தேன். அவளும் ஒத்துக்கிட்டா” என்றதும் இடைமறித்தவள்,
“இல்லையே முதல்ல அவள் ஓகே சொல்லலன்னு கேள்விப்பட்டேன். நீங்க மிரட்டி ஒத்துக்க வச்சீங்களா?” என்றாள் கூர்மையாக.
“இல்ல நான் மிரட்டல. அவளுக்குப் புரிய வைச்சேன், அவளால மிடில் க்ளாஸ் லைஃப் வாழ முடியாதுன்னு. அவன் பேர் என்ன…” என நெற்றி தட்டிச் சிந்தித்தவர்,
“ஹான் நரேஷ்… அவன் வீட்ட ஒரு நாள் பார்த்துட்டு வா. உன்னால அங்க லைஃப் லாங் வாழ முடியும்னா நான் ஒத்துக்குறேன்னு சொன்னேன். அவளும் காலைலயே நரேஷ் வீட்டுக்குப் போயிட்டு மதியமே திரும்பி வந்துட்டா. அங்க அவளால அரை நாள் கூட இருக்க முடியல. சோஷியல் மீடியால பழகி காதலிச்சு இருக்கா. அப்பறம் நிதர்சனம் புரிஞ்சதும் எனக்குப் பிடிச்ச பையனையே கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிட்டா. அப்படியே இல்லைன்னாலும் என் பொண்ணை நான் ஏன் கொலை பண்ண போறேன். என் வாரிசு அவள் ஒருத்தி தான…” எனச் சுருக்கென உரைக்க, அவள் சலனமின்றி பார்த்தாள்.
“அபர்ணாவுக்கு வரன் பார்த்தப்ப தரணியை ஃபிக்ஸ் பண்ணிருக்கீங்க ரைட். அதுக்கு முன்னாடி யாரையாவது ரிஜெக்ட் பண்ணுனீங்களா?”
அவர் நெற்றி மத்தியில் சுருக்கம் விழுந்தது. “பெரிய இடத்துல இருந்துலாம் சம்பந்தம் வந்துச்சு. ஆனா, தரணியை பிடிச்சுப் போனதுனால என் அளவுக்கு இல்லைன்னாலும் அவங்களும் நல்ல ஸ்டேட்டஸ்ல இருந்ததுனால ஓகே சொல்லியாச்சு. அரசியல் ரீதியா, தொழில் ரீதியாவே நிறைய பேர் என் பொண்ணைக் கேட்டாங்க. குறிப்பிட்டு சொல்ல முடியல” என்றார்.
“சரி விபத்து நடந்த அன்னைக்கு நீங்க எங்க இருந்தீங்க?”
“அன்னைக்கு அவள் கனடா ப்ரெண்ட்ஸ எல்லாம் கூப்பிட்டு இருந்தா. சின்னப் பசங்கள்லாம் பார்ட்டில என்ஜாய் பண்றப்ப நான் எதுக்கு இடைஞ்சலா இருக்கன்னு விஸ்வாவைப் பார்த்துக்க சொல்லிட்டு நான் வீட்டில இருந்தேன். தரணியும் அப்ப வேலை விஷயமா பெங்களூர் போயிருந்தாரு. அன்னைக்கு நைட்டு தான் வர்றதா இருந்துச்சு. அந்தப் பையன் வர்றதுக்குள்ளவே ஆக்சிடென்ட் ஆகிடுச்சு” எனும் போதே அவர் கண்கள் கலங்கியது.
“ஓகே… நடந்தது ஆக்சிடெண்ட். ஆனா கொலை முயற்சின்னு அந்த டைம்ல புகார் குடுத்து இருந்தீங்களே எதுனால?”
“என் பொண்ணுக்கு ட்ரிங்க்ஸ் பழக்கம் இருந்துச்சு தான். ஆனா, கண்ணு முன்னு தெரியாம குடிக்கிற அளவு இல்ல. அதே நேரம் குடிச்சுட்டு அவள் எப்பவும் ட்ரைவ் பண்ணுனது இல்ல. அன்னைக்கு எல்லாமே புதுசா இருந்ததுனால விபத்துன்னு என்னால ஏத்துக்க முடியல. அதனால தான் கொலை முயற்சின்னு கேஸ் ஃபைல் பண்ணுனேன். ஆனா கடைசியா ஆக்சிடெண்ட்னு கேஸ் க்ளோஸ் ஆகிடுச்சு” என்றவரின் முகத்தில் சோகம் வழிந்தோடியது.
மேலும் சில கேள்விகளைத் தொடுத்தவள், இருக்கையில் இருந்து எழுந்து விட்டு, “ஓகே ஃபைன். அப்போ அப்போ விசாரணைக்கு வர்ற மாதிரி இருக்கும் மினிஸ்டர் சார். சோ உங்க வீட்டுக் கதவை எனக்காக திறந்தே வச்சுருங்க” என நக்கலாய் உரைத்தபடி “லெட்ஸ் கோ கைஸ்” என்று மற்றவர்களிடம் சொல்லி விட்டு வெளியில் நடக்க, மற்றவர்களும் நாச்சியப்பனின் முறைப்பில் அங்கிருந்து வேகமாக வெளியேறிவிட்டனர்.
அடுத்த நொடி நந்தேஷிற்கு சிவகாமியிடம் இருந்து அழைப்பு வந்தது.
“போச்சு” என அலைபேசியை நொந்து பார்த்தவன், அழைப்பை ஏற்று காதில் வைத்ததும் தான் தாமதம், “உங்களுக்கெல்லாம் புத்திக் கெட்டு போச்சா. சிபிஐ ஆபிஸர்ஸ் கூட ஜோடி போட்டு சுத்திட்டு இருக்கீங்க. அங்க உன் தங்கச்சி என்னன்னா அந்த அனாதைப் பையன் பின்னாடியே சுத்திட்டு இருக்கா. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாரும். முதல்ல கிளம்பி வீட்டுக்கு வாங்க நாலு பேரும்” எனக் கோபத்துடன் அதட்டினார்.
நந்தேஷ் ஒரு கணம் அமைதி காத்து விட்டு, “உங்க பேச்ச கேட்டு தானம்மா இவ்ளோ நாளும் நடந்தோம். இனிமேலும் நீங்க கை பிடிச்சு கூட்டிட்டுப் போக தேவையில்லை…” என்றான் நிதானமாக.
“ஓ! அதுக்காக என்னை கையைப் பிடிச்சு ஜெயிலுக்கு அனுப்ப போறீங்களா? எப்படா என் மேல கேஸ் போடலாம்னு இருக்கு டிபார்ட்மென்ட்”
“நீங்க சித்தியை மர்டர் பண்ண பார்த்ததுக்கு அதான் தண்டனைன்னா நானே கையைப் பிடிச்சு கொண்டு போய் விட்டுடுவேன்…” தீர்மானமாகக் கூறியவன், அழைப்பைத் துண்டித்து விட, சிவகாமி திகைத்து விட்டார்.
சினம் பெருவெள்ளமாய் சீறியது. உடனடியாக மைத்ரேயனின் தந்தை லிங்கத்திற்கு அழைத்தவர், “எங்க இருக்கீங்க?” எனக் கேட்க,
“ஆபிஸ்லமா” என்றார்.
“என்ன அண்ணா நீங்க… உங்க மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு உங்க பிசினஸை பார்த்துக்க வைக்காம இப்படி ஊர் மேய விட்டுட்டு இருக்கீங்க. அவன் என்னென்னா எங்க வீட்டுப் பொண்ணையும் கூப்ட்டுட்டு தெரு தெருவா சுத்திட்டு இருக்கான். இதெல்லாம் சரி இல்ல. மேட்ரிமோனி பிசினஸ் எல்லாம் செட் ஆகாதுன்னு பல தடவை சொல்லிருக்கேன். விஸ்வாவோட பேச்சைக் கேட்டுட்டு இப்ப எல்லாரும் சிக்கல்ல மாட்டி இருக்காங்க. நடந்த கொலைகளைப் பத்தி தெரியும்ல. பார்த்துக்கோங்க, அப்பறம் எதுலயாவது மாட்டி உங்க பையனை ஃபிரேம் பண்ணிட போறாங்க” என்று குத்தி விட்டு போனை வைத்தவர், வீட்டிற்கு வந்தார்.
அங்கு காயத்ரி வரவேற்பறையில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவர் அருகில் சென்றவர், “உன் பொண்ண கல்யாணம் பண்ணி குடுத்தியே, அவள் ஒழுங்கா குடும்பம் நடத்துறாளான்னு பார்த்தியா? தேவையில்லாம கொலை கேஸ் பின்னாடி போயிட்டு இருக்கா. அப்பறம் ஐயோ அம்மான்னு என்கிட்ட வராதீங்க” எனக் கடிந்து விட்டு செல்ல, காயத்ரிக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே அவர் ஷைலேந்தரிக்கு போன் செய்ய அவள் அழைப்பை ஏற்கவே இல்லை. அதனால் அகிலாவிற்கு அழைத்து மகளைப் பற்றி கேட்க,
“எங்க காயத்ரி அவள் வீட்ல இருக்கா. நேத்து கூட அங்கேயே தங்கிட்டாங்க போல. இன்னைக்காவது வீட்டுக்கு வருவாளோ மாட்டாளோ. சொல்பேச்சும் கேட்குறது இல்ல. இங்க புது பொண்ணை பார்க்க வர்ற சொந்த பந்தத்துக்கு எல்லாம் வெறும் வீட்டை காட்டி தான் அனுப்பிட்டு இருக்கேன். அவள் சும்மாவே வாய்க்கு அடங்காதவ. இதுல என் பையன் வேற ஒத்து ஊதுறான். எங்க விளங்கும்” என்று மனதிலிருந்த ஆதங்கத்தை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டார்.
காயத்ரிக்கு வந்ததே கோபம். ‘நம்ம வாழ்க்கை தான் இந்த சிவகாமிக்கு அடிபணிஞ்சே போய்டுச்சு. நம்ம பொண்ணு வாழ்க்கையும் இப்படியா இருக்கணும்’ என எரிச்சலுற்றாலும், ‘எப்படியும் அவள் தனக்கே அடங்க மாட்டாள் மாமியாருக்கா அடங்க போகிறாள்’ என அசட்டையாக எண்ணியவர்,
“உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு. நீங்களாவது அவளாவது. இன்னைக்கும் இங்க வந்தா நான் அனுப்பி விட்டுடுறேன். அது மட்டும் தான் என்னால பண்ண முடியும்” என்று போனை வைத்து விட்டார்.
குடும்பமே இளையவர்களின் செயல்களில் கோபத்தில் கொந்தளிக்க, இங்கு மைத்ரேயன் தாய் தந்தையின் அழைப்பை ஏற்காது, “எல்லாம் ஒன்னு கூடிட்டாங்க போல நந்து” என்றான் நந்தேஷிடம்.
“இருக்குற பிரச்சனைல இவங்க வேற…” எனப் புலம்பிட குறிஞ்சி சற்றே தள்ளி நின்று யுக்தாவிற்கு அழைத்தாள்.
—-
யுக்தா சாகித்யன் வீசிய குற்றப்பார்வையில் விழிகளைத் திருப்பி விஸ்வயுகா, “நான் குடுத்த பாய்சன் இறந்து போய் 24 ஹவர்ஸ்ல டிசால்வ் ஆகிடும். டாக்சிகாலஜி ரிப்போர்ட்ல கூட தெரியாது. சுதர்மன் அங்கிள் அஸ்வினி சித்திக்கு தெரிஞ்சவங்க தான். சித்திக்காக எனக்கு இந்த விஷயத்துல ஹெல்ப் பண்ணாங்க. காசுக்காக இல்ல. பட், இறந்து போன உடனே டிசால்வ் ஆகுற ஸ்லோ பாய்சனும் இருக்கு. டாக்சிகாலஜில கூட சுத்தமா கண்டுபிடிக்க முடியாது. அண்ட், ஒவ்வொரு டைப் ஆஃப் ஸ்லோ பாய்சனுக்கும் ஒவ்வொரு வித ட்ரீட்மெண்ட் இருக்கு. ஆனா எக்ஸ்சாக்ட்டா என்ன பாய்சன்னு கண்டுபிடிச்சா தான் அதை சரி பண்ண ட்ரையாச்சு பண்ண முடியும்.
நந்துவை பிஜி பண்ண பிரான்ஸ் அனுப்புனது, இது ரிலேட்டடா தான்…” என சொல்லும்போதே அவளை நிறுத்தியவன், “நீ இதெல்லாம் எங்க படிச்ச?” எனக் கேட்டான் கூர்மையாக.
“நெட்ல சர்ச் பண்ணுனேன். அப்பறம், லைப்ரரில “மெலடி தட் கில்ஸ் ஸ்லோலி” அப்படினு ஒரு புக் இருக்கு. தி கிரேட் சைன்டிஸ்ட் பாஜி எழுதுனது. அதுல கொடூரமான ஸ்லோ பாய்சன் பத்தியும் அதை குணப்படுத்துன வழிமுறை பத்தியும் எழுதிருக்காரு. சில பாய்சன் வெறும் தியரி தான் அதை இன்னும் கண்டுபிடிக்க கூட இல்ல. ஆனா அப்படி கண்டுபிடிச்சா யார் நினைச்சாலும் காப்பாத்த முடியாதுன்னு குறிப்பு எழுதி இருப்பாரு” எனும் போதே யுக்தா “காரை எடு. லைப்ரரிக்கு போ!” என்று உத்தரவிட, “எதுக்கு?” என்றாள் புரியாமல்.
“உன்னை மாறி வேற யாராச்சு இந்த புக்க எடுத்து படிச்சு இருக்காங்களானு தெரியணும்” என்று சாலையை நோக்கி கையைக் காட்ட, குறிஞ்சியும் சரியாக அழைத்தாள்.
“என்ன ஆச்சு?” யுக்தா கேட்க,
“நாச்சியப்பன்கிட்ட விசாரிச்சேன். பொண்ணு நினைப்புல ஒப்பாரி தான் வைக்கிறாரு. அடுத்து எங்க ஸ்டார்ட் பண்றதுன்னே புரியல. அப்பறம் இன்னொரு விஷயம்” எனத் தனியாக வந்து கூற, “ஓஹோ!” எனக் கேட்டுக்கொண்டவன், “சரி நீங்க எல்லாரும் லைப்ரரிக்கு வந்துடுங்க” என்றவனின் புருவ முடிச்சுகளும் ஏளனமாய் சுருண்டது.
காரை கிளப்பியபடி “என்ன ஆச்சு?” எனக் கேட்ட விஸ்வயுகாவிடம் “அஃபிஷியல்” என ஒற்றை வார்த்தையில் கூறியதில், ஓரக்கண்ணில் முறைத்து வைத்தாள்.
“உனக்கு குறிஞ்சியை எப்படி தெரியும்?” இலேசான பொறாமை வெளிப்பட்டதோ என்ற சந்தேகம் எழுந்தாலும் உள்ளுக்குள் புன்னகைத்தபடி, “காலேஜ்மேட்” என்றான்.
“அன்னைக்கு ஸ்கூல்மேட்னு சொன்ன?” கத்தியாக பார்வையில் குத்தினாள்.
இம்முறை இன்னும் நீளமாக புன்னகைத்தவன், “அவள் அண்டர்கவர்ல இருந்தா. சோ, காலேஜ் நேம் சொன்னா நீ ஃபைண்ட் அவுட் பண்ண சான்ஸ் இருக்குனு மறைச்சுட்டேன்” என்றதும் அதற்கும் முறைத்தாள்.
“நான் இன்வெஸ்டிகேட் பண்ற மோட்ல இருக்கேன் ஏஞ்சல். என் மைண்டை டைவர்ட் பண்ணாத. அப்பறம் ஒன் டே ஸ்டாண்டா மாற வாய்ப்பிருக்கு” எனக் குறுகுறுப்புடன் கூற, “சைக்கோ” எனத் தனக்குள் திட்டிக்கொண்டே அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முன்பு காரை நிறுத்தினாள்.
அத்தியாயம் 64
சரியாக மற்றவர்களும் வந்து விட, மூன்று ஜோடிகளும் நூலகத்தினுள் நுழைந்தனர்.
“யுகா நீ போய் அந்த புக்கை தேடு” எனப் பணித்தவன், நூலக உதவியாளர் கோகுலிடம் தனது ஐடியைக் காட்டி நூலகத்திற்கு கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து வந்து செல்பவர்களின் விவரங்களைக் கேட்டான்.
குறிஞ்சியும் யுக்தாவும் தேடுதல் வேலையைத் தொடர, விஸ்வயுகா அவசரமாக அவனிடம் வந்தாள் “யுகி அந்த புக் இங்க இல்ல” என்றபடி.
யுக்தா தீவிரத்துடன் அந்தப் புத்தகத்தின் பெயரைக் கூறி, “யார் இதை எடுத்துட்டுப் போயிருக்காங்கன்னு பாருங்க” என்க, நிர்வாகியும் தேடி விட்டு, “சார் நீங்க சொல்ற புக் இந்த லைப்ரரில இல்லைங்களே” என்றதில் விஸ்வயுகா அதிர்ந்தாள்.
“வாட்? நான் இங்க தான அந்த புக்கை படிச்சேன்” என்றிட,
“இல்ல மேம். அப்படின்னா எங்களுக்கு இங்க ரெகார்ட் இருந்துருக்குமே. அப்படி ஒரு புக் இந்த லைப்ரரில இல்லை மேம்” எனத் தீர்மானமாகக் கூறியதில் குழம்பினாள்.
“யுகா ஆர் யூ சியூர் இதே லைப்ரரி தானா?” யுக்தா கேட்க,
“ஆமா யுகி இங்க தான் நான் படிச்சேன். நெட்ல சர்ச் பண்ணுனது போக, மூணு வருஷத்துக்கு முன்னாடி இதே லைப்ரரில வந்து தான் படிச்சேன். அப்போ இருந்துச்சே. அந்த புக்கை எடுத்துட்டுப் போகணும்னு அப்ப இருந்த லைப்ரரியன்கிட்ட கேட்டேன். அவர் வீட்டுக்குத் தர முடியாது, இங்கேயே தான் படிக்கணும்னு சொல்லிட்டார். அதனால நான் ஒரு மாசம் தொடர்ந்து வந்து அந்த புக்கை படிச்சுட்டு தான் போனேன்” என்றாள் உறுதியாக.
இப்போது யுக்தா கோகுலை அழுத்தமாகப் பார்க்க, “சார் நான் இங்க வேலைக்குச் சேர்ந்து ரெண்டு வருஷம் தான் ஆகுது. ஆனாலும் அதுக்கு முன்னால இங்க என்ன என்ன புக்ஸ் இருந்துச்சு அதை யார் எடுத்தாங்கன்ற டீடெய்ல் எல்லாமே கம்பியூட்டர்ல ஃபீட் பண்ணி தான் வச்சுருக்காங்க. ரெஜிஸ்டர் நோட்லையும் இருக்கு பாருங்க. நீங்க சொல்ற புக் எந்த லிஸ்ட்லையும் இல்ல சார்” என்றார்.
“இதுக்கு முன்னாடி இங்க வேலை பார்த்தவங்க பேர், அட்ரஸ்…” எனக் கேட்டு கையைக் கட்டிக்கொண்டு நிற்க, “நான் விசாரிச்சு சொல்றேன் சார்…” என்று அவசரமாக விசாரித்து தகவலைக் கொடுத்தார்.
“பேர் இளங்கோ. இங்க வேலைக்கு சேருறப்ப வயசு முப்பதுக்குள்ள தான் சார். அட்ரஸ் இது தான்” என்று ஒரு துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுக்க, அதனை வாங்கிப் பத்திரப்படுத்திக்கொண்டவன், “சிசிடிவி இருக்கா?” எனக் கேட்டான் பார்வையை நூலகத்தினுள் சுழல விட்டபடி.
“இருக்கு சார்” உடனே நூலக உதவியாளர் பதில் அளித்ததும்,
“மூணு வருஷத்துக்கு முன்னாடி உள்ள ஃபுட் ஏஜ் வேணும். யுகா நீ எந்த டைம்ல வந்த?” எனக் கேட்க, அவள் விவரம் கூறியதும் கோகுல் தயங்கினான்.
“சார்… அந்த டைம்ல தான் லைப்ரரியோட ரெனோவேட் ஒர்க் பண்ணிட்டு இருந்தாங்க. ரெண்டு மூணு மாசத்துக்கு வாசல்ல இருந்த சிசிடிவி மட்டும் தான் ஒர்க் ஆகும். உள்ள இருந்த கேமரா எல்லாம் ஆஃப்ல இருந்துச்சு”
“ரெனோவேட் ஒர்க்குக்கும் சிசிடிவியை ஆஃப் பண்றதுக்கும் என்ன சம்பந்தம்?” குறிஞ்சி புரியாமல் கேட்க,
“தெரியல மேம். ரெண்டு மாசத்தோட ஃபுட் ஏஜ் இல்லைனு நான் ஹெட் லைப்ரரியன்கிட்ட கேட்டப்ப அவர் சொன்ன பதில் தான் இது” என்றான்.
“வாசல்ல இருந்த சிசிடிவி பார்க்கலாமே” ஷைலேந்தரி சொன்னதும், யுக்தா “அதாவது முழுசா இருக்கா?” எனக் கோகுலிடம் கேட்டதில் “இருக்கு சார்” என்று அந்த ஃபுட்ஏஜை தேடினான்.
பின் திருதிருவென விழித்தபடி அவன் யுக்தாவைப் பார்க்க, “என்ன அதையும் காணோமா?” என நக்கலாகக் கேட்டதில் “ஆமா சார்” என்றான் பாவமாக.
“என்னங்க இது… ஆசியாவிலேயே செகண்ட் பிக்கஸ்ட் லைப்ரரி இது. ஃபுட் ஏஜை காணோம். சிசிடிவி ஆன் பண்ணலைன்னு காரணம் சொல்லிட்டு இருக்கீங்க” என்று மைத்ரேயன் சண்டைக்கே வந்தான்.
அவனை நிறுத்திய யுக்தா, “இளங்கோவை விசாரிச்சுட்டு வந்து பார்த்துக்கலாம்” என்றபடி வெளியில் செல்ல, மற்றவர்களும் அவனைப் பின் தொடர்ந்தனர்.
நந்தேஷ் விஸ்வயுகாவிடம், “நீ லைப்ரரிக்கு வரும் போது உன்னை யாரும் ஃபாலோ பண்ணுன மாதிரி இருந்துச்சா விஸ்வூ?” எனக் கேட்க,
“இல்லன்னு தான் நினைக்கிறேன். நான் மொத்தமா அந்த புக்ல முங்கிப் போனதுனால சுத்தி நடக்குறதைக் கவனிக்கல நந்து” என்றாள் யோசனையுடன்.
குறிஞ்சி, “அட்லீஸ்ட் அதை ஃபோட்டோவாவது எடுத்திருக்கலாம்” எனக் குறைப்பட்டதில்,
“அது ட்ரை பண்ணுனேன். ஆனா அலோ பண்ணல… ஒருவேளை என்னை ஃபாலோ பண்ணி நான் யூஸ் சூஸ் பண்ணுன டெக்னீக் யூஸ் பண்ணுறானோ?” என்றவளுக்கு முகம் வெளிறி விட்டது.
யுக்தா அவளை தோள் மீது கை போட்டு, “அப்படி இருக்க சான்ஸ் இல்ல யுகா. நான் தான் சொல்றேனே இதெல்லாம் அபர்ணாவோட டெத்ல இருந்தே ஸ்டார்ட் ஆகிடுச்சுன்னு. அந்த கனெக்ட் பாய்ண்ட் தான் சிக்க மாட்டேங்குது” என்றதும்
‘ஐயோ இவன் எங்க சுத்துனாலும் அபர்ணாகிட்டயே வந்து நிக்கிறானே’ என மைத்ரேயனும் நந்தேஷும் நொந்தே போகினர்.
இலாவகமாக அவன் கையை தோள் மீதிருந்து எடுத்து விட்ட விஸ்வயுகா, “அப்போ அந்த புக் என் கண்ணுல மட்டும் எப்படி பட்டுச்சு? வேணும்னே என் கண்ணுல படுற மாதிரி வச்சுருக்கலாம்ல?” எனக் கேட்டதும், “இருக்கலாம்” என்றாள் குறிஞ்சி.
“ப்ச்!” என முகத்தில் வந்து விழுந்த கூந்தலை ஒதுக்கி கேசத்தை ஒன்றாய் குவித்து தளர்ந்த கொண்டை போல போட்டுக்கொண்டவள், “மண்டை காயுது” எனச் சோர்ந்தாள். யுக்தாவோ, ஒற்றை விரலால் அவள் கூந்தலை தளர்த்தி நீவி விட்டபடி,
“இளங்கோவை விசாரிச்சுட்டு நீ ஒரு சைன்டிஸ்ட் நேம் சொன்னியே. அவரையும் விசாரிக்க ஏற்பாடு பண்றேன். மே பி நமக்கு ஒரு க்ளாரிட்டி கிடைக்கலாம்” என்றதும் அதை கையை அமைதியா வச்சுட்டு சொல்ல மாட்டியா என்ற ரீதியில் முறைத்தாள் அவள்.
மைத்ரேயன் யோசனையுடன், “யுக்தா நாங்க நெட்ல சர்ச் பண்ணுன மாதிரி, அவனும் பண்ணிருக்கலாம்ல. இந்த பாய்சனிங் ரிலேட்டடா யார் யார் சர்ச் பண்ணிருக்காங்கன்னு ட்ரேஸ் அவுட் பண்ணி பார்க்கலாமா?” எனக் கேட்டான்.
“குட் ஐடியா. பட் பிரைவேட் ப்ரவுஸர்ல சர்ச் பண்ணிருந்தா ட்ரேஸ் அவுட் பண்ண சான்ஸ் இருக்கா மைத்ரேயன்?” யுக்தா கேட்டதும், ஷைலேந்தரி “அதெல்லாம் ட்ரை பண்ணலாம் அத்தான்!” என அவளது அக்மார்க் வழிசலை ஆரம்பிக்க மைத்ரேயன் முறைத்தான்.
“ஹே அக்கா ஹஸ்பண்ட அத்தான்னு தான கூப்பிடனும். இது நம்ம கலாச்சரம் மைதா!” என்று கண்ணை மூடித் திறந்து தீவிரமாகப் பேச,
“கலாச்சரத்தை ரொம்ப அக்கறையா ஃபாலோ பண்றவள் புருஷனை மட்டும் தான் சைட் அடிக்கணும். என்னையும் அப்ப பிராணநாதர்ன்னு கூப்டு” என்று சண்டை பிடிக்க ஆரம்பிக்க,
“என் பிராணனை வாங்குற உனக்கு சரியான பேர் தான் அது இருந்தாலும் நீ மைதா மாவு தான்” என்று குறும்பாய் அவனை வாரினாள்.
யுக்தா ஓரக்கண்ணில் மனையாளைப் பார்க்க, அவளோ முகத்தில் எழுந்த கடுப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க அரும்பாடுபட்டாள்.
“அக்கா புருஷனா? வேற யாரும் உனக்கு அக்கா இருக்காங்களா ஷைலா?” என ஒன்றும் தெரியாதவள் போல கேட்க, “உன் ஒன் மினிட் புருஷனா இருந்தாலும் புருஷன் புருஷன் தானக்கா” என்று வார,
“குட் பாய்ண்ட் மச்சினிச்சி” என யுக்தாவும் மைத்ரேயனின் பிபியை எகிற வைத்தான்.
“அச்சோவ்!” எனப் போலியாய் ஷைலேந்தரி வெட்கம் கொள்ள, அவள் தலையில் நங்கென அடித்தனர் மைத்ரேயனும் விஸ்வயுகாவும் ஒன்றாக.
—-
அடுத்ததாக இளங்கோவின் முகவரிக்குச் செல்ல, மற்றவர்களை காரில் இருக்க சொல்லி விட்டு யுக்தாவும் குறிஞ்சியும் மட்டும் சென்றனர்.
அங்கோ அவன் சில வருடங்களுக்கு முன்பே வெளிநாட்டிற்கு வேலை கிடைத்துச் சென்று விட்டதாக குடும்பத்தினர் கூறியதில், “அவனோட போன் நம்பர் இருக்கா?” எனக் கேட்டான் யுக்தா.
இளங்கோவின் தாயார், “இல்லைங்க. அவனே வாரம் ஒருமுறை கூப்பிடுவான். மாசம் மாசம் பணம் போட்டு விடுவான். அவ்ளோதாங்க தெரியும்” என்றதும், “அவன் எந்த நாட்டுல என்ன வேலை பாக்குறான்” எனக் குறிஞ்சி கேட்டிருந்தாள்.
“வெளிநாடுன்னு சொல்லிட்டுப் போனான்மா. என்ன வேலைன்னுலாம் எனக்குத் தெரியாது. ஏன்மா எதுவும் பிரச்சனையா?” என அரண்டு போய் கேட்டார் அப்பெரியவர்.
“சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பார்க்கும்போதே தெரிய, “பெரிய பிரச்சனை எதுவும் இல்ல. சின்ன விசாரணை” என்ற யுக்தா ஒரு காகிதத்தில் அவனது அலைபேசி எண்ணை எழுதிக் கொடுத்து,
“இளங்கோ அடுத்து போன் பண்ணும்போது இந்த நம்பரைக் குடுத்து எனக்கு கால் பண்ண சொல்லுங்க. கண்டிப்பா அவன் பண்ணனும்!” என்றவனின் அழுத்தத்தில் “கண்டிப்பா பண்ண சொல்றேங்கய்யா. இதுனால அவனுக்கு ஒன்னும் பிரச்சனை வராதுல. அடுத்த மாசம் என் பொண்ணுக்கு கல்யாணம் வேற வச்சுருக்கேன்” என அருகில் நின்று கொண்டிருந்த இளவயதுப் பெண்ணைக் காட்டினார்.
“உனக்கும் உன் அண்ணன் எங்க வேலைக்குப் போனான்னு தெரியாதாம்மா?” குறிஞ்சி கேட்டதும் ஒரு கணம் விழித்தவள், “தெரியாதுங்க” என்று விட,
“சரி உங்களுக்கு பின்னாடி பிரச்சனை வரக்கூடாதுன்னு தான் இந்த விசாரணை. நீங்க சின்னதா மறைச்சா கூட அது உங்களுக்கே பூகம்பமா வந்து விழும்” என்று யுக்தா இயல்பாக மிரட்டியதில் அப்பெண் மிரண்டாள்.
இருவரும் கிளம்ப எத்தனிக்கும் போது “மேடம்” என அப்பெண் அழைக்க, குறிஞ்சி திரும்பினாள்.
“அண்ணே கத்தார்க்கு போறேன்னு தான் சொன்னுச்சு. ஆனா, எந்த நாட்டுக்குப் போகுதுன்னு யாருக்கும் தெரியக்கூடாதுன்னு சொல்லிடுச்சு” என்றதும் “ஏன்” என்றாள் குறிஞ்சி.
“தெரியல மேடம். அண்ணே கொஞ்சம் கடன் வாங்கி இருந்துச்சு அதனால சொல்ல வேணாம்னு சொல்லிருக்கும்” என்றதில், யுக்தா “உங்களுக்கு வாரா வாரம் கால் பண்ணுவாருன்னு சொன்னீங்களே அந்த நம்பர் இருக்கா?” எனக் கேட்டதும் ஒரு நொடி தயங்கிவள் “இருக்கு சார்” என அந்த அலைபேசி எண்ணைப் பகிர்ந்தாள்.
அதனை வாங்கிக்கொண்டவன், “டோன்ட் வொரி இதுனால உனக்கு எந்த பிரச்சனையும் வராது. ஹேப்பி மேரீட் லைஃப்!” என இலேசான புன்னகையுடன் கூறிட, அப்பெண்ணின் முகத்தில் புதுப்பெண்ணின் மலர்ச்சி.
இங்கோ மைத்ரேயன் ஷைலேந்தரியை தீயாக முறைத்தான். அவள் அதனைக் கண்டுகொள்ளவே இல்லை.
“என்னடா உனக்குப் பிரச்சனை. அதான் உன்னையும் சைட் அடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டேன்ல. இத்தனைக்கும் நான் என் ஹேண்ட்சம் கைய சைட் அடிக்க கூட இல்ல. என் அக்காவோட புருஷன்னு மரியாதை தான குடுத்தேன். அது தப்பா?” எனப் பாவமாக கேட்க,
“என்னை நீ எப்ப சைட் அடிச்ச?” மைத்ரேயன் இன்னும் கடுப்பு நீங்காமல் கேட்டான்.
“அடிச்சேனே. நீ நிக்கும் போது, நடக்கும் போது, பேசும்போது கூட சைட் அடிச்சேன் மைதா. நீயும் ஒரு ஃபிகர் தான் போல. இவ்ளோ நாள் தெரியாம இருந்துட்டேன்” எனக் கண் சிமிட்டி அவன் தலையில் ஒரு கூடை ஐஸை வைத்தாள்.
மைத்ரேயனுக்கு இலேசாக வெட்கம் எழ, “எல்லாம் என் நேரம்டி. சைட்ட கூட கேட்டு வாங்க வேண்டியதா இருக்கு…” எனப் போலியாய் சலித்தான்.
“இவ்ளோ பேசுறியே. நீ என்னை சைட் அடிச்சியாடா?”
“அதெல்லாம் நிறைய டைம்… நேத்து உன்னை கிஸ் பண்ணும் போது உன் கன்னம் சிவந்துச்சே அப்போ, காலைல தூங்கி எந்திரிச்சதும் யோகா பண்ணுனியே அப்போ, அப்பறம் கார்ல உக்காரும் போது என்னை உரசிக்கிட்டே உக்காந்தியே அப்போல்லாம் இங்க என்னவோ பண்ணுச்சு ஷைலா” என இதயத்தைத் தொட்டுக் காண்பிக்க,
“ஹார்ட் அட்டேக் வர்ற அறிகுறியா இருக்கப் போகுதுடா” என விஸ்வயுகா நக்கலாக வாரினாள்.
“ஏண்டி அவளே இப்ப தான் ஏதோ என்மேல கருணை காட்டி பேசுறா. கொஞ்சம் பெர்ஃபார்மன்ஸ் பண்ண விடுவேன்” எனத் தோழியிடம் கெஞ்ச,
‘இந்த கருமத்தை எல்லாம் கேட்க வேண்டியதா இருக்கு’ என முணுமுணுத்தபடி “ம்ம்ம் யூ கேரி ஆன்” என்று அனுமதி கொடுத்தாள்.
அதில் மீண்டும் ஷைலேந்தரியின் புறம் திரும்பியவன் “எங்க விட்டேன்?” எனக் கேட்க,
உள்ளுக்குள் வெட்கம் ஆர்ப்பரித்தாலும் முயன்று அடக்கிக்கொண்டவள், அவன் கையை எடுத்து அவனது நெஞ்சில் வைத்தபடி “உன் இதயத்துல…” என்றாள் சரியாக.
“கரெக்ட். அப்பறம் கார விட்டு இறங்கும் போது என் கையைப் பிடிச்சுட்டே இறங்குனியே… அந்த செகண்ட் கூட உன்னை சைட் அடிச்சேன். அப்பறம்…” எனச் சொல்லும்போதே நந்தேஷ்,
“அவளே ஒரு முட்டி செத்தவ. கால் வலிக்குதுன்னு உன்னைப் பிடிச்சுட்டு இறங்கிருப்பா. இதெல்லாம் லவ்வுன்னு வந்துட்டான் பேச. டேய் நானே என் எக்ஸ் இறந்த சோகத்துல இருக்கேன். ஒழுங்கா ஓடிடுங்க ரெண்டுபேரும்…” என்று மிரட்டும் தருணம் விஸ்வயுகாவும் ஷைலேந்தரியும் குபீரென சிரிக்க,
நந்தேஷின் வாசகத்தைக் கேட்டபடி அங்கு வந்த குறிஞ்சியின் முகத்தில் மெல்லிய வாட்டம்.
அத்தியாயம் 65
நொடியில் தன்னை மறைத்துக் கொண்ட குறிஞ்சி, “யப்பா ராசாக்களா சிரிச்சு தொலையாதீங்க. அப்படி தான் தரணி வீட்டு முன்னாடி சிரிச்சு பேசுனதுல நாலு தடியனுங்க வந்தாங்க அடிக்க. காலைல இருந்து பச்சைத் தண்ணி கூட குடிக்காம பாடி டயர்டாகி இருக்கு” என்றாள் கிண்டலாக.
விஸ்வயுகா கூர்மையாக, “என்ன சொல்றீங்க? யார் அடிக்க வந்தா?” எனக் கேட்டதும், அவள் விஷயத்தைக் கூறினாள்.
“யார் குறிஞ்சி அவங்க. போட்டோஸ் எதுவும் இருக்கா? நான் பார்க்கலாமா?” எனக் கேட்டதும், “கஸ்டடில தான் இருக்காங்க. நான் போட்டோ அனுப்ப சொல்றேன்” என்றாள்.
யுக்தா குறிஞ்சியை முறைத்து, “நீ காலைல இருந்து சாப்டலையா எத்தனை தடவை சொல்லிருக்கேன் பட்னியோட சுத்தாதன்னு. பர்ஸ்ட் ஹோட்டல் போகலாம்” என அதட்டினான்.
“முதல்ல உன் கைக்கு மருந்து. அப்பறம் தான் சாப்பாடு” எனக் குறிஞ்சி செக் வைக்க, அவன் இறுகினான்.
“கையை வேக வச்சுட்டு அப்படியே சுத்திட்டு இருக்க நீ. நீ மருந்து போடுற வரை, ஒரு பருக்கை கூட எனக்கு இறங்காது” என வீம்பாக நின்றதில், “சரி வந்து தொலையுறேன்” என்றதில் “நீ என் கூட வா…” என்றவள் மற்றவர்களையும் உணவு அருந்த செல்லும் படி பணித்து விட்டு அவனை இழுத்துச் சென்றாள்.
கையைக் கட்டிக்கொண்டு விஸ்வயுகா அவனை அழுத்தமாக ஏறிட்டாள். தான் சொல்லும்போது மருந்திட மறுத்து விட்டு இப்போது மட்டும் அவள் பின்னே போவதென்ன என்ற கடுப்பு தான்.
“ஹ்ம்ம் ஒரு பக்கம் லவரு, ஒரு பக்கம் பிரெண்டுன்னு வாழறான்யா” என்ற நந்தேஷ் காரில் அமர்ந்திட, விஸ்வயுகா இடத்தை விட்டு அசையவே இல்லை.
அழுத்தப்பார்வையை சிறிதும் மாற்றாதவளை கண்டுகொள்ளாதது போல குறிஞ்சியின் காரில் ஏறப் போனவன், ஒரு நொடி நின்று அவளைப் பார்த்தான்.
‘போய் கார்ல ஏறு’ கண்ணாலேயே அவன் பணிக்க, அவளோ கண்ணைச் சுருக்கிப் பார்த்தாளே தவிர இடத்தை விட்டு அசையவே இல்லை.
அவனும் குறிஞ்சிக்கு அருகில் முன் சீட்டில் அமர்ந்து விட்டிருக்க, ‘இங்க இருந்து போய் தான் பாரேன்’ என்ற எச்சரிக்கை அவள் விழிகளின் வழியே எகிறி குதித்தது.
“என்னடா உன் ஆளு, கண்ணுல ஃபயர் விட்டுட்டு இருக்கா?” எனக் குறிஞ்சி கேட்டதில் “என் ஏஞ்சலுக்கு பொஸசிவ் ஜாஸ்தி!” என்றான் ரசனையாக.
மைத்ரேயன் ஜன்னல் வழியே தலையை நீட்டி “விஸ்வூ, வந்து கார்ல ஏறு. உனக்கு பசில வயிறு கத்தலையா?” என்றதில், அவள் விறுவிறுவென குறிஞ்சியின் காரின் அருகில் சென்று ஓட்டுநர் கதவைத் திறந்து குறிஞ்சியை நோக்கி தீப்பார்வை வீச, திருதிருவென விழித்தவளின் கால்கள் தானாக காரை விட்டு இறங்கியது.
குறிஞ்சியைக் கண்டனத்துடன் பார்த்தபடியே காரை ரிவர்ஸில் எடுத்தவள், ஒரே திருப்பில் யூ டர்ன் போட்டிருக்க, மண்ணெல்லாம் பறந்து குறிஞ்சி கண்ணில் தான் விழுந்தது.
“அடி படுபாவி!” எனக் கண்ணைக் கசக்கியபடியே நின்ற குறிஞ்சியின் முன்னால் நந்தேஷ் காரை நிறுத்தி, “அழகி மேடம் ஏறிக்கோங்க. உங்களை உங்க பிரெண்டு கை விட்டாலும் நான் விட மாட்டேன்…” என நக்கல் போல கூறியதில் அந்த வாசகத்தின் பொருள் அவன் உணர்ந்தானோ இல்லையோ அவளுக்கு நெஞ்சில் சில்லென்ற உணர்வு தானாய் எழுந்தது.
—-
காரை அதிவேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தவளை விழியெடுக்காமல் ரசித்திருந்தான் யுக்தா சாகித்யன்.
அவளுக்கோ கோபம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ‘நான் சொன்னா கேட்க மாட்டாராம்… டேஷு!’ என வாய்க்குள் கெட்ட வார்த்தைகள் அணிவகுக்க, ஒரு க்ளினிக்கின் முன் காரை நிறுத்தினாள்.
அப்போதும் அவனைத் திரும்பி பார்க்கவில்லை.
அவன் இறங்காமல் இருப்பதை உணர்ந்து, “போ” என ஒற்றைச் சொல்லில் உரைக்க,
“என் மேல இருக்குறது பொஸசிவ்னு ஒத்துக்கோ போறேன்” என்றான் ஆழ்ந்த குரலில்.
ஸ்டியரிங்கை இறுக்கிப் பிடித்தவள், மௌனமாக அமர்ந்திருக்க, அவள் புறம் சரிந்து அவளது மென்கழுத்தில் அழுத்தமாக இதழ் பதித்தவன் “ஐ லவ் திஸ் ஏஞ்சல்…” எனக் கிறக்கமாக உரைத்து விட்டு அவள் அடிக்க வரும் முன் இறங்கி கிளினிக்கினுள் ஓடி விட்டான்.
செங்கொழுந்தான கன்னங்களை அழுந்தத் தேய்த்துக் கொண்டவளுக்குள் சிலிர்ப்பு அடங்கவே நிமிடங்கள் பிடித்தது.
கைக்கு மருந்திட்டு சிறிது நேரத்தில் வெளியில் வந்த யுக்தா காரைக் காணாமல் திகைக்க, சுற்றி முற்றி பார்த்தான். பின் விஸ்வயுகாவிற்கு போன் செய்தும், அவளது அலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளத்தைத் தெரிவிக்க, “யுகா… யுகா” எனக் நடுசாலையில் கத்தியவனுக்கு மெல்ல மெல்ல இதயத்துடிப்பு அதிகரித்தது.
—-
ஹோட்டல் ஒன்றில் காரை நிறுத்தவர்கள், முதலில் வயிறை சமன்படுத்த தத்தம் இலையில் புதைந்தனர்.
சற்றே பசி குறைந்ததும் தான் நந்தேஷ் நிமிர்ந்து குறிஞ்சியைப் பார்த்தான். ஒரு கையில் போனை வைத்திருந்தவளுக்கு அத்துடன் இரண்டு மூன்று அழைப்பு வந்து விட்டது அலுவல் ரீதியாக.
“முதல்ல சாப்பிட்டுட்டு அப்பறம் போன் பேசலாமே” நந்தேஷ் கூறியதும்,
“ஆன் டியூட்டி. போன் அட்டண்ட் பண்ணலைன்னா இம்பார்ட்டண்ட் நியூஸ் மிஸ் ஆகிடும். பழகிடுச்சு” என்றாள் மெல்லப் புன்னகைத்து.
“நான் கேட்கணும்னு நினைச்சேன். அந்த தரணியோட அப்பா பாலன் வாதம் வந்த மாறி நடிச்சாருன்னு எப்படி கண்டுபிடிச்ச பார்த்ததும்?”
“அதுவா, என் மாமா கொஞ்ச வருஷமா ஸ்ட்ரோக் வந்து தான் படுத்த படுக்கையா இருக்காரு. அவரை தினமும் பாக்குறேனே எவ்ளோ கஷ்டப்படுறாருன்னு. சோ நடிக்கிறது தெரிஞ்சுடுச்சு” என்றாள் சோகம் கலந்த சிரிப்புடன்.
மைத்ரேயன் “நீயும் யுக்தாவும் ஒண்ணா படிச்சீங்களா? உனக்கும் அஸ்வினி ஆண்ட்டியை தெரியுமா?” எனக் கேள்வி எழுப்ப,
“ம்ம் தெரியும். காலேஜ் டைம்ல விஸ்வாவை போட்டோ எடுத்த பசங்களை அடிச்சப்ப வந்த ப்ராப்ளம்ல தான் நாங்களும் க்ளோஸ் ஆனோம். யுக்தாவை பார்க்க ஆண்ட்டி வரும்போது எல்லாம் ஆண்ட்டி என்னையும் வர சொல்லிடுவாங்க. ஈவ்னிங் கம்பல்சரியா போய்டுவேன் யுக்தா வீட்டுக்கு… ஆக்சுவலி, அவன் விஸ்வாவை லவ் பண்றது எனக்கு தெரியும்…” எனும்போதே ஷைலேந்தரி “லவ்வா? அப்போ அப்பவே அத்தான் லவ் பண்ணிருக்காங்களா?” எனக் கேட்டாள் விழி விரித்து.
“ம்ம்!” என்றவள், யுக்தாவின் காதல் மனதை உரைத்து விட்டு, “அன்னைக்கு என் ஆளை பார்க்க போறேன்னு ரொம்ப ஹேப்பியா வந்தான். நானும் வரேன்னு சொன்னதுக்கு. ஃபர்ஸ்ட் விஸ்வா அவனுக்கு ஓகே சொன்னதும் என்னை இன்ட்ரோ குடுக்குறேன்னு சொன்னான். நானும் அவனோட போன்காக தான் வெய்ட் பண்ணிட்டே இருந்தான். போன் வந்துச்சு. ஆனா… அப்படி ஒரு ஷாக்கை நான் எதிர்பார்க்கல” எனும்போதே உணவு உள்ளே இறங்காமல் சதி செய்தது.
மற்ற மூவரும் உண்பதை எப்போதோ நிறுத்தி இருந்தனர். யுக்தாவின் காதலின் ஆழம் அவர்களையும் வியக்க வைத்தது. இருவருமே பார்க்காமல், அன்பைப் பகிராமலேயே ஒருவரை ஒருவர் உயிராய் நேசித்து இருக்கின்றனர் என்ற உண்மை மற்ற மூவருக்கும் விளங்கினாலும், இப்போதிருக்கும் விஸ்வயுகா அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பது தான் வலியை கொடுத்தது.
குறிஞ்சி மேலும் தொடர்ந்து, “அவன் பெருசா சிரிச்சுப் பேசி துறுதுறுன்னு இருந்துலாம் நான் பார்த்தது இல்ல. சைலண்ட்டா இருப்பான். அப்போ அப்போ சிரிப்பான். படிப்பு மட்டும் தான் அவனோட குறிக்கோள்னு, தியேட்டர் பார்க் பொண்ணுங்க பின்னாடி சுத்துறதுன்னு அனாவாசியமா நேரத்தை வீணாக்க மாட்டான். ஆனா ரொம்ப நல்லவன். ஆண்ட்டியோட இழப்பை ஏத்துக்க முடியாம ரொம்ப உடைஞ்சுட்டான். அதுக்கு அப்பறம் விஸ்வா மேலயும் கோபத்தை வளர்த்துக்கிட்டு ரொம்ப இறுகிப் போய்ட்டான். இங்கவே இருந்தா ரொம்ப டிப்ரெஸ் ஆகுறான்னு மறுபடியும் அவனை வேலைல ஜாயின் பண்ண வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. அதுக்கு அப்பறம் ஏன்டா அவனை ஜாயின் பண்ண சொன்னோம்னு என்னை யோசிக்க வச்சுட்டான். எப்ப இருந்து குடிக்க ஆரம்பிச்சான்னு தெரியல.
அது ஒரு பக்கம், அவன் கோபத்துக்கு எல்லாம் வடிகாலா, அக்கியூஸ்ட்டை என்கவுண்டர் பண்றதை ஏதோ எனர்ஜி ட்ரின்க் குடிக்கிற மாதிரி பண்ணுவான். அதுனால அவனுக்கு நல்லதும் நடந்துச்சு கெட்டதும் நடந்துச்சு. ப்ரோமோஷன், அண்டர் கவர் ஆபரேஷன், ஸ்பெஷல் பொசிஷன்னு எல்லாமே கிடைச்சாலும் நிறைய எதிரிகளும் கிடைச்சாங்க. அவன நினைச்சு இங்க நான் பயத்துல உக்காந்துருந்தா, அவன் அசால்ட்டா பப்ளிக் பிளேஸ்ல என்கவுண்டர் பண்ணிட்டு வருவான். டிபார்ட்மெண்ட்டே அவனுக்கு எதிரா வந்தாலும் வரலாம். அதெல்லாம் அவன் கண்டுக்கறதே இல்ல.
ஆரம்பத்துல லீவ் கிடைக்குறப்ப எல்லாம் டெல்லிக்குப் போய் அவனைப் பார்ப்பேன். அப்பறம் என் மாமாவுக்கு ஸ்ட்ரோக் வந்ததும் என்னால எங்கயும் நகர முடியல. என் அம்மா, தங்கச்சிக்கு பாதுகாப்பா வீட்ல இருந்த ஒரே ஆம்பள அவரு தான். அவரும் படுத்த படுக்கையாகவும் அம்மா என்னை வேலையை விட சொல்லி ரொம்ப பயந்துட்டாங்க. என்னால வேலையை விட முடியாதுன்னு பிடிவாதம் பிடிச்சு லீவ் நாள் முழுக்க அவங்களோடவே இருக்குற மாதிரி பார்த்துக்கிட்டேன். அதனால யுக்தாவைப் பார்க்கப் போறது குறைஞ்சுடுச்சு. அதுல அவனுக்கு இன்னும் அழுத்தம் ஏறிருக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா அவன் அதை வெளிக்காட்டாம என் குடும்பத்தைப் பார்க்க சொல்லிட்டான். குட் சோல்மேட். பட் ஏன் இந்த அளவு கஷ்டம் வரணும்னு தான் எனக்கு கடவுள் மேல கோபமே” எனப் பேசி முடித்து பெருமூச்சு விட்டாள்.
சிறிது இடைவெளிவிட்டு, “பட் இங்க வந்து விஸ்வாவுக்கு நடந்தது தெரிஞ்சதும் இன்னுமே கஷ்டமா இருக்கு. யாராவது ஒருத்தராவது நிம்மதியா இருந்துருக்கலாம்” எனும்போதே மூவரின் விழிகளிலும் குளம் தேங்கியது.
“அட்லீஸ்ட் இனிமேலாவது நிம்மதி கிடைக்கலாம்ல குறிஞ்சி… அதுவும் கிடைச்சபாடு இல்லையே” ஷைலேந்தரி வருந்திட,
பின் தன்னைத் தானே தேற்றிக்கொண்ட குறிஞ்சி, “அதான் இவ்ளோ தூரம் வந்துருக்கோம்ல கண்டிப்பா இதுக்கு ஒரு சொலியூஷனை கண்டுபிடிச்சுடலாம்” என்றதும், நிலையை சரிசெய்யும் பொருட்டு மைத்ரேயன் “எங்க… கடைசில கள்ளக்காதல் காவியத்துல முடியுது நம்ம இன்வெஸ்டிகேஷன்…” எனக் கேலியாய் உரைக்க, நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டு நகை புரிந்தனர்.
—-
பித்துப் பிடித்தவன் போல நின்றிருந்தான் யுக்தா. நொடி நேரத்திற்குள் செய்ய வேண்டியதை மனதில் ஓட்டிக்கொண்டவன், க்ளினிக் வாசலில் இருந்த சிசிடிவியை சோதிக்க உள்ளே செல்லப்போக, மீண்டும் அவன் முன் வந்து கீறிச்சிட்டு நின்றது கார். உள்ளே ஷவர்மாவை உண்டபடி விஸ்வயுகா அமர்ந்திருந்தாள்.
“முடிஞ்சுதா? டேப்லட் வாங்குனியா?” என அவன் கையைப் பார்த்தபடி கேட்க, யுக்தாவிற்கு இதயத்துடிப்பே அப்போது தான் சீரானது.
“எங்கடி போன?” வார்த்தைகளும் நடுங்கியது.
“பசிச்சுச்சு. நீயும் அதிசயமா ரொம்ப நேரமா உன் வாய்க்கு பூட்டு போட்டு அரைக்காம இருந்தியே. அதான் நீ வரதுக்குள்ள ஏதாச்சு வாங்கலாம்னு கடைக்குப் போனேன். ஷவர்மா மட்டும் தான் இருந்துச்சு…” எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மறுபுறம் காரினுள் ஏறினான்.
“ம்ம்” என அவன் முன் ஷவர்மாவை நீட்ட, “போடி பைத்தியக்காரி” என அவள் கன்னத்தில் ஒற்றைக்கையால் அழுந்தப் பிடித்து அருகில் இழுத்தவன், அவள் இதழ்களில் சேமித்து வைத்திருந்த ஷவர்மாவை அவன் உண்ண ஆரம்பித்தான்.
மோகம் வலுக்கும்
மேகா
காதல் அழகு