Loading

அத்தியாயம் 61

“என்ன சார் சொல்றீங்க? எந்த காமன் பாயிண்டும் இல்லாம எப்படி கண்டுபிடிக்க? அடுத்து இவன் யாரைக் கொலை பண்ண போறான்னு எப்படி தெரியும்?” என அருண் மூளையைக் கசக்கினான்.

தனது இருக்கையில் அமர்ந்த யுக்தா சாகித்யன், “அருண்… இதுவரை மேட்ரிமோனி ரிலேட்டடா கொலை செய்யப்பட்ட பொண்ணுங்க நாலு பேர். அவங்களோட ஆக்டிவிட்டீஸ் சொல்லு!” என சிறிய அளவிலான உலக உருண்டையை உருட்டியபடி கேட்டான்.

“சார் எல்லாருமே வேற வேற காலேஜ். வேற வேற சிட்டில படிச்சு இருக்காங்க. ஒருவேளை ஏதாவது இன்ஸ்டிடியூட்ல சேர்ந்து படிச்சுருப்பாங்களோன்னு டவுட் வந்து செக் பண்ணுனேன். அதுவும் இல்ல. அவங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டது கூட இல்ல. மேரேஜ்க்கு முன்னாடி நடந்த ஆர்கனைசேஷன், பார்ட்டின்னு எதுவுமே யாருக்கும் ஒத்துப்போகல. இதுல எங்க இருந்து லிங்க் எடுத்து இதை தடுக்குறதுன்னு கூட புரியல சார்”

“பின்ன, அவன் என்ன ஒரே காலேஜ்ல ஒண்ணா படிச்சா பொண்ணுங்களையா கொல்லப் போறான்?” என எகத்தாளமாகக் கேட்டவன்,

“லிங்க் இருக்க கூடாதுன்னு தான் அவன் பொண்ணுங்களை பார்த்து பார்த்து செலக்ட் பண்றான் அருண். நீ நினைக்கிற எந்த லிங்கும் இதுல இருக்காது. பர்ஸ்ட் ரோஜா. அவளோட வீட்ல மேட்ரிமோனில ரெஜிஸ்டர் பண்ணுனதும் நிறைய அலையன்ஸ் வந்துருக்கு. முதல்ல வந்தது திருச்சில இருந்து. அதை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. தென், தேனீல இருந்து வந்துருக்கு. அதையும் ரிஜெக்ட் பண்ணிருக்காங்க. மூணாவதா வந்தது தான் வெங்கடெஷோட ப்ரொபைல். அதை செலக்ட் பண்ணிட்டாங்க.

அப்பறம்… அடுத்து கொலையான ரேஷ்மாவை எடுத்துக்கிட்டா அவங்க வீட்லயும் மேட்ரிமோனில ரெஜிஸ்டர் பண்ணிருக்காங்க. முதல்ல வந்த அலையன்ஸ் சென்னை. அடுத்து வந்தது கோயம்பத்தூர், அடுத்து தஞ்சாவூர், அடுத்து நாலாவதா வந்த சென்னை மாப்பிள்ளையை செலக்ட் பண்ணிருக்காங்க. சரி அவன் மூணாவது செலக்ட் பண்ற பொண்ணுங்களை பிடிச்சு கொல்றான்னு வச்சு கேஸை மூவ் பண்ணலாம்னா அதுக்கும் டிவிஸ்ட் வைக்கிறான்.

இப்ப நம்ம அவனுக்கு டிவிஸ்ட் வைப்போமா?” என்றான் அர்த்தப்பார்வையுடன்.

அருண் பேந்த பேந்த விழித்து, “இந்த டீடெய்ல் எல்லாம் நான் சொல்லவே இல்லையே சார்…” என்றதில்,

“நீ ஆடி அசைஞ்சு எடுத்துட்டு வர்ற டீடெய்ல் வச்சு தான் ஒன்னும் வேலைக்கு ஆக மாட்டேங்குதே” என்ற யுக்தாவின் குற்றச்சாட்டில் அசடு வழிந்தான்.

பின், “சரி இப்ப எப்படி அவனைக் கண்டுபிடிக்கிறது?” எனக் கேட்க,

“அடுத்து எங்க எங்க மேட்ரிமோனி மூலமா கல்யாணம் நடக்கப்போகுதுன்னு டீடெய்ல் எடுக்க சொல்லிருந்தேன்ல. அந்தப் பொண்ணுங்களோட டீடெய்ல்ஸ் எல்லாம் வச்சு பார்த்து எதுல அவங்களுக்குள்ள ஒரு ஒற்றுமையும் இல்லாம இருக்கோ. அவங்களை ஃபில்டர் பண்ணு. அந்த ஃபில்டர் பண்ணுன பொண்ணுங்கள்ல இருந்து அடுத்து அவன் யாரை கொல்ல போறான்னு நான் ஃபில்டர் பண்றேன். ஃபாஸ்ட்! நான் ஃபாரென்சிக் ஆபிஸ்க்கு போயிட்டு வரேன்” என்று கிளம்ப,

“சார் தமிழ்நாட்டுக்குள்ள மட்டும் எடுத்தா போதுமா?” எனக் கேட்டான்.

“நோ. மத்த ஸ்டேட்லயும் இந்த மாதிரி இஸ்யூ நடக்குதான்னு நமக்குத் தெரியனும். சிலர் உண்மையாவே சூசைட்னு நினைச்சுட்டு இருக்கலாம். அப்படி கல்யாணத்து அன்னைக்கு, இல்லன்னா அதுக்கு முதல் நாள் இறந்து போன பொண்ணுங்க லிஸ்ட் எல்லாம் எடு. எல்லாமே குவிக்கா நடக்கணும்” என்று உத்தரவிட்டபடி நடந்தவன், தனது காரை எடுத்துக்கொண்டு ஃபாரென்சிக் அலுவலகம் சென்றான்.

முரளியோ தீவிர சோதனையில் இருக்க, இறந்து போன பெண்ணின் உடல் நடு கூடத்தில் ஆடையின்றி வைக்கப்பட்டு இருந்தது.

“எனி க்ளூஸ்?” யுக்தா எப்போதும் போல மாஸ்க் கூட அணியாமல் நிற்க,

“சார் டாக்சிகாலஜி டெஸ்ட் எல்லாம் இமீடியட்டா எடுத்தாச்சு. ஹார்ட் வீக் ஆகி, பிபி இன்க்ரீஸ் ஆகி தான் இறந்துருக்காங்க. அவங்களுக்கு பிபியும் இருந்துருக்கு ஆல்ரெடி” என்றதும் “ஸ்டாப் திஸ் ஃபக்” என்று அறை அதிர கத்தியதில் டெட் பாடியே எழுந்து ஓடியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

“நீ யார்கிட்ட காசு வாங்குன?” என விழி சிவக்க முரளியிடம் சீறினான்.

“சார் ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா கேளுங்க. பாடில ட்ரேஸ் அவுட் பண்ண முடியாத மாதிரி, இறந்ததும் உடனே டிசால்வ் ஆகுற மாதிரியான பாய்சனை தான் கில்லர் யூஸ் பண்ணிருக்கணும். அதனால நமக்கு ரிப்போர்ட்ல கொலைக்கான வெப்பன் கிடைக்க மாட்டேங்குது.”

“அந்த டேஷ் வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியுது. நீ குடுக்குற ரிப்போர்ட்… அந்த யூஸ்லெஸ் ரிப்போர்ட் வச்சு தான், நான் அடுத்து ப்ரொசீட் பண்ண முடியும். நீயும் ஒன்னும் இல்ல சும்மா செத்துப்போய்ட்டான்னு எழுதி குடுத்தா எல்லாரும் என்னை தான் பைத்தியக்காரன்னு நினைப்பாங்க” என்றவனுக்கு ஆத்திரம் உச்சந்தலைக்கு ஏறியது.

அந்நேரம் குறிஞ்சி போன் செய்து, சிரித்தபடி விஷயத்தைக் கூற, “அங்கேயும் ஒரு வேலையும் ஆகலைல அப்பறம் எதுக்கு நின்னு பல்லைக்காட்டிட்டு இருக்க. அபர்ணா கேஸ்ல வேற லீட் கிடைக்குதா பாரு. போ!” என்று கடித்து குதறிட, அவனது கோப நிலை புரிந்து சட்டென சிரிப்பை நிறுத்தியவள், “எஸ் சார்” என்று ஃபார்மலாக உரைத்து விட்டு போனை வைத்தாள்.

வழக்கு நினைத்ததற்கு மாறாக தீவிரமாக செல்வது புரிந்து அவள் முகமும் தீவிரமாக, அலைபேசியை லௌட் ஸ்பீக்கரில் போட்டு இருந்ததால், யுக்தாவின் சீறலில் மற்ற மூவரும் சேர்ந்தே அட்டெண்டஷன் மோடிற்கு வந்திருந்தனர்.

“இவன் ஏன் இவ்ளோ சிக்கல்ல இன்னும் அபர்ணா கேசையே பிடிச்சுத் தொங்கிட்டு இருக்கான்” நந்தேஷிற்கு குறிஞ்சியைத் திட்டியதால் இலேசான கடுப்பு.

மைத்ரேயனும் “ஆமா குறிஞ்சி, அபர்ணா கனடால இருந்து வந்து கொஞ்ச நாள் தான் ஆச்சு. ஒருவேளை நாச்சியப்பன் அங்கிளோட எதிரிங்க யாராவது செஞ்சுருப்பாங்களான்னும் விசாரிச்சுப் பார்த்தாச்சு அப்பவே. ஆனாலும் கடைசியா ஆக்சிடெண்ட்னு தான் முடிஞ்சுது. எப்படி பார்த்தாலும் அபர்ணாவோட எக்ஸ் லவரும் உயிரோட இல்ல. அவள் ஃபியான்சும் உயிரோட இல்ல. இதை விட்டுட்டு வேற ஏதாவது யூஸ்ஃபுல்லா தேடலாம்” என்று தனது அபிப்ராயத்தைக் கூறினான்.

குறிஞ்சி வேகமாக போனை எடுத்து, “அப்ப சரி உங்க அபிப்ராயத்தை ரெண்டு பேரும் சேர்ந்தே யுக்தா கிட்ட சொல்லுங்க” என்று டையல் செய்யப் போக, இருவரும் ஒன்றாக போனைப் பிடுங்கினர்.

“அபர்ணாவோட கனடா ப்ரெண்ட்ஸ்கிட்ட விசாரிச்சுப் பார்க்கலாம் கைஸ் வாங்க” என்று முதல் ஆளாக நந்தேஷே காரில் ஏறப் போனான்.

யுக்தாவிடம் பேச்சு வாங்கு அளவிற்கு அவனுக்கு மனதைரியம் இல்லை. ஷைலேந்தரி தான் நமுட்டு சிரிப்புடன் “பரதேசி கனடா ப்ரெண்ட்ஸ் கனடால தான இருப்பாங்க. இங்க எப்படி விசாரிப்ப?” என்றதில்,

“என்ன ஷைலா பேசுற. நம்ம சிபிஐ மேடம் சிங்கம் சூர்யாவுக்கே டஃப் குடுக்குறவங்க, நம்ம சிங்கம் ஆஸ்திரேலியா போய் அக்கியூஸ்ட்ட பிடிக்கிறப்ப, இந்த பெண் சிங்கம் நம்மளை கனடா கூட்டிட்டுப் போகாதா என்ன?” என்ற நந்தேஷ், “அப்படி தானங்க அழகி மேடம்” என்றான் நக்கலாக.

“என் பேர் குறிஞ்சி!” பற்களைக் கடித்து நினைவுப்படுத்தியவள், “நாச்சியப்பனை மீட் பண்ணனும்” என்றாள்.

“தாராளமா பண்ணுங்க மேடம். ஆனா தனியா போய் பண்ணுங்க. என் பெரியம்மாவுக்குத் தெரிஞ்சா அப்பறம் நீங்க என் மர்டர் கேஸை தான் டீல் பண்ண வேண்டியது வரும்” என்று ஷைலேந்தரி பின்வாங்கினாள்.

மைத்ரேயன் சட்டென அவள் வாயில் அடித்து விட்டான். “வாயை மூடுடி. நல்லதா பேசித் தொலை” என்றவனுக்கு அந்த ஒற்றை வார்த்தையில் நெஞ்சம் நடுநடுங்கி விட்டது.

அவன் சற்று வலுவாகவே அடித்து விட்டதில் வாயைப் பொத்திக்கொண்டவளுக்கு கண்ணே கலங்கி விட்டது.

“அடேய் சும்மா ஒரு ஃப்ளோக்கு தான சொன்னேன். அதுக்கு ஏன்டா வாயை உடைக்கிற…”

“அதுக்கு கண்டதை உளறுவியா?”

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருக்க, அப்போது அம்பாசிடர் காரில் வந்திறங்கினர் நான்கு தடியர்கள்.

“இவனுங்க தானடா?” என ஒருவன் மற்றொருவனிடம் கேட்க, “ஆமா தல” என்றான்.

பட்டப்பகலில் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் கையில் கத்தியுடன் வந்த நபர்களைக் கண்டு நால்வரும் திகைக்க, அவர்கள் அருகில் வந்த ஒருவன் நேராக நந்தேஷை குத்தச் சென்றான்.

அவர்கள் தடுக்கும் முன் குறிஞ்சி அவன் கையைப் பிடித்து வளைத்தாள்.

மற்றொரு கையால் பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்தவள் அதனைத் திருப்பிப் பிடித்து அவனது கையில் அடிக்க, அவன் வலியில் அலறினான்.

அதனைக் கண்டு மற்றொருவன் தாக்க வர, நான்கு அடி தாண்டி வரும் முன்னே காலைத் தூக்கி எத்தியவள், அவனைப் பறக்க விட, அதை பார்த்து அடுத்தவன் வந்து தாக்கினான்.

மீதி இருந்தவர்களையும் அடித்து துவைத்தவளை மற்ற மூவரும் காட்சிகளை ஸ்லோ மோஷனுடன், பேக் கிரவுண்ட்டில் ‘சிங்கம் சிங்கம் ஷீ இஸ் துர சிங்கம்’ என்று பாடலை ஓட விட்டு அசையாமல் நின்றிருந்தனர்.

குறிஞ்சி உடனடியாக அவளது குழுவை வரவழைத்து அந்த நான்கு நபர்களையும் ஒப்படைத்து, எதற்காக இந்த தாக்குதலென்று விசாரிக்கக் கூற அவர்களும் உடனடியாக வேலை செய்தனர்.

கையை உதறி விட்டு வலித்த தோள்பட்டையைப் பிடித்தபடி மீண்டும் மூவரின் அருகில் வந்த குறிஞ்சி, “யாரு அவனுங்க. நீங்க இதுக்கு முன்னாடி பார்த்து இருக்கீங்களா?” என நந்தேஷிடம் கேட்க, அவன் இன்னும் திக்பிரம்மை பிடித்தவன் போலத்தான் நின்றிருந்தான்.

“ஹலோ நந்தேஷ்?” என அவன் முன் சொடுக்கிட்டவள், “அட்லீஸ்ட் உங்களுக்கு பாடி கார்டாவது போட்டுக்கோங்க. வி. ஐ. பி ன்னு சொல்லிட்டு இந்தா என்னைக் கொன்னுக்கன்ற மாதிரி அசால்ட்டா அலையாதீங்க” என்று அவர்களை பொதுவாகப் பார்த்துக் கூற, ஷைலேந்தரி அவள் கையைப் பிடித்து “அக்கா” என்றாள் அன்பாக.

“எதே?” குறிஞ்சி பேந்த பேந்த விழிக்க, “உனக்கு எதுக்கு இந்த கஷ்டமான சிபிஐ வேலை எல்லாம். பேசாம எங்களுக்கு பாடி கார்டா நீயே வந்துடேன்” என்று அழைக்க,

“அட ச்சீ கையை விடு!” என்றவளுக்கு அழைப்பு வர அதனை எடுத்துப் பேசியவள், மைத்ரேயனை ஒரு முறை பார்த்து விட்டு “ஓகே… அவங்களை கஸ்டடில வச்சுருங்க” என்று உத்தரவிட்டாள்.

மைத்ரேயன் புரியாமல், “யாருங்க அவங்க எதுவும் தெரிஞ்சுதா?” எனக் கேட்க,

“ம்ம் கூடிய சீக்கிரம் தெரியும். கம் லெட்ஸ் கோ” என்றதும், நந்தேஷே நிகழ்விற்கு வந்து காரை கிளப்பினான்.

‘அவ்வ்வ்! சுத்தி இருக்குற எல்லாம் சொர்ணாக்காவா இருக்கே’ என்ற பதைபதைப்பு வேறு!

வீட்டினுள் நுழைந்த விஸ்வயுகாவிற்கு யுக்தா காதலை உரைத்த கணமே எண்ணத்தினுள் சுழன்றது.

கூடவே அவளது விழிகள் அவன் கொடுத்த செயினையும் தேடியது.

வேலையாளை அழைத்து, கீழே செயின் எதுவும் இருந்ததா என்று விசாரிக்க,

“ஆமா மேடம். டைனிங் டேபிள் கீழ இருந்துச்சு. நான் தான் எடுத்து வச்சேன்” என்று டிராயரில் வைத்த செயினை நீட்டியதும், “தேங்க் யூ” என வேலைக்கார பெண்ணின் கன்னத்தை தட்டி விட்டு விறுவிறுவென மாடிக்கு ஏறினாள்.

அறைக்குள் நுழைந்ததும் கதவில் சாய்ந்து கீழே அமர்ந்தவள், அந்த செயினின் இதய வடிவத்தை தன்னிதயத்தோடு பொருத்திக் கொண்டாள்.

அத்தியாயம் 62

ஆனால் அவளது பார்வை தான் உயிர்ப்பின்றி எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது. அவனிடம் இளகி விடக்கூடாதென்று மனதைக் கடிவாளமிட்டு இறுக்கினாள்.

காதலுக்கேது கடிவாளமென்ற உண்மை தான் அவளுக்குப் புரியாது போனது.

அந்நேரம் அலைபேசி அழைக்க, அதில் கேட்ட தகவலில் அத்தனை நேரமும் இழந்திருந்த கம்பீரத்தையும் கூர்மையையும் கண்களில் ஏற்றினாள்.

“ஆர் யூ சியூர்?” எனக் கேட்க, எதிர்புறம் “சியூர் மேம். ஷுமுக் பெர்ஃபியூமை லாஸ்ட் வீக் தான் பர்ச்சேஸ் பண்ணிருக்காரு. உங்களுக்கு நான் டீடெய்ல் அனுப்பி இருக்கேன்” என்றதும் அவள் வேகமாக அழைப்பைத் துண்டித்து விட்டு மின்னஞ்சலைப் பார்த்தாள்.

உதித். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து பின் பணி ஓய்வு பெற்றவரின் மகன்.

செல்வத்திற்கும் புகழுக்கும் குறைவில்லாத வாழ்வு. அவனும் ஒரு லீடிங் கிரிமினல் அட்வொகேட் தான். ஆனால், க்ரிமினல் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக வாதாடி, அவர்களது பண மழையில் நனைபவன்.

அவனது புகைப்படமும் இருந்தது. இளமையான தோற்றம். திடகாத்திரமான உடல்வாகு. நல்ல உயரம். அன்றைய தினத்தில் ஒருவன் உயரமாக இருந்தது அவளும் அறிந்ததே. அவனை நேரில் பார்த்து குரலைக் கேட்டால் இனம் காண இயலும் என்ற நம்பிக்கையில் அவனைப் பற்றி விசாரிக்க சொல்லி தனது ஆள்களிடம் கூறியவள் யுக்தாவிற்கு அழைத்தாள்.

இங்கு யுக்தா கபீரிடம் தான் பேசிக்கொண்டிருந்தான்.

“யுக்தா இட் மேக் சென்ஸ். இதெல்லாமே உண்மையாவே நேச்சுரல் டெத்தா இருக்க வாய்ப்பு இருக்கு தான. எந்த ஒரு எவிடன்ஸும் இல்லாம இது எல்லாம் கொலைன்னு ப்ரொசீட் பண்றதுக்கு நிறைய சிக்கல் இருக்கு. டெல்லில நீ முடிக்க வேண்டிய வேலையும் மிச்சம் இருக்கு யுக்தா. நீ என்கவுண்டர் பண்ணுன பூஷிகனோட ஆளுங்களும், அவன் மூலமா பிசினஸ்ல அடி வாங்குன சில பிஸினஸ்மேன்ஸ்ஸும் உன்னை தான் குறி வச்சுருக்காங்க. இட்ஸ் வெரி ஹெக்டிக் டைம் மேன்” என்றார் கண்டிப்புடன்.

“சார்… எவிடன்ஸ் தேவைன்னு இல்ல. எனக்கு ஹண்ட்ரட் பெர்சன்ட் தெரியும். இது எல்லாமே கொலை தான். எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க நான் ப்ரூவ் பண்றேன். அண்ட், நான் இங்க இருந்தாலும் அங்க இருக்குற ரௌடீஸ வாட்ச் பண்ணிட்டே தான் இருக்கேன். கரெக்ட் டைம் வரட்டும் ஸ்கெட்ச் போட்டோ இல்ல ஸ்கெட்ச் இல்லாமலோ காலி பண்ணிடுவேன். டோன்ட் வொரி” என்றவனின் தீவிரத்தில்,

“டேய் எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய். என்னால இங்க கமிஷன்ல பதில் சொல்லி சமாளிக்க முடியாது இனி” என்று அதட்டிட,

“ஓகே கூல்!” எனச் சொல்லும் போதே, விஸ்வயுகா போன் செய்வது பீப் சத்தத்தில் தெரிந்தது.

ஆனாலும் அவரது அழைப்பை உடனடியாக துண்டிக்க இயலாது, சில நிமிடங்கள் பேசி வைத்ததும், விஸ்வயுகாவிற்கு அழைத்தான்.

அவள் காரில் பயணப்பட்டுக் கொண்டிருக்க, யுக்தாவின் அழைப்பை ஏற்று “மீதி இருக்குற ரெண்டு பேர்ல ஒருத்தனைக் கண்டுபிடிச்சாச்சு யுக்தா” என்றதும், அவனும் காரில் ஏறியபடி “ம்ம் உதித் ரைட்?” என்றான் இயல்பாக.

அவளோ நடு சாலையில் காரை பிரேக் அடித்து நிறுத்தி விட்டு, “உனக்கு எப்படி தெரியும்?” என வியப்பாகக் கேட்க,

“நீ எங்க இருக்க?” அவன் மறுகேள்வி கேட்டான்.

“அவனைப் பார்க்க…” இறுகளுடன் அவள் கூறியதில் “நினைச்சேன். கொஞ்சம் வெய்ட் பண்ணு” என்றான் அவன்.

“முடியாது. அவனுக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சு. மத்தவனுங்க மாதிரி மேட்ரிமோனில தானா வந்து விழுக வாய்ப்பில்லை. பட் ஓகே!” என பேச்சை நிறுத்தியவளிடம் பல்லைக்கடித்து “ஏஞ்சல் காரை நிறுத்து. நான் வரேன். நம்ம ஃபர்ஸ்ட் பேசிட்டு தென்…” என்றவனின் பேச்சைக் காதில் வாங்காமல்,

“உங்கிட்ட பேசிட்டா இவ்ளோ செஞ்சேன். நீ என் பிளான்குள்ள வராத யுக்தா. வேணும்னா அரெஸ்ட் பண்ணிக்கோ. ஐ டோன்ட் கேர்” என்றாள் தோள்களைக் குலுக்கி.

“விஸ்வா!” முதன்முறை கடினத்துடன் உரைத்தான் அவளது முன்பாதி பெயரை.

“நீங்க உங்க டியூட்டியைப் பாருங்க சாகித்யன் நான் என் டியூட்டியைப் பார்க்குறேன்” எனத் திமிர் தலைதூக்க அழைப்பைத் துண்டிக்க அடுத்த சில நிமிடங்களில் அவளைத் தாண்டி வந்த யுக்தாவின் மகிழுந்து அவளது காருக்கு முன் கீறிச்சிட்டு நின்றது.

அதில் அவசரமாக பிரேக்கை மிதித்தவள் நூலிழையில் இடிக்காமல் தப்பித்தாள்.

“ஏய் சைக்கோ!” கையை நீட்டி அவள் திட்ட, கார் கதவை அறைந்து சாத்தியபடி உள்ளே அமர்ந்தவன், அவளை அறைய கையை ஓங்கினான்.

அவளோ அசையாமல் அவனை அழுத்தம் கொண்டு பார்க்க, கையை இறுக்கி மூடி டேஷ் போர்டில் குத்தியதில், அது அதிர்வு தாளாமல் திறந்தது.

உள்ளே சிறிய ஐஸ் பாக்ஸ் போல ஒன்று இருக்க, அதனை அவன் எடுக்கும்போதே அவனது கைப்பற்றி தடுத்தாள்.

“கையை விடு!” அதீத அதட்டலுடன் ஆடவனின் குரல் வெளிப்பட, “நீ அதை வச்சுட்டுப் போ யுக்தா” என்றவளின் குரலில் அதிக அழுத்தம்.

“இப்ப நீ விடல. உண்மையாவே அறைஞ்சுடுவேன் விஸ்வா”

“இதுவரை நீ அடிச்சதே இல்லையா. இல்ல நீ அடிச்சு தான் எனக்கு வலிக்க போகுதா. மரண வலி எல்லாம் பொறுத்துட்டு தான் வந்துருக்கேன்…” சொல்லும்போதே உட்சபட்ச கோபத்தின் அடையாளமாக குரல் நடுங்கிப்போனது.

அவன் மனமோ சிதைந்து உருகினாலும், தனது நிலையை மாற்றிக்கொள்ளாது, “ஏய் கையை எடுடீ!” என்று கர்ஜித்தான்.

அந்தக் கத்தலில் தானாக அவள் கையைப் பின்னிழுத்துக்கொள்ள, அந்த ஐஸ் பாக்ஸை திறந்து பார்த்தான் அவளை முறைத்தவாறே.

உள்ளே அவர்கள் உபயோகப்படுத்தும் கொடிய விஷம் உறங்கிக் கொண்டிருந்தது.

மீண்டும் அதனை மூடி வைத்தவனிடம் இருந்து அதனைப் பிடுங்க முயல, அவன் இலாவகமாக மறைத்துக்கொண்டான்.

“யுக்தா!” அவள் சீறலாக அழைக்க,

“கொல்லனும் அவ்ளோ தான. நான் பண்றேன் போதுமா?” என்றான் சற்றே தணிந்து.

“தேவையில்ல”

“அடி வாங்குவ ஏஞ்சல். நாலு பேர் செத்தும் இன்னும் இதுக்கான மூலகாரணம் யாருன்னு கண்டுபிடிக்க முடியல. இவனுங்க ரெண்டு பேர் தான் நமக்குத் துருப்புச் சீட்டு”

“நீ எவ்ளோ கேட்டாலும் சொல்ல மாட்டானுங்க யுக்தா. எல்லாம் பெரிய கை. நம்ம இதைத் தோண்டி விசாரிக்கிறோம்னு தெரிஞ்சாலே, ஒட்டு மொத்தமா கொன்னுடுவானுங்க”

“ஆல்ரெடி டவுட் வந்துருக்கும்டி. இப்போ இந்த ரிஸ்க் எடுக்குறது தான் நமக்கு ரிஸ்க்கா மாறிடும். லீகலா போகலாம் ஏஞ்சல் ப்ளீஸ்டி” முடிந்த அளவு மென்மையைக் கையாண்டான்.

அவனைச் சிவந்த விழிகளுடன் பார்த்தவள், “லீகல்? லீகலா போய் அவனுங்களை ஜெயிலுக்கு அனுப்பிட்டு ஜெயில்ல நீங்க அவங்களுக்கு சிக்கன் பிரியாணியும் முட்டையும் குடுத்து இன்னும் கொஞ்சம் உடம்ப வளர்த்து விட்டு அவனுங்க பெயில்ல வெளில வந்து வேற பொண்ண ரேப் பண்ணுவானுங்க. இதான நடக்கும்.

போலீஸ் டிபார்ட்மென்ட்ல பெரிய சைஸ் ஓட்டை. சரின்னு அங்க முடியாத கேஸெல்லாம் உங்க டிபார்ட்மென்ட்க்கு வருது. அங்க மட்டும் என்ன… அதே அளவு ஓட்டை தான இருக்கு. தப்பு செஞ்சவனோட முகத்தை மூடிட்டு தான விசாரணைக்கே கூட்டிட்டுப் போவீங்க. இதே பாதிக்கப்பட்ட பொண்ணுன்னா மூஞ்சியை பிளாஷ் நியூஸ்ல பெருசா காட்டுவீங்க. செத்துப் போன நாலு பேரும் பிசினஸ்மேன்ஸ், பொலிடிஷன்ஸோட பசங்க. அவங்க செத்துப் போனதுக்கே உனக்கு தான் ஏகப்பட்ட ப்ரெஷர். இப்ப இவனும் செத்துட்டா, ப்ரெஷர் அதிகமாகிடும் அதுக்கு தான இப்ப நீ தடுக்குற” என்றாள் மூச்சிரைக்க.

அவளை நிதானமாக ஏறிட்டவன், “ஏன்டி கோடிக்கணக்குல சொத்து வச்சுருக்க, பொலிடீஷியன்ல இருந்து போலீஸ் வரை இன்ப்ளூயன்ஸ் இருக்கு. உன்னாலேயே லீகலா போக முடியலைன்னா அப்போ எந்த வசதியும் இல்லாம கம்பளைண்ட் கூட பண்ண முடியாத பொண்ணுங்க எப்படிடி லீகலா போவாங்க. எல்லாரும் சட்டத்தைக் கைல எடுத்துட்டு அவங்களே தண்டனை குடுத்துக்கிட்டா நாடு நாசமா போய்டும்.”

அதற்கு அவள் பதில் பேச வரும் முன் கை நீட்டித் தடுத்தவன், “பாதிக்கப்பட்ட பொண்ணுக்கு தண்டிக்க எல்லா உரிமையும் இருக்கு தான். ஆனா இதுவே பேக் ஃபயர் ஆகி, தப்பு பண்ணாதவங்களையும் அபெக்ட் பண்ணும் யுகா. சட்டத்துல ஓட்டையை உருவாக்குற பிசினஸ் டைகூன் பேமிலில இருக்குற உன்னாலேயே சட்ட ரீதியா எதுவும் பண்ண முடியலைன்னு சொன்னா எப்படிடி.

ஏன்னா விஷயம் சென்சிடிவ். வெளில தெரிஞ்சா ஷேர்ஸ் குறையும், பார்ட்னர்ஸ்க்கு பதில் சொல்லணும்னு அந்த சிவகாமி தெளிவா எல்லாத்தையும் குழி தோண்டி மறைச்சுட்டா. அதோட விளைவு, நீங்க நாலு பேரும் கொலை பண்றேன்னு இறங்கிட்டீங்க.
ஆறு பேர்ல நாலு பேர் செத்தாச்சு. இன்னும் இதுக்கான ஆணி வேர் என்னன்னு கண்டுபிடிக்கல. உனக்கும் அம்மாவுக்கும் நடந்த சம்பவம், அபர்ணா டெத், இப்ப நடக்குற பொண்ணுங்க டெத் எல்லாமே கனெக்ட் ஆகுதா இல்ல வேற வேறயா, இல்ல என் கணிப்பு படி சீரியல் கில்லர் அடுத்து உன்னை குறி வைப்பானான்னு எல்லா பக்கமும் யோசிச்சு குழம்பி போயிருக்கேன்.

அஞ்சு வருஷம் வெய்ட் பண்ணிட்டீல… இன்னும் எனக்காக கொஞ்சம் வெய்ட் பண்ணு யுகா. சிவகாமி மட்டும் அன்னைக்கு நடந்ததை வெளில சொல்லிருந்தா அங்க இருந்து ஆதாரம்னு ஏதோ ஒன்னை கலெக்ட் பண்ணிருக்கலாம். இடியட் லேடி” என எரிச்சலுடன் முடித்தான்.

அவன் சொல்லும் நியாயம் சரிதானென்றாலும் அவளால் தான் அமைதியாக இருக்க இயலவில்லை. அவன் தான் என்று ஊர்ஜீதமாகி விட்டால் நிச்சயம் கொன்றே விடுவாள்.

“சரி நீ சொல்ற மாதிரி உதித்த விசாரிக்கிறோம்னே வச்சுக்கலாம். அவனும் விஷயத்தை சொல்லாம சுத்தல்ல விட்டு, பெருசா மாட்டிக்கிட்டா மீதி இருக்குற ஒருத்தனையும் கண்டுபிடிக்க முடியாது யுக்தா” என்றவள் இப்போது அவனைக் காணாமல் விழிகளைத் தாழ்த்தினாள்.

“அப்டி எல்லாம் ஒருத்தனையும் விட மாட்டேன். என்னை நம்பு ஏஞ்சல்…” என ஒரு கையால் அவளது கையைப் பற்றி அழுத்தம் கொடுக்க, வெடுக்கென கையை இழுத்துக்கொண்டவள், “நீ மட்டும் ரெண்டு பேரை கொலை பண்ணுன?” என்றாள் முறைப்பாக.

“நான் பண்ணலாம்!” எனப் புருவம் உயர்த்திக் கூறியதில், “ஊருக்கு தான் உபதேசம்” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

அதனைக் காதில் வாங்கினாலும் கண்டுகொள்ளாதவனாக, “உதித் பத்தி விசாரிக்கும்போது அவன் எல்லா சனிக்கிழமை நைட்டும் வள்ளுவர் கோட்டம்ல இருக்குற பப்க்கு வர்றதா தகவல் வந்துச்சு. அங்க வச்சே அவனை லாக் பண்ணிடலாம்” எனத் தீவிரமாக உரைத்ததில், “சனிக்கிழமைக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு” என சிடுசிடுத்தவளை இழுத்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

அவனைத் தள்ளி விட்டவள் சிவந்த கன்னமதை அழுந்தித் துடைத்தபடி “தேவிகாவோட டெத் என்னாச்சு? எதுவும் க்ளூ கிடைச்சுதா?” எனக் கேட்டாள்.

“ப்ச், இல்ல. சடன் ஹார்ட் அட்டாக் வந்து தான் இறந்துருக்கா. பைனல் ரிப்போர்ட் அப்படி தான் இருக்கும்”

“ஓ! எவிடன்ஸ் இல்லாம இதைக் கொலைன்னு எப்படி சொல்றது?”

“எவிடன்ஸ்காக வெய்ட் பண்ணிட்டே இருந்தா. கொலையோட எண்ணிக்கை அதிகரிச்சுட்டே போகும். அந்த கில்லரையே பிடிக்கணும்.”

“ம்ம்… யுக்தா. டாக்டர் சுதர்மனை அகைன் இதுல இன்வால்வ் பண்ணலாமே” என்றதும் அவளை முறைத்தான்.

“எதுக்கு அவருக்கு மறுபடியும் காசு குடுத்து நீ விலைக்கு வாங்கவா? உனக்கு ஹெல்ப் பண்றேன்ற பேர்ல, உண்மையாவே நடந்த சீரியல் கில்லர் கொலைல எவிடன்ஸ் இல்லாம பண்ணிருக்காரு” என்றான் கோபமாக.

“அவர் தான் பாய்ஸ வேற ஆளும் பொண்ணுங்கள வேற ஆளும் கொன்னதா க்ளூ குடுத்தாரே” உள்ளே சென்ற குரலில் அவள் கேட்க, கடுமையாய் பார்த்தான்.

இங்கு நாச்சியப்பனின் முறைப்பைக் கண்டு நெளிந்தபடி அமர்ந்திருந்தனர் அவரது தங்கையின் விழுதுகள். குறிஞ்சியோ, “கேட்டதுக்கு பதில் சொல்லுங்க சார். உங்கப் பொண்ணு காதலிச்சது பிடிக்காம நீங்களே அவளைக் கொலை பண்ணிட்டதா நியூஸ் வந்துச்சே. அது உண்மையா?” என ஆழம் பார்க்க நாச்சியப்பனின் கோப மூச்சுகள் வேகமெடுத்தது.

மோகம் வலுக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
26
+1
134
+1
3
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment