அத்தியாயம் 58
இங்கு அருணோ, “சார் டெல்லி…” என மீண்டும் ஆரம்பிக்க, “அங்க நான் பேசிக்கிறேன். நீ நான் சொல்றதை செய்!” என்று கடுமையுடன் கூற, “ஓகே சார்” என்று விறைப்பாக நின்று விட்டு நகர எத்தனிக்க, அவனை மீண்டும் யுக்தாவின் குரல் நிறுத்தியது.
“அண்ட் அருண், அபர்ணா கடைசியா பார்ட்டி பண்ணுன ஹால்ல, ஃபுட் ஏஜ் எதுவும் கிடைக்குதா பாரு. எனக்கு அதுல ஒரு சின்ன டவுட். காரை அவளே எடுத்தாளா இல்ல வேற யாரும் எடுத்துருப்பாங்களான்னு…” என்றதும் அத்தனை நேரமும் ‘இதென்ன நம்ம சர்ச் பண்ணாத மெதடா இருக்கு’ என்று யோசித்தபடி நின்றிருந்த விஸ்வயுகா இடைமறித்தாள்.
“அவள் தான் ஓட்டுனா யுக்தா. எனக்கு நல்லா தெரியும்”
“ஆர் யூ சியூர்?”
“எஸ் சென்ட் பெர்சன்ட்!”
அவன் அவளை பார்த்தபடி அவனது அலைபேசியை எடுத்து அதில் சில புகைப்படங்களை நீட்டினான்.
அதில் இரத்தக்கறையுடன் அபர்ணா இறந்து கிடந்த புகைப்படம் இருக்க, கண்ணை மூடி விலகியவள், இலேசாக எழுந்த பயத்துடன் “இதை எதுக்கு காட்டுற?” என்றாள்.
சட்டென அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவன், “அவள் தான் கார எடுத்துருந்தான்னா, அவள் ட்ரைவர் சீட்ல தான உட்கார்ந்துருக்கணும். எப்படி பக்கத்து சீட்ல விழுந்துருக்க முடியும். அதைக் காட்ட தான் போட்டோ காட்டினேன். ஆர் யூ ஓகே ஏஞ்சல்?” எனக் கேட்டுக்கொண்டான்.
அருணுக்கு கண்ணைக் காட்டியதும், அவன் நமுட்டு நகையுடன் அங்கிருந்து நகன்று விட, கண்ணை மூடித் தன்னை நிதானித்தவள், “மே பி கார் கிராஷ் ஆனதுல அவள் இந்தப் பக்கம் வந்துருக்கலாம்ல யுக்தா” நிமிர்ந்து அவன் முகம் பார்க்க எத்தனிக்க, அவனும் அவளுக்கு நேராய் முகம் காட்டி இருந்ததில் அவனது மீசை மெல்லமாக உரசிச் சென்றது.
சடுதியில் சிலிர்த்த தேகத்தை அடக்கிக்கொண்டு அவள் நகர, அச்சிவப்பைக் கண்டுகொண்டவனும் அவளை விலக விட்டான். உதட்டுக்குள் சிறு ரசனைப் புன்னகை.
அவள் அவனைப் பாராமல் மறுபுறம் திரும்பிக் கொள்ள, “நீ சொல்றதும் சரி தான். ஆனா அப்படி கார் கிராஷ் ஆனதுல தாவி ட்ரைவர் சீட்ல இருந்து பக்கத்து சீட்டுக்கு வந்துருந்தா சீட் பெல்ட் எப்படி போட்டுருக்க முடியும் ஏஞ்சல்? ஒன்னு அவள் போற வழில யாரோ அவள் கார்ல ஏறி இருக்கணும். இல்லன்னா, அவளுக்கு முன்னாடியே அவள் கார்ல யாரோ இருந்துருக்கணும்” என்றதில் அவள் அதிர்ந்து போனாள்.
—
தரணியின் சித்தி அமிர்தா கொடுத்த நீரைப் பருகிய மைத்ரேயனுக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.
குறிஞ்சி அவன் தோளை இடித்து “ஏதாவது பேசு. என்னமோ உனக்குப் பொண்ணு பார்க்க கூட்டிட்டு வந்த மாதிரி டம்ப்ளருக்குள்ள தலையை விட்டுட்டு இருக்க…” எனப் பல்லைக் கடித்தாள்.
ஷைலேந்தரியோ சன்ன சிரிப்புடன், “சிபிஐ மேம்… பொண்ணு பார்க்க வரலாம் இவன் ஒர்த் இல்ல. அப்படியே பார்த்து பொண்ணு பிடிச்சிருந்தா கூட பேக் கிரவுண்ட்ல விக்ரமன் பட பிஜிஎம் டோன போட்டு மனசுக்குள்ளேயே சொல்லிப்பான். அந்தப் பொண்ணுக்கு வயசு ஆனதுக்கு அப்பறம் தான், வாயைத் திறப்பான்” என்றதும் மைத்ரேயன் தீயாக முறைத்து வைக்க,
“ஐய்யய்ய இவனுக்கு இந்த வியாதி வேற இருக்கா. டேய் யப்பா ஆல்ரெடி அந்த அம்மா வயசான கேஸ் தான். பார்த்து பண்ணு” என்ற குறிஞ்சியின் நச்சரிப்பில், மனையாளை மீண்டுமொரு முறை முறைத்து விட்டு பேச்சைத் தொடர்ந்தான்.
“அம்மா… தரணி எப்படி?” எனத் தயங்கி நிறுத்த, “நீங்க அவனோட கூட படிச்சவங்களாப்பா” என அமிர்தா கேட்டார்.
நந்தேஷ், “இல்லமா தரணி எங்களுக்கு சீனியர்” எனப் பதில் அளித்ததும் அவரிடம் பெருமூச்சு எழுந்தது.
“தரணி என் அக்கா ருக்குவோட பையன். நல்லா படிச்சு, நல்ல நிலைமைக்கு வந்து மினிஸ்டர் பொண்ணை பேசி வச்சுருந்தோம். அந்தப் பொண்ணு ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்து போனதும், கொஞ்ச நாளா பித்துப் பிடிச்சவன் மாதிரியே இருந்தான். அதுக்கு அப்பறம் ஒரு நாள்” என வாயைப் பொத்தி அழுகையை அடக்கியவர்,
“காலை சாப்பாடுக்கு கூப்பிட அவன் ரூமுக்குப் போனாங்க என் அக்கா… படுபாவி கயித்துல தொங்கிருக்கான். அதைப் பார்த்து அப்பவே மயங்கி விழுந்த என் அக்கா எழுந்திருக்கவே இல்லை. அந்த நேரத்துல நான் எங்க ஊரான திருவண்ணாமலைல இருந்தேன். துடிச்சுப் போய் வந்தா தரணியோட அப்பாவும் நெஞ்சைப் பிடிச்சுட்டு விழுந்துட்டாரு. பக்கவாதம் வேற. இப்ப எங்க ஊருக்குப் போகாம, இங்க இருந்து மாமாவைக் கவனிச்சுட்டு வரேன்” என்றவர் அவ்வப்பொழுது வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
ஷைலேந்தரி “தெரியும்மா. அந்த மினிஸ்டர் எங்களோட மாமா தான். அபர்ணா எங்க மாமா பொண்ணு. ஆனா இவன் சீனியர் இறந்து போனதை கொஞ்ச நாள் முன்னாடி தான் எங்ககிட்ட சொன்னான். நாங்களும் அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால கொலாப்ஸ் ஆகி தான் இருந்தோம்” என்றதும் அமிர்தா ஒரு கணம் விழித்து விட்டு பின் “ஓ!” என்றார்.
அவரது தடுமாற்றத்தைக் கண்டுகொள்ளாத அளவிற்கு நால்வரும் முட்டாள்கள் இல்லையே.
நந்தேஷ், “சரிம்மா இப்ப தரணியோட அப்பா இங்க தான் இருக்காரா. அவங்களை நாங்க பார்க்கணுமே” எனக் கேட்க, “அதான் சொன்னேனேப்பா. அவருக்கு பக்கவாதம்னு” எனும் போதே “அமிர்தா” என்றழைக்கும் பெரியவரின் குரல் கேட்டது.
“இதோ வரேன் மாமா. நீங்க இருங்க நான் பாத்துட்டு வரேன்” என்று எழுந்திட, குறிஞ்சி “பக்கவாதம்னு சொன்னீங்க. குரல் நல்லா தெளிவா இருக்கே…” எனக் கேட்டதும் அவர் நெற்றியில் வியர்வைத் துளிகள் வழிந்தது.
“அது… அது… இப்ப தான் ஸ்பீச் தெரபி எல்லாம் குடுத்து கொஞ்சம் பரவாயில்ல. நடக்க முடியாது.”
“பரவாயில்லமா நாங்க உள்ள வந்து பாக்குறோம்” என ஷைலேந்தரி எழுந்து விட, “இதோ வரேன்” என்று அவசரமாக உள்ளே சென்றார்.
“என்ன அழகி மேடம்… டெத் விசாரிக்க வந்தா இவங்களை நம்ம விசாரிக்க வேண்டியது வரும் போலயே. இவங்ககிட்ட ஏதோ சரி இல்லை” என்று நந்தேஷ் சந்தேகமாகக் கூற, “சேம் பீலிங்” என்றான் மைத்ரேயன்.
“கைஸ், இப்போதைக்கு என்கொய்ரி மாதிரி போக வேணாம். தரணியோட அப்பாவையும் பார்த்துட்டு முடிவு எடுக்கலாம்” எனும்போதே அமிர்தா
“உள்ள வாங்கப்பா. அவரை தொந்தரவு பண்ண வேணாம். ஏற்கனவே அக்கா, தரணியைப் பத்திப் பேசுனாலே அவருக்கு முடியாம போயிடுது” என்றதும், “நாங்க தொந்தரவே பண்ணலைங்க ஆண்ட்டி. சும்மா பார்த்துட்டு வரோமே” என்ற குறிஞ்சியிடம் மறுத்துப் பேச இயலாது உள்ளே அழைத்துச் சென்றார்.
அங்கு மெத்தையில் படுத்திருந்தார் தரணியின் தந்தை பாலன். வாய் ஒரு பக்கம் கோணி இருக்க, கை கால்கள் எல்லாம் ஒவ்வொரு பக்கம் இழுத்துக் கொண்டிருந்தது.
“வாங்கப்பா” வெகு கடினப்பட்டு அவர் பேச, நந்தேஷ் “வணக்கம் அங்கிள். நாங்க தரணியோட ப்ரெண்ட்ஸ். நீங்க எங்களைப் பார்த்து இருப்பீங்களே. எங்க கசின் அபர்ணாவைத் தான் அவன் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்துச்சு…” என்றதும், தலையாட்டியவர் “தெரியும்” என்பது போல வாயசைக்க, கண்கள் மழை நீரைப் பொழிந்தது.
“என் பையன்… என் பையன்” எனப் பேச இயலாமல் திணறியவரை, அமிர்தா அமைதி படுத்தினார்.
“வேணாம் மாமா உங்களை வருத்திக்காதீங்க. வாங்கப்பா வெளில போலாம்” என்றதும் குறிஞ்சி “அங்கிள்… இந்த வாதத்துக்கு ரெடிமேட் ரெமெடி ஒன்னு இருக்கு. உடனே சரி ஆகிடும்” என்றதில், “எல்லாம் ட்ரை பண்ணிட்டோம்மா. அவருக்கு சரி ஆகல” என்றார் அமிர்தா.
“இப்ப பாருங்க நான் சரி பண்றேன்” என்று அவர் காலில் கிச்சு கிச்சு மூட்ட, அத்தனை நேரமும் ஒரு கையை கோணலாய் வைத்து அதை உபயோகப்படுத்தவே இயலாதவாறு நெஞ்சை ஒட்டி வைத்திருந்தவர், அதே கையாலேயே காலை சொறிய, “அட அரைவேக்காடே” என அவரைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டனர் இளையவர்கள்.
பாலன் திருதிருவென விழிக்க அமிர்தா அதிர்ந்து விட்டார்.
மைத்ரேயன், “பாருங்களேன் குறிஞ்சி. நீங்க பண்ணுன ஒரே ட்ரீட்மெண்ட்ல அங்கிளுக்கு ஒரு கை சரியாகிடுச்சு…” எனப் போலி வியப்பைக் காட்ட,
நந்தேஷ் “மச்சி மீதி பார்ட்ஸையும் நம்ம சரி பண்ணிடலாம்டா… நம்ம ட்ரீட்மெண்ட் குடுப்போமா” எனக் கையில் இருந்த ப்ரெஸ்லெட்டை மேலே ஏற்றியபடி கூற, அமிர்தா பொசுக்கென அவர்கள் காலில் விழுந்து விட்டார்.
ஷைலேந்தரி படக்கென பின்னால் நகர்ந்து, “ஆண்ட்டி நாங்க தான் உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கணும். நீ என்ன எங்ககிட்ட வாங்கிட்டு இருக்கீங்க…” எனக் கலாய்க்க, குறிஞ்சி அவரைத் தூக்கி விட்டு, “என்ன இதெல்லாம்?” என்றாள் சீறலாக.
பாலன் தான், “என் பையனை உங்க வீட்டுப் பொண்ணு நினைப்புலயே கொன்னுட்டு இப்ப எதுக்குடா வந்தீங்க. அமிர்தா அவங்களை வெளில அனுப்பு” என்றவர் இப்போது நன்றாகவே பேசினார்.
ஷைலேந்தரியோ, “அங்கிளோய் கொஞ்சம் பார்த்து பதமா பேசுங்க. இந்த அம்மா பெரிய சிபிபி ச்சி… சிபிசிஐடி ஆபிசரு. ம்ம்க்கும்” எனப் பாவம் போல தலையாட்டிட, இரு பெரியவர்களின் உடலிலும் அதிர்வு ஏற்பட்டது.
“அடச்சை… இப்ப எதுக்கு சாமி வந்த மாதிரி ஜர்க் குடுக்குறீங்க. எதுக்கு இந்த டிராமா?” எனக் குறிஞ்சி முறைக்க, அமிர்தா எச்சிலை விழுங்கினார்.
“இங்க பாருங்க. ஒழுங்கா உண்மையை சொல்லல. தரணி டெத்துக்கு நீங்க தான் காரணம்னு உள்ள தள்ளிடுவேன்…” என்று மிரட்டியதும், “ஐயோ வேணாம்மா” எனக் கையைப் பிசைந்தவர் இரு ஆடவர்களையும் தயக்கத்துடன் பார்த்தார்.
—-
மருத்துவமனையிலேயே மேலும் சில மணி நேரங்கள் கரைந்தது. தேவிகாவின் நிலையைத் தெரிந்து கொள்ள யுக்தா அங்கேயே நாற்காலியில் வீற்றிருந்தவன், தன்னருகில் அமர்ந்து போனை உபயோகித்துக் கொண்டிருந்த விஸ்வயுகாவைப் பார்த்தான்.
“நீ கிளம்பு யுகா” என்றவனின் குரல் கேட்டு திரும்பியவள், “இல்ல இருக்கேன்” என்றபோதே மருத்துவர் அவசரமாக அங்கு வந்தார்.
“சாரி சார். ஷீ இஸ் நோ மோர்!” என்றதில் ஷிட் எனத் தரையில் காலை உதைத்தவனுக்கு, கடும் சீற்றம்.
“சோ அவளுக்கு என்ன தான் ஆச்சுன்னு கண்டுபிடிக்கல?” என மருத்துவரை தீயாக முறைக்க அவருக்கு செய்வதறியாத நிலை.
“பாடியை பாரென்சிக்கு அனுப்பனும். ப்ரொசீஜர சீக்கிரம் முடிங்க” என்றபடி போனை எடுத்து முரளிக்கு அழைத்து விவரம் கூறி விட்டு, “நீ கிளம்பு. நான் ஆபிஸ் போகணும்” என்று கடுமையாக உத்தரவிட்டான் அவனையே மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவளிடம்.
“என்னடி? என் வேலைக்குள்ள வந்து எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க. ஐ செட் அவுட்!” என்றவனிடம் கண்டிப்பு அளவுக்கு அதிகமாக தெறிக்க, அவளுக்கோ திடீரென அவன் கத்தியதில் மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது.
அத்தியாயம் 59
அப்படியே நின்றவளை ஒருமுறை இறுக அணைத்து விடுவித்தவன், “செம்ம டென்ஷனா இருக்கேன் ஏஞ்சல். எதுக்கு இப்படி பார்த்து வைக்கிற? கொஞ்ச நேரத்துல டெட் பாடியை இந்தப்பக்கம் தான் தூக்கிட்டு வருவாங்க. நீ ரெஸ்ட்லெஸ் ஆகிடுவ. கிளம்புடி!” என்றவன் இம்முறை கிட்டத்தட்ட கெஞ்சுதலாக கொஞ்சினான்.
“இப்… இப்ப தான் ‘அந்தப் பொண்ணு’ன்னு சொன்ன, செத்துட்டான்னு சொன்னதும் பாடின்னு சொல்ற. அவ்ளோ தான் இந்த உலகத்துல ஒரு உயிருக்கு மதிப்புல…” என சம்பந்தமே இன்றி பேசியவளை ஒரு நொடி புரியாமல் பார்த்தவன், பின் மெலிதாய் புன்னகைத்தான்.
“நீ விட்டா செத்துப்போற எல்லார் பாடி முன்னாடியும் நின்னு என்னை ஒரு மணி நேரத்துக்கு அழுக சொன்னாலும் சொல்லுவடி. இது என் வேலை ஏஞ்சல். ஒவ்வொருத்தர் சாகுறதுக்கும் பீல் பண்ணுனா, அவங்களை கொலை செஞ்சதை எப்படி கண்டுபிடிக்க, அடுத்து கொலையை எப்படி தடுக்க? சியூரா சொல்றேன். இனி ஒரு கொலை அவனால செய்யவே முடியாது…” என்றவனின் வார்த்தைகளில் அத்தனை அழுத்தம். விழிகளில் அத்தனை தீவிரம்.
அவள் பார்த்தவரை அவன் முகத்தில் சில்மிஷங்களும் அசட்டைத்தனமுமே நிரம்பி வழியும். அது எல்லாம் அவளுக்காக அவன் போட்டுக்கொண்ட முகமூடி எனப் புரிந்தது. இதுவே அவனது உண்மைச் சாயல் என்று புரிய, அதனை ஏற்றுக்கொள்ள மனமற்று என்னன்னவோ உளறினாள்.
இடைப்பட்ட நாட்களில் அவனது குறும்புத்தனத்தூடேயான வில்லத்தனத்தை ரசித்ததுவே அவள் மனம்.
“அது சரி தான். ஆனா ஒரு செகண்ட் கூடவா பீலிங் இருக்காது. அப்ப கூட ஆதாரம் தான் தேடுற?” வாய்க்குள் முணுமுணுத்தது அவனுக்கும் கேட்டது.
“ஹே நீ என்கிட்ட எமோஷன் எதிர்பார்க்குறியா? உண்மையா அந்தப் பொண்ணு இறந்தது எனக்கு வருத்தம் தான். அதுக்கு ஈடா என் உயிரைக்குடுத்தாவது இன்னும் ஒரு பொண்ணை சாக விடமாட்டேன். அவ்ளோ தான்டி என்னால பண்ண முடியும். வேற என்ன எதிர்பார்க்குற?” எனப் புரியாது வினவியவனை கண்ணெடுக்காமல் பார்த்தாள்.
இவன் தானே தன்னைப் புகைப்படம் எடுத்ததற்காகப் பொங்கி சக மாணவனிடம் சண்டையிட்டது. இவனே தானே தன்னை ஒருவன் தவறாய் பார்க்கும் ஒரு பார்வையை ஏற்க இயலாமல் சுட்டது. இவனே தானே, தனக்கு நேர்ந்த அவலம் அறிந்து உடைந்திருப்பது.
தன்னிடம் மட்டுமே அவனது உணர்வுகள் கட்டுப்பாடற்று காட்டாற்று வெள்ளமாகச் சீறுகிறது எனப் புரிந்த கணம் அவளுள் கனமாய் இறங்கியது.
சில நேசங்கள் நேராமலே இருந்திருக்கலாம். சில உறவுகள் சேராமலே இருந்திருக்கலாம்! இதைப் புரிய வைக்கும் காலமும் வராமலே இருந்திருக்கலாம்! என்னவோ அவள் அவளாக இல்லை.
அவனிடம் இருந்து முயன்ற மட்டும் விலக நினைக்கும் அவளே, அவனை விட்டு துளியும் நகராமல், நகர இயலாமல் திண்டாடுகிறாள்.
குற்றவாளியைக் கண்டறிவதற்காக எனத் தனக்கு தானே ஒரு காரணம் கூறி அதனை நம்ப வைத்துக்கொள்கிறாள்.
நொடிகள் நகர, அவளது மனவுணர்வுகளை முகத்தில் தேடி அலைந்த யுக்தா, அப்போது தான் அங்கு வந்த அருணை அழைத்தான்.
“அருண்… பாடி…” எனக் கூற வந்துவிட்டு “செத்துப் போன பொண்ணை போஸ்ட் மார்ட்டம்க்கு அனுப்பு. முரளிகிட்ட விஷயம் சொல்லிருக்கேன். என்ன செய்வீங்களோ தெரியாது. கூடிய சீக்கிரம் அவள் செத்ததுக்கான காரணம் எனக்குத் தெரியணும். நான் கேட்ட தகவல் எல்லாம் என்ன ஆச்சு?” என்றான் தீவிரமாக.
“சார் இன்வெஸ்டிகேஷன் நடந்துக்கிட்டே இருக்கு. இன்னும் ரெண்டு மணி நேரத்துல எல்லா தகவலையும் கொடுக்குறேன் சார்” என்றதும்,
“ஓகே அண்ட் தென், இந்தியா முழுக்க மேட்ரிமோனி மூலமா அடுத்த ஒரு வாரம் நடக்கப் போற அத்தனை மேரேஜ் லிஸ்டும் எனக்கு வேணும்” என்றான்.
“ஆனா சார் கொலையெல்லாம் சென்னைல தான நடக்குது. ஏன் இந்தியா முழுக்க?” அருண் வினவியதும் காட்டத்துடன் எரித்தவன், “ஜஸ்ட் ஃபாலோ மை இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்” என்றான் மிடுக்காக.
“சார்!” என ஆமோதிப்பது போல ஒரு முறை அன்டென்ஷனில் நின்ற அருணைக் கண்டுகொள்ளாது, தன் மீதிருந்த பார்வையை எடுக்காமல் நின்றிருந்தவளை இழுத்துக் கொண்டு சென்றான் யுக்தா.
—-
இங்கு அமிர்தா படபடப்புடன் பேசினார்.
“அது… எனக்கு மாமாவை ரொம்ப பிடிக்கும். அக்காவோட கல்யாணத்துக்கு முன்னாடியே அவரை விரும்புனேன். ஆனா என் வீட்டுப் பெரியவங்க இவருக்கு என் அக்கா ருக்குவைக் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. அதுக்கு அப்பறம், ருக்கு அக்காவோட இவருக்கு வாழப் பிடிக்கலன்னு தெரிஞ்சு என் மனச சொன்னேன். இவர் நினைப்புல நானும் கல்யாணம் பண்ணிக்கல. அப்பறம், அக்காவுக்குத் தெரியாம நாங்க வாழ ஆரம்பிச்சோம்.
தரணி பிறந்து வளர ஆரம்பிக்கும் போது அவனை ஹாஸ்டல்ல சேர்த்து படிக்க வச்சுட்டு, வியாபார விஷயமா வெளியூர் போறேன்னு மாமா என்னைப் பார்க்க வந்துடுவாரு. மாமா துணிக்கடை பிசினஸ் தான் பண்ணிட்டு இருந்தாரு. திருப்பூர்ல பேக்டரியும் வச்சு இருந்தாரு. நான் ஒத்த மரமா நிக்கிறேன்னு என் அக்கா தான், அங்க மேனேஜிங் பொறுப்பை எனக்கு குடுக்க சொன்னா. எனக்கும் இவருக்கும் அதுவே வசதியா போச்சு. ரெண்டு பேரும் ஆத்மார்தமா காதலிச்சோம். ஆனா தரணியோட கல்யாண முடிவாகறப்ப என் ருக்கு அக்கா கண்டுபிடிச்சுட்டா…” எனக் கண்ணைத் துடைத்ததும்,
“அது ருக்கு அக்கா இல்ல மக்கு அக்கா…” என்று தனது நெற்றியில் தானே குத்திக் கொண்டாள் ஷைலேந்தரி.
அமிர்தாவோ மேலும் தொடர்ந்து, “என்கூட சண்டை போட்டு நான் மேனேஜ் பண்ணிட்டு இருந்த பேக்டரியையும் பிடுங்கிட்டு என்னை ஊருக்கு அனுப்பிட்டா. இவ்ளோ வருஷம் அவரோட வாழ்ந்ததே போதும்னு நினைச்சு நானும் மனச தேத்திக்கிட்டேன். ஆனா தரணியோட இறப்பு எங்களை மொத்தமா சிதைச்சுடுச்சு. என் மாமாவோட புள்ளையை நானும் என் புள்ளையா தான் நினைச்சேன். என் புள்ளையும் அக்காவும் இறந்ததும், இவரை தனியா விட்டுப் போக மனசு வரல” என கூறி முடிக்கையில் மைத்ரேயன்,
“ம்ம்க்கும் அதான் இடைஞ்சல் எல்லாம் போய் சேர்ந்தாச்சே. இனி ஃப்ரீ பர்ட்டா கள்ளத்தனம் பண்ணலாம்” என்றான் குத்தலாக.
“தப்பா பேசாத” என பாலன் பொங்கி, “அவள் தான் என்னை இப்ப வரை பார்த்துட்டு இருக்கா…” என்றதும் குறிஞ்சி, “ம்ம்க்கும் இவ்ளோ வருசமா உங்களை அவங்க மட்டும் தானயா பார்த்துட்டு இருந்துருக்காங்க” என விஷமமாய் கூற, நந்தேஷ் சிரிப்பை அடக்கியபடி நின்றான்.
“சரி இந்தக் கதைக்கும் நான் கேட்ட கேள்விக்கு என்ன சம்பந்தங்க ஐயா!” என்று கையைக் கட்டி குறிஞ்சி கேட்க, அமிர்தா எச்சிலை விழுங்கி விட்டு,
“நான் இங்க மாமா கூட இருக்குறதுக்கு என் சொந்தபந்தமெல்லாம் ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சாங்க. அதனால மாமா வாதம் வந்த மாதிரி சொந்தக்காரங்க வந்தா மட்டும் நடிச்சுப்பாரு” எனத் தயங்கி நிறுத்த,
“போதும்மா போதும். உங்க மெகா சீரியலை இதோட நிறுத்துங்க. டேய் வாங்கடா…” என்று எரிச்சலுடன் அங்கிருந்து நகர்ந்த குறிஞ்சியின் பின்னே, “ஒன் ப்ளஸ் ஒன் த்ரீன்னு வாழ்ந்துருக்கான்யா மனுஷன்” என்ற ரீதியில் மைத்ரேயன் புலம்பியபடி வெளியில் வந்தான்.
குறிஞ்சி உச்சி மண்டை சூடாக வெளியில் வந்து பார்க்க, அவர்களை அழைக்க கார் வந்திருந்தது. வீட்டிலிருந்து காரை வரச் சொல்லி இருந்தாள் விஸ்வயுகா.
மைத்ரேயன் நந்தேஷ் ஷைலேந்தரி மூவரும் முகத்தை சாதாரணமாக வைத்திருக்க எண்ணியும் முடியாது போக, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து வெடித்துச் சிரித்தனர்.
காரில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தலையில் ஊற்றிக்கொண்ட குறிஞ்சி மூவரையும் முறைத்து, “இப்ப எதுக்கு கெக்க பெக்கன்னு சிரிக்கிறீங்க?” என்றதில்,
நந்தேஷ் சிரிப்புடன், “இல்லை இந்த மொக்கை கதையைக் கேட்க, நீ குடுத்த பில்டப் இருக்கே… ஹா ஹா” என வயிற்றைப் பிடித்தான்.
“அடேய்களா… ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேட்டர கள்ளக்காதல் கதையைக் கேட்க வச்சுட்டீங்களேடா” என ஆர்ப்பரிக்க, சிரிப்புச் சத்தம் இன்னுமாக தெருவை நிறைத்தது.
ஷைலேந்தரி தான், “மிஸ் சிபிஐ மேம்… முதல் இன்வெஸ்டிகேஷன்க்கே பாலனோட பலான க்ளூ கிடைச்சு இருக்கே. போகப் போக இன்னும் என்னவெல்லாம் கிடைக்குமோ. வெல்கம் டு கரிகாலன் கள்ளக்காதல் ஷோ!” எனக் கண்ணடித்ததில் இரு ஆடவர்களும் குபீரென சிரிக்க, மூவரையும் மூக்கைச் சுருக்கி முறைத்திருந்த குறிஞ்சிக்கும் சில நொடிகளில் புன்னகை பூத்தது.
—-
யுக்தா சாகித்யன் விஸ்வயுகாவுடன் சென்றது காசிமேடு கடற்கரைக்குத் தான்.
அவ்விடமே மாறி இருந்தது. சுனாமிக்குப் பிறகு இந்த இடத்திற்கு அவன் இப்போது தான் வருகிறான். பல வருடங்களுக்கு முன்பு, கடற்கரையில் இருந்து சிறிது தள்ளி இருக்கும் இடத்தில் தான் அவனது குடிசை இருந்தது. இப்போது அங்கு பாதி முடிக்கப்பட்ட நிலையில் இருந்த சிவகாமியின் 10 நட்சத்திர ஹோட்டல் பிரமாண்டத்துடன் வீற்றிருக்க, சலனமற்று அதனை ஒரு பார்வை பார்த்தவன் பின் கவனத்தை கடலில் பதித்தான்.
அஸ்வினியின் மூலம் அவனது இழப்பு அத்தனைக்கும் காரணம் தனது தாயென்று அறிந்தே இருந்தாள் விஸ்வயுகா.
“சாரி…” அவளாக கடலை வெறித்தபடி கூற, அதில் புருவம் சுருக்கி திரும்பியவன் “எதுக்கு ஏஞ்சல்?” என்றான்.
“என் அம்மாவால தான!” விழிதனை அவனிடம் நிலைக்கச் செய்தாள்.
“அதுக்கு எதுக்கு நீ சாரி சொல்ற? உன் அம்மா சிவகாமின்றதை மறந்துடு. அதான் உனக்கு நல்லது” ஒற்றைப் புருவத்தை நெறித்து தீர்க்கத்துடன் உரைத்தவனை உள்ளுக்குள் ரசித்தே தொலைத்தது மனது.
“உனக்குத் தைரியம் யுக்தா. என் அம்மாவைக் கொல்லுவேன்னு என்கிட்டயே சொல்ற!” எனக் கண்டித்தாலும் அவளால் வேறு என்ன செய்திட முடியும்.
“இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த?”
அவளது கேள்விக்கு மீண்டும் அவனது நயனங்கள் அலைகளில் பதிந்தது.
“தெரியல. இவ்ளோ வருஷத்துல இங்க வந்து இதே இடத்துல இறந்து போன என் அம்மாவுக்கும் என் சொந்தக்காரங்களுக்கும் ஒரு மெழுகுவர்த்தி கூட ஏத்தி வச்சது இல்ல. இப்ப வரணும்னு தோணுச்சு!” மெல்லிய கரகரப்பு அவன் வார்த்தைகளில்.
இதே நிலை அவன் மீது பித்தாக இருந்த போது வந்திருந்தால், அவனை நெஞ்சில் புதைத்து அழுத்தி இருப்பாள்.
இப்போதும் கூட கரங்கள் பரபரத்தனவே! இப்போதோ ஆயிரமாயிரம் இடர்கள். நேசம் அப்போதும் இப்போதும் ஒன்று தான். அதனை வெளிப்படுத்தும் பாவையின் மனம் தான் பெரும் இடைஞ்சல்.
கையைப் பிசைந்து கொண்டு அவள் நின்ற கோலத்தைக் கண்டவன், அவளது இடைதனைப் பிடித்து தன் புறம் இழுக்க, காற்றில் ஆடிய கரிய கூந்தல் அவன் முகத்தில் விழுந்தது.
அக்கூந்தலை வாசம் பிடித்தவன், “ரொம்ப உறுத்திக்கிட்டே இருக்கு. கேட்டுடுறேன். அன்னைக்கு அம்மா கூட நீ வரலைன்னு தான சொன்னாங்க. ஆனா நீ வந்துருக்க. ஏன் வந்த? என்னைப் பார்க்கவா? அம்மா என்னைப் பத்தி உங்கிட்ட சொன்னாங்களா?” வெகு நேரமாய் நெஞ்சைத் துளைத்த கேள்வியைக் கேட்டு விட்டான்.
தன்னவளின் பிடிவாதம் மறந்தவனாக அவளை ஆர்வத்துடன் நோக்க, அவளோ “நோ. உன்னைப் பார்க்க வரல. சித்தி துணைக்கு வர சொன்னாங்க வந்தேன். தட்ஸ் இட். அண்ட், உன்னைப் பத்தி ஜஸ்ட் மேலோட்டமா சொல்லிருக்காங்க. அந்த டைம்ல நான் அதை பெருசா எடுக்கல…” எனத் தோளைக் குலுக்கியவள், அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக விலகினாள்.
அவளது கண்களையே அளந்தான் அவன். வாய்மொழிகள் பொய்யாகலாம் விழிமொழிகள் எப்போதும் பொய்யுரைக்காது தானே.
அவ்வார்த்தைகளின் போலித்தன்மை அறிய பாவையின் விழிகளில் தேடி அலைந்து சோர்ந்தவனுக்கு ஆயாசமாக இருந்தது.
அத்தியாயம் 60
“நிஜ… நிஜமா என்னைப் பத்தி எதுவுமே சொன்னதில்லையாடி?”
மறுப்பாக தலையசைத்தவள் அழகாகவே நடித்துக்கொண்டாள்.
“ஓ!” இடுப்பில் இரு கைகளையும் ஊன்றி மீண்டும் அலைகளை வெறித்தவனின் முகத்தில் இன்னதென்று பிரித்தறிய இயலா காதல் வலி.
சட்டென அவள் புறம் திரும்பி நெருங்கியவன், “ஆனா நான் உன்னைப் பார்க்க தான்டி வந்தேன். தப்பு! தப்பு தான்…” எனத் தன்னைத் தானே அறைந்து கொண்டான்.
“டேய் சைக்கோ!” அவனைத் தடுத்த விஸ்வயுகா, “என்னடா செய்ற?” என அதட்டினாள்.
அவள் கன்னம் பற்றி அழுத்தியவன், “என்னால தான்டி… என்னால தான்டி எல்லாம். நான் மட்டும் ஃபோர்ஸ் பண்ணாம இருந்திருந்தா அம்மா உன்னை கூட்டிட்டு வந்துருக்க மாட்டாங்க. இட்ஸ் மை ஃபால்ட்” எனக் கத்த,
“பைத்தியம் மாதிரி பேசாத யுகி. அன்னைக்கு நடக்கலைன்னா அடுத்த நாள் நடந்துருக்கும். எப்படியோ நடக்கணும்னா நடந்துடும். நீ இல்ல நான் இல்ல யார் நினைச்சாலும் தடுக்க முடியாது” என்றாள் விழி சிவந்து.
யுக்தா மூச்சு வாங்க அவளையே பார்த்திருக்க, அவளுக்கும் உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு.
ஏற்கனவே உணர்ந்தது தான் என்றாலும், அவனிடம் கேட்டாள்.
“ஏன் என்னைப் பார்க்க வந்த” என்று!
ஒரு நொடி விறைத்து தளர்ந்தது அவனது இரும்பு தேகம்.
இறுகிய வார்த்தைகளும் இளக்கம் கண்டது. மெல்லிய சாரலாக அவன் இதழ்களில் சிறு முறுவல்.
“இதே கேள்வியை நீ கேட்டு நான் பதில் சொல்ல, எவ்ளோ ஒத்திகை பாத்துருப்பேன் தெரியுமா ஏஞ்சல்? எங்க இருந்து ஆரம்பிக்கடி. அம்மாவுக்கு மட்டுமே ஏஞ்சலா இருந்த நீ எப்போ எனக்கு ஏஞ்சலா மாறுனன்னு எனக்குத் தெரியல. காலேஜ் படிக்கும் போது, நீ ரொம்ப குட்டிப்பொண்ணு. உன்னைத் தப்பா பேசுனவனை அடிச்சுட்டேன். யூ நோ வாட் ஏஞ்சல்… நான் பொதுவாவே ரொம்ப நிதானமா தான் இருப்பேன். கோபம் வந்தாலும் சட்டுன்னு காட்டிட மாட்டேன். ஆனா உன் விஷயத்துல எப்பவும் நான் பொறுமையாவே இருந்தது இல்லை. காதல் வந்தப்பவும் சரி, கோபம் வந்தப்பவும் சரி!
எனக்காக நீ காலேஜ் மேனேஜ்மெண்ட்ல பேசி என்னை ரீஜாயின் பண்ண வச்சது கூட உனக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல. அப்பவே உள்ளுக்குள்ள ஒரே கலவரம்” என நெஞ்சை நீவிக்கொண்டவனை உணர்விழந்து பார்த்திருந்தாள்.
ஞாபகம் முழுதும் அவன் மட்டுமே என்பதை எப்படி உரைப்பாள் அவள்?
அவளது எண்ணங்களை அறியாது அவன் பேசிக்கொண்டே நின்றான்.
“நீ மேத்ஸ்ல வீக்னு அம்மா சொன்னதும், உன்னை அட்லீஸ்ட் பாஸ் மார்க்காவது வாங்க வைக்கணும்னு உனக்காகவே தான் நோட்ஸ் ரெடி பண்ணுனேன்.
நான் முதல் முதல்ல சம்பாரிக்கிற பணத்துல அம்மா, அப்பாவுக்கு அடுத்து உனக்கும் ஏதாச்சு வாங்கிக் கொடுக்கணும்னு தோணுச்சு. உன் பரத்டேக்கு நான் தான் அம்மாகிட்ட அந்த ஹார்ட் டாலர் செயினை குடுத்து விட்டேன். ஆனா அம்மாவால உங்கிட்ட சொல்ல முடியாம போச்சுன்னு சொன்னாங்க” என்றவன் இன்னும் காயம் மாறாது இருந்த கழுத்தை நீவினான்.
காயம் எரிந்தது. அதை விட மனதும் எரிந்தது. தான் கேட்டதற்கு தானே வாங்கியதாக மழுப்பிய அஸ்வினியின் நினைவில் கண்கள் பொங்கியது அவளுக்கு.
“ஏஞ்சல்! ஒரு கட்டத்துக்கு மேல என்னால என்னை மறைக்க முடியல. அம்மாவோட பர்த்டே அன்னைக்கு உன்னைப் பார்த்து பேச தான் ஊருக்கு வர நினைச்சேன். அன்னைக்கு அம்மாவும் அப்பாவும் வெளியூர் போனதுனால நான் மட்டும் உன்னைத் தனியா எப்படி பார்க்குறதுன்னு குழம்பி தள்ளிப்போட்டேன். அதுக்கு அப்பறமும் என்னை பத்தி சொல்லி உன்னைக் கூட்டிட்டு வர சொன்னேன் ஏர்போர்ட்டுக்கு. உன்னைப் பார்த்து என் காதலை சொல்லியே ஆகணும்னு… இங்க… இங்க” என அவள் கையை எடுத்து அவன் நெஞ்சில் வைத்துத் துளைத்தான்.
“இங்க அவ்ளோ வெய்ட்டுடி ஏஞ்சல். என் காதலோட கனம் எனக்குத் தாங்க முடியல. மொத்தமா உங்கிட்ட கொட்டிட்டணும்னு நினைச்சேன். நீ என்ன சொல்லுவன்னுலாம் நான் யோசிக்கலடி. உன்னை அம்மா கூட்டிட்டு வரேன்னு சொன்னதும், எதையுமே யோசிக்கல நான். என் லைஃப்ல நான் அவ்ளோ சந்தோஷமா என்னைக்குமே இருந்தது இல்ல யுகா. ஃபார் தி பர்ஸ்ட் டைம்… ஏர்போர்ட்ல பைத்தியக்காரன் மாதிரி சிரிச்சிட்டே இருந்தேன். சைக்கோ சைக்கோடி நானு. உங்கிட்ட மட்டும் உன் காதல் மட்டும் என்னை முழு சைக்கோவா மாத்திடுது. என் ஆர்வத்துக்கு எல்லாம் அணை போட்ட மாதிரி நீ வரலைன்னு சொன்னதும் ரொம்ப உடைஞ்சுட்டேன்டி. அப்படியும் மறுநாள் உன்னைப் பார்த்து பேசியே தீரணும்ன்ற முடிவோட தான் வந்தேன்… ஆனா… எல்லாமே மாறிடுச்சு ஏஞ்சல். ஒரே நாள்ல எல்லாமே… ஆனா என் காதல்! ஐ லவ் யூ ஏஞ்சல். ஐ லவ் யூ சோ மச்!” என மொத்தமாக அவளிடம் தன்னை ஒப்படைத்து ஓய்ந்தான்.
அவனது கனத்தை இறக்கி அவளது இதயத்தில் அல்லவா பாரத்தை ஏற்றி விட்டான்.
அஸ்வினியிடம் தூது அனுப்பியதற்கு பதிலாக தானே டெல்லிக்கு வந்து இவனது சட்டையைப் பிடித்து காதலைக் கூறி இருக்கலாம் என்ற தவிப்பு அவளுள் பெரும் துயரத்தை உருவாக்க, அதனை துளியும் வெளிக்காட்டாமல் முகத்தை நிச்சலனமாக வைத்துக்கொண்டாள்.
“இங்க பாரு யுக்தா. உனக்கும் எனக்கும் லவ்… இதெல்லாம் சுத்தமா செட் ஆகாது. என் எண்ணம் என் பாதை இது எல்லாமே வேற…” என சொல்லும்போதே,
“ஆமா இந்த அம்மா பெரிய தலைவா படத்துல வர்ற விஜய்… ஒரு வழிப்பாதைல போறாங்க… ஓவரா பண்ணாதடி. ஐ நீட் யூ. அப்ப லவ் பண்ணலைன்னா என்ன இப்ப பண்ணு” என்று பஞ்சுமிட்டாய் கேட்கும் ரீதியில் அவன் அடம்பிடிக்க, அவனை முறைத்தாள்.
“உன் கூட பெட்ட வேணா ஷேர் பண்ணலாம், வாழ்க்கையை… ப்ச்! உன் மேல முழு நம்பிக்கை இல்லைன்னா கூட, அந்த நேரத்துல அந்த நிமிஷத்துல உன்னை நம்புனேன் யுக்தா. உன்கூட இருந்து கேஸ் பத்தி தெரிஞ்சுக்க நினைச்சேன் தான். ஆனா ஒரு கட்டத்துல உன்னை நம்பி என்னை குடுக்க நினைச்சேன். நீ… அப்ப கூட சுயநலமா தான இருந்துருக்க. நீ கட்டுன தாலிக்கு மதிப்பு கொடுத்தாவது அட்லீஸ்ட் என்னை அந்த விஷயத்துல சீட் பண்ணாம இருந்துருக்கணும். உன்னை நம்பி லவ் பண்ண சொல்ற? நாளைக்கே இன்னொரு கேஸ்க்காக என்னை மிஸ் யூஸ் பண்ண மாட்டன்னு என்ன நிச்சயம்?”
அவனைத் தவிர்க்க அவளுக்கு வேறு வழியே தெரியவில்லை. இறுதியாக அவன் செய்த பிழையை வைத்தே ஒதுக்க எத்தனித்தாள்.
பின்னந்தலையை அழுந்த கோதியவன், “தப்பு தான் ஏஞ்சல். கோபம்… நீ உன் அம்மா மாதிரி… என்ன காரணம் சொன்னாலும் தப்பு தான் ஏஞ்சல். ஐ ஆம் சாரிடி. நான் என்ன செஞ்சா உன் கோபம் போகும் சொல்லு! நான் செய்றேன்” என்றதில், “என்னை விட்டுப் போய்டு” என்றாள் இன்றும்.
“முடியாது. வேற?” திமிர் தலைதூக்க முறைத்தான்.
“ஏன், எனக்கு வாழ்க்கை குடுக்க போறியா? அப்பறம் ஒரு நாள் அதையே சொல்லிக்காட்டுவ எனக்கு கூச்சமே இருக்காதுன்னு… நான் என்னைக்கும் உனக்கானவ இல்ல யுக்தா” ஏனோ மெல்லிய நடுக்கத்துடன் வந்தது அவ்வார்த்தைகள்.
“ஏய்” சட்டென எழுந்த கோபத்தில் அவள் கழுத்தைப் பிடித்தவன், கண்ணைச் சிமிட்டித் தன்னை அமைதிப்படுத்தி விட்டு, “பைத்தியக்காரி மாதிரி பேசாத. என் வார்த்தை உன்ன ஹர்ட் பண்ணிடுச்சுன்னு புரியுது ஏஞ்சல். ஆனா… ஐ டிண்ட் மீன் இட் யுகா. என்னைப் பாரேன்!” என அவள் கன்னம் திருப்பி அவனைப் பார்க்க வைத்தான்.
“இந்த சைக்கோ புருஷனை மன்னிச்சுடுடி” கண்களால் இறைஞ்சினான்.
“இன்னொரு தடவை உன்னை நம்ப நான் தயாரா இல்ல. அண்ட் உன் மேல எனக்கு காதல் வரவும் வராது” திட்டவட்டமாக உரைத்தவள், “அன்னைக்கு ஒருவேளை என்னை நீ பார்த்து காதலை சொல்லிருந்தா கூட, உன்னை ஒரு ஸ்ட்ரேஞ்சரா கடந்து போயிருப்பேன். தட்ஸ் இட்!” என முடித்துக் கொண்டு அவனைத் தாண்டி நடந்து சென்றவளின் முகத்தில் தேம்பல்களின் தடம்.
தாடை இறுக அவள் விலகிச் செல்லும் நிஜத்தை ஏற்றுக்கொள்ள இயலாதவன், கடலைப் பார்த்து அடித்தொண்டையில் இருந்து “ஆஆஆ” வெனக் கத்தினான். அப்போதும் மன அழுத்தம் நீங்காமல் வலுப்பெற மீண்டுமொரு முறை “ஆஆஆ” எனக் கத்தித் தீர்த்தான்.
அவன் கத்தலில் உள்ள கதறல் அவளுக்கும் புரிந்தது. கண்ணை இறுக்கி மூடி உதடு வெடிக்க வெளிவந்த அழுகையைக் கட்டுப்படுத்தியபடி அவனுக்கு முகம் காட்டாமல் காருக்குச் சென்று விட்டாள்.
சில நிமிடங்களில் அருணிடம் இருந்து போன் வந்ததும் தான், தன்னைத் தானே அமைதி படுத்திக்கொண்டவன், இனி இவளிடம் கெஞ்சி பிரயோஜனமில்லை என்றுணர்ந்து, ஒரு முடிவுடன் காரை நோக்கி வந்தான்.
சிறு பேச்சும் அற்று அவளது வீட்டின் முன் நிறுத்தியவன், அவள் இறங்கும் முன்னே அவளது கழுத்தைப் பற்றி தன் புறம் இழுத்து, இதழ்களோடு இதழ் பதித்தான்.
இதனை எதிர்பாராமல் தடுமாறிய விஸ்வயுகா அவன் நெஞ்சில் அடித்து தள்ள முயல, முத்தத்தின் வேகம் கூடியதே தவிர குறையவில்லை.
சில நொடிகள் கடந்து அவனே விடுவித்தான். மூச்சு வாங்க சிரமப்பட்டு அவனை தீயாக முறைத்தவள், அவனைப் படபடவென அடிக்க, அதனை அமைதியாய் வாங்கிக்கொண்டு, “ஏதோ ஒன் நைட் ஸ்டான்ட் சொன்னியே. நைட்டு பால்கனி கதவைத் திறந்து வச்சுடு” என்றதும் நெற்றிக்கண்ணை திறந்தாள்.
“ஹே ஏஞ்சல்… ஒரே நாள்ல சலிச்சுடுவன்னு சொன்னியே. அதான் டெஸ்ட் பண்ணி பார்க்காம ஒரு முடிவெடுக்க கூடாதுல” எனக் கண்சிமிட்டினான்.
“உன் காதல் அவ்ளோதானோ?” எனக் கேட்டவளிடம் சிறு ஏமாற்றம்.
“ஒன் நைட் ஸ்டான்ட் தான். ஆனா அது எத்தனை நைட்டுக்குத் தொடரும்னு நான் சொல்லலையே யுகா. உனக்காக துடிக்கிற இந்த ஓவர் ஹார்ட் பீட் என்னைக்கு கம்மியாகுதோ, உன்னை கிஸ் பண்றப்ப தலைக்கேறுற போதை என்னைக்கு குறையுதோ, உனக்காக ஒருத்தனை கொல்ற அளவு வர்ற கோபம் என்னைக் குறையுதோ, அதுவரை இந்த ஒன் நைட் ஸ்டான்ட் தொடரும். என் காதலும் மோகமும் குறையத் தொடங்குறப்ப என் ஹார்ட் பீட்டும் கொஞ்ச கொஞ்சமா குறைஞ்சுடும்” அவளது விழிகளுக்குள் தன் விழிகளை ஊடுருவி தனது காதலின் அளவைத் திணித்தான்.
திகைத்து அமர்ந்தவளோ தன்னை சமன்படுத்திக்கொண்டு, “உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னால வர முடியாது. லீவ் மீ” என்று முடிவாக உரைக்க,
பாக்கெட்டில் இருந்து சிகரெட் ஒன்றை எடுத்து வாயில் வைத்தவன், “உன் உடன்பிறப்புகளும் உன் ஆருயிர் நண்பனும் கொலைல இன்வால்வ் ஆகிருக்காங்கன்னு நீ அப்போ அப்போ மறந்துடுற ஏஞ்சல். அண்ட் அந்த கேஸை டீல் பண்றது நான் தான்னும் ஞாபகம் இருக்கு தான. தூக்கி உள்ள போட்டு ஜென்மத்துக்கும் வெளில வர முடியாத மாதிரி பண்ணிடுவேன். செய்ய மாட்டேன்னு நினைக்காத. யூ நோ அபவுட் மீ!” என இதழ் வளைத்து தீவிரத்துடன் கூறிய பாவனையே சொன்னதை செய்வேனென்று பறை சாற்ற, “யூ சைக்கோ!” எனத் திட்ட வார்த்தைகளின்றி தவித்தாள்.
வாயில் இருந்த சிகரெட்டை பிடுங்கி கீழே போட்டவள், “என்னை கார்னர் பண்ணாத யுக்தா” என்று விரல் நீட்டி எச்சரிக்க,
“கார்னர் பண்ணி தான் உன்னை லவ் பண்ண வைக்கணும்னா எதையும் செய்வேன் ஏஞ்சல்” எனக் கண் சிமிட்டியவன் மீண்டுமொரு முறை இதழ் முத்தப்போர் நிகழ்த்தி விலக, அவளை மீறியும் கன்னக்கதுப்புகள் சிவந்தது.
‘இவன் என்ன… நான் பேசுன பேச்சுக்கு கிளம்பி டெல்லிக்குப் போவான்னு பார்த்தா, நைட்டு என் வீட்டுக்கே வர்றேங்குறான். வேதாளம் மாறி என் தலைல உட்காந்து இம்சை பண்ணுறான். இம்சை புடிச்சவன்’ எனத் திட்டியபடி காரை விட்டு இறங்கியவளை குறுஞ்சிரிப்புடன் பார்த்த யுக்தா, “ஓய் பொண்டாட்டி!” எனக் கத்தி அழைக்க, சிவகாமி எதுவும் வீட்டில் இருப்பாரோ என்ற இலேசான பதட்டத்துடன் வீட்டை எட்டிப் பார்த்தாள்.
“என்னடா?” பல்லைக்கடித்து கேட்டதும், “நைட்டு என் மாமியார்கிட்ட சொல்லி, பாதம் முந்திரி தூக்கலா ஸ்வீட் செஞ்சு வைக்க சொல்லு” என்று குறும்பு கூத்தாட கூறியதில், “எடு செருப்ப” என அவள் அடிக்க வரும் முன் காரை ரிவர்ஸில் எடுத்து பறந்து விட்டான்.
அவள் மாறிவிடுவாளா என்று தெரியவில்லை. ஆனால் தனது விடாமுயற்சியை விடாமல் பிடித்துக்கொண்டவன் வேகநடையுடன் அலுவலகம் வர, அங்கு அருண் சார் “நீங்க கேட்ட டீடெய்ல் எல்லாம் கலெக்ட் பண்ணியாச்சு. ஆனா, எல்லாருக்கும் காமனா கனெக்ட் ஆகுற மாதிரி ஒரு க்ளூவும் இல்ல” என்றான் புரியாமல்.
அதில் ஏளனப் புன்னகை ஒன்றை பரவச் செய்து “எந்த கனெக்ட்டும் இல்லை. அது தான் க்ளூவே!” என்றவனைத் தலையைச் சொறிந்தபடி பார்த்தான் அருண்.
மோகம் வலுக்கும்
மேகா