அத்தியாயம் 54
“என்… என்ன உளறுற?” எனத் திணறிய விஸ்வயுகா பின் தெளிந்து, “சுரேஷைக் கொன்னது நீ தானா?” என்றாள் திகைத்து.
வெங்கடேஷைக் கொலை செய்த பிறகு, அடுத்து திருமண ஏற்பாடு செய்திருக்கும் சுரேஷைத் தான் இவர்கள் குறித்து வைத்திருந்தனர்.
ஆனால், திருமணம் நிகழும் ஒரு நாளைக்கு முன்பே மணமகள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்ள, மணமகனும் இறந்து விட்டான்.
தன் கையால் சாக வேண்டியவன் தானாக இறந்து போனதில் விஸ்வயுகாவிற்கும் ஏமாற்றமே. ஆனால், இவன் ஏதோ புது கதையல்லவா சொல்கிறான்?
“எஸ். நான் சென்னைக்கு வந்த பின்னாடி தான், என்னோட அத்தனை வருஷத் தேடலுக்கு பலனா அம்மாவைக் கொலை செஞ்சதுல ஒருத்தனை நான் கண்டுபிடிக்க முடிஞ்சுது. அதுவும் உன் மேட்ரிமோனி மூலமா அவனுக்கு கல்யாணம் ஆகப் போகுதுன்னு தெரிஞ்சு, அவனைத் தூக்க தான் டைம் எதிர்பார்த்துட்டு இருந்தேன். ஆனா, ஆல்ரெடி உன் பிசினஸை கொலாப்ஸ் பண்ற மாதிரி ரோஜாவும் வெங்கடேஷும் இறந்து போனதுனால, கல்யாணம் வரைக்கும் அவனை விட்டு வச்சு உனக்கு பேக் ஃபயர் ஆக கூடாதுன்னு, அவனை அவன் வீட்லயே வச்சு முடிக்க நினைச்சேன். அதுக்கு முன்னாடி கல்யாண பொண்ணு இறந்து போனதும் தடங்கல் தான்.
அவனை அரெஸ்ட் பண்ணியும் ப்ரயோஜனமில்லை. சாலிட் எவிடன்ஸ் இல்ல. அப்போ எனக்கு என் அம்மாவை என்கிட்ட இருந்து பிரிச்சவன்ற கோபம் மட்டும் தான் இருந்துச்சு. எல்லாரும் ரேப்ல சம்பந்தப்பட்டு இருப்பானுங்கன்னு தெரியல. சாகுற வரை சுரேஷ் எதையும் ஒத்துக்கல. என்கிட்ட இருந்த ஒரே க்ளூ. ஷு மார்க்ஸ்ஸும், அம்மாவைத் தூக்கிட்டுப் போகும் போது கீழ கிடந்த ஒரு ஐடி கார்டும் தான். அது காலேஜ் ஐடி கார்ட்னு வரை புரிஞ்சுது. அந்த டைம்ல அம்மாவை சேவ் பண்ற அவசரத்துல ஆம்புலன்ஸ்ல ஏறிட்டேன்” என்று நெற்றியைத் தேய்த்ததும்,
குறிஞ்சி தொடர்ந்தாள்.
“அதுக்கு அப்பறம் நான் வந்து அந்த பில்டிங்ல சர்ச் பண்ணப்ப, இவன் சொன்ன எந்த ஐடி கார்டும் அங்க இல்ல. அன்ஃபார்ச்சுனேட்லி, அங்க இருக்குற தடயத்தை நான் பெர்சனலா போட்டோ எடுத்துட்டுப் போயிட்டு அதுக்கு அப்பறம் டீம் கூட அங்க போனேன். பட் அங்க கொலை முயற்சி நடந்துக்கான அறிகுறியே இல்ல. எல்லாம் கிளீனா இருந்துச்சு. போலீஸும் நாங்க சொல்றதை காதுலயே வாங்கல. லீகலா அடாப்ட் பண்ணாத பட்சத்துல ஆண்ட்டி கூட இவன் இருக்குறது கரெக்ட்டுன்னு படல. அதான் இவனை உடனே டெல்லிக்கு போக சொன்னேன்” என்று வருத்தத்துடன் முடித்தாள்.
அங்கு பலத்த அமைதி நிலவ, மேஜை மீது வைத்திருந்த தனது கைப்பையைத் துழாவினாள் விஸ்வயுகா.
உணர்வற்ற முகத்துடன் அன்று அவனுக்கு ஆதாரமாக கிடைத்து இருக்க வேண்டிய ஐடி கார்டை எடுத்து அவன் புறம் நீட்ட, “நினைச்சேன்!” தனது உணர்வுகளை அடக்க சிகரெட்டை இழுத்துப் புகைத்தவன், விரலிடுக்கில் அதனை வைத்தபடி வாங்கப் போனான்.
சட்டென ஐடி கார்டை தன் புறம் இழுத்தவள், அவனையும் அவன் வைத்திருந்த சிகரெட்டையும் அழுத்தம் திருத்தமாகப் பார்க்க, “ஓவர் டென்ஷன் ஆனா இது பழகிடுச்சு ஏஞ்சல். சென்னைக்கு வந்த பின்னாடி இப்படி ஓவர் டென்ஷன் ஆனா உன்னை ஹக் பண்ணி, அட்லீஸ்ட் உன்னை உரசிக்கிட்டேவாவது கொஞ்சம் என்னை கூல் பண்ணிட்டு இருந்தேன். இப்ப தான் நீயும் என்னைப் பக்கத்துல வர விட மாட்டுறியே…” எனப் பாவம் போல கூறியவனை எரித்த பாவையின் தீப்பார்வையில் சிறிதும் மாற்றமில்லை.
அதில் மனமின்றி சிகரெட்டைக் கீழே போட்டவன், கையை நீட்ட, அதன் பிறகே ஐடி கார்டைக் கொடுத்தாள்.
அதில் கல்லூரி பெயரோ மாணவன் பெயரோ அல்லது புகைப்படமோ எதுவுமே சரியாக தெரியவில்லை. அனைத்தையும் மார்க்கர் வைத்து அடித்து வைத்திருந்தனர். ஆனால் அதன்மூலம் கடத்தியவர்கள் கல்லூரி மாணவர்களாக இருக்குமென்ற கணிப்பு விஸ்வயுகாவிற்கு இருந்தது.
அவர்களது உடல்வாகும் தன்னை வெகுவாய் நோகடித்த பலத்தையும் வைத்தே நிச்சயம் இளம் வயதினர் என உணர்ந்து கொண்டாள்.
“சோ காலேஜ் பசங்கன்ற டவுட்ல தான் நீயும் தேடி இருக்க?” எனக் கேள்வியுடன் தன்னவளைப் பார்த்தான் யுக்தா.
ஆமோதிப்பாகத் தலையாட்டியவள், “சுரேஷ் மூலமா தான் அன்னைக்கு வந்தது ஆறு பேர்னு கண்டுபிடிச்சியா?” எனக் கேட்டாள்.
“ம்ம்… அவன் மூலமா பெருசா எதுவும் தெரிஞ்சுக்க முடியல. இந்த சம்பவத்துல சம்பந்தப்பட்ட பசங்க ஆறு பேருமே முக்கிய புள்ளிகளோட பசங்க. பணத்துக்காக இதை பண்ணல. சோ வேற எதுக்காக இதுல இன்வால்வ் ஆகணும்னு சுரேஷை எவ்ளோ கேட்டும் அவன் சொல்லல. என்னைக் கொன்னா, நீ தான் சாவன்னு திமிரா பேசுனான். அவனை அப்படியே விட்டுட்டு வந்தா தேவை இல்லாத பிரச்சனைன்னு ஷூட் பண்ண தான் நினைச்சேன். அதுவும் சரிப்பட்டு வராதுன்னு வெங்கடேஷ் டெத்க்கு யூஸ் பண்ணுன சோடியம் **** பாய்சனை அவனுக்கும் யூஸ் பண்ணுனேன். ஆறு பேருமே பெரிய இடத்துப் பசங்க தான். எதுக்குமே மோட்டிவ் தெரியல. மீதி இருக்குற பசங்கள்ல ரெண்டு பேர் ஹை ப்ரொபைல்னு அவன் பேசும்போதே புரிஞ்சுது. அவங்களை டச் பண்ணுனாலே என்னைக் கொன்னுடுவாங்களாம்” என ஏளனமாகச் சிரித்தவன்,
“அவனுக்கு எங்க தெரியப்போகுது. அவங்களை அணு அணுவா ரசிச்சு நான் கொல்லப் போறேன்னு!” என்றான் சிங்கத்தின் கர்ஜனையுடன்.
விஸ்வயுகாவிற்கு பேசவே நாவெழவில்லை. அவளுக்கே அப்படி என்றால் மீதி மூன்று பேரும் ஏதோ த்ரில்லர் கதை கேட்பது போல உறைந்து அமர்ந்திருந்தனர்.
பின் அவனே தொடர்ந்தான். “அடுத்த ஆளைத் தேடும் போது தான், மாட்டுனான் தீனா. வெங்கடேஷ் டெத்ல உங்க மேல சந்தேகம் வந்து தான் அவன் உங்க ஆப்பை ஹேக் பண்ணிருக்கான். அவனைத் தேடி மைத்ரேயன் வர்றதுக்கு முன்னாடி நான் அவனை விசாரிக்கப் போனேன் யாருக்கும் தெரியாம. அப்போ, அவன் என்னை கத்தியால குத்த வந்தான், அவனைத் தடுக்க அவனை நான் குத்த வேண்டியதா போய்டுச்சு” என்றவனை திருதிருவென விழித்தபடி பார்த்தாள்.
முந்தைய நாள், டெட் பாடியைத் தொட்டு விட்டதால் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டு வருவதாகத் தானே குளியலறைக்குள் சென்றான்.
அது தெரியாமல் கரண்ட் போனதில் அவனைக் கட்டியணைத்து ஒட்டிக்கொண்டே இருந்தது இப்போது நினைவிற்கு வர அவளுக்கு குடலைப் பிரட்டியது.
“யூ… சைக்கோ… சைக்கோ…” என எழுந்து அவனைப் படபடவென அடித்தவளுக்கு, பிரட்டல் வாந்தியாக உருவெடுக்க, அவசரமாக ரெஸ்ட் ரூம் நோக்கிப் படையெடுத்தாள்.
‘இவளுக்கு என்ன ஆச்சு’ என்ற ரீதியில் மற்றவர்கள் விழிக்க, உதட்டுக்குள் புன்னகையை அடக்கிய யுக்தா “ஹே ஏஞ்சல்… என்ன ஆச்சு?” என அவள் பின்னேயே சென்றான்.
“உவேக்…” என வாஷ் பேசின் முன் குனிந்து நின்றிருந்தவளுக்கு குமட்டல் நிற்கவே இல்லை. அவளது தலையைப் பிடித்துக் கொண்ட யுக்தா, “ஏய் கொலைகாரி… கமுக்கமா ரெண்டு கொலையைப் பண்ணிட்டு என்னவோ நான் தான் சைக்கோ ரேஞ்சுக்கு ஃப்ரேம் பண்ற?” என அதட்டினாலும் ஆடவனது கரங்கள் தானாக அவள் முகத்தை நீரால் துடைத்து விட்டது.
அவனைத் தள்ளி விட்டவள், “எனக்கு இரத்தம், டெத்னாலே பயமா இருக்கும்னு தான் ஸ்லோ பாய்சன் மூலமா கொலை பண்ண நினைச்சேன். அவனுங்க சாகுறதை நான் பார்க்கத் தேவை இல்லல. அண்ட் இரத்தம் இல்லாம வேலையை முடிச்சுடலாம். நீ இரத்தம் தெறிக்க கொன்னதும் இல்லாம, அப்படியே என்னை வேற கட்டிப்பிடிச்சு… உவேக்” என மறுபடியும் குமட்டினாள்.
“ஏன்டி அகிம்சை வழில கொன்னாலும் கொலை கொலை தானடி… இதுக்கு என்ன தண்டனை தெரியுமா?” என்றான் அவள் முதுகைத் தடவி கொடுத்தபடி.
அவனது தொடுகை அவளுள் அமிலத்தை சுரக்க வைக்க நெளிந்தவள், “எல்லாம் எதிர்பார்த்து தான் இதுல இறங்குனேன். ஜெயிலுக்கு போனாலும் போறதுக்கு முன்னாடி இதுல சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் கருவறுத்துட்டுத் தான் போவேன். பட் ஒன் திங்க் இது எல்லாம் என்னோட பிளான். என்னோட சுயநலத்துக்காக அவங்க மூணு பேரோட லைஃபும் ஸ்பாயில் ஆகிட கூடாது. ஆக விட மாட்டேன்…” எனத் தீர்மானமாகக் கூறியவளை ரசனையுடன் அளந்தது அவன் விழிகள்.
—-
நகத்தைக் கடித்தபடி அமர்ந்திருந்த ஷைலேந்தரி, “வாந்தி எடுக்கப் போனவளை எங்க காணோம்?” எனத் தேட,
மைத்ரேயனோ “அவளை விடு. அவளைத் தாங்க போனானே அவனையும் காணோமே” என்றான் கன்னத்தில் கை வைத்து.
“ஒருவேளை மீதி இருக்குற ரெண்டு பேரை என்ன மாதிரி பாய்சன் யூஸ் பண்ணி கொலை பண்ணலாம்னு ‘கபிலா’ டிஸ்கஸ் பண்றங்களோ?” நந்தேஷும் தன் சந்தேகத்தை முன் வைத்தான்.
“அவள் ஆளை பார்க்கவும் நம்மளைக் கழட்டி விட்டுட்டு பிளான் பண்றாடா நந்து…” என மைத்ரேயன் கோபம் கொள்ள, அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த குறிஞ்சி தான், “ம்ம்க்கும்… உங்களை வச்சுக்கிட்டு பிளான் பண்ணுனா மட்டும் அப்படியே கிழிச்சு தள்ளிடுவீங்களாக்கும்” என நொடித்தாள்.
நந்தேஷ், “ஹலோ அழகி மேடம். நாங்க ரெண்டு கொலை பண்ணிருக்கோம். ரொம்ப பயங்கரமான க்ரிமினல்ஸ் நாங்க. ஞாபகம் வச்சுக்கோங்க…” எனக் கண்களை உருட்டிக் கூற, அவளோ வாய் விட்டே சிரித்தாள்.
“கொஞ்சம் பொறுங்க ராசா. என் தளபதி இன்னும் முழு விஷயத்தையே சொல்லி முடிக்கல. அதுக்கு அப்பறம் உங்க கெத்தை காட்டுங்க” என நக்கலாய் சிரிக்க, ‘எதே இன்னும் சொல்லி முடிக்கலையா?’ என நெஞ்சில் கை வைத்தாள் ஷைலேந்தரி.
—
ஆடவனின் ரசனைப் பார்வையைத் தவிர்த்த விஸ்வயுகாவிற்கு இப்போது உடல்நிலை சற்று இலகுவாக, அவனைத் தாண்டி வெளியில் செல்லப் போனாள்.
அதனை உணர்ந்து பாவையின் இடையைப் பற்றி ஒரு சுற்று சுற்றி தன்னருகில் இழுத்த யுக்தா, “ஜெயிலுக்குப் போறதை எல்லாம் அப்பறம் பார்க்கலாம். அதுக்கு முன்னாடி நம்ம ஃபார்மலா கல்யாணம் பண்ணிக்கலாமா?” எனக் கேட்டான் தீவிரமும் யாசகமும் கலந்து.
“வாட் கல்யாணமா? ஆர் யூ ஜோக்கிங் யுக்தா. ஏதோ என் வேலை முடியணும்ன்றதுக்காக உன்கூட கொஞ்சம் ஃப்ளர்ட் பண்ணுனேன். அதுக்காக நிஜக் கல்யாணம் வரைக்கும் யோசிக்கிறது ரொம்ப ஓவர்!” என்றாள் தன்னை மறைத்து.
“ஃப்ளர்ட் பண்றதுக்கும் காதலுக்குமான வித்தியாசம் புரியிற அளவுக்கு உனக்கும் எனக்கும் மெச்சூரிட்டி நிறையவே இருக்கு யுகா. உன் கண்ல எனக்கான காதல நான் எப்பவும் உணர்ந்துருக்கேன். என்னை மீறி என் காதலை உனக்கும் உணர்த்தி இருக்கேன்…” என அழுத்தமாய் உரைக்க,
“குட் ஜோக் யுக்தா. உனக்கு வேணா ரொம்ப ஆசையா இருந்தா ஒன் நைட் ஸ்டாண்ட் பண்ணலாமா? பட் ஒரு நாள்ல நான் உனக்கு போர் அடிச்சுடுவேன்… ஒரு நாள் கூத்துக்கு எதுக்கு கல்யாணம் எல்லாம். எனக்குத் தான் கூச்சமும் இருக்காதே. சோ…” எனப் பேசி முடிக்கும் முன்னே அவனது முகத்தில் டஜன் கணக்கில் சீறலும் வலியும் ஒருங்கே எழுந்தது.
“போ!” ஒற்றை வார்த்தை தான் அதுவே பல மடங்கு பாரத்துடன் வெளிவந்தது.
“இப்ப தான் கல்யாணம் பண்ண ‘வா’ன்னு சொன்ன. அதுக்குள்ளே ‘போ’ன்னு சொல்ல வச்சுருச்சு பார்த்தியா இந்த விதி. விதி வலியது யுக்தா!” அவளோ வெளியில் செல்லாமல் வீம்பாக அவனைக் காயப்படுத்த அவளுக்கு முன் இறுகிய முகத்துடன் ரெஸ்ட் ரூமை விட்டு வெளியில் வந்தவன், மீண்டும் அதே இடத்தில் அமர்ந்தான்.
முகத்தில் இருந்த சிறு துளி குறும்பும் கம்பீரமும் மொத்தமாக துடைத்தெறியப்பட்டிருந்தது.
அத்தியாயம் 55
அவன் சென்ற நொடிப்பொழுதிலேயே அத்தனை நேரமும் விழிகளுக்குள் துயில் கொண்டிருந்த கண்ணீர் இலேசாக வெளிப்பட, ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு தன்னைச் சமணப்படுத்திக் கொண்டவள் அலட்சிய பாவனையுடன் அவனெதிரில் அமர்ந்தாள்.
மேஜைக்கு அடியில் மடியில் இரு கைகளையும் வைத்து அவன் ஏதோ செய்வது தெரிந்தது. அவ்வப்பொழுது ‘டப் டப்’ எனச் சத்தம் கேட்டாலும் அதனை ஒதுக்கி விட்டு, “அப்போ மீதி இருக்குற ரெண்டு பேர் யாரு?” எனக் கேட்டாள் அவனைப் பார்த்து.
“கண்டுபிடிக்கணும். யார் அவங்க? அவங்களை வச்சு யார் இதையெல்லாம் செய்ய சொன்னா… எல்லாமே கண்டுபிடிக்கணும். அதே நேரம், வெரி டேஞ்சரஸ் சீரியல் கில்லர் நமக்கு போக்கு காட்டிட்டு இருக்கான். அவனையும் சேர்த்தே கண்டுபிடிக்கணும். இல்லன்னா உனக்கும் ஷைலுவுக்கும் ஆபத்தா முடியும்!” என்றான் வெகு யோசனையுடன்.
நந்தேஷ் அதிர்ந்து, “என்ன மறுபடியும் சீரியல் கில்லர்னு ஆரம்பிக்கிற. கொலையெல்லாம் மாத்தி மாத்தி நம்ம தான பண்ணுனோம்?” எனப் புரியாமல் வினவ, ஃபூல்… நம்ம கொன்னது ஆம்பளைங்களை மட்டும் தான். சேம் டிராக்ல பொண்ணுங்களும் செத்துருக்காங்க. உன் எக்ஸும் அதுல அடக்கம்” என்றதும், ஷைலேந்தரி “அதான் அடக்கம் பண்ணியாச்சே அப்பறம் ஏன் நோண்டுறீங்க” என நொந்து போனாள்.
மைத்ரேயன் திகைத்து, “அப்போ உண்மையாவே சீரியல் கில்லர் தானா? பொண்ணுங்களை செலக்ட் பண்ணி கொலை பண்றானா?” என்றான் மிரண்டு.
“எஸ். அபர்ணாவோட இறப்புல இருந்தே அவன் சம்பந்தப்பட்டு இருக்கணும். ஆனா ஒரு எவிடன்ஸும் கிடைக்க தான் மாட்டேங்குது. ஐ ஹோப், மத்த ரெண்டு பேரை தேடுற ஜர்னில அந்த சீரியல் கில்லரும் மாட்டுவான். மாட்டனும்” என்றான் யோசனையுடன்.
“ஜர்னியா. சரி சரி ஹேப்பி ஜர்னி சிபிஐ சார். சீக்கிரம் எதையாவது கண்டுபிடிங்க…” என்று ஷைலேந்தரி இடத்தை விட்டு எழுந்து கொண்டாள்,
‘இப்போதைக்கு நம்மளை அரெஸ்ட் பண்ண மாட்டாங்க’ என்ற தைரியத்தில்.
“ஏய் உக்காரு” என யுக்தா ஒரு விரலால் பணிக்க, சட்டென அமர்ந்தவள் விழித்தாள்.
“ஹேப்பி ஜர்னியா? இந்த ஜர்னில நீங்களும் தான் சேர்ந்து டிராவல் பண்ண போறீங்க” யுக்தா முறைப்புடன் கூற,
“சுத்தம்!” எனத் தலையில் கை வைத்தாள்.
விஸ்வயுகா வெடுக்கென, “தேவை இல்ல. உன் அம்மாவைக் கொலை பண்ணுனதுக்காக நீ தனியா தேடிக்கோ. என் சித்தியைக் கொன்னதுக்காக நான் தனியா தேடிக்கிறேன். எங்களுக்குள்ள நீ வராத!” என்றாள் திணக்கமாக.
“உனக்குள்ள தான் வரமுடியல. உங்களுக்குள்ளயும் வரக் கூடாதா?” என்ற விரக்தி வாசகம் அவளுள் தீயாய் பாய, அவனைக் காண மறுத்தவள், “பேச வேண்டியதை பேசி முடிச்சாச்சுன்னா கிளம்புறியா…” என சற்றே எரிச்சலுடன் கூறினாள்.
“ரியல் இன்வெஸ்டிகேஷன் இனிமே தான ஆரம்பிக்குது ஏஞ்சல். இப்பவாவது ஒழுங்கா கோ – ஆபரேட் பண்ணி விஷயத்தை சொல்றியா?” என்றான் அமைதியாக.
“அதான் சொல்லிட்டேனே என்ன சொல்லணும் இன்னும்” அவளிடம் சலிப்பு தட்டியது. எத்தனை நேரம் தான் வறண்டு கிடந்த மனதினுள் மீண்டும் மீண்டும் ஆறாய் பாயும் காதல் உணர்வை அணை கொண்டு தடுப்பது. அணை உடைக்கப்பட்டு பெருவெள்ளம் வரும் முன், தனியறைக்குள் புகுந்து கதறி அழத் தோன்றியது அவளுக்கு.
அழுதால் சற்று மனம் தேறும் நிலை அவளுக்கு. அழக் கூட இயலாத செல்லாக்காதலின் பாவ நிலை அவனுக்கு.
இருவருக்கும் மத்தியில் காதல் பந்தாடப்பட, “நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு!” என்றான்.
அப்போதும் ‘டப் டப்’ எனச் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
“சரி கேளு!” விஸ்வயுகா நெற்றியில் கை வைக்க,
“அன்னைக்கு என்ன நடந்துச்சோ அதை அப்படியே மறுபடியும் சொல்லு” என்றான்.
“ப்ச் எத்தனை தடவை?” இம்முறை அவளுக்கே கண் கலங்கி விட்டது.
அதனைக் கண்ட அவன் கண்ணும் ஒரு முறை கலங்கி நிற்க,
“சொல்லு” இடறியது அவன் குரல்.
“ஒரு கண்டெய்னர் வேன் வந்துச்சு. மளமளன்னு எங்களைக் கடத்துனாங்க. அப்பறம்…” எனச் சொல்லிக்கொண்டே வந்தவளை நிறுத்தினான்.
“நீ அங்க இருந்தும் அம்மா ஏன் நீ இல்லைன்னு சொன்னாங்க?” எனக் கூர்மையாய் வினவ, அவளிடம் பதில் இல்லை.
“அதை நீ அவங்ககிட்ட தான் கேட்கணும்”
சில நொடி அமைதிக்குப் பிறகு, “இந்த சம்பவம் நடக்கும் போது நீ எங்க இருந்த, அம்மா எங்க இருந்தாங்க எக்ஸ்சாக்ட்டா?” எனக் கேட்டான்.
“நான் காரை விட்டுக் கொஞ்சம் தள்ளி இருந்தேன். சித்தி காருக்குள்ள இருந்தாங்க”
“கொஞ்சம்னா எவ்ளோ?”
“ஒரு எட்டு பத்து அடி”
“சியூர்?”
“ம்ம்…”
“ஓகே… யுகா எனக்கு ஒரு விஷயத்தை கிளாரிஃபை பண்ணு. அந்த வேன்ல இருந்த ஆளுங்க உன்னைக் கடத்த வந்தாங்களா? இல்ல அம்மாவைக் கடத்த வந்தாங்களா? இல்ல ரெண்டு பேரையும் கடத்த வந்தாங்களா?” எனப் பார்வையில் பட்டைத் தீட்டி வினவினான்.
விஸ்வயுகாவிற்கு முன் மைத்ரேயன் “ரெண்டுத்துக்கும் என்ன வித்தியாசம் யுக்தா?” எனக் குழம்ப,
“ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கு. அம்மாவைக் கடத்த ட்ரை பண்ணிருந்தா, அவங்க அப்போ இன்வால்வ் ஆன ப்ராப்ளம் வச்சு கில்லரை கண்டுபிடிக்கலாம். இல்ல யுகாவை மட்டுமே கடத்தத் திட்டம் போட்டு நடந்துருந்தா, இவளைச் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் ஆராயலாம். அதுவும் இல்ல ரெண்டு பேருக்குமே வலியை குடுக்கணும்னு நினைச்சுருந்தா ரெண்டு பேருமே ஒண்ணா சம்பந்தம் ஆகிருக்குற பிரச்சினையை யோசிக்கலாம். அம்மாவைச் சாகுற அளவு அடிச்சதுக்கும், இவளுக்கு நரக வேதனையைக் குடுத்துட்டுக் கொல்லாம போனதுக்கும் ஒரு ரீசன் இருக்கணும். எல்லாத்துக்குமான ரீசன் கண்டுபிடிச்சா, இதை செய்யச் சொன்ன ஆளுங்களை கண்டுபிடிக்க க்ளூ கிடைக்கும்” என்றான் நிதானமாக.
ஒரு கேள்வியில் ஓராயிரம் பதிலை வைத்துள்ளான் என உள்ளுக்குள் கண்ணுக்கே தெரியாத அளவு ரசித்துக் கொண்ட விஸ்வயுகா,
“என்னைத் தாண்டி தான் யுக்தா கண்டெய்னர் வேன் காருக்கு போச்சு. காரை இடிச்சதும் சித்தி வெளில வந்து என்னன்னு பார்த்தாங்க. சட்டுன்னு அவங்களை மயக்கமாக்கிட்டாங்க. நான் ஒரு செகண்ட் ஸ்டன் ஆகி நின்னுட்டேன். அதுக்கு அப்பறம் அவங்களை நோக்கி ஓடி வந்து அட்டாக் பண்ண ட்ரை பண்ணுனேன். ஆனா முடியல” என்றாள் அவன் கேட்டதற்கிணங்க ஒவ்வொரு சிறு சிறு விஷயத்தையும் ஆராய்ந்து.
“நீ காரை நோக்கி ஓடி வர்றதுக்கு அட்லீஸ்ட் சில செகண்ட்ஸ் ஆகி இருக்கும்ல ஏஞ்சல்?”
“எஸ் கண்டிப்பா”
“அப்போ அவங்க நினைச்சுருந்தா அம்மாவை மட்டும் கடத்திட்டுப் போயிருக்கலாம். இல்ல கொலை பண்ணனும்னு முடிவு பண்ணிருந்தா அங்கேயே கத்தியை வச்சு போட்டுருக்கலாம். வெய்ட் பண்ணிருக்காங்க நீ வர்ற வரை!” என கண்ணைச் சுருக்கி கூற, விஸ்வயுகாவிற்கு பயப்பந்து சுழன்றது.
ஷைலேந்தரியோ “யப்பா தெய்வமே… அந்த ஆசாமிகளை விட நீ குடுக்குற விளக்கத்துல தான்பா எனக்கு வயித்தை கலக்குது” என மிரண்டாள்.
விஸ்வயுகாவின் பயம் அவள் கண்களை எட்ட, விழிகளை மூடித் திறந்து அவளை சமன்படுத்தியவன், “உன்னைப் பத்தி மீடியால வரக்கூடாதுன்னு நடந்ததை மறைச்சுட்டியா ஏஞ்சல். எவிடன்ஸை முதற்கொண்டு அழிச்சுருக்கீங்க” என்றான் சற்று கண்டிப்புடன்.
நந்தேஷ் வேகமாக, “இது அவள் தப்பு இல்லை யுக்தா. அவளே ஒரு வாரம் கழிச்சு தான் கண்ணு முழிச்சா. உயிரோட வருவான்னு கூட எங்களுக்கு நம்பிக்கை இல்ல” சொல்லும் போதே அவன் குரல் கமறியது.
மைத்ரேயனுக்கும் ஷைலேந்தரிக்கும் ஒன்றாக விழிகள் கலங்க, மைத்ரேயன் நந்தேஷின் தோளைத் தட்டிக் குடுத்து, “ஆண்ட்டிக்கு நடந்தது வெளில தெரியக்கூடாது. தெரிஞ்சா இவளை வச்சே கன்டென்ட் ஆக்கி படுத்திருவாங்கன்னு பயம். அவங்க பயத்தை அந்த நேரத்துல எங்களால தப்பு சொல்ல முடியல. விஸ்வூகிட்ட ஒரு ஸ்மார்ட் வாட்ச் இருக்கும். அதுல அவள் அலர்ட் பண்ணுனா எனக்கு அவளோட ஜிபிஎஸ் லொகேஷன் ஷேர் ஆகிடும். அவளோட பர்த்டேக்கு நான் தான் கிப்ட் பண்ணுனேன். அவள்கிட்டே இருந்து அலெர்ட் காட்டவும் முடிஞ்ச அளவு சீக்கிரமா வந்தும் கூட…” சொல்ல இயலாமல் நிறுத்தி விட்டான்.
“முடியல யுக்தா… அவளை அந்த நிலைமைல பார்த்ததுக்கு செத்தே போயிருக்கலாம். நல்லவேளை அவளோட வாட்ச் அந்த டார்க் ரூம்ல இருந்ததுனால அட்லீஸ்ட் என்னால அந்த டார்க் ரூமை கண்டுபிடிக்க முடிஞ்சுது. இல்லனா அந்த ரூம் இல்லைன்னு குறிஞ்சி மாதிரி நானும் நினைச்சுட்டு வந்துருப்பேன். இன்னும் இவளை ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டுப் போக டிலே ஆகிருந்தா… என்னால யோசிக்க கூட முடியல” என்றான் தவிப்பாக. ஷைலேந்தரி அவன் கையை அழுந்தப் பிடித்து கொண்டாள்.
அவள் கன்னமும் கண்ணீரில் நனைந்தது.
“அதுக்கு அப்பறம் மைதா தான் எங்களுக்கும் விஷயத்தை சொல்லி ஹாஸ்பிடல் வர சொன்னான். முதல்ல எங்களுக்கு ஒண்ணுமே புரியல. அதுக்கு அப்பறம் நடந்தது தெரியவும் டோட்டலா ப்ளாங்க் ஆகிட்டோம். இவள் சித்தி கூட வெளில போனது கூட எங்களுக்கு ஞாபகம் வரல. பர்ஸ்ட் மூணு நாளும் ரொம்ப டேஞ்சர் கண்டிஷன்ல இருந்தா. அப்போ சுத்தமா எதுவுமே யோசிக்கல. அப்பறம் தான் எங்களுக்கு சித்தி ஞாபகமே வந்துச்சு. சித்தப்பாவும் சித்தியைக் காணாம மூணு நாளா தேடிருக்காங்க. விஸ்வூவோட ஹெல்த் இஸ்ஸியூனால எங்ககிட்ட கூட சொல்லல. அப்பறம் அவங்களைத் தேடி தேடி அலைஞ்சோம். இவள் கண்ணு முழிச்சு கொஞ்சம் பெட்டரா இருக்கும் போது தான் எங்களுக்கு சித்தி பத்தின நியூஸ் வந்துச்சு” என்றாள் தேம்பலுடன்.
இப்போது அவளைத் தாங்கும் பொறுப்பை இரு ஆடவர்களும் எடுத்துக் கொண்டனர்.
குறிஞ்சிக்கும் அவர்களது வேதனை தாக்க, பேச்சற்று அமர்ந்திருந்தாள். விஸ்வயுகா நிமிரவே இல்லை. பொதுவாக இதைப் பற்றி பேசி அவர்கள் வருந்துவது கூட அவளுக்குப் பிடிக்காது.
யுக்தாவிற்கு வெடித்து கதற நெஞ்சம் அடம்பிடித்தது. இப்போது ‘டப் டப்’பென்ற சத்தம் வேறு அளவுக்கு அதிகமாக கேட்டுக்கொண்டே இருந்தது.
பிரம்மபிரயத்தனம்பட்டு முகத்தை சீராக வைத்துக்கொண்டவன், “அப்பறம் எப்படி இவளே அம்மா ஆக்சிடெண்ட் ஆகி இருந்து போனதா பேட்டி குடுத்த மாதிரி நியூஸ் வந்துச்சு” எனக் கேட்டான்.
நந்தேஷ் “அதுவும் அம்மா வேலை தான். எங்களுக்கு இது தான் நடக்குதுன்னு புரியிறதுக்கு முன்னாடி அவங்க எல்லா வேலையையும் பார்த்து விட்டுட்டாங்க. இவள் ஹாஸ்பிடல்ல இருந்தது ரொம்ப கான்பிடென்ஷியலா இருந்துச்சு. அப்படியும் சிலர் புரளியைக் கிளப்ப ஆரம்பிக்க, அதை அவாய்ட் பண்றதுக்காக இவளோட பேரை இழுத்து விட்டுட்டாங்க. கொஞ்சம் இவளுக்கு கியூர் ஆகவும் இவளை வச்சே நியூஸ்லையும் சொல்ல வச்சுட்டாங்க. எங்களுக்கு அப்ப வேற வழியும் தெரியல. இதுக்கான காரணத்தைத் தேடி தான் அதுக்கப்பறம் எங்களுக்கான பாதையை நோக்கி போக ஆரம்பிச்சோம்” என்றான் பெருமூச்சோடு.
தான் செய்த முட்டாள்தனம் நன்றாகவே புரிந்த்து யுக்தாவிற்கு. அவளிடம் நன்முறையில் அறிமுகமாகி இருக்கலாம் எனத் தன்னை தானே மானசீகமாக அறைந்து கொண்டவன் இறுகிப் போய் இருக்க, இம்முறை அவனால் எழுப்பப்பட்ட சத்தம் விஸ்வயுகாவிற்கு தலைவலியைக் கொடுத்தது.
“ப்ச் என்ன பண்ணிட்டு இருக்க நீ?”
“நத்திங்!” என அவன் சொல்லும்போதே எழுந்து அவனருகில் வந்து நின்றவள் அவனது உள்ளங்கை முழுக்க தீக்காயம் இருந்ததைக் கண்டு அதிர்ந்து நின்று விட்டாள்.
—
“அம்மா… உடம்பு எல்லாம் அரிக்குதுமா. ஒரு மாதிரி இட்சிங்கா இருக்கு” இன்னும் இரு நாட்களில் திருமணத்தை எதிர்நோக்கி இருந்த தேவிகா, கண் கலங்க தாயிடம் கூறினாள்.
“இன்னைக்கு நிச்சயத்துக்காக போட்ட புது ட்ரெஸ் க்ளாத் ஒத்துக்கலைன்னு நினைக்கிறேன் தேவி. ட்ரெஸ மாத்து சரி ஆகிடும்” என அவர் வந்தவர்களை கவனிக்கப் போக, சரியென அறைக்குள் புகுந்த தேவிகாவிற்கு தலை சுற்றி நெஞ்சம் படபடவென துடிக்க ஆரம்பித்தது.
அதனை கேமராவின் வழியே பார்த்த அந்த சிவந்த கண்களில் வெறி அப்பட்டமாகத் தெறித்தது.
மோகம் வலுக்கும்
மேகா
,
வில்லன் யார்