Loading

விஸ்வயுகாவின் சத்தத்தில் காதைக் குடைந்த யுக்தா சாகித்யன், “கத்த வேண்டிய நானே பொறுமையா தான உட்காந்து இருக்கேன். ஜஸ்ட் சிட் ஏஞ்சல்” என்றான் மெதுவாக.

அவள் அமராமல் போனதில் முகத்தில் கடுமையை ஏற்றியவன், “ஐ செட் சிட்!” என உறுமிட, அவனது சத்தத்தில் தானாக அமர்ந்து விட்டாள்.

பேய் முழியுடன் நின்ற மைத்ரேயனையும் அழுத்தப் பார்வை பார்க்க, தன்னிச்சையாக விஸ்வயுகாவிற்கு அருகில் அமர்ந்து விட்டான்.

அந்நேரம் “எக்ஸ்கியூஸ் மீ” என அறைக் கதவைத் திறந்து உள்ளே தலையை நீட்டிய ஷைலேந்தரி, “ஹை ஹேண்ட்ஸம் கை… உங்க ஆள பார்க்காம இருக்க முடியலையா. ஆபிஸ் ஓபன் பண்ணுனதும் வந்து உட்காந்துட்டீங்க…” என்று கொஞ்சல் மொழியுடன் உள்ளே வர,

“ஆடு தானா தலையைக் குடுக்குது…” என முணுமுணுத்தான் மைத்ரேயன்.

அவளை சீறலாய் நோக்கியவன், “எங்க உங்ககூட இன்னொருத்தன் சுத்துவானே அவனையும் வரச் சொல்லு!” என்று தீயாய் சுட,

‘யப்பா என்ன இவன் கண்ணுல ஃபயர் விடுறான்’ என மிரண்ட படி திடுதிடுவென வெளியில் ஓடியவள் நொடிப்பொழுதில் தமையனையும் அழைத்து வந்து விட்டாள்.

இருவரும் மைத்ரேயனின் அருகில் அமர, ஷைலேந்தரி “என்னவாம்டா என் ‘ஹேண்ட்ஸம் கை’க்கு?” என அவன் காதினுள் கேட்டதில்,

“அவன் உன் ஹேண்ட்ஸம் கை இல்ல ஹேண்ட் கஃப் போட வந்துருக்கான்டி பைத்தியக்காரி” என்றதில், விஷயம் புரிந்து போனது அவளுக்கு.

நந்தேஷ் சற்றே இறுகி, “ஓஹோ… போடட்டும் போடட்டும் நம்ம எதிர்பார்த்தது தான!” என்றான் இயல்பாக.

விஸ்வயுகா கோபத்தை அடக்கியபடி, “உங்கிட்ட எந்த ஆதாரமும் இருக்காது” என அழுத்தமாகக் கூற, “இருக்கே ஏஞ்சல்… ஒண்ணொண்ணா காட்டட்டுமா?” ஒற்றைப்புருவம் உயர்த்தினான்.

அப்போது தான் குறிஞ்சி கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வந்தாள்.

அவளை நந்தேஷ் முறைப்பாக பார்க்க, அவனைக் கண்டுகொள்ளாதவள் போல “சார் லேப்டாப்!” என்று கடமையுணர்ச்சியுடன் மடிக்கணினியைக் கொடுத்தாள்.

அதனை வாங்கியவன், ஒரு வீடியோவை போட்டுக் காண்பித்தான்.

அதில் மைத்ரேயன் ஒரு வீட்டின் மதிற்சுவரில் இருந்து ஏறி குதித்து வெளிவந்து மாஸ்க்கை கழற்றும் காட்சி பதிவாகி இருக்க, மற்ற மூவருமே அவனை கேள்வியுடன் நோக்கினர்.

“நேத்து 7 மணிக்கு ஒரு கொலை நடந்திருக்கு. நீ ஏழு முப்பதுக்கு இந்த வீட்டில இருந்து எஸ்கேப் ஆகிருக்க. எட்டு மணிக்கு எங்களுக்கு தகவல் வந்துருக்கு. அதுக்கு இடைல நான் உங்களை விசாரணைக்கு கூட்டிட்டுப் போய்ட்டேன். மிட் நைட் ஆகிடுச்சு நான் போய் இன்வெஸ்டிகேட் பண்ண. சோ எனக்கு இன்வெஸ்டிகேஷன்ல கிடைச்சது இந்த ஆதாரம்” எனக் கூறி முடித்தவனுக்கு, இதெல்லாம் ஒரே நாளில் நிகழ்ந்தது என்று தான் நம்ப இயலவில்லை.

வெரி லாங் டே… அவளுடன் கூடும் நிலைக்குச் சென்று பின் வெறுப்பை தேக்கி பின் மனமுடையும் விஷயத்தை ஜீரணித்து பின் அவன் அணிவித்த மாங்கல்யத்தை அவனிடமே திருப்பிக் கொடுத்து… இதெல்லாம் ஒரே இரவில் நடந்தவையல்லவா?

அவளுக்கும் சற்று மலைப்பாக தான் இருந்தது. அவனுடன் ஒன்றாய் கழித்த தருணங்களெல்லாம் நினைவிலாட வெகுவாய் தனது எண்ணங்களுக்கு கடிவாளமிட்டாள்.

மைத்ரேயன் அமைதியாக அமர்ந்திருக்க, “வாயைத் திறந்து சொல்லு மைத்ரேயன். அவனை ஏன் கொலை பண்ணுன?” யுக்தா கூர்மையாகக் கேட்க, “ப்ச் நான் கொலை பண்ணல. பண்ணலைன்னு சொன்னாலும் நீ நம்ப போறது இல்லைல…” என்றான் சலனமற்று.

விஸ்வயுகா, “மைதா வாட் இஸ் ஹேப்பனிங் ஹியர்” என்றாள் பற்களைக் கடித்து.

“அவன் தான் நம்ம ஆப்பை விடாம ஹேக் பண்ணிக்கிட்டே இருந்தான் விஸ்வூ. அவனோட லொகேஷனை ட்ரேஸ் அவுட் பண்ணி, நேத்து அவன் வீட்டுக்குப் போய்ட்டேன். ஆனா நான் போனப்போவே அவனை யாரோ கொலை பண்ணிருந்தாங்க. வாயில நுரை தள்ளி செத்துப் போயிருந்தான். அங்க இருந்து உடனே நான் வெளில வந்துட்டேன். இது அந்த ஃபுட் ஏஜ் தான்” என்றதோடு,

“அவனோட டெத் ஆஃப் டைமையும் நான் உள்ள போன டைமையும் கால்குலேட் பண்ணி பார்த்தா கூட உண்மை தெரிஞ்சுடும்” என்றான் யுக்தாவை முறைப்பாக பார்த்து.

“ஆனா நீ உள்ள போனதுக்கான ஃபுட் ஏஜ் இல்லையே. நீ அந்த வீட்டுக்குள்ள போகும் போது பவர் கட். சிசிடிவி எதுவும் ஒர்க் பண்ணல. அந்த நேரத்துல தான் உள்ள போயிருக்க. அதை என்னால ப்ரூவ் பண்ண முடியும் தான். ஆனா மத்த ரெண்டு கொலைல இன்வால்வ் ஆனவனுக்கு நான் ஏன் ஹெல்ப் பண்ணனும்?” கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாகக் கேட்க, அவன் நெற்றியில் வியர்வைப் பூக்கள் பூத்தது.

“ஹா அப்பறம், ரோஜாவோட ஃபியான்ஸ் வெங்கடேஷ் டெத்க்கும் குறிஞ்சியோட ஃபியான்ஸ் விக்ரமோட டெத்க்கும் காரணம் நீங்க தான். அதுக்கு நான் கலெக்ட் பண்ணுன ஆதாரம் பத்தலைன்னா இந்த ஆதாரத்தை நான் யூஸ் பண்ணிப்பேன்” என்று நக்கல் நகையுடன் குறிஞ்சியைப் பார்க்க,

“ஆமா ஆமா… அதுவும் ஸ்லோ பாய்சன் வச்சு யாருமே கண்டுபிடிக்காத மாதிரி தெள்ளந்தெளிவா பிளான் போட்டுருக்காங்க. மர்டர் வெப்பனான சோடியம் ஃப்****டேட் விஷத்தை கை மாத்துறது ஷைலேந்தரி தான். அதை முந்தின நாள் மாப்பிள்ளை மண்டபத்துக்கு வரவும் தண்ணிலயோ, இல்ல அவனுக்குன்னு குடுக்கப் போற ஸ்பெஷல் ஃபுட்லயோ கலந்து கொடுக்குறது ஈவண்ட் மேனேஜ்மெண்ட்ன்ற பேர்ல மண்படத்துலயே இருக்குற நந்தேஷ். அந்த சமயத்துல சிசிடிவி ஃபுட் ஏஜ்ஜை நந்தேஷ் பக்கம் வராம ஹேக் பண்றது மைத்ரேயனோட வேலை. இது எல்லாத்துக்கும் மாஸ்டர் மைண்ட். எந்த விஷத்தை எவ்ளோ அளவு குடுக்கணும், யார்கிட்ட இருந்து வாங்கணும், எப்படி கொடுக்கணும்னு பக்கா பிளான் போட்டுக் கொடுக்குறது மேடம்…” என்று இப்போது விஸ்வயுகாவை காட்டத்துடன் பார்த்தாள்.

நாற்காலியின் பின்னே திமிராய் கை போட்டு சாய்ந்திருந்த விஸ்வயுகா, “வெல் டன். ஐ ஆம் இம்ப்ரெஸ்ட். சோ டெட் பாடில இந்த பாய்சன் தான் இருக்குன்னு கண்டுபிடிச்சாச்சா? அதை நாங்க தான் வச்சோம்னு வீடியோ ஆதாரம் லைக் தட் ஏதாவது?” என்றதும் யுக்தா அவளை விழி சுருக்கி பார்த்தான்.

“என்ன சைக்கோ புருஷா. வெறும் தியரி தான் இருக்கா. அச்சோ வெறும் தியரியை வச்சு என்ன செய்வ எக்ஸ் புருஷா. அண்ட் திஸ் வீடியோ… இது ஃபேக்னு கூட நான் ப்ரூவ் பண்ணிடுவேன்” எனத் தோள்களைக் குலுக்கினாள்.

“ம்ம்ம்…” என்றபடி டேபிளில் கை முஷ்டியை ஊன்றி குனிந்து அமர்ந்தவன், பார்வையை மட்டும் அவள் மீது படரவிட்டு, “ஆதாரம் கிடக்குது. அதெல்லாம் இல்லாத எவிடன்ஸை கூட நான் இருக்குற மாதிரியே ஜோடிச்சுக்குவேன். அதை விடு… அம்மாவோட கொலையிலயும் உன்னோட…” என கண இடைவெளிவிட்டு, “ரேப் சஸ்பெக்ட்ஸ் வெங்கடேஷும் விக்ரமும் தானா?” எனக் கேட்டான் நிதானமாக.

“ஆமா” உடனடியாக அவள் பதில் கூற,

“உனக்கு அவனுங்களைப் பத்தி தெரியலன்னு சொன்ன… அண்ட் ஆல்சோ முகத்தை மூடிருந்தாங்க, டார்க் ரூம்? சோ எப்படி ஃபைண்ட் அவுட் பண்ணுன?” எனக் கேட்டான்.

“அதை உனக்கு சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்ல”

“அவசியம் அவசியமா இருக்கு ஏஞ்சல். பிகாஸ் அன்னைக்கு நடந்த மர்டர்ல இன்வால்வ் ஆனது நாலு பேர் இல்ல ஆறு பேர்…” என்றதுமே அவளிடத்தில் சிறு அதிர்ச்சி.

“வாட்?” அத்தனை நேரமும் வாயில் பிளாஸ்டர் போட்டது போன்று அமர்ந்திருந்த ஷைலேந்தரி கத்தி விட,

“அந்த நாலு பேரைத் தவிர்த்து, அதாவது மெய்ன் அக்கியூஸ்ட்ட விட்டுட்டு அவங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்த ரெண்டு பேரை தான் நீங்க போட்டு தள்ளிருக்கீங்க…” என்று விட்டு சாவகாசமாகப் பின்னால் சாய்ந்தான்.

விஸ்வயுகா யோசனையுடன் இரு விரல்களை தேய்த்தபடி கருவிழிகளை அங்கும் இங்கும் உருள விட,

நந்தேஷ் மெல்லமாக “ஆறு பேர்னு உனக்கு எப்படி தெரியும்?” என்றான் குரல் எழும்பாமல்.

“சிம்பிள் லாஜிக். நாலு பேரும் கிட்னாப்லையும் மர்டர்லையும் ரேப்லையும் இன்வால்வ் ஆகிருக்கானுங்கன்னா, அந்த கண்டெய்னர் வேனை கண்டிப்பா வேற ஒருத்தன் ஓட்டிருக்கணும். பட் ஃப்ரண்ட் சீட்ல ரெண்டு பேர் இருந்துருக்காங்க. அந்த ரெண்டு பேர் தான் வெங்கடேஷும் விக்ரமும். அந்த டைம்ல அந்த ரெண்டு பேர் ட்ரக் யூஸ் பண்ணிருக்காங்க. உள்ள வந்தா, ப்ராப்லம் ஆகும்னு அவங்களை வலுக்கட்டாயமா வேன்ல உக்கார வச்சுட்டு வந்துருக்காங்க க்ரைம்ல டைரக்ட்டா இன்வால்வ் ஆன நாலு பேரும். அதுக்காக அந்த ரெண்டு பேரும் உத்தமனுங்க எல்லாம் இல்ல. அவங்களும் க்ரிமினல்ஸ் தான் ஆல்ரெடி அவங்க மேல ஏற்கனவே ரெண்டு ரேப் கேஸ் பத்தின டவுட் இருக்கு” என்றதில் அவனை நிறுத்திய விஸ்வயுகா,

“இது உனக்கு எப்படித் தெரியும்?” என்றாள் கூர்மையாக.

“நீ என் வேலையைப் பத்தி அப்போ அப்போ மறந்துடுற ஏஞ்சல்” என சில்மிஷத்துடன் கூறியவனிடம்,

“அதெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு. அன்னைக்கு நடந்ததை பத்தியே உனக்கு தெரியாதப்ப நீ எப்படி இவ்ளோ டீடெய்ல் சொல்றன்னு கேட்குறேன்” என்றாள் முறைப்பாக.

அதில் அவன் முகம் தீவிரமாக, “அன்னைக்கு அம்மாவை தேடி நான் அந்த பில்டிங்க்கு வந்தப்ப, ஷு ட்ரேசஸ் இருந்துச்சு. வேனோ காரோ வந்துட்டுப் போன அடையாளமும் இருந்துச்சு.

சோ, யாரோ அவங்களை கிட்னாப் பண்ணி கொலை பண்ண ட்ரை பண்ணிருக்காங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஆனா உடனே என்னால அந்த பில்டிங்கு வந்து இன்வெஸ்டிகேட் பண்ண முடியல. சோ குறிஞ்சியை அனுப்புனேன். அவள் அந்த ஃபுட் ஸ்டெப்ஸ், வேனோட டயர் ட்ரேசஸ் எல்லாத்தையும் போட்டோ எடுத்துட்டு வந்தா. டயரோட ட்ரேசஸ் வச்சு அது கண்டெய்னர் வேன்னு ஃபைண்ட் அவுட் பண்ணுனேன். அந்த ஷு மார்க் பேஸ் பண்ணி, உள்ள வந்தது நாலு பேர்னு புரிஞ்சுக்கிட்டேன்.

அண்ட், பில்டிங்கோட முன்வாசல் வழியா உள்ள வந்தவங்க வெளில போகும் போது பின்வாசல் வழியா போயிருக்காங்க. சோ, அவங்க வெளில வர்ற டைம்க்கு வேனும் அந்த பில்டிங்குள்ளவே சுத்தி பின்வாசல் வழியா போயிருக்கு. சோ அவங்களைத் தாண்டியும் வேன்ல ஆள் இருந்து இருக்காங்கன்னு க்ளியர் ஆகிடுச்சு!” என்றவனை மலைப்புடன் பார்த்திருந்தனர் நால்வரும்.

அவனை நோக்கி மெச்சுதல் பார்வையை வீசிய விஸ்வயுகா, “ஆனா ஆறு பேர்னு எப்படி இவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்ற?” என மீண்டும் வினா எழுப்ப, “இந்தச் சம்பவத்துல சம்பந்தப்பட்டவனே தான் சொன்னான்” என்றான் இதழ் வளைத்து.

புருவம் இடுங்க அவனைப் பார்த்த விஸ்வயுகா “புரியல!” என்க,

“அந்த நாலு பேர்ல ரெண்டு பேரை ஒரிஜினலா போட்டுத் தள்ளுனதே நான் தான ஏஞ்சல்!” என சிகரெட்டை வாயிலிட்டு, அவளது அதிர்ச்சி பரவிய முகத்தை ஓரக்கண்ணில் ரசித்தபடியே லைட்டர் உதவியுடன் பற்ற வைக்க, இங்கு மற்ற மூவரின் வயிறோ தீயில்லாமலே காந்தியது.

“ஸ்கெட்ச் போட்டது எல்லாம் பர்கருக்கு வாங்குன கெட்ச் அப் மாதிரி வேஸ்ட்டா போச்சே” என்ற ரீதியில் நால்வருமே அவனைக் கண்டு அசையாமல் விழித்தனர்.

மோகம் வலுக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
23
+1
134
+1
3
+1
7

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்