Loading

அத்தியாயம் 31

 

நான்கு பெண்களையும் கடத்தியதில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் திணற, துருவ் உடனடியாக, அனைத்து கேமராவையும் செக் செய்தான்.

ஆனால் சரியாக, அவளை தூக்கும்போது மட்டும் கேமரா வேலை செய்யாமல் இருந்திருக்கிறது.

ஆனால் எப்படி அவன் உள்ளே வந்து வெளியில் சென்றிருப்பான் செக்கியூரிட்டியை மீறி… என்று நினைத்துக் கொண்டே, போலீசில் சொல்லியும், எந்த வழியாக சென்றிருப்பார்கள் என்று கெஸ் செய்து, செக் போஸ்டை மடக்கி தேட ஆரம்பிப்பதில் இருந்து எல்லாம் செய்ததிலேயே இரண்டு மணி நேரம் கழிந்தது.

ஆனால் பசங்களுக்கு தான் ஏதோ இரண்டு மாதம் ஆனது போல் இருந்தது தத்தம் துணை இல்லாமல்…

துருவிற்கு அவள் லண்டனில் இருந்து கிளம்பும் போது, மனது ஒரு மாதிரி பிசைந்தது போலயே இப்பொழுதும் இருந்ததே அவனுக்கு மிகவும் பயத்தை கொடுத்தது.

“இல்ல இல்ல என் ஹனியை நான் இன்னொரு தடவை இழக்க மாட்டேன். அவளுக்கு ஒன்னும் ஆகாது… ஷி இஸ் பிரேவ்…” என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டான்.

அர்ஜுனுக்கோ இத்தனை வருடம் கழித்து இப்பொழுது தான், அவள் தான் சொல்வதை காதில் வாங்கி ஒரு நல்ல முடிவாக எடுக்கும் வேளையில் இப்படி ஆகி விட்டதே… அவள் என்ன செய்வாளோ என்று நடுங்கினான்.

அஜய்க்கு சற்று முன், சுஜி பேசியதும், அவளின் முத்தமும் அழுகையை கொடுத்தது.

இவர்கள் இப்படி என்றால், விதுனுக்கு நேரடியாக பதட்டத்தை காட்டவும் முடியவில்லை. துருவை கொலை செய்ய முயற்சித்தவனின் பெண்ணை காதலிக்கிறேன் என்று சொன்னால், மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்தவன், இருந்தும் தன்னால் தான் அவளை கடத்தி விட்டார்கள் என்று எண்ணியும் உள்ளுக்குள்ளே கரைந்தான்.

பின் துருவ் இப்படியே இருந்தால் எதுவும் ஆகாது என்று நினைத்து, உத்ரா காருக்கு அருகில் சென்று ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று பார்த்தான்.

மற்றவர்களையும் தேட சொல்ல, நால்வரும் பார்க்கிங் – இல் தேடினார்கள்.

ஆனால், தடயம் தான் கிடைக்க வில்லை. ஒரு மிரட்டல் கால்களும் வராமல், குழம்பி தவித்துக்கொண்டிருக்கையில் திடீரென துருவ் “அர்ஜுன், சைதன்யா ஹாஸ்பிடல்ல தான இருக்கான்” என்று கேட்க, அர்ஜுனுக்கு அப்பொழுது தான், மீராவை காணவில்லை என்று சொன்ன போது மருத்துவமனையில் எல்லாரும் ஏதோ பதட்டமாக இருந்தது உறுத்தியது.

 அதுவும் போக, முந்தைய நாள் அவன் உடல்நிலையில் சிறிது மாற்றம் தெரிகிறது என்று ஒரு மருத்துவர் அவனிடம் சொல்ல, அவனை என்ன செய்வது என்று துருவிடம் கேட்க மறந்து விட்டான்.

இப்பொழுது உடனடியாக மருத்துவமனைக்கு போன் செய்து கேட்டதில், சைதன்யாவை யாரோ அங்கிருந்து தூக்கி சென்று விட்டார்கள் என்று சொல்ல, துருவ் கோபத்தில் காரை நங்கென்று குத்தினான்.

“அவனை அவனை கொன்னுருக்கணும்… அவனை விட்டு வச்சதுதான் நான் பண்ணுன தப்பு.” என்றதில் அர்ஜுன் அவனை தடுத்து,

“இல்லை துருவ் அப்படியே அவன் தான் காரணம்னாளும், இதை அவன் தனியா செஞ்சுருக்க முடியாது. யாரோட உதவியும் இல்லாம” என்று சொல்ல,

துருவ் “யாரு… யாரு… யாரு அவனுக்கு ஹெல்ப் பண்ணிருக்கணும்.” என்று தலையை தட்டி யோசிக்க பாவம் அவனுக்கு யோசிக்கத்தான் முடியவில்லை. மீண்டும் மீண்டும் காரை போட்டு குத்தி உடைத்துக் கொண்டிருந்தான்.

அவனை அமைதிப்படுத்துவதே மற்ற மூவருக்கும் பெரும் பாடாக இருந்தது. இப்படி அவன் காரை உடைத்து கொண்டிருக்கையிலேயே காரினுள் சென்று கண்ணை மூடி அமர, அவனுக்கு “புருஷா” என்று அவள் கூப்பிடுவது போலவே இருந்து கண்ணீரை கொடுத்தது.

தலையில் கை வைத்து, கீழே குனிந்து அமர்ந்திருந்தவன், கீழே ஒரு பேப்பரும் பேனாவும் சிதறி இருந்ததை கண்டு, அதனை வேகமாக எடுத்தான்.

ஆனால் அதில் ஏதோ கிறுக்கி தான் இருந்தது. உடனே வெளியில் வந்து மற்ற மூவரிடமும் அதனை காண்பிக்க, அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை.  

துருவ் “கண்டிப்பா இது உதி தான் எழுதிருக்கனும். அவளை தூக்கும் போது, க்ளூ குடுக்க ட்ரை பண்ணிருக்கா. ஆனால் அது என்னன்னு புரியல” என்று என்று சில நேரம் அந்த பேப்பரில் “கே” என்ற எழுத்து போல இருந்ததை பார்க்க,

விதுன் “ஒருவேளை இது அவளை கடத்துனவனோட ஃபர்ஸ்ட் லெட்டரா இருக்குமோ.” என்று கேட்க,

அர்ஜுன், “இருக்கலாம். பட் இதை பாரேன் இந்த சைட் திருப்பி பார்த்தா, இது வேற மாதிரி இருக்கு ஏதோ படம் மாதிரி” என்று திருப்பி காட்ட, துருவ் அதை கூர்மையாக பார்த்து விட்டு, “இது அவள் க்ளையண்ட்ஸ் யாரோட லோகோவா இருக்கலாம்ல” என்றான் யோசனையாக.

அஜய் அதனை வாங்கி நன்றாக பார்த்தான். அதை திருப்பி திருப்பி பார்க்க, அப்பொழுது தான், டக்கென்று அவனுக்கு இது துருவ் இடித்த பில்டிங்கின் ஓனர் கிருபாவின் கம்பெனி லோகோ என்று தெரிந்தது.

அந்த லோகோவை அவள் அவசர அவசரமாக கிறுக்கி விட்டிருக்கிறாள். என்று சொன்னதும் விறுவிறுவென நால்வரும் செயல்பட்டனர்.

சுற்றிலும்  இருட்டாய் இருக்க, உத்ரா மெதுவாக கண் விழித்தாள். கை கால் எல்லாம் கட்டப்பட்டு இருந்தது.

யாரோ அவள் மூக்கில் மயக்க மருந்து வைப்பது போல் இருக்க, காரின் மிரர் வழியே பார்த்தவளுக்கு அது, கிருபாவின் ஆள் என்று தெரிந்தது. முடிந்த அளவு மூச்சை அடக்கி திணறியவள், தட்டு தடுமாறி பேனாவை எடுத்து சீட்டில் படுத்து, அந்த லோகோவை போட்டு விட்டு மயங்கி விட்டாள். சுற்றி பார்க்க, அது ஏதோ ஒரு பெரிய சரக்கு வேன் மாதிரி இருந்தது.

என்ன நடக்குது இங்க என்று புரியாமல் அருகில் பார்க்க, மற்ற மூன்று பெண்களும், மயங்கிய நிலையில் கை கால்கள் கட்டிய நிலையில் படுத்திருந்தனர்.

உதி சுஜியை இடித்து, மயக்கம் தெளிய வைக்க, அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. காரில் எதையோ எடுக்க போக, சட்டென்று மயங்கியது போல் இருந்தது அவளுக்கு.

சுஜி, “என்ன பங்கு, யாரு நம்மளை கடத்துனது” என்று புரியாமல் மெதுவாக கேட்க,

உத்ரா, “தெரியல. பட் அவன் செத்தான்.” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே மீரா கண்விழித்தாள்.

மீரா, அர்ஜுனை பார்க்கச் செல்லும் வழியில் ஒரு கார் திடீரென வழிமறித்து, தன்னை கடத்தி விட்டது என சொல்ல,

உத்ரா, “நம்ம மூணு பேரையும் கடத்துனாங்க ஓகே. அதுல ஒரு லாஜிக் இருக்கு. இவளை ஏன் கடத்துனாங்க…” என்று அணுவைப் பார்த்துக் கேட்க,

சுஜி, “அதை அவளையே எழுப்பி கேப்போம்” என்று அவளை இடித்தாள்.

அதில் கண்விழித்த அனு பயந்து கத்திக் கொண்டே, “என்ன ஒன்னும் பண்ணிடாதீங்க எனக்கு ஒன்னும் தெரியாது…” என்று உத்ராவை பார்த்து மிரள,

“லூசா நீ… கத்தாத.” என்று உத்ரா பல்லைக் கடிக்க,

அனு, “எதுக்கு என்னை கடத்துனீங்க. எனக்கு ஒன்னும் தெரியாது.” என்று அவள் அப்பா மேல் பழி உணர்ச்சியில் அவளை கடத்திவிட்டதாக நினைத்தாள்.

உத்ரா கடுப்பாக, “என்னை பார்த்தா உனக்கு கடத்தல் பண்றவ மாதிரி இருக்கா. மூஞ்சியை பேத்துருவேன்…” என்று மிரட்ட, அவள் அரண்டு இருக்க,

மீரா, “ப்ச், அனு. யாரோ நம்மளை கடத்திட்டாங்க. உன்னை நாங்க கடத்துனா எங்க கையும் ஏன் கட்டி இருக்கு” என்று கேட்க, அவள் அப்பொழுது தான் அதனையே கவனித்தாள்.

ஆமால்ல என்று பல்லைக் காட்ட.. உத்ரா, இவளை எதுக்கு கடத்துனானுங்க என்று புரியாமல் இப்பொழுது இந்த வேன் எங்கு செல்கிறது என்றும் தெரியாமல், குழம்பி போனாள்.

ஒரு இடத்தில் வேன் நிற்பது போல் இருக்க, உத்ரா, “எல்லாரும் மயங்குன மாதிரியே இருங்க. அவங்க என்ன பேசுனாலும், என்ன பண்ணுனாலும் ரியாக்ஷன் காட்டாதீங்க ஓகே வா…” என்று சொல்ல மீரா, பயத்தில் நடுங்கினாள்.

மீராவை சமாதானபடுத்தி பின், அனுவை சமாளித்து, நால்வரும் மயங்கி இருப்பது போல் நடிக்க, அவர்களை யாரோ தூக்கி கொண்டு, ஒரு இடத்தில் போட்டது போல் இருந்தது.

உத்ரா லேசாக கண்ணைத் திறந்து பார்க்க, ஒருவன், “இவளுங்களை காணோம்னு அவனுங்க ஊர் ஃபுல்லா சுத்திகிட்டு இருக்கானுங்க. ஆனால் இவளுங்களோட எலும்பு துண்டு கூட அவங்களுக்கு கிடைக்க கூடாது. அதிலயும் இந்த உத்ராவை, கொஞ்ச கொஞ்சமா சாகடிக்கணும்.” என்று வெறி நிறைந்த குரலில் பேச, பெண்கள் அனைவர்க்கும் உடலெல்லாம் நடுங்கியது.

உத்ராவிற்கு அந்த குரலிலேயே தெரிந்து விட்டது. அது, கிருபாவுடைய குரல் என்று…

மேலும் அவன், “அந்த துருவ்… தேவையில்லாமல் என் விஷயத்துல தலையிட்டு, என்னையவே மிரட்டி, என் பிசினெஸ முடக்கி, எனக்கு தண்ணி காட்டிட்டான்.

அது போக என் ஆஃபீஸ்ல எல்லார் முன்னாடியும் என்னை அடிச்சு அசிங்கப்படுத்திட்டான்…” என்று கோபமாக கூறியவன்,

மேலும், “நான் கூட, சொன்னேன்… அதான் அவளை நான் எதுவும் பண்ணலையே அப்பறம் எதுக்கு இப்படி பண்றன்னு அதற்கு அவன், அவளை அழிக்கணும்னு நீ நினைச்சா கூட உன்னை சாவடிச்சுருவேன் என்று என்னையவே கொலை நடுங்க வச்ட்டான்…” என்றான்.

அவன் பேசியதை கேட்ட உத்ரா, அந்த நேரத்திலும் துருவை நினைத்து மெலிதாய் சிரித்துக் கொண்டாள்.

மற்றொருவன், “அவன் மட்டும் இல்ல.. அவன் காப்பாத்தணும்ன்னு நினைச்ச அந்த உத்ராவும், அவள் குடும்பமும் நரக வேதனை அனுபவிக்கனும். என் அண்ணனை படுத்த படுக்கையாக்கினவளை நான் சும்மா விட மாட்டேன்” என்றான்.

இந்த குரல் யாருடையது என உத்ராவிற்கு தெரியவில்லை. ஆனால் அவளுக்கு ஒரு வீல் சேர் மட்டும் தான் தெரிந்தது. அதிலேயே அவள், இது நிச்சயமாய் சைதன்யா சம்பந்தப்பட்டவனாக தான் இருக்கும் என்று கணித்து அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க, அந்த மூவரும் பக்கத்துக்கு அறைக்கு செல்வது போல் இருந்தது.

அவர்களை சுற்றி அடியாட்கள் இருக்க உத்ரா மெல்ல கண்ணை திறந்து, அவர்களுக்கு சந்தேகம் வராதது போல, பின்னாடியே பதுங்கி சென்று, அவள் கை கட்டை, ஒரு டேபிளின் ஆணியில் வைத்து, அறுக்க பார்த்தாள்.

ஆனால். அது மிகவும் கடினமாக தான் இருந்தது. அந்த ஆணி இவள் கையையும் சேர்ந்தே பதம் பார்த்தது.

சிறிது நேரத்தில், வெளியில் வந்த ஆண்கள், அந்த நான்கு பெண்கள் மேலும் தண்ணீரை ஊற்ற எல்லாரும் பதறி எழுந்தனர்.

உத்ரா, துணிச்சலாய் கூர்மையாய் கிருபாவையும் மற்றவர்களையும் பார்த்து விட்டு , வீல் சேரில் அசைவில்லாமல் கண்கள் மட்டும் அவளை கோபத்துடன் நோக்கி கொண்டிருந்த சைதன்யாவை கண்டவள்,

“டேய் உனக்கு எவ்ளோ பட்டாலும் புத்தியே வராதா.” என்று எக்களிக்க, சைதன்யாவின் தம்பி ரித்திஸ் உத்ராவை சப்பென்று அறைந்தான்.

அவன் சைதன்யாவின் ஒன்று விட்ட தம்பி. சைதன்யாவிற்கு பார்வை மட்டும் தான் வேலை செய்யும், வாய் பேசவும் முடியாது. அவனை மருத்துவமனையில் இருந்து தூக்கி வந்து, அவனை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவனை பழி வாங்கவே அந்த ரித்தீஷ் கிருபாவுடன் சேர்ந்து இவ்வளவும் செய்தான்.

ரித்தீஷ் “ஏண்டி நீ என்ன பெரிய இவளா…” என்று மற்ற மூன்று பெண்களையும் சேர்த்தே அடித்தான்.

அதில் உத்ரா, “உனக்கு என் மேல தான கோபம் என்னை என்ன வேணா பண்ணு அவங்களை விட்டுடு” என்று மூச்சு வாங்கி கொண்டு பேச,

அவன், “அப்டியா, உன்னை என்ன வேணாலும் பண்ணிக்க வா” என்று அருகில் வர, அவள் முட்டியை வைத்து, அவன் அடி வயிற்றிலேயே எத்தினாள். அதில் அவனுக்கு கண்ணெல்லாம் சிவக்க, அவளை விட்டு விட்டு, சுஜியை அடித்தான்.

உத்ரா “வேணாம் ப்ளீஸ் அவளை விட்டுடு” என்று சொன்னதை கேட்காமல், அனுவை அடிக்க வர, அப்பொழுது தான் ஒரு அடியாள் வந்து, இவள் மினிஸ்டரின் மகள் என்று சொன்னதும், அவன் யோசனையாய் புருவத்தை சுருக்கினான்.

விதுவுடன் பேசிக்கொண்டிருக்கவும், அவளையும் தூக்கி வந்து விட்டனர். உத்ரா சட்டென்று, “அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவளை விட்ருங்க. அவள் போகட்டும் ப்ளீஸ்” என்று சொல்ல,

ரித்தீஷ் தேவையில்லாமல் மினிஸ்டரிடம் வம்பு வளர்க்க வேண்டாம் என்று யோசிக்க, பின், அவளை மட்டும் ஒன்றும் செய்யாமல், மற்ற பெண்களை தாக்கினான்.

அப்பொழுது அவர்கள் கவனிக்காத நேரம், அனு உத்ராவிற்கு கண்ணை காட்டி அங்கு கீழே கிடந்த கத்தியை அவள் அருகில் தள்ளி விட்டாள்.

உத்ரா சட்டென்று அதனை எடுத்து, கை கட்டை எடுத்து விட்டு, ரித்திஷை குத்து குத்து என குத்தி தள்ளி விட்டு, அவளை தாக்க வந்த மற்றவர்களையும் அடித்தாள்.

இதற்கிடையில் மீராவின் கைகட்டை அவள் அவிழ்க்க, அவள் விறுவிறுவென, சுஜியையும், அனுவையும் விடுவித்தாள்.

 அவர்களை அடிக்க வந்தவனை சுஜி காலை தடுக்கி விட, மீரா, அவன் கையை பிடித்து  வளைக்க, அனு அங்கிருந்த கட்டையை எடுத்து மண்டையிலேயே நன்கு அடித்தாள்.

உத்ரா, கிருபாவின் சட்டையை பிடித்து, மூக்கிலேயே அடிக்க, அவன் சில்லுமூக்கு உடைந்து ரத்தம் பொல பொலவென கொட்டியது.

அப்பொழுது உத்ராவை அடிக்க வந்த ஒருவனை, சுஜி இழுத்து கீழே போட்டு நெஞ்சிலேயே மிதிக்க, மீரா அவனின் காலிலேயே ஏறி மிதிக்க, அனு அந்த கட்டையை வைத்தே, அவன் மண்டையை அடித்தாள்.

ஆனால் அவளும் வெகுநேரமாய் அடித்ததில், அவன் கல்லு மாதிரி இருந்ததை பார்த்த சுஜி, அவளை தடுத்து கட்டையை வாங்கி ஒரு போடு போட அவன் மயங்கியே விட்டான்.

அனு “வாவ்… நானும் படத்துல ஒரு அடி அடிச்சாலே மயங்கிடுவாங்களே இன்னும் மயங்கலையேன்னு நினைச்சேன்…” என்று சொல்ல,

மீரா, “ஆமா உன்னை அவனை அடிக்க சொன்னா நீ பள்ளிவாசல்ல பண்ற மாதிரி மந்திரிச்சு விட்டுகிட்டு இருக்க” என்று முறைக்க,

அவள் “ஹி ஹி நான் அவ்ளோ வீக் ஆ இல்லை அவன் அவ்ளோ ஸ்ட்ராங் ஆன்னு தெரியல..” என்று சொல்லையிலேயே  ஒருவன் அவர்கள் அருகில் வர, அனு மீண்டும் ஒரு கட்டையை எடுத்து அவனை அடிக்க, அவன் அசையவே இல்லை.

சுஜி, வாயை பொத்திகொண்டு அனுவை பார்த்து சிரித்து “அப்போ நீ தான் வீக்” என்று மீராவிடம் ஹை ஃபை கொடுத்து கொண்டு, அவனை சுற்றி வளைத்து அடி பிண்ணி எடுத்தனர்.

ரித்திஷையும் கிருபாவையும் அடித்து தள்ளி விட்டு, அந்த இடத்தின் ஷட்டரை ஓபன் செய்து, உத்ரா அனைவரையும் வெளியில் அழைக்க மீராவும் அனுவும் வெளியில் வந்து விட்டனர். உத்ராவும் பாதி தூரம் சென்று விட்டாள். ஆனால் கடைசியாய் வந்த சுஜி ரித்திஷிடம் மாட்டிக்கொண்டாள்.

அவளை முட்டி போட்டு அமர வைத்து, அவள் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தியவன் உத்ராவை “உள்ள வா” என்று அழைக்க,

அவள் பயந்து “வேணாம் அவளை ஒன்னும் பண்ணிடாத” என்று மிரட்ட, அவன் மேலும் கத்தியை அழுத்தி, “நீ இப்போ வரலை… இவள் தலை துண்டாகிடும்.” என்று சொன்னதும்,

சுஜி, “வேணாம் உதி வராத. உன்னை சும்மா விட மாட்டான் நீ போய்டு உதி. எல்லாரும் போங்க”  என்று அவர்களை அனுப்ப முயன்றாள்.

அவள் அன்பில் நெகிழ்ந்தவள், “நீ இல்லாமல் நான் போக மாட்டேன்” என்று கண் கலங்க கூறி விட்டு அருகில் வர, மீராவும், அனுவும் மீண்டும் உள்ளே வந்தனர்.

உத்ரா, அவர்களை அவசரமாக, “நீங்க வெளிய போங்க” என்று பல்லைக் கடிக்க, மீராவும், அனுவும் முடியாது என்று தலையாட்டினர்.

அதற்குள் ரித்தீஷின் ஆட்கள் அவர்கள் இருவரையும் பிடித்து கொள்ள,  ரித்தீஷ், சுஜியின் கழுத்தில் கத்தியை மேலும் அழுத்தியதில் கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்தது.

உதி நடுங்கி, “ப்ளீஸ் அவளை விட்டுடு… உனக்கு என்மேல தான கோபம்… அவளை விட்டுடு ப்ளீஸ்” என்று மன்றாட, அவள் கெஞ்சுவதை, சைதன்யாவும் சிரித்த கண்களுடன் பார்த்தான்.

ரித்தீஷ் “உன் ஃப்ரெண்ட் மேல உனக்கு இவ்ளோ பாசமா ஹ்ம்ம்…” என்று கழுத்தில் கத்தியை சொருகபோனான்.

உதி முட்டி போட்டு, “உன்னை கெஞ்சி கேக்குறேன் அவளை விட்டுடு. என்னை என்ன வேணாலும் டார்ச்சர் பண்ணு. ப்ளீஸ் அப்டி பண்ணாத ரத்தம் வருதுடா அவளுக்கு… ப்ளீஸ்” என்று கதறி அழுக, சுஜி, கொஞ்ச கொஞ்சமாக சுய நினைவை இழந்து கொண்டு,

“போய்டு உதி… வெளிய போய்டு” என்று புலம்ப, மற்றவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

சுஜியை கீழே தள்ளி விட்டு, உதி அருகில் வந்த ரித்திஷ் “உன்னை டார்ச்சர் பண்றதுக்கு தான கடத்திட்டு வந்ததே.” என்று கத்தியால் அவள் முகத்தை வருட, கிருபா ஒரு கட்டையை எடுத்து அவளை அடித்தான். “என்னையவாடி அடிக்கிற” என்று..

அவன் மேலும் ஒரு அடி அடிக்க போனது மட்டும் தான் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது, அந்த நீளமான குடோனின் முன் வாசலில் இருந்து பின் வாசலில் சென்று விழுந்தான் துருவ் அடித்த அடியில்.

அவனிடம் சென்று கண்ணில் தீப்பொறி பறக்க, ரௌத்திரமாய் நின்றிருந்தவன், “யார் மேல டா கை வச்ச. நான் சொல்லிருக்கேன்ல டா. அவளை அழிக்கணும்னு நினைச்சா கூட உன்னை உயிரோட விட மாட்டேன்னு ஹான்” என்று இரும்பு கைகளை ஓங்கி அவன் செவிலில் விட, அவன் அந்த ஒரு அடியிலேயே மயங்கி விட்டான். அப்படியும் அவனை விடாமல் ஆத்திரம் தீர அடி அடியென அடித்தவன், உத்ராவை தேடி வந்தான்.

இங்கு, மூவரும், தத்தம் துணையிடம் சென்று அவர்களை அருகில் நின்ற அடியாட்களை கொலைவெறியுடன் அடித்து துவைத்தனர். மயங்கி கீழே இருந்தவளின் அருகில் சென்ற, அஜய்,” சுஜி சுஜி” என்று கன்னத்தை தட்ட அப்பொழுது தான் அவள் கழுத்தில் இருந்து ரத்தம் வழிவதை கண்டான்.

அவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை. கத்திக்கொண்டு “சுஜி சுஜி இங்க பாரு சுஜி. என்னை பாரு பஜ்ஜி. பஜ்ஜி என்னை பாருடி” என்று அவளை நெஞ்சில் சாய்த்து கதறி அழுது

“அர்ஜுன் அர்ஜுன் வாடா சுஜியை பாருடா… அர்ஜுன்” என்று கத்தியதில், மீரா வந்து பார்த்து அதிர, அர்ஜுன் அந்த அடியாளை விட்டு விட்டு, சுஜி அருகில் வந்து பார்க்க, அவனும் வெகுவாய் அதிர்ந்து வேகமாய் அவளை செக் செய்தான்.

பல்ஸ் கம்மியாக இருப்பதை உணர்ந்தவன், கர்சீப்பை வைத்து, அவள் கழுத்தில் அழுத்தி, “இன்னும் பத்து நிமிஷத்துல இவள் ஹாஸ்பிடல்ல இருக்கணும். சீக்கிரம் தூக்கிட்டு போ” என்று பதறினான்.

ஆனால் அங்கிருந்தவர்கள் அவர்களை விட தான் இல்லை. அஜய் வெறித்தனமாய் அவர்களை அடிக்க, அர்ஜுன் எதிர்பாராத நேரத்தில், ஒருவன் அவன் வயிற்றில் கத்தியால் குத்தி விட்டான்.

மீரா அதிர்ந்து அர்ஜுன் அருகில் வந்து கதற இதில் அனுவை கடத்தியது இவர்கள் தான் என்று கரணும் அவரின் ஆட்களும் வந்து இவர்களை தாக்க ஆரம்பித்தனர்.

கிருபாவின் ஆட்களை அடி வெளுத்து கொண்டு இருந்த விதுனை மினிஸ்டர் ஆள் ஒருவன் தலையில் கம்பியால் அடிக்க, அதில் அவன் சற்று தடுமாறியதை பயன்படுத்தி, அவனை அடிக்க ஆரம்பித்தனர்.

அனு “அப்பா அவங்க மேல எந்த தப்பும் இல்லைப்பா என்னை காப்பாத்த தான்பா வந்தாங்க” என்று சொல்ல சொல்ல, கேட்காமல், நால்வர் சுற்றி நின்று விதுனை அடிக்க,

அனு “அப்பா அவரை அடிக்க வேணாம்னு சொல்லுங்க ப்பா… ப்ளீஸ் பா. சத்தியமா அவங்க என்னை கடத்தலைப்பா…” என்றவள் அவர் கண்டுகொள்ளாமல் இருக்கவும், கத்தியை எடுத்து அவள் கழுத்திலேயே வைத்து கொண்டு,

“இப்போ நீங்க அவரை விடலை நான் செத்துருவேன்” என்று மிரட்டியதில் அவர் அரண்டே விட்டார். என்ன ஆனாலும் பெண்ணாயிற்றே.

அவர் பதறி அடிப்பதை நிறுத்த சொல்ல, விதுன் அவள் கழுத்தில் கத்தியை பார்த்து அதிர்ந்து “என்ன அனு பண்ற” என்று அதை தள்ளி விட்டவன், தலையில் அடிபட்டதில் ரத்தம் வழிய அப்படியே மயங்கி சரிந்தான்.  இது எல்லாமே, துருவ் அந்த கிருபாவை அடித்து விட்டு வரும் வேளையிலேயே நடந்து விட, குத்துயிரும் குலையுயிருமாய் இருந்த மூவரையும் பார்த்து அதிர்ந்து திகைத்தவன் உடனடியாய் மருத்துவமனை அழைத்து போக சொல்லி, அவசரப்படுத்தினான்.

அனு வேகமாக அவள் அப்பாவும்.. அடியாட்களும் வந்த காரிலேயே அவர்களை மருத்துவமனை அழைத்துப் போக ஏற்பாடு செய்தாள்.

தத்தம் துணையை நினைத்து அழுவதா… தங்களை காக்க நினைத்து, அடிபட்டு இருக்கும் மற்றவர்களை நினைத்து அழுவதா  அழுவதா என்று புரியாமல் மூன்று காதல் மனங்களும் வேதனையில் ரணமாய் துடிக்க, அர்ஜுன், மீராவிடம், “இப்போ நான் செத்துட்டாவாவது நீ உன்னால எனக்கு இறப்பு இல்லைன்னு நம்புவியா மீரா. இப்போ உன்னால நான் சாக மாட்டேன்னு தெரிஞ்சுருச்சுல்ல…” என்று வலியில் முனங்க, அதில் திகைத்தவள் கதறி அழுதாள்.

மூவரும், அவரவர் துணையை ஐ சி யூவில் சேர்க்க.. துருவ் இவர்களை அனுப்பி விட்டு உத்ராவை தேடியதில் அவள் அங்கு எங்குமே இல்லை என்று உணர்ந்து அனைத்து இடத்திலும்  தேடி அலைந்தான்.

கிருபாவும் இங்கு இருக்க, அந்த சைதன்யாவும் இங்கு இருக்க, இப்பொழுது யார் அவளை எங்கு கடத்தி சென்றிருக்கிறார்கள் என்று புரியாமல், கையில் கிடைத்தவளை மறுபடியும் தொலைத்து விட்டோமே என்று உருக்குலைந்து தலையில் கை வைத்து “உதிஇஇஇ” என்று கத்தினான் கண்ணீருடன்.

தென்றல் என்னை
தீண்டினால் சேலை தீண்டும்
ஞாபகம் சின்ன பூக்கள் பாா்க்கையில்
தேகம் பாா்த்த ஞாபகம் வெள்ளி
ஓடை பேசினால் சொன்ன வாா்த்தை
ஞாபகம் மேகம் ரெண்டு சோ்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால்
வாா்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால்
வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா
சொல் சொல்

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே கண்ணீா்
வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீ தான்
கண்ணீாில் நீ தான் கண்மூடி
பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல்…

மருத்துவமனையில் மொத்த வீட்டினரும் கண்ணீருடன் குழும, அஜய் தான், அர்ஜுன் அறைக்கு வாசலில் நின்று “அண்ணா எந்துருச்சுரூடா” என்றும், விதுன் அறை வாசலில் நின்று “டேய் மாமா..” என்று கண்ணீர் விட்டான்.. இதில் சுஜியை நினைத்தாலே, அவனுக்கு உயிர் போவது போல் வலித்தது.

மீரா “அர்ஜுன், ஐ லவ் யு அர்ஜுன் என்கிட்ட வந்துடுங்க அர்ஜுன். இனிமே உங்களை விட்டு எங்கயும் போக மாட்டேன் அர்ஜுன். என்கிட்ட வந்துடுங்க அர்ஜுன்” என்று புலம்பி தவித்தாள்.

அனுவோ விதுவுக்கு தலையில் கட்டு போடும்போது அருகில் நின்றவள் அவனுக்கு எதுவும் ஆக கூடாது கடவுளே என்று கண்ணை மூடி தான் மருத்துவர் என்றும் மறந்து, அங்கேயே கண்ணீர் விட்டு கொண்டிருந்தாள்.

துருவ் உயிரில்லாமல் வெற்றுடலாய் மருத்துவமனைக்கு வர, அங்கு, இவர்கள் மூவரின் நிலை மேலும் அவனுக்கு வலியை கொடுத்தது.

மருத்துவர், “மூவருக்கும் சிகிச்சை அளிக்கபட்டிருக்கிறது எனவும், ஆனால்…” என்று இழுத்ததில் எல்லாரும் பதறினர்.

அவர், “சுஜிக்கு
தொண்டையில் வெட்டு பட்டதால், அவள் பேசுவதற்கு சில காலம் ஆகும்” என்றும், கொஞ்ச நாளைக்கு அவள் பேசவே கூடாது என்று கூறி விட்டு, விதுனுக்கு தலையில் லேசான அடிதான். ஆனால், கண் விழித்தாள் தான் எதுவும் சொல்லமுடியும் என்று விட்டு,

“அர்ஜுன்” என இழுக்க… மீராவிற்கு இதயம் வெளியில் வந்து விடும் போல் இருந்தது.

“அர்ஜுன், வயிற்றில் ஆழமாக கத்தி பட்டதால் பிளட் சர்குலேஷன் கம்மியா இருக்கு… சோ. மூணு பேருமே சுயநினைவுக்கு வந்தா தான் எதுவும் சொல்லமுடியும்” என்று சொல்லிவிட, ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் கரைந்தனர்.

இதில், சுஜியும், விதுனும் சிறிது நேரத்தில் சுய நினைவுக்கு வந்து அபாய கட்டத்தை தாண்டி விட, அவர்களுக்கு ஆபத்து இல்லை என்று சொன்னதில் நிம்மதி பெருமூச்சு விட்டவர்களை அர்ஜுன் தான் படுத்தி எடுத்தான்.  

துருவிற்கு “நண்பனா நான் என்னைக்கும் தோத்து போக மாட்டேன் உன்னையும் தோற்க விட மாட்டேன்” என்று அர்ஜுனின் குரல் காதிலே எதிரொலிக்க, சுயநினைவின்றி படுத்திருந்தவனிடம் சென்று

“நண்பா என்னை மறுபடியும் தோற்க விட்டுடாதடா…” என்று கலங்கிய குரலில் அவன் கையை பிடித்து கொண்டு பேசியவனுக்கு, அப்பொழுது தான் அவனின் ஆட்கள் ரித்திஷை பற்றி சொன்னார்கள்.

அது போக சைதன்யாவை அழைத்து போனது அந்த ரித்தீஷ் தான் என்று உறுதியானதும்,

“என் உதியை உன்னால ஒன்னும் பண்ணமுடியாதுடா” என்று நினைத்து கண் மூடி இருந்த அர்ஜுனை பார்த்து,

“நான் வந்தா, உத்ரா கூடத்தான் வருவேன். இல்லைனா…” என்று நிறுத்தி விட்டு, வெளியில் செல்ல, போக, அர்ஜுனின் கைகள் துருவின் கைகளை பிடித்தது.

மெல்ல கண்விழித்தவன், அவனை அருகில் அழைத்து, மெல்லிய குரலில்  “நீ இருக்குற வரை அவளுக்கும், அவள் இருக்குற வரை உனக்கும் எதுவும் ஆகாது டா நண்பா.. உதியோட வா… நீ வருவ.” என்று பேச இயலாமல் அழுத்தமாய் சொல்ல,

அதில் மெலிதாய் சிரித்தவன், வெறி கொண்ட வேங்கையாய் ரித்திஷைத் தேடி சென்றான்.

அத்தியாயம் 32 

 

துருவின் ஆட்கள் சொன்ன இடத்திற்கு சென்றவன், அங்கு அந்த பாழடைந்த கட்டடத்தில் உள்ளே சென்று பார்த்தான்.

ஒவ்வொரு அறையாக மெல்ல திறந்துப் பார்த்தவன், எங்குமே அவள் இல்லை என்றதும் குழம்பிக் கொண்டே வெளியில் வந்தவன்,

அவனை காணாமல் கோபத்தில் காலை உதைக்க வித்தியாசமாக சத்தம் வந்தது.

மீண்டும் அதை உதைத்தவன், கட்டையில் இடிப்பது போல் சத்தம் வர, விறுவிறுவென அதை உடைத்து பேஸ்மெண்ட்டிற்கு சென்றான்.

அங்கு ரித்திஷ், உத்ராவின் அருகில் நின்று அவளுக்கு போதை மருந்தை சுவாசிக்கக் கொடுப்பதை கண்டவன், அவனை தரதரவென இழுத்து கீழே போட்டான்.

மயக்கத்தில் இருந்த உத்ராவை தட்டி, “ஹனி உதிம்மா… இங்க பாருடா.” என்று உருகிய குரலில் அழைக்க,

அவள் மயக்கத்திலேயே “துருவ்.. துருவ்” என்று முனங்க, அவளை தூக்கிக் கொண்டு வெளியில் வர முயற்சித்தவனை, ரித்திஷ் தாக்கினான்.

உத்ராவை ஒரு ஓரமாய் இறக்கி விட்டு விட்டு, ரித்தீஷின் சட்டையைப் பிடித்து, சுவற்றியில் சாய்த்து, முகத்திலேயே குத்தினான்.

மேலும், அவனை படுக்க வைத்து, அடிவயிற்றிலேயே நங்கு நங்கு என ஏறி மிதித்தவனை, ரித்தீஷின் ஆட்கள் சுற்றி வளைக்க, அவன் நிதானத்திலேயே இல்லை.

யாரை எங்கு அடிக்கிறோம் என்று கூட தெரியாமல், அனைவரையும் புரட்டி எடுத்தான். அவன் அடியை கண்டு நடுங்கிய அடியாட்கள் விட்டால் போதும் என ஓடி விட, ரித்தீஷை அடி அடி என அடித்தான்.

பின், அவனின் ஆட்களை வரவைத்து, ரித்தீஷை அவன் இடத்திற்கு தூக்கி செல்ல சொல்லி விட்டு, உத்ராவை அள்ளிக்கொண்டு மருத்துவமனை வந்தான்.

மற்றவர்கள் “என்னாச்சு உதிக்கு” என்று கேட்க, அவன் யாரையும் பார்க்காமல், எதையும் கேட்காமல், உதியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

பின், மருத்துவர் அவளுக்கு சிகிச்சை அளிக்க, அவளை விட்டு எங்கும் நகராமல், அவளையே பார்த்திருந்தான் துருவ்.

அவளுக்கு போதை மருந்தை கொடுத்தினால் மயக்கமாக இருக்கிறாள் என்று மாற்று மருந்தைக் கொடுக்க, எப்படியும் அவள் கண் விழிக்க ஆறு மணி நேரம் ஆகும் என்று கூறினர்.

அஜய், சுஜியை சென்று பார்க்க, அவள் அவனைப் பார்த்து மெதுவாக முறுவலித்தாள்.

அஜய் அவள் அருகில் சென்று “இப்போ எப்படிடா இருக்கு?” என்று கேட்க, அவள் கண்ணை மூடித் திறந்து எனக்கு ஒன்னும் இல்லை என்று சைகை செய்தாள்.

ஏதோ பேச முயற்சித்தவளுக்கு, பேச முடியாமல் வலியுடன் சேர்ந்து கண்ணீரும் வர, அதனை துடைத்து விட்டவன்,

“ஸ்ட்ரைன் பண்ணாதடா. காயம் ஆறுற வரைக்கும்  பேசக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்க” என்றவனுக்கு, வாய் ஓயாமல் பேசுபவள், இப்பொழுது இப்படி இருப்பது பெரும் வேதனையை கொடுத்தது.

அவள் “உத்ரா எங்க?” என்று வாயை மட்டும் அசைக்க, அதை புரிந்து கொண்டவன், “அவள் நல்லா இருக்கா பஜ்ஜி” என்றதும்,

“மத்தவங்க” என்று கேட்க, “எல்லாரும் நல்லா இருக்காங்க. நீ ரெஸ்ட் எடு… பேச ட்ரை பண்ணாத சரியா” என்று கண்ணில் நீர் தேங்க, நெற்றியில் முத்தமிட, சுஜியின் அப்பா அவனை வெளியில் தள்ளினார்.

இருவரும் அவரை புரியாமல் பார்க்க, அவர், “போதும் என் பொண்ணு உங்க கூட சேர்ந்து படுற கஷ்டம்லாம் போதும். ஃப்ரெண்ட் ஃப்ரெண்ட்ன்னு சொல்லி அவளை கொல்ல பார்த்துட்டீங்கள்ல. போடா முதல்ல வெளிய” என்று அவனை வெளியில் தள்ளினார்.

சுஜி “அப்பா” என்று பேச வர, அஜய், “நீ ரெஸ்ட் எடு சுஜி” என்றவன், அவர் எமோஷனலாக இருக்கிறார் இப்போது பேசக்கூடாது என்று நினைத்து வெளியில் வந்து விட்டான்.

அர்ஜுன் “மீரா” என்று அழைக்க, வேகமாக அவன் அருகில் சென்றவள், “என்ன ஆச்சு அர்ஜுன். எதுவும் வேணுமா. டாக்டரை கூப்பிடவா” என்று பதட்டமாக கேட்க,

அவன் புன்னகையுடன், “ம்ம் வேணும்…” என்றதும், “என்ன வேணுமா அர்ஜுன் தண்ணி தரவா” என்றாள்.

“ஒரு கிஸ் வேணும்” என்று குறும்புடன் கூற, அவன் சொன்னதை உள்வாங்கவே அவளுக்கு சில நிமிடம் பிடித்தது.

அவனை முறைத்தவள், “நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன் அர்ஜுன்.” என்று ஆசுவாசமாகிவிட்டு,

பின், “நீங்க சரியாகி வீட்டுக்கு வந்ததும் நிறைய தரேன்” என்று தலையை சாய்த்துக் கூற, அவன் அவளை விழி விரித்து பார்த்து,

“பார்றா. இதையே நான் இன்னைக்கு காலைல கேட்டுருந்தா இப்படி சொல்லிருப்பியா. கத்தி குத்து பட்டாதான் உங்களுக்குலாம் லவ் வருது” என்று நக்கலடிக்க,

அதில் கண் கலங்கியவள், “சாரி அர்ஜுன்… நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல. நான் காலைலலையே உங்களை பார்க்க தான் வந்தேன். அப்போ தான் அவனுங்க என்னை கடத்திட்டங்க.” என்றாள் பாவமாக.

அர்ஜுன், அவள் கையைப் பிடித்து கொண்டு, “என்ன சொல்ல வந்தன்னு இப்போ சொல்லு” என்று ஆர்வமாய் கேட்டான்.

அதில் அவள் சிவக்க, “அது அது… நீங்க வீட்டுக்கு வந்ததும் சொல்றேன்…” என்று நகரப் போனவளை பிடித்து இழுத்தவன்,

“இப்போ சொல்லு” என்று பிடிவாதமாய் கேட்க,

அவள், “ப்ச் அர்ஜுன்… ஸ்ட்ரைன் பண்ணாதீங்க.” என்று கண்டிக்க, அவன் கேட்கவே இல்லை.

பின், அவளே அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு, “ஐ லவ் யு டாக்டர்” என்று வெட்கத்துடன் சொல்ல, அர்ஜுன் இருக்கும் இடத்தையும் மறந்து “யாஹூஹூ” என்று கத்தினான்.

அதில் வயிற்றில் வலி எடுக்க “ஷ்ஷ்” என்று முகத்தை சுருக்கியதும் அவள் பதறி, “என்ன ஆச்சு அர்ஜுன் வலிக்குதா? எதுக்கு இப்படி கத்துனீங்க. இப்போ பாருங்க எப்படி வலிக்குதுன்னு” என்று கலங்க,

அர்ஜுன், சிறு சிரிப்புடன், அவளை அருகில் இழுத்து, அவள் இதழில் அழுந்த முத்தம் கொடுத்து விடுவித்தான்.

“இப்போ வலிக்கலை என் சீனிக்கட்டி…” என்று சொன்னதில் மீரா செவ்வானமாய் சிவந்தாள்.

அப்பொழுது, சஞ்சு உள்ளே வந்து, அர்ஜுன் அருகில் அமர்ந்து, “ரத்தம் வந்துச்சாப்பா” என்று விழிகளை உருட்டி கேட்க, அவன் தான் அவனை வியந்து பார்த்தான்.

இவ்வளவு நாளாய், நான் தான் அவனின் அப்பா என்று சொல்லி கொண்டிருந்தாலும், சஞ்சுவிடம் அப்படி சொல்ல சொல்லி சொன்னாலும் அப்பா என்று அழைக்காதவன் இன்று அழைத்ததை கண்டதும், மீராவை பார்த்தான்.

காலையில் அவள் தான் சஞ்சுவிடம் அர்ஜுனை அப்பா என்று அழைக்க வேண்டும் என்று கூறி இருந்தாள்.

அர்ஜுன், சஞ்சுவின் கன்னத்தை கிள்ளி “இல்லடா செல்லம். லேசா தான் அடி பட்டுச்சு. சீக்கிரமா சரி ஆகிடும்” என்று சொல்ல,

சஞ்சு, “ஜெரி ஆண்டிக்கு ரொம்ப வலிக்குதாப்பா… அவங்க என்கிட்ட பேச மாட்டுறாங்க” என்று சொல்ல, அர்ஜுனுக்கு தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

பின், விடாமல் சஞ்சு “விது சித்தப்பாக்கு தலைல பெரிய்ய்ய்ய கட்டுப்பா” என்று சொன்னவன்,

“உதி அத்தை என்னை பார்க்கவே மாட்டுறாங்க. துருவ் அங்கிளும் என்கிட்ட பேசமாத்துறாங்க” என்று அவனை யாருமே கண்டுகொள்ளவில்லை என உதட்டை பிதுக்கி அழுகுரலில் கூற, அர்ஜுன் அவனை வாரி அணைத்து,

“எல்லாருக்கும் அடி பட்டுருக்குல்ல சஞ்சுமா… அதான், யாரும் உன்னை கவனிக்கல. நீங்க குட் பாயா வீட்ல இருப்பீங்களாம். எல்லாரும் வீட்ல வந்து உன்கூட பேசுவாங்க. நம்ம டாம் அண்ட் ஜெரி ஷோ கூட பார்க்கலாம்” என்று அவனை சமாதானப்படுத்த சொன்னவனுக்கு கண்ணீரே வந்து விட்டது, அனைவரையும் நினைத்து.

மீரா, அர்ஜுனை சமாதானப்படுத்தி, வீட்டினரையும், சமன்படுத்தி வீட்டிற்கு அனுப்பினாள்.

விதுன் ஆபத்து கட்டத்தை தாண்டியதும், கரண் அனுவை கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார். அவள் எவ்வளவோ கெஞ்சியும் அவர் கேட்கவே இல்லை.

விதுன் கண் விழித்ததும், அவன் கண்கள் அவளைத் தான் தேடி அலைபாய்ந்தன.

அஜய் வேகமாக அவன் அருகில் வந்து “இப்போ ஓகே வா டா.” என்று கேட்க, அவன் தலையை ஆட்டி மீண்டும் அவன் பின்னே தேடினான்.

அஜய் “என்னடா ஏதாவது வேணுமா” என்று கேட்க,  அவன் ஒன்னும் இல்லை என தலையாட்டி மற்றவர்களை பற்றி விசாரித்து விட்டு கண்ணை மூடி கொண்டான்.

அஜய்க்கு தான் என்ன ஆச்சு இவனுக்கு என்று புரியாமல் யோசித்தான். இந்த கலவரத்தில் யாருமே அனுவை கண்டுகொள்ளவில்லை.

சில மணி நேரம் கழித்து, உத்ரா கண் விழித்ததைப் பார்த்த துருவ்.. “ஹனி ஹனி… எப்படிடா இருக்கு இப்போ.” என்று கேட்க,

அவள் “எனக்கு ஒன்னும் இல்லை துருவ்” என்று மெலிதாய் சொன்னதும், துருவிற்கு தான் உடலெல்லம் நடுங்கியது சிறிது நேரம் முன்பு மருத்துவர் சொன்னதை  கேட்டு…

இன்னும் இரண்டு நிமிடம் அதை சுவாசித்திருந்தால், அவள் எப்பொழுதுமே மயக்கத்தில் தான் இருந்திருப்பாள் என்றும், மேலும், போதை மருந்து கொடுத்தால் மட்டுமே உயிர் வாழ்ந்திருக்க முடியும் என்று சொன்னதில், அவனுக்கு இதயமே பதறியது.

இப்போது அதை நினைக்க, அவன் நடுங்கியதை கண்ட உத்ரா, “துருவ் எனக்கு ஒன்னும் இல்ல” என்று அவனை சமாதானப்படுத்த, அவன் அருகில் வந்து அவள் கையில் படுத்து அவளை கட்டி கொண்டு, அழுதான்.

“உன்னை மறுபடியும் தொலைக்க பார்த்துட்டேன் உதி. என் உயிரே எங்கிட்ட இல்லடி…” என்று கலங்க,

உதி, அவனை அணைத்து “அச்ச்சோ அதான் நான் திரும்ப வந்துட்டேன்ல. நீங்க இருக்கும் போது என்னை யாராலயும் எதுவும் பண்ணமுடியாது துருவ்.” என்று சொல்ல, அவன் அவளை விடவே இல்லை.

உத்ரா, “துருவ்…” என்று அழைக்க, அவன் பதில் பேசாமல் இருக்கவும், “துருவ்” என்று மீண்டும் அழைத்தாள்.

அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்து விட்டு, மீண்டும் அவள் நெஞ்சிலேயே புதைந்து கொள்ள, அவள் அவன் முடியை பிடித்து, தலையைத் தூக்கி, “டேய் புருஷா?” என்று கண்டிப்பான குரலில் அழைக்க, சிறு குழந்தையாய் அவளை பாவமாக பார்த்தான்.

“இந்த அப்போ அப்போ அப்பாவியா பார்க்குற மூஞ்சியை எங்க இருந்துடா வாங்குன…” என்று உத்ரா குறும்பாக கேட்க, அதில் அவளை முறைத்தவன்,

அவள் கழுத்தில் முகத்தை புதைக்க, அதில் திணறியவள், “புருஷா கூசுதுடா” என்று சிணுங்கினாள்.

அதில் சிரித்தவன், மேலும் சிணுங்க வைத்தான்.

சிறிது நேரம் கழித்து அவள் மற்றவர்களைப் பற்றி விசாரிக்க, அவன் சொன்னதும், மூவரையும் நினைத்து கண் கலங்கினாள். உடனே மூவரையும் பார்க்க வேண்டும் என்று சொல்ல, விதுன் அறைக்கு அழைத்து சென்றான்.

அங்கு விது, “உதி உனக்கு ஒன்னும் இல்லைலடா “என்று கேட்க, அவள் “அண்ணா” என்று அணைத்து கொண்டு அழுக,

அவன் “ஹே என்ன இது அழுதுகிட்டு… லேசான அடி தான் உதி.” என்று அவள் உச்சந்தலையில் முத்தமிட, அவள் அவன் காயத்தை கண்டு மீண்டும் அழுதாள்.

“ப்ச், உதி நான் தான் சொல்றேன்ல, பிஞ்சு மண்டை. அதான் லேசா அடிக்கவும் உடைஞ்சுருச்சு..” என்று சிரிப்புடன் கூறி, அவளை மேலும் பேசி சிரிக்க வைத்தான்

இதை எல்லாம் கை கட்டி பார்த்திருந்த துருவ்,பின், அர்ஜுனை பார்க்க அழைத்து செல்ல, அங்கு அர்ஜுன் மீரா மடியில் படுத்து கொண்டு கதை பேசி கொண்டிருக்க, மீரா, அவனுக்கு ஸ்பூனில் எதையோ ஊட்டி விட்டு கொண்டிருந்தாள்.

உத்ரா, உள்ளே சென்றதும், “டேய் இந்த ரணகளத்துளையும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்குது” என்று நக்கலடிக்க, மீரா இவர்களை பார்த்து அவசரமாய் எழுந்திருக்க போனாள்.

அர்ஜுன் அவளை விடாமல், “உங்களை விட கம்மி தான்…” என்று கேலி செய்தவன், “ஆனாலும், ஹாஸ்பிடல்ல இருந்துகிட்டு ஒரே பெட்ல படுத்துகிட்டு ரொமான்ஸ் பண்றதுலாம் கொஞ்சம் ஓவர் தான்” என்று கிண்டலடித்தான்.

சிறிது நேரம் முன்பு உத்ராவை பார்க்கலாம் என்று அவள் அறைக்கு வந்து நடந்ததை பார்த்து விட்டு சத்தமில்லாமல் வெளியில் சென்று விட்டான்.

இதில் உத்ரா தான் சிவந்து போனாள். பின் இவனுக்கு எப்படி தெரியும் என்று முழித்து துருவை பார்க்க,

அவன் “உனக்கு என்னடா வந்துச்சு. நான் இங்க கூட ரொமான்ஸ் பண்ணுவேன்” என்று அவள் இடையை அவன் புறம் இழுக்க, உத்ரா பதறி தலையில் அடித்து கொண்டு, “விவஸ்தை கெட்டதுங்க…” என்று திட்டியபடி சுஜியை பார்க்க போனாள்.

அவளை பார்க்க, விதுனும் அர்ஜுனும் வர, அஜயைத் தவிர அனைவரும் அங்கு குழுமினர்.

உத்ரா, அவளைப் பார்த்து கண் கலங்கி, “சாரி சுஜி” என்று சொல்ல, அவள் இவளை முறைத்தாள்.

“உனக்கு ஒன்னும் இல்லைல” என்று சைகையிலேயே கேட்க, அவள் கண்ணீருடன் இல்லை என்று தலையாட்டினாள்.

விதுன் அவர்களை இயல்பிற்கு கொண்டு, வர, “இந்த வில்லனுங்க பண்ணுன ஒரே நல்ல காரியத்துனால கொஞ்ச நாளைக்கு உன்னோட மொக்கைல இருந்து தப்பிக்கலாம்” என்று நக்கலடிக்க, சுஜி, அவர்களை புரிந்து கொண்டு லேசாக சிரித்தாள்.

ஆனால், அவளின் அப்பா வந்து, அவளை உடனே வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்றும் இனிமேல் ஃப்ரெண்ட் மண்ணாங்கட்டி என்று அவளிடம் யாரும் பேச வேண்டாம் என்றும் அவர்களை வெளியில் அனுப்ப முயல,

உத்ரா, “அங்கிள்…” என்று பேசவருவதை கேட்காமல்,

“நீ பேசாத… உன்னால தான் இவ்வளவு பிரச்சனையும்… பொம்பளை பிள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்காம ஊர்ல இருக்குறவங்ககிட்ட எல்லாம் பிரச்சனை இழுத்து, அதுல என் பொண்ணையும் இழுத்து விட்டு கொலை பண்ண பார்த்திட்ட. இப்போ பாரு… எப்படி என் பொண்ணு ஊமையா இருக்காள்னு… அவளுக்கு மட்டும் பேச்சு வரல உன்னை சும்மாவே விடமாட்டேன்” என்று கத்த, உத்ரா அதிர்ந்து போனாள்.

 துருவிற்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்து, அவர் சட்டையை பிடித்தான். உத்ரா அவனைத் தடுத்து, அமைதியாய் இருக்க சொல்ல,

அர்ஜுன், “அங்கிள் அவளுக்கு ஒன்னும் இல்ல. காயம் சரியாகவும் பேச ஆரம்பிச்சுடுவாள்…” என்று சொல்வதை எல்லாம் காதில் வாங்கவே இல்லை.

உத்ராவும், “அங்கிள் என் மேல தான உங்களுக்கு கோபம்… அவள் அஜயை லவ்” என்று சொல்லவருவதற்குள் அவர் கை எடுத்து கும்பிட்டு,

“உங்க குடும்பத்தோட சங்காத்தமே வேணாம். என் பொண்ணை விட்டுடுங்க. இனிமே நீ அவளை பார்க்கவே கூடாது. அவளும் உன்னை பார்க்க வரமாட்டா…” என்று சொல்ல, சுஜி, அப்பா என்று கையை தூக்கி அழைத்தாள்.

அவர், வா போகலாம் என்று அவளை அழைக்க, அவள் இல்லை என்று தலையாட்டினாள்.

அப்பொழுது அஜய் உள்ளே வந்து நடந்ததை பார்க்க, உத்ரா, “அஜய் நீ பேசு. அவரு சுஜியை கூட்டிட்டு போறேன்னு சொல்றாரு” என்றாள்.

அஜய் “அவள் போகட்டும்” என்று சொல்ல, சுஜி, அவனை பாவமாக பார்த்தாள்.

விது “டேய் என்னடா சொல்ற” என்றதும், “அவள் போகட்டும்ன்னு சொன்னேன். கூட்டிட்டு போங்க சார் உங்க பொண்ணை” என்றவன் சுஜியை பார்க்காமல் வேறு புறம் திரும்பி கொள்ள,

அவர் சுஜியை “உனக்கு அப்பா அம்மான்னு நாங்க வேணும்னா எங்க கூட வா இல்லைன்னா அவங்களோடயே போய்டு” என்று சொல்ல, அவளுக்கு தான் என்ன செய்வது என்று தெரியவில்லை.

அஜயையே பார்த்தவள்,பின் உத்ராவை பார்த்து “சாரி” என்று வாய் அசைத்து விட்டு, அவர்களுடன் சென்று விட்டாள்.

உத்ரா கடினமாக, “அந்த மூணு பேரும் எங்க துருவ்” என்று கேட்க,

அவன் “நம்ம கிட்ட தான் இருக்காங்க” என்று சொல்ல, “நான் பார்க்கணும் ரைட் நொவ்” என்று கண்ணில் கோபத்துடன் கூற, துருவ் யோசித்து விட்டு, அவளை அழைத்து சென்றான். அங்கு, மூவரையும் தலைகீழாக கட்டி தொங்க விட்டிருந்தான் துருவ்.

பின், அவர்களை இறக்க சொல்லி விட்டு, உத்ரா கோபம் தீரும் வரையில் அவர்களை அடி பின்னி எடுத்தாள்.

துருவ் “உதி விடு நான் பார்த்துக்கறேன். நீ ஸ்ட்ரைன் பண்ணாத” என்று சொன்னதை கேட்காமல், அவர்களை அடித்து விட்டு அமர்ந்தவள், துருவிடம், ரித்திஷையும், கிருபாவையும் பார்த்து,

“இவனுங்கள உயிரோட விட்றதும் விடாததும் உங்க இஷ்டம். ஆனால்… அப்படி இவனுங்க உயிரோட இருந்தா, வாழ்நாள்ல யார்கிட்டயும் இவனுங்க பேசவே கூடாது…” என்று தீர்க்கமாய் சொல்ல, துருவ் அவள் சொன்னதை அவள் முன்னேயே செய்து முடித்தான்.

அத்தியாயம் 33

 

 

அந்த மூவரையும், உயிர் இருந்தும் உணர்வற்றவர்களாய் ஆக்கி விட்டு, மருத்துவனைக்கு வந்து சேர்ந்தனர் துருவும் உத்ராவும்.

பின், இரண்டு நாட்களில் அர்ஜுனையும், விதுனையும் டிஸ்சார்ஜ் செய்து, வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

இப்படியே ஒரு நான்கு நாட்கள் கடந்த நிலையில், இருவருக்கும் உடல் நிலை சிறிது சரியாக, உத்ராவும், துருவும் எப்போதும் போல் அலுவலகம் சென்று கொண்டிருந்தனர்.

அர்ஜுன் மீராவிடம் காதலை வளர்த்துக் கொண்டும், அஜய் சுஜியின் நினைவில் யாரிடமும் பேசாமல் மௌனமாகவும், விதுன் அனுவை மறக்க முடியாமல் தவித்து, அதை மற்றவர்களிடம் இருந்து மறைத்துக் கொண்டு சாதாரணமாக இருப்பது போன்று நடித்தும் நாட்கள் நகர, அன்று தான், உத்ராவிற்கு அவார்ட் ஃபங்ஷன் இருந்தது.

கண்ணாடி முன்பு நின்று, கிளம்பிக் கொண்டிருந்தவளை ரசித்த துருவ்,

“ஹனி… திஸ் இஸ் ஃபார் யூ” என்று ஒரு பிங்க் நிறத்தில் வேலைப்பாடுகள் நிறைந்த புடவையைக் கொடுத்தான்.

அவள் “வாவ் அழகா இருக்கு துருவ்…” என்று விழி விரித்ததும், அவன் மெலிதாய் புன்னகைத்து, “ரெடி ஆகி வா. நான் வெளிய இருக்கேன்” என்று விட்டு சென்றான்.

அந்த புடவையை ஆசையாக தடவியவள் நேர்த்தியாய், நளினமாய் கட்டிக்கொண்டு வெளியில் வர, மூன்று பேரிடமும் ஏதோ பேசிக்கொண்டிருந்த, துருவ் அவளை பார்த்து இமைக்கவும் மறந்து விட்டான்.

உத்ரா கண்ணாலேயே “எப்படி இருக்கிறது” என்று விழி உயர்த்தி வினவ, அவன் மயங்கி விழுவது போல் நடித்ததில், வெட்கத்துடன் புன்னகைத்தவள், அவனுக்கு அழகு காட்ட., அவன் அவளுக்கு ஃபிளையிங் கிஸ்ஸை காற்றில் கலந்து, அனுப்பினான். 

அதை அவள் சரியாக கேட்ச் பிடித்து, மார்போடு கையை ஒட்டிக்கொள்ள, அவன் அவளை குறுகுறுவென பார்த்து, “லிப்ஸ்டிக் நிறைய இருக்கு” என்று உதட்டில் கை வைத்து சைகை காட்டினான்.

அவள், புருவத்தை சுருக்கி, போன் கேமராவில் தன்னை பார்த்து லிப்ஸ்டிக்கை சரி செய்து அவனிடம் காட்ட, இன்னும் சரி இல்லை என்று தலையாட்டினான்.

மீண்டும் அவள் முகத்தை சுருக்கி சரி செய்து விட்டு காட்ட, அவன் அப்பொழுதும் இல்லை என தலையாட்டி விட்டு, “இரு நான் வரேன்” என்று வாயசைத்து சொல்ல, இவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்து கொண்டிருந்த மூவரும்,

“டேய் போதும்டா… முடியல” என்று கலாய்க்க, விது “டேய், அண்ணன்காரன் முன்னாடியே தங்கச்சிக்கு ஃபிளையிங் கிஸ் குடுக்கருதுலாம் ரொம்ப ஓவருடா” என்று கிண்டல் செய்ய, துருவ் “நீங்கல்லாம் இன்னும் போகலையா. போய் காரை எடுங்க நாங்க வரோம்” என்று உத்ராவை நோக்கி சென்றான்.

உத்ரா, அவன் அருகில் வந்ததும், “ப்ச் லிப்ஸ்டிக் இன்னும் சரி இல்லையா. நான் போய் அழிச்சுட்டு வரேன்” என்று திரும்ப,

அவளை பிடித்து இழுத்தவன்,” நான் சரி பண்ணுறேன் ஹனி.” என்று டிஷ்ஷியூ பேப்பரை எடுத்து, சரி செய்தவன்,

” ம்ம்ஹும்… இது சரி வராது.” என்று பேப்பரை தூக்கி போட்டு விட்டு, அவள் கன்னத்தை தாங்கி, அவன் இதழ் மூலம் சரி செய்ய ஆரம்பித்தான்.

அவன் செயலில் திணறியவள், அவனை தள்ள முயற்சிக்க அவன் அசையவே இல்லை. வெகு நேரம் கழித்து அர்ஜுன் அடித்த ஹாரன் சத்தத்தில் தான் அவளை விடுவித்தான்.

அவன் விட்டதும் அவனை பார்க்க முடியாமல் முகத்தை மூடிக் கொண்டவள், “பிராடு பிராடு… லிப்ஸ்டிக்கை சரி பண்றேன்னு சொல்லிட்டு என்ன பண்ற” என்று தோளில் அடிக்க,

அவன் சிரித்துக் கொண்டே, “ஹே நான் லிப்ஸ்டிக்க தான் ஹனி சரி பண்ணுனேன். இப்போ பாரு கரெக்ட் ஆ இருக்கு.” என்று போன் கேமராவில் காட்ட, அவள், ‘லிப்ஸ்டிக்கை எல்லாம் அழிச்சு விட்டுட்ட’ என்று முணுமுணுத்தாள்.

“என்ன ஹனி சொன்ன எனக்கு கேட்கல” என்று குறும்பாய் கேட்க, உத்ரா வெட்கப் புன்னகையுடன் “ஒன்னும் சொல்லல” என்று வெளியில் செல்ல போனாள்.

துருவ் அவளைப் பிடித்து, அவனே அவளுக்கு உதட்டுச் சாயத்தைப் போட்டு விட்டு, “இப்போ ஓகே போலாமா?” என்று கேட்க, அவனையே ரசித்துக் கொண்டிருந்தவள், அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் கொடுத்து விட்டு, “போலாமே…” என்று சொல்லி வெளியில் சென்றாள்.

அவள் முத்தத்தில் திளைத்தவன், சிரித்துக் கொண்டே வெளியில் வர, வெளியில் பெரியவர்களும் ஃபங்க்ஷன் வருவதற்கு காரில் ஏறி கொண்டிருந்தனர். பெரியவர்களும் சிறியவர்களும் தனி தனி காரில் செல்ல ஏற்பாடாக, அர்ஜுன் துருவை தரதரவென இழுத்து, காரில் அமர வைத்தான்.

அவன் புரியாமல் “எதுக்குடா இப்படி இழுத்துட்டு வர?” என்று கேட்க, காரில் அமர்ந்திருந்த  உத்ராவும், மீராவும் அதே கேள்வியை முகத்தில் தாங்கி அர்ஜுனை பார்க்க, அர்ஜுன் உத்ராவை ஒரு பார்வை பார்த்து விட்டு,

“கன்னத்துல இருக்குற லிப்ஸ்டிக்கை தொடைடா. இதை மட்டும் வீட்டுல பார்த்தாங்க. உங்களோட சேர்த்து எங்களுக்கும் சங்குதான்” என்று முறைக்க,

உத்ரா “ஸ்ஸ்ஸ்” என்று தலையை குனிந்து கொள்ள, மீரா, உதட்டைக் கடித்து கொண்டு, நக்கலாக சிரித்தாள்.

துருவ் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. கண்ணாடி வழியாக பின்னாடி இருந்த உத்ராவை பார்த்து ரசித்துக் கொண்டே, கன்னத்தைத் துடைக்க, உத்ராவுக்கு தான் ‘ஐயோ இவன் ஏன் இன்னைக்கு எல்லார் முன்னடியும்  இப்படி பண்றான்’ என்று வெட்கமாக இருந்தது.

பின், அஜயும், விதுனும் காரில் ஏற, இந்த நேரத்தில் சுஜி இல்லாதது வருத்தமாக இருந்தது.

அந்த நேரத்தில் சுஜி அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி,

“ஹார்ட்லி காங்கிரேட்ஸ் டியர். நான் அங்க இல்லைனாலும் டிவில உன்னை பார்த்துகிட்டு தான் இருப்பேன். என்னோட கைதட்டல் உனக்கு இங்க இருந்தே வரும். அப்பறம்  ப்ரோ கையால அவார்ட் வாங்க போற, அங்க போய் அவரை சைட் அடிச்சுக்கிட்டு மானத்தை வாங்காத பங்கு. என்ஜாய் தி பார்ட்டி… உம்மா” என்று அனுப்பி இருந்தாள்.

அதனைக் கண்டவளுக்கு அவள் அன்பில் கண்ணில் நீர் கசிய, இதற்கு ஒரு முடிவு எடுத்தே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

பின், அனைவரும் விழாவிற்கு சென்று சீட்டில் அமர, விழா இனிதே ஆரம்பம் ஆகியது.

முதலில் சில கலை நிகழ்ச்சிகளுக்கு பிறகு, அந்த விழாவின் தொகுப்பாளர்,

“ஹலோ பிரெண்ட்ஸ். இன்னைக்கு நம்ம என்ன விழாவுக்காக வந்துருக்கோம்னு உங்களுக்கே தெரியும். சவுத் இந்தியால தி நம்பர் ஒன் பிசினெஸ் வுமன் அவார்ட் வழங்குறதுக்காக தான் இங்க கூடி இருக்கோம்.

அண்ட், இந்த விழா இந்த வருஷம் நிறைய விதத்துல  ரொம்பவே ஸ்பெஷல்ன்னு சொல்லலாம். ஏன் அப்படினு கேக்குறீங்களா…

பொதுவா இந்த அவார்ட் வாங்குறது குறைஞ்சது 30 வயசுக்கு மேல இருக்குறவங்களா தான் இருப்பாங்க. அது கூட ரேர் தான்.

ஆனால் இந்த வருஷம் தி வெரி யங். அண்ட் பியூடிஃபுல்… மிஸ் உத்ரா அவர்கள் இந்த விருதை வாங்க போகிறார்கள். அண்ட் இதுல இன்னொரு ஸ்பெஷல் இருக்கு. ஃபர்ஸ்ட் டைம் இந்த பிசினெஸ் ஃபங்க்ஷன்க்கு, ஒரு  இன்டெர்நேஷனல் பிசினெஸ் மேன் அதுவும் இல்லாம, யங் அண்ட் எனர்ஜெட்டிக் அண்ட் ஹாண்ட்ஸம் அப்டின்னு சொல்லிகிட்டே போற அளவுக்கு ஒரு MR ஆஸ்திரேலியா வந்துருக்காரு.

அவரு தான் இந்த அவார்டை மிஸ் உத்ரா அவர்களுக்கு கொடுக்க போறாங்க… ஐ ஹார்ட்லி வெல்கம் தி கிரேட் MR. துருவேந்திரன் ஆன் ஸ்டேஜ் ப்ளீஸ்…”  என்று சொன்னதும், பல பெண் ரசிகைகள் தான் அவனுக்கு சடசடவென கை தட்டினர்.

ஆனால் துருவின் கண்களோ உத்ராவின் மீது மட்டும் தான் இருந்தது.

அவளும் அவனின் கம்பீரத்தையும், மிடுக்காக அவன் சென்ற தோரணையையும் வெகுவாய் ரசித்து கொண்டிருந்தாள்.

பின், தொகுப்பாளர் உத்ராவை மேடைக்கு அழைக்க, அவள் எங்கே இதை எல்லாம் காதில் வாங்கினாள். சுஜி சொன்னது போல் துருவை தான் சைட் அடித்து கொண்டிருந்தாள்.

அஜய் தான், “பங்கு, எல்லாரும் உன்னை தான் பார்க்குறாங்க. ஜொள்ளு விடுறதை நிறுத்து” என்று கேலி செய்ய, அவள் அசடு வழிந்து விட்டு மேடைக்கு ஏறினாள்.

துருவ் உத்ராவையே பார்க்க, அவளும் அவனை மட்டும் தான் பார்த்து கொண்டிருந்தாள். பின் அவன் கையாலேயே அவள் விருதை வாங்க, அவளுக்கு இந்த நிமிட சந்தோசத்தை விவரிக்க வார்த்தையே இல்ல.

யாரென்றே அறியாதவனாய் தன் வாழ்வில் நுழைந்து, இன்றும் அவன் யாரென்று அறியாமல் இருந்தாலும், தன் ஊனிலும் உயிரிலும் இன்னுயிராய் கலந்து விட்டனை காதலுடன் நோக்கினாள்.

பின், தொகுப்பாளர் அவளிடம் பேச சொல்லி மைக்கை கொடுக்க, துருவ் அவளிடம் இருந்து மைக்கை வாங்கினான்.

அவள் புரியாமல் அவனைப் பார்க்க, அவன் சிறு சிரிப்புடன் கணீர் குரலில்,

“குட் ஈவினிங் லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்… ம்ம்… உத்ராவுக்கு பதிலா இங்க நான் ஒரு 10 மினிட்ஸ் பேசலாம்னு நினைக்கிறேன். இஸ் தட் ஓகே” என்று தொகுப்பாளரைப் பார்க்க,

அவன், “தாராளமா பேசுங்க சார்…” என்று சொல்லவும்,

“தேங்க்ஸ்.” என்று, குழப்பமாய் நின்றிருந்த உத்ராவை பார்த்து விட்டு, பேச ஆரம்பித்தான்.

“ஒரு சின்ன ஸ்டோரி சொல்ல போறேன். இதை கேட்டுட்டு… உங்களுக்கு புரிஞ்சா நீங்களும் தாராளமா பதில் சொல்லலாம்” என்று சொல்லி விட்டு, சிறு இடைவெளி விட்டு,

“ஒரு ஊர்ல ஒருத்தன் இருந்தான். அவனை சுத்தி இருக்குறதுலாம் பால்ன்னும். தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாதுன்னும், நம்மளை யாராலயும் ஏமாத்த முடியாதுன்னும் ரொம்ப கெத்தா இருந்தான்.

ஆனால் அவனுக்கு ஒரு முதல் சோதனை அப்போ தான் வந்தது. தன்னை சுத்தி இருக்குறவங்களுக்காக, அவங்க நட்பை பாதுகாக்குறதா நினைச்சு ஒரு சின்ன பொண்ணை ஏமாத்த முயற்சி செஞ்சான்

ஆனால் அந்த பொண்ணு அவன் வாழ்க்கையிலே ஏற்படுத்துன மாற்றம் அளவில்லாதது.

அவனை சுத்தி இருக்குறவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு புரிய வச்சா. அவளோட அன்பு, அவன் மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அவன் குணத்தையே மாத்தும்ன்னு புரிய வச்சா.

அவளை ஏமாத்தி அவளுக்கு துரோகம் பண்ணனும்ன்னு நினைச்ச அவனை காதலால மொத்தமா மாத்துனாள்.

ஒரு கட்டத்துல, அவள் தான் அவனோட வாழ்க்கையா உயிராவே ஆனாள்…” என்று உத்ராவை பார்க்க, அவள் கண்ணில் நீர் வழிய திகைத்து நின்றிருந்தாள்.

பின் துருவ் தொடர்ந்து, “அவன் அவளை எவ்ளோ லவ் பண்ணுனான்னா… அவளுக்காக அவன் உயிரையே குடுக்குற அளவுக்கு…

ஆனால், அப்பறம் தான் அவனுக்கு இன்னொரு சோதனை வந்தது. அந்த பொண்ணு அவனை மறந்துட்டா. மறந்துட்டான்னா ஒரு விபத்துல, அவளுக்கு பழசுலாம் மறந்து போய்டுச்சு. அதுல அந்த பையனை மட்டும் அவள் மறந்துட்டாள்.
அவளுக்கு ஒரு சின்ன ஞாபகம் கூட இல்லை.

அந்த பையனுக்கு பயம். எங்கே அவள் முன்னாடி போய் நின்னால், தன்னை யாருன்னு அவள் கேட்டுடுவாளோன்னு…

அந்த ஒரு வார்த்தை அவன் உயிரையே எடுக்குற அளவுக்கு வலிக்கும்னு நினைச்சு அவளை விட்டு பிரிஞ்சு போய்ட்டான்..” என்று குரல் கமர கூறியவன் தன்னை சமன்படுத்திவிட்டு,

“என்னைக்காவது அவளுக்கு அவனோட ஞாபகம் வரும்… அப்போ கண்டிப்பா அவனைத் தேடி அவள் வருவாள்ன்னு அவன் காத்திருக்க ஆரம்பிச்சான்.

ஆனால் அப்போ இன்னொரு சோதனையா மறுபடியும் அவன் அவள் முன்னாடி போய் நிற்க வேண்டியது இருந்தது. அதுவும் தப்பான சிச்சுவேஷன்ல.

எவ்வளவு தப்பான்னா…? அந்த பொண்ணு அவன் ஒரு பெண் பித்தன், அவள் வாழ்க்கையை கெடுக்க வந்த அரக்கன்னு நினைக்கிற அளவுக்கு…

அவள் அவன் காதலை மறந்ததை விட, அவள் அவனை தப்பா நினைச்சதை தான் அவனால தாங்க முடியல. அது அவன் மனசுல உறுத்திக்கிட்டே இருந்துச்சு. அப்பறம் ஒரு கட்டத்துல வேற வழி இல்லாம அந்த பையன் யாருன்னும், அவங்களுக்கு இருந்த ரிலேஷன்ஷிப் பத்தியும் அந்த பையன் வாயாலேயே சொல்ல வேண்டியதா போய்டுச்சு. ஆனால்… இதுல ஆச்சர்யம் என்னன்னா?

அவனை தப்பாவே நினைச்சுருந்தாலும் அப்போ அந்த பொண்ணு அவனை நம்புனா. அவன் வார்த்தையை முழுசா நம்புனா.

ஆனால் அப்போ அந்த பையனால அவளோட காதலை ஏத்துக்க முடியல. அவள் பாவம் பார்த்து காதலிக்கிகறாளோனு ஒரு ஃபீலிங்… அவளை தவிர்க்க முயற்சி செஞ்சான்.

அவளுக்கு ஞாபகம் வர்ற வரைக்கும் அவளுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு அவளை அவாய்ட் பண்ணுனான்.

ஆனால் அப்போ தான் அவள், அவன் மேல எவ்ளோ காதல் வச்சுருக்கான்னுக்கு அந்த பையனுக்கு புரிய வச்சா. அந்த பையனும் புருஞ்சுகிட்டான். அவள் மறந்துருந்தாலும், அவள் இன்னும் அவனை நம்புறான்னு நினச்சு அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான்…” என்றவன் நிறுத்தி கலங்கிய கண்ணுடன், உத்ராவை பார்க்க, அவள் கண்ணெல்லாம் சிவந்து போய் நின்றிருந்தாள்.

“அப்போ, அந்த பொண்ணு அவளுக்கு ஞாபகம் வந்ததும் தான் அவனை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டாள். அவளுக்கு பயமாம்…

எங்க அந்த பையன் அவளோட ஒரிஜினாலிட்டியை விட்டுட்டு பழைய காதலியை அவள்கிட்ட தேடி, அது கிடைக்கலைன்னா அவளை விட்டு போய்டுவானோன்னு… இது நியாயம் தான” என்று கேட்க, அவனின் குரலிலேயே ஏதோ வசியம் இருக்க அந்த சபையில் அமர்ந்திருந்த அனைவரும், கண்ணில் நீர் கோர்க்க, “நியாயம் தான்” என்று கத்தினர்.

அவனும் தலையாட்டி “ம்ம் அந்த பையனுக்கும் அது நியாயமா தான் பட்டுச்சு… ஆனால் அவளுக்கு ஞாபகம் எப்போ வரும்னே தெரியாம அவன் விலகி… ஒருவேளை ரொம்ப வருஷம் கழிச்சு அவளுக்கு எல்லாமே ஞாபகம் வந்தால், அப்போ அவன் சட்டையை பிடிச்சு நான் தான் வேணான்னு சொன்னா நீ ஏண்டா என்னை கல்யாணம் பண்ணிக்கலைன்னு கேட்டா என்ன பண்றது?

அது போக, இன்னொரு தடவை அந்த பொண்ணை தெரிஞ்சே தவற விட அந்த பையனுக்கு விருப்பம் இல்லை. ஏன்னா அந்த பையன் அப்போ இருந்த பொண்ணை மட்டும் இல்லை.. இத்தனை வருஷத்துல, எல்லாமே மாறி அந்த பையனுக்கே டஃப் குடுக்குற அளவுக்கு பெரிய அளவுல வளர்ந்து நிற்கிற அந்த பொண்ணை இப்பயும் உயிரா காதலிக்கிறான்…

அவன் அவளோட ஒரிஜினாலிட்டியை தான் காதலிக்கிறான். அந்த பொண்ணு எப்படி இருந்தாலும், அவன் காதலிப்பான். ஆனால் இப்போ அந்த பையன் ஒரு முடிவு எடுத்துருக்கான்…” என்று அமைதியாய் இருக்க, உத்ராவிற்கு மறுபடியும் தன்னை விட்டு செல்ல போகிறேன் என்று சொல்ல போறானோ என்று இதயம் பயத்தில் வேகமாக துடித்தது.

அங்கிருந்தவர்களும் அந்த பையன் இப்பொழுது என்ன முடிவு எடுத்துருக்கிறான் என்று கேட்க ஆர்வமாகவும் பதட்டமாகவும் அமர்ந்திருக்க, துருவ் மெலிதாய் சிரித்து கொண்டு,

“அந்த பையன் இப்போ இந்த நிமிஷத்துல இருந்து அவளை புதுசா காதலிக்க போறான். அவளை மாதிரியே அந்த பையனும் பழசை மறந்துட்டான். ஆனால் அவள் மேல இருந்த காதலை மறக்கலை.

இப்போ இந்த இடத்துலயே, இங்க அத்தனை பேர் முன்னாடியும் அந்த பையன் அந்த பொண்ணுகிட்ட ப்ரொபோஸ் பண்ண போறான்…” என்று சொல்ல, அனைவரும் யார் அது என்று திரும்பி திரும்பி பார்த்தனர்.

உத்ராவிற்கு வெடித்து வந்த அழுகையை கட்டுப்படுத்தவே போதும் போதும் என்றானது. துருவ் சபையை பார்த்து “அந்த பையன் எடுத்த முடிவு சரிதான” என்று கேட்க, அனைவரும் “சரி சரி” என்று கத்தினர்.

இப்பொழுது அவன், அர்ஜுனை பார்க்க, அவன் ஒரு பொக்கேவையும் மோதிரத்தையும் அந்த தொகுப்பாளரிடம் கொடுத்து துருவிடம் கொடுக்க சொன்னான். பாவம் அவருக்குத்தான் எதுவுமே புரியவில்லை.

அதனை துருவ் கையில் வாங்கி விட்டு, “பாத்துக்கோங்க பிரதர்ஸ்  அண்ட் சிஸ்டர்ஸ். இப்போ உங்க எல்லார் முன்னாடியும் அந்த பையன் அவளோட ஆசை காதலிக்கு ப்ரொபோஸ் பண்ண போறான்…” என்று சிறு சிரிப்புடன் சொல்லி விட்டு,

உத்ராவின் முன் முட்டி போட்டு அமர்ந்து, பொக்கேவை நீட்டி “ஐ லவ் யு உத்ரா… என் உத்ரா எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும். அப்போ இருந்த உதியா இருந்தாலும், இப்போ இருக்குற என் உத்ராவா இருந்தாலும்… எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். லவ் யு ஹனி…” என்று அளவில்லா காதலுடன் சொல்ல, அவள் அவனை தாவி அணைத்துக் கொண்டு, கத்தி அழுதாள்.

தேம்பி தேம்பி அவள் அழுக, அவளை விலக்கியவன் அவள் கண்ணைத் துடைத்து, “நோ மோர் டியர்ஸ் ஹனி…” என்று அவள் கண்ணை துடைத்தான்.

அங்கிருந்த அனைவரும் இவர்கள் அன்பில் நெகிழ, அங்கு உத்ராவின் குடும்பமும் இதனை ஆனந்தத்துடன் பார்த்தது. துருவ் அவர்களிடம் அனைத்தும் கூறி இருந்தான். அவர்களின் சம்மதத்துடன் தான் இங்கு இவ்வளவும் பேசினான்.

மீண்டும் பொங்கி வந்த அழுகையுடன் அவனைக் கட்டி கொண்டவளிடம், “நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா ஹனி” என்று கேட்க,

அவள் “எப்போடா புருஷா கல்யாணம் பண்ணிப்ப?” என்று தலையை சாய்த்து, அழுகையும் சிரிப்பும் கலந்து கேட்க, அவன் “இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம் ஹனி நான் ரெடி தான்” என்று கண்ணடிக்க, ஆண்கள் மூவரும் ஓ வென கத்தினர்.

உத்ரா, சிறு சிரிப்புடன், “அப்போ பண்ணிக்கோ” என்று குறும்பாய் சொல்ல, அவன் சிறு புன்னகையுடன், ஒரு மோதிரத்தை அவளின் விரலில் கண்ணில் காதலுடன் போட்டு விட்டான்.

பின் அவள் கையை பிடித்து முத்தமும் கொடுத்து, “ரெண்டாவது தடவை இப்போ கல்யாணம் பண்ணிருக்கோம் ஹனி.” என்று அவள் நெற்றியில் முத்தம் கொடுக்க, அதில் பெண்ணவள் சிவந்து போனாள்.

சுற்றி இருக்கிறவர்களை மறந்து இருவரும் கண்ணிலேயே பேசிக்கொள்ள, விது தான், “இவன் இப்போதைக்கு அடங்கமாட்டான். இதுங்க ரொமான்ஸை ஸ்டாப் பண்ணுங்கடா” என்று மற்றவரிடம் சொல்ல, மூவரும் மேடையில் வந்து, துருவை தூக்கி சுற்றினர்.

அவர்களும் அவன் பேசியதில், உருகி போய் தான் இருந்தனர். பின், பெரியவர்கள் நால்வரும், உத்ராவை  உச்சி முகர்ந்து, உணர்ச்சி பெருக்கில் இருந்தனர்.

பின் விழா முடிந்து, கிளம்பும் வேளையில், துருவும் உத்ராவும் பிறகு வருவதாய் சொல்ல, மற்றவர்கள் கிளம்பினர். உத்ராவிடன் போன் அஜயிடம் தான் இருந்தது.

அப்பொழுது, சுஜி “பங்கு செம்ம ரொமான்டிக் சீன் பங்கு… ப்ரோ சூப்பர். சோ ஹாப்பி ஃபார் யு டியர்… சீக்கிரம் கல்யாண பத்திரிக்கை அனுப்பு.”  என்று குறுஞ்செய்தியில் பல முத்த ஸ்மைய்லிகளையும் வாழ்த்து படங்களையும் அனுப்பி இருந்தாள்.

அவள் பெயரையே ஆசையாய் வருடிக்கொண்டிருந்தவனைப் பார்த்த விதுன், அவன் தோளை தட்டி, சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றான்.

காரில், உத்ரா துருவின் தோளில் சாய்ந்து கொண்டு, நடந்ததை நினைத்து கொண்டே வர, துருவ் “ஹனி.” என்று அழைத்தான்.

அவள் நிமிர்ந்து, என்னவென்று பார்க்க, அவன் “என்ன ஹனி எதுவுமே பேச மாட்டேங்குற…” என்று கேட்டதும், அவள் எக்கி அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து, மீண்டும் தோளிலேயே சாய்ந்து கொண்டாள்.

அதில் சிரித்தவன், “உதி… இப்போ எப்படி இருக்கு தெரியுமா… மனசெல்லாம் அவ்ளோ லேசா உலகத்தையே ஜெயிச்ச மாதிரி… ரொம்ப ஹாப்பியா இருக்கு.” என்று சிலிர்த்த படி சொல்ல,

அவள் எதுவும் சொல்லாமல் புன்னகைத்து, மீண்டும் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

துருவ் “ஹே நான் கார் ஓட்டிக்கிட்டு இருக்கேன். அமைதியா வா.” என்று பொய்யாய் கண்டிக்க, அவள் அவனை இழுத்து, நெற்றியில் முத்தமிட்டாள்.

அதற்கு மேல் பொறுக்க முடியாமல், காரை ஓரமாக நிறுத்தியவன், “ஏண்டி மனுஷனை கொல்ற…” என்று பாவமாக கேட்டதில்,

அவள் “லவ் யு டா புருஷா” என்று அவன் கழுத்தை கட்டி கொண்டு சொல்ல, அவன் முறுவலித்து, அவள் நெற்றியில் முட்டி, “பொண்டாட்டி. இப்படிலாம் பார்க்காதடி. அப்பறம் நான் காருன்னு கூட பார்க்க மாட்டேன்…” என்று மிரட்டினான்.

 “என்னடா புருஷா பண்ணுவ… ஹ்ம்ம்?” என்று உத்ரா கேலியாய் கேட்க,

அவன் “ஹக் பண்ணுவேன்டி…” என்று சொல்ல,

அவள் “பண்ணிக்கோ” என்றதும்,

“கிஸ் பண்ணுவேன்” என்றான்.

அவள் தோளை குலுக்கி “பண்ணிக்கோ” என்று அசட்டையாக சொல்ல, அவன் அவளை சுவாரசியமாய் பார்த்து, காதில் ஏதோ கிசுகிசுக்க, அவள் ஐயோ என்று வெட்கத்தில் முகத்தை மூடி கொண்டு, “காரை எடு.” என்றாள்.

அவளை பார்த்து வாய் விட்டு சிரித்தவன், அதே சிரிப்புடன் காரை வீட்டிற்கு விட்டான்.

மறுநாள், உத்ராவை தவிர வீட்டினர் அனைவரும் பேசிக்கொண்டிருக்க, கருணா உத்ரா துருவ் திருமணத்தை பற்றி பேசினார். உடனே கல்யாண தேதி குறிக்கிறேன் என்று சொல்ல, மற்றவர்களும் ஆர்வமாய் துருவை பார்த்தனர்.

அவன் சிறிது யோசித்து விட்டு, “இல்ல அங்கிள் நான் ரெண்டு நாள்ல ஆஸ்திரேலியா போகணும். அங்க நிறைய வேலை பெண்டிங்ல இருக்கு. சோ 2  மந்த்ஸ் போகட்டும்.” என்று சொன்னதும், ஆண்கள் மூவரும் பொங்கி விட்டனர்.

அர்ஜுன், “இந்த கதையே வேணாம். நீ எங்க போறதுனாலும் அவளை கல்யாணம் பண்ணி கூட கூட்டிகிட்டு போ” என்று சொல்ல,

அஜய், “ஆமா துருவ் இங்க இருக்குற வேலையெல்லாம் நாங்க பாத்துக்குறோம். அவள் அங்க இருந்து மானிடர் பண்ணுனா மட்டும் போதும்.” என்றதும்,

விது “அவள் உன்னை விட்டு இருக்க மாட்டாள். துருவ். நீ பாட்டுக்கு போறேன்னு சொல்ற.” என்று கடிந்தவர்களுக்கு, அவனை இங்கயே இருக்க சொல்ல வாய் வரை வந்தது.

ஆனால், என்ன இருந்தாலும், பெரிய ஸ்டேட்டஸில் இருப்பவன், உத்ராவிற்காக அனைத்தையும் விட்டு விட்டு இங்கு வந்து அனைவர் முன்னிலையிலும், அவன் மரியாதை பற்றி எல்லாம் நினைக்காமல், அவளிடம் முட்டி போட்டு காதலை யாசகம் கேட்டு, இப்பொழுது, இங்கயும் அனைவரிடமும் நன்முறையில் பழகுகிறான்.

இதற்கு மேலும், அவனை இறங்கி போக சொல்வது மிகவும் தவறு. என்ன இருந்தாலும், அவன் இந்த வீட்டு மாப்பிள்ளை ஆகிற்றே என்று மூவரும், கூடவே பெரியவர்களும், வார்த்தையை விழுங்கினர்.

துருவ், “நான் உத்ராகிட்ட பேசிட்டேன் விது. இங்கயும் நிறைய வேலை இருக்கு… சோ” என்று சொல்ல,

லட்சுமி, “உங்க ரெண்டு பேருக்கும் எப்போ தான் வேலை இல்லாம இருந்துருக்கு. எப்போ பாரு வேலை வேலைன்னு தான சுத்துறீங்க.” என்று முகத்தை தூக்கி வைத்து கொள்ள,

அவன் புன்னகைத்து, “இல்ல ஆண்ட்டி. கொஞ்சம் ஒர்க் மட்டும் முடிச்சுட்டு ஃபிரீ ஆகிட்டு கல்யாணம் பண்ணுனா தான் நானும் அவள் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியும். தென் அவளுக்கு எல்லாத்தையும் செட் ரைட் பண்ண டைம் வேணும்” என்று சொல்ல, மற்றவர்கள் மறுக்க, உத்ரா அங்கு வந்தாள்.

அவளிடம் அர்ஜுன், “உதி இவன் ஆஸ்திரேலியா போறேன்னு சொல்றான்” என்று சொல்ல,

அவள் “ம்ம் தெரியுமே… நான் தான் போயிட்டு வர சொன்னேன்” என்றதும், கருணா கல்யாணம் செய்து கொண்டு போக சொல்ல, உத்ரா பிடிவாதமாக, “நான் அன்னைக்கே சொன்னேன்ல பெரியப்பா. எங்க நாலு பேருக்கும் ஒரே நாள்ல தான் கல்யாணம் நடக்கணும்னு…” என்று சொல்ல,  அஜயும், விதுவும் வெகுவாய் அதிர்ந்தனர்.

அஜய், சட்டென்று எழுந்து, “லூசுத்தனமா பேசாத உதி. நடக்குற காரியத்தை பேசு.” என்று திட்ட,

விது, “உதி… அர்ஜுன் ரூட்டும் க்ளியர் தான. அவனுக்கும் உனக்கும் வேணும்னா ஒரே நாள்ல கல்யாணம் வைக்கலாம்” என்று ஐடியா கொடுக்க, அவள் அழுத்தமாய், “நம்ம எல்லாருக்கும் ஒரே நாள்ல கல்யாணம் நடந்தா எங்க கல்யாணம் நடக்கும்.” என்று சொல்ல, இருவரும் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

அத்தியாயம் 34

 

அஜயும், விதுனும் எவ்வளவோ சொல்லியும், உத்ரா காதில் வாங்கவே இல்லை. துருவிடம் பேசி பார்த்தும் பயனில்லை. அவன் உத்ரா, தலைகீழே நின்று தண்ணீர் குடிக்க சொன்னாலும், உடனே செய்வேன் என்பது போல், அவள் முந்தானையை பிடித்துக் கொண்டே அலைந்து கொண்டிருந்தான்.

விது தான் “எப்படி இருந்தவன் எப்படி ஆகிட்டான் பாருடா” என்று தலையில் அடிக்க,

அஜய், “ப்ச்… இவள் என்னடா இப்படி பண்றா. அவளுக்கும் அர்ஜூனுக்கும் இப்போ தான் எல்லா பிரச்சனையும் சரி ஆகியிருக்கு. இந்த டைம்ல இப்படி ஒரு பிரச்சனை” என்று சலிக்க,

விது, “நீ ஒரு தடவை சுஜி அப்பாகிட்ட பேசி பாருடா. இல்லை இன்னும் நம்ம வீட்ல உன் லவ் மேட்டர் தெரியாது. வீட்ல சொல்லி அவங்க வீட்ல பேச சொல்லலாம்” என்றான்.

அவன் மறுப்பாய் தலையசைத்து, “அந்த ஆளு ஏதாவது விதண்டாவாதமா பேசுவாருடா. எதுக்கு நம்ம வீட்டுல இருக்குறவங்களை அசிங்கப்படுத்தனும்.” என்று கடுப்புடன் சொன்னான்.

அப்பொழுது, மீரா அஜயைப் பார்க்க, அவனும் அவளைப் பார்த்து வேண்டாம் என்று கண்ணைக் காட்டினான்.

யார் கவனிக்கவில்லை என்றாலும், இவர்களின் பார்வை பரிமாற்றத்தை அர்ஜுன் கவனித்து விட்டான்.

மீரா, கொஞ்ச நாளாகவே சோர்வாக இருப்பது போல் தோன்ற, இதனைப் பற்றி கேட்டே ஆக வேண்டும் என்று துருவ் உத்ராவிடம் சொல்ல, அவர்களும் அவள் அசந்த நேரத்தில் தனியாக அழைத்து சுற்றி நின்று என்ன என்று கேட்டனர்.

அவள் புரியாமல் “என்ன என்ன?” என்று கேட்க,

அர்ஜுன், “ம்ம் உனக்கும் அஜய்க்கும் நடுவுல என்ன ரகசியம் ஓடுது. அவன் எதை உன்கிட்ட சொல்லக்கூடாதுனு கண்ணை காட்டினான்.” என்று நேரடியாகவே கேட்டுவிட, அதில் அதிர்ந்தவள், “அது அது… அப்டிலாம் ஒன்னும் இல்லையே” என்று சமாளிக்க,

உத்ரா, “ப்ச் உனக்கு பொய் சொல்லலாம் வரல மீரா. உண்மையை சொல்லு.” என்று கண்டிப்பாய் கேட்க,

துருவ் “நீ ஏதாவது சொன்னா தான. அவங்க பிரச்னையை சரி பண்ண முடியும் சொல்லு மீரா” என்றான் பிடிவாதமாக.

அவள் “இல்ல அண்ணா அது… வந்து, அஜய்கிட்ட நான் ப்ராமிஸ் பண்ணிருக்கேன் சொல்ல  கூடாதுன்னு” என்று தலையை சொரிய,

விது, “ஹா ஹா ஹா… நாங்கல்லாம் ஒரு நாளைக்கு நூறு ப்ராமிஸ் பண்ணுவோம். நீ ஒரே ஒரு ப்ராமிஸ் பண்ணிட்டு ஓவரா பில்டப் குடுக்குற” என்று கலாய்க்க, அவள் உத்ராவை சங்கடமாக பார்த்தாள்.

அர்ஜுன் பொறுமையை இழந்து, “மீரா இப்போ சொல்ல போறியா இல்லையா” என்று சற்று கடுமையாக கேட்க,

அதில், “அன்னைக்கு ஹாஸ்பிடல்ல அஜயும், சுஜி அப்பாவும் பேசிகிட்டு இருந்ததை நான் கேட்டேன். அதை தான் உங்க யார்கிட்டயும் சொல்ல கூடாதுனு அஜய் என்கிட்ட ப்ராமிஸ் வாங்கிட்டான்… “என்று சொல்ல, அர்ஜுன், என்ன பேசுனாங்க என்று கேட்க, அவள் நடந்ததை சொன்னாள்.

அன்று மருத்துவமனையில், அஜய், சுஜியின் அப்பா ராகவனை சமாதானம் செய்யும் பொருட்டு அவரிடம் பேச வர, அவர், அவனை பேசவே விடவில்லை.

“அங்கிள் நான் அவளை லவ் பண்றேன்… அவள் மேல எனக்கும் எல்லா அக்கறையும் இருக்கு. அண்ட் இப்படி நடந்துருக்க கூடாது தான். பட் எனக்கு ஒரு சான்ஸ் குடுங்க இனிமே இந்த மாதிரி நடக்காம நான் பார்த்துக்குறேன்” என்று சொல்ல,

ராகவன், “அதான் இப்போ நடந்துருச்சே. அவள் என் பொண்ணா இருக்குற வரைக்கும், அவளுக்கு ஒரு சின்ன கீறல் கூட ஏற்பட விட்டது இல்லை. எப்போ உங்க கூட சேர ஆரம்பிச்சாஆ
ளோ அப்போவே அவளுக்கு ஏழரை சனி தான்…” என்று சொல்ல சுறுசுறுவென அவனுக்கு கோபம் வந்தாலும், “அங்கிள் உங்க கோபம் நியாயம் தான். பட் இது எங்களை மீறி நடந்துருச்சு. உத்ராவால முடிஞ்சுருந்தா அவள் கண்டிப்பா இப்படி நடக்க விட்டுருந்துருக்க மாட்டாள்.” என்று சொல்ல,

அவர்,” உத்ரா… உத்ரா… உத்ரா… அவளும், இப்படித்தான் அவள் பேரையே சொல்லிக்கிட்டு வெளிநாட்ல கிடைச்ச நல்ல வேலையையும், வாழ்க்கையையும் விட்டுட்டு அவள் கூடவே கிடக்கிறாள். இதுல லவ் மண்ணாங்கட்டி வேற…” என்றவருக்கு இப்போது  உத்ராவின் மீது தான் ஆத்திரமாக வந்தது.

அஜயோ கொலை வெறியில் இருந்தான். அவர் அதோடு விட்டிருந்தாலும் அவன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அங்கிருந்து சென்றிருப்பான். அவருக்கு அன்று நாக்கில் சனி இருந்தது போல, அவனிடம்,

“இப்போ கூட எனக்கு என் பொண்ணோட சந்தோசம் தான் முக்கியம். அவளுக்கு உன்னை பிடிச்சுருக்குன்னா எனக்கும் உனக்கு அவளை கல்யாணம் பண்ணி குடுக்க சம்மதம் தான் ஆனால்…” என்று நிறுத்தியவரை அஜய் புரியாமல் பார்க்க,

ராகவன் தொடர்ந்து, “உனக்கும் உத்ராவுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க கூடாது. அவள் பிசினெஸயும் நீ பார்க்க கூடாது… உனக்கு என் பொண்ணு வேணும்னா அவள் கிட்ட நீ பேச கூடாது… எனக்கு அவளை சுத்தமா பிடிக்கல. திமிரு பிடிச்சவ” என்று சொல்லிக்கூட முடிக்கவில்லை அவரின் சட்டை அஜய்யின் கையில் இருந்தது.

இவ்வளவு நேரம் இதனைக் கேட்டு அதிர்ந்து இருந்த மீரா, இவன் இவ்வாறு செய்யவும் வேகமாக சென்று அவர்களை விலக்கினாள்.

“அஜய் விடு அஜய்” என்று அவனை விலக்க, அவன் “யோவ் எங்க இன்னொரு வார்த்தை அவளை பத்தி பேசி பாரு… வாயை இழுத்து வச்சு தச்சுருவேன். என்னையா தெரியும் உனக்கு என் உதி பத்தி.

அவளோட கால் தூசிக்கு கூட நீ வரமாட்ட… சுஜி உன் பொண்ணுங்கிறனால தான் அவளுக்காக நீ அவ்ளோ பண்ற. ஆனால் அவள் காலேஜ் படிக்கும் போது எவளோ பெரிய ஆக்சிடென்ட்ல இருந்து அவள் உயிரை கூட பொருட்படுத்தாம காப்பாத்துனா தெரியுமா போய் கேளு உன் பொண்ணு கிட்ட… சொல்லுவா. பெரிய உலக அழகியை பெத்து வச்சிருக்காரு” என்று கத்க,

மீரா, “அஜய் அமைதியா இரு… ப்ளீஸ்.” என்றாள்.

“நீங்களும் கேட்டீங்கள்ல அண்ணி. எப்படி உதியை பத்தி தப்பா பேசலாம்… யோவ் நீ என்னய்யா உன் பொண்ணை தரமாட்டேன்னு சொல்றது. என் உதியை தப்பா பேசுன உன்னோட பொண்ணு எனக்கு தேவையே இல்ல. கூட்டிட்டு போயா உன் பொண்ணை” என்று கத்தி பேச, அவர் கோபத்துடன் சென்று தான், சுஜியை உடனே அழைத்து சென்றார்.

பின் மீரா, “என்ன அஜய் இது… என்ன இருந்தாலும் பெரிய மனுஷன் கிட்ட போய்…” என்று பேச வர,

“பெரிய மனுஷன் மாதிரியா பேசுறான் அந்த ஆளு…” என்றவன், “அண்ணி இங்க நடந்தது யாருக்கும் தெரியக்கூடாது முக்கியமா உதிக்கு..” என்று கண்டிப்பாய் சொல்ல,

அவள் “அஜய், அவங்ககிட்ட சொன்னா ஏதாவது சொலியுஷன் கிடைக்கும்ல…” என்று கூற, அவன் அவள் கையை எடுத்து அவன் தலையில் வைத்து கொண்டு, “இது என் மேல சத்தியம் அண்ணி. யாருகிட்டயும் நீங்க சொல்ல கூடாது..” என்று அழுத்தமாய் கூறி விட, அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை. என்று அவள் சொல்லி முடிக்க, உதி அதிர்ந்து, மேலும், அவனின் அன்பில் நெகிழ்ந்து கண்ணில் நீர் கசிய நின்றிருந்தாள்.

அர்ஜுனும் விதுனுமோ “அந்த ஆளை அவன் சும்மாவா விட்டான்… வாடா அவர் வீட்டுல போய் உண்டு இல்லைன்னு ஆக்கிட்டு வரலாம்” என்று இருவரும் கிளம்ப,

மீரா, “ஐயோ. அப்படிலாம் எதுவும் பண்ணிடாதீங்க” என்று அவர்களை சமன்படுத்த, துருவ் உச்ச கட்ட கோபத்தில் இருந்தான்.

உத்ரா தன்னை நிலைப்படுத்தி கொண்டு, “யாரும் போய் யார் கிட்டயும் எதுவும் கேட்கவேண்டாம். இந்த விஷயத்தை வேற மாதிரி ஹேண்டில் பண்ணிக்கலாம்” என்று சொல்லிவிட்டு, துருவின் கையைப் பிடித்து அமைதி படுத்தினாள்.

அதில் அவன் இறுகிய கை சற்று தளர்ந்து, “சரி நான் சொல்ற மாதிரி பண்ணு.” என்று உத்ராவிடம் சில விஷயம் சொல்ல,

விது “வாவ் செம்ம” என்று கைதட்ட, அர்ஜுன், “வரேவா… சூப்பர் சீன் ஒன்னு இருக்கு அப்ப” என்று சொல்ல, மீரா, தான் கடவுளே இவர்களை என்னதான் செய்வது என்று தலையில் கை வைத்தாள்.

உத்ரா, “துருவ் ஒரு தடவை அவரு கிட்ட பேசி பார்க்கலாம்” என்று சொல்ல வருவதற்குள், “நீ யாருகிட்டயும் போய் பேசுறதுல எனக்கு உடன்பாடு இல்லை. ஜஸ்ட் டூ வாட் ஐ சே” என்று பல்லை கடித்து கொண்டு கூற, அவள் யோசனையுடன் சரி என்று தலையாட்டினாள்.

சுஜி அஜயின் நினைவிலேயே வாட, ஒருமுறை கூட என்னை பார்க்க உனக்கு தோன்றவில்லையா என்று மனதினுள் வெந்து கொண்டிருந்தாள்.

அன்று, அவள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதாக இருக்க, ராகவன் அவளை அழைத்து சென்றார்.

பாவம் அவளுக்கு அவர் அஜயிடம் பேசியதை பற்றி எதுவும் தெரியவில்லை. செக் அப் முடிந்து வெளியில் வருகையில், ராகவன் முன்னிலையிலேயே சுஜியை முக மூடி அணிந்த இருவர் கடத்தி சென்றனர்.

அதனை பார்த்து அதிர்ந்தவர், செய்வதறியாமல் திகைத்து நிற்க, உடனே காவல் துறையிடம் புகார் கொடுத்தார்.

அவர்களோ, அசட்டையாக, “உன் பொண்ண கடத்திட்டு தான் போனாங்களா… இல்ல யாரு  கூடவாவது ஓடி போய்ட்டாளா” என்று கேட்க,

அவர் “ஐயோ என் பொண்ணு அப்படிலாம் இல்லை சார்… என் கண்ணு முன்னாடி தான் சார் கடத்துனாங்க. என் பொண்ணை கண்டுபிடிச்சு குடுங்க சார்” என்று கெஞ்ச, அவர்களோ கம்பளைண்ட் எழுதி கொடுத்து விட்டு போகும்படியும், ஏதாவது மிரட்டல் கால் வந்தால், எங்களுக்கு உடனே தெரிவிக்கும் படியும் சொல்லிஅனுப்பினர்.

நடந்ததை, சுஜியின் அம்மா காயத்ரியிடம் வந்து  சொல்ல, அவரும் அழுது கரைந்து, “அவளை கடத்துறவரை நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க. எனக்கு என் பொண்ணு வேணும்” என்று கண்ணீர் விட,

அவருக்கு போலீசை நம்பி பிரோயோஜனம் இல்லையோ என்று தோன்றியது.

காயத்ரி,” உடனே இந்த விஷயத்தை உதிட்ட சொல்லலாம். அவளுக்கு நிறைய பெரிய ஆளுங்களை தெரியும். அவள் எப்படியும் கண்டுபிடிச்சுடுவா” என்று சொல்ல, “நான் போலீஸ்ல புகார் குடுத்துருக்கேன் அவங்க கண்டுபிடிச்சு தருவாங்க” என்று கோபமாக  சொன்னவருக்கு இரவு நேரம் ஆக ஆக அடிவயிற்றில் பயம் எழுந்தது.

 இருப்பினும் அவளிடம் போய் நான் நிற்க வேண்டுமா என்று ஈகோ பார்த்தவர், பின் தன் பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்று உத்ராவின் அலுவலகம் சென்றார்.

அங்கு துருவ் தான் ஆஸ்திரேலியா சென்றதும், என்ன என்ன வேலைகள் செய்ய வேண்டும் என்று மீராவுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க, அவர் “நான் உத்ராவை பார்க்கணும்” என்று அவசரமாக வந்தார்.

துருவ், “அவள் மீட்டிங்ல இருக்காள் பார்க்க முடியாது” என்று சொல்ல,

அவர் “இல்லை நான் உடனே பார்க்கணும்” என்க,

“எதுக்கு” என்று துருவ் கேட்டதும், “என் பொண்ணை கடத்திட்டாங்க…” என்றார் பதற்றமாக.

அவன் அசட்டையாக சுற்றி முற்றி பார்த்து விட்டு, “உத்ரா எப்போ ஐபிஎஸ் படிச்சா? இதை பார்த்தா உங்களுக்கு போலீஸ் ஸ்டேஷன் மாதிரி இருக்கா” என்று நக்கலாக கேட்டான்.

அவரோ “நான் போலீஸ்கிட்ட சொன்னேன் அவங்க பெருசா எடுத்துக்க மாட்டுறாங்க. உத்ராக்கு நிறைய பேரை” என்று பேச வர, அவரை தடுத்து நிறுத்தியவன்,

“சாரி சார்… உங்க பொண்ணுக்கும், உத்ராவுக்கு எந்த சம்பந்தமும் இல்லைன்னு கூட்டிட்டு போய்ட்டிங்க. இப்போ அவள் உங்க பொண்ணு மட்டும் தான். அவளுக்கு என்ன நடந்தாலும் அதுக்கு பொறுப்பு நீங்க மட்டும் தான். இப்போ நீங்க போகலாம்” என்று விட்டு மீராவிடம் வேறு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான்.

அந்த நேரம் உத்ராவும், அஜயும் உள்ளே வர, அவர் அவசரமாக உத்ராவிடம் சென்று நடந்ததை சொல்ல, அவள் “உங்க பொண்ணை கடத்திட்டங்கன்னா. அதை என்கிட்ட ஏன் சார் சொல்றீங்க.” என்று தோளைக் குலுக்க, அஜய் அதிர்ந்து போயிருந்தான்.

அவனுக்கு அவளைக் காணவில்லை என்றதும், பதட்டம் தொற்றி கொள்ள, உத்ராவை பார்த்தான்.

ஆனால் அங்கு யாருமே பதட்டம் இல்லாததை பார்த்து விட்டு, மீராவை பார்க்க, அவள் கண்ணிலேயே சாரி என்று கெஞ்சினாள்.

அதில் இதுங்க தான் ஏதோ பிளான் பண்ணிருக்குதுங்க என்று நினைத்து, சிரிப்பை அடக்கி கொண்டு, அவனும் அவளை தேட முடியாது என்று மறுக்க 

அவர் “நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்குறேன் என் பொண்ணை கண்டுபிடிச்சு குடுங்க…” என்று சொல்ல, அவள் “பேச்சு மாறக்கூடாது” என்று தலையை சாய்த்து கேட்க, அவர் கண்டிப்பாக செய்கிறேன் என்று சொன்னார்.

அவள் உடனே, “உங்க பொண்ணை கண்டுபிடிச்சுட்டா, அவளுக்கும் அஜய்க்கும் கல்யாணம் நடக்கணும். உங்க சம்மதத்தோட” என்று அழுத்தமாய் சொல்ல, சிறிது யோசித்தவர், பின், பெண் கிடைத்தால் போதும் என்று நினைத்து சரி என்று விட்டார்.

இங்கு, சுஜியை கடத்திய இரண்டு முக மூடி கொள்ளைக்காரர்களும், “ஹே கத்துன… உன்னை பீஸ் பீஸ் ஆக்கிடுவேன்” என்று ஒருவனும், “இவளை இன்னைக்கு எண்ணெய் சட்டில போட்டு ஃப்ரை பண்ணிட வேண்டியது தான்” என்று கோரமாக மற்றொருவன் பேச, சுஜி, இருவர் தலையிலேயும் நங்கென்று கொட்டி,

வெளிவராத குரலில், “தொண்டையில அடி பட்டுருக்குறப்ப எப்படிடா கத்தமுடியும்… உங்களுக்குலாம் யாரு கடத்தல் பண்ற கேரக்டர் குடுத்தது. நீங்க அதுக்குலாம் சரி பட்டு வரமாட்டீங்க” என்று கலாய்க்க,

அர்ஜுனும் விதுனும் முகமூடியை கழட்டி விட்டு, அவளை முறைத்து, “டெம்போலாம் வச்சு கடத்திருக்கோம் பங்கு… கொஞ்சமாவது பயப்படேன்” என்று பாவமாக சொல்ல, அதில் சிரித்தவள், தொண்டையை பிடித்து கொண்டு, “என்ன இந்த டிராமா” என்று கேட்க,

விது “உங்க அப்பாவுக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் குடுக்க தான்” என்றதும், அர்ஜுன் “ஆமா நீ எப்படி எங்களை கண்டுபிடிச்ச?” என்று யோசனையுடன் கேட்டான்.

 அவள், “டேய் லூசுகளா. மூஞ்சியை மறைச்சிங்களே… கைல இருந்த மோதிரத்தை மறைச்சீங்களா?” என்று தலையில் அடிக்க, இருவரும் அசடு வழிந்தனர். ஏன் என்றால், அர்ஜுன், அஜய், விது மூவரும் ஒரே மாதிரி மோதிரம் போட்டிருப்பர்.

விது தான், “இவ்வ்ளோ பண்ணி மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்துட்டோமே” என்று புலம்ப சுஜி நக்கலாக சிரித்தாள்.

பின், அர்ஜுன் அவளுக்கு நடந்ததை கூற, அவளும் அதிர்ச்சியில் தான் இருந்தாள். அப்பொழுது தான் அவளுக்கு அஜய் ஏன் அவளை தவிர்த்தான் என்று காரணம் புரிந்தது. பின், உத்ராவிடம் இருந்து, அவளை அழைத்து வரும் படி, தகவல் வர, மூவரும் அலுவலகம் நோக்கி சென்றனர்.

அவரசமாக இருவரும் வேறு சட்டையை அணிந்து கொண்டு, அங்கங்கே அதை கிழித்து கொண்டு, இதில், ரத்தம் வழிவது போல் முகத்தில் ஜாமை வேறு தடவிக்கொண்டு, அப்படியே டயர்ட் ஆக உள்ளே வருவது போல் சுஜியை அழைத்து வந்தனர். உத்ராவிற்கும் மீராவிற்கும் அவர்களை பார்த்ததும் வந்த சிரிப்பை அடக்குவது பெரும் பாடாக இருந்தது.

ராகவனும் தன் பெண்ணை காப்பாற்ற அடியெல்லாம் வாங்கி வந்திருக்கின்றனர் என்று பாவப்பட்டு விட்டு, சுஜியிடம் சென்று “உனக்கு ஒன்னும் இல்லலாமா… உன்னை கடத்துனவங்களை பார்த்தியா” என்று கேட்க, அவள் பதிலேதும் சொல்லாமல் அஜயைப் பார்த்தாள்.

அவன் அவள் முகத்தை பார்க்காமல் வேறு புறம் திரும்பி கொள்ள, அவனை நன்கு புரிந்தவள், “போலாம் பா” என்று மெல்லிய குரலில் கூற,

துருவ் “நீங்க சொன்ன சொல் மாற மாட்டிங்கன்னு நினைக்கிறேன்…” என்று சொல்ல, அவர் தலையாட்டி, பெரியவர்களை வந்து பேச சொன்னார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த அஜய், சுஜியின் கையை பிடித்து, ராகவனிடம் ஒப்படைத்து, “நீங்க ஒத்துக்கலைன்னாலும், இப்போ நான் இவளை என்கூட வரச்சொல்லி கூப்பிட்டா அவள் வருவா…” என்று சுஜியைப் பார்க்க, அவள் கலங்கிய கண்ணுடன் அவனை பார்த்திருந்தாள்.

“ஆனால் நீங்க பண்ணுன அதே தப்பை நான் பண்ண மாட்டேன். உங்க பொண்ணை நான் என் உயிரா நினைச்சுருக்கேன்… அவளுக்காக என் உயிரை கூட குடுப்பேன்” என்றவன், அழுத்தமாக

“ஆனால் யாருக்காகவும் நான் என் உதியை விட்டு கொடுக்கமாட்டேன். இப்போ உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா… உதியை பத்தி நீங்க சொன்னதை ஒத்துக்கிட்டு, உங்களை நிர்பந்தப்படுத்தி கல்யாணம் பண்ணுன மாதிரி ஆகிடும். இது கடைசி வரைக்கும் எங்களை பார்க்கும்போதெல்லாம் உங்களை உறுத்திக்கிட்டே தான் இருக்கும்.

இதுனால எங்களுக்கும் கருத்து வேறுபாடு வரும். ஒன்னு நீங்க எங்களை புரிஞ்சுகிட்டு, இந்த கல்யாணத்துக்கு சம்மதிங்க… இல்ல. உங்க பொண்ணுக்கு வேற பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுடுங்க.”என்று சொல்லி விட,

 சுஜி, “அப்பா போலாம்பா” என்று கலங்கிய குரலில் கூறி விட்டு,

“இந்த மாதிரி பேமிலியே பிரெண்ட்ஸ் – ஆ கிடைக்கிறது ரொம்ப அபூர்வம் பா. அங்க நானும் ஒருத்தியா அவங்களோட ஒற்றுமையா இருக்கணும்ன்னு தான் நான் ஆசைப்பட்டேன்.

ஆனால் என்னாலேயே என் பிரெண்டுக்கு ஒரு அவமானம்ன்னா. அதை என்னால ஒத்துக்க முடியாது.. அவங்களுக்கு ஒரு பிரிவினையா நான் வர்றதை என்னால ஏத்துக்க முடியாதுப்பா. உங்க இஷ்டப்படி நான் வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிறேன்…” என்று அவரை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டாள்..

அங்கிருந்த அனைவருமே அவள் பேசியதில் உருகி போயிருந்தனர். அஜய்க்கு அவள் பேசியதும், சென்றதும் இதயத்தை வெகுவாய் பிழிந்தது.

உத்ராவிற்கு, தனக்காக தன் காதலை தூக்கி போட்டு, சென்ற தன் தோழியை நினைத்து கண்ணீர் முட்டியது. அர்ஜுனும் விதுனும் கடத்தல் வேலை எல்லாம் பார்த்தும் இப்படி பிளான் A ஃபெயிலியர் ஆகிடுச்சே என்று தீவிர யோசனையில் இருந்தனர்.

அனைவரும் வீட்டிற்கு கிளம்ப, உத்ரா “எனக்கு ஒரு வேலை இருக்கு நீங்களாம் போங்க” என்றதும் விதுன் தவிர மற்றவர்கள் கிளம்பி விட, துருவ் அவளை ஆழமாய் பார்த்தான்.

உத்ரா அவனை பார்க்க முடியாமல் திணற, “சீக்கிரம் வந்து சேரு” என்று மட்டும் சொல்லிவிட்டு சென்று விட்டான். உத்ரா சென்றது சுஜியின் வீட்டிற்கு தான்.

சுஜி அறையில் கண்ணீரில் கரைந்து கொண்டிருக்க, நேராக ராகவனிடமும், காயத்ரியிடமும் சென்றாள்.

காயத்ரிக்கு தற்போது தான் இந்த விவரங்கள் எல்லாம் தெரிய வந்தது. அவருக்கு இவர்கள் அனைவரையுமே மிகவும் பிடிக்கும். இப்போது, தன் கணவர் இந்த குருவிக்கூட்டை கலைக்க பார்த்து விட்டாரே என்று வருத்தத்தில் தான் இருந்தார்.

உத்ராவை குழப்பமாக பார்க்க, அவள் ராகவனிடம், “சாரி சார்… இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் நான் தான. நான் அஜய் லைஃப விட்டு போய்டுறேன். சொன்னாலும்  சொல்லலைனாலும்,நான் கல்யாணம் ஆகி எல்லாரையும் விட்டுட்டு ஆஸ்திரேலியா தான் போகப்போறேன். எப்பவாவது தான் இங்க வருவேன். அதுவும் உங்களுக்கு இடைஞ்சலா இருந்தா நான் கண்டிப்பா திரும்பிவரமாட்டேன்.

எனக்கு அஜய், சுஜியோட வாழ்க்கைதான் முக்கியம். அப்பறம் என் பிசினெஸ் எதுவும் அவன் பண்ணல. அவனே தனியா நிறைய பிசினெஸ் பார்த்துகிட்டு இருக்கான்.

எல்லாமே அவனுக்குன்னு தனியா தான் இருக்கு. உங்க பொண்ணை ராணி மாதிரி பார்த்துக்குற அளவுக்கு அவனுக்கு திறமையும், பணமும், உழைப்பும் இருக்கு.

ப்ளீஸ் சார்… இவங்க கல்யாணத்துக்கு ஓத்துக்கோங்க.
கல்யாணம் முடிஞ்சதும் நான் சொன்ன மாதிரி இங்க இருந்து போய்டுவேன். இது இது என் அண்ணன் விதுன் மேல சத்தியம்” என்று உருகிய குரலில்  சொல்ல,

வெளியில் அவர்கள் அறியாமல் நின்றிருந்த விது “அட பங்கர நாயே… என் மேலேயே எத்தனை பொய் சத்தியம் தான் பண்ணுவ.” என்று அவளை திட்டிக்கொண்டிருக்க, அவர்களிடம் பேசி விட்டு வெளியே வந்த உத்ரா,

“என்ன பங்கு, டயலாக்லாம் கரெக்ட் ஆ பேசுனேனா…” என்று கேட்க,

அவன் அவளை முறைத்து, “உன்னை அர்ஜுன் மேல தான் சத்தியம் பண்ண சொன்னேன். எதுக்கு பங்கு என் மேல பண்ணுன” என்றதும்,

அவள் தலையில் கை வைத்து, “அய்யோயோ மாத்தி ப்ராமிஸ் பண்ணிட்டேனா. நான் வேணும்னா போய் டயலாக் கரெக்ஷ்ன் பண்ணிட்டு வரவா…” என்று திரும்ப,

“போதும் தாயே… போதும்” என்று விட்டு காயத்ரிக்கு அவர் பேச வேண்டிய வசனத்தை எல்லாம் குறுஞ்செய்தி அனுப்பி அவருக்கு ஒரு தம்ஸ் அப்பை காட்டினான்.

அவரும், நான் பாத்துக்கிறேன் என்று அவர் பங்கிற்கு ராகவனை பேசியே கரைத்தார்.

உத்ரா தான், விதுனிடம் “டேய் இதெல்லாம் நீ உன் லவ்க்கு பண்ணிருந்தா இந்நேரம் நீயும் கமிட் ஆகிருப்ப…” என்று விட்டு,

“சுஜி அப்பா மட்டும் ஓகே சொல்லட்டும் . அடுத்து உனக்கு தான் பொண்ணு பார்க்க போகணும்… யு நோ வாட் பெரியப்பா உனக்கு சூப்பர் பொண்ணு ஒன்னு பார்த்து வச்சிருக்காரு” என்று சொல்ல, அவன் தான் அந்த இடத்திலேயே வேரோடி நின்று விட்டான்.

மறுநாளே, ராகவன் தன் தவறை உணர்ந்து உத்ராவிடம் மன்னிப்பு கேட்டு, “நீ எங்கும் போகக்கூடாது… நான் தான் உன்னை பத்தி சரியா புருஞ்சுக்காம இப்படி முட்டாள் தானம் பண்ணிட்டேன்” என்றார்.

அவர்க்கு தான் ஒரே ஆச்சர்யம், அவளுக்காக, அவன் அவனின் காதலை தியாகம் செய்வதும், அஜய், சுஜிக்காக நாட்டை விட்டே செல்ல முயன்ற உத்ராவின் அன்பிலும் நெகிழ்ந்து விட்டார். இதெல்லாம் விதுனும் உத்ராவும் வெகு நேரமாய் யோசித்து எழுதிய வசனங்கள் என்று அவர்க்கு தெரியவில்லை பாவம்.

பின், அஜயிடமும் மன்னிப்பு கேட்டு, தன் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு கூற, அவன் யோசிப்பதை பார்த்து, உத்ரா “இன்னும் என்னடா யோசிக்கிற. முதல்ல நீ போய் சுஜியை பாரு” என்று அனுப்பினாள்.

சுஜியின் அறையில் விட்டத்தை வெறித்திருந்த சுஜி அஜயை பார்க்கவும், முதலில் அதிர்ந்து, பின், ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.

அஜய், அவளை இறுக்கி அணைத்து, “சாரி சுஜி… உன் விஷயத்துல நான் பண்ணுனது தப்பு தான். உன்னை விட்டு குடுத்துருக்க கூடாதுல… ஆனால், எனக்கு வேற வழி தெரியல…” என்று சொல்ல,

அவன் வாயை மூடியவள், “நீ பண்ணுனது கரெக்ட் தான் அஜய். எங்க அப்பா பேசுனது தப்பு தான. அப்படி பார்த்தா நானும் தான் உன்னை விட்டுகுடுத்துட்டேன்… சாரி டா.” என்றாள்.

அவளின் புரிதலான இந்த காதலில் அவன் வியந்து விட்டான்.

“யு ஆர் சோ ஸ்வீட் பஜ்ஜி… லவ் யு டி. லவ் யு சோ மச்…” என்று முகம் எங்கும் முத்த மழை பொழிய, அவள் ஷ் என்று வலியில் முகம் சுருக்கினாள்.

அதன் பிறகே, அவன் “ஹே சாரி டா கொஞ்சம் உணர்ச்சி வரப்பட்டுட்டேன். ரொம்ப வலிக்குதாடா” என்று கேட்க, அவள் “ம்ம் பேசும்போது தான் லைட்டா வலிக்குது” என்றதும், அவள் கழுத்தில் மென்மையாய் முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு, “நீ ரெஸ்ட் எடு…” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, வானர கூட்டங்கள் உள்ளே வந்தது.

உத்ரா, சுஜியை முறைத்து, “இன்னொரு தடவை ரெண்டு பேரும் இப்படி லூசுத்தனம் பண்ணுனீங்க… கொன்னுடுவேன்” என்று  மிரட்ட,சுஜி அவளை கட்டிப் பிடித்து கொண்டாள்.

பின், அவர்கள் அரட்டை அடிக்கையிலேயே, அர்ஜுன் “இப்போ இந்த விஷயத்தை வீட்டுல எப்படி சொல்றது. துருவை வச்சு சொல்ல சொல்லுவோமா? இப்போலாம் அவன் சொன்னா தான் நம்ம வீட்ல காது குடுத்து கேக்குறாங்க” என்று சொல்ல,

உத்ரா, “அவன் என்ன உங்க லவ்வுக்கு தூதாடா… அர்ஜுன் மீரா விஷயத்தையும் அவன் தான் பேசி சம்மதம்  வாங்குனான். என் ஆளை பார்த்தா எப்பிடிடா தெரியுது உங்களுக்கு. ஒழுங்கா நீங்களே வீட்ல பேசுங்க” என்று மிரட்ட, அஜய்யும் அர்ஜுனும் “ஸ்டார்டிங் ட்ரபிள் தான்… யாரவது இதான் விஷயம்னு சொல்லிட்டா… நாங்க கை கால்ல விழுந்தாவது சம்மதம் வாங்கிடுவோம்” என்றதும், உத்ரா அஜய் காதில் ஏதோ முணுமுணுக்க, அவன் “ஹா ஹா ஹா… பண்ணிடுவோம்” என்று ஹை ஃபை கொடுத்தான்.

விது என்ன பிளான் பண்ணுதுங்க என்று யோசிக்க, காயத்ரி வந்தவர், சுஜியை அதட்டி, “இனிமே அர்ஜுனையும், விதுவையும் மரியாதையாக கூப்பிட வேண்டும் என்ன இருந்தாலும், புகுந்த வீட்டு உறவுகள்” என்று சொல்ல, அவள் தொண்டையைப் பிடித்து,

“இந்த பஞ்ச பரதேசிங்களுக்கு மரியாதை குடுத்தா தான் என் கல்யாணம் நடக்கணும்னா… அப்டி ஒரு கல்யாணம் எனக்கு தேவையே இல்ல” என்று பேச முடியாமல் பேச, அர்ஜுனும் விதுனும், ” அவ்ளோ கஷ்டப்பட்டாவது  கவுண்டர் குடுத்துடனும் உனக்கு… இல்ல…”  என்று தலையில் தட்டினர்.

துருவ் அடுத்த நாள், ஆஸ்திரேலியா செல்வதாக இருக்க உத்ராவுக்கு தான் அவனை அனுப்ப மனமே இல்லை. ஆனால் அவன் வேலையை முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்கையில் அவனை தடுக்கவும் முடியவில்லை. எப்படி அவனை காணாமல் இருப்போம் என்று தவித்தாள்.

இதில், அவளை திருமணத்திற்கு பிறகு, ஆஸ்திரேலியா அழைத்து செல்வதை பற்றியும் இன்னும் அவன் எதுவுமே பேசவில்லை. அவளும் முதலில் இவர்கள் பிரச்சனை சரியாகட்டும் என்று நினைத்து அமைதி காத்தாள்.

அவன் பின்னே சென்று அவனை அணைத்தவள், “புருஷா” என்று அழைக்க, அவன் “இப்போதான் உனக்கு நான் கண்ணனுக்கு தெரியுறேனாக்கும். விது கூட சேர்ந்துக்கிட்டு உன்னை யாரு அந்த ஆளு கிட்ட போய் பேச சொன்னது.” என்று கடுகடுக்க,

அவள் அவனை திரும்ப வைத்து, “இதை விட்டா வேற வழி தெரியல துருவ். ரெண்டு லூசும் என்னால பிரிஞ்சுருக்கறதை எப்படி என்னால பார்த்துகிட்டு இருக்க முடியும். இப்போ பாரு… பிரச்சனை சுமூகமா முடிஞ்சுருச்சு” என்றதும்,

அவன் “இதான் உனக்கு ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்… இனிமே யாருக்காகவும் எதுக்காகவும் நீ யார்கிட்டயும் போய் கெஞ்ச கூடாது..” என்று தீர்மானமாய் சொல்ல,

“ஓ அப்போ நீங்க மட்டும் அப்டி பண்ணலாமா” என்று தலையை சாய்த்து கேட்க, அவன் இவளுக்கு எப்படி தெரியும் என்று முழித்தான்.

  “திருடா… நீ ரகசியமா என்ன திருட்டுத்தனம் பண்ணுறன்னு எனக்கு தெரியாதா” என்று கண்ணடிக்க அதில் சிரித்தவன், அவள் கன்னத்தை கிள்ளி, “என் ஹனிக்கு எவ்ளோ அறிவு…” என்று கொஞ்ச, அவள் “போதும் போதும்…” என்று விட்டு, வெளியில் சென்றாள்.

அங்கு வீட்டு பெரியவர்கள் எல்லாம் அமர்ந்திருக்க, அஜயும், அர்ஜுனும் நீ சொல்லு  நீ சொல்லு என்று சொல்லிக்கொண்டிருக்க, கர்ணன் “என்னடா சொல்லணும்…”என்று கேட்டதும்,

அர்ஜுன் “அது வந்து ப்பா. ஒரு முக்கியமான விஷயம் அதான்…” என்று சொல்ல,

கருணா “என்ன விஷயம்” என்று வினவ ,

அர்ஜுன் “அது… ஹான்… விது யாரையோ லவ் பண்ணுறான்” என்று கோர்த்து விட, அதில் திருதிரு வென்று முழித்த விது அவனின் அப்பா பார்த்த பார்வையில்,

“ஐயோ அப்பா நான் யாரையும் லவ் பண்ணல, அஜய் தான் சுஜியை லவ் பண்ணுறான்… “என்று உண்மையை உளறினான்.

அர்ஜுன், “ஹப்பா ஆமா மாமா அதான் மேட்டர்…” என்று சொல்ல,

அஜய், “அப்பா அது சுஜி நான் லவ் பண்ணி… அவள் என்னை லவ்” என்று உளற,

விது, ” ஏண்டா உன் நாக்குல எர்த் குவேக்(earthquack ) வந்த மாதிரி பேசுற” என்று யோசனையாய் கேட்க, அவனை முறைத்தவன்,

“அம்மா… லவ் கல்யாணம்” என்று மீண்டும் உளற,

லட்சுமி, “இதை இப்போதான் உங்களுக்கு சொல்லணும்னு தோணுச்சா டா. நாங்க நேத்தே சுஜி அப்பாட்ட பேசிட்டோம். துருவ் தான் எங்களுக்கு விஷயத்தை சொன்னான்.” என்று சொல்ல, அவர்கள் மூவரும், உத்ராவையும் துருவையும் வெறியுடன் பார்த்தனர்.

இருவரும் ஹை ஃபை கொடுத்து கொண்டு, நமுட்டு சிரிப்பு சிரிக்க, அஜய் “அடிப்பாவி… முன்னாடியே சொல்லிருந்தா நான் இப்படி அசிங்கப்படாமையாவது இருந்துருப்பேன்ல” என்று முறைத்து கொண்டிருக்கையிலேயே,

கருணா, “இன்னைக்கு சாயந்தரம் விதுன்க்கு பொண்ணு பார்க்க போறோம். இது சும்மா ஃபார்மாலிட்டி தான். மத்தபடி பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கு… அப்படியே நாலு பேருக்கும் கல்யாண தேதியை குறிச்சுடலாம்” என்று சொல்ல, விது அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான்.

இறுதி பகுதி

 

விதுவிற்கு பெண் பார்க்க போகிறோம் என்றதும், விது அனுவின் நினைவில் வாடினான்.

ஒரு மனம் அவள் தான் வேண்டும் என்று தீர்மானமாக சொன்னாலும், மற்றொரு மனமோ, தன்னால் தன் குடும்பத்திற்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது என்று உறுதியாய் இருந்தது.

அனைவரும், பெண் பார்க்க கிளம்ப, விதுவின் மனம் தீயில் விழுந்த புழுவாய் துடித்துப் போனது. அதனை மற்றவரிடம் மறைக்கவே அவன் அரும்பாடு பட்டான்.

இறுதியில், அவன் மட்டும் கிளம்பாமல் இருக்க, உத்ரா, “என்னடா இன்னும் கிளம்பலையா நீ…? சீக்கிரம் ரெடி ஆகு” என்று பரபரக்க,

அவன் “நான் எதுக்கு நீங்க போயிட்டு வாங்க…” என்று சத்தம் வராத குரலில் சொல்ல,

துருவ் “பொண்ணு உனக்கு பார்க்க போறோமா இல்லை எங்களுக்கா…? நீ தான் முக்கியமா வரணும். வா சீக்கிரம்”  சொல்ல, அவன் “இல்ல துருவ் நான் வரல” என்று பிடிவாதம் பிடிக்க, அர்ஜுனும் அஜயும் வலுக்கட்டாயமாக அவனை அறையில் தள்ளி, உடையை மாற்ற வைத்தனர்.

நேராய் குளியலறைக்குள் புகுந்து கொண்டவனுக்கு, அவளை நினைத்து கண்ணீரே வந்தது.

இந்த அளவு, அவள் தன் மனதில் ஆழமாய் இருப்பாள் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. அவளுடனான நினைவுகளை நினைத்து தன்னிச்சையாய் உதட்டில் புன்னகையும், கண்ணில் நீரும் வர தன்னை நிலைப்படுத்திக் கொண்டு முகத்தில் தண்ணீரை வாரி அடித்து மேலும் சிறிது நேரம் அழுது விட்டு வெளியில் வந்தான்.

 உத்ரா அவன் அருகில் சென்று, “ஏண்டா கண்ணுலாம் சிவந்துருக்கு” என்று கேட்க,

அவன் “அது தூசி விழுந்துருச்சு உதி…” என்றதும்,

அவள் அவன் கண்ணை துடைத்து, ஊதி விட்டு, “இப்போ ஓகே வா டா” என்று கேட்க, அவனுக்கு மேலும் கண் கலங்கியது.

அதனை துடைத்துக் கொண்டு, ம்ம்… என்று தலையாட்டியவன், “நான் வரலை உதி. நீங்க போட்டு வாங்களேன்” என்று மறுபடியும் ஆரம்பிக்க,

துருவ், அர்ஜுன் அஜயிடம் “டேய் தூக்குங்கடா இவனை” என்றதும், இருவரும் அவனை அலேக்காக தூக்கி காரில் அமர வைத்தனர். விதுன் தான் தலை வலிக்கிறது என்று சொல்லி, கண்ணை இறுக மூடி அமர்ந்து விட்டான்.

“சார் சார்… சாரி சார்” என்று அவளின் குரல் காதில் கேட்க, காதையும் கண்ணையும் இறுக மூடிக்கொண்டு, தன்னை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தான்.

மணப்பெண் வீட்டில் கார் நிற்க, குனிந்த தலை நிமிராமல், அவன் சென்று சோஃபாவில் அமர்ந்தான். மற்றவர்கள் பேசியது கூட அவன் காதில் விழவில்லை.

பெண் காஃபியுடன் அங்கு வரவும், உதி “டேய் பொண்ணை பாருடா” என்று சொல்ல, அவன் “நான் பார்த்துட்டேன்…” என்று நிமிராமல் இருக்க, அர்ஜுனும் அஜயும் “பொண்ணு என்ன தரையிலயா இருக்கு… நேரா பாருடா” என்று அடம்பிடித்தனர்.

விதுன் “ப்ச் நீங்க பாத்துட்டீங்கள்ல… அது போதும்…” என்று சற்று எரிச்சலாய் கூற, துருவ் அவன் முடியைப் பிடித்து நிமிர்த்தினான்.

அதில் கோபமாக “இப்போ என்னடா உனக்கு…” என்று நிமிர அவன் கண்கள் ஆச்சர்யத்தில் சாசர் போல் விரிந்தது.

எதிரில் அழகோவியமாய் அவனின் அடிமை பட்டுடுத்தி, கன்னம் சிவந்து அவனை சிரிப்புடன் பார்த்திருந்தாள்.

விதுனுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை. அவளை விட்டு கண்ணை நகர்த்தவும் முடியவில்லை. கண் இமைத்தால் கூட மறைந்து விடுவாளோ என்று மனம் படபடத்தது.

அதன் பிறகே, அவன் இருந்த இடத்தை கவனித்தான். எதிரில் அவனது மாமனார் மினிஸ்டர் கரண் அமர்ந்து கருணாவிடம் பேசிக்கொண்டிருந்தார்.

துருவ், “கடைசிவரை உன் மனசுல இருக்கறதை எங்க கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணவே இல்லைல…” என்று சற்று வருத்தமாய் கேட்க, விதுன் அதிர்ந்து, “உங்களுக்கு எப்படி?” என்று குழம்ப,

உத்ரா, “என் அண்ணன் மனசுல என்ன இருக்கு… யாரு இருக்கான்னு கூடவா எனக்கு தெரியாது… ம்ம்?” என்று கேலியாய் கேட்க, அவன் சொல்லாமலேயே தன் மனதை படித்து விட்ட, தங்கையை கண் கலங்க பார்த்தான்.

அர்ஜுன், “ஆமா டா. நீ அன்னைக்கு அனுவை பார்க்க போனப்பவே எங்களுக்கு டவுட் தான். அப்பறம் தான்… அவள் உன்னை காப்பாத்த அவள் கழுத்தை கட் பண்ண போய்ட்டான்னு மீரா சொன்னாள். ஆனால் நீ ஏன் சொல்லாம இருந்தன்னு எங்களுக்கு காரணம் புரிஞ்சுது.

அப்பறம் துருவ் தான், அவனால உன் வாழ்க்கை கெட கூடாதுன்னு மினிஸ்டர்ட்ட சமாதானம் பேசி  அவரை கரைச்சு, அப்பறமும் அவரு ஒத்துக்கலைன்னதும் அவரை அவருக்கே எதிரான ஆதாரத்தை காட்டி மிரட்டி, அப்பறம் அனுவே உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவங்க அப்பாகிட்ட ஒத்தை கால்ல நின்னாள். அப்பறம் தான் ஒரு வழியா ஒத்துக்கிட்டாரு” என்று சொல்லி முடிப்பதற்குள்,

 விதுன் துருவை தாவி அணைத்துக் கொண்டான்.

“தேங்க்ஸ் டா…” என்று கமறிய குரலில் சொல்ல, அவன் சிரித்துக் கொண்டு, “போடா போய் இப்போவாவது ப்ரொபோஸ் பண்ணு” என்று அனுப்ப,

அஜய்,  “பெரிய தியாக செம்மல் இவரு… பாத்ரூம் குள்ள போய் அழுதுட்டு வந்து கண்ல தூசினு சொன்னா சின்ன புள்ளை கூட நம்பாது. நாங்க நம்பிடுவோமாடா” என்றதும்,

உத்ரா, “அப்போ கூட ஏண்டா சொல்லல… நீ சொல்லுவன்னு கடைசி வரை எதிர்பார்த்தேன்” என்று ஏமாற்றமாய் சொல்ல, அவன் மெலிதாய் சிரித்து கொண்டு,

“எனக்கு என் காதலை விட, உன் வாழ்க்கை தான் முக்கியம்” என்று சாதாரணமாய் சொல்லிவிட, இப்பொழுது கண் கலங்குவது உத்ராவின் முறையாயிற்று.

நால்வருமே ஒவ்வொரு விதத்தில் அவன் அனுவை காதலிப்பதை உணர்ந்து கொண்டாலும், அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தனர். ஆனால் துருவ் அவன் நிச்சயம் சொல்லமாட்டான் என கணித்து, மினிஸ்டரிடம் சென்று பேசினான். அதை உத்ராவிடம் கூட அவன் சொல்லவில்லை. ஆனால் அவனை கண்டு கொண்ட உத்ரா தான் அப்பொழுது, அவன் திருட்டு தனம் செய்வதாய் சொல்லி காட்டியது.

இப்படியே இவர்கள் பேசிக்கொண்டிருக்க, மீரா தான் “ஷப்பா போதும் உங்க செண்டிமெண்ட் சீனு பார்க்க முடியல… பொண்ணு ரொம்ப நேரமா வெட்டிங் அண்ணா சீக்கிரம் போங்க” என்க,

விது, “நல்ல ட்ரைனிங் டா” என்று அர்ஜுனிடம் மீராவை பார்த்து சொல்ல, மீரா உதட்டைக் கடித்து சிரித்தாள்.

பின், அவன் பார்த்ததுமே உள்ளே சென்ற அனுவிடம் சென்றவன், “போலி டாக்டர்…” என்று அழைக்க, அவள் அவனை பொய்யாய் முறைத்தாள்.

அதில் சிரித்தவன், “அன்னைக்கு ஏன் அப்படி பண்ணுன அனு…” என்று கேட்க, அவன் புரியாமல் “என்னைக்கு?” என்று கேட்க,

“என்னை காப்பாத்த, ஏன் அப்படி பண்ணுன…” என்று மீண்டும் கேட்டதும், அவள் அவன் மெல்ல அருகில் வந்து, “தெரியல…” என்று தலையை சாய்த்து பாவமாக சொன்னாள்.

பின்,” நிஜமா எனக்கு தெரியல… ஆனால் உங்களுக்கு எ
ஏதாவது ஆச்சுன்னா என்னால உயிரோட இருக்க முடியாதுன்னு மட்டும் தெரிஞ்சுச்சு. அதான் அப்படி பண்ணுனேன்” என்று கண்ணில் நீர் கோர்க்க சொல்ல, அதில் திகைத்தவன்,

“ஏன் அனு… நான்… நான் உன்னை ரொம்ப கிண்டல் தான் பண்ணிருக்கேன். சொல்லப்போனா உன்கிட்ட என் காதலை கூட சொல்லல…” என்று குழம்ப,

அவள் லேசாக சிரித்து, “ம்ம்… ஆனால் நீங்க அப்படி இருக்குறது தான் எனக்கு ரொம்ப பிடிச்சுச்சு. அப்பறம், உங்க ஃபாமிலி கூட.. ரொம்ப ஜாலியா, எல்லார் மேலயும் அன்பா, அதே நேரம், அடாவடியா…” என்று சொல்ல, அவளையே ரசித்தவன், “ஆனாலும்…” என்று ஏதோ பேசவர,

அதில் கடுப்பானவள், “டேய் நீ எப்போ தாண்டா ப்ரொபோஸ் பண்ணுவ. சும்மா நொய் நொய்ன்னு கேள்வி கேட்டுகிட்டு…” என்று முறைக்க, அதில் வாய் விட்டு சிரித்தவன் , அவளை நெருங்கி வந்து, “எப்படி ப்ரொபோஸ் பண்ணனும்னு சொல்லு பண்ணிட்றேன்” என்று கிசுகிசுக்க,

அவள் படபடத்து, “அது அது… நீங்க தள்ளி நின்னே சொல்லுங்க” என்று அவனை தள்ள, அவன் மேலும் நெருக்கமாய் நின்று கொண்டு, “இவ்ளோ தள்ளி நின்னா போதுமா?”
என்றான்.

அவள் சிவந்து, “பி… பி பின்னாடி தள்ளுங்க” என்று நடுங்கிய குரலில் கூற, அவன் அவள் இடையை இழுத்து, முகத்தை நிமிர்த்து, “லவ் யு அடிமை” என்று குறும்பாய் சொன்னான்.

அவள் “யூ யூ நான் உங்களுக்கு அடிமையா” என்று சரமாரியாக அடிக்க, அவன் அவள் கையைப் பிடித்து கொண்டு, “இல்லதான்… நான் தான் உன் அடிமை ஆகிட்டேன்” என்று ரசனையாய் சொல்ல, அவள் அழகாய் புன்னகைத்தாள்.

“அது சரி ரெண்டு பேரும் அடிமை தான்… இப்போ வெளிய வாங்க. இல்லன்னா… வீட்ல இருந்து எல்லாருக்கும் அடி கிடைக்கும்” என்று உத்ரா சத்தம் கொடுக்க, விது ‘நம்மளை அசிங்கப்படுத்த இவள் ஒருத்தி போதும்’ என்று நினைத்து கொண்டு, அனுவை பார்க்க, அவள் “வாங்க வெளிய போலாம்” என்று முன்னேற,

அவளைத் தடுத்தவன், “ஏய் போலி டாக்டர்… என்னை மட்டும் ப்ரொபோஸ் பண்ண சொல்லிட்டு நீ சொல்லாம போற…” என்று கேலியாய் கேட்க, அவள் “பண்றேன் பண்றேன்… கல்யாணத்துக்கு அப்பறம்” என்று குறும்பாய் சொல்லிவிட்டு, வெளியில் ஓடி விட்டாள்.

இப்படியாக, இரண்டு மாத இடைவெளியில் நால்வரின் திருமணமும் ஒரே நாளில், ஒரே மேடையில் ஒரே முகூர்த்தத்தில் வைக்கும் படி முடிவானது.

துருவும் ஆஸ்திரேலியா வந்து, அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான். நால்வரின் காதலும், அந்த திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்க, அர்ஜுன் மீராவை சீண்டிக்கொண்டும், சுஜிக்கு இப்பொழுது காயமெல்லாம் ஆறி, அஜயிடம் சண்டை பிடித்து, சஞ்சுவை என்டர்டைன் செய்து கொண்டும், விதுன் அனுவை கிண்டலடித்து, தீண்டிக் கொண்டும் செல்ல, உத்ரா தான் தலைவனை பிரிந்த ஏக்கத்தில் உடல் மெலிந்தாள்.

இப்படியும், ஒரு நாளைக்கு இருபது தடவை வீடியோ காலில் பேசி விடுவான். அப்படி இருந்தும், அவளுக்கு தான் அவனை காணாமல் இருக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில், “எனக்கு உன்னை பார்க்கணும் புருஷா… ப்ளீஸ் இங்க வா…” என்று ஏங்கிப் போய் கேட்க,

அவன், “ஒரு வாரத்துல வந்துடறேன் ஹனி… ரொம்ப டைட் ஒர்க் இல்லைனா, நான் வராம இருப்பேனா” என்று சமாதானம் சொல்ல,

அவள் “சரி நானாவது வரேன்…” என்று சொல்ல, அவன் அதற்கும் மறுப்பு தெரிவித்தான்.

அவள் கோபமாக “அப்போ போ இனிமே எனக்கு போன் பண்ணாத” என்று பட்டென்று போனை அணைத்து விட்டாள்.

அவனுக்கு இருக்கும் வேலையில் அவன் பேசுவதே பெரிய விஷயம் என்று ஒரு மனதுக்கு புரிந்தாலும், அவளின் காதல் மனது அவனின் சீண்டலுக்காய் ஏங்கியது.

நான்கு நாட்களாய் அவனிடம் அவள் பேசவே இல்லை. அவனும் அழைக்கவே இல்லை. அதில் அவளுக்கு கோபம் சுறுசுறுவென ஏறியது.

பின், பக்கத்துக்கு பங்களாவில் சத்தம் கேட்க, லட்சுமி இடம் வந்து “இங்க யாரும் குடி வர்றாங்களா அத்தை” என்று கேட்க,

அவரும், “ஆமா உதி… யாரோ இந்த பங்களாவை வாங்கிருக்கங்களாம். யாருன்னு தெரியல… விதுன் தான் இதுக்கு இன்டீரியர் டெக்கரேஷன் பன்றான். உங்கிட்ட சொல்லலையா” என்று கேட்க,

அவள் புரியாமல், “இல்லையே என்கிட்டே எதுவுமே அவன் சொல்லல…”என்று குழம்பியவள்.. அங்கு சென்று விதுனிடம், “யாரு வீடு விது இது” என்று கேட்க,

அவன் “தெரியல உதி… துருவ் தான் அவனுக்கு தெரிஞ்சவங்க வாங்கிருக்காங்கன்னு, இன்டீரியர் ஒர்க் பண்ணி குடுக்க சொன்னான்” என்று சொல்ல,

அவள் “அவன் உன்கிட்ட பேசுனானா” என்று ஒரு மாதிரியாக கேட்டாள்.

“ம்ம் பேசுனானே… இன்னைக்கு காலைல கூட நாங்க எல்லாரும் கான்ஃபெரென்ஸ் கால் பேசுனோம்.” என்று தீயை வைக்க, அவளுக்கு தான் கடுங்கோபம் வந்தது. ‘என்கிட்ட பேச மட்டும் சார்க்கு வலிக்குது. இவனுங்ககிட்ட எல்லாம் பேசி இருக்கான்… ‘என்று கடுப்பானாள்.

மேலும், அவன் திருமணத்திற்கு பிறகு ஆஸ்திரேலியா செல்வது பற்றியும் இன்னும் ஒன்றும் பேசாமல் இருப்பது வேறு அவளுக்கு கோபத்தை கிளறியது. அவன் ஏதாவது பிளான் சொன்னால் தானே அவள் இங்கு இருக்கும் வேலையை மற்றவரிடம் ஒப்படைத்து விட்டு வரமுடியும். இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம் என்று குழம்பி போனாள்.

அவளை மேலும் குழப்பாமல், அடுத்த இரண்டு நாளில் துருவ் இந்தியா வந்தடைய  அவனை கண்டதும் என்னதான் கோபம் இருந்தாலும், சட்டென்று அது மறைய அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.

துருவ் “ஹனி” என்று அழைக்க, அவள் அவனை சரமாரியாக அடித்து, “அது எப்படி நீ என்கிட்ட பேசாம இருக்கலாம். அவனுங்க கிட்ட எல்லாம் பேசுற…” என்று சிறுபிள்ளைத்தனமாக புகார் செய்ய,

அதில் புன்னகைத்தவன், “என் ஹனி எப்போ இருந்து இப்படி லாஜிக் இல்லாமல் பேச ஆரம்பிச்சா ஹ்ம்ம்…” என்று புருவத்தை உயர்த்தி வினவி விட்டு, “அங்க ரொம்ப ஒர்க் டா… அதான் பேச முடியல. சாரி ஹனி.” என்று சமாதானம் செய்ய, அவள் முகத்தை திருப்பி கொண்டாள்.

பிறகு, அங்கு அனு சுஜி எல்லாரும் வர  வீட்டினரும் பரபரப்பாய் கிளம்பி கொண்டிருக்க, இவளுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.

அஜயைப் பிடித்து, “என்ன பங்கு எல்லாரும் ஒரே பரபரப்பா இருக்கீங்க” என்று கேட்க,

அவன் “நீ இன்னும் கிளம்பலையா? வா சீக்கிரம்…” என்று சொல்ல,

மீரா “என்ன உதி… இன்னும் கிளம்பாம இருக்க. துருவ் அண்ணா எங்க? நல்ல நேரம் முடியிறதுக்குள்ள போகணும்…” என்றதும்,

“கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள் இருக்கு. அப்பறம் எதுக்கு இதுங்க குழப்புதுங்க…” என்று தலையை சொரிந்து கொண்டிருந்தவளுக்கு, அனைவரின் முகமும் எப்போதும் விட பிரகாசமாய் இருப்பது போல் தோன்றியது.

பிறகு அவளையும் இழுத்துக் கொண்டு, எல்லாரும் பக்கத்து பங்களாவிற்கு செல்ல, அவள் பேந்த பேந்த முழித்தாள்.

அர்ஜுன் தான் “என்ன உதி உன் வீட்டுக்கு வந்தா வாங்கன்னு கூப்பிட மாட்டியா” என்று கேலி செய்ய “என் வீடா?” என்று விழி விரித்தாள்.

அனு, “நீ என்ன  கஜினி சூர்யா மாதிரி எல்லாத்தையும் ஆச்சர்யமாவே கேக்குற” என்று வினவ, சுஜி “அதான ப்ரோ உங்கிட்ட எதுவும் சொல்லலையா. கல்யாணத்துக்கு அப்பறம் நீயும் ப்ரோவும் இங்க தான் இருக்க போறீங்க. அதான் பால் காய்ச்ச இங்க வந்துருக்கோம்” என்று சொன்னதும்,

விது “ஆமா உதி… அவன் அவனோட பிசினெஸ்லாம் பாத்துக்க ஆள் செட் பண்ணிட்டு, இங்க இருந்தே மெயின்டெய்ன் பண்ணிக்க எல்லாமே பக்காவா ரெடி பண்ணிட்டு தான் வந்துருக்கான்…” என்று சொல்ல, உத்ரா திகைத்து நின்றாள்.

லட்சுமி வந்தவர்  “உதி… உன்னை விட்டு எப்படி பிரிஞ்சு இருக்குறதுன்னு நான் கூட ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனால் நாங்க சொல்லாமலேயே துருவ் எல்லாத்தையும் சரி பண்ணிட்டான்..
ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் எங்க கூட இருக்க போறது… எனக்கே இந்த விஷயம் காலைல தான் தெரியும்.” என்று மகிழ்ச்சியாக சொல்ல, அவள் வேகமாக துருவை தேடிப் போனாள்.

அங்கு, அவர்களுக்காகவே ஸ்பெஷலாக ஒரு ரூம் ஒதுக்கி, அங்கு பல வண்ண விளக்குகள் வைத்து, அவளுக்கு பிடித்த இளஞ்சிவப்பு நிறத்தில் அறையின் பொருட்கள் அடுக்கி, வெள்ளை நிற வண்ண பூச்சு அடித்து, ஆங்காங்கே அவளின் புகைப்படமும், மேலும் மூன்று வருடம் முன்பு, துருவ் மொபைலில் இருவரும் எடுத்த புகைப்படங்களும் மாட்டப்பட்டு இருந்தது.

அந்த அறையை ஒட்டியே ஒரு பெரிய பால்கனியும், அங்கேயே அவளுக்கு பிடித்த, பூச்செடிகள் வைத்து, சிறு தோட்டமும், கூடவே, ஒரு ஊஞ்சலும் கட்டி தொங்க விட பட்டிருந்தது.

அதனைக் கண்டவள் பிரமித்து துருவைப் பார்க்க, அவன் “வா” என்று கையை நீட்டினான்.

அடுத்த நொடியே அவனுள் அடைக்கலமாகியவள், பேச்சற்று அவன் மார்பில் புதைய, அவன் “உதி… இனிமே நம்ம இங்கயே இருக்கலாம். நிஜமா சொல்லனும்னா நான் இங்க வரும்போது, நீ மட்டும் தான் என் மனசுல இருந்த.

இப்போ இந்த குடும்பமே எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. மாமன், மச்சானா, அண்ணன் , தம்பிங்களா நல்ல பிரெண்ட்ஸ் கிடைச்சுருக்காங்க.

என்னை ஆசையா அண்ணன்னு கூப்பிட, மூணு தங்கச்சி கிடைச்சுருக்காங்க. நான் இழந்த குடும்ப சூழ்நிலையை திரும்ப அனுபவிக்க, சித்தி, சித்தப்பா, அத்தை , மாமான்னு ஒரு குடும்பமே கிடைச்சிருக்கு… அதுக்கு மேல சஞ்சு… என்னை அங்கிள்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தவன் இப்போ மாமா மாமான்னு என் பின்னாடியே சுத்துறான்…” என்று சிரித்தவன்,

“இவங்களை எல்லாம் விட்டுட்டு என்னாலேயே பிரிஞ்சு போக முடியாது அப்டி இருக்கும் போது, உன்னை எப்படி ஹனி இவங்க கிட்ட இருந்து பிரிப்பேன்…” என்று  தலையை சாய்த்து கேட்டவன்,

“எனக்கு தெரியும், உனக்கு உன் குடும்பத்தை எவ்ளோ பிடிக்கும்னு… உனக்கு பிடிச்சதை எப்படி ஹனி உன்கிட்ட இருந்து பிரிக்க முடியும். அதான், இங்கயே ஒரு வீடு பார்த்துட்டேன்… அதுக்காக இங்க தான் இருக்கணும்னு இல்லை உனக்கு எப்போ எல்லாம் தோணுதோ அப்போ எல்லாம் நீ உன் அத்தை வீட்டுக்கு போகலாம்… நீ” என்று பேச, சட்டென்று உத்ரா அவள் இதழ்களால் அவன் வாயை அடைத்தாள்.

இங்கு, அர்ஜுன் மீராவை ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்று அழைத்து போக, அவள் “எங்க அர்ஜுன்” என்று கேட்டுக்கொண்டே வந்தாள்.

அவன் “வந்தா தெரிஞ்சுட போகுது” என்று சிறு சிரிப்புடன் கூட்டி செல்ல, அங்கு சென்று பார்த்து, வியந்து போனாள்.

அது அவள் இருந்த ஆஸ்ரமம் தான். மூன்று வருடங்களுக்கு முன் இருந்த, சிறுவர்களும், அந்த விடுதியில் இத்தனை வருடமாய் அவளை வளர்த்த தலைவியும் இருக்க, அவள் ஓடி சென்று பசங்களை எல்லாம் அணைத்து கொண்டாள்.

அதில் விவரம் தெரிந்த சிறுவர்கள் மீராவை கண்டதும் துள்ளி குதித்தனர். அதன் பிறகே அர்ஜுன், அந்த ஆஸ்ரமத்தை தத்தெடுத்திருக்கிறான் என்றும், அங்கிருந்த, இனிமேல் வரப்போகும் அனைத்து குழந்தைகளின் படிப்பு செலவு முதல் அனைத்தும் அவனே ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்றும் தெரிந்து கொண்டவள் அவனை கண்ணீருடன் பார்த்தாள்.

அர்ஜுன் அழக்கூடாது என்று சைகை காட்ட அவள் லேசாக முறுவலித்து, பின், அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு, காருக்கு செல்ல, அர்ஜுனிடம், “எனக்காகவா அர்ஜுன்…” என்று கேட்க, அவன் “இல்ல…” என்று தலையசைத்து, “என் சீனிக்கட்டிக்காக… அவளுக்கு இந்த இடமும், இங்க இருக்குறவங்களும் ரொம்ப பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும். என் சீனிக்கட்டி, யாரை நினைச்சும் கலங்க கூடாது. அதான்” என்று சொல்வதற்குள் அவன் அவளின் இறுகிய அணைப்பில் இருந்தான்.

“லவ் யு அஜ்ஜு” என்று காதலுடன் சொல்ல, அவன் “வெறும் ஹக் மட்டும் தானா நான் வேற என்னம்மோ எதிர்பார்த்தேன்” என்று பொய்யாய் சலிக்க, அதில் புன்னகைத்தவள், “என்ன எதிர்பார்த்தீங்களோ அதை நீங்களே குடுத்துகோங்க” என்று வெட்கத்துடன் சொல்ல,

அதில், அவன் அவளை ரசித்து கொண்டு, “ஏன் அதை மேடம் குடுக்க மாட்டிங்களோ… அன்னைக்கு எனக்கு சரியாகி வீட்டுக்கு வந்ததும் நிறைய தரேன்னு சொன்னீங்க… ஹ்ம்ம்” என்று குறும்பாய் கேட்க,

அதில் ரோஜாவாய் சிவந்தவள், “எனக்கு வெட்கமா இருக்கு” என்று முகத்தை மூட, அவன் “அப்போ அதை முதல்ல சரி பண்ணுவோம். .” என்று அவள் கையை முகத்திலிருந்து எடுத்து, முத்தத்தில் திணறடித்தான்.

விதுவும் அனுவும் கண்களாலேயே பேசிக்கொள்ள, அவளை வீட்டில் விட்டு விட்டு வருகிறேன் என்று அவளை அழைத்து சென்றான். வீட்டின் அருகில் காரை நிறுத்தியவன், அவளுக்கு ஒரு கவரை கொடுக்க, அவள் என்ன இது என்று பார்த்தாள்.

அவன் “பிரிச்சு பாரு” என்று சொல்ல, அதனை பிரித்தவள், அதில், ஃபேஷன் டிசைனிங் படிப்பிற்கான அப்ளிகேஷன் ஃபார்ம் இருப்பதை கண்டு, விதுனை குழப்பமாக பார்த்தாள்.

அவன் “என்ன முழிக்கிற. நெக்ஸ்ட் மந்த்ல இருந்து நீ இந்த காலேஜ்ல தான் படிக்க போற…” என்று சொல்ல, அவள் திகைத்தாள்.

அவளுக்கு ஃபேஷன் டிசைனிங் படிப்பதும், அதில் தொழில் துவங்கவும் பெரும் கனவே இருந்தது. ஆனால், தன் ஸ்டேட்டஸ்காக அவளை டாக்டர் ஆக்கியே ஆக வேண்டும் என்று அவளின் அப்பா சொன்னதில், அவர் மேல் இருந்த பயத்தில், அதனை மறுத்து பேச முடியாமல் ஒப்புக்கொண்டாள்.

ஆனால் “அது இவனுக்கு எப்படி தெரியும்” என்று பார்க்க, அவன் “நீ கஷ்டப்பட்டு உனக்கு பிடிக்காததை செய்ய வேண்டாம் போலி டாக்டர். கல்யாணத்துக்கு அப்பறம் நீ இதை படிச்சு முடிச்சுட்டு நம்ம லைஃப் ஸ்டார்ட் பண்ணலாம் அதுவரைக்கும் லவ் பண்ணிகிட்டே இருக்கலாம்… ஓகே வா?” என்று விழி உயர்த்தி கேட்க, அவளுக்கு தான் என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை.

கண்ணில் இருந்து மட மட வென நீர் கொட்ட, அதில் பதறியவன், “ஹே… என்ன இது… அழுதுகிட்டு. நோ டார்லிங். இப்படிலாம் அழுக கூடாது. இதெல்லாம் நான் உனக்காக மட்டும் பண்ணல” என்று நிறுத்தி விட்டு,

“அன்னைக்கு மாதிரி எத்தனை பேருக்கு தப்பா ஊசி போட்டு கொலை பண்ண பார்ப்பியோ யாருக்கு தெரியும். மத்தவங்க உயிர் விஷயத்துல ரிஸ்க் எடுக்குறேனோ இல்லையோ, உன்னை டாக்டர் ஆக்கி, என் உயிருக்கு நானே உலை வச்சுப்பேனா? அதான் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டேன்” என்று குறும்பாய் சொல்ல,

அதில் அவள் “உன்னை நான் கொல்ல பார்த்தேனாடா… ஒரு மயக்க ஊசியை மாத்தி போட்டதுக்கு கடைசி எபி வரை என்னை கலாய்க்கிற” என்று அவனை அடித்துத் துவைத்தாள்.

இருந்தும், அவள் இதழ்கள் சிரிப்பையே தந்தது. அவளின் ஆசையை அறிந்து கொண்டு, அதற்காகவே இதனை செய்கிறான் என்று புரிந்தே வைத்திருந்தாள்.

அவன் சட்டையைப் பிடித்து, தன் இதழ் அருகே இழுத்தவள், “லவ் யு வினு…” என்று காதலுடன் கூற, அதில் விழி விரித்தவன் அவள் இதழ்களையே தாபத்துடன் பார்க்க, அனு சட்டென்று அவன் இதழில் அழுத்தமாய் முத்தமிட்டாள். அதில் அவன் திணற,  அவன் நெஞ்சிலே சாய்ந்து கொண்டு முத்தமிட்டாள்.

அவன் வலுக்கட்டாயமாக அவளை விலக்கி, “யம்மா பரதேவதை… சும்மா மனுஷனை சோதிக்காத.

மூணு வருஷம் உன்னை விட்டு தள்ளி இருக்கணும்… இதுல, நீ அரியர் வச்சு எத்தனை வருஷம் இழுப்பியோ… எதுக்கும்  நீ ரெண்டு ஸ்டெப் தள்ளியே இரு. அப்பறம் நான் பொறுப்பு இல்ல” என்று குறும்புடன் கூற, அதில் புன்னகைத்தவள், “போடா” என்று விட்டு வீட்டினுள் ஓடினாள்.

அஜய், சுஜியை அழைத்து கொண்டு, காரில் சுற்ற பொறுத்து பொறுத்து பார்த்தவள், “இப்போ எதுக்குடா…? இப்படி ஊர்வலம் போய்கிட்டு இருக்க என்னை கூட்டிகிட்டு…” என்று கடுப்படிக்க, அவன் “ஏண்டி லவர் வெளிய கூட்டிட்டு போகமாட்டானான்னு அவள், அவள் எதிர்பார்த்துக்கிட்டு இருக்காள். நீ என்னன்னா ஏன் இப்டி சுத்துறேன்னு கேக்குற” என்க,

அவள், “எங்கயாவது கூட்டிட்டு போனாலும் ஓகே… நீ இப்படி காரிலேயே சுத்துனா? அதான் கேட்டேன்” என்று சொன்னதும்,

அஜய், “நிஜமா எங்க கூட்டிட்டு போறதுன்னு எனக்கு தெரியல… பசங்கலாம் அவங்க அவங்க ஆளுக்கு சர்ப்ரைஸ் குடுக்க கூட்டிட்டு போயிருக்காங்க… இந்த விது கூட அனுவுக்கு ஏதோ சர்ப்ரைஸ் குடுக்குறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தான். பட் பஜ்ஜி, உனக்கு என்ன சர்ப்ரைஸ் குடுக்குறதுன்னு எனக்கு நிஜமாவே தெரியல.

உனக்கு பெருசா எதுலயும் இன்டெரெஸ்ட் இல்லைன்னு தெரியும். உனக்கு பிடிச்சது, நம்ம ஆஃபீஸ்ல ஒர்க் பண்றது, அப்படியும் இல்லைன்னா எங்க கூடவே தான் சுத்திகிட்டு இருப்ப. பட் உன்னை இம்ப்ரெஸ் பண்றமாதிரி என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல பஜ்ஜி” என்று பாவமாக சொல்ல, அவனை பார்த்து கலகலவென சிரித்தாள்.

அவன் முறைக்கவும், சுஜி, “லூசாடா நீ. ப்ரோ, அர்ஜுன், விதுன்லாம் அவங்க அவங்க ஆளை இம்ப்ரெஸ் பண்ண இதெல்லாம் பண்ணல. அவங்களை கல்யாணம் பண்ணிக்கும் போதும், அதுக்கு அப்பறமும் , அவங்க மனசுல எந்த காயமும், குழப்பமும், ஏக்கமும் இருக்க கூடாதுன்னு தான் இதெல்லாம் பண்றாங்க.

அண்ட் அவங்க பேசிக்கிறதுக்கு நிறைய விஷயம் கூட இருக்கலாம். பட் நம்ம அப்படி இல்லை. உன்னை பத்தி எனக்கும் என்னை பத்தி உனக்கும் தெரியாத விஷயமே இல்லை.

அண்ட் நீ என்ன சர்ப்ரைஸ் குடுத்தாலும், அது நீ இத்தனை வருஷத்துல, என் பர்த்டேக்கோ இல்ல வேற ஏதாவது அகேஷன்க்கோ நீ குடுத்ததா தான் இருக்கும்.

நீ சர்ப்ரைஸ் பண்ணுனா தான் நான் உன்னை லவ் பண்ணுவேன்னு உங்கிட்ட சொன்னேனா?

இதெல்லாம் இல்லாம கூட லவ் பண்ணலாம் அஜூ… சிம்பிள் ஆ… சண்டை போட்டுக்கிட்டு, அப்போ அப்போ கிண்டல் பண்ணிக்கிட்டு, அப்போ அப்போ கொஞ்சிகிட்டு… ” என்று பேசி முடிக்க, அவன் அவளையே சுவாரசியமாய் பார்த்திருந்தான்.

அதில் சிவந்தவள், “எதுக்கு இப்படி பார்க்குற” என்று தடுமாற,

“நீ ஒரு யூனிக் பீஸ் பஜ்ஜி…” என்று குறுகுறுவென பார்த்து விட்டு, “உனக்கு எந்த ஆசையும் இல்லையா… லைக் எதாவது சில்லறைத்தனமா இருந்தாலும் பரவாயில்லை” என்று கேட்க,

அதில் சிறிது யோசித்தவள், “ம்ம்… ஒண்ணு இருக்கு” என்று இழுக்க, அவன் ஆர்வமாக “சொல்லு சொல்லு என்னது…” என்று கேட்க,

அவள் “அது வேணாம்… ஒன்னும் இல்லை” என்று சமாளிக்க, அவன் “அதெல்லாம் முடியாது சொல்லியே ஆகணும் சொல்லு பஜ்ஜி…” என்று பிடிவாதம் பிடிக்க,

“அது எனக்கு எனக்கு…” என்று ஆரம்பித்து,

“உன் உன்” என்று திணற…

அவன் மேலும் சுவாரசியமாகி “ம்ம் என்…?” என்று கேட்க,

“வேணாம் எனக்கு வெட்கமா இருக்கு… நீ கிண்டல் பண்ணுவ” என்று சிணுங்கினாள்.

அவன் சிரிப்பை அடக்கி கொண்டு, “ஹே நிஜமா கிண்டல் பண்ண மாட்டேன் பஜ்ஜி சொல்லு…” என்றதும் வேறு வழி இல்லாமல், “எனக்கு உன் கூட…” என்று இழுத்தவள்,

“எனக்கு உன் கூட சிம்லாவுக்கு ஹனிமூன் போகணும்னு ஆசையா இருக்கு…” என்று முகத்தை மூடி கொண்டாள்.

அதனை கேட்டு வாய் விட்டு சிரித்தவன், அவளை தன் கை வளைவிற்கு கொண்டு வந்து, “அதுக்கென்ன போய்ட்டா போச்சு. என் பஜ்ஜி கேட்டு நான் வேணாம்னு சொல்லுவேனா… கண்டிப்பா சிம்லா போறோம் டாட்” என்று சொல்லி இதழால் கன்னத்தை உரச, அவள் அவனை தள்ளி விட்டு,

“கிளம்பு போலாம்” என்று அவனைப் பாராமல் சொல்ல,

அவன் “என்ன பஜ்ஜி? ஹனிமூன்லாம் பிளான் பண்ணிருக்கோம். இப்போ ஒரு சாம்பிள் கூட கிடையாதா” என்று சிணுங்கியபடி கேட்க, அவள் அவன் காதை திருகி, “ஒழுங்கா என்னை வீட்டுல விடு…” என்று பொய்யாய் மிரட்டி, சிவந்த முகத்தை அவனுக்கு காட்டாமல் திரும்பி அமர்ந்து கொண்டாள். அதில் சிரித்தவன், அவளை சைட் அடித்துக்கொண்டே வீட்டில் விட்டான்.

துருவை விடும் எண்ணமே இல்லாமல், இரு மாதத்து தவிப்பையும், அவளின் முத்தத்திலேயே உத்ரா காட்ட  அவன் தான் மூச்சுக்குத் திணறி அவளை தள்ள வேண்டியதாக போயிற்று.

உதட்டைப் பிடித்து கொண்டு, “ஹே… என்னடி நீ என்னையவே ஓவர் டேக் பண்ணிடுவ போல…” என்று மிரள,

அவள், “நீ கத்துக்குடுத்து தான…” என்று சிரிக்க, அவன் “அது சரி.” என்று நகைத்தான்.

அவன் கழுத்தை பிடித்து தொங்கிய உதி  “சாரி துருவ். நான் ரொம்ப சின்ன பிள்ளைத்தனமா நடந்துக்கிட்டேன்ல. நீ பிசினெஸ வேற ஒருத்தர்கிட்ட மாத்திட்டு வரணும்னா அங்க எவ்ளோ வேலை இருந்துருக்கும். அது போக, எவ்ளோ பேருக்கு பதில் சொல்ல வேண்டியது இருந்துருக்கும். அதுலாம் புருஞ்சுக்காம டிபிகல் லவர் மாதிரி நடந்துக்கிட்டேன்ல…” என்று பாவமாய் கேட்க,

அதில் அவன் அவள் நெற்றியில் முட்டி, “நீ கோபப்பட்டது அழகா இருந்துச்சு ஹனி. அப்பப்போ கோபப்பட்டு சண்டை போட்டு… கடைசியா இப்படி கிஸ் குடுத்து சமாதானப்படுத்து ஹனி செம்ம கிக்கா இருக்கு…” என்று ரசனையாய் சொல்ல,

அவள் அவனை முறைத்து, “ஆமா நானே கோபப்பட்டு, நானே சண்டை போட்டு, நானே உனக்கு கிஸ் குடுத்து சமாதானம் பண்றேன். நியாயமா நீ தான் சமாதானம் பண்ணனும்” என்று சிலுப்பிக் கொள்ள, அவன் அவளை விலக்கி விட்டு, வாசல் நோக்கி நடந்தான்.

அவள் புரியாமல் பார்க்க, அவன் அவளை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு, கதவை தாழ் போட்டான். அதில்

அவள் “எதுக்கு கதவை லாக் பண்ற,” என்று உள்ளே போன குரலில் கேட்க, அவன் அவளை ஆழமாய் பார்த்து “ம்ம் உன்னை லாக் பண்ணத்தான்” என்று அவளை நெருங்க, அவள் பின்னே நகர்ந்தாள்.

துருவ், “என்ன பண்ண போற…” என்று திக்கி திணறி கேட்க, அவன் “உன்னை சமாதானபடுத்த போறேன் ஹனி” என்று, அவளை அணைத்து முத்தங்களை மழையென பொழிந்தவன், கைகளும் இதழ்களும் எல்லை மீறிய பிறகே அவளை விட்டான்.

அவனின் எல்லை மீறலில் செங்கொழுந்தாய் சிவந்து நின்றவள், அவனை பார்க்கவே தடுமாற, அவன் மீண்டும் அருகில் வந்து, கலைந்திருந்த அவள் பொட்டையும், தலை முடியையும் சரி செய்து  புடவை மடிப்பையும் நீவி விட்டு, “இனிமே அடிக்கடி இப்படி உன்னை சமாதானப்படுத்துறேன்… சோ நிறைய கோபப்படு ஹனி ப்ளீஸ்” என்று குறும்பு மின்ன கேட்க, அவள் “போடா ஃபிராடு…” என்று சிரித்துக் கொண்டு, வெளியே ஓடியே விட்டாள்.

இவர்களின்  கொஞ்சலிலும்,  சீண்டலிலும், நாட்களே கடுப்பாகி, வேகமாக திருமண நாளை நெருங்கியது.

முந்தைய நாள் நான்கு பெண்களுக்கும் மெகந்தி ஃபங்க்ஷனும் ரிஸப்ஷனும் வைக்க, வீடே கோலாகலமாக இருந்தது.

நான்கு ஜோடிகளும் கல்யாண கனவில் மிதக்க, ஒரு புறம் பாட்டு கச்சேரி, ஒரு புறம் மெஹந்தி ஃபங்ஷன் என பெண்கள் குதூகலமாய் இருக்க, இந்த நான்கு ஆண்களை மட்டும் காணவில்லை.

உதி, ” சுஜி எங்க இந்த பசங்களை காணோம்” என்று கேட்க, அவள் “நானும் பார்க்கலை உதி” என்று சொல்ல,

அனு, “உதி அவங்க நமக்கு தெரியாம ஏதோ பண்றாங்க…” என்று சொல்லவும்,

மீராவும், “ஆமா… நேத்து கூட, நாலு பேரும் கான்ஃபெரென்ஸ் கால்ல குசுகுசுன்னு பேசிகிட்டு இருந்தாங்க. அர்ஜுன்ட்ட கேட்டா, ஒன்னும் இல்லைன்னு சொல்றாரு” என்று சொல்ல,

சுஜி, “என்னத்தை பண்ணிட போகுதுங்க… சர்ப்ரைஸ்ன்ற பேர்ல சில்லறைத்தனமா ஏதாவது பண்ணி நம்மகிட்ட மொக்கை வாங்குங்க.” என்று கிண்டலடிக்க, மூவரும் சிரித்தனர்.

அனு, “ஆஹான்… உதி அதுலயும் உன் அண்ணன் இருக்காரே. சரியான வேஸ்ட் ஃபெல்லோ…” என்று கேலி செய்ய,

அவள், “என்ன அண்ணியாரே… என்கிட்டயே எங்க அண்ணனை கலாய்க்கிறியா? அப்பறம் நாத்தனார் கொடுமைனா என்னன்னு காட்டிடுவேன்” என்று போலியாய் மிரட்ட,

மீரா, “அதை வேற நீ தனியா காட்டணுமா. உங்க கூட பேசுனாலே போதுமே, மொக்கை போட்டே கொடுமைபடுத்துவீங்க” என்று அனுவிற்கு சப்போர்டிற்கு வர,

சுஜி, “நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது” என்று மீராவை ஷாக்காக பார்த்து பாட,

உதி சிரித்து விட்டு, “நீ வேற பங்கு… மீரா இப்போல்லாம் நம்மளையே ஓவர் டேக் பண்றா இதுல கூட அனு வேற ஜால்றா…” என்று சொல்லி நால்வரும் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து கொள்ள,

திடீரென சுஜி, “பங்கு பங்கு பங்கு அங்க பாரு பங்கு… நம்ம ஹீரோஸ…” என்று கையைக் காட்ட, மற்றவர்களும் விழி விரித்து அவர்களை பார்த்தனர்.

நால்வரும், ஒரே மாதிரி சிவப்பு நிற குர்தா அணிந்து, ஸ்டைலாக நடந்து வந்து, பாட்டு கச்சேரி நடக்கும் இடத்தில ஏறி மைக்கை வாங்கினர்.

நால்வரும் அவரவர் நாயகனின் கம்பீரத்திலும், ஸ்டைலிலும் தொலைந்து அவர்களையே சைட் அடித்து கொண்டிருக்க, அவர்கள் நேராக, தத்தம் துணையின் அருகில் வந்து நின்றனர்.

உதி, “வாவ்… சூப்பரா இருக்கு துருவ்” என்று சொல்ல, மீரா அர்ஜுனிடம் சூப்பர் என்று சைகை காட்ட,

சுஜி, “செம்ம காமெடி… இதென்ன அலங்கோலம்” என்று நக்கலடிக்க, அனு, “அதெல்லாம் சரி இப்போ எதுக்கு கைல மைக்கோட வந்துருக்கீங்க…” என்று வினவினாள்.

  விதுன் தான், அஜயிடம், “இந்த ரெண்டுக்கும் ரொமான்டிக்காவே பேச வராதாடா” என்று கேட்க, அவன் “என்ன பண்றது… இட்ஸ் ஆல் அவர் ஃபேட்” என்று தலையில் கை வைத்தான்.

இதில் இருவரும், அவர்களை அடிக்கத் துரத்த, துருவ் கையில் இருந்த மைக்கில் உத்ராவின் அருகில் வந்து பாட ஆரம்பித்தான்.

மார்கழி மாசத்து மல்லிகை பூவொன்று மாலையில் சேருதடி
மாடப்புறாக்களும் ஜோடிப்புறாக்களும் ஆனந்தம் பாடுதடி…

என்று பாட, அவள் விழி விரித்து அவனை பார்க்க, அர்ஜுன்
 
முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி
ரத்தத்துல ஓடுது சாத்துக்குடி

என்று ஆட… மீரா வாயை பிளந்தாள்.

அஜய், பெண்ணுக்கு சீதனம் உண்டு பேசிய பேச்சுப்படி என்று கண்ணடிக்க,

விது, தலையணை மந்திரம் என்றால் என்னன்னு கேட்டுக்கடி என்று குறும்பாய் பாட,

இப்பொழுது நால்வரும், சேர்ந்து நடமாடிக்கொண்டே… அவரவர் துணையின் கையை சுற்றி அவர்கள் அருகில் நிற்க வைத்து,

திருமணம் நிலவுல வச்சுக்கடி..
தேனிலவு காதலர் இஷ்டப்படி…
என்று ஆட,

பெண்கள் வெட்கத்தில் சிவந்தனர்.

பின் துருவ்,

நாடு நகரம் யாவும் இங்கே எங்கும் நம் பேச்சு, என்று பாட

அர்ஜுன், தேதி பார்த்து, நேரம் குறித்து தேதியும் வச்சாச்சு,

உத்ரா, வாழை மரங்கள் வாங்கி வரவே ஆளும் போயாச்சா

மீரா, வானவில்லை தூக்கி வந்து தோரணம் போட்டாச்சா என்று தலையை சாய்க்க,

அஜய், கல்யாண நாளன்று ஊரில் விடுமுறை விடுவோமா… கச்சேரி கேட்பதற்கே நாம் கிளிண்டனை அழைப்போமா. என்று சுஜியின் இடையை வளைக்க,

விதுன், நேற்று உன்னை பார்த்த பார்வையோ நேர்மையானது என்க…

அனு, இன்று என்னை பார்க்கும் பார்வையில் ஏதோ இருக்கிறது.. என்று சிரித்தாள்.

பின், அனைவரும் சேர்ந்து, ஊரெங்கும் கேட்கணும் நாதஸ்வரம், காதலுக்கு ஏழல்ல நூறு ஸ்வரம்… லாலா லாலா லாலா லாலால..

மார்கழி மாசத்து மல்லிகை பூவொன்று மாலையில் சேருதடி
மாடப்புறாக்களும் ஜோடிப்புறாக்களும் ஆனந்தம் பாடுதடி..

 கவுண்டருல டிக்கெட்டு தீர்ந்துருச்சே..
தியேட்டர் இப்போ ஹவுஸ் ஃபுல் ஆகிடுச்சே…
ல ல ல ல லா ல ல லா ல லா..ல ல ல ல லா ல ல லா ல லா.. என்று நடனடமாடி, மகிழ்ச்சியில் களித்தனர்.

மறுநாள், நான்கு பெண்களும், அலங்காரம் செய்து கொண்டிருக்க.. உதி, சுஜியிடம் “பங்கு எனக்கு டவுட்…?” என்று யோசனையாய் கேட்க, அவள் என்ன என்று பார்த்தாள்.

இல்ல “நேத்து சுயம்வரம் சாங்லாம் பாடுனோம். அப்போ அந்த  படத்துல வர்ற மாதிரி நம்மளை கடத்திடுவாங்களோ” என்று கேட்க,

மீரா மிரண்டு, “க்ளைமேக்ஸ்ல கூட இந்த கடத்தலை விட மாட்டீங்களா” என்று கடுப்பாக,

உதி அசடு வழிந்து “ஈஈ… சும்மா கேட்டேன்.” என்று சொல்ல, அனு “போதும்.. இன்னொரு கடத்தலை இந்த கதை தாங்காது… போய் கிளம்புற வழியை பாரு” என்று இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்க, யாரோ கதவு தட்டும் சத்தம்கேட்டது .

சுஜி, “அய்யோயோ உண்மையிலே யாரோ கடத்த வர்றாங்க. வாங்க எல்லாரும் ஒளிஞ்சுக்குவோம்” என்று கூப்பிட, உத்ரா தலையில் அடித்து,

“ஹே சுத்தி. போலீஸ் இருக்குடி காவலுக்கு… அதை தாண்டி யாரு வர போறா…” என்று கதவை திறக்க, அதிர்ந்து நின்றாள்.

மூவரும், எதுக்கு இவ இப்படி நிற்கிறா, என்று அங்கு சென்று பார்க்க, அங்கு ரிஷி நிற்பதை கண்டு, சுஜியும், மீராவும் அதிர,அனு இது யாரு என்று பார்த்து கொண்டிருந்தாள்.

உத்ரா, “அண்ணா” என்று தாவி அணைத்துக் கொள்ள, அவன் சிறு சிரிப்புடன், “ஹே கல்யாண பொண்ணு… இந்த நேரத்துல போய் அழுதுகிட்டு.” என்று சமன்படுத்த, துருவ் அங்கு வந்தவன், இருவரையும் கை கட்டி பார்த்து கொண்டிருந்தான்.

உத்ரா “நீ எப்போ வந்த… நீ எப்படி ஜெயில்ல இருந்து” என்று கேட்க, அவன் துருவை பார்த்து “இவன் தான் வெளிய எடுத்தான்… இப்போ கூட அவன் நண்பனா கல்யாணத்துக்கு கூப்பிடல… அவரோட ஹனி நான் வரலைன்னா வருத்தப்படுவாள்னு கூட்டிட்டு வந்துருக்கான்…” என்று அவன் தோளை தட்ட, அதில் துருவ் அவனை “டேய்… நீ இப்படி கூப்பிட்டா தான வருவன்னு தான்டா…” என்று முறைக்க,

உத்ரா, சிரிப்புடன் துருவை ரசித்து விட்டு ரிஷியிடம், “அப்போ இனிமே எங்க கூடவே இரு ரிஷி…” என்று அவனை ஆர்வமாக பார்த்தாள்.

அவன், “நான் லண்டன் போறேன் உதி. என்னால இங்க இருக்க முடியாது. எனக்கு தனிமை தான் வேணும்… ப்ளீஸ்” என்று கெஞ்ச,

அவள் “ப்ச் நீ கல்யாணம்” என்று ஆரம்பிக்க,

“ப்ளீஸ் உதி… இப்போ எதுவும் பேச வேணாமே. எனக்கு கல்யாணத்துல இன்டெரெஸ்ட் இல்ல.” என்று மறுக்க, அந்த நேரம் அஜயும், விதுனும் வந்து அவனை அணைத்து கொண்டனர்.

இதில் விதுன் தான், “சரி சரி கல்யாணத்துக்கு நேரமாச்சு போய் கிளம்புங்க” என்று அவனைவரையும் கிளப்ப முயல,

அஜய், ” ஏண்டா இப்போ சங்கத்தை கலைக்கிற…” என்று முணுமுணுக்க, அவன், “டேய் இதுங்க எந்த நேரத்துல என்ன முடிவெடுக்குங்கனு சொல்ல முடியாது. திடீர்னு ரிஷி கல்யாணமும் சேர்ந்து இங்கயே நடக்கணும்னு சொல்லுச்சுங்க…

உன் மாமனாரும், என் மாமனாரும்  வேற யாருக்காவது மாமனார் ஆகிடுவாங்க” என்று புலம்ப, அஜய்க்கு அடி வயிறு கலங்க தான் செய்தது.

“சொல்ல முடியாது தாலி கட்டுற நேரத்துல முடிவை மாத்துனாலும் மாத்துங்க.” என்று அவனும் அவர்களை அனுப்ப முயன்றான்.

அர்ஜுன், சஞ்சுவுக்கு டிரஸ் மாற்றி விட்டு கிளப்பி கொண்டிருந்தான். பெரியவர்கள் அவனை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லியும், அவன் என்னுடன் தான் இருப்பான் என்று திட்டவட்டமாக சொல்லி விட்டான்.

உத்ராவும். துருவும் அவர்களின் ஸ்பேசில் நாம் தலையிட கூடாது என நினைத்து அவன் இஷ்டப்படி விட்டு விட்டனர்.

சஞ்சுவை தூக்கிக் கொண்டு, அவன் வெளியில் வர, அங்கு ரிஷியை பார்த்து, அவனும் சந்தோஷப்பட்டான்.

ரிஷி, சஞ்சுவை தூக்கி கொஞ்ச, அவனுக்கு தான் அவன் யாரென்று தெரியவில்லை.

உடனே. மீராவிடம் தான் தாவினான். அவள் செய்வதறியாமல் நிற்க, ரிஷி “பிடி மீரா. இவன் உயிரோட இருக்குறதுக்கு காரணமே நீதான். இவனை உங்கிட்ட இருந்து பிரிக்க மாட்டேன்…” என்றவன்,

“அப்பப்போ நான் வந்து இவனை பார்த்துக்கலாம்ல…” என்று கெஞ்சலாய் கேட்க,

அவள் பதறி “ஐயோ என்ன அண்ணா நீங்க… அவன் உங்க பையன் தான். உங்களுக்கு அவன் மேல எல்லா உரிமையும் இருக்கு. நீங்க நீங்க.. அவனை வச்சுகோங்கன்னா… உங்களுக்குனு அவனாவது உங்க கூட இருக்கணும்ல” என்று அவனுக்காக பேச,

அர்ஜுன் தான் ‘எப்படித்தான் எப்பவுமே அடுத்தவர்களுக்காகவே யோசிக்கிறாளோ’ என்று அவளை வியந்து பார்த்திருந்தான். மற்றவர்களும்தான்.

ரிஷி லேசாக சிரித்து, “நான் தான் நல்ல குடும்ப சூழ்நிலையில நல்லவங்ககிட்ட வளரல. ஆனால், என் பையனாவது நல்ல அம்மா கிட்ட வளரனும். அவன் உன்கிட்டயே இருக்கட்டும்” என்று சொல்லி அவளிடமே ஒப்படைத்தான்.

அனைவரும் ஒவ்வொரு உணர்ச்சி மிகுதியில் இருக்க, பின், மீண்டும் சென்று கிளப்ப ஆரம்பித்தனர்.

ரிஷி பெரியவர்களுடன் ஐக்கியமாகி விட, நேரம் நெருங்க நெருங்க, பெண்கள் கூட தயாராகி மணமேடைக்கே வந்து விட்டனர். ஆனால்.. இந்த ஆண்கள் மட்டும் வெகு நேரம் கழித்து தான் வெளியில் வந்தனர். அப்படியும் துருவ் இன்னும் வராமல் இழுத்தடிதான்.

அப்பொழுதுதான் அவன் வரவில்லை என்று உணர்ந்த மூவரும், எங்கடா அவன் என்று ஒருவரை ஒருவர் கேட்டு கொண்டனர்.

விது “அவன் ட்ரெஸ் மாத்துறேன்னு அந்த ரூமுக்கு போனான். இன்னும் வரலடா” என்க,

அஜய்.. “டேய்… பொண்ணு ரெடி, தாலி ரெடி. அதை கட்டவிடாம ஏண்டா டார்ச்சர் பண்ணுறீங்க…” என்று கதற,

அர்ஜுன், “ப்ச்… டேய்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே துருவ் பேண்ட் சட்டையில் வெளியில் வர,

உத்ரா, “என்ன துருவ் இது? உங்க வேட்டி சட்டை எங்க” என்று கேட்க, அவன் “அது வேணாம் எனக்கு பிடிக்கல” என்றதும், அவள் அவனை முறைத்து, “ஒழுங்கா போய் கட்டிட்டு வாங்க” என்று மிரட்ட,

அர்ஜுன், “டேய், என்னடா இந்த ட்ரெஸ்ல வந்து இருக்க… நாங்க குடுத்த வேட்டி எங்கடா. போய் கட்டிட்டு வா”  என்று சொல்ல துருவ் கடுப்பாகி,

“டேய் சும்மா கட்டு கட்டுன்னா எப்படிடா கட்டுறது. எனக்கு வேஷ்டியே கட்டத் தெரியாது. நான் வேணும்னா போய் கோர்ட் ஷூட் போட்டுட்டு வரவா…” என்று வினவ,

அஜய், “ஆமா இங்க என்ன பிசினெஸ் மீட் ஆ நடக்குது கோர்ட் ஷூட் போட…” என்று அவனை அப்படியே தள்ளிக் கொண்டு, மூவரும் அறைக்கு சென்றனர்.

சில பல நிமிடங்கள் கழித்து, மூவரும், டயர்ட் ஆகி, வேர்வையை துடைத்து கொண்டு வெளியில் வர, உத்ரா “என்னடா ஆச்சு…” என்று கேட்க,

“ஒரு வேட்டியை அவனை கட்ட வைக்கிறதுக்குள்ள ஷப்பா” என்று தலையில் அடித்து கொண்டு, மணவறையில் அமர்ந்தனர்.

துருவ் மெதுவாக வெளியில் வர, அவனை அந்த காஸ்டியூமில் பார்த்த உத்ரா வியப்பில், ‘ஹையோ எந்த ட்ரெஸ் போட்டாலும் ஹாண்ட்ஸமா இருக்கானே…’ என்று வாயை பிளந்து கொண்டு பார்க்க,

விது “யம்மா நீ சைட் அடிச்சது போதும்… போய் மணமேடைல உட்காரு.” என்று சொல்ல, அவள் முகத்தை சுளித்து கொண்டு போய் அமர்ந்தாள்.

முதலில், துருவ் உத்ராவின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவிக்க, சிரிப்புடனும் காதலுடனும் அதனை ஏற்றவள்,” இதோட நம்ம மூணாவது தடவை கல்யாணம் பன்றோம்  புருஷா”  என்று சொல்ல, அவன் காதருகில் வந்து, “மூணு தடவை கல்யாணம்  பண்ணியும்,இன்னும் ஒரு தடவை கூட ஃபர்ஸ்ட் நைட் நடக்கல ஹனி” என்று அவளை சிவக்க வைக்க,

அடுத்து, மடியில் சஞ்சு அமர்ந்திருக்க அர்ஜுன் மீராவிற்கு பொன்தாலியை அணிவித்தான். அதனை கண் கலங்கி ஏற்று கொண்டவள், கண்ணில் நீர் உருண்டோடியது.

எந்த சொந்தமுமே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த அவளுக்கு, இன்று இத்தனை சொந்தங்களைக் கொடுத்த அர்ஜுனை காதலுடன் பார்க்க, அவன் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு,

“இங்க பாருடா உன் அம்மாவை… ஷேம் ஷேம் ஆ அழுகுறாங்க” என்று சஞ்சுவிடம் கிண்டலடித்து அவளை சிரிக்க வைத்தான்.

விது தாலி கட்ட போக, சட்டென்று அஜயிடம், “பங்கு, மூணு முடிச்சு தானடா போடணும்…” என்று சந்தேகமாய் கேட்க, கையில் தாலியுடன் காத்திருந்த அஜய், “எத்தனை முடிச்சாவது போட்டு தொலைடா…” என்று கடுப்படிக்க, அவன் சிரிப்புடன், அனுவை தன் மனையாளாக்கி கொண்டான்.

பின், அஜய் தாலி கட்டப்போக, விது, “பங்கு…” என்று பேச வர, அஜய், “இவனுங்க நம்மளை நிம்மதியா கல்யாணம் கூட பண்ண விடமாட்டானுங்க போல, கல்யாணம் ஆனதும் முதல் வேலையா இவனுங்க பிரெண்ட்ஷிப்ப கட் பண்ணனும்” என்று அவன் குரலை காதில் வாங்காதது போன்று வேக வேகமாய், சுஜிக்கு தாலி கட்டினான்.

பின், நால்வரும், அவரவரின் மனையாளுக்கு குங்குமம் வைக்க துருவ் உத்ராவின் நெற்றியில் குங்குமம் வைத்து, அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

அர்ஜுன் வேகமாக சஞ்சு கண்ணை மூடி, “டேய் என்னடா பண்ற…” என்று பதற,

விது, ” இதுக்குதான்… வெளிநாட்டுல இருந்துலாம் மாப்பிள்ளை இறக்ககூடாது. இப்போ பாரு இந்தியாவை இங்கிலாந்து ஆக்கிக்கிட்டு இருக்கான்.” என்று ஒருவரை ஒருவர் வாரி, மன நிறைவுடன், திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைத்தனர்.

துருவின் பங்களாவிலேயே அனைவருக்கும் முதலிரவு ஏற்பாடு ஆனது. இரவு சாப்பிட்டு கொண்டிருக்கையில் விது தான் அதி முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டான்.

“அர்ஜுன்… லவ் கல்யாணம் எல்லாம் ஒண்ணா நடந்த மாதிரி ஒண்ணா தான் குழந்தை பெத்துக்கணும்னு எதுவும் ரூல்ஸ் போட மாட்டீங்களே” என்று கேட்க, அதில் மற்றவர்கள் வெடித்து சிரித்தவாறு, “உன் இஷ்டம் டா அதெல்லாம்” என்று விட, ஹப்பா என்று நிம்மதி அடைந்தான்.

இரவு, அனு விது அறைக்கு வர, அவன் அவளை பார்த்து மெலிதாய் சிரித்தான். அவளும், அவனை பார்த்து வெட்கத்துடன் சிரித்து அவன் அருகில் வந்து அமர்ந்து கொள்ள, அவன் அவளிடம் அவளை பார்த்தது முதலான விஷயத்தை பற்றி பேசி நேரத்தை போக்கி விட்டு, “சரி நீ தூங்கு” என்று சொல்ல, அனு அவனை முறைத்து “தூங்குறதுக்கா இவ்ளோ ஏற்பாடு பண்ணிருக்கு” என்று சொல்ல,

அதில் சிரித்தவன், “உன் படிப்பு முடியட்டும்” என்று பேச வருகையில், அவள், “இந்த சாமியார் வேஷம்லாம் வேணாம் வினு. என் படிப்பையும், இதையும் நான் பாலன்ஸ் பண்ணிப்பேன். கல்யாணம் ஆகி, குழந்தை பெத்தவங்கள்லாம் படிக்கறது இல்லையா. இப்போ என் கூட குடும்பம் நடத்த முடியுமா முடியாதா உன்னால” என்று மிரட்டலை ஆரம்பித்தவள், மொத்தமாய் அடங்கினாள் அவன் அணைப்பில். அவளே சொன்ன பிறகு தள்ளி இருக்க, நான் என்ன லூசா என்று அவளை தன்னவளாக்கும் வேலையை செவ்வனே செய்தான்.

அஜய் அறையில், சுஜி, அவள் பாட்டிற்கு வந்து, அவள் செய்த அலங்காரங்களை அகற்றி கொண்டிருக்க, அவன் “அடியேய் என்னடி இப்படி வர்ற… கொஞ்சமாவது வெட்க்கபடுடி…” என்று கேட்க,

அவள் “வந்தா தான வெட்கப்பட முடியும். இப்போதான் நான் உன்னை புதுசா பார்க்குறேனா…” என்று அவள் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னாள் நிற்க, அவளை பின்னிருந்து அணைத்தவன் “உன்னை வெட்கப்பட வைக்கல நான் அஜய் இல்லடி…” என்று அவளை சிவக்க வைத்திருந்தான்.

மீரா, படபடப்புடன் அர்ஜுன் அறைக்கு வர, அர்ஜுன் அவளையே ஆழமாய் பார்த்திருந்தான். அதில் சிவந்தவள், “என்ன அர்ஜுன் அப்படி பார்க்கறீங்க…” என்று திணற,

அவன், “என்ன  இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க…” என்று ரசனையுடன் கேட்க, அவள் வெட்கத்துடன் அவனை முறைத்து, “அப்போ இவ்ளோ நாள் நல்லா இல்லையா…” என்று எதிர்கேள்வி கேட்க,

அவன் புன்னகைத்து கொண்டு, அவள் அருகில் நெருங்கி, “இல்லையே” என்று குறும்பாய் கூற, அவள் வெட்கத்தை விடுத்து, “ஹ்ம் அஜ்ஜு” என்று சிணுங்கினாள்.

அந்த சிணுங்களில் மொத்தமாய் தன்னை இழந்தவன், இத்தனை வருட காதலையும், மொத்தமாய் காட்டினான்.

உத்ரா, துருவ் அறைக்கு வர, அங்கு அவனைக் காணாமல், “எங்க போனான் இவன். கடைசி எபி வரை நமக்கு இவன் ஷாக் தான் குடுப்பான் போல…” என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு, அவனை தேடி போக, அவன் பால்கனியில் இருக்கும் ஊஞ்சலில், அமர்ந்து நிலாவைப் பார்த்து கொண்டிருந்தான்.

அதனை பார்த்தவள், வேகமாக அவன் அருகில் சென்று, அவன் சட்டையைப் பிடித்து, “டேய் புருஷா… நீ எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு, நான் வரவும், என்னை சைட் அடிப்பன்னு பார்த்தா நீ அந்த நிலாவை பார்த்து சைட் அடிச்சுகிட்டு இருக்க.” என்று முறைக்க, அதில் சிரித்தவன்,

“ஹே ஹனி முதல்ல உட்காரு…” என்று அவளை மடியில் இழுத்து போட்டு கொண்டான்.

அவள் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு, “இங்க என்ன பண்ற புருஷா?” என்று கேட்க, அவன், “என்னால நம்பவே முடியல ஹனி. மறுபடியும் நீ எனக்கு கிடப்ப… இப்படி மடியில உட்காருவ. இப்படி நான் உன்னை கட்டிப் பிடிப்பேன்னு நான் நினைக்கவே இல்லை உதி…

உன்னை உன்னை தொலைச்சுட்டேன்னு தான் நினைச்சேன். நீ இல்லாம செத்துட்டேண்டி. இப்போ மறுபடியும் பிறந்த மாதிரி இருக்கு ஹனி.” என்று உணர்ச்சி மிகுதியில் பேசியவனை, பாவமாய் பார்த்தாள்.

தான் ஆசைப்பட்ட பொம்மை தனக்கு கிடைத்து விட்ட, குழந்தையின் மகிழ்ச்சியில் தான் அவன் இருந்தான். அவன் தலை முடியை ஆதரவாக அவள் கோத, துருவ் “உதி இனிமே எப்பவுமே, ஒரு நிமிஷம் கூட என்னை பிரிய மாட்டில…” என்று அவள் முகத்தைப் பார்த்து சிறு குழந்தையாய் கேட்க,. “என் பாப்பாடா நீ…” என்று அவன் கன்னத்தை கிள்ளியவள்,

“நீ ஏன் உணர்வுடா புருஷா. என் உடம்புல ஒரு பகுதிடா நீ. அதனால தான்.. உன்னை என் மூளை மறந்தாலும், என் உணர்வுகள் மறக்கல. லவ் யு டா புருஷா… உன்னை உன்னை அவ்ளோ லவ் பண்ணனும்னு தோணுதுடா… லைக் பைத்தியம் மாதிரி” என்று பேசிக்கொண்டே போக, அதில் உருகியவன், அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான்.

நேரம் ஆக ஆக அந்த அணைப்பு, அவனுக்கு வேறு உணர்வுகளை தோற்றுவிக்க, அவள் அதரங்களை சிறை பிடித்தான்.

சில நிமிடம் கழித்து விடுவித்தவன், “ஹனி நீ எனக்கு வேணும்டி இப்போவே” என்று தாபத்துடன் கூற, அவள் கையை தூக்கி “ஐ அம் ஆல்வேஸ் யுவர்ஸ்” என்று அனுமதி கொடுக்க, அவனின் மூன்று வருட, காதலையும், ஏக்கத்தையும், ஆசையையும், திகட்ட திகட்ட அவளுக்கு காட்டினான்.

அவனின் மென்மையான ஆக்கிரமிப்பில் உத்ராவும், மொத்தமாக சரணடைந்தாள் அவளின் ஊனோடு உறைந்தவனிடம்.

சில வருடம் கழித்து…

துருவ் கடுங்கோபத்தில் அவனின் இரண்டாவது செல்வ மகள் சாஹித்யாவை திட்டிக் கொண்டிருந்தான். 6 ஆம் வகுப்பு படிக்கும் சாஹித்யா, கை கட்டி, ஒன்றும் அறியாதது போல் முகத்தை வைத்து கொண்டு, அவன் திட்டுவதை கேட்டுக்கொண்டிருந்தாள்.

“திஸ் இஸ் டூ மச் சாஹி… கொஞ்சம் கூட உனக்கு டிசிப்பிளீனே இல்ல…” என்று திட்ட, துருவின் முதல் செல்வ புதல்வன், அபி நந்தன் தன் ஒரு வயதே குறைவான தங்கையை, பார்த்து, “ஆமா டேடி… இவள் ரொம்ப ஓவரா போறாள். இவள் மட்டுமா இந்த இங்க நிக்கிற எல்லாரும் தான் வானதியை தவிர” என்று கோள் மூட்டினான்.

வானதி, அர்ஜுன்-மீராவின் செல்ல மகள், சமத்தும் கூட. அப்படியே மீரா மாதிரி. அபிநந்தன் சுட்டி காட்டிய மற்ற வானரங்கள், அஜய் சுஜியின் மகள் ஜான்வியையும், விது அனுவின் மகன் சூர்யாவையும் தான். இதில்

அபிக்கும், சூர்யாவுக்கும் ஒரே வயது. சாஹித்யா, வானதி, ஜான்வி மூவரும் சில பல மாதம் முன்ன பின்ன என்றாலும், ஒரே வகுப்பு தான்.

மேலும் அபி, துருவிடம் “டாடி அவள் ரொம்ப சேட்டை பண்ணுறாள். அவள் கிளாஸ் பசங்களை மட்டும் இல்லாமல் என் கிளாஸ்க்கு வந்து பசங்களை டீஸ் பண்றா டாடி. முதல்ல இவளை ஒரு ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்க..” என்று சொல்ல அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த சாஹித்யா, துருவின் திட்டுக்கு பயந்து, ஃபைலை பார்ப்பது போல் ஆக்ஷ்ன் செய்து கொண்டிருந்த உத்ராவை நோக்கி,

“அம்மா, என்னை ஹாஸ்டல்ல சேருங்க. எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஆனால் தப்பி தவறி இந்த மிஸ்டர் பெர்ஃபக்ட்ட ஹாஸ்டல்ல சேர்த்துறாதீங்க. அங்க இருக்குற வார்டன் கூட இவன் பெர்ஃபக்ஷ்ன் பார்த்து ஓடிடுவாரு” என்று கிண்டல் செய்ய, ஜான்வியும், சூர்யாவும் கிளுக்கென சிரித்தனர்.

அபி அப்படியே துருவ் மாதிரி என்றால், சாஹி அப்டியே உத்ரா மாதிரி. இப்பொழுது கூட, வகுப்பு நடக்கும் நேரம் மூவரும் காம்பௌண்ட் சுவர் ஏறி பள்ளிக்கு வெளியில் குதித்து, ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டு, மீண்டும் உள்ளே வரும்போது, மாட்டிக்கொண்டார்கள்.

பள்ளி நிர்வாகம், துருவை அழைத்து, கிழி கிழி என கிழிக்க, அவன் அதை அவனின் மகளிடம் காட்டினான்.

“சாஹி, இந்த மாதிரி இன்னொரு தடவை நீ சுவர் ஏறி குதிக்கிறதை பார்த்தேன். நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று கண்டிப்பாய் கூற,

சாஹி, “பரவாயில்லை டாடி. நீங்க என்ன பண்ணுவீங்கன்னு யோசிச்சு சொல்லுங்க. உடனே சொல்லணும்னு அவசியம் இல்லை…”என்று குறும்பாய் சொல்ல, இப்பொழுது அபியும் சிரித்து விட்டான்.

அவன் “வாயி வாயி அப்படியே உங்க அம்மா மாதிரி” என்று உதட்டில் சிரிப்பை மறைத்து கொண்டு உத்ராவை முறைக்க, அவள், எதையுமே கண்டுகொள்ளவில்லை.

அவளை பார்த்து தானே அவர்கள் இவ்வளவும் கற்றுக்கொண்டார்கள் அப்பறம் எப்படி பேசுவாள்.

அப்பொழுது, ஆண்கள் மூவரும் வந்து நடக்கும் கூத்தை பார்க்க,  துருவ் மேலும் அவளுக்கு கிளாஸ் எடுக்க, அபி உடனே “டாடி சும்மா சாஹியை மட்டும் குறை சொல்லாதீங்க. உங்க ஹனியை பார்த்து தான் அவள் இப்படிலாம் பண்ணுறாள். லாஸ்ட் வீக் நீங்க ஆஸ்திரேலியா போயிருந்தப்போ, அம்மா, அஜய் சித்தப்பா, விது மாமா மூணு பேரும் நம்ம வீட்டு சுவரை ஏறி குதிச்சு வெளிய போனாங்க. அதை பார்த்து தான் அவளும் பண்ணிருக்கா” என்று அசால்ட்டாக மூவரையும் மாட்டிவிட,

 உத்ரா, அடப்பாவி… என்று பார்த்தாள்.

அர்ஜுன், வாய் விட்டு சிரித்து, “பார்த்தியா உதி எப்பயும் நீ தான் யாரையாவது மாட்டிவிடுவ. இப்போ உன்னையவே மாட்டிவிட ஒரு ஆள் வந்துருச்சு” என்று சொல்ல, அஜயும், விதுனும்  நைசாக எஸ்கேப் ஆகி விட்டனர். இல்லை என்றால், அடுத்த டோஸ் அவர்களுக்கு தான் என்று தெரியாதவர்களா அவர்கள்…

சாஹி, அவள் அம்மாவை காப்பாத்த, “டாடி இவன் பொய் சொல்றான். அம்மா தர்ஸடே நைட் வெளிய போகவே இல்லை… இது இது, ஹான் சூர்யா மேல ப்ரோமிஸ்” என்று தெளிவாக சத்தியம் பண்ண,

அவன் “மாமா இவள் எப்போ பார்த்தாலும் என் மேலயே பொய் சத்தியம் பண்ணுறா…” என்று புகார் கொடுக்க, பின்  துருவ் உத்ராவை முறைத்து கொண்டிருக்கும் நேரத்தை பயன்படுத்தி, அபி தவிர மற்ற வாண்டுகள் வெளியில் ஓடி விட,

உத்ரா, அபியிடம், “டேய் மிஸ்டர் பெர்ஃபக்ட்… எதுக்குடா என்னை கோர்த்துவிடற…” என்று முறைத்தாள்.

அவன், “ஆமா அப்படியே டாடிட்ட சொன்னாலும், அவங்களும் உங்களை திட்டிருவாங்க பாருங்க. ரெண்டே நிமிஷத்துல ஹனி ஹனி
ன்னு உங்க பின்னாடி தான் சுத்துறாங்க. உங்களுக்கு ஒரு நியாயம் என் தங்கச்சிக்கு ஒரு நியாயமா…” என்று துருவின் மகன் என்று நிரூபிக்க, அவ்வளவு நேரம் இவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்து கொண்டிருந்த,

சஞ்சு, “இப்போதானடா அவளை ஹாஸ்டல்ல சேர்க்க சொன்ன. அதுக்குள்ள இப்படி பேக் பல்டி அடிக்கிற…” என்று கேலி பண்ண,

அவனும் சிரித்து விட்டு, “வேற என்ன அண்ணா பண்றது? இல்லைன்னா அவள் ஸ்கூல்ல வந்து என்னை அசிங்கப்படுத்துறா” என்று வராத கண்ணீரை துடைத்து கொள்ள, இருவரும், சிரித்துக் கொண்டு வெளியில் சென்றனர்.

துருவ் அவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல், உத்ரா காதை திருகி, “எத்தனை தடவைடி சொல்றது… இப்படி சேட்டை பண்ணாதன்னு. இதுல உன் பொண்ணு உன்னை மாதிரியே வந்துருக்கா. ம்ம்ஹும் இன்னும் கொஞ்ச நாள்ல உன்னை ஓவர் டேக் பண்ணிடுவா போல. மூஞ்சிய மட்டும் பயந்த மாதிரி வச்சுக்கிட்டு, எப்படி பேசுறா பாரு…” என்று சொல்ல,

அவள் அவனிடம் இருந்து விலகி, “ஹலோ… உங்க பையன் உங்களை மாதிரி இருந்தா, அப்போ என் பொண்ணு என்னை மாதிரி இருக்க மாட்டாளா…” என்று சிலுப்பிக் கொள்ள, அவள் கன்னத்தை பிடித்து கிள்ளியவன்,

“நீ பண்ணுற சேட்டையை பார்த்து அவளும் சுவர் ஏறி குதிக்கிறா. கை கால் உடைஞ்சா வருமா…” என்று கண்டிக்க,

அவள், “நம்ம வேணும்னா, சுவர் ஏறி குதிக்கிற மாதிரி நல்ல க்ளோவ்ஸ் ஷூஸ் லாம் வாங்கிக்குடுத்துடலாமா துருவ். அடி படாம இருக்கும்ல…” என்று விழிகளை உருட்டி கேட்க,

“உன்னை..” என்று அடிக்க வர, அவள் ஓடியே விட்டாள்.

துருவ் தான் “யப்பா, இந்த வானரங்களை சமாளிக்கிறதே கஷ்டம். இதுல, இதுங்க எல்லாருக்கும் ஒரே மாதிரி வானரங்கள் வந்து இப்பவே சேட்டையை ஆரம்பிச்சுடுச்சு. எப்படித்தான் சமாளிக்க போறோமோ…” என்று நொந்தவன், உத்ராவை தேட, அங்கு அவள் தொழிலில் தொல்லை கொடுக்கும், ஒருவனை, போனிலேயே கதற விட்டு கொண்டிருந்தாள்.

எப்படித்தான், சேட்டையும் பண்ணிட்டு, பொறுப்பாவும் இருக்காளோ என்று நினைத்து அவள் போனை தூக்கி எறிந்து விட்டு, “லவ் யு ஹனி” என்று அணைத்துக் கொண்டான்.  

முற்றும்…
சுபம்.. சுபம்.. சுபம்…

கதையுடன் தொடர்ந்து பயணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்😍

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
48
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்