ஆடவனின் இதழீரம் வெப்பமாய் சுட்டப் பிறகே சுயநினைவிற்குத் திரும்பிய விஸ்வயுகா அவனை வலுக்கொண்ட மட்டும் தள்ளி விட முயன்றாள்.
பெண்ணவளை நிதானத்திற்கு கொண்டு வரவே முத்தமிட்ட யுக்தாவினால் அதரம் கொடுத்த மயக்கத்தில் இருந்து சற்றும் விலக இயலவில்லை.
அத்தனை நேரமும் மது அருந்தியபோது ஏறாத ஒட்டு மொத்த போதையும் இப்போது முழுதாய் அவன் மூளையைத் தாக்கிட, அவ்விதழின் இன்பத்தில் மூழ்கிப் போனான்.
“ம்ம்ம்ம்… ம்ம்ம்” என முனகியபடி அவனைத் தள்ள முயன்றவள், அவளது நகத்தை ஆயுதமாக்கி அவன் முதுகில் அழுத்திக் கீறல் போட்டாள்.
அது கொடுத்த வலியில் தான் முகம் சுருக்கி அவளை விடுவித்தவன், “ஏய் காட்டேரி” எனக் கடிந்து அவள் இடுப்பில் மெல்லமாய் ஒரு அடி போட்டான்.
“ஆ ஐயோ சைக்கோ” என்று அவள் அலறியதில் ஒரு நொடி பதறியவன், “என்ன ஏஞ்சல் ஆச்சு? மெதுவா தான அடிச்சேன். வலிச்சுச்சா?” என்று அடித்த இடையைத் தடவிக்கொடுக்க, அந்தக் கையை வெடுக்கென தள்ளி விட்டு எழுந்தாள்.
எழுந்ததோடு நில்லாமல், அவனது இரு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தவள், தலையணையையும் எடுத்து அவனை ஆக்ரோஷமாகத் தாக்க, அதனைப் பொறுமையுடன் வாங்கிக் கொண்டான்.
சில நிமிடங்களில் அவளே மூச்சு வாங்கி நிறுத்தியபிறகே, “இப்போ கோபம் குறைஞ்சுதா ஏஞ்சல்?” என மென்மையாய் வினவ, அவளோ மீண்டும் அடிக்கும் பணியை ஆரம்பித்தாள்.
“என் பயத்தை யூஸ் பண்ணாதன்னு இன்னைக்கு தான சொன்னேன். யூ சைக்கோ… மெண்டல் பைத்தியம்… என்னைத் தொட்டு கிஸ் பண்ற அளவு உனக்கு தைரியமாடா. ச்சை என்னக் கருமத்தை குடிச்சு தொலைஞ்ச. குமட்டுது” என்று நாக்கை நீட்டி முகத்தைச் சுளித்தாள்.
“உன்னை கிஸ் பண்ணப் போறேன்னு தெரிஞ்சுருந்தா, இன்னைக்கு ட்ரிங்க் பண்ணிருக்கவே மாட்டேன் ஏஞ்சல். நீ நடுங்கவும் உன்ன நார்மல் ஆக்க, கிஸ் பண்ணிட்டேன். இனியும் நீ என்னை அவாய்ட் பண்ணிட்டுப் போனா, இதை தொடர்ந்து செய்வேன். ஆனா எப்பவும் கிஸ்ஸோட நிறுத்துவேன்னு கேரண்டியா சொல்ல முடியாது” என்று உதட்டைப் பிதுக்கினான் நக்கலாக.
“நார்மல் ஆக்க கிஸ் பண்ணுவியா?” என விழித்தவளிடம், “சரி அதை விடு. இப்போதைக்கு சிம்பிளா பண்ணிக்கலாமா?” என மொட்டையாக வினவ, அவள் அதிர்ந்தாள்.
அவன் மெத்தையில் அமர்ந்திருந்த கோலமும் கண்கள் தாங்கிய கிறக்கமும் கண்டு உறைந்தவள், “என்… என்ன ப… பண்ணிக்கலாமா?” என்று திணறினாள்.
அவளது எண்ணத்தை நொடியில் உள்வாங்கிக்கொண்ட யுக்தா சாகித்யன், சட்டென இயல்பாகித் தலையை ஆட்டிப் புன்னகைத்தான்.
“கல்யாணம் தான் ஏஞ்சல். கோவில்ல சிம்பிளா பண்ணிட்டு… இந்த கேஸ் எல்லாம் முடியவும் க்ராண்டா பண்ணிக்கலாம். ம்ம்… சென்னைல எந்த கோவில் நல்லாருக்கும் யுகா?” எனத் தீவிர சிந்தனையுடன் கேட்டவனை வெறியாக முறைத்தாள்.
“டேய் பைத்தியம் பைத்தியம்… என்கிட்ட பெர்மிஷன் கேட்காம நீயா முடிவெடுத்து பேசிட்டு இருக்க?”
“பெர்மிஷன் குடுப்பன்னா கேட்கலாம். நீ தான் குடுக்க மாட்டியே. சோ நானே எடுத்துக்குறேன்” என்றபடி மந்தகாசப் புன்னகை வீசினான்.
`
“நான் மைத்ராவைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். உன்னால முடிஞ்சதை பார்த்துக்க” விஸ்வயுகா சீற,
“ஓகே ஒன்னும் ப்ராபளம் இல்ல. அவன் தான் சீரியல் கில்லர்ன்னு ஃப்ரேம் பண்ணி, என்கவுண்டர் பண்ணிடுவேன். அதுக்கு அப்பறம் உனக்கு வேற ஆப்ஷன் இல்ல தான ஏஞ்சல்” ரௌத்திரம் மின்ன வினவினான் யுக்தா.
“அப்பவும் சிங்கிளாவே காலத்தை ஓட்டுவேனே தவிர உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” அனல் மூச்சுடன் எரிந்து விழுந்தவளிடம்,
“நீ சிங்கிளாவே இரு ஏஞ்சல். நம்ம இதே மாதிரி ஒண்ணா ஒரே ரூம்ல கல்யாணம் பண்ணிக்காமலே ஃபன் பண்ணலாம். என் ஆசையும் ஃபுல்ஃபில் ஆகிடும், உனக்கும் கமிட்மெண்ட்டா இருக்காது” என்றபடியே நூலளவு இடைவெளியில் அவளை நெருங்கி அவனது மூச்சுக்காற்று தீண்ட நின்று அவள் மீது கூர்பார்வையைப் படரவிட்டவன், “அப்பவும் உன் மூச்சுக்காத்து என் மேல மட்டும் தான் படணும். யூ ஆர் மைன் ஏஞ்சல். யூ ஆர் ஒன்லி மைன்!” என அழுத்தம் மிக்க உரைத்தான்.
அசையாமல் அவனை வெறித்துப் பார்த்த விஸ்வயுகா, “உன் ஆசை என்னைக்கும் நடக்காது யுக்தா. உன்னோடது பேராசை” என்றாள் இறுகளுடன்.
“பேரழகு மேல பேராசைப் படுறதும் ஒரு கிக்கு தான் ஏஞ்சல்” சட்டென அழுத்தம் விடுத்து ரசனையை வார்த்தைகளில் தூவி விட்டான்.
இவனிடம் வாதாடுவதற்கு குட்டிச் சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் என்ற நிதர்சனம் புரிய, உணர்வற்று அவனை வெறித்திருந்தாள்.
அந்நேரம் சிவகாமியும் அவளுக்கு போன் செய்து கொண்டே இருக்க, “நான் ட்ராப் பண்ணட்டா?” என யுக்தா கேட்டதில்,
“குடிச்சுருக்க…” என்றாள்.
“பட் ஐ ஆம் ஸ்டெடி ஏஞ்சல். கம்!” என அவன் முன்னே செல்ல இம்முறை அவனுக்கு பின்னேயே சென்றாள். இருந்தும் லிப்ட்டினுள் நுழைந்ததும் ஒரு வித பயம் தாக்கியதில், தன்னிச்சையாக அவன் கரத்தைப் பற்றிக்கொள்ள, அவனும் மிக பாதுகாப்பாக அவளை தோளோடு அரவணைத்து காருக்கு அழைத்துச் சென்றான்.
வெளியிலும் மிகவும் தாமதமானதால் தெருவிளக்குகள் எரியவில்லை. அதில் இன்னுமாக மிரண்டவள், அவனோடு ஒன்றிக்கொண்டாள்.
“ஐ ஆம் ஹியர் வித் யூ ஏஞ்சல்” என்றபடி அவளை முன் சீட்டில் அமர வைத்தவன், காரை எடுத்தான்.
அதன்பிறகே அவள் சற்று இயல்பிற்குத் திரும்பிட, அவளை திரும்பிப் பார்த்தவன், “வெரி ஸ்ட்ராங் போல்ட் பிசினெஸ் மேக்னட், ஏன் இப்படி சின்ன விஷயத்துக்குப் போய் பயப்படுற ஏஞ்சல்?” எனக் கேட்டான்.
அவன் சாதாரணமாகக் கேட்டதும் அவளுக்கு குத்திக் காட்டுவது போல இருக்க, “ஏன் தெரிஞ்சா இன்னும் நல்லா பயமுறுத்தலாம்னு பிளான் பண்றியா?” என விழி சிவக்கக்கேட்டாள்.
அதில் இருந்த நடுக்கம் அவனை என்ன செய்ததோ, “சாரி ஏஞ்சல். உன் விஷயத்துல நான் ஏன் இவ்ளோ அடமென்ட்டா இருக்கேன்னு எனக்கே தெரியல. ஐ ஆம் சோ மேட் ஆன் யூ!” என்றான் கண்ணைச் சுருக்கி.
விஸ்வயுகா பதில் பேசாமல் சாலையைப் பார்க்க, “நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலையே. எப்ப இருந்து உனக்கு இந்த ட்ராமா யுகா?” என்றதும், “உங்கிட்ட சொல்ற அளவு நீ எனக்கு முக்கியமானவன் இல்ல யுக்தா. ஜஸ்ட் கோ” என்று வெறுப்பை உமிழ்ந்தாள்.
சுருக்கென கோபம் வர, அதனை அவள் மீது காட்ட இயலாமல் காரின் வேகத்தின் மீது காட்டினான்.
அப்போதே இருவரும் மனம் விட்டுப் பேசி இருந்தால், அவர்களது புரிதலின்மை முடிவுக்கு வந்திருக்கும். மனம் திறந்து பேசும் வேளையில் காலம் கடந்திருக்கும் என்பதை இருவரும் உணரவில்லை.
அவள் மீது கொண்ட பைத்தியக்காரத்தமான காதலும் வெறியும் அவனை பித்தாக்க, அவன் மீது கொண்ட வஞ்சம் அவளை நிதானமாகத் தாக்க வைத்தது.
வீட்டினுள் நுழைந்த விஸ்வயுகாவைக் கண்ட சிவகாமி, “ஏன் இவ்ளோ லேட் விஸ்வா?” எனக் கேட்க,
“வேலைம்மா” என்று அவள் அறைக்குச் செல்லப் போனாள்.
“நீ ஃப்ரீ டைம் சொன்னா, அன்னைக்கு என்கேஜ்மென்ட் அரேஞ்ச் பண்ணிடலாம்மா” என்றார் மோகன்.
“எதுக்கு?”
“என்ன இப்படி கேட்குற. நான் தான் போன்ல எல்லாம் விளக்கமா சொன்னேனே” சிவகாமி லேசாய் எரிச்சல் பட,
“உங்க விளக்கத்தைக் காது குடுத்து கேட்க முடியலம்மா. எனக்கு கல்யாணம் வேணாம். அதுவும் மைதாவை நான் அப்படியெல்லாம் நினைச்சு கூட பார்க்கலம்மா” அவளிடமும் அதே எரிச்சல்.
“ஆனா மைத்ரா கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான்னு தான் அவன் அம்மா சொன்னாங்க. உன்மேல விருப்பம் இல்லாமையா அவன் ஓகே சொல்லிருப்பான். இங்க பாரு விஸ்வா எப்பவும் போல கண்டதையும் யோசிச்சு உளறாம கல்யாணத்துக்கு ஒத்துக்குற வழியைப் பாரு” என மோகன் அதட்டினார்.
ஷைலேந்தரி இவர்களது வாக்குவாதங்களை தனது அறையில் இருந்து கேட்டபடி போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்க, காயத்ரி அவளுக்கு அருகில் அமர்ந்து பொருமினார்.
“அவள் தான் கல்யாணம் வேணாம்னு சொல்றாளே விட வேண்டியது தான… எல்லாம் உன்னால வந்துச்சு” என்று மகளின் முதுகில் ஒரு அடி வைத்தார்.
“ஸ்ஸ் ஆஆ ஏம்மா இப்படி அடிக்கிற?” என அவள் முறைக்க,
“பின்ன என்னடி, அந்த மைத்ராவை நீ கல்யாணம் பண்ணிக்க விரும்புறன்னு விஸ்வாகிட்ட சொல்ல சொன்னா, அவளே இதை பண்ணிருப்பா. உனக்கும் மைத்ராவுக்கும் கல்யாணம் ஆகி நீ செட்டில் ஆகி இருப்ப… இப்படி பொழைக்க தெரியாதது என் வயித்துல வந்து பிறந்துருக்கு” என்று நெருப்பைக் கக்கியத்தில் அவள் பல்லைக்கடித்தாள்.
“நான் அவனை லவ் பண்ணவே இல்லைங்குறேன். திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிட்டு இருக்கீங்க. மண்டையில நட்டு எதுவும் கழண்டுருச்சா. அதுவும் இல்லாம, அவளுக்கும் மைத்ராவுக்கும் பேசுனதுக்கு அப்பறம் போய் கெடுத்து விட சொல்றீங்க. அவள் லைஃப நானே கெடுப்பேன்னு நீங்க எப்படி எதிர்பார்க்குறீங்கம்மா. அவளை மைத்ரா நல்லா பார்த்துப்பான். அவளை அண்டர்ஸ்டான்ட் பண்ணிப்பான். நான் தான் உங்க விருப்பப்படி ஹை ப்ரொபைலா பார்த்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுறேன்னு சொல்லிட்டேனே. அப்படியும் அவங்க லைஃப்ல ஏன் குளறுபடி பண்ண நினைக்கிறீங்க. இது ரொம்ப தப்பும்மா. இன்னொரு தடவை இந்த மாதிரி என்கிட்ட பேசாதீங்க. அப்பறம் நான் அம்மான்னு கூட பார்க்க மாட்டேன்” என்றவளின் குரலில் அதீத கோபம்.
“என்னை விட உனக்கு அவள் முக்கியமா போய்ட்டாளா?” காயத்ரி எகிறிட,
“ஆமா, எனக்கு அவள் தான் முக்கியம்” சுள்ளென அவள் உரைத்ததில் காயத்ரிக்கு சினம் பெருகியது.
இங்கோ விஸ்வயுகா முடிவாக மறுக்க, சிவகாமி அழுத்தம் திருத்தமாக “இது என் முடிவு விஸ்வா. உனக்கும் அவனுக்கும் கல்யாணம் நடக்கும் அவ்ளோ தான். கல்யாணத்துக்கு நீ வந்து தாலியை கட்டிக்கிட்டா போதும். இதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை” என்றவர் மோகனின் புறம் திரும்பி “என்னங்க, ரொம்ப நாள் தள்ள வேணாம். ஒரு வாரத்துக்குள்ளவே நல்ல நாளா பார்த்து மண்டபமும் பிக்ஸ் பண்ணுங்க” என்று அவர்களாக திட்டம் போட, அவளுக்கு தான் உள்ளுக்குள் கனல் சுழன்றது.
கோபத்துடன் சௌந்தரின் அறைக்குச் சென்றவள், அங்கு அவர் மாத்திரையைப் போட்டு அப்போது தான் படுத்திருப்பது கண்டு, அவர் அருகில் சென்று படுத்துக்கொண்டாள்.
மகளின் வரவைக் கண்டதும், அவள் தலையை மெல்ல கோதி விட்டவர், “எல்லாம் கேட்டுச்சு தான?” என்றாள் கலங்கிய குரலில்.
“ம்ம்”
“ஏன் எனக்காக பேச வரல நீங்க…”
“உனக்கு கல்யாணம் பண்றது நல்ல விஷயம் தான யுகாம்மா. இதுல நான் எப்படி தடை சொல்ல முடியும். உன் அம்மா அப்பா உன் நல்லதுக்கு தான் எல்லாம் செய்வாங்கடா.”
“நல்லது செய்றது வேற, பிடிக்காததை செய்றது வேற. என் சித்தி இருந்துருந்தா நீங்க எனக்காக பேசி இருப்பீங்க தான” என்றவளின் கேள்வியில் துடித்தவர்,
“உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா சொல்லுடா நான் பேசுறேன். ஆனா இந்த விஷயத்துல நான் தலையிட முடியாதுல. அண்ணி என் பேச்சை ஏத்துக்க மாட்டாங்க. உனக்கே தெரியும் தான ஏஞ்சல்” என்றவரின் விழி ஓரத்திலும் சிறு நீர்த்துளி.
வெடுக்கென எழுந்தவள், “என்னை ஏஞ்சல்னு கூப்பிடாதீங்க. எனக்கு பிடிக்கல. ஐ ஹேட் திஸ் வர்ட். நான் ஏஞ்சலா வாழ்ந்தது என் சித்தி என்கூட இருந்தவரை மட்டும் தான். அவங்க போனதோட எனக்கு எல்லாமே போச்சு. அவங்க போனதுக்கு அப்பறம் எதுவுமே நல்லதா நடக்கல. நீங்களும் எனக்கு ஒரு நல்ல சித்தப்பாவா இல்ல. ஐ ஹேட் யூ சித்தப்பா” என்றவளின் கண்களில் நீர் நிறைந்திருக்க, அவர் பேசும்முன்னே தனது அறைக்கு விறுவிறுவென சென்று அடைந்து விட்டவளின் கன்னங்களைத் தொட்டது சூடான விழிநீர்.
மறுநாள் அலுவலகம் செல்லப் பிடிக்காமல், பீனிக்ஸ் மாலுக்குச் சென்றாள்.
எப்போதும் மற்ற மூவருக்கும் தெரியாமல் எங்கும் சென்றது கிடையாது. இன்று இருந்த மனநிலையில் யாரிடமும் சொல்லத் தோன்றவில்லை.
தனியாக அரை மணி நேரத்துக்கு மேல் இருக்கப் பிடிக்காமல் மீண்டும் காருக்கே வந்து விட்டவள், காரை எடுக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
வார நாள் ஆனதால், கார்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
அந்நேரம், நீல நிற ஜாக்கட்டும், கருப்பு நிறத் தொப்பியும் அணிந்திருந்த ஆடவன் ஒருவன் அவளது ஜன்னல் கதவைத் தட்ட, அவன் மாஸ்க் அணிந்திருந்ததில் புருவம் சுருக்கி ஜன்னலை லேசாகத் திறந்தாள்.
மாலில் வேலை செய்யும் யூனிஃபார்ம் போலான உடை அணிந்திருந்ததால் முதலில் அவளுக்கு சந்தேகம் ஒன்றும் வரவில்லை. அவள் மெதுவாக கதவைத் திறந்ததுமே, அவன் கத்தியை உள்ளே நீட்டி இருக்க, நொடியில் நிலையை உள்வாங்கி கொண்ட விஸ்வயுகா பின்னால் நகர்ந்து தப்பித்தாள். உடனே ஜன்னலையும் ஏற்றி விட முயல, அவன் கையில் இருந்த கத்தியால் அவளை மீண்டும் குத்த வந்தான்.
அதில் மீண்டும் விஸ்வயுகா பின்னால் நகர்ந்ததை சாதகமாக்கி வெறும் கையாலேயே ஜன்னலை உடைத்தவன், காரை அன்லாக் செய்து விட, அவள் காரை எடுக்க முயன்றாள். அவன் விடவில்லை.
அதற்கு மேல் அங்கு இருப்பது ஆபத்து எனப் புரிந்து மறுபக்க கதவு வழியே இறங்கி ஓடத் தொடங்க, அந்த உருவம் அவளைப் பின்தொடர்ந்து ஓடி வந்தது.
யாரிவன்? எதற்காக என்னைத் தொடர்கிறான் என்ற கேள்விக்கு எல்லாம் மூளை ஒரு புறம் விடை தேடிக்கொண்டிருந்தாலும், கால் வந்த போக்கில் மாலையே சுற்றி ஓடிக்கொண்டிருந்தாள். அவன் விடாமல் துரத்த, அவசரமாக பேண்ட் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து யுக்தாவிற்கே போன் செய்தாள். அவனது எண் தான் கால் ஹிஸ்டரியில் முதலில் இருந்தது.
ஒரே ரிங்கில் போனை எடுத்தவன், “ஹாய் ஏஞ்சல்” என்றிட,
“யு… யுக்தா யாரோ… எவனோ என்னைத் துரத்துறான்” என மூச்சு வாங்கியதில் திகைத்தவன் “எங்க இருக்க?” என்றான். அவள் இடத்தைக் கூறியதும், “பைவ் மினிட்ஸ், ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் ஹோல்டு பண்ணு. ஆன் தி வே” என்றவன் போனை அணைக்க வேண்டாமென உத்தரவிட, அவனோ நெருங்கி வந்துவிட்டான்.
அவனிடம் இருந்து தப்பித்து படிகளில் ஏற ஆரம்பித்தாள்.
“யுக்தா அவன் கத்தியால குத்த வர்றான்” என விஸ்வயுகா பயத்தில் கூற, “ஆன் தி வே ஆன் தி வே. ஏஞ்சல்… அவனை தைரியமா பேஸ் பண்ணு” என்றவனின் குரலில் அவளைக் காக்க வேண்டுமென்ற பதட்டம் தென்பட்டது.
“அவன் ஒருவேளை சீரியல் கில்லரா இருந்தா. வேற யாராவதுன்னா, கராத்தே பாக்சிங்னு கத்துக்கிட்ட வித்தையை இறக்கலாம். இவன் குத்திட்டு தான யோசிப்பான். என்னை கொலை பண்ண பிளான் பண்றியாடாங்…” என்று தூணில் மறைவில் நின்று மூச்சிரைத்துப் பேச, அதற்குள் அந்த ஆடவன் இவள் வாயைப் பொத்தி தனியே இழுத்துச் சென்றான்.
எமெர்ஜென்சி எக்சிட் வழியே இருந்த ஒரு அறைக்குள் தள்ளியவன், கத்தியால் மீண்டும் தாக்க வர, இம்முறை அவள் கற்றுக்கொண்ட வித்தையை இறக்க வேண்டியதாகி விட்டது.
ஆனால் அவளை இலாவகமாகத் தடுத்தவன், அவளது இடுப்பில் முட்டியை வைத்து குத்த, வலியில் சுருண்டவள் அவனது அடி வயிற்றைக் காலால் தாக்கினாள்.
ஒரு கணம் அவனும் சுருண்டான். ஆகினும் இடைவெளி விடாமல் கத்தியை எடுத்து அவளது கழுத்தை நோக்கி வீச வர, தூரத்திலிருந்து வந்த குண்டு அவனது கையைப் பதம் பார்த்ததில் கையை உதறினான்.
தீப்பிழம்புடன் துப்பாக்கியை அந்த மர்ம மனிதனின் முன் காட்டியபடி அருகில் வந்தான் யுக்தா சாகித்யன்.
அவனைக் கண்டதும் அந்த மனிதனின் கண்களில் சிறு அதிர்ச்சி. இரத்தம் வழிந்த கையை ஒரு கையால் பற்றியபடி அவனுக்கு அருகில் இருந்த ஜன்னல் கதவைத் திறந்து அதிவேகத்தில் குதித்தான்.
அவன் குதிக்கும் முன்னே விஸ்வயுகா அவனைத் தடுக்க முயல, அவனோ படாரென அவளைத் தள்ளி விட்டு குதித்து சரியாக சன் ஷேடில் விழுந்தான்.
அவனால் தள்ளிவிடப்பட்ட விஸ்வயுகா யுக்தாவின் மீது வந்து மோதிட, அவளை இரு கரத்தாலும் அணைத்தவன் “ஆர் யூ ஓகே ஏஞ்சல்? அடி எதுவும் படலை தான” என அவளை மேலிருந்து கீழ் வரை எக்ஸ்ரே பார்வையால் ஆராய்ந்தான்.
அவளோ இடுப்பைப் பிடித்தபடி, “இல்ல நீ போய் அவனைப் பிடி” என்ற ஒற்றைச் சொல்லில் ஒரே தாவாக அவனும் ஜன்னல் வழியே குதித்து விட்டதில் பாவை அதிர்ந்து விட்டாள்.
வேகமாக ஓடிச் சென்று ஜன்னல் வழியே எட்டிப்பார்க்க, சன்ஷேடில் குதித்து கீழே இறங்கியவன் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த மர்ம மனிதனைப் பிடிக்கும் பொருட்டு அவனைத் துரத்தினான்.
“அடக்கடவுளே… அந்த சைக்கோ அவ்ளோ தூரமா ஓடுது. இந்த சைக்கோ எப்படி போய் அவனைப் பிடிக்கப் போறான்” என நொந்து கொண்டு “யுக்தா வேணாம் வந்துடு” எனக் கத்தியவள், அவன் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்பதை மறந்து விட்டாள்.
தரையில் இறங்கி மர்ம மனிதனை நோக்கி ஓடிய யுக்தா சாகித்யன், வெகு தூரத்தில் தெரிந்தவனை நோக்கி துப்பாக்கியை நீட்ட, “ஐயோ டேய் யாரையும் சுட்டுத் தொலைஞ்சுடாத” என்று விஸ்வயுகா பதறும்போதே புல்லட்டை அவனது காலுக்கு நேராக பாய்ச்சினான்.
அதில் அவன் தடுமாறி விழுக, அடுத்த குண்டை அவனது மற்றொரு காலில் செலுத்தியதில் அவன் ஓட இயலாமல் அமர்ந்து விட, அவனை யுக்தாவின் குழுவினர் சுற்றி வளைத்து விட்டனர்.
விஸ்வயுகா தான் ஒரே இடத்தில் உறைந்து நின்று விட்டாள். ‘இவன் என்ன கண்ணுக்கே தெரியாதவன கரெக்ட்டா சுட்டுப்புட்டான்’ என எச்சிலை விழுங்கிட, யுக்தா மீண்டும் அவர்கள் இருந்த எமர்ஜென்சி எக்சிட் அறைக்கு ஓடி வந்தான்.
சரியாக அவள் ஜன்னலில் இருந்து பார்வையைத் திருப்பும் போதே அவன் பின்னால் நிற்க, ஒரு நொடி பயந்து போனவள், “நீ என்னடா மின்னல் வேகத்துல ஓடி ஓடி வர்ற…” என்றாள் தலையைச் சொறிந்து. அதனைக் கவனியாமல், “இடுப்புல அடிச்சுச்சா” எனக் கேட்டபடி அவள் இடையை நீவி விட, சட்டென பின்னால் நகர்ந்தவள், “உனக்கு எப்படி தெரியும்” எனக் கேட்டு முறைத்தாள்.
“நீ அவனைப் பிடிக்க சொல்லும்போதே இடுப்பைப் பிடிச்சுட்டே நின்னியே. ஹாஸ்பிடல் போகலாமா ஏஞ்சல். எவெரிதிங் இஸ் ஓகே?” என்றவனின் குரலில் கூட அதிக அளவு பதற்றம்.
அவனது தவிப்பு அவளை ஊடுருவ முயல, அதனை தவிர்த்தவள், “அவன் நார்மலா அடிச்சுருந்தா இந்த அடி எனக்கு பெருசா வலிச்சு இருக்காது. நீ பார்த்த வேலைல தான் ரொம்ப வலிக்குது” என்று முகத்தைச் சுருக்கினாள்.
அதில் மெல்ல நிம்மதியாகி, குறும்பை கையில் எடுத்தவன், “நான் இடுப்பு வலிக்கிற அளவு எதுவும் பண்ணலையே ஏஞ்சல்…” என்றான் கண்சிமிட்டி.
அதன்பிறகே அவள் சொன்னதை அவன் வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொண்டான் எனப் புரிந்து, இரு கன்னங்களும் செக்கச் செவேலென ஆகி விட்டது.
தேவையில்லாத சிலிர்ப்பு எனப் புரிந்தாலும், இதழ் கடித்து அதனை அடக்கியவளை அதிகப்பட்ச ரசனையுடன் ஏறிட்டான்.
தன்னை விழுங்கும் பார்வையை சூடான மூச்சில் அடக்க எத்தனித்து தோற்றுப் போனவள், “நீ என் கன்னத்தைக் கடிச்சு வச்சதுல, என் அம்மாகிட்ட நாய் பிராண்டிருச்சுன்னு பொய் சொல்லி அவங்க எனக்கு ஊசியை போட வச்சுட்டாங்க” என மூச்சிரைக்க, வாய் விட்டு சிரித்தான் ஆடவன்.
பின் அவள் கையை எடுத்து அவனது இடுப்பில் வைத்தவன், “நீ என்னைப் பிராண்டி வச்சதுல இன்பெக்ஷன் ஆகி காலைல நான் கூட டிடி போட்டுட்டு வந்தேன்…” என மென்குரலில் கூறியதில் மீண்டும் அவள் கன்னங்கள் சிவந்தது.
அவனோ பெண்ணவளை நெருங்கி நின்று, “பட் இனி கடிச்சாலும் பிராண்டுனாலும் பிரச்சனை இல்லை. பிரிவென்ஷன் பண்ண தான் ஊசி போட்டாச்சே. இன்பெக்ஷன் ஆகுதான்னு டெஸ்ட் பண்ணிப் பார்த்துடாலாமா ஏஞ்சல்?” எனக் கிசுகிசுக்க, அவளோ உட்சபட்ச கோபத்துடனும் அதிர்வுடன் அவனைத் தீயாக சுட்டுக்கொண்டிருந்தாள்.
மோகம் வலுக்கும்
மேகா