Loading

தீரா தாகம் 

மீளா சோகம் 

ஆறா காயம் 

மாறா மோகம் 

காணா காட்சி 

தேடா வழிகள் 

தெவிட்டா இந்த ஏகாந்தம் 

விடியா இரவு 

தெளியா கனவு 

புரியா காதல் 

அறியா விடைகள் 

அவிழா முடிச்சு 

முடியா இக்கவிதை 

யாவும் 

என் தனிமையின் 

சேரா எண்ணங்கள். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்