வணக்கம் நட்பூஸ் அண்ட் சகோஸ் ..
எல்லாரும் எப்படி இருக்கீங்க ? திரும்பவும் நம்ம தூரிகை தளத்திற்கு வந்துவிட்டேன் .. இந்த தளம் ஆரம்பிச்ச புதுசுல “வலுசாறு இடையினில்” கதையை பெயர் சொல்லாமல் எழுதும் போட்டியில் இங்க எழுதினேன் . அதுக்கு அப்பறம் ஒரு சிறுகதை போட்டிக்கு எழுதினேன் . ரொம்ப நாள் கழிச்சி, சில வருஷங்கள் கூட ஆகிரிச்சின்னு சொல்லலாம் .. இப்ப மறுபடியும் தூரிகை என் கையில் தூரிகை கொடுக்க வந்திருக்கு .. மேகா பேபி எனை கூப்பிட்டதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் ..
நான் முழு நேர எழுத்தாளர் இல்லை . வருஷத்துக்கு ஒரு நாவல் முடிச்சாலே அது பெரிய சாதனை தான் .. என்னை தொடர்ந்து எழுத வைக்கும் முயற்சிய இப்போ தூரிகை ஆரம்பிச்சி இருக்கு. நானும் ரொம்ப ஆவலா இருக்கேன் என்னை எப்படி இவங்க அதட்டி உருட்டி மிரட்டி எழுத வைக்க போறாங்கன்னு ..
இப்போ “விடா ரதி…” எனும் கதை தூரிகை தளத்தில் இனிமே வரும் .. இது ஒரு காதல் கதை . பெரிய பெரிய காதல் கதை ஜாம்பவான்களுக்கு மத்தில ஒரு எறும்பு மாதிரி நானும் ஒரு காதல் கதை முயற்சி செஞ்சிருக்கேன் .. படிங்க உங்களுக்கு பிடிக்குதா இல்லையான்னு சொல்லுங்க ..
கூடிய விரைவில் அத்தியாயங்களோட உங்களை சந்திக்க வரேன் .. மேல இருக்கறது தான் கவர் போட்டோ .. விரைவில் தளத்தில் சந்திப்போம் .. நன்றி ..
அன்புடன்,
ஆலோன் மகரி