Loading

சந்திக்க வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்த நிறைமதியனையும் வைவிழியையும் தூரத்திலேயே பார்த்த உடனே காரெழிலன் தன் நண்பனிடம் பேச சென்றுவிட்டான் விழிக்கும் மொழிக்கும் சிறிது தனிமை கொடுக்கவேண்டி அவனிடம் வம்பளக்க சென்றுவிட்டான் .

மொழியை பார்த்த விழி ஓடி சென்று அவளை அணைத்துக்கொண்டவள் தேம்பி அழுதாள்,” நீ எங்கயோ காணாம போயிட்ட. எங்க நீயும் என்ன விட்டு போய்டுவியோன்னு பயந்துட்டேன் மொழி. என்னை ரொம்ப பயமுறுத்திட்ட”.

மொழி ஆறுதலாய் அவளுக்கு முதுகில் தடவி கொடுத்தாள் . விழியின் பயம் அவள் அறிந்தது தானே . அதுவும் விழிக்கு தான் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறிந்தவள் தானே.

மொழி,” ஒண்ணுமில்ல டா  வந்துட்டேன்”, சமாதானம் கூற முயன்றாள்.

அவளது கடந்தகால நிகழ்வுகளின் விபத்திற்கு அவள் தான் காரணம் என்று அவளே அவளை நொந்துகொண்டு வாழ்கிறாள். அதற்கு அவள் காரணம் அல்ல என்று எத்தனை சொல்வது இருந்தும் தன் மீதே பழி போட்டுக்கொள்ளும் அவளை என்னவென சொல்வது. தோழியின் இறப்பை ஏற்றுக்கொள்ள இயலா அவளின் இயலாமையை எப்படி சரி செய்வது. இப்போது அத்துடன் சேர்ந்து கொண்டது சிகிச்சை கொடுத்ததால் உலகை விட்டு சென்ற உயிர் மீதான எண்ணம். 

அதற்கும் தான் தானே காரணம் தான் தகுந்த நேரத்தில் சரியான சிகிச்சை கொடுக்கவில்லை அதனால் ஒரு உயிர் இன்று இல்லை அதனை நினைக்கவே வலித்தது. மருத்துவராய் இருக்க தான் தகுதியற்றவள் என்ற நிலைக்கு அவள் எண்ணங்கள் .  அவளின் காயங்களை எங்கிருந்து ஆற்றுப்படுத்த முயல்வது. அவை அனைத்தையும் ஆற்றுப்படுத்தும் எண்ணத்தில் மொழி.

விழி, ” நான்  உன்னையும் அவளை போல இழந்துடுவேன்னு  ரொம்ப பயந்துட்டேன் மொழி”

மொழி,” அதெல்லாம் இல்லை டியர். இதோ வந்துட்டேனே உன் முன்னாடி தானே இருக்கேன். எத்தனை வாட்டி சொல்லிருக்கேன். அவ இறந்ததுக்கு  நீ காரணம் இல்லை. இப்ப அந்த பாப்பா இறந்ததுக்கும் நீ காரணம் இல்லை. ரெண்டுமே விதிக்க பட்டது தவிர்க்க முடியாத ஒன்னு”, என்றுவிட்டு அவளை ஆசுவாச படுத்தினாள் மொழி.

அவளது கடந்த கால காயத்திலிருந்து வெளியேறி தான் இருந்தாள் விமானத்தில் நடந்தவைகள் மீண்டும் அதே சிந்தனையை தூண்டிவிட்டிருந்தது. அனைத்தும் அவளின் நெஞ்சை அடைத்து மூச்சு முட்டுவது போல் இருந்தது. வேலையின் அழுத்தத்தில் இருந்து  வெளிவர மேற்கொண்ட பயணம் மேலும் மனதை அழுத்தமாய் மாற்றியதின் விந்தையை என்னவென்று சொல்வாள் அவள். விமானத்தில் ஆரம்பித்த விழியின்  விழி கதறல்கள் இன்னும் நின்றபாடில்லை. 

அவளது இன்னல்களை சிரித்து சிரித்து மறைத்து கொண்டாள். அவளது  இயல்பை எத்தனை அழகாய் சிரித்த முகமாய் தன்னை மீண்டும் சீர்படுத்தி கொண்டாள். அனைத்தும் இத்தனை இலகுவாய் அவள் மனதை உடைத்துவிட்டதே. இந்த அழுகை , சோகம் இவற்றை அவளும் விரும்பவில்லைதான். எப்படி தன்னை அதிலிருந்து வெளிக்கொண்டுவர என அத்தனை முயற்சிகள் செய்தாள். வெற்றியின் முதல் படியிலேயே சறுக்கிவிட்டாள் பெண்.

இவர்களின் தனிமை போதும் என்று நினைத்தனரோ என்னவோ எழிலும் மதியும் அருகே வந்துவிட்டிருந்தனர். அதற்குள் விழியும் ஓரளவுக்கு அழுகையை நிறுத்தி இருந்தாள்.

எழில்,”என்ன ஐஸ் வண்டி என்ன அழுகை . உன் ப்ரெண்ட பத்திரமா கூட்டிட்டு  வந்திருக்கேன் எதுமே சொல்லல. ட்ரீட் ஆச்சு வெக்கணும் சொல்லிட்டேன். ஒரு குச்சி ஐஸ் ஆச்சு வாங்கி தரணும்”, என்க ,

விழியின் பதில், அவளது புன்னகை கீற்று. இதை கண்டுவிட்ட மொழியோ இடைநுழைந்து ,” வந்த வழிய மறந்துட்டு என்னை தொலைக்க பார்த்தீங்க தானே இதுக்கெல்லாம் ட்ரீட் கிடையாது”, என்றவள் அவன் அவளுடன் சண்டையிட அடுத்த வார்த்தை பேசும் போதே கண்களால் விழியை ஜாடை காட்டிவிட அவனுக்கு புரிந்தது. அவனும் இத்தனை பேசியது விழியை இலகுவாக்க தானே. அவளை பார்த்து கண்ணமர்த்தியவன். அவளுடன் இணைந்து பேச்சுக்களை தொடர்ந்தான் விழியை திசை திருப்பும் பொருட்டு . அதை ஓரளவு வெற்றியும் கண்டனர் இருவரும்.

நிறைமதியனுக்கு தான் கலையிழந்த சோக முகமும் கண்ணீரும் என நின்றவளை பார்க்க மனம் பிசைந்தது. சமாதானம் உரைக்க அவனுக்கு தெரியவில்லை . அப்படி பேசி அவனுக்கு பழக்கம் இல்லையே. அவளை சமாதான படுத்தவும் முடியவில்லை. தன்னை நினைத்தே நொந்துக்கொண்டான். அத்தனை இரக்கம் அவனுக்கு எங்கிருந்து வந்ததோ . விமானத்தில் அந்த சிறு பிள்ளையின் இழப்பு  வருத்தம் இருந்தது தான் சோகமும் மனதில் விரவியது உண்மை.

ஆனால் இவளின் சோகம் ,இவளின் அழுகை, இவளின் துயரம், அவனை வெகுவாய் அசைத்தது . இரக்கமா இரக்கம் மட்டும் தானா? என்று கேட்டால், உண்மையில் அவனிடம் பதில் இல்லை. இரக்கம், ஈரம் அவனுக்குள்ளும் உண்டு தான். இவளிடம் ஏற்படுவது இரக்கம் என தற்போது இவனே வரையறுத்தான் அவனது மன அகராதியில். ஏன் இவள் அழுதால் தனக்கு வலிக்கிறது ஒரு வேலை தோழியாக நினைத்துவிட்டேனோ அதனால் கூட இருக்கலாம் என்று தனக்குள் உரைத்துக்கொண்டவனுக்கு காலில் சுள்ளென வலி ஏற்பட்டது அதன் வெளிப்பாடாய் முகத்தில் சிறிய சுணங்கள். 

அந்நேரம் அவனை கண்ட எழிலனோ ,” டேய் என்னடா “, என்க ,

மதியன்,”ஒண்ணுமில்ல டா கால் ல அடிபட்டுருக்கு “, என்றவன் .

மதியன்,”சரி அவங்க கிடைச்சிட்டாங்க ல வாங்க மறுபடியும் அந்த பாறை கிட்டயே போவோம்”

நால்வரும் அப்பாறையிடம் செல்ல நடையை தொடர்ந்தார்கள் . எழிலனோ கையில் அந்த பானையின் தண்ணீரை எடுத்துக்கொண்டு கீழே சிந்தாமல் மெதுவாய் அலுங்காமல் நடந்து வர அவனையும் அவன் கையில்  இருக்கும் பானையையும் இப்போது தான் கவனித்த நிறைமதியன் என்னவென வினவ,

அப்போது விழியும் நிமிர்ந்து எழிலனை பார்க்க அவளை ஒரு பார்வை பார்த்தவாறு எழிலனிடம் பேச்சை தொடர்ந்தான் நிறைமதியன். எழிலனும் அங்கு நடந்தவற்றை விளக்கி அந்த தண்ணீரை அவனுக்கு காட்ட விழியும் வந்து அதனை எட்டி பார்த்தாள்.

” இந்த தண்ணிய ஒரு வேலை பாயில் பண்ணா ப்யூரிபை பண்ண முடியும் ல “

“தெரில ஆனா இதை பார்த்தா அப்டி ஆகுமா னு டவுட் ஆஹ் இருக்கு. பட் வாய்ப்பிருக்கு. ஆனா அதுக்கு நெருப்பு இந்த பானையை நிக்க வைக்க ஒரு மூணு கல்லு னு வெச்சா தான் பாயில் பண்ண முடியும்”.

” ஆமா இது எந்த இடத்துல எடுத்தீங்க ” என்று கேட்டவன் அவர்கள் இருவரும் சொல்வதை கவனியது அவதானித்தான் அது என்னவாக இருக்குமென. தெரியவில்லை அவனுக்கும்”.

அதற்குள் இவர்கள் பாதி தூரம் சென்றிருந்தார்கள் பேசி கொண்டே . அங்கே அவர்களுக்காக பாறைக்கு சற்று அருகே காத்திருந்தவர்களில் ஒருவர் அங்கு வந்தார் அவர்கள் தேடி சென்றவரின் நிலையை கேட்டறிய. மொழியை விசாரித்துவிட்டு அப்போது தான் எழிலன் கையில் தண்ணீரை பார்த்தவர் என்னவென வினவ மீண்டுமொரு விளக்கம் அளிக்கப்பட்டது அவருக்கு அவனிடமிருந்து.

” எப்பா. இதுக்கு மேல தெம்பில்லை பா . சார் உங்களுக்கு புரிஞ்சுது ல இனி யார் கேட்டாலும் சொல்றீங்களா ப்ளீஸ். நாக்கு தள்ளுது “என்றதும் அவரும் சிரித்துவிட்டார்.

“ப்ரோ, நீங்க சொல்றத பார்த்தா எனக்கு ஒரு கெஸ் இருக்கு ஒரு வேலை ‘பிராக்கிஷ் வாட்டர்’ (Brackish water) ஆஹ் இருக்க வாய்ப்பிருக்கு . நீங்க சொல்றது அப்டி தா தோணுது “.

எழில்,”பிராக்கிஷ் வாட்டரா எங்கயோ கேட்டது போல இருக்கே?”

அதற்குள் இடை நுழைந்த நிறைமதியனோ, ” ஹான் பாத்திருக்கேன் . இது இந்த தண்ணி ட்ரீட் பண்ணலன்னா அங்க இண்டஸ்ட்ரில இருக்க எக்விப்மெண்ட்ஸ கூல் பண்ண யூஸ் பண்ணுவாங்க”, என்க அதற்கு அந்த மூன்றாமவனோ,

“ஆமா ப்ரோ. இதுல சால்ட் கன்டென்ட் அதிகம் . ரிவேர் தண்ணியும் இருக்கும் கடல் தண்ணியும் இருக்கும். நீங்க சொல்ற போல பாயில் பண்ணலாம் தான் ஆனா அந்த சால்ட் கன்டென்ட் போகாது. அது ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் ப்ராசஸ் பன்ணனும். இப்ப ஒர்கவுட் ஆகாது” இந்த தண்ணி இருந்த இடத்துல இருந்து பக்கத்துல இல்ல கொஞ்ச தொலைவுல நல்ல தண்ணி இருக்க சான்ஸ் இருக்கு”.

எழில்,”அதுக்கும் இப்ப போக முடியாது ப்ரோ நாளைக்கு போய் பாப்போம் . இங்க ஏதும்  ஊர் இருக்கும் போல தெரியுது . இந்த  பானை இருக்குன்னா கண்டிப்பா மனுஷங்க இருப்பாங்க தானே”.

மதியன், “ரெண்டுத்துக்குமே மார்னிங் தான் தேடி போகணும்”, என்றவனுக்கு  மீண்டும் கால்களில் பொறுக்க முடியா வலி. அப்படியே அமர்ந்துவிட்டிருந்தான். திடீரென இப்படி அமர்ந்தவனை கேள்வியாய் பார்த்தனர் அவர்கள்.

எழிலன்,” எங்க அடி பட்டுச்சு மதி. எங்க காமி “

மதியன்,” பாம்பு கடிச்சிருச்சு போல டா “. அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போயினர்.

எழிலன்,” டேய் பாம்பு கடிச்சிருச்சு போலனு சாதாரணமா சொல்ற. முதல்ல அந்த காயத்தை காமி “.

மதியன்,” இல்லை அது கடிச்சுதா னு அப்ப தெரில வலியும் இல்லை, அதான் கடிச்சிருக்காதுனு விட்டுட்டேன்” என்றவன் காற்சட்டையை தூக்க கால் சற்று வீக்கம் கண்டிருந்தது.

எழிலன்,” போடா பைத்தியம் . இப்ப என்ன பண்றது “, என்றவனுக்கும் பயம் தான் நண்பனின் நிலையை எண்ணி. இவன் கூறியிருக்கலாமே என்று அதனை கோபம் அவன் மீது.

விழி அங்கு பதறியவளாய் நின்றிருந்தாள் நிறைமதியன் பாம்பு கடித்ததை சொன்னதிலிருந்தே. எப்போது எங்கே நடந்தது தன்னுடன் தானே வந்தான் என கடந்த பாதையை  நினைவு கூர்ந்து கொண்டிருந்தவள் சிந்தனைகளில் இருந்து கலைத்தது

என்ன செய்வதென எழிலன் குரல். சட்டென அவள் அணிந்திருந்த துப்பட்டாவை கிழித்தவள் அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். அவன் கால்களை மிக அழுத்தமாய் இல்லாமல் இலகுவாகவே கட்டியிருந்தாள் அந்த துணியை அதை கண்ட எழிலன்,

எழிலன்,” டயிட்டா கட்டு விழி. விஷம் அப்பதான பரவாம இருக்கும்” என்க,

விழி,” டயிட்டா  கட்டுனா காலோட அந்த பார்ட்ட அப்படியே கட் பண்ணி எடுக்கனும் அங்க விஷம் முழுக்க பரவிட்டா. இங்க நமக்கு இப்ப ஹெல்ப்கும் வசதி இல்லை. மருந்தை எங்கனு தேடுவ?”

எழிலன்,” இப்ப இப்படியே விட்டாலும் பிரச்சனை தானே. அதுக்கு அவன் உயிரோட இருக்கறதே போதுமே. பரவால்ல கட்டிவிடுவோம் டயிட்டாவே”.

மொழி,” நான் இந்த துணிய காட்டிருக்கவே மாட்டேன். இப்ப நான் கட்டுனதுக்கும் ரீசன் அதுதான்”, என்றவள் நிறையிடம் திரும்பினாள்.

“நிறை”, என்றாள்.

அவனும் அவள் கண்களை பார்த்தான். அவனுக்கு பாம்பு தீண்டியதில் பயமில்லை, உயிரின் மீதும் பயம் இல்லை. அவனை சுற்றி இருந்தவர்களின் பதற்றம் கூட அவனுக்கு இல்லை அவர்களின் பதட்டமும் இவனை பாதிக்கவில்லை.

அந்த அழைப்பு அவனுக்கு பிடித்திருக்கும் போலும் தானாய் ஒரு இலகு தன்மை வந்து அவன் முகத்தில் அமர்ந்துகொண்டது. என்னவென்பதை போல் பார்த்தான் அவளை.

விழி, ” நான் சொல்றது போல இருக்கனும். புரிஞ்சுதா “.

அவளுக்கோ தனக்கு மட்டுமே இப்படி நடக்கிறதே என ஆதங்கம். இப்பொது அவனை காப்பாற்ற இயலுமா அதற்கான மருந்துகள் கைவசம் இல்லையே. எப்படி அவனை குணப்படுத்துவாள். இவனையும் காப்பாற்ற முடியாவிட்டால் எப்படி ? . தன்னை தானே மன்னிக்க மாட்டாளே. மீண்டும் கண்ணீ்ரில் கரைய முனைந்தாலும், அடக்கிக்கொண்டாள் அவனுக்காக. தன் இயலாமை தெரிந்தால் அவனும் பயந்துவிடுவானே. இப்போது அவளுக்கு முக்கியம் அந்த விஷம் பரவாமலாவது தடுக்க அல்லது பரவ நேரம் கடத்த வேண்டும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. விழி நிறைமதியன எப்படி காப்பாற்ற போகிறாள்??

      அங்கங்க கொஞ்சம் எழுத்துப்பிழைகள் இருக்கு அதெல்லாம் சரி பண்ணிக்கோங்க