Loading

இவர்கள் உணவை உண்டு வயிற்றை நிறைத்து கொண்டு அமர்ந்து அங்கிருந்து செல்வதை பற்றி விவாதித்து கொண்டிருந்தனர் ஆனால் விடை ஒன்றும் கண்ணுக்கு புலப்படவில்லை. இவர்களுக்காய் இருந்த ஒரே வழி அந்த வைத்தியர் மட்டுமே. அவர் வந்தவுடன் இவர்களை பற்றி, இந்த இடத்தை பற்றி கேட்க இங்கிருந்து செல்லும் மார்கத்தையாவது தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்னும் முடிவுக்கு வந்தனர் அவர்கள்.

அந்நேரம் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்க வேகமாய் அங்கு ஓடி சென்றனர் அனைவரும், அங்கே கர்ப்பிணி பெண் ஒருத்திக்கு அப்போது தான் பனிக்குடம் உடையும் நேரம் போல. அவர்கள் நிரம்ப வேலை செய்பவர்கள், உடல் உழைப்பு  அதிகம் ஆதலால் எட்டு மணி நேரம் முன்பு வரும் வலி கூட பெரிதாய் தெரியாமல் போக. நீர் குடம் உடையும் வலியின் வீரியம் அதிகரித்தது. அதனை தாங்காமல் அந்தப்பெண் கதறினாள்.  அங்கிருந்தவர்கள் வைத்தியரை தேடி செல்ல போக , அவர்களை சிலர் தடுத்து பேச,அந்நேரம் அவர்களுக்குள் ஒரு சலசலப்பு .

ஒரு குழுவினர், “வெத மஹத்தயாவத் அம்மவத் எக்ககென என்ட ஓனே..எய் நவத்தன்னே” (வைத்தியரை அம்மாவை கூட்டிட்டு வரனும். ஏன் யா தடுக்குறிங்க )” ,

மற்றொரு குழுவினாரோ, “எயால கமே நே..அர மஹத்தயா அம்மா தென்னம அவுஷத கன்ட கியா..எஹே கிஹில்லா தமய் எக்ககென என்ட ஓனே.எயால உதேம கியானே…அர மஹத்தயாத் மெயாலவ பலலா தமய் கியே…” (அவங்க ஊர்ல இல்லை அந்த ஐயா அம்மா ரெண்டு பேரும் மூலிகை எடுக்க போயிருக்காங்க. அங்க போய் தான் கூட்டி வரணும். அவங்க விடியற் காலைலயே போயிட்டாங்களே. அந்த ஐயா கூட இவங்கள பார்த்துட்டு போயிட்டாரு), என்க,

அப்போதே அந்த கூட்டத்தில் ஒருவன் வைத்தியர்களை அழைத்து வர சென்றுவிட்டான். அங்கிருந்தவர்கள் அனைவரும் கலக்கமாய் நின்றிருந்தனர். அங்கிருந்த பெண்கள், பிரசவ வழியில் இருந்த அப்பெண்ணுக்கு உதவ அவள் வீட்டிற்குள் சென்றனர். மொழியும் உடன் இருந்தவர்களும் என்ன என்று பதட்டமாய் வினவ. மொழி புரியாவிட்டாலும் அவர்களால் இந்த கேள்வியை உணர முடிந்தது. அவர்களும் சைகையில் ஊருக்குள் வைத்தியர் இல்லை என்பதை விளக்க, ஒருவாறு இல்லை என்பது அவர்களுக்கு புரிந்தது. இதை புரிந்த உடனே விழியை பார்த்தனர் மொழி, எழிலன், மதியன்  மூவரும்  விழியை நோக்க அவளோ பயத்தில் கைகள் பிசைந்து கொண்டு நின்றிருந்தாள். அவள் செய்கையில்  அவளின் எண்ணங்களை உணர்ந்த நிறைமதியனுக்கோ ஆத்திரம். கோபத்தில் அவள் கைகளை பற்றி இழுத்துச் சென்றான்.

சற்று தூரம் இவர்கள் பேசுவது யாருக்கும் கேட்டுவிட தூரம் வரை இழுத்துச் சென்றவன் அவள் கைகளை விட்டான். அவள் கைகள் சிவந்திருந்தது இவன் பிடித்திருந்த இடத்தில். அவனின் அத்தனை கோபமும் அவள் கைகளில் தெரிந்து. அவளுக்கும் கைகள் எரிந்தது தான் ஆனால் அவள் மன குழப்பத்தில் இது பெரிதாய் தெரியவில்லை. மதியானோ அவளை நோக்கி கடுமையான பார்வையை வீசியவன்,

” நீயெல்லாம் ஒரு டாக்டர் ஆ எதுக்கு நீ டாக்டர்க்கு படிச்ச. பெருமைக்கா “, என்று கத்திகளை வீசியிருந்தான் வார்த்தைகளில் ,

அவளால் பதில் பேச முடியவில்லை. ஆனாலும் அவளை சூழ்ந்திருந்த பயம் அவளை விட்டு அகலவில்லை. தான் மருத்துவம் பார்த்தாள் அந்த பெண்ணுக்கு ஏதும் நேருமோ விமானத்தில் அந்த பிள்ளைக்கு நடந்ததே அது மீண்டும் நடக்க எப்படி அவள் அனுமதிப்பாள்.  

மதியன்,” கண்ணுக்கு முன்னாடி ஒரு உயிர் போராடிகிட்டு இருக்கப்ப உன்னோட பீலிங்ஸ் தான் முன்னாடி தெரியுதுல உனக்கு டாக்டர் ஆஹ் இருக்குறதுக்குக்கான தகுதியே இல்லை” 

அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளை சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தது.

பயம். தனக்கு பிடித்த அத்தனை பேரும் இப்படி பாதியில் அவளை விட்டு செல்ல, வார்த்தைகளால் விவரிக்க முடியா வலி நெஞ்சத்தில் நிறைந்திருந்தது.முதலில் தோழி , பின்பு விமானத்தில் அந்த சின்ன மொட்டு, அவள் நினைவுகள் எல்லாம் பின்னோக்கி செல்ல மனமெல்லாம் ரணமாக இருந்தது. தன்னாலோ, தன் சிகிச்சையாலோ மீண்டும் ஒரு உயிர் அந்த உடலை விட்டு இந்த உலகத்தை விட்டு பிரிய நேரிட்டால் நினைக்கவே நெஞ்சம் பதறியது. முகமெங்கும் வேதனையின் சாயல். ஆனால் இப்போது தன்னால் தானே அந்த தாயையும் பிறக்கவிருக்கும் குழந்தையையும் காக்கும் பொறுப்பு இவளுடையதல்லவோ. அவளது பயம் அவள் கண்களை மறைத்திருந்தது மூளையின் திறனை நிறுத்தியிருந்தது. ஆனால் அவள் உணர்வுகளை அல்ல. ஆனால் உணர்வுகளினால் மட்டும் ஒருவரை காப்பாற்றிவிட முடியுமா என்ன?,தன்  மடத்தனத்தை  உணர்ந்தாள். அந்த வைத்தியம் பார்க்கும் பெரியவர் சொற்களும் நினைவு வந்தது. தேற்றிக்கொண்டாள் தான்  அவ்விடம் செல்ல முடிவெடுத்துவிட்டாள்.

இவளிடம் பேசிக்கொண்டிருந்த மதியானோ, “அந்த பொண்ணுக்கு  ஏதாவது 
ஆச்சுன்னா அதுக்கு நீ மட்டும் தான் காரணம்” , என்றுவிட்டான். குரலில் அத்தனை கடுமை.

 

ஆழ்ந்து அவனை ஆழ்ந்து பார்த்தவள். அப்படி நடக்க விடமாட்டேன் என்றுவிட்டு குடிசைக்குள் புகுந்து கொண்டாள். அந்த பெண்ணிற்கு சுடுநீர் ஒத்தடம் கொடுத்து, அவள் கைகளை சிலர் பற்றிக்கொள்ள அவளுக்கு குழந்தையை உந்தி தள்ள முடியாத தருவாயில் இவர்கள் உதவினர். இரண்டரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு அந்த சிசுவின் குரல் குடிசையினுள் இருந்து ஓங்கி ஒலித்தது. அதன் பிறகு சற்று நேரத்தில் வைத்தியம் பார்க்கும் பெண் வைத்தியர் வந்துவிட மற்றய வைத்தியங்களை அவர் பார்த்துக்கொண்டார். 

அங்கிருந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியின் சாரல்.அவர்கள் முகத்தில் நன்றியுணர்வு. விழியை பார்த்து கைகூப்பினர் . அவளோ வேண்டாம் என்பது போல் சைகை செய்துகாட்டியவள் வேகமாய் நடந்தாள். கடல் இருக்கும் திசை நோக்கி. அவள் பின்னோடே ஓடினான் நிறைமதியன். அங்கிருந்து கடல் கொஞ்சம் பக்கம் தான் . இவர்கள் முதலில் மாட்டிக்கொண்டிருந்த இருந்த இடம் தான் இந்த ஊரை விட்டு வெகு தொலைவு. கடலை அடைந்துவிட்டால் அவள் பின்னோடே வந்த அவனும் அவளுக்கு பின்னேயே நின்றுகொண்டான் அவளுக்கு சற்று தனிமை கொடுக்க எண்ணி. அவள் நெஞ்சத்தில் நிம்மதி. தான் பயந்து அங்கேயே நின்றுவிட்டிருந்தால் எதனை பெரிய தவறை இழைத்திருப்போம். இப்பொது அவள் மனதில் சற்று நிம்மதி. அழ வேண்டும் கதறி அழ வேண்டும் என்று வேகமாய் ஓடி வந்தாள். இத்தனை வருடங்கள் கொண்ட அழுத்தங்களை கரைந்தே தீர்க்க வந்தாள், அவள் தோழன் கடலிடம். மனதிற்கு அமைதி வேண்டி விரைந்தவள் நின்றாள் அங்கு அந்த கடல் அவளுக்கு ஆறுதல் சொன்னது அந்த உப்புக்காற்றை வீசி அவளை அணைத்து ஆறுதல் சொன்னது. கவலைகள் மறந்தாள் அவள் காயங்களுக்கு மருந்திட்டது அவள் தோழன் கடலோன்.

 

அமைதி தேடிய மனம் ஓய்ந்ததோ,

ஆழியின் அலைகளின் மடியில்!!

விந்தையிலும் விந்தைதான்!

கதறி அழவேத் தேடிய தனிமை,

மாயகடலின் பாற்சென்றதும்

அகம் மகிழ்ந்ததேனோ?

கவலைகள் மறந்து,

அதன் அலைகளில் 

ஆழப் புதைந்ததேனோ?

குழந்தையாய் அரியின் (கடல்)

மடி சேர்ந்தது மனது,

சிறுபிள்ளையென அலையோடு

ஓடி விளையாடிய 

கால்கள்போதுமென நிறுத்தவில்லை,

அல்லல் கலைந்துவிட்டாய் கடலோனே,

துயர்களை மறைத்து விட்டாய்,

என்றென்றும் உறவாய் 

விழியும் கடலும்!!

 

அவளுக்கு அந்த தனிமை தேவையாய் இருந்தது. அந்த தனிமையும் அவளுக்கு மருந்தாய் தான் இருந்தது . ஆம் துயர்களை கலைந்த கடலிடம் விளையாடினாள். பிடித்திருந்தது. மனம் லேசாய் உணர்ந்தது. அவளை தூரத்தில் பார்த்திருந்தவன் இப்பொது அவளை நோக்கிச் சென்றான். அவள் அவனிடம் அன்றைய இரவிலிருந்தே பேசுவதை தவிர்த்திருந்தாள். அவனுக்கு அப்போதிருந்தே தான் அப்படி செய்திருக்க கூடாது என்று பல முறை திட்டிக்கொண்டான். அவள் பாராமுகம் வெகுவாய் சோதித்தது அவனை. அவளிடம் அவன் செய்ததற்கு மன்னிப்பு கேட்டு. அவளிடம் தன விருப்பத்தை கூறிவிட வேண்டும் என்ற முடிவோடு சென்றான்.

அவளோ அவன் அரவம் உணர்ந்து  திரும்பி அவனை பார்த்தவள். 

விழி ,” தேங்க் யூ நிறை. நான் ரொம்ப பெரிய பாவம் செய்ய இருந்தேன்”

மதியன்,” பரவால்ல” என்றவன் தொடர்ந்தான்.

மதியன்,” நான் ஒன்னு சொல்றேன் தப்ப எடுத்துக்காத”

விழி , “சொல்லுங்க “

மதியன், ” முதல கேக்குறேன். உன் கிலோஸ் பிரென்ட் இறந்ததுக்கு நீ எப்படி காரணம் னு நீ முடிவு பண்ணின?”

விழி , ” அந்த நாய்ய நான் தான அவ பயந்தப்பவும் விடாம கைல கொடுத்து விளையாட வெச்சேன்”

மதியன், ” அதுக்கு ?”

விழி , ” அவளுக்கு வீசிங் வர காரணமே அந்த ஹேர் தானே”

மதியன், ” அவங்களுக்கு முதவே அந்த வீசிங் பிரச்சனை இல்லையே. முன்னவே அவங்களுக்கு அப்டி இருந்து  அது தெரிஞ்சும் நீ, இப்டி பண்ணியிருந்தா தான் தப்பு”.

அவள் ‘பே’ வென்று அவனை பார்த்து கொண்டு இருக்க. 

மதியன், ” எல்லாத்துக்கும் உன்னை நீயே ப்ளேம் பண்ணிக்கிறதால நீ மட்டும் இல்ல உன்ன சுத்திட்டு இருக்கவங்களும் உன்னால பாதிக்கப்படுறாங்க. பிலைட்லயும் அந்த  குழந்தைய காப்பாத்த நீ உன்னால ஆன எல்லாமே பண்ணின தானே அனாலும் காப்பாத்த முடியாம போனதுக்கு நீ எப்படி காரணமாவ”,

விழி,”ம்ம்”,

மதியன்,”நீ இன்னும் இப்படியே தான் இருக்க போறன்னா. டோன்ட் பீ எ டாக்டர். இட்ஸ் ரியலி டூ டேஞ்சரெஸ். உன்னோட பேஷண்ட்ஸ் கு”, என்றதும் தான் சிந்தித்தாள். தன்னின் இந்த மனநிலை சிகிச்சைக்காய் தன்னை காண வரும்  அத்தனை பேருக்குமே ஆபத்து தானே. 

விழி,” என்னுடைய தப்பு தான் நிறை. நான் தான் எல்லாத்துக்குமே என் மேல பழியை போட்டுக்கிட்டு எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டு என்னையும் கஷ்ட படுத்திக்கிட்டேன்”, என்றவள் கண்களில் தெளிவு. ஒன்னு நான் என்னை சேரி பண்ணிக்கிறேன் இல்லைனா இந்த டாக்டர் வேலையை விட்டுடறேன்.

மதியன், ” நீ இந்த வேலையை விடணும்ன்னு நான் சொல்லலை. உன்னோட மைண்ட் செட் ஆஹ் மாத்துன்னு சொல்றேன்.ஜஸ்ட் ட்ரை அண்ட் கம் அவுட் ஒப் இட். யு கேன் டூ இட்”.

பேசிமுடித்தவர்களுக்கு அத்தனை மன நிறைவு. விழிக்கு எதிலிருந்தோ விடுபட்ட உணர்வு. மனம் நிறைந்து புன்னகைத்தனர் இருவரும். விழி அந்த மனநிறைவை இதுவரையில் உணர்ந்ததில்லை. இன்று வெகுவாய் ரசித்தாள் அந்த உணர்வை. 

“உங்களுக்கு கால் எப்படி இருக்கு. ஓகேயா?. இவ்ளோ தூரம் நடந்து வந்திருகீங்களே”

மெலிதாய் சிரித்தவன், ”  இல்லை வலிக்கலை. ஐ அம் ஒகே “, என்றவனுக்கு அப்போதும் அவள் முகத்தில் கண்ட தெளிவில் ஆனதை கூத்தாடியது மனம். அது தானே காதல் அவள் நிறைவான சிரிப்பில் மகிழ்ச்சியில் தான் தொலைவது.  அது தான் அங்கும் நடந்து கொண்டிருந்தது. அவள் முகத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு. ரசித்தான் தன் மனமெங்கும் பூக்கள் பூத்ததை போல் உணர்ந்தான். அவளை இழுத்து சென்று கடலில் இருவரும் விளையாட ஆசை. அவளின் சிரித்த முகம் நித்தமும் காண ஆசை. அந்த சிரிப்பிற்கு தான் காரணமாக ஆசை. அவன் அவள் மீது கொண்டிருந்த மையல் காதலெனும் அன்பின் அடுத்த கட்டத்துக்கு சென்றது.

இருட்டி கொண்டிருந்தது வானம். அந்தி சாய்ந்து நேரம் கொஞ்சம் கடந்து இருந்து. நிலவும் கடலும் கதைகளை பேசிக்கொண்டிருந்த நேரம் ,

விழி, ” சரி வாங்க கிளம்புவோம். நேரமாச்சு”, என்றதும் அவனும்  சரி என்றவனுக்கு தன காதலை உரைத்து விட உந்துதல். உள்ளுக்குள் வைத்து நேரத்தை கடத்துவதை விட அவளிடம் பகிர்ந்துவிட முடிவு செய்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. சூப்பர் da ❤️❤️ மதி மட்டும் இல்லன்னா கண்டிப்பா இதுல இருந்து வெளிய வந்திருக்க மாட்டா போல 🥹🥹