Loading

மேகோனின் மேன்மை நேசம் 7

முதல் ஒலியிலேயே நைருதி அழைப்பை ஏற்றிருந்தாள்.

“தூங்கலையா மாமா?” அவள் குரல் உறக்க நிலையில் ஒலிப்பதை போலில்லாமல் தெளிவாக இருந்தது.

“நீ இன்னும் தூங்காம என்ன பன்ற?”

“கொஞ்சம் வொர்க் இருந்துச்சு மாமா. வெட்டிங் முடிஞ்சு உங்களோட வந்திடுவேன். லாங் லீவ் எடுத்திருக்கேன். ஹேன்ட் ஓவர் நேத்து முடிச்சு சைன் பண்ணிட்டு வந்துட்டேன். நான் பார்த்த வொர்க்ல டவுட் இருக்கு, என்னால பண்ண முடியல. அதை நீங்களே முடிச்சி கொடுங்கன்னு என் அசிஸ்ட் ஈவ்வினிங் கால் பண்ணியிருந்தாங்க. நாளைக்கு, அடுத்தடுத்த நாளெல்லாம் முடியாதே! அதான் இப்போவே முடிச்சிடலாம் பண்ணிட்டு இருக்கேன்” என்றாள். நீண்ட விளக்கமாக.

“ஒரு கேள்வி தான் கேட்டேன்” என்ற தேவித், “பர்ஸ்ட் தண்ணியை குடி” என்றான்.

“ம்ம்…” என்றவள் சில நொடிகளில், “குடிச்சிட்டேன்” என்க, தேவித்திடம் மென்புன்னகை.

“ஃபினிஷ் பண்ண டைம் ஆகுமா?”

“லாஸ்ட் லெவல் மாமா. மேக்சிமம் டென் மினிட்ஸ். திங்க்ஸ் டிடெயில்ஸ் அப்டேட் பண்ணனும்” என்றாள்.

“ஓகே” என்றவன், “தோட்டத்துக்கு வா” என்றான்.

“இப்போவா?” மெல்லிய அதிர்வு அவளிடம்.

“எஸ்… இப்போதான். இப்போவே” என்றான். அழுத்தமாக.

“அம்மா…” என்று நைருதி இழுக்க…

“அப்போ நான் வரேன்” என்றான். சடுதியில்.

“அச்சோ வேணாம். நான்… நானே வரேன்” என்றவள், சொல்லிய நேரத்திற்கு முன்னதாகவே வேலையை முடித்து, அனைத்தும் எடுத்து வைத்துவிட்டு, தன்னுடைய அறையை விட்டு வெளியில்வர, வீடே நிசப்தம் இருளில் மூழ்கியிருந்தது.

இரண்டு வீடும் அருகருகே. இரு வீட்டையும் பின்னால் இணைப்பதுப்போல், இரு வீட்டுக்கும் பொதுவான பரந்தத் தோட்டம்.

மெல்ல அடி வைத்து பின் வாயில் கதவை திறக்க நைருதி கதவில் கை வைத்திட…

“தேவா வர சொன்னானா?” என்று குரல் ஒலித்தது.

மாட்டிக்கொண்டோம் என நினைத்து நைருது திரும்பிட, தண்ணீர் போத்தலோடு கவின் நின்றிருந்தான்.

“அது… அண்ணா” என்று அவள் தடுமாற,

“சீக்கிரம் வந்துடு” என்று சொல்லியவனாக கவின் சென்றுவிட, “தப்பிச்சோம்” என மூச்சினை இழுத்து வெளியேற்றியவளாக வேகமாக தோட்டத்திற்குச் சென்றாள்.

நிலவு ஒளி மட்டும் மெல்லிய வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருந்தது.

தோட்டத்திற்கு நடுவில் வந்து நின்ற நைருதி, “மாமா” என்று காற்றாய் அழைக்க,

“இங்க” என்று குரல் கொடுத்தான் தேவித்.

கிணற்று தண்ணீர் தொட்டியின் மீது கால்களைத் தொங்கப்போட்டு அமர்ந்திருந்தான்.

“எதுக்கு வர சொன்னீங்க?” என்று கேட்டபடி தான் தேவித்தின் முன் சென்று நின்றாள்.

நைருதி தேவித்தின் காலுக்கு அருகில் நின்றிருக்க, தன்னுடைய கால்களால் அவளை அரணாய் வளைத்து பிடித்து இன்னும் பக்கம் இழுத்தான்.

“அச்சோ மாமா… என்ன பன்றீங்க?” எனக் கேட்டவளுக்கு வார்த்தை தடுமாறியது.

“கூப்பிட்டா வரத் தெரியாதா? வந்ததும் கேள்வி வேற” என்று அவளின் தலையில் வலிக்காது கொட்டியவனின் பிடி விலகவில்லை.

அவனுக்குள் நெளிந்தபடி நின்றிருந்தாள்.

“கால் விடுங்க மாமா” என்றவள், அவனின் கால்களை விலக்க முயல, அவளின் கைகளை பற்றிக் கொண்டான்.

“என்ன பன்றாங்க உன்னை. லவ் பண்ணலாம் நினைச்சு கூப்பிட்டா ரொம்ப பன்ற நீ” என்ற தேவித், நைருதியின் உள்ளங்கைகளை தன் முகத்திற்கு அருகில் வைத்து வாசம் பிடித்தான்.

“இட்ஸ் டிவைன்…” என்று அவள் வைத்திருந்த மருதாணியின் வாசத்தை ஆழ்ந்து உள்ளிழுத்தான்.

அவனின் மென் தீண்டலும், அழுத்தமான பிடியும் அவளுள் இதுவரை கண்டிராத மாற்றம் செய்திட, இன்ப அவஸ்தைக்குள் ஆட்பட்டாள்.

“மருதாணி நல்லா சிவந்தா, ஹஸ் மேல அதிக லவ் அர்த்தமாமே… அப்படியா நதி?” எனக் கேட்டான். இன்னுமும் அவளின் கைகளை விடாதவனாக.

அவனது பேச்சில், அவளது கைகளுக்கு இணையாக முகமும் சிவப்பாய் மாறியது.

“அம்மா சொல்வாங்க. ஆமாம் தான் போல” என்றாள். மென் மொழியாய்.

“உனக்கு நல்லா சிவந்திருக்கே!” கள்ளப் புன்னகை அவனிடம். சுண்டியிழுக்கும் கண்சிமிட்டல் வேறு.

படபடத்துப்போனாள்.

“போகணும் மாமா!”

“போலாம்… என்ன அவசரம்?” என்றவன், அவளின் கையை விடுவிக்க, அவன் தன்னை விலக விடுகிறானென அவள் நினைத்து முடிக்கும் முன்பு, அவளே உணராத நொடியில் சட்டென்று இடை தூக்கி தனக்கு அருகில் தொட்டியின் மீது அமர்த்தியிருந்தான்.

“என்னடி வெயிட்டே இல்லை? என்னைத் தாங்குவியா நீ?” என்ற தேவித், நைருதியின் அதிர்ந்த முகத்தில் காற்றினை ஊதினான்.

அவளின் இமைகள் கன்னம் தொட்டு புருவம் தீண்டியது.

“என்னவாம்… ஷாக் ஆகிட்ட?” என்ற தேவித், அவளின் தோளைச் சுற்றி கைபோட்டு, அவன் பக்கம் அவளின் தோளில் தலை சாய்த்தான்.

“கொஞ்சம் முன்ன ஒரு கனவு. உன்னை பார்த்துட்டா ரிலாக்ஸ் ஆகிடுவேன் தோணுச்சு” என்ற தேவித், “ஆனால் இப்போ… ஏன் வர சொன்னன்னு இருக்கு” என்றான்.

அவளின் கையை தன் கை விரல்களோடு கோர்த்துக் கொண்டான்.

“எதாவது பேசு நதி” என்றான்.

“எனக்கு இது நீங்களான்னு இருக்கு!” ஆச்சரியமாகக் கூறினாள்.

“ஏன்?”

“எப்பவும் உங்களை புக்கும் கையுமா, எதையோ யோசிச்சிட்டே இருந்து தான் பார்த்து பழக்கம். மாமாகிட்ட மட்டும் அப்பப்போ கொஞ்சி பார்த்திருக்கேன். அண்ணாகிட்ட சிரிப்பீங்க. ஆனால் இப்படிலாம் பேசுவீங்க தெரியாது” என்றாள்.

“லவ் வந்தா எல்லாம் வரும் போல” என்ற தேவித்துக்கு அவளிடம் இதுநாள் வரை பேசிடாத அனைத்துப் பேச்சுக்களையும் இப்போது பேசிட வேண்டும் போலிருந்தது.

சொல்லப்போனால் காதல் கொண்ட அவனது மனதின் ஆசைகளே அவள் பக்கமிருக்கும் இந்த கணம் தான் அதிகம் உணர்கிறான்.

“நான் போகட்டுமா? வரும்போதே அண்ணா பார்த்துட்டாங்க.”

அவனுடன் நெருக்கமாக, அவனது கை வளைவில் அமர்ந்திருப்பதே அவளுக்கு பேரவஸ்தையாக இருந்தது.

“என்ன அவசரம்?” என்ற தேவித்க்கும், என்ன பேசிட வேண்டுமென்று தெரியவில்லை. மனதில் தோன்றியதை கேட்டு வைத்தான்.

“உன் ஜாப்பில்(job) டிரான்ஸ்ஃபெர் கிடையாதா?” எனக் கேட்டான்.

“நம்ம ஸ்டேட்க்குள்ள ஓகே. ஆர்க்கியாலிஜிஸ்ட் டிப்பார்ட்மெண்ட் சோனல்(zonal) ஆபிஸ் எட்டு ஊர்ல தான் இருக்கு. டிரான்ஸ்ஃபெர் கேட்டாலும் இதுக்குள்ளதான் கிடைக்கும். டெல்லி ஆர்க்கியாலிஜிஸ்ட் டிப்பார்ட்டில் ஜாயின் பண்ணனும் அப்படின்னா, அங்க இது சம்மந்தப்பட்ட ஸ்டேட் லெவல் எக்ஸாம் கிளியர் பண்ணனும்” என்றாள்.

தன் வேலைப்பற்றிய பேச்சென்றதும் அவனருகில் உண்டாகும் தடுமாற்றம் விலக்கி இயல்பாகப் பேசினாள். அவனுக்கும் அவளின் இந்த இயல்புநிலை தான் வேண்டுமாக இருந்தது.

நைருதி தொல்லியல் ஆராய்ச்சித் துறையில், மண்டல அலுவலகத்தில் பாதுகாப்பு பிரிவில் பணிபுரிகிறாள்.

அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைக்கப்பெறும் நினைவுச் சின்னங்கள், வெண்கலப் படங்கள், செப்புத் தகடுகள், நாணயங்கள், சுடுமண், ஸ்டக்கோ மற்றும் ஓவியங்கள் போன்ற பழமையான பொருட்கள் இரசாயனம் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. அந்த பிரிவில் உதவி பாதுகாப்பு செயற் பொறியாளராக இருக்கின்றாள். மேற்கண்ட யாவும் இவளின் நேரடி கண்காணிப்பில் பாதுகாக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தொல்லியல் இரசாயன ஆய்வுக்கூடம் சென்னையில் மட்டுமே உள்ளது. அங்கு பாதுகாக்கப்படும் ஒவ்வொரு சிறு துரும்பிற்கும் நைருதியும் அவளது குழுவும் தான் பொறுப்பு.

ஒவ்வொன்றின் தன்மை, அதனின் வரலாறு, பயன்பாடு, செயல்பாடு என அனைத்தும் அவள் அறிந்து வைத்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட மியூசியம் போன்று வைத்து பாதுகாக்கப்படும் அனைத்துப் பொருட்களும் மற்றவர்களின் பார்வைக்கு செல்ல வேண்டுமென்றால் அவளின் அனுமதியே முதன்மை. அவளுக்கும் மேலுள்ள உயர்நிலை அதிகாரிகளும் அவளின் கையெழுத்தின்றி பொருட்களை பார்த்துவிடவோ, தொட்டுவிடவோ முடியாது.

“ஹம்… ஃபீல்ட் வொர்க் ஈசியா?”

அவன் போன் செய்த நேரம் நைருதி சொல்லியதை வைத்து வினவினான்.

“ஈஸின்னு இல்லை. ஃபீல்ட் வொர்க் போனா… த்ரீ மன்த் ஆராய்ச்சி நடக்கும் ஊரிலிருந்தா, அடுத்த த்ரீ மன்த் உங்களோட இருக்கலாம். இப்போ இருக்க வேலை கண்ட்னியூ பண்ணா, நான் சென்னையிலே இருக்க வேண்டியது தான். மொத்தமா நீங்க ஒரு இடம், நான் ஒரு இடம்ன்னு இருக்கிறதுக்கு இது பெட்டர் இல்லையா?” எனக் கூறினாள்.

“என்னது வருஷத்துல ஆறு மாசம் என்னோட இருக்கமாட்டியா நீ?” உண்மையிலேயே அவனுக்கு அவள் உடனிருக்க முடியாது என்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

“நீங்களும் எப்பவும் உங்க லேபிலே தானே இருப்பீங்க… அதுக்கு இது ஓகே தான்” என்றாள். உதடு சுளித்தவளாக.

சுளித்த உதட்டை இரு விரலால் பிடித்து இழுத்த தேவித், “மேடம் விட்டுட்டு இருப்பீங்களோ?” எனக் கேட்டான்.

“இருக்கணும் அப்படின்னா இருந்துதானே ஆகணும்” என்ற நைருதி, “நீங்க உங்க வேலைக்காக இருக்கமாட்டிங்களா?” என்று புருவம் உயர்த்தினாள்.

“நீ சொன்ன பதிலே தான்” என்ற தேவித், “ஆனாலும் ரொம்ப கஷ்டம்டி” என்றான். முகம் சுருக்கி.

“உங்களால் வேலையை மாத்திக்க முடியாது தெரியும். நான் ட்ரை பண்றேன் மாமா” என்றாள்.

அவளின் பதில் அவனுக்கு அதிக சந்தோஷத்தை கொடுத்தது. அவனுக்காக யோசிக்கின்றாள். காதலில் இணைக்காக யோசித்தலில் தானே அதனின் உயிர்ப்பு அடங்கியிருக்கிறது.

கோர்த்த கைகளில் விரல்களை அழுந்த நெரித்த தேவித்,

“எனக்காகன்னு வேண்டாம். உனக்கு எது சரியோ அதை செய். நம்மளோட மனசுக்கு பிடிச்ச ஜாப் கொடுக்குற சேட்டிஸ்ஃபை வேறெதுவும் கொடுக்காது. நம்ம லைஃப் இப்படித்தான் இருக்கும்ன்னு நமக்குத் தெரியுது தானே! அதுக்கேத்த மாதிரி வாழ பழகிப்போம்” என்றான்.

“இருந்தாலும் உங்களோடவே இருக்கிறது தனி சந்தோஷம் தானே” என்ற நைருதி, “விட்டு இருக்க முடியாதுங்கிற அளவு ல்வ்வா மாமா?” என அவனின் கண்கள் பார்த்து வினவினாள்.

“ஆமா… சொல்லத் தெரியல. எப்படின்னு. கவின், மதி வெட்டிங் அன்னைக்கு தான் உன்னை கவனிச்சு பார்த்தேன். கவனிக்கணும் தோணுச்சு. அதுவரை நீ அவ்ளோ அழகுன்னு சத்தியமா தெரியாதுடி. உன்னை ஸ்கூல் ரெட்டை ஜடையில் குட்டியா பார்த்து தான் பழக்கம். அன்னைக்கு தான் புடவையில பெரிய பொண்ணா தெரிஞ்ச. உன்னைத் தவிர எதையும் பார்க்கமாட்டேன்னு என் கண்ணு அலைந்ததுலே உன் மேல லவ் வந்திருச்சுன்னு தெரிஞ்சுது. அன்னைக்கே நான் திரும்ப டெல்லி போகணுங்கிற சிட்டுவேஷன். சொல்ல முடியல. வேலையிலும் ரொம்ப பிஸி. லவ்வுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை” என்றான்.

தேவித் இப்படித்தான். எதுவென்றாலும் உண்மை என்னவோ அப்படியே கூறிவிடுவான். காதலிக்க நேரமில்லை என்று அவன் சொல்லியது அவளுக்கு வருத்தத்தையெல்லாம் கொடுக்கவில்லை. அவனைப்பற்றி தெரியுமே! வருந்த ஒன்றுமில்லை. சாதாரணமாக கேட்டுக்கொண்டாள்.

தேவித் தன்னை ஒரு வருடத்திற்கு முன்பே காதலிக்கத் தொடங்கிவிட்டான் என்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

“சப்போஸ் அம்மா எனக்கு வேற பையன் பார்த்திருந்தா?” எனக் கேட்டாள்.

“அதுக்கு வாய்ப்பே இல்லை” என்ற தேவித், “டெல்லி போறதுக்கு முன்ன அப்பாகிட்ட சொல்லிடலாம் நினைச்சேன். பட் அப்பா என் ஆசை தெரிஞ்சா உடனே முடிக்கணும் நினைப்பாங்க. அப்போ நான் ஒரு முக்கியமான ரிசர்ச்சில் இருந்தேன். மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணா ஃப்ரீயா டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது. சோ, அம்மா அண்ட் அத்தைகிட்ட நதிக்கு மேரேஜ் அப்படின்னா மாப்பிள்ளை நான்தான் சொல்லிட்டேன்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

“சயின்டிஸ்ட் இப்போ மட்டும் ஃப்ரீயா நேரம் ஒதுக்கினிங்களாக்கும்?” என்று இடைவெட்டினாள் நைருதி.

தேவித் அவளை முறைத்திட…

“கல்யாணத்தை மறந்துட்டு ஆராய்ச்சிக் கூடமே கதின்னு இருந்தீங்க தானே?” என்றாள்.

“எதோ வொர்க்…”

அவனை முடிக்க விடவில்லை அவள்.

“புரியுது. பட் நான் காலத்துக்கும் சொல்லிக் காட்டுவேன்” என்றாள்.

“நான் பாவம்டி!”

“யாரு நீங்களா?”

“அஃப்கோர்ஸ் நதி!”

“போயா” என்றவள் அவன் உணரும் முன்பு குதித்து வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.

தேவித்தும் இளமுறுவலோடு வீட்டிற்குள் சென்று, மெத்தையில் விழுந்தான்.

எல்லைக்குள் அடங்கா நேசம் எதிர்பார்ப்புகளின்றி மண நேரத்தை எண்ணிக் காத்திருந்தது.

சுழலும் காலமும் இருவரின் வாழ்க்கைப் பயணத்தை திசைமாற்றிட நேரம் கணித்திருந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
35
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்