அத்தியாயம் 16
“மகிழ்… மகிழ் மேகோன்.”
அரசனின் பெயரை நைருதி உச்சரித்திட…
தேவித்தின் தேகம் தன்னைப்போல் விறைத்து நிமிர்ந்து நின்றது. உடலில் கம்பீரம். புஜங்கள் முறுக்கேறிட… கண்களின் தீட்சண்யம் கூர்மை பெற்றன.
தன் கதை தானறிய தானாக மாற்றம் நிகழ்ந்ததுவோ!
அரசனின் ராஜ தோரணை அவனிடம்.
“அவர் காலத்தை கணிக்கும் கருவி கூட வைத்திருந்தாராம். எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்திட முயற்சி செய்தாராம்… அப்படி செய்த போதுதான்…” என்று நிறுத்திய நைருதி, “அதோட குறிப்புகள் அடங்கிய ஏடுகள் எங்க மியூசியத்தில் இருக்கே! அதுவும் என்னோட கட்டுப்பாட்டில்” என்றாள்.
நைருதி சொல்ல சொல்ல பிரகாசமாக ஒளிர்ந்த தேவித்தின் முகம் இறுதியில் பட்டென்று வாடியது.
“பட் உங்க மியூசியத்தில் விசிட்டர்ஸ்க்கு சான்ஸ் இல்லையே” என்றான்.
“எஸ்” என்ற நைருதி, “எனக்கு சான்ஸ் இருக்கே” என்றாள். மிதப்பாக.
“யா… அங்க எல்லாம் உன்னோட கன்ட்ரோல் தான் இல்லையா?” என்ற தேவித், “ஆண்டிக் திங்க்ஸ் டீடெயில்ஸ் எல்லாம் ஃபிங்கர் டிப்ல வச்சிருக்கணுமே! உனக்கு இவ்ளோ தான் தெரியுமா?” எனக் கேட்டான்.
தேவித்தை கூர்மையாக பார்வையால் அளந்திட்ட நைருதி, எழுந்து வந்து அவனது உடலோடு தன் மொத்த உடலும் பதியுமாறு நெருங்கி நின்று, அவனின் மார்புச் சட்டை பற்றி…
“இப்போ சயின்டிஸ்ட்டுக்கு அந்த ராஜாவோட ஹிஸ்டரி தெரியணுமா? இல்லை…” என இழுத்து நிறுத்தி, “அவர் வைத்திருந்த டைம் டிராவல் மெஷின் பத்தி தெரிஞ்சிக்கணுமா?” என்று கேட்டாள்.
“என் பொண்டாட்டி ரொம்பத்தான் அறிவாளி” என்று அவளின் கன்னம் தாங்கி நெற்றி முட்டிய தேவித், “முழுசா அவரைப்பற்றிய எல்லாமே தெரிஞ்சால் ஓகே தான்” என்றான்.
“என்கிட்ட நோட்ஸ் இருக்கு” என்றாள்.
“எப்படி? இதெல்லாம் கான்பிடன்ஷியல் ஆச்சே?” என்றான் தேவித்.
“அந்த டீம் ஹெட் நான் தான். சயின்டிஸ்டுக்கு மறந்துப்போச்சா?” என்ற நைருதி…
“என்கிட்ட இருக்குன்னு தான் சொன்னேன். உங்களுக்கு நோட்ஸ் குடுக்கிறேன் சொல்லவே இல்லையே!” என்றாள்.
“போடி!” என்று அவளின் கன்னம் தட்டி விலகி நின்றான் தேவித்.
“இது என்னோட ஜாப் எத்திக்ஸ் மாமா!”
“ஐ க்நோவ்” என்ற தேவித், “இதிலிருக்கும் புக்ஸ் எல்லாத்துக்கும் ஆதி(முதன்மை) அவர் தான். ஒவ்வொரு நூற்றாண்டிலும் யாரோ ஒருத்தர் இதை முயற்சித்துப் பார்த்து தோல்வி அடைஞ்சிட்டுதான் இருந்திருக்காங்க. அவங்களோட ஃபீட்ஸ் எல்லாம் எப்படியோ கலெக்ட் பண்ணிட்டேன். அவங்க எல்லாரோட நோட்ஸ்லையும், இதுவரை நாங்க வந்ததுக்கு காரணமே அவர் தான் அப்படின்னு அவரோட பெயரை குறிப்பிடாம தங்களோட ஆராய்ச்சி குறிப்புகளை அவங்க எல்லாரும் முடிக்கவே இல்லை. ஆனாலும் யாருக்கும் அவர் வாழ்ந்த காலம் மட்டும் தான் தெரிஞ்சிருக்கு. அதை வைத்து சின்ன சின்ன நியூஸ் கலெக்ட் பண்ணியிருக்காங்க. பட் யாருக்கும் முழுசா எதுவும் தெரியல. இன்க்லூடிங் மீ” என்றான்.
“இவங்க எல்லாரும் செய்த பிக் மிஸ்டேக் என்ன தெரியுமா நதி?” என்று திரும்பி அவளின் முகம் பார்த்த தேவித், “அவர் ஒரு தமிழ் மன்னன் என்பதை வெளிப்படையா சொல்லிக்காதது தான். தமிழன் அப்படின்னு சொன்னாலே அவனோட கூற்று சபை ஏறாது அப்படிங்கிறது… இப்போ இல்லை, பல நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்கு. எந்தளவுக்கு தமிழர்களின் மரபும், கொடையும் சிறப்பு மிக்கதா இருந்ததோ அந்த சிறப்பு தான் தமிழர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது. நாம சிறப்புன்னு பார்த்த எல்லா விஷயமும் யாரோ ஒரு பிரிவினருக்கு, நாட்டவருக்கு அடக்கி ஆளும் விதமா தெரிய, நம்மை ஒடுக்க நினைச்சு அவர்கள் செய்த” என்று நிறுத்தி, “என்ன சொல்றது… மறைசிட்டாங்க சொல்லலாம். மறைக்கப்பட்டுவிட்டோம் சொல்லலாம்” என்றான்.
“மகிழ் மேகோன்… இவருக்கு அடுத்து சில நூற்றாண்டுக்கு முன்பு இவருடைய காரணிகளை அடிப்படையாக வைத்து, இதே ஆராய்ச்சியை அவர்களின் ஆன்மீக விதிப்படி, அதாவது நாங்க அறிவியலில் பிளானட்ஸ் (கோள்கள்) வச்சு சொல்றதை, அப்போவே தமிழர்கள் நவகிரகங்கள் வைத்து, அவங்களை கடவுளா வைத்து செய்த எந்தவொரு இடத்திலும் மகிழ் மேகோன் பெயரை குறிப்பிடவே இல்லை. இது வேணும்னே மறைக்கப்பட்டது தான். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தமிழன் இதை செய்து பார்த்திருக்கிறான் எனும் வரலாற்று குறிப்பை அப்போவே அங்கவே ஒருத்தன் அழிக்க முடிவு பண்ணிட்டான். அவன் அவனோட பெயர் முதலிடத்தில் இருக்கணும் நினைத்து செய்த விஷயம்… இப்போ வரை மகிழ் மேகோனை மிஞ்சி இதில் யாராலும் ஜெயித்துக் காட்ட முடியல. அப்போவே, மகிழ் மேகோனுக்கு அடுத்ததாக பனிரெண்டாம் நூற்றாண்டில் தான் தாவினோ அப்படிங்கிற சீன ராஜ்ஜியத்தை சேர்ந்தவர் செய்திருக்கிறார். அதுவும் மகிழ் மேகோன் குறிப்புகள் வைத்து. அவர் தோல்வி அடைந்தார் ஓகே. ஆனால் அவரோட குறிப்பில் தன்னுடைய ஆராய்ச்சிக்கு மூலம் அப்படின்னு மகிழ்மேகோன் பெயரை குறிப்பிட்டிருந்தா… அவருக்கு அடுத்தடுத்த செய்த யாரோ ஒருவர் சரியா செய்திருக்க வாய்ப்பிருக்கு. வெற்றியும் கிடைச்சிருக்கலாம்” என்றான்.
செவிவழி கேட்பதற்கே நைருதிக்கு மலைப்பாக இருந்தது.
ஒரு வரலாற்று நிகழ்வு யுகங்கள் கடந்து நிலைக்க வேண்டுமென்றால், அடுத்தடுத்த சந்ததியினரின் பங்கு எத்தனை முக்கியமென்று தேவித் சொல்லியதை வைத்து நைருதிக்கு புரிந்தது.
“அவருடைய வம்சா வழியில் யாரும் முயற்சித்து, மகிழ் மேகோன் சிறப்புகளை வருங்கால சந்ததியினருக்கு பதிவுகளாக விட்டுச் சென்றிருக்கலாமே” என்றாள்.
“அப்படி விட்டுச் சென்றது தான் இப்போ உங்க துறை கையிலிருக்கே” என்ற தேவித், “இதுவும் இன்னும் எத்தனை நாட்களுக்கு நம் தமிழர்கள் கையில் நம் பொக்கிஷமாக மட்டுமே இருக்கும் நினைக்கிற நீ?” என்றான்.
“புரியல!”
“அப்போ கீழடி… அதை மறக்க குமரி கண்டம்… அடுத்து அதை மறக்க துவாரகா… இன்னும் கொஞ்ச நாளில் இதையும் மறக்க வெறொன்னு… துவராக தமிழர்கள் கீழ் வருமான்னு நான் சொல்ல வரல. அடுத்தவர் உழைப்பு திருடும் காலம் மாறி… ஒரு தலைமுறையோடா வரலாற்றை திருட உரிமை போராட்டம் பெயர் வச்சு பல நாட்டு கூட்டம் கிளம்பியாச்சு சொல்ல வரேன். கீழடி ஆராய்ச்சி ஏன் நிறுத்தி வச்சாங்கன்னு உனக்கு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதில் தாவினோ செய்த பெரிய தவறு… அவரோட பெயர் தான் இந்த ஆராய்ச்சியில் பர்ஸ்டா இருக்கணும் நினைத்து மகிழ் மேகோன் பெயரை குறிப்பிடமா விட்டது. அதனால் தான் அவரைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்த பல பேருக்கு, ஏன் நமக்கே கூட நம் தமிழர்கள் ராஜ்ஜியத்தில் மகிழ் மேகோன் அப்படின்னு அரசர் ஒருத்தர் இருந்தாருங்கிறது வாய் வார்த்தையாகக் கூட பலருக்குத் தெரியல. இல்லைன்னா அவரைப்பற்றி அறியவோ இல்லை அவருடைய டைம் மெஷின் பற்றி தெரிஞ்சிக்கவோ அகழ்வாராய்ச்சி பண்றேன்னு பல நாடு கிளம்பியிருக்கும். அவருடைய வரலாற்று செய்திகள் எல்லாம் நம்மோடதுன்னு தெரிஞ்சும் நாம உரிமை கொண்டாட முடியாம எட்ட நின்னு வேடிக்கை பார்க்க மட்டுமே செய்திருப்போம்” என்றான்.
“ஊஃப்…” கண்ணைக் கட்டி காட்டில் விட்ட உணர்வு தான் நைருதிக்கு.
“இதுக்கேவா?” என்று சிரித்த தேவித், “இதெல்லாம் நான் என் ஆராய்ச்சி தொடங்கும் முன்பு எந்த வகையில் எல்லாம் சிக்கல் வரும்ன்னு தெரிஞ்சிக்கிட்டது. இந்த காலகட்டத்தில் புதுசா கூட ஒன்னை உருவாக்கிடலாம். ஆனால் பழைமை வாய்ந்த ஒன்னை தன்னோடதுன்னு தக்க வைக்கிறது தான் பெரும் போராட்டம்” என்றான்.
“டாபிக் எங்கையோ ஆரம்பிச்சு எங்கையோ முடிஞ்சிருச்சு.” நைருதி கூறிட,
“எல்லாமே ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது தான்” என்றான் தேவித்.
அவனின் கூற்று உண்மையும் கூட…
அவனது வாழ்வின் ஆரம்பப் புள்ளி பல நூறாண்டுகள் மறந்த சரித்திரமாயிற்றே. அவன் வழி உலகறிய அவனே பிறப்பெடுத்த காரணமறியாது தன் மூலம் தேடி பயணிக்க இருக்கின்றான்.
அந்நேரம் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க…
அப்போது தான் நினைவு வந்தவனாக மனைவியை அழைத்துக்கொண்டு வேகமாக அவ்வறை விட்டு வெளியில் வந்தான் தேவித் மகிழோன்.
“என்னாச்சு மாமா?”
“இனிதான் எதும் ஆகணும். ஏற்கனவே வச்சு செய்வான். இப்போ என்ன செய்வானோ” என்று சென்று தேவித் கதவை திறக்க, இருவரின் குடும்பமும், வீரட் உடன் நின்றிருந்தது.
கவின் முகம் அத்தனை கடுமையாக இருந்தது.
“வாங்க” என்று தேவித் அனைவரையும் அழைக்க…
“இவனோட சேர்ந்து நீயும் மறக்குற வியாதியை பழகிட்டியா என்ன?” என்று தங்கையிடம் காய்ந்தான் கவின்.
“சாரி… சாரிண்ணா.” நைருதி தடுமாற, தேவித் சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டான்.
“நல்லா சேர்ந்தீங்க ஜோடி… ஜாடிக்கு ஏத்த மூடி மாதிரி” என்ற கவின், “சிரிக்காத கடுப்பாகிடுவேன்” என்று தேவித்தின் புஜத்திலே குத்தினான் கவின்.
“சரிடா மச்சான். வேணும் பண்ணல…”
“எத்தனை ஃபோன் பண்ணியிருக்கேன் பாருடா. வீரட் நெம்பரும் இல்லாம போயிருந்தால்… எங்க நிலை” என்று எரிந்து விழுந்தான்.
“ஹேய்… கூல் மச்சான். வன் டீப் டிஸ்கஷினில் டைம் போனதையே கவனிக்கல. என் மொபைல் மியூட்ல இருக்கு. கால் வந்தது தெரியல. உன் தங்கச்சி மொபைல் என்னாச்சு நீதான் கேட்கணும்” என்று மனைவியை அவளின் தமையனிடம் கோர்த்துவிட்டு கழண்டு கொண்டான் தேவித்.
“அப்பா” என்று மாமன்னனை அணைத்து விடுத்து, மற்றவர்களை உள்ளே அழைத்துச் சென்ற தேவித், கவினிடம் சிக்கொண்ட மனைவியை கண்டு சிரித்தவனாக நகர, நைருதி முகம் சுருக்கினாள். காப்பாற்றுமாறு.
“இன்னைக்கு நாங்க வருவோம் தெரியும் தானே ருதி?”
“அது… அண்ணா…”
கைக்காட்டி தடுத்த கவின்,
“அவன் உன்னை மாதிரி மாறலனாலும் பரவாயில்லை. நீ அவனை மாதிரி மாறிடாத” என்றான்.
“அச்சோ போதும் விடுங்க” என்று வான்மதி வந்து உள்ளே இழுத்துச் செல்லவே நைருதி தப்பித்தாள்.
“கவினுக்கு மட்டும் தான் பயப்படுறான். முன் ஜென்மத்துல உன் புருஷன் கவினுக்கு எதோ கடன் பட்டிருக்கான் போல” என்று வீரட் சொல்ல…
“இருக்குமோ!” என்று உள் சென்றாள் நைருதி.
முன் ஜென்ம பந்தத்தில் தொடர்புடைய வேந்தனவனின் மென் வதனம் நீண்டு விரிந்த அழகியக்காட்சி ராஜகுருவிற்கு காண கிடைத்தது.
“தங்களின் மறுபிறப்பு சாத்தியமாக பல நூறாண்டுகள் காலநிலை மாற்றம் கொள்ள வேண்டுமென்பதை யாமறிய இத்தனை மாதங்கள் எம்முடன் விளையாடி பார்க்க வேண்டுமா அரசே?”
அவரின் கேள்விக்கு மேகோனின் ஒரு கரம் உயர்ந்து ஒற்றை விரலால் மீசை நுனி தழுவி கன்னம் ஊர்ந்தது.
“அரிய காட்சியல்லவோ… உம் வதனம் மலர்ந்தால் நம் தேசம் அதன் நாமத்திற்கேற்றவாறு குவளை மலரால் நிரம்பி மகிழ் சூடிடுமே!”
“அத்தனை எளிதல்லவே! எம் பிறப்பு முழுமை அடைய ஜென்மம் பல மீளா காத்திருப்பில் நம்மை கட்டி வைத்த காலம்… இன்னும் காத்திருப்பை நீட்டிக்கிறதே! பொறுமை காப்போம். பொறுமைக்கு புவி மாதாவும் விலக்கல்லவே” என்ற மகிழோனின் பூடகப் பேச்சு புரிய… ராஜகுரு மௌனம் பூண்டார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
21
+1
+1