Loading

 

தெருவோரம் 7 :

மருத்துவமனை படுக்கையில் வலது கை மணிக்கட்டில் கட்டுடன் அமர்ந்திருந்தாள் மைதிலி.

அவளுக்கு அருகிலிருந்த இருக்கையில் கோபத்துடன் ஹரி அமர்ந்திருந்தான்.

“என்னையே எவ்வளவு நேரம் இப்படி முறைத்து பார்த்துகிட்டிருப்ப?” என மைதி ஹரியை வினவிய நேரம் அறைக்குள் நுழைந்த அனிஷ்…. மைதிலியின் கன்னத்தில் பளாரென்று அறைந்திருந்தான்.

சற்று நேரத்துக்கு முன் தான் மைதி கண் விழித்திருந்தாள். அந்நேரம் அனிஷ் மருத்துவரை காண சென்றிருந்தான். மைதியின் மீது அளவுகடந்த கோபம் அவனுள்.

அவள் கண்விழிக்க காத்திருந்தவன் தன் கோபத்தை அடக்கும் வழி தெரியாது அடித்திருந்தான்.

“அறிவிருக்கா? சாகுறளவுக்கு அப்படியென்ன உனக்கு பிரச்சனை, அப்படியே எதுவாகயிருந்தாலும் என்னிடம் சொல்றதுக்கென்ன? அப்புறம் நானெதுக்கு உனக்கு அண்ணன்னு இருக்கேன்?”

மெல்ல தலை கவிழ்ந்தாள். என்ன நடந்தாலும் அனிஷிற்கு எதுவும் தெரியக் கூடாதென ஹரி ஏற்கனவே சொல்லியிருந்ததால் மைதி அமைதியாகவே இருந்தாள்.

“உனக்கு என்ன பிரச்சனை… இப்போ சொல்ல போறீயா இல்லையா?”

கேள்வி கேட்டவனின் மனமோ அவனை இடித்தது. ‘உனக்கு என்ன காரணமென்று தெரியாததைப் போல் அவளை எதுக்கு அதட்டுகிறாய்?’

‘தான் கண்ட கரிய உருவம் தான் இதற்கு காரணமாக இருக்குமோ?’ என்று அனிஷ் நினைக்கத்தான் செய்தான். ஆனால், இவ்வளவு நாள் என்னை பயம் மட்டுமே கொள்ள செய்யும் அந்த உருவம் மைதியின் உயிரை காவு வாங்கும் அளவிற்கு சென்றிருக்காது என எண்ணியதாலே, மைதி தற்கொலைக்கு ஏதேனும் காரணத்தால் முயற்சித்திருப்பாளோ என்று அவ்வாறு கேட்டான்.

மைதி எதுவும் சொல்லாமல் இருக்கவும், அவளுக்கு உண்மையிலேயே ஏதோ பிரச்சனையென எண்ணிக்கொண்டவன்…

“உன்னால் எப்போ சொல்ல முடியுமா அப்போ சொல்லு, ஆனால்.. அதுக்குள்ள கிறுக்குத்தனமா எதுவும் பண்ணிக்காதே!” கடுமையாகக் கூறியவன், ஹரியிடம் திரும்பி “டிஸ்ஜார்ஜ் பார்மாலிட்டிஸ் முடிச்சிட்டு வந்துடுறேன்” எனக் கூறி வெளியேறினான்.

அனிஷ் சென்றதும் ஹரியிடம்,

“உன்னால் தான் அண்ணா என்னை திட்டிட்டுப் போறாங்க” என்று சிணுங்கினாள் மைதி.

“நாயென்ன செய்தேன்?” அப்பாவியாகக் கேட்டவனை முறைத்தவள், “நீ தானே எதுவும் அண்ணாக்கு தெரியக்கூடாது சொன்ன” என்றாள்.

“ஆமா, நான் தான் சொன்னேன், இப்போ எனக்கே என்ன நடந்ததுன்னு தெரியலையே!”

“அது எனக்கே புரியல ஹரி” என்றவளின் முன்பு காட்சிகள் விரிந்தன.

ஹரி மைதியை உறங்க சொல்லி சென்ற பிறகு… முன்பு ஒரு நாள் அவ்வீட்டில் தனக்கு நடந்த காட்சிகள் நினைவு வர சிறு பயத்துடனே அறை கதவினை தாளிட்டுவிட்டு படுக்கையில் விழுந்தாள்.

திடீரென கேட்ட கோர சிரிப்பில் எழுந்தமர்ந்த மைதியின் உடல் முழுக்க நனைந்திருந்தது. உடலில் ஈரம் உணர்ந்து விளக்கினை ஒளிரச் செய்தவள் அதிர்ந்தாள்.

மைதியின் உடல் உதிரத்தால் நனைந்திருந்தது… கண்களை பயத்தில் மூடி திறந்த இமைப்பொழுதில் உதிரம் பொட்டு துளி கூட இல்லாமல் வறண்டு போயிருந்தது.

உடல் நடுங்க அறையை விட்டு வெளியே செல்ல ஓடி வந்தவள் எதன் மீதோ மோதி தரையில் விழுந்தாள். என்னவென்று பார்க்க, பளபளக்கும் ஹேசல் விழிகளுடன்… விரித்துவிடப்பட்ட கருங்கூந்தல் காற்றில் பின்னால் பறக்க.. தீயில் எரியும் உருவம் நின்றிருந்தது.

சதைபிண்டம் எரியும் நாற்றம் மூச்சை அடைக்க… சில நொடி மூர்ச்சையானவள் எழுந்த போது வரவேற்பறையில் கிடந்தாள். தான் எப்படி இங்கு வந்தோம் என்று சிந்தித்தவளை தரையில் ஒரு கரம் தோன்றி உள்ளுக்குள் இழுத்தது.

“என்னை விட்டுடு.”

பயத்தில் தன்னை காப்பாற்றிக்கொள்ள உருவமில்லா ஆத்மாவிடம் கெஞ்சினாள்.

“அவளை விட்டுடு” என்று மற்றொரு குரல் கேட்க… அத்திசையில் புகை மூட்டமாக இருக்க, யார் நிற்கின்றாரென மைதிக்கு தெரியவில்லை.

“உன்கிட்ட பலமுறை சொல்லிட்டேன், ஹரன் மற்றும் மைதியை எதுவும் செய்யக்கூடாதுன்னு… மீண்டும் மீண்டும் நீ அவர்களை பயம் கொள்ளச்செய்வது எனக்கு பிடிக்கல. இது தொடர்ந்தால் நான் உனக்கு உதவமாட்டேன்.”

அதில் ஆத்திரம் வர பெற்ற அரூபம்…

“எனக்கும் அனிஷிற்கும் இடைஞ்சலாக யார்வந்தாலும் அவர்களுக்கு இதுதான் நிலை. நான் சொல்வதை நீ கேட்கல, இவளை இங்கேயே கொன்னுடுவேன்” என்ற அரூபம்.. 

ஜன்னலில் தொங்கிக்கொண்டிருந்த திரைச்சீலையை மைதியின் கழுத்தில் சுற்றி இருபக்கமும் இழுக்க, மைதியின் வலது கை தானாக மேசையிலிருந்த கத்தியினை எடுத்து இடது கையில் பலமாக பல முறை கீறியது.

மைதியின் கையில் உதிரம் வழிந்தோடியது. 

“நீ மைதியை விடல… இப்போ இங்கேயே என் உடலை எரித்துக்கொள்வேன். என் உடல் உனக்கு எவ்வளவு முக்கியம் தெரியும்தானே?” நான் உனக்கு சலைத்தவளல்ல என்று அரூபத்திற்கு உணர்த்தினாள் அவள்.

அரூபமோ, புகை சூழ நின்றிருந்தவளை நோக்கி நக்கல் சிரிப்பினை உதிர்த்து, “எனக்குள் இருக்கும் பழிவெறி உனக்கும் இருக்கிறது. அதற்கு உன் உடல் வேண்டும் என்பது எனக்குத் தெரியும், உன் பூச்சாண்டி வேலையெல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக்கொள்.” அரூபம் பேசிக்கொண்டேயிருக்க, தன்னுடைய கனல் பார்வையால் தனது உடலுக்கு தீ இட்டாள்.

அவளின் ஆடை பற்றி எரிய… பதறிய அரூபம் மைதியை தனது கட்டுக்குள்ளிருந்து விடுவிக்கும் சமயம் ஹரி மற்றும் அனிஷ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

நடந்தவற்றை ஹரியிடம் கூறிய மைதி, “உண்மையிலே பேய் இருக்கா ஹரி?” என்றாள்.

உதட்டை பிதுக்கியவன்,

“நம்புவதா? வேண்டாமா? ஒரு முடிவுக்கே வர முடியல. ஆனா, நம்மகிட்ட விளையாடுறது ஒன்றில்லை இரண்டு ஆத்மா. நீ சொல்லுவதை பார்த்தால் அப்படித்தான் தெரியுது. நம்மகிட்ட என்ன எதிர்பார்க்கிறது தெரியலயே!” ஹரி சிந்தித்தான்.

“ஹரி!” மைதிலி மெல்ல அழைத்தாள்.

“ம்…” நிமிர்ந்து பார்த்தான்.

“அந்த ரெண்டுல ஒண்ணு நம்ம நிஷா.”

“எனக்குத் தெரியும்!”

“இதை ஏன் முன்னவே சொல்லல?” எனக் கேட்டவளிடம், “எனக்கே நேற்று இரவு தான் ஊர்ஜிதமாகியது” என்று நடந்த அனைத்தையும் கூறினான்.

“அப்பவும் இப்பவும் அண்ணாவின் காதல் நிஷா மீது தானில்லையா ஹரி?” கண்ணீர் அவளின் கன்னத்தில் உருண்டோடியது.

“அண்ணாவுக்கு இது.?”

“தெரியக்கூடாது மைதி”, ஹரி.

அவள் முடிப்பதற்குள் இவன் பதில் உரைத்திருந்தான்.

இருவரும் அறிந்த அனைத்தும் அனிஷ் என்றோ அறிந்து விட்டானென்று தெரிய வந்தால்?

“நினைவுகள் அவனின் உயிரை பலி வாங்கிவிடும்.” அழுத்தமாகக் கூறியவன், “இப்போதைக்கு அனிஷிற்கு எதுவும் தெரியாமல் இருப்பதே நல்லது” என அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, “என் நண்பனைக் காப்பாற்ற உன்னை அங்கு தங்க வைத்து பலி கொடுகின்றேனோ… கில்ட்டியா இருக்கு மைதி” என்றான்.

“அவர் எனக்கு அண்ணா. அவருக்காக என் உயிர் போறது சந்தோஷம் தான்” என்றவள், “நிஷா என்னைக் காப்பாற்றுவாள்” என்றாள்.

“மைதி ஒரு ஆத்மா நிஷா எனும்பட்சத்தில் மற்றொன்று அவளின் ட்வின் சிஸ்டரா இருப்பாங்களோ?”

தன் மனதில் முளைத்த சந்தேகத்தை ஹரி முன்வைக்க… “இருக்கலாம்” என்ற மைதி, “எப்படி இறந்து போயிருப்பாங்க?” என்க,

“அவங்களே சொன்னா தான் நாம் அறிய முடியும். நீ உங்க டீன் கிட்ட எப்படியாவது அப்பாயின்ட்மெண்ட் நாளையே வாங்கிடு. தமாதிக்கும் ஒவ்வொரு நொடியும் அனிஷின் உயிருக்கு ஆபத்தாகலாம்.”

சரியென்றவளின் மனம் கணத்துப் போயிருந்தது தனது தோழியின் மரணத்தை எண்ணி.

அனிஷ் வரவும் மூவரும் இல்லம் சென்றனர்.

மைதி ஹரியிடம் சொல்லியதை போலவே மருத்துவரிடம் சந்திப்பிற்கான அனுமதி வாங்கிவிட்டாள். கல்லூரி முடியும் நேரம் சரியாக வந்துவிடென ஹரியிடம் தெரிவித்தவள், இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கிறதோ என உள்ளுக்குள் பயந்தாள்.

சரியாக மாலை ஐந்து அடித்ததும்,

திரு. ரவீந்திரன். உளவியல் மருத்துவர்… என பெயர் பதிக்கப்பட்ட அறையின் முன்பாக ஹரியும் மைதியும் நின்றிருந்தனர்.

அவரின் அனுமதி கிடைத்ததும் உள்ளே சென்ற இருவரையும் தனக்கு எதிரேயிருந்த இருக்கையில் அமர செய்தவர்.. நேரடியாகவே விஷியத்திற்கு வந்தார்.

“என்னை எதற்கு பார்க்க வந்தீங்க, நான் தெரிந்து கொள்ளலாமா?”

அவரின் சாந்தம் தவழும் முகமும், கனிவான பேச்சும்… ஹரிக்கு பார்த்ததும் நன்மதிப்பை ஏற்படுத்தியது.

ஐம்பது வயது மதிக்கதக்கவராக இருப்பினும் அவருடைய தன்மையான கேள்வி… அவரிடம் அனைத்தையும் சொல்லிவிடத் தூண்டியது.

ஆதி முதல் அந்தம் வரை முழுவதுமாக தன் மனத்திலிருப்பதை அவரிடம் கூறியவன், “இப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கா டாக்டர்?” என்றான்.

“ஹ… ஹா… ஹா…”

ஹரி இறுதியாகக் கேட்ட கேள்வியில் அவர் சத்தமாக சிரிக்க, ஹரிக்கும் மைதிக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

மெல்ல தனது சிரிப்பினை நிறுத்தியவர்… “நடந்திருக்கே” என்க,

“டாக்டர்!” என அதிர்ந்தான் ஹரி.

“இப்போ உண்மையிலே நடந்ததை தானே என்னிடம் சொன்னீங்க? அப்படியிருக்கும் பட்சத்தில் அவை உண்மை தானே? எனக் கேட்டவரிடம் ஹரியின் தலை ஆமாமென ஆடியது.

“பேய் இருக்கா டாக்டர்?”

இடையில் மைதி கேட்ட கேள்விக்கு ஆராய்ச்சியாக ஒரு பார்வை பார்த்த ரவீந்திரன், 

“உனக்கு அனுபவ அறிவு கிடையாதோ?” என்று மூக்குடைத்தார்.

“சார்… ஆத்மாக்களை பற்றி தெளிவாக கூற முடியுமா?” என்றான் ஹரி.

“ஆத்மா! அறிவியல் வாயிலாக சொல்ல வேண்டுமானால், மனித இறப்பிற்கு பிறகு உடலிலிருந்து வெளியேறிய நியூட்ரான்களால் உருவாகிய ஆரா. அறிவியலின் படி ஆரா என்ற ஒன்று இருப்பது உண்மையெனில், நம் மூட நம்பிக்கையின்படி ஆத்மா என்ற ஒன்று உலவுவதும் உண்மை.”

“புரியலையே சார்.” இருவரும் ஒரு சேரக் கேட்டிருந்தனர்.

சில வினாடி யோசித்தவர், தொண்டையை செருமி தொடர்ந்தார்.

“2.O,

உங்களைப் பொறுத்தவரை அது ஒரு ரோபாட்டிக் சயின்ஸ் மூவி. பட் என்னை பொறுத்தவரை, உங்கள் பேச்சு வழக்காக சொல்ல வேண்டுமானால் பேய் படம்.”

‘என்னடா, பொசுக்குன்னு இந்த மனுஷன் ஒரு அறிவியல் சம்மந்தப்பட்ட படத்தை பேய் படமென்று சொல்லிவிட்டார்’ என ஹரி மற்றும் மைதி ஆச்சரியமாக அவரின் முகத்தை ஏறிட்டனர்.

“உங்களின் ஆச்சரியத்திற்கான காரணம் எனக்கு புரியுது. நான் சொல்ல வருவதை உங்களுக்கு புரியும்படி சொல்றேன், கேளுங்க” என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“பக்க்ஷிராஜன் என்கின்ற கதாபாத்திரம், தான் இறந்த பிறகு தனது ஆராவை…. ஐ மீன் ஆத்மாவை ஒரு எலக்ட்ரிக்கல் திங்சில் புகுத்தி தனது தேவையை, அதாவது தான் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள செயல்பட்டது. அதனின் ஆராவை அழிப்பதற்கு இறப்பில்லா மனிதன் தேவைப்பட்டதால் அந்த இடத்தில் ரோபோ மனிதனை பயன்படுத்தினர்” என நிறுத்தினார்.

“அப்போ இந்த ஆத்மாவை அழிப்பதற்கு ரோபோ வேண்டும் சொல்றீங்களா?”, ஹரி.

“கிடையாது, நடைமுறைக்கு அது சாத்தியமும் இல்லை. உங்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்றேன்.”

“அறிவியலின் படி அது ஆராவாக இருக்கலாம், பட் நம்மை பொறுத்தவரை அது ஆத்மா தான். அறிவியலின்படியே ஆரா என்பதை நாம் ஏற்றுக்கொண்டோம் அப்போ ஆத்மாவையும் ஏற்றுக்கொள்வது தானே நியாயம். சோ, நிச்சயம் ஆத்மா இருக்கு. ஆத்மா தனது ஆயுட்காலம் இயற்கையால் முடித்து வைக்கப்படும் வரை பூமியில் தான் உலவும். ஆராவாக மொபைலிற்குள் புகுந்து தான் நினைத்ததை செய்கிறது என்றால் நம்புறீங்க. அதுவே ஒரு மனிதனின் உடலில் புகுந்து கொலை செய்கிறதென்றால் நம்பமாட்டீங்களா?” என்ற அவரின் கேள்விக்கு… 

“இப்போ நம்புறோம் சார்” என்றான் ஹரி.

“ஆனால், ஒன்னு மட்டும் விளங்கல சார்… அந்த ஆத்மா ஏன் அனிஷை தேர்ந்தெடுத்து எல்லாம் செய்யுது. என்னையும், மைதியையும் ஏன் பயம் காட்டுது?” என்றான்.

“அந்த ஆத்மா தன் மனதளவில் நெருக்கமாக அனிஷை வைத்திருக்கலாம். அதே போல் அனிஷும் தன் மனதளவில் அதற்கு இடம் கொடுத்திருக்கலாம். ஒரு ஆத்மா ஒரு மனித உடலில் புகுந்து கொள்கிறதென்றால்… அவ்வுடலிற்கு சொந்தக்காரரின் அனுமதி அதற்கு நிச்சயம் தேவை. மனதால் அவர் உறுதியாக ஆத்மாவை ஏற்றுக்கொண்ட பிறகே ஆத்மாவால் அவருள் செல்ல முடியும்.”

“அப்போ அனிஷிற்கும் இப்போ எங்களுக்குத் தெரிந்த எல்லாம் தெரிந்திருக்குமா?”

“அஃப்கோர்ஸ்.”

“சார்ர்…!”

“எஸ் மிஸ்டர். ஹரி, தெரிந்திருக்கலாம். அப்படியில்லையென்றால், ஆத்மாவிற்குரியவர் உயிருடன் இருக்கும் போது, அவருக்கு அனிஷ் மிக நெருக்கமாக இருந்திருக்கலாம்” என்றார்.

“ஓகே சார்.”

“உங்கள் இருவரையும் ஏன் தாக்குதுன்னு நீங்க கேட்டதுக்கு பதில்… “ஒன்னு அனிஷிடம் நீங்க நெருக்கமா இருப்பது, இன்னோன்னு அவனை அவளிடமிருந்து பாதுக்காக்க நினைப்பது. நமக்கு பிடித்த ஒரு நபர் இன்னொரு நபரிடம் பேசினாலே நமக்கு பிடிப்பதில்லை. கேட்டால், பொசசிவ்… விச் மீன்ஸ் உரிமை உணர்வு என்று சொல்றோம். அதே தான் இங்கு அந்த ஆத்மாவிற்கும், நம்மிடம் இருக்கும் உரிமை உணர்வு தான் காரணம். அனிஷிடமிருந்து நீங்க விலக, விலக அந்த ஆத்மா உங்களை விட்டு தூரம் போகும்.”

“சார்… நாங்க விலகிச் சென்றால், அனிஷை எப்படி காப்பாத்துறது?”

“அந்த ஆத்மாவின் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள், அதன் பிறகு அதனிடமிருந்து அனிஷை காப்பாற்ற ஏதும் வழி கிடைக்கும்.”

“எப்படி சார்?”, மைதி.

“உங்களை ஒரு ஆத்மா தாக்கிய போது இன்னொரு ஆத்மா உதவி செய்தது சொன்னீங்களே, அந்த ஆத்மாவின் மூலமா தெரிஞ்சிக்க முயற்சி செய்யுங்க. அனிஷிடமிருந்து விலகியிருப்பதை போல் காட்டிக்கொண்டு, அவனை காப்பாத்துங்க.”

“உன்னைக் காப்பாத்த நினைத்த ஆத்மா நிச்சயம் உன் குரலுக்கு செவி சாய்க்கும், உன்னுடைய கேள்விகளுக்கு விடையளிக்கும். சற்று நிதானமாக அனைத்தையும் செய்யுங்க.”

“எந்தவொரு வினைக்கும் நேரடி எதிர் வினை உண்டு. ஆத்மாவிற்கு எதிர்வினை நம்முடைய தெய்வ நம்பிக்கை தான். ஆத்மாவை கட்டுப்படுத்தும் யாராவதொரு மாந்த்ரீகரை உங்களின் பாதுகாப்பிற்கு வைத்துக்கொண்டு ஆத்மாவிடம் பேசுங்க.”

ஹரியும் மைதியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“என்னடா இவன் இந்த காலத்துல போய் மாயமந்திரம்ன்னு போக சொல்றேன்னு பக்குறீங்களா?” எனக் கேட்டவர், “நான் அறிவியல் படித்த மருத்துவராக இருக்கலாம். இருப்பினும், நானும் சாதரண மனிதன் தான். அறிவியல் என்பது நம் அறிவின் வளர்ச்சிக்கு தான் என்றார்.”

“உங்ககிட்ட பேசியதுக்கு அப்புறம் ஒரு தெளிவு கிடைத்திருக்கு. தேங்க்ஸ் போர் தட் சார்” என்ற ஹரியிடம், “உண்மையிலே உங்களின் நிகழ்வு என் ஆராய்ச்சிக்கு மிகப் பெரிய உதவியாக அமையும். அதற்கு நான் தான் நன்றி தெரிவிக்க வேண்டும் ” என்ற ரவீந்திரன் எல்லாம் நல்லதாக நடக்குமெனக் கூறி அவர்களுக்கு விடையளித்தார்.

ரவீந்தரனிடம் விடைபெற்று ஹரியுடன் வண்டியில் பயணித்த மைதியின் மனம் முழுக்க நிஷாவே நிறைந்திருந்தாள்.

“ஏன் ஹரி நான் கேட்டா நிஷாவுடைய ஆத்மா எல்லாத்தையும் சொல்லிடுமா?”

“டாக்டர் அப்படித்தானே மைதி சொல்றாரு. முயற்சித்து பார்ப்பதில் தப்பில்லையே” என்ற ஹரி வண்டியினை தீடிரென பிரேக் பிடித்து நிறுத்தினான்.

மாலை ஐந்து மணிக்கு தான் ரவீந்திரனையே சந்தித்தனர், அவரிடம் பல வினாக்களுக்கு விடை கிடைக்க.. பேசி முடித்து வெளியேறவே இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டத்து. அங்கிருந்து கிளம்பி சாலையில் பயணித்த போது அவர்களுக்கு எதிர் திசையில் மிகுந்த வேகத்துடன் அனிஷ் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தான்.

அவனின் வேகம் தான் ஹரிக்கு அதிசயமாக இருந்தது… வேகமென்றால் அப்படியொரு வேகம்… அசுர வேகமென்றே சொல்லலாம்.

தனது வண்டியினை யூ டர்ன் செய்து அனிஷை தொடர்ந்து சீறிப்பாய்ந்தான் ஹரி. அவனின் வேகத்தில் பயந்த மைதி அவன் மீது பச்சக்கென்று ஒட்டிக்கொண்டதெல்லாம் அவனுக்கு உணரவேயில்லை.

“நீ எதுக்கு இந்த வேகம் போற… அண்ணா தனியாகதானே போறான்? நிஷா பதினொரு மணிக்கு மேல் தானே வருவாள், அப்புறம் எதுக்கு இந்த வேகம்?” என்று மைதி கேட்க,

‘எனக்கு அவன் தனியா இவ்வளவு வேகத்தில் செல்வது தான் பயம்’ மனதில் கூறிக்கொண்டவன் வெளியில் அவளுக்கு பதிலளிக்கவில்லை.

அவனின் கவனம் முழுக்க அனிஷின் மீதேயிருந்தது.

நகரத்தின் வெளிப்புறம் சென்றவன், அடர்ந்த காட்டுக்குள் வீற்றிருக்கும் பங்களாவின் முன்பு தனது பைக்கினை நிறுத்தக்கூட நேரமில்லாதவன் போல் தரையில் படுக்க வைத்துவிட்டு உள் நோக்கி ஓடினான்.

அனிஷின் வேகம் ஹரிக்கு அதிசயமென்றால், அவனின் பொறுமையின்மை மேலும் ஆச்சரியம்.

கையில் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்த அனிஷ் தரையில் மண்டியிட்டு,

“நரேஏஏ…ன்ன்” எனக் கத்தினான்.

அவனின் அலறல் ஹரி மற்றும் மைதிக்கு அச்சத்தை தோற்றுவித்தது.

நரேன் யார்? அனிஷின் கோபமான கத்தல் எதற்காக?

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்