“அக்கா, புடிச்சிட்டியா?” பயம் இன்னும் குறையாமல் வந்து கேட்டாள் யாழ்.
“புடிச்சிட்டேன். ஏன், பாக்குறீயா?”
“அய்யோ, வேண்டவே வேண்டாம். அது என் கால் மேல ஏறி போனது இப்போ நினச்சா கூட ஒரு மாதிரி உடம்புலாம் சிலுக்குது.”
மெலிதாகப் புன்னகைத்தவள், “இரு இத வச்சிட்டு வரேன்” என்று பாம்பு இருக்கும் பையை தனது ஜீப்பில் வைத்து விட்டு வந்தாள்.
பேரன்பு உள்ளிருந்து மீண்டும் அங்கையை அழைத்தான்.
“அங்கை”
“அறிவு கேமரா ஆன்ல வச்சிக்கோ” என்று அவனுக்கு உத்தரவிட்டவள் மீண்டும் வகுப்பறைக்குள் நுழைந்தாள்.
“என்னாச்சுடா”
“இங்க ரெண்டு பாம்போட சட்ட இருக்கு. ஒன்னு இதுன்னாலும், இன்னொன்னு இங்க தான் இருக்கணும். அது மட்டும் இல்ல, இங்க பாரு முட்டை போட்டு இருக்கு.”
“என்ன, முட்ட போட்டு இருக்கா? வாவ். எத்தன?”
“ஒரு பத்து இருக்கும் போல”
“உடனே ப்ரிசர்வ் பண்ணணும். காட்டுல விட்டுடலாம்.”
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து தன் கிராம மக்களை சந்திக்க செல்கிறான். அவனுள் ஆயிரமாயிரம் கேள்விகள் இருந்தன. அவனின் பெற்றோர்கள் தன்னை அடையாளம் காண்பார்களா? சொக்கனுக்கு தற்போது எப்படியும் இருபது வயதாவது இருக்கும்? அவன் என்ன செய்துக் கொண்டிருப்பான்? கல்லூரி சேர்ந்து இருப்பானா? இல்லை அன்று இருந்தது போல்? நினைக்கவே அவனுக்கு கசந்தது.
பெருமூச்சொன்றை விட்டவன், ‘என்ன நடந்தாலும் பாத்துக்கலாம். முதல்ல ரேன்ஜர போய் பாக்கணும்’ என்று எண்ணிக் கொண்டே தன் நடையை தொடர்ந்தான்.
“பிறை, இன்னும் எவ்ளோ தூரம் நடக்கணும்?” மூச்சு வாங்கியபடி கேட்டான் சிவரஞ்சன்.
“இன்னும் ஒரு கிலோ மீட்டர்தான். ஊர் வந்துடும்” என்றவனின் கண்கள் சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டே இருந்தது.
அவனின் இல்லத்திற்கு இன்னும் ஒரு கொண்டைஊசி வளைவை கடந்தால் சாலைமார்க்கமாகவே சென்றுவிடலாம். ஆனால், சிறுவயது முதல் ஓடியாடிய இந்த இடம் இவனின் மனத்திற்கு இன்னும் நெருக்கமானதும் கூட. ஆகவேதான் இதன் வழியாக தன் இல்லத்திற்கு சென்றால் நிச்சயம் சொக்கனை காணலாம் என்றே தேர்ந்தெடுத்தான்.
Wait and Watch.
Stay tuned….
என்னவா இருக்கும் 😍😍
Pambu ka pambu