Loading

அதிகாலை சூரியன் தான் பொற்கதிர்களை பூமியில் பாரப்பா ஆயத்தமாகிக்கொண்டு இருக்க. அதிகாலையில் விழித்து விட்டான் ஆதித்யன் .இரவு எவ்ளோவு தாமதமாக உறங்கினாலும் காலையில் விழித்து விடுவான் படுக்கையில் சிறுது நேரம் கண்களைமூடி இன்று என்னென்ன செய்ய வேண்டும்  என்று பட்டியலிட்டு பிறகு கண்களை திறந்ததும் அவனுடைய நாளின் ஓட்டம் தொடங்கியது .காலையில் கண்முடி சிந்திக்கும் இந்த சில நிமிடங்கள்தான் ஆவான் மிகவும் ரசிக்கும் நிமிடங்கள் .

அன்றாட உடற்பயிற்சி முடித்திவிட்டு வரும்போதுதான் பார்த்தான் இவளவு காலையில் அலுவலகர்த்திக்கு தயாராகி இருக்க தங்கையை.

அம்மா குடுத்த சாதுமாவு கஞ்சியை குடித்துக்கொண்டு தங்கையின் மீது பார்வை கேள்வியைபாடிய ??

அண்ணனின் பார்வையை உணர்ந்து பயம் மனத்திற்குள்ள துளிர்விட”இன்னிக்கு ஆபீஸ் கொஞ்சம் பெண்டிங் ஒர்க் இருக்கு அண்ணா. என்னதான் ஆது நம்ம கம்பெனியாக இருந்தாலும் நாம்ம பார்த்ததான என்று  எதோ குறி சமாளித்துவிட்டு சென்றாள்”

மைதிலி ….

என்ற அண்ணனின் அழைப்பை கேட்டதும் “ஐயோ இன்னிக்கு மட்டுனோம் என்று நினைத்து திருப்பினால் “எந்த வேலை இருந்தாலும் சாப்பிட்டு போ என்ற அண்ணனின் பதிலை கேட்டதும்தான் நிம்மதி அனால் “

அலுவலத்திற்கு வந்தா மைதிலியை பார்த்தா பியூன் மைதிலியை பார்த்ததும் கடிகாரத்தை பார்த்தான் அவனை தொடர்ந்து கடிகாரத்தில் பார்வையை செலுத்திய மைதிலி அதிர்ந்துவிட்டால் மணி எழ என்று காட்ட உணர்ச்சிவசப்பட்டு இவுலவு காலையில் வந்துவிட்டோம .அண்ணனின் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்டால் .கல்லூரி முடித்துவிட்டு வீட்டில் இருக்கலாம் என்று நினைத்து இருத்தால். அவளை வற்புறுத்தி அலுவலகத்திற்கு அனுப்பினர்களா பார்வதியும் ஆதித்யனும் .ராகுராமின் காதால் வந்த பிறகுதான் சீரத்த்தை எடுத்து அலுவலகம் வார அரபித்தால் அப்படி இருக்குமோது காலை ஏழு மணிக்கு ஆபீஸ் கிளம்பினால் என்ன நினைப்பார்கள் .பியூன் பார்வையை உணர்ந்து .ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு வேலை இருக்கு அதான் என்று தனது அறைக்கு சென்று ரகுக்காக காத்துஇருந்தால் .

****************************************************************************

அம்மா ந கோவிலுக்கு கிளம்புறேன் என்று வந்து நின்ற மகளை பார்த்த சந்தியா ராகு ஆபீஸ் கிளம்பிட்டா ஆவான் கூட போ தனியா போவதா என்றார்.”அம்மா எனக்கு நேரம் ஆயிடிச்சு என்று சொன்னான். அவன் சொன்னதை கேட்டு அகல்யாவின் முகம் வாடிவிட்டது அதை பார்த்ததும் சேரி சேரி நான் வர்றேன் ஆனால்  வாசலில் விட்டு கிளம்பிடுவேன் என்றான் “

*******************************************************************************

அலுவலகத்தின் கிளம்பிய ஆதித்யன் பாடியில் இறங்கி வார அதை பார்த்த பார்வதி இவனிடம் என்ன சொல்லி கோவிலுக்கு கூப்பிடுவது என்று சிந்தித்து கொண்டு இருந்தார்.

அம்மா சாப்பாடு போடுங்க நேரம் ஆகிவிட்டது என்று சொன்ன பிறகுதான் ஆவன் உணவு மேஜையில் அமர்ந்து இருப்பதை கவனித்தார்.இட்லியை எடுத்து வைத்துக்கொண்டு மனதினுள் என்ன பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக்கொண்டார்.

அதிமா நேரம் ஆயிடுச்சா?

என்ன விசாயம் சொல்லுக என்றான்.

போற வழியில் என்னை பெருமாள் கோவில்ல விட்டுட்டு போய்டுரிய பூஜைக்கு சொல்லி இருக்க அதான் “உங்க கார் என்ன ஆச்சி” எப்போவும் மைதிலிக்குடா போவ இன்னிக்கு அவளும் இல்ல அதான் நீ வாரிய என்று கேட்டர்.

இவளவு தயங்கி தயங்கி கேட்கும் தாயின் முகம் பார்த்த ஆதியின் பார்வை இளகியது. பணத்தின் பின் ஓட ஆரம்பித்த பின் தாயையும் தங்கையையும் சீராக கவனிக்க முடியவில்லை என்ற குற்றஉணர்ச்சி தலைதூக்க சேரி போலாம் என்றான்.

நான் கார் எடுக்குறேன் சீக்கிரம் வாங்க என்றான்

பார்வதியால் நம்ப முடியவில்லை ஆவன் மனது மாறுறதுக்குள்ள காரில் ஏறிக்கொண்டார்.

கோவில் வந்ததும் நீங்க உள்ள போங்க  வண்டியை நிறுத்திவிட்டு வாறேன் என்றான் . அவனை பார்த்த பார்வதி உள்ள வருவாலா என்று கேட்டர் வரேன்மா என்று சொன்னான்.

**************************************************************************************

அகல்யாவை கோவிலில் இறக்கிவிட்ட ரகுராம் பார்த்து போ அம்மு வீட்டுக்கு என்று குறி சென்று விட்டான்.

***************************************************************************************

கண்களை முடி ஸ்ரீ ரங்கா நாதா பெருமாளையும் லட்சுமி தேவியையும் வேண்டிக்கொண்டு இருதார் பார்வதி.”பெருமாளே உங்குளுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை எப்படியாது ஆதியின் மனதைமாற்றி கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சிடுக அவனுக்கு ஏற்ற பெண்ணை காட்டுக பா என்று வேண்டி கொண்டு கண்களை திறந்தார் “

எதிரில் நின்று கடவுளை மனம் உருகி வேண்டி கொண்டு இருந்த பெண்ணை பார்த்ததும் பார்வதியின் பார்வை ப்ரெகாசித்தது “இளம் பச்சை வண்ண காட்டன் புடவையில் சின்ன செரிகையிட்டு முக்க்கில் சிவப்பு வண்ண கல் வைத்து முக்குத்தி மினுக்க வேறு எந்தவித ஒப்பனையும் இன்றி பளீர் என்ற பால் வண்ணத்தில் சுடர் விடும் விளக்கை போல ஒளி வீசும் தெய்விக முகத்தை பார்த்ததும் இதுமாரி ஒரு பொண்ணுத அதிக்கு அமையனும் என்று உடனடி வேண்டாதல் வைத்தார்.

திடிரென்று பார்வதியின் முகம் வாடிவிட்டது.

காரை நிறுத்திவிட்டு வந்த அதி தாயின் பக்கத்தில் இடம் இல்ல என்று எதிரில் நின்றான் .

அந்த பெண்ண பக்கத்தில் தான் மகன் மிகவும் மங்கி தெரிவதை பார்த்து கொஞ்சம் நிறமாய் பிறந்து இருக்கலாம் என்று எண்ணி பெருமூச்சுவிட்டார்.

அம்மாவின் மனதில் இருப்பதாய் எதையும் உணராத அதி சாமி கும்மிட்டு விட்டு பார்வதியுடன் கிளம்பிவிட்டான்.

பெருமாளை சேவித்து விட்டு கண்களை திறந்த அகல்யாவை பார்த்த ஐயர்.

அம்மாடி அகல்யா இப்போ போனகல ஒரு அம்மா அவங்க பெருமாள் சன்னதியில்  பூவ பூட்டு பாக்க சொன்னங்க  கொண்டு வருதுக்குள்ள கிளம்பிட்டாங்க இதை அவங்க கிட்ட சேத்தூரியடி குழந்த என்றார் .

சேரி மாமா என்று அவங்களை தேடிக்கொண்டு வந்தால் .வார வரம் அவர்கள் கோவில் வருவதால் அவளுக்கு அவங்களை தெரியும் தூரத்தில் பார்த்துவிட்டால் எங்கே போய் விடுவார்களோ என்று மாமி மாமி என்று அழைத்து கொண்டு ஓடி வந்தால் அவாள் குரலை கேட்டு அதி திரும்பி பார்த்தான் .

கோவிலில் விட மாட்டார்களா என்று அவளை இளக்காரமா பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான்.அவனுடைய வட்டாரத்தில் அவனுடைய பணத்தை பார்த்து மேல விழும் பெண்களை போல் அகல்யாவை நினைத்துதான் கேவலமான பார்வை பார்த்தான் . பார்த்துவிட்டார்கள் என்று உணர்ந்து ஆசுவாசம் அனா அகல்யா ஆதியின் பார்வையை புரிந்துகொள்ள முடியவில்லை இதுவரை வாழ்நாளில் இப்படி ஒரு பார்வையை யாரும் பார்த்து பார்த்ததில்ல அந்த பார்வையின் அர்த்தம் இவளுக்கு புரியவில்லை வேறுயாரையோ கூப்பிடுகிறேன் என்று நினைத்துவிட்டார்கள்ப்போல் என்று ஓடி சென்று மூச்சிவாங்க அவர்கள் முன்னாடி நின்றாள். அகல்யாவை பார்த்த பார்வதியின் முகம் ப்ரெகாசித்தது. மூச்சி வாங்கி முடித்துவிட்டு உங்கள தான் கும்பிட்டுட்டு வந்த மாமி என்றால் அவளுடைய மாமி என்ற அழைப்பை கேட்டு என்னை தெரியுமா ரென்று கேட்டர் .வார வரம் உங்களை கோவிலில் பார்ப்பேன் என்றல்.

உன் பெயர் என்ன என்று கேட்டர் ?

அகல்யா என்று கூறிவிட்டு அச்சோ மறந்து போய்ட்டா பூவ போட்டுபார்க்க சொல்லி மாமா கிட்ட சொல்லி இருந்திகள மறந்துட்டு போய்ட்டீங்க அதா குடுக்க வந்த என்றால் .அதை குடுத்துவிட்டு வரேன் மாமி என்று சொல்லி சென்று விட்டால் .

தான் ஒருவன் இருப்பதை மதிக்காமல் சென்றவேளை பார்த்தது ஆதித்யனுக்கு அவனை அவமரியாதையாக நடத்திவிட்டால் என்று கோவம் வந்தது.

பார்வதி அகல்யாவை பற்றி யோசித்து கொண்டு இருதார் அடுத்த வரம் அவளிடம் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.

ஆதியும் அவளை பற்றிதான் யோசித்துக்கொண்டு இருத்தான்”இதுநாள் வரை அவனை கவர நினைக்கும் பெண்களை பற்றி கூட சிந்திக்கவோ மதிக்கவோ மாட்டான் ஆனால் இன்று அவனை முழுதும் அவளுடைய சிந்தனை இருப்பதை அறியவில்லை “

அலுவலகத்திற்கு வந்த ஆதியின் கவனம் வேலையில் பதியவே இல்லை பிறகு அவள் கவனிக்காமல் சென்றால் அவளின் அழகில் மயங்கி பின்னாடிவருவேன் என்று நினைத்துஇருப்பாள் பாவம் அவளிற்கு என்னை பத்தி தெரியவில்லை என்று அவளுடைய சிந்தனையை ஒதுக்கி விட்டு வேளையில் கவனம் செலுத்தினான் .

யார் சொல்வது அவனிடம் அவன் மனதில் ஆழத்தில் அவளை அழகி என்று பதிய வைத்ததை …….. 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்