. பதினாறு வயதில் புரியாத மனதில்
கல்யாண பேச்சு எழ ஒன்றும்
புரியவில்லை லஷ்மி க்கு. படர்ஃளை
போல படபடவென்று பருவத்தில்
பார்பதற்கு அம்சமாகவும் கழகத்தில்
குழந்தை தன்மை மாறா குழந்தையிடம்
கல்யாணம் என்றதும் அதற்கு என்ன
எப்படி சொல்லவது நடப்பது என்று
தெரியவாலிலை வெளியில் பெரிதும்
சென்றது இல்லை அம்மா அவள்
அவ்வப்பொழுது சமையல் கற்று தர
சமயத்தில் அவள் அன்னை யையும்
மிஞ்சி விடுவாள் ருசியில் வயதிற்கு
வரும் வரை தான் அப்பா அவளிடம்
அன்பாய் ஒன்றிரண்டு வார்த்தை
பேசியது பின்பு பார்பதுவே குறைந்து
போனது அன்னை அவள் மட்டும் நல்லது
கெட்டது பூஜை புனஸ்காரம் எல்லாம்
சொல்லிக்கொடுத்து பதினேழு வயதில்
பரமன் கைதலம் பற்ற இன்னது என்று
தெரியாமல் சமைத்து வீட்டை சுத்தம்
செய்து குடும்பம் நடத்தினாள் .
தாமபத்தியத்தின் பொழுது
அழுதிருக்கிறாள் அன்னை ஆரம்பத்தில்
சொன்னா சில விஷயத்தில் அழுகையும்
அடங்கி போனால் ஆயிற்று வயத
இருப்பத்திரண்டு சூர்யா வயிற்றில் ஆறு
மாத கருவாய் . அம்மா என்று ஆன பின்
லஷ்மி க்கு கொஞ்சம் தெளிவு வந்தது
ஆதிரை என்று பெயர் சூட்டி அழ்ழகாய்
அலகரத்து அரவணைத்து அன்பு காட்டி
சோறூட்டி மகிழ்ந்தாள் பரமன்
நினைவில் இருந்ததே இல்லை அவனும்
அதற்கேற்கது போல்
நடந்தேகொண்டதில்லை எந்த நேரமும்
போதை வீட்டின் பாதை கூட மறந்து
வாழ்ந்த நாட்கள் அதிகம் என்றோ வீடு
வந்த பாவ திற்கு சுமக்க வைத்துவிட்டு
போனான் . அதன் பிறகு என்ன ஆனான்
என்று தெரியவில்லை. அத்ததையென
வந்தவள் தங்கம் . அவளின் பெயரும்
அதுவே அவளும் இவளும் தான் சேர்ந்து
வேலைக்கு செல்வர் குழந்தை
ஆதிரையை மாறி மாறி பார்துப்பர்.
மீண்டும் உண்டானதிலருந்து ஆதிரை
அத்தை பொருப்பானாள். இவள் ஆறேழு
மாதம் வரை வேலைக்கு சென்றவர்
பின்பு முடியாது வீட்டிலேயே டிபன் கடை
பலகார கடை ஊறுகாய் போடுவது என
செய்யாத வேலை தங்கமும் துணையாய்
நிற்க சூர்யாவை நல்லபடியாக
பெற்றெடுக்க அவளுக்கு மூன்று மாதம்
இருக்கும் பொழுது அத்தை க்கு உடம்பு
முடியாது போனது ஆனால் அவளை
கஷ்டபடுத்தாமல் சில நாட்களிலேயே
போய்சேர்ந்துவிட்டாள். கைக்குழந்தை
வைத்துக்கொண்டு மிகவும்
சிரமப்பட்டாள் அப்புறம் கொஞ்ச
கொஞ்சமாக மீண்டு வர சூர்யா விற்கு
மூன்று வயதெனும் பொழுது பரமன்
விபத்தொன்றில் மரித்தான் என அவன்
நண்பன் கூற பெரிதாய் அதிராமல்
அவளாகவே தன் தாலியை
அறுத்தெறிந்தாள் . அப்படி இப்படி என்று
வருடங்கள் உருண்டோட படாத பாடு
பட்டு செய்யாத வேலை என்று இல்லாது
போக ஒரு வழியாக ஆதிரை வளர்ந்து
நின்றாள் அவள் கைகோர்க்க அவளை
மேல்படிப்பு படிக்க சொல்லியும்
மறுத்துவிட்டாள் . அவளும் முதலில்
நல்ல வேலையில் அமர வில்லை அவள்
அன்னையின் ராசி தொடர செய்யாத
வேலை எல்லாம் செய்யதாள் படிப்பு
என்ற ஒன்று அவளிற்கேற்ற வேளையை
ஒரு சில வருடத்திற்கு பிறகே
கைகொடுத்தது. கதவு திறக்கும் சத்தம்
கேட்டு தன் நினைவுலகத்திற்கு வந்தாள்
லஷ்மி .” என்னம்மா இந்த
நேரத்திற்கெல்லாம் வீடு வந்துட்ட நா
கூட வெளிய நிக்கனுமேனு
நினசிக்கிட்டே வந்தேன் “” ஏம்மா
உடம்பேதும் சரியில்லை யார்?” அடடா
ஆதிரை அதெல்லாம் ஒன்னும் இல்ல
கொஞ்சம் அகதியாக இருந்ததால
இன்னைக்கு கம்பனிக்கு போகாம
வீட்டுக்கு மதியமே வந்துட்டேன்”
வேலைக்கு போக வேண்டாம்னு
சொன்னா கேக்கறியா? ஆதிமா அசதி
எல்லாருக்கும் வரதுதானே நீ யேன்
இவ்வளவு படபடக்கற ரெண்டு பேரும்
போய் ஃபிரஸ் ஆயிற்று வாங்க நா காபி
கொண்டு வரேன். சற்றுநேரதிற்கெலாம்
மூவரும் கையில் காஃபி கோப்பை யோடு
முக்கோணமாய் அமரந்துகொண்டனர்
நாம மூணு பேரும் இப்த நேரத்துல
இப்படி உட்கார்ந்து காஃபி குடிச்சி எத்தன
வருஷம் ஆச்சு? என சூர்யா வினவ ஆமா
சூர்யா அது சரி வரும் பொழுது வெயிட்
பன்னனும்னு நெனச்சேன் னு
சொன்னாயே எப்பவும் மல்லியக்கா
வீட்ல தானே சாவி இருக்கும்
இன்னைக்கு என்ன? அதுவா என
ஆரம்பித்து நடந்த தெல்லாம் சூர்யா கூற
ஓ என்றாள் பெரியவள் அம்மா இப்படி
திரும்பு நா உன் மடியில் நா படுக்கப்
போறேன் என வினவ அன்னையவள்
அதற்கேற்றது போல அமர சூர்யா
படுத்துக் கொண்டாள். நானும்
என்றவாரு ஆதியும் படுக்க அக்கா நாம
மூணு பேரும் எங்காவது டூர் போகனும்
அம்மா பாவம் எதுவும் தெரியாது எங்கும்
போனது கிடையாது ஒரு கோயில்
பீச்சுனு எங்காவது போகனும் கரெக்டா
சொன்ன சூர்யா போவோம் அ தெல்லாம்
ஒன்னும் வேணாம் சூர்யா பேச்சு
கேக்காத ஆதி வீண் செலவு இழுத்து
வைப்பா அப்படிலாம் இல்ல அவ சரியா
தான் சொல்றா அவ சொல்றதுக்கு
முன்னாடியே நா செஞ்சிருக்கனும் அப்படி
“சொல்லுகா”ஆதிரை இதழ்விரித்தாள்
அதுகில்ல ஆதிமா கடன் அடைக்கனும்
இவ படிப்பு செலவு இருக்கு ப்ச் கடனும்
செலவும் தீரகூடயதா உனகென்ன
ஜாஸ்தி செலவாகக்கூடாது
அவ்வளவுதான நா பாத்துக்கறேன்
என்னமா கம்முன்னு சூர்யா வினவ
சொன்னா கேக்கவபோறீங்க என வினவ
கோசிகாத லஷ்மி என சூர்யா அடி பாவி
என ஆதிரை போக்காய் கத்த அம்மா
பேரு சொல்ற கழுதை என செல்லமாய்
கை ஓங்க ஓடியே விட்டாள்
சின்னவள்.ஹாம் அம்மா நாளைக்கு
என்வேல விஷயம் வேற ஒரு கம்பனிக்கு
மீடிங் போறேன் என்கம்பனிக்கு நான்
சீக்ரமாவே போகனும் அப்பதான் பி
ரிப்பேர் செய்யமுடியும் அதனால எனக்கு
னு லஞ்சு கட்ட வேணா வெளியில
சாப்டுகறேன் உண்மையா சாபிடுவியா?
என்னமா இது நா என்ன சின்ன
குழந்ததையா அம்மாவுக்கு எப்பவுமே
தன் பசங்க சின்ன குழந்ததாண்டி.
சரிதான் ஆனா நீ சாப்பாட்டுல ரொம்ப
மோசம் காலையில அரக்க பரக்க
கிளம்பற பாதி நாள் சாப்பாடே
சாப்பிடுவது இல்ல. இதுல எங்க
வெளியில சாப்பிட போற அப்படிலாம்
இல்ல நான் சாப்பிட றேன் ஆகட்டும் உன்
பெரிய பொண்ணு சாப்பிடலனு
கவலபடுறியே என்ன பத்தி நினைச்சு
பாத்தியாமா? உனக்குகென்னடி நீ தான்
எல்லாருக்கும் சேர்து சாப்பிடுவியே ? ம்ம்
என முறைக்க சும்மா சொன்னேன்
ராசாத்தி இரு நா போய் ராத்திரி டிபன்
ரெடி செய்ய றேன்.