Loading

கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்-7

தரையில் பாத்திரங்கள் சிதறி கிடக்க கடை ஊழியர்கள் ஜூலியை முறைத்த வண்ணம் பார்த்தார்கள். கார்திக்கோ அவளுக்கும் அவனுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பது போல் சற்று தள்ளி நின்று கிஃப்ட் பொருட்களை பார்த்தபடி நின்று இருந்தான். ஜூலி செய்வதறியாமல் நின்றாள்.

“என்னமா கவனமா இருக்க மாட்ட.. டேமேஜ் ஆன பொருளுக்கு எல்லாம் நீ தான் பணம் குடுக்கணும். உன் இஸ்ட்டத்துக்கு எல்லாத்தையும் தள்ளி விட்டு இருக்க.. இதை எல்லாம் அடுக்கி வைக்க நாங்க எவ்ளோ கஸ்ட்டபட்டோம் தெரியுமா? இப்ப சூப்பர்வைசர் வந்து பார்த்தா எங்களை தான் திட்டுவாரு.. பொருள் கேட்டா நாங்க எடுத்து குடுக்க மாட்டோமா?” என அங்கு வேலை செய்யும் ஒரு ஆடவன் எறிந்து விழுந்தான். ஜூலிக்கு முதலில் பேச்சே வரவில்லை. தனக்கு உதவியாய் கார்த்திக் வருவான் என்று அவனை தேட அவனோ சம்பந்தமே இல்லாதது போல் வேறு இடத்தில் நிற்பதை பார்த்து அவனை மனதில் கருவினாள்.

“பச்ச துரோகி.. உன் கூட வந்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்” என மனதில் திட்டியவள் அந்த ஆடவன் பக்கம் திரும்பி, “அண்ணா சாரி னா.. உங்களுக்கு நான் ஹெல்ப் பண்றேன்.. அதுவும் இல்லாம இது எல்லாம் ஸ்டீல் பாத்திரம் தானே எதுவும் உடையலை” என லாஜிக் பேசினாள்.

“நெளிஞ்சி இருந்தா உங்க தாத்தாவா காசு குடுப்பாரு?” என சூடாக கேட்டான். 

“ஐயோ அண்ணா அப்படி எல்லாம் ஆகி இருக்காது கொஞ்சம் பாத்து பண்ணுங்க.. அடுக்கி வைக்க நான் ஹெல்ப் பண்றேன்” என காலில் விழாத குறையாக கெஞ்சினாள். கார்த்திக்கு சிரிப்பு வந்தது. கமுக்கமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். அவனை மனதில் திட்டியபடியே பாத்திரங்களை எடுத்து வைக்க உதவினாள் ஜூலி. இனி இவனுடன் வெளியே வரக் கூடாது என்று மனதில் கறுவிக் கொண்டாள். அரை மணி நேரமாய் அவள் எடுத்து வைத்துக் கொண்டு இருக்க கார்த்திக் சற்று தள்ளி நின்றே பார்த்துக் கொண்டு இருந்தான். அந்த ஆடவனிடம் அவள் மட்டும் இருப்பதை கண்டு அடிக்கடி என்ன செய்கிறாள் என்று பார்த்தபடியே அவன் வந்த வேலையை கவனித்தான். 

அடுக்கி முடித்த பின் அவன் சென்றதும் ஜூலி அயர்வாக சாய்ந்து அமர அவளின் அருகே மண்டி இட்டு கமுக்காமாய் சிரித்தான். அவனை கண்டுக் கொள்ளாமல் முறைத்தாள் ஜூலி. 

“ஆர்வ கோளாறு மாதிரி முந்திகிட்டு போன… என்ன ஆச்சுன்னு பாத்தியா” என வம்பிலுத்தான். அவனை பயங்கரமாய் முறைத்து ஜூலி எழுந்து வெளியே கிளம்ப எத்தனித்தாள்.

“ஏய் எங்க போற? நம்ம வந்த வேலை இன்னும் முடியலை” என கார்த்திக் கூறியதை பொருட்படுத்தாமல் கிளம்பினாள். அவளின் பையை பிடித்து பின்னே இளுத்தவன், “சொல்லிட்டு இருக்கேன் நீ பாட்டுக்க போற?” என்று உதட்டை கடித்தபடியே புருவத்தை உயர்த்தினான் கார்த்திக்.

“பின்ன என்ன டா.. சப்போர்ட்க்கு வந்தியா நீ? யாரோ ஒருத்தன் மாதிரி நின்னு வேடிக்கை பாக்குற? அவன் என்ன திட்டும் போது எதாச்சும் பேசுனியா?” கோவமாக அவனை முறைத்தாள். 

“ஷூ.. கத்தாத.. தப்பு உன் மேல.. அதுவும் இல்லாம நான் குறுக்க வந்து இருந்தா கண்டிப்பா காசு கேட்டு இருப்பான்.. இப்போலாம் இறக்கம் கூட பொண்ண பாத்தா தான் சில பேரு காட்டுறானுங்க.. அதுவும் இல்லாம நமக்கு நேரம் இல்ல.. நான் ஏற்கனவே எல்லாத்தையும் வாங்கிட்டேன்.. மேல பேக்கிங்க்கு அனுப்பி இருக்கேன். வந்ததும் போக வேண்டியது தான். ஒரு பொண்ண கூட்டிட்டு போய்ட்டு லேட்டா பேனா என்ன தான் திட்டுவானுங்க..” என கூறினான் கார்த்திக். 

ஜூலியும் அப்பொழுது தான் அதனை யோசித்தாள். என்ன தான் ஆயிரம் நியாயம் அவன் கூறினாலும் அவளின் மனம் தனக்காய் அவன் பேச வரவில்லையே என்று இருந்தது. முணுமுணுப்புடன் நின்றாள் ஜூலி. 

“சரி வா நமக்கு டைம் இருக்கு” என கூறியவன் அவளை அழைத்துக் கொண்டு மேல் தளத்திற்கு சென்றான். ஜூலி எதுவுமே கூறவில்லை. இனி அவனுடன் வரக் கூடாது என்று நினைத்து திட்டிக் கொண்டே நடந்தாள். கார்த்திக் எதுவும் பேசாமல் அங்கு இருக்கும் தின்பண்டங்கள் பகுதிக்கு சென்றான். 

“தின்னி பண்டாரம்.. இதே வேலையா இருப்பான் போல” என மனதில் திட்டியவள் அவன் பின்னே நடந்தாள். கார்த்திக் ஒரு கூடையை எடுத்துக் கொண்டு நிறைய தீனிகளை வாங்கினான். அவன் ஒவ்வொன்றாக எடுத்து போட அதை எல்லாம் ஆசை உடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். எல்லாம் அவளுக்கு பிடித்த தீணிகள். 

“ஆமா இந்த சிப்ஸ்ல எந்த பிளவோர் உனக்கு பிடிக்கும்?” என கார்த்திக் கேட்க உடனே வேகமாய் காரம் அதிகமாய் இருக்கும் ஒரு பாக்கெட்டை காட்டினாள். சரி என்றதுடன் அந்த பாக்கெட்டை எடுத்து போட்டான். இனிப்பு வகைகள், கார வகைகள் என ஏராளமாய் வாங்கினான் கார்த்திக்.

“நமக்கு புடிச்சதை கேட்டு எடுத்து இருக்கான்?? ஒரு வேளை சாரி கேக்குறதுக்காக இது எல்லாம் வாங்கி தரானோ?? ஹையா தீனி.. ஆனாலும் இதை வாங்கிட்டு நீ மன்னிக்கவே கூடாது.. தீனி குடுத்து சமாதானம் பண்ண நினைக்கிறானோ..” என சிலுப்பிக் கொண்டாள். அடுத்து கார்த்திக் சாக்லேட் பக்கம் வர, “இதுல எனக்கு அந்த நட்ஸ் போட்ட சாக்லேட் தான் புடிக்கும்” என அவன் கேட்பதற்கு முன்பே கூறினாள் ஜூலி. கார்த்திக் ஒன்றும் கூறாமல் தலை அசைத்து விட்டு ஒவ்வொரு பிரிவிற்காய் நடந்தான். அவன் பின்னே கூடையை பார்த்தபடியே ஆசை உடன் நடந்தாள் ஜூலி. இன்னும் மதிய உணவு உண்ணவில்லை. அந்த கூடையை குடுத்தாள் இப்பொழுதே மேய்ந்து விடுவாள். அந்த அளவிற்கு பசியில் இருந்தாள். 

கார்த்திக்கு பார்சல் கட்ட வேண்டிய பொருட்கள் வந்து விட்டது என அழைப்பு வர உடனே பில் கவுண்டருக்கு சென்றான்.

“லையன் பெருசா இருக்கு நீ போய் என் பேர சொல்லி அந்த பார்சல் எல்லாத்துக்கும் கிஃப்ட் கவர் ஒட்ட சொல்லு நான் பில் போட்டு வரேன்” என்றவன் கவுண்டர் பக்கம் சென்றான். அவனையே இமைக்காமல் பார்த்தாள் ஜூலி. 

“ச்சே.. இவ்ளோ நல்லவனா இருக்கான்.. நான் திட்டிடேனே.. நமக்காக இவ்ளோ ஸ்நாக்ஸ் வாங்குனதும் இல்லாம நம்ம நிக்க கூடாதுனு நினைக்கிறான்.. அந்த மனசு தான்..” என மனதில் மகிழ்ந்தவள் நேராக கிஃப்ட் பக்கம் சென்றாள். அவன் கூறியது போல் அங்கு வேலை பார்ப்பவர்களிடம் கூறியவள் அவனுக்காய் காத்திருந்தாள். பதினைந்து நிமிடம் கழித்து அவள் பக்கம் வந்தான் கார்த்திக். 

“என்ன ரெடி ஆச்சா?” என கேட்க சாம்மதமாய் தலை அசைத்தாள். இரண்டு பெரிய பை நிறைய டிஃபன் பாக்ஸ்கள் பேக் செய்யப்பட்டு இருந்தது. தீனி பையை ஜூலியிடம் குடுத்தவன் இரண்டு பையையும் தூக்கிக் கொண்டான். 

“குடு நான் வேணும்ன்னா ஒரு பைய தூக்கிட்டு வரேன்” என்றவளை நக்களாய் பார்த்தான்.

“இல்ல நானே தூக்கிகுறேன்.. நீ அதை மட்டும் தூக்கிட்டு வந்தா போதும்” என கூறி முன்னே நடக்க சிலுப்பிக் கொண்டு பின்னே நடந்தாள் ஜூலி. 

அங்கு கல்லூரியில் மதிய உணவை உண்டு முடித்த ஶ்ரீ இந்த தடவை பயிற்சி செய்யும் இடத்தை மாற்றி இருந்தான். நிழலாக இருக்கும் ஸ்டூடண்ட் கார்னர் பக்கம் அழைத்து சென்றான். ஜூலி இல்லாதது ருத்ராவிற்கு குறையாக இருந்தது. அமைதியாய் நிழலில் அமர்ந்தவள் அவர்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். அங்கு மற்ற குழுவினர்கள் பயிற்சி செய்துக் கொண்டு இருக்க அனைவரையும் வேடிக்கை பார்த்தாள். எவ்வளவு நேரம் தான் அவளும் அதே இடத்தில் இருப்பாள். உண்ட மயக்கம் வேற வர இதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாது என்று பையை தூக்கிக் கொண்டு கிளம்பினாள். 

நேராக ஶ்ரீ இருக்கும் இடத்திற்கு செல்ல அவளை பார்த்ததும் மற்றவர்களை தொடருமாரு கூறி விட்டு அவள் பக்கம் வந்தான்.

“ஶ்ரீ நான் கிளம்புறேன் நீங்க எல்லாம் பிராக்டீஸ் பண்ணுங்க” என புன்னகை உடன் கூறியவள் தொப்பியை அவனிடம் குடுத்தாள். ஶ்ரீக்கு அவளை அனுப்பும் மனமே இல்லை. விட்டாள் அவள் உடனே கிளம்பி விடுவான். ஆனால் பயிற்சி முக்கியம் என்றதனால் லேசான புன்னகை உடன் தலை அசைத்தான். அவனிடம் கை அசைத்தவள் மார்ச் பாஸ்ட் செய்துக் கொண்டு இருப்பவர்களை பார்த்து கை அசைக்க அனைவரும் வேகமாய் டாட்டா காட்டினார்கள். 

ருத்ரா கல்லூரியின் மெயின் கேட் வழியே வெளியே செல்ல ஜூலியும் கார்த்திக்கும் இரண்டாவது நுழைவாயில் உள்ளே நுழைந்தார்கள். இருவரும் நேராய் டிபார்ட்மென்ட் வரைக்கும் சென்றவர்கள் வாங்கிய பொருட்களை குடுத்து விட்டு திரும்பினார்கள். 

“ம்ம் குடு” என ஜூலி கையில் இருக்கும் பையை பார்த்து கேட்க, “ஓ.. இந்தா உனக்கு எது வேணுமோ எடுத்துக்க” என பெருந்தன்மையாக கூறியவளை பார்த்து லேசாய் சிரித்தான். பையை அலசி ஆராய்ந்து நட்ஸ் போட்ட சாக்லேட்டை எடுத்து ஜூலியிடம் குடுத்தான்.

“பை நாளைக்கி பாப்போம்” என்றிட அதிர்ந்தாள் ஜூலி. தீனி பையை குடுக்காமல் ஒரே ஒரு சாக்லேட் குடுக்கிரானே என்று பார்த்தாள்.

“இது எல்லாம் எனக்கு வாங்குனேன்.. நீயா ஆர்வ கோளாறுல இந்த சாக்லேட் கேட்டதால குடுக்குறேன்.. சாப்புடு பை” என கூறி கிளம்பி செல்பவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“பாவி பயலே.. ஒரே ஒரு சாக்லேட் குடுத்துட்டு மொத்தத்தையும் எடுத்துட்டு போறான்.. என் புத்திய செருப்பால அடிக்கணும்.. இதுக்கு தான் ஓவரா டிராமா பாத்து கற்பனைய வளத்துக்க கூடாதுன்னு சொல்றது.. ச்சி எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்..” என தலையில் அடித்துக் கொண்டு வெளியே கடுப்புடன் நடந்தாள் ஜூலி.

ருத்ரா வெளியே நடந்து செல்ல அவள் முன்னே ஒரு பைக் வந்து நின்றது. வண்டியை பார்த்ததுமே யார் என கண்டுக் கொண்டாள்.

“காலேஜ் ஒரு மணிக்கு முடியும் இப்போ தான் வெளிய வர? இவ்வளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்த?” மிரட்டும் குரலில் கேட்டவனை அமைதியாய் பார்த்தவள், “ஸ்போர்ட்ஸ் டே வாலன்டியர்ஸ்ல இருக்கேன் அதான்” என்றவளை ஏற்ற இறக்கத்துடன் பார்த்தான்.

“சரி வண்டில ஏறு” என கூற மறுப்பு கூறாமல் வண்டியில் ஏறினாள் ருத்ரா. கடுப்புடன் வெளியே வந்த ஜூலி, ருத்ரா யாரோ ஒருவனுடன் வண்டியில் செல்வதை பார்த்து யோசனையாக புருவம் சுருக்கினாள். என்ன தான் இருவரும் நன்றாய் பேசி பழக ஆரம்பித்து இருந்தாலும் ஜூலிக்கு ருத்ரா பற்றிய தனிபட்ட விடையங்கள் எதுவும் தெரியாது. இதுவரை தன்னை பற்றி பெரிதாய் கூறாத ருத்ரா ஒரு ஆடவன் உடன் வண்டியில் செல்வதை நினைத்து யோசித்தாலும்

அவளின் மனம் ஶ்ரீயை எச்சரிக்கை செய்ய வேண்டும் என உணர்த்தியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. எவன்டா அது🤔🤔🤔 சூப்பர் டா ❤️❤️ இன்னைக்கு ஜூலிக்கு தான் நிறைய பல்ப் கொடுத்து இருக்க 😁😁 பாவம்ல அந்த பிள்ளை பாத்து ethaachum பண்ணி விடு daarlu ❤️❤️

    2. பாவம் ஜூலி எவ்வளவு ஆசையா தனக்கு தான் அவ்வளவும் வாங்கி இருக்கான் என்று நினைத்தாள் அவளை ஒரே ஒரு சாக்லேட் கொடுத்து ஏமாத்திட்டான்?