Loading

கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல் – 2

லேப் முடிந்து அனைவரும் இடைவெளியில் வெளியே வந்துக் கொண்டு இருக்க ஸ்ரீகாந்த் வெளியே கிரவுண்டில் அமர்ந்து இருந்தவன் அவன் வகுப்பிற்கு வந்து இருந்த பெண்ணை பார்க்க ஆர்வமாய் எழுந்து நின்றான். இந்த மூன்று மணி நேரம் வெளியே மரத்தடியில் படுத்திருந்தவன் மனதை அந்த பெண்ணவளே ஆட்கொண்டு இருந்தாள். படுத்து காலாட்டிக் கொண்டு இருந்தவன் தனக்கு தானே சிரித்துக் கொண்டான். அவளின் பட படைக்கும் விழிகள் அவனின் மனதை படபடக்க வைத்தது. மணி அடித்ததும் டான் என்று எழுந்து அமர்ந்தவன் அவளின் வரவிற்காக காத்திருந்தான். ஒவ்வொருவராய் வந்துக் கொண்டு இருக்க அவன் அவளை தேடிக் கொண்டு இருந்தான். ஆனால் கரடி போல் ராஜேஷ் வந்து அவன் முன்னே மறைத்துக் கொண்டான்.

ஸ்ரீ, “டேய் நகர்ந்து தொலை டா..” என அவனை தள்ளி விட பயங்கரமாய் முறைத்தான் ராஜேஷ். “ஏன்டா என் கிட்ட அங்க அட்டெண்டன்ஸ் முக்கியம் இன்டர்னல்ஸ்ன்னு பேசிட்டு அங்க பல்ல காட்டிட்டு நிக்குற. என்ன டா ஆச்சு உனக்கு?”. அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் பல்லை இளித்துக் கொண்டு அந்த புதியவளை பார்த்தான். அவளோ பேக்கை ஒரு பக்கமாய் மாட்டிக் கொண்டு நடந்து வர அவள் கூட அவன் வகுப்பை சேர்ந்த இன்னொருவன் நடந்து வந்தான்.

“ஹாய். நான் கார்த்திக். உன் கிளாஸ் தான்.” என பேசியபடியே அவளுடன் நடந்தான் கார்த்திக். சிரித்தாள் குழி விழும் கன்னம். கள்ளச் சிரிப்பிலே கன்னிகளை மயக்கி விடுவான். 

“ஹாய்” என்று மெல்லிய குரலில் தயக்கத்துடன் கூறினாள். அவள் கையில் இருந்த ரெண்டு ரெக்கார்ட் நோட்டை வாங்கியவன், “உன் பேரு உன்ன மாதிரியே அழகா இருக்கு.” என்று கூற அவனை அழுத்தமாய் பார்த்தாள். 

“சரி மா தாயே அப்படி பாக்காத.. சும்மா சொன்னேன். ஆமா காலேஜ் ஆரம்பிச்சி ஒரு மாசம் கழிச்சி ஜாயின் பண்ணி இருக்க. அடுத்த வாரம் இன்டர்னல்ஸ் எக்ஸாம் படிச்சிருவியா?” சந்தேகமாய் கேட்டான் கார்த்திக். அதற்கு மண்டையை ஆட்டினாள். 

“என்ன ரொம்ப அமைதியா இருக்க? இந்த காலத்துல இப்படி ஒரு அமைதியான பொண்ண பாக்கவே முடியாது”.

“அதான் என்ன பாத்துட்டில..” என வெடுக்கென்று கேட்டவள் அவனிடம் இருந்து நோட்டை பிடுங்கிக் கொண்டு வேகமாய் அவளின் வகுப்பை நோக்கி நடந்தாள். 

“ம்ம்.. நம்ம நினைச்ச மாதிரி இல்ல.. கியூடா இருக்காளே” என்று நினைத்து சிரித்துக் கொண்டு அவள் பின்னே நடந்தான் கார்த்திக். அவனை அறியாமலே அவளின் செயலை ரசித்தான். இதனை சற்று தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த ஸ்ரீக்கு காதில் இருந்து புகை வராத குறையாக இருந்தது. ராஜேஷ் பேசுவது எதுவுமே அவன் காதில் விழவில்லை. அவர்கள் இருவரும் பேசுவதை மனதில் சொல்ல முடியாத உணர்வுடன் பார்த்துக் கொண்டு இருந்தவன் சட்டென்று அஸ பக்கம் திரும்பி அவன் சட்டையை கொத்தாக பிடித்தான்.

“ஏண்டா.. ஏன்.. அவன் மட்டும் ஏன் இப்படி இருக்கான். நம்ம கிளாஸ்ல மத்த பொண்ணுங்க கூட பேசுறது பத்தாதா.. புதுசா வந்த பொண்ண கூட விட்டு வைக்க மாட்டிங்குறான்” என காட்டு கத்தலாய் கத்த ராஜேஷ் முதலில் புரியாமல் பார்த்தான். புதிதாய் வந்தவள் என்று சொன்னதும் தான் அவனுக்கு நிலைமை புரிந்தது.

“புரிஞ்சி போச்சு டா.. டேய்.. என்ன நீ அந்த புது பொண்ணுக்கு ரூட்டு விடறியா? என்ன மச்சி சைட்டா..” நக்கலாய் கேட்டான். அதற்கு மறுப்பாக தலை அசைத்தான் ஸ்ரீ. “இல்ல.. எனக்கு அவளை புடிச்சி இருக்கு..” என உறுதியாய் கூற அஸ்வின் அதிர்ந்தான். இதுவரை இருவரும் சேர்ந்து ஒன்றாய் நிறைய பெண்களை சைட் அடித்து இருக்கிறார்கள். அழகான பூக்களை பார்த்து ரசிப்பது போல் பார்த்து விட்டு கடந்து விடுவார்கள். ஆனால் ஸ்ரீ உறுதியாய் இப்படி சொல்வது அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. 

“என்ன டா சொல்ற?” என வாயை பிளந்தான் ராஜேஷ்.

“எனக்கு அவளை பிடிச்சி இருக்கு டா.. இதுக்கு மேல கேக்காத” என கோவத்துடன் கூறி பையை மாட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். காரணமே இல்லாமல் அவனுள் கோவம் வந்தது. 

“டேய் டேய் நில்லு டா.. விட்டுட்டு கிளாஸ் போனா அந்த குட்டி சாத்தான் திட்டுவா டா” என்று ஸ்ரீகாந்த் பின்னே ஓடினான் ராஜேஷ். அவனுக்கு அப்போது தான் ஜூலி நியாபகம் வந்தது.

ஸ்ரீ, “அவ எங்க டா?”. அஸ்வின், “அவ காலைல சாப்புடலன்னு கேண்டீன் போய் இருக்கா” என்று அவன் கூறியதும் இருவரும் அங்கு சென்றார்கள். பொங்கலும் சாம்பாரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவள் முன்பு இருவரும் அமர்ந்தனர். ஸ்ரீ முக மாற்றத்தை வைத்தே ஏதோ சரி இல்லை என்று கண்டுக் கொண்டாள்.

ஜூலி, “ட்ரில் மாஸ்ட்டருக்கு என்னவாம்.. குரங்கு மாதிரி மூஞ்சிய வச்சிட்டு இருக்கான்” என சாப்பிட்டுக் கொண்டே கேட்டவளை முறைத்தான் ஸ்ரீ. 

ராஜேஷ், “நம்ப கிளாஸ்ல இன்னிக்கு புது பொண்ணு சேர்ந்தால.. சாருக்கு அவளை புடிச்சி இருக்காம்” என்று ஏற்ற இறக்கத்துடன் கூறினான். நிஜமாவா என்பது போல் பார்த்தாள் ஜூலி. அதற்கு மண்டையை ஆட்டினான். 

ஜூலி, “அதுக்கு ஏன் டா உர்ருன்னு இருக்க?” என கேட்டவள் அதற்கான காரணத்தையும் ராஜேஷிடமே எதிர்பார்த்தாள். அவனோ தோளை குலுக்கினான்.

ஸ்ரீ, “இந்த கார்த்தி இருக்கான்ல.. அவன் அந்த பொண்ணையும் விட்டு வைக்கலை.. அவ கூடவும் பேசிட்டே போனான்” என்று கடுகடுத்தான்.

ஜூலி, “பேசிட்டு தானே டா போனான்.. அதுக்கு ஏன் டா சாம்பார் அண்டா விட சூடா இருக்க.” என்று கேலி செய்தாள்.

ஸ்ரீ, “ம்ச.. உனக்கு சொன்னா புரியாது. அவன் மட்டும் எப்படி எல்லா பொண்ணுங்க கிட்டயும் பேசி பழகிடுரான்னு தெரியலை.” என்று கூறியவனுக்கு எங்கே அவள் தன்னுடன் பேசாமல் இருந்திடுவாலோ என்று சிறு பிள்ளையாய் பயந்தான்.

ஜூலி, “உலராத டா.. அவன் பிரின்ட்லி டைப்ன்னு எல்லாருக்கும் தெரியும். அவன் பொண்ணுங்க கூட தான் பேசுவான்னு இல்ல” என்றாள்.

ராஜேஷ், “இப்போ மேடம் எதுக்கு அவனுக்கு வக்காலத்து வாங்குறிங்க?” என நக்கலாய் கேட்டான்.

ஜூலி, “மூஞ்ச பேத்துருவேன்.. அவன் என் கிட்டவும் ஆரம்பத்துல பேசுனான். ஒருத்தரை ஜட்ஜ் பண்ண கூடாதுன்னு சொன்னேன். இதை விடு உனக்கு அந்த பொண்ண பத்தி தெரியனுமா? நிஜமா அவ மேல சீரியஸ்ஸா இருக்கியா?” என ஸ்ரீ பக்கம் திரும்பி அழுத்தமாய் கேட்டாள். 

ஸ்ரீ. “எனக்கு அவளை புடிச்சி இருக்கு அவ்ளோதான். ஆனா இது மத்த சைட் மாதிரி இல்ல. உள்ளுக்குள்ள..” என்று அவன் ஆரம்பிக்கும் முன்னே இருவரும் இடத்தை விட்டு எழுந்து இருந்தார்கள். 

ஸ்ரீ, “ஏய் எங்க போறீங்க?” என்று கேட்டவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.

ஜூலி, “எப்பா சாமி.. உன் பீலிங்க்ஸ் ஓட்டுற அளவு பிரேக் உனக்கு குடுக்கல. பெல் அடிச்சது கூட காதுல விளாம மிதப்புல இருக்க.. வரியா அடுத்த கிளாஸ் போவோம்.” என்றவளை பார்த்து அசடு வழிந்தான் ஸ்ரீ. பையை மாட்டிக் கொண்டவன் அவர்களுடன் நடந்தான்.

ஸ்ரீ, “ஆமா குட்டி பிசாசு.. நீ பொண்ணுங்க பக்கம் தானே உக்காந்த அவ கிட்ட பேசுனியா? அவ பேரு என்ன?” என்று ஆர்வமாய் கேட்டான் உடனே ராஜேஷும் ஜூலியும் பிரேக் போட்டு நின்றார்கள்.

அஸ்வின், “அப்போ பேரு கூட தெரியாம தான் நீ பேசிட்டு திரியுரியா?” என அதிர்வுடன் கேட்டான். ஸ்ரீ, “நான் தான் வெளிய போயிட்டேனே எப்படி எனக்கு தெரியும்?” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டான்.

ஜூலி, “மொசரக்கட்ட.. நீ பல்ல காட்டிட்டு நின்ன அப்போவே அவ பேர சொல்லி இன்றோ குடுத்தா. அதை கூட காதுல வாங்காம நின்னுட்டு இருந்து இருக்க” என்று காரி துப்பினால் ஜூலி. ஸ்ரீக்கு அதிர்வாக இருந்தது. அந்த பெண் கிளாஸ் முன்னே பெயர் சொன்னதை கூட கவனிக்காமல் இருந்து இருக்கிறோமே என்று நினைத்து தன்னையே திட்டிக் கொண்டான். அவன் மேலும் பேசுவதற்கு முன்பு அவனின் போன் அடித்தது. Ncc சார் அவனை உடனே அவரை பார்க்குமாறு அழைத்து இருந்தார்.

ஸ்ரீ, “ச்சே.. எல்லாம் என் நேரம்.. அந்த பொண்ண கிளாஸ்ல பாக்கலாம்ன்னு பாத்தா விட மாட்டானுங்க போலையே.. நான் சாரை பாக்க போறேன்.. கிளாஸ்ல இன்போர்ம் பன்னிரு” என்று கூறி ஓடினான் ஸ்ரீ. 

ஜூலி, “ச்சே இவன மாதிரி நானும் எதுலயாவது சேர்ந்து இருக்கலாம் ஜாலியா கட்டடிச்சிட்டு சுத்துவேன்” என்று வருத்தப்பட்டாள்.

ராஜேஷ், “அதுக்கு கஷ்ட்டப்படனும், வேலைபாக்கணும்.. உனக்கு அதலாம் வராது” என்று அசிங்கப்படுத்த அவனை அடித்து விட்டு கிளாஸ்க்கு ஓடினாள் ஜூலி. 

அங்கு NCC சாரை பார்க்க சென்ற ஸ்ரீ முன்பு அவனின் சார் அவனிடம் முக்கியமாய் ஒரு விடையத்தை பற்றி பேச வேண்டும் என்று அமர வைத்து இருந்தார். 

சார், “சாரி ஸ்ரீ இந்த வருஷம் ஆர்மி ஸ்பெஷல் எக்ஸாம்க்கு உன்ன செலக்ட் பண்ண கூடாதுன்னு பாதர் சொல்லிட்டாரு. போன வருஷம் நடந்த பிரச்சனைனால அவரு கோவத்துல முடிவா சொல்லிட்டாரு. என்னால ஒன்னும் பண்ண முடியலை” என வருத்தத்துடன் கூறினார். அதில் ஸ்ரீ முகமும் வாடியது. ஆர்மியில் சேருவது தான் அவனின் லட்சியமே. சென்ற முறை கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டது தன் முட்டாள் தனம் தான் என எண்ணி பல நாட்கள் வருந்தி இருக்கிறான். இப்போது மீண்டும் அந்த வாய்ப்புக்காக ஏங்கி தவிக்கிறான்.

ஸ்ரீ, “எனக்கு புரியுது சார்.. ஆனா வேற வழியே இல்லையா?” என ஏக்கத்துடன் கேட்டான்.

சார், “நீ இந்த ரெண்டு வருஷம் நல்ல படியா படிச்சி முடி. இதை முடிச்சதும் நீ எக்ஸாம் எழுத நான் ஏதாவது ஏற்பாடு பண்றேன். உன்ன காலேஜ் மூலமா இனிமேல் அனுப்ப முடியாது.” என்று கூறிட சம்மதமாய் தலை அசைத்தான். இருந்தாலும் உள்ளுக்குள் அந்த வருத்தம் இருந்துக் கொண்டே இருந்தது. 

சார், “உன்ன மாதிரி ஒரு நல்ல சோல்ஜரை கண்டிப்பா நான் ஆர்மிக்கு அனுப்புவேன். நீ கவலைபடாத.. நான் இன்னொரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசவும் கூப்ட்டேன்.. ஸ்போர்ட்ஸ் டே இன்டர்னல்ஸ் முடிஞ்ச கையோட வருது. சோ நீ தான் எல்லா பொறுப்பையும் ஏத்துக்கணும்” என்று கூறினார். வழமையாய் அவனுக்கு இதில் பொறுப்பேத்துப்பது பிடிக்கும். ஆனால் இப்போது அவனுக்கு அலுப்பாய் இருந்தது.

ஸ்ரீ, “அப்போ என்னால கிளாஸ் அட்டென்ட் பண்ண முடியாது போலையே” என்று முனுமுனுக்க லேசாய் சிரித்தார் ncc சார்.

சார், “என்ன அதிசயமா கிளாஸ் அட்டென்ட் பண்றதை பத்தி பேசுற?” என்று கேட்டவரிடம் பதில் சொல்ல முடியாமல் முழித்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    8 Comments

    1. சாருக்கு class attend panna mudyalannu வருத்தம் இல்ல அவன் aala pakka mudyathungura வருத்தம் ❤️❤️ அடேய் நல்லா பண்ற டா நீ ❤️❤️

    2. அவன் கிளாஸ் அட்டென்ட் பண்றதுக்காக பேசல அவன் ஆள பாக்க முடியாதுன்னு வருத்தத்துல பேசிகிட்டு இருக்கான்

    3. அவன் கிளாஸ் அட்டென்ட் பண்ண போனா தானே அவன் தா சைட்டிங் க்கு தானே போறான். அவனும் பையன் தானே அவனுக்கு இருக்க தானே செய்யும் டாவ பாக்கணும் னு 😂😂😂.

      சூப்பர் டா மஹி. அடுத்த யூடி க்கு வைட்டிங் ❤️❤️.

    4. அய்யோ பாவம்… ஹீரோக்கு அஞ்சலை சென்ட் பண்றது என்ன போஸ்ட் பண்ணவே பயம் … அதவிட கேவலம் அய்யாவுக்கு to address ல பெயரே தெரியல … இந்த கூத்துல எப்ப இவன் காதோல் சொல்லி அவ அது ஏத்து இரண்டு பேரும் காதோல் பண்றது… ஆண்டவா…

      தலைவா பொறுமை பொறுமை… ஓவரா குஷி ஆகுறீங்க… ஆனா உங்களுக்கு கடவுள் உங்க காதோலிக்குற பொண்ண பாத்துட்டு இருக்க கூட வரம் தரல…

      எப்பா கார்த்தி… கார்த்திக் னு பெயர் வச்சா எல்லா பொண்ணு கிட்ட ம் பேசிடுறதா… எங்க காதோல் மன்னன் ஃபீல் பண்றான் ல… கொஞ்சம் ஒதுங்கி போப்பா…

      ஜூலி… நீ கொஞ்சம் இன்ட்ரஸ்டிங் அ இருக்க மா 😍😘😘

      கதை சூப்பர் க்கா… அடுத்த எபிக்கு வெயிட்டிங் 🩷