Loading

கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்-19

மிகப்பெரிய திருமண மண்டபம் விழாக்கோலம் கொண்டு காணப்பட்டது. சொந்தபந்தங்கள், நட்புக்கள் என அனைவரும் தங்களை அலங்கரித்துக் கொண்டு மண்டபத்தில் அங்கும் இங்கும் அமர்ந்து நடக்க இருக்கும் திருமணத்தை பார்க்கக் ஆவலாக காத்து இருந்தார்கள். கார்த்திக், ராஜேஷ் இருவரும் லேசான பதட்டத்துடனும், வருத்ததுடனும் நொடிக்கு ஒரு முறை போனை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். மணமகள் அறையில் அமர்ந்து இருந்த ருத்ரா முகம் வாடி இருந்தது. அருகே இருந்த ஜூலி அவளின் கைகளை ஆறுதலாய் பற்றினாள்.

 

“ஜூலி அவன் வந்துருவான்ல.. அதனால தான் நான் இங்க இருக்கேன்.” என கலக்கத்துடனே கேட்பவளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அவளும் அவன் ஒருவனை தானே எதிர் பார்த்து இருக்கிறாள். மூன்று வருடம் கடந்து விட்டது. இன்னும் அவனை பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஸ்ரீயின் அம்மாக்கு மட்டும் அவன் உடல் நலம் பற்றி அவ்வபோது அவன் பேசும் பொழுது தெரியும். 

 

“அக்கா அவன் கண்டிப்பா வந்துடுவான் கா.. சொந்த தங்கச்சி கல்யாணத்துக்கு வராம போவானா?” நேத்து ராத்திரி ட்ரைன் ஏறுறதுக்கு முன்ன கால் பண்ணான்.. இப்ப கண்டிப்பா வந்துருவான்” என்று மணப்பெண் அலங்காரத்தில் இருக்கும் அபி ஆறுதல் கூறினாள். ஆம் இன்று ஸ்ரீ தங்கை அபிக்கு தான் திருமணம். இந்த மூன்று வருடத்தில் நிறைய விடையங்கள் மாறி விட்டது. அனைவரும் நல்ல வேளையில் கை நிறைய சம்பாத்தியத்தில் இருக்கிறார்கள். ஜூலி கார்த்திக் காதலுக்கு வீட்டில் பச்சை கொடி காட்டுவதற்காக காத்து இருக்கிறார்கள். ருத்ரா ஸ்ரீக்காக காத்திருக்கிறாள். அவனை ஒரு முறை பார்த்து தன் காதலை கூறினாள் அவன் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை. அவளின் அப்பா அவள் திருமணத்தை பற்றி பேச முயலும் பொழுது எல்லாம் ஸ்ரீயை பார்த்து ஒரு முறையாவது காதலை சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். நிச்சயம் தனக்காய் வருவான் என்ற நம்பிக்கை மலை போல் இருந்தது. மூன்று வருடத்தில் ஆர்மியிலும் அவன் நிலையாக இருந்து இப்பொழுது நேரடியாய் திருமணத்திற்காக தன்னிடம் பேசுவான் என்று நம்பினாள். ஆனால் நேற்று வர வேண்டியவன் இன்னும் வரவில்லையே என்ற தவிப்பு. அவளின் காத்திருப்பை நீடித்த பின்னே சரியாய் முகுர்த்த நேரத்தில் மண்டபத்தை வந்து சேர்ந்தான் ஸ்ரீ. 

மூன்று வருடத்திற்கு முன்பு பார்த்ததுக்கும் இப்பொழுது பார்ப்பதற்கும் நிறைய மாற்றங்கள். வழித்து சவரம் செய்யப்பட்ட முகம். ஆர்மி கட், கட்டுமஸ்த்தான தேகம், முகத்தில் ஒரு கடுமை என பெரிய ஆடவனாக அவள் கண்ணிற்கு தோன்றினான் ஸ்ரீ. நண்பர்களை பார்த்ததுமே இயல்பாய் ஒரு புன்னகையை சிந்தினான். ஒருவர் இடத்தில் கூட சொல்லாமல் போன குற்ற உணர்வு அவனுக்கு கொஞ்சமும் இல்லை. முகம் மலர புன்னகைத்தான். வந்ததும் சொந்தபந்தங்கள், மற்றும் திருமண சடங்கில் மூழ்கிட நண்பர்களால் அவனிடம் பேச முடியவில்லை. திருமணம் எல்லாம் நல்லபடியாய் முடிந்த பின் தான் துறைக்கு அவர்களிடம் வர நேரம் கிடைத்தது. அவன் வந்ததுமே கார்த்திக்கும் ராஜேஷும் அவனை கட்டி அனைத்துக் கொண்டார்கள். ஸ்ரீ கண்களில் லேசான கண்ணீர் துளி. உணர்வுகளை சிறப்பாக கட்டுப்படுத்த கற்றுக் கொண்டான் போலும் அவன் கண்ணில் ஏக்கம், தவிப்பு, சோகம் என எதுவுமே ருத்ரா கண்ணிற்கு தெரியவில்லை. ஒரு நிமிடம் தாம் தான் சரியாக கவனிக்கவில்லையா என்று தோன்றியது. ஜூலியிடம் லேசாய் வம்பு வளர்த்தான். ஆனால் அதிலும் ஒட்டாத தன்மை ஒன்று அவர்களுக்கு தோன்றியது. நேராக ருத்ரா பக்கம் திரும்பிய ஸ்ரீ, “என்ன ருத்ரா எப்படி இருக்க?” என சாதாரணமாய் கேட்டிட தலை அசைத்தாள் ருத்ரா. அவனை பார்த்ததுமே நிறைய விடையங்களை பேச வேண்டும் காதலை கொட்டிட வேண்டும் என்று தவித்தவளுக்கு இப்பொழுது பேச்சே வரவில்லை. 

“என்ன பேசாம அமைதியா இருக்க? என்ன ஆச்சு?” இயல்பாய் சாதாரணமாய் அவன் கேட்பதே அவளுக்கு புதிதாய் இருந்தது. அவளிடம் மட்டும் அவன் பேசும் பொழுது இருக்கும் கூச்சம் இப்பொழுது இல்லையே என்று தோன்றியது அவளுக்கு. 

“இல்ல.. ஒன்னும் இல்ல.. நீ எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன்..”

“எத்தன மாச லீவ்க்கு வந்து இருக்க?”

“மாசமா? ஹஹா.. இன்னும் ரெண்டு நாள்ல நான் திரும்ப போய்டுவேன்.. தங்கச்சி கல்யாணத்துக்கு தான் வந்தேன்” 

“தங்கச்சி கல்யானத்துக்காகவா? அப்போ வேற எதுக்காகவும் இல்லையா?” என ஏக்க விழிகளுடன் அவனை பார்த்து கேட்டாள் ருத்ரா. மற்றவர்களுக்கும் சூழல் புரியவில்லை. அவனுக்காக தான் ருத்ரா காத்து இருக்கிறாள் என தெரியும்.. ஸ்ரீ ஏன் இப்படி திடீரென்று கூறுகிறான் என அவர்களுக்கு புரியவில்லை.

“வேற எதுக்காக?”

“ஸ்ரீ உன் கிட்ட தனியா பேசணும்” என ருத்ரா கூற அவள் என்ன கூற போகிறாள் என அறிந்தவன் சம்மதமாய் தலை அசைத்து ஒரு அறை உள்ளே நுழைந்தான். பின்னே வந்த ருத்ரா, “ஸ்ரீ நான் நேரடியா விசயத்துக்கு வரேன்.. நான் உன்ன லவ் பண்றேன்.. காலேஜ்ல இருந்தே எனக்கு உன்ன புடிக்கும்.. உனக்காக தான் நான் மூணு வருஷம் வெயிட் பண்றேன்.. இன்னும் எத்தனை வருசம்னாலும் சொல்லு நான் வெயிட் பண்றேன்.. பட் ப்ளீஸ் உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு..” என கெஞ்சலுடன் கேட்டாள். ஸ்ரீ கண்ணில் அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது. தன்னை சமன்படுத்திக் கொண்டவன், “அது வந்து ருத்ரா.. உண்மைய சொல்லனும்ன்னா எனக்கும் உன்ன ரொம்ப புடிக்கும்.. காலேஜ் படிக்கும் போது உன் மேல எனக்கு ஒரு கிரஷ்.. ஆனா அதை தாண்டி லவ்வுன்னு கேட்டா.. சாரி ருத்ரா.. எனக்கு அந்த மாதிரி நினைப்பு இல்ல.. மேபி இங்கயே உங்க கூடவே இருந்து இருந்தா அது லவ்வா மாறி இருக்குமோ என்னவோ.. எனக்கு லவ்ல இன்ட்ரஸ்ட் இல்ல. சாரி ருத்ரா.. உன்ன காயப்படுத்தனும்ன்னு நான் இதை சொல்லலை.. எனக்கே கஷ்ட்டமா இருக்கு உன்ன இந்த அளவுக்கு பாதிச்சி இருக்கேன்னு நினைக்கவே..” தலையை குனிந்துக் கொண்டு குற்ற உணர்வுடன் ஸ்ரீ கூற அப்படியே உறைந்தாள் ருத்ரா. அவன் கண்ணில் பார்த்த காதல்? தனக்கான தவிப்பு? இவை எல்லாம் பொய்யா? எப்படி காதல் இல்லை என்று சாதாரணமாய் கூறுகிறான்.. ஒரு வேலை தாம் தான் தவறாக எண்ணி விட்டோமா என்று நினைத்தவளுக்கு நடந்த அத்தனை நிகழ்வும் அவள் பாவித்த பிம்பங்கள் போல் தோன்றியது. 

கண்களில் திரண்டு வந்த கண்ணீரை அவள் துடைத்துக் கொள்ள ஸ்ரீ மனம் வருந்தினான். “ஹே சாரி ருத்ரா.. நான் உன்ன இந்த அளவுக்கு பாதிச்சி இருப்பேன்னு நினைக்கலை.. சாரி..” என கெஞ்சலுடன் கூறுபவனை பார்த்து மறுப்பாக தலை அசைத்த ருத்ரா,

“இல்ல.. சாரி. என் தப்பு தான்.. நான் தான் எல்லாத்தையும் தப்பா நினைச்சிட்டேன்” என்று கூறியவள் அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் விறுவிறுவென்று மண்டபத்தையே விட்டு ஓடினாள். அவள் அழுது கொண்டே ஓடிட கார்த்திக் அவள் பின்னே ஓட, ஜூலியும் ராஜேஷும் அந்த அறை உள்ளே நுழைந்தார்கள். ஸ்ரீ குற்ற உணர்வுடன் நிற்பதை பார்த்த ஜூலி, “என்ன டா ஆச்சு? என்ன சொன்ன அவ ஏன் அழுதுட்டே போறா?” அதில் தடுமாறிய ஸ்ரீ, “அது ருத்ரா என்ன லவ் பண்றாலாம்.. அவளே லவ்வை சொன்னா”

ராஜேஷ், “அதான் எனக்ளுக்கு தெரியுமே.. எதுக்கு அழுதுட்டே போறா?”

ஸ்ரீ, “அது எனக்கு அவ மேல லவ் இல்லன்னு சொன்னேன் அதான்” என்றிட இருவருமே பெரிதாய் அதிர்ந்தார்கள். ருத்ரா ஆட்டோ பிடித்து கிளம்பி இருக்க அவளிடம் பேச முடியாமல் திரும்பிய கார்த்திக் அங்கு நுழைந்தான். 

ஜூலி, “என்ன டா சொல்ற? அப்போ காலேஜ்ல பண்ணது”

“என்ன ஜூலி நீயும் இப்படி பேசுற? எனக்கு அவ மேல கிரஷ் இருந்தது உண்மை தான்.. ஆனா லவ் இல்ல.. இப்போ அதுவும் சுத்தமா இல்ல” என்று ஸ்ரீ முடிக்க அவன் கன்னத்திலே பளார் என்று அறைந்து இருந்தாள் ஜூலி. “நடிக்காத டா.. அவ மேல லவ் இல்லாம தான் எங்க யாரையும் அவ கிட்ட பக்கத்துலே நெருங்க விடாம இருந்தியோ.. லவ் இல்லாம தான் அவ பின்ன சுத்துனியா” சூடாக வார்த்தைகள் வர ஸ்ரீ தலையை குனிந்தான். “உன் கோவம் புரியுது ஜூலி.. ஆனா நான் உண்மையா லவ் பண்ணி இருந்தா இந்த மூணு வருஷம் கழிச்சி அவளை பார்த்ததுமே எனக்கு ஒரு ஹப்பினஸ் வந்து இருக்கணும்… ஆனா எனக்கு ஜஸ்ட் பிரண்ட்ஸ்சை பார்த்த சந்தோசம் தான் இருக்கு. அதை தாண்டி எனக்கு எந்த பீலிங்க்ஸ்யும் இல்ல.. அவ வெயிட் பண்ணான்னு பொய்யா எனக்கும் உன்ன புடிச்சி இருக்குன்னு சொல்ல சொல்றியா? கூடவே இருந்ததுனால அவ மேல இருந்த கிரஷ் அப்படி தெரிஞ்சி இருக்கலாம்.. இந்த மூணு வருசத்துல எனக்கு அவ மேல இருந்த கிரஷ் இப்போ இல்ல..” என தன் மன நிலையை விவரிக்க முயன்றான் ஸ்ரீ. ஆனால் இம்முறை கார்த்திக் அவனை பளார் என்று அறைந்து இருந்தான். 

“உன்ன எல்லாம்.. ச்சே.. அவ எவ்ளோ லவ் பண்றா தெரியுமா? அவளுக்காக அவ கூட இருக்கணும், அவ கவனம் உன் மேல வரணும்ன்னு என்ன என்னவோ பண்ணிட்டு இப்போ ஒண்ணுமே இல்லன்னு சொல்ற.. ச்சே.. சாடிஸ்ட் டா நீ.. ஜூலி நான் கிளம்புறேன் உன் பிரென்ட் கிட்ட பேசணும்ன்னா பேசிட்டு வா” என கடும் கோவத்தில் கூறிய கார்த்திக் அங்கு இருந்து வெளியேறினான். ஸ்ரீ இப்படி எல்லாம் மாறுவான் என்று அவன் எதிர் பார்க்கவே இல்லை. கோவத்தில் பல்லை நரநரவென்று கடித்தான். ஸ்ரீயை இதற்கு மேலும் திட்ட முடியாமல் ஜூலியும் அங்கு இருந்து வெளியேற ராஜேஷ் ஸ்ரீயை நெருங்கினான்.

“அட்லீஸ்ட் இப்போவாச்சும் உண்மையா இருந்தியே.. எனக்கு உன்ன பத்தி தெரியும்.. சரி விடு.. யாரும் கஷ்ட்டபடாம இருந்தா சரி தான்” என ஸ்ரீ தோளில் ஆறுதலாய் தட்டி விட்டு அங்கு இருந்து வெளியேறினான். அவனுக்கு ஸ்ரீ மீது சிறிது கோவம் இருந்தது. வேண்டாம் என்று நினைத்தவன் எதற்காக ஆரம்பத்தில் இருந்தே நம்பிக்கையை குடுத்து இருக்க வேண்டும் என்று தோன்றியது. அனைவரும் சென்று விட ஸ்ரீ கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. ருத்ராவை அதிகப்படியாய் காயப்படுத்தி விட்டோமோ என்ற வலி அவனை கொஞ்சம் கொஞ்சமாய் தின்றது.         

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. ஸ்ரீ ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறான்??
      ஒருவேளை அனுப்பி அவங்க அம்மா திட்டினதுல மிலிட்டரி வாழ்க்கையில ருத்ரா பாதிக்கப்படுவானு நினைக்கிறானோ??