மருத்துவமனைக்கு வந்து பாரியிடம் பேசிவிட்டு ஆழும் ஷிவானியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியவிட்டு ஷிவானி இருக்கும் அறைக்குள் வந்த, இருவரும் சிறுமியின் விழிப்புக்காக காத்து கொண்டிருந்தனர்.
அவர்களை, அதிகம் நேரம் காத்திருக்க வைக்காத சிறுமியவளும் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து கண் விழித்து தான் இருக்கும் அறையை சுற்றி பார்வையிட்டவளின் எண்ணமோ நடந்த நிகழ்வை நினைவு படுத்தியதால் பயந்த ஷிவானியோ தன் உடலை ஒடுக்கி நடங்கியவாறு அழ தொடங்கிவிட்டாள்.
அவள் நிலையை கண்ட புகழோ “ஷிவானி குட்டி.. உனக்கு ஒன்னும் இல்லடா… இங்க பாரு நீ அழுறது பாத்து நிக்கி அக்காவும் அழுறாங்க.. நீ குட் கேர்ள்ல.. அழ கூடாது” என்று பேசியவாறே அருகில் செல்ல,
அவன் தன் அருகில் வருவதை கண்ட சிறுமியின் கண்ணில் புகழ் தென்படவில்லை, அந்த அரக்கன் தான் மறுபடியும் தன்னை ஏதோ செய்ய வருகிறது போல் தெரிந்ததால் பயந்த சிறுமியோ “என்ன விட்ருங்க.. பிளீஸ்.. விட்ருங்க.. என்ன ஒன்னும் பண்ணிடாதீங்க” என்று மாறி மாறி கூறி கதறியவாறே தன் அருகில் இருந்த பொருள்களை எல்லாம் தூக்கி அவன்மீது வீச, அதில் விழுந்த அடியெல்லாம் வாங்கியவனோ
“ஷிவானி குட்டி.. நான் உன் புகழ் மாமாடா.. இங்க பாரு மாமாவ பாரு.. உனக்கு உன் புகழ் மாமாவ பிடிக்கும் தான.. மாமா பாத்து பயப்படலாமா கூடாது தான.. அப்போ மாமாகிட்ட வாங்க” என்று பேசியவாறே அருகில் அமர்ந்து,
அவள் தலையை வருடிவிட்டவனை கண்டு முதலில் பயந்து ஒடுங்க பிறகு, அவனின் வருடலில் நிதனமான சிறுமியின் கண்களுக்கு புகழ் தெரிந்த நொடி “புகழ் மாமா..” என்று கட்டிக்கொண்டு அழுதுவிட்டாள்.
அவளை அணைத்தவாறே “ஒன்னும் இல்லைடா.. அதான் நானும் நிக்கி அக்காவும் உன்கூட தான இருக்கோம்.. அப்போ எதுக்கு அழுகுறீங்க”
“மா..மா.. என..க்கு உடம்பு..லாம் ஏதோ மாதிரி பண்ணு..து.. என்னால முடி..யல ரொம்ப பெ..யினா இருக்கு மாமா”
“ஒன்னும் இல்லடா.. அக்கா உனக்கு ஊசி போடுவாங்க.. அதுல வலியெல்லாம் பறந்து போயிடும்” என்று கூறி முடிக்கவும் நிக்கியோ ஏற்கனவே, அவள் கையில் ஏறி கொண்டிருக்கும் குளுக்கோஸ் டிரிப்ஸில் ஊசி மூலம் அவளுக்கான மருந்தை கலக்க, அந்த மருந்து உடலில் இறங்க இறங்க சிறுமியவள், அவனின் மார்பில் சாய்ந்தவாறே உறங்கி போனாள்.
அவளுக்கு விழிப்பு வரும் போதேல்லாம் புகழே அவளை சமாதானம் பேசுவது சாப்பிட வைப்பது என்று முழு நேரமும் நிக்கியுடன் சேர்ந்து அவளை பார்த்து கொண்டான்.
இப்படியே ரெண்டு நாட்கள் புகழின் பேசியிலே சிறுமியவளின் பயம் சற்று குறைந்ததால் மற்ற நால்வரிடம் கூட தயங்காமல் பேச தொடங்கிவிட்டாள்.
இரண்டு நாட்கள் அவளையே தொடர்ந்து பார்த்து கொண்டிருந்தவன் மூன்றாம் நாளும் மதியம் பேசியவாறே சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தவனிடம் “மாமா.. இன்னும் எத்தன நாள் இங்கேயே இருக்கணும்.. இங்க இருக்க நல்லாவே இல்ல.. போர் அடிக்குது.. நம்ம உங்க வீட்டுக்கு போலாமா”
“அய்யோ.. என் ஷிவானி குட்டிக்கு இங்க இருக்க பிடிக்கலையா.. அப்போ நாளைக்கே மாமா வீட்டுக்கு போயிடலாம்.. அங்க ஜாலியா இருக்கலாம்”
“நிஜமாவா.. அப்போ என்கூட நிக்கி அக்காவும் சாரு அக்காவும் வருவாங்களா”
அதை கேட்ட ஆடவனோ பெண்ணவளை நோக்க, அவன் பார்வையின் அர்த்தம் புரிந்த பெண்ணவளோ “அதுக்கென்ன ஷிவானி குட்டி.. உனக்கு எவ்வளவு நாள் அங்க இருக்கணும்ன்னு தோணுதோ அங்கையே இருக்கலாம் எல்லாரும் உன்கூடவே தான் இருப்போம்.. ஹேப்பியா இரு” என்று கூறி சிறுமியின் நெற்றியில் இதழ் பதித்தாள்.
அவன் கூறியது போல் மறுநாள், அவளை அழைத்து செல்ல பாரி ரஞ்சி மற்றும் அவள் பெற்றோரிடமும் பேசி அனுமதி வாங்கியவன், மறுநாளே சிறுமியவளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். அவள் ஆசை போல் நிக்கியும் சாருவும் கூடவே வந்து அவன் வீட்டியிலே தங்கிவிட்டார்கள்.
இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க சிறுமியை நடந்த நிகழ்வை பற்றி நொடியும் யோசிக்க விடாமல் மாறி மாறி அவளிடம் பேசிக்கொடுத்து, அவளின் மனநிலையை மாற்றியிருந்தனர், இதனால சிறுமியவளுடன் சேர்ந்து அனைவரும் அந்த நிகழ்வை மறந்து பழைய நிலமைக்கு வந்திருந்தனர்.
வழக்கம் போல் இரவு யாராவது இருவரும் மட்டும் அவளுடன் சேர்ந்து உறங்குவார்கள். இன்றோ சாருவுடன் சேர்ந்து ரஞ்சியிருந்ததால், ஆடவர்கள் இருவரும் ஒரே அறையில் இருக்க, நிக்கியோ வேறுவழியின்றி புகழுடன் அவன் அறைக்கு வந்து குளியல் அறையில் புகுந்து தன்னை சுத்தபடுத்தி வேறு உடையில் வந்தவள் திறன்பேசியை நோட்டமிட்டு கொண்டிருப்பவனின் எதிரே அமர்ந்து அவனையே பார்த்து கொண்டிருக்க,
அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்தவனோ புருவம் உயர்த்தி “என்ன” என்று வினவ,
அவனை நெருங்கி, அவன் கரத்தை பற்றியவளோ “சத்தியமா நீ என் வாழ்க்கைல வரலன்னா.. ஷிவானி குட்டிய எப்படி இவ்வளவு தூரம் வெளிய கொண்டு வந்திருப்பேனான்னு எனக்கு தெரியல.. இனி அவ பழைய மாதிரி பட்டாம் பூச்சியா பறக்க ஆரம்பிச்சிடுவான்னு எனக்கு நம்பிக்கை வந்திருச்சு.. அதுக்கு காரணம் நீ தான்.. தேங்க்ஸ் அ லாட்.. இன்னொரு விஷயம் சொல்லவா.. ஷிவானிவே எவ்வளவு அழகா பாத்துகிட்ட… உனக்கு பிறக்க போற குழந்தைங்க ரொம்ப லக்கிடா”
“என்னடி பேச்சு வாக்குல என் குழந்தைன்னு பிரிச்சி பேசுற.. நம்ம குழந்தைன்னு சொல்லுடி”
“நீ திருந்தவே மாட்டேல.. உன்ன போய் நல்லவன்னு நினைச்சி பேசினேன் பாரு.. போடா” என்று கூறி முறைத்தவாறே அவன் முதுகில் அடிபோட்டு போர்வையால் இழுத்து மூடி படுத்து கொண்டாள்.
அவள் செயலை கண்டு சிரித்தவாறே சோஃபாவில் படுத்து உறங்கிவிட்டான்.
மறுநாள் காலையில் எழுந்த சாருவோ அனைவருக்கும் தேனீர் போட்டு கொடுத்துவிட்டு நிக்கியிடம் “ஏய் நிக்கி.. இத அவர்கிட்டயும் அண்ணாகிட்டயும் கொடுத்துறேன்”
“எவர்கிட்ட..”
“வேலன்கிட்ட டி..”
“ஏன்.. நீங்க கொடுத்தா என்ன செய்யுது”
“இப்போ.. கொண்டு போய் கொடுப்பியா.. மாட்டியா”
“முடியாது.. அவர் குடிக்கணும்ன்னு நினைச்சா.. நீ கொண்டு போய் கொடு.. இன்னும் எத்தன நாளைக்கு தான் மனசுல உள்ள காதல சொல்லாம இருக்க போற”
“என்னால.. அவரு முகத்த பாக்க முடியலடி.. ரொம்ப கில்டியா இருக்கு”
“ஏய்.. நீ எதுவுமே வேணும்ன்னு பண்ணல.. அப்போ இருந்த உன்னோட சிச்சுவேஷன் அப்படி.. அதுனால கண்டிப்பா அண்ணா உன்ன புரிஞ்சிப்பாரு.. இதுக்கு மேல நான் சொல்லுறதுக்கு எதுவும் இல்ல.. அப்புறம் உன் இஷ்டம்” என்று கூற, அதை கேட்டு வேறுவழியின்றி தேனீருடன் வேலன் இருக்கும் இடத்தை நோக்கி வந்தாள்.
இங்கு வேலனுடன் சில வழக்குகளை பற்றி பேசி முடித்தவன் “மச்சான்.. மறுபடியும் சாருகிட்ட பேசுனீயா.. இல்லையா”
“நான் எதுவும் பேசல.. நான் அவளுக்கு என்மேல நம்பிக்கை வருற வரைக்கும் வெயிட் பண்ணுவேன்டா”
“அன்னைக்கு அவ உன்கிட்ட பேசுனத நினைச்சி பீல் பண்ணி சொல்ல தயங்குறாளோ.. என்னவோ… அதுனால இப்படி கண்ணாமூச்சி விளையாட்டி இருக்காம நீயாவது சொல்லி தொலயன்டா”
அதை கேட்டு சிரித்தவனை கண்டவன் “டேய் வெண்ண.. இப்படி பைத்தியம் மாதிரி என்னத்துக்கு சிரிகிரியாம்”
“உன் தங்கச்சிக்கு விளையாடுறது எல்லாம் புதுசு இல்ல… போன் நம்பர் தரவ டாஸ்க்லாம் கொடுத்தா தெரியுமா” என்று கூறியவனோ அவள் அவனுடன் விளையாடிய விளையாட்டை கூற
“கொஞ்சம் விளங்குற மாதிரி சொல்லுறீயா”
“8052464565, இதுல பர்ஸ்ட் பைவ் நம்பர் நாங்க மீட் பண்ண டேட் மந்த் அண்ட் இயர், நெக்ஸ்ட் போர் நம்பர் என்னோட பைக் நம்பர் பிளேட்.. அது தான் நான் அதிகமா யூஸ் பண்ணி அவளுக்கு தெரிஞ்சுது.. லாஸ்ட் நம்பர் ரெண்டு ரெண்டு சாய்ஸ்ல இருக்கிற ஒரே நம்பர் 5.. தட்ஸ் சால்வ்”
“இன்டர்ஸ்டிங்.. அப்போ நீ, அவ பெர்பார்மன்ஸ்ல சிக்கிட்டேன்னு சொல்லு”
“அப்படி தான் வச்சுக்கோயேன்” என்று கூறிமுடிக்கவும் “அண்ணா..” என்று அழைத்தவாறே சாரு புகழின் அருகில் வந்து தேனீரை நீட்டி “எடுத்துக்கோடா அண்ணா” என்று கூற,
அதை கேட்டு எடுத்தவன் வேலனிடம் கண்ணை காட்டிவிட்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியே சென்றான்.
அவன் சென்றதும் குரலை செருமிக்கொண்டு வேலன் அருகில் வந்தவளோ “எடுத்துக்கோங்க” என்று கூற,
அவளை பார்த்தவாறே தேனீரை எடுத்து ஒரு மிடர் குடித்தவன் “மதி.. இன்னும் என்மேல உனக்கு நம்பிக்க வரலயா.. இல்ல காதலே வரலேயா”
அதை கேட்டு நொடியும் தாமதிக்காமல் தன்னவனை அணைத்தவளோ “சாரி வேலா.. அன்னைக்கு நான் உங்கள ஹர்ட் பண்ணி பேசினதுல.. நீங்க என்ன வெறுத்துட்டீங்களோன்னு நினைச்சி இத்தன நாள்.. உங்ககிட்ட என் காதல எப்படி சொல்லன்னு தயங்கிட்டே இருந்தேன்”
“நீ என்னோட மதிடி.. உன்ன எப்படி நான் வெறுப்பேன்.. வெறுக்கவும் முடியாதுடி”
“சாரி வேலா.. உங்கள நான் ரொம்பவே ஹர்ட் பண்ணிட்டேன்.. எல்லாத்துக்கும் ரியலி சாரி”
“இப்போ கூட சொல்ல வேண்டியது சொல்லாம.. தேவையில்லாதது சொல்லி டைம் வேஸ்ட் பண்றமா”
“ஐ லவ் யூ வேலா.. ஐ லவ் யூ சோ மச்”
“ஐ லவ் யூ டூ டி மதி” என்று கூறி, அவள் நெற்றியில் இதழ் பதித்து, அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.
இன்று மருத்துவமனைக்கு சென்று வந்த நிக்கிக்கு புது எண்ணியிலிருந்து அழைப்பு வர ஏற்றவள் “ஹலோ”
“ஹலோ.. நான் சரணோட பிரெண்ட் பேசுறன்”
“ம் சொல்லுமா.. நான் அவ அக்காதான் பேசுறேன்”
“அக்கா சரண காணும்.. வழக்கமா ரெண்டும் பேரும் ஒன்னா தான் வருவோம்.. ஆனா இன்னைக்கு லேப்ல கொஞ்சம் வொர்க் நான் வர பத்து நிமிஷமாகும்.. பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணு நான் ஸ்ட்ரைட்டா.. அங்க வந்திருவேன்னு சொன்னா.. ஆனா ரொம்ப நேரமாகியும் அவ வரலனதும் அவளுக்கு கால் பண்ணினா கால் ரீச்சாகல.. அப்புறம் காலேஜ்ல லேப் சார்கிட்ட கால் பண்ணி கேட்டா அரைமணி நேரம் முன்னாடியே கிளம்பினதா சொன்னாரு..
இப்போ வரைக்கும் அவளுக்காக வெயிட் பண்றேன்.. ஆனா.. அவ இன்னும் வரவே இல்ல.. அதான் உங்களுக்கு இன்போர்ம் பண்ண கால் பண்ணின”
“சரி ஓகே.. நான் பாத்துக்குறேன்.. நீ பத்திரமா வீட்டுக்கு போ” என்று அழைப்பை துண்டித்துவிட்டு புகழை தேடி சென்றாள்.
அவனோ ஹாலில் அமர்ந்து அனைவரிடமும் பேசியவாறு இருக்க அவனை தேடி வந்த பெண்ணவளோ “புகழ்..” என்று இறுக்கி அணைத்து அழுதாள்.
அவளின் நிலை பதறியவன் “ஏய் பார்ட்னர்.. வாட் ஹப்பெண்ட்”
“சரணிய காணும்… இப்போ தான் அவ ப்ரெண்ட் கால் பண்ணி சொன்னா.. எனக்கு பயமா இருக்கு.. ஷிவானிக்கு நடந்த மாதிரி அவளுக்கும் எதாவது நடந்துடுமோன்னு”
“சரணிக்கு.. அந்த மாதிரி எதுவும் நடக்க விட மாட்டேன்.. பிலிவ் மீ” என்று கூறி யோசித்தவன் மூவரையும் அடைத்து வைத்த அறைக்கு செல்ல, அவன் பின்னேயே அனைவரும் சென்றனர்.
உள்ளே வந்தவன் ஒருவனின் வாயில் துப்பாக்கியை வைத்து அழுத்தியவாறே மற்றொருவனிடம் திறன்பேசியை கையில் கொடுத்தவன் “டேய்.. நீ யார்கிட்ட பேசுவியோ.. என்ன பண்ணவியோன்னு தெரியாது ஆனா.. இன்னைக்கு உன் பாஸ் எத்தன பொண்ணுங்கள கடத்தி இருக்கானங்குற லிஸ்ட் இப்போ அரமணி நேரத்துல வரணும்.. இல்லையா ஒருத்தனும் உயிரோட இருக்க மாட்டீங்க”
அதை கேட்டு யாருக்கோ அழைப்பு விடுத்தவனோ “டேய் குமாரு.. நான் ரவி பேசுறன்டா.. இன்னைக்கு தூக்குன பீஸ் லிஸ்ட் போட்டோவோட வேணும்டா.. உடனே அனுப்பு” என்று கூறி அழைப்பை துண்டித்த, மறுநிமிடம் அவன் கேட்ட தகவல் வந்ததும் திறன்பேசியை வாங்கி பார்த்த புகழோ “டேய்.. உங்க பாஸ் எப்படி இருப்பான்”
“எங்களுக்கு.. சத்தியமா தெரியாது.. நாங்க பொண்ணுங்கள கடத்தி ஒரு இடத்தில இறக்கினதும் அடுத்து எப்போ கடத்தனுமோ அப்போ பாஸ் கால் பண்ணுவாரு.. மறுபடியும் கடத்தி.. அதே இடத்தில இறக்கிட்டு வந்துருவோம் அப்புறம்.. அந்த பொண்ணுங்கள என்ன பண்ணுவாங்கன்னு கூட தெரியாது” என்று கூறி கொண்டிருக்க, அப்போது நிக்கியின் திறன்பேசி அலற அழைப்பை ஏற்றவள் வெளியே சென்று பேச சென்றாள்.
அவள் சென்றதும் அறையை கதவை அடைத்துவிட்டு அனைவருடனும் ஹாலில் அமர்ந்தவனோ யோசனையாக இருக்க, அழைப்பை பேசி முடித்து அருகில் வந்த நிக்கியோ அவள் தங்கையை மீட்க யோசனை சொல்ல, அதை கேட்டு அனைவரும் மறுப்பு தெரிவிக்க, புகழோ கோபத்துடன் தன் அறைக்கு சென்றுவிட்டான்.
தொடரும்…
– ஆனந்த மீரா
Evan da athu Mari Mari kadathurathu🙄