Loading

பாகம் – 16

தன் மீதிருந்த அவன் கையை உதறிவிட்டவளோ “இங்க பாரு அவ வருறதுக்குள்ள அண்ணாவ இங்கிருந்து கூட்டிட்டு கிளம்பு.. மறுபடி மறுபடியும் அதையே பேசுனா இன்னும் அவ மெண்டலி டிஸ்டர்ப்பாயிட்டா தான் இருப்பா.. இதுனால அவளுக்கு எதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு”

 

“பயப்படாத பார்ட்னர்… முத அவள.. இதுல இருந்து வெளிய கொண்டு வரணும்.. அது வேலனால மட்டும் தான் முடியும்” என்று கூறி முடிக்கவும், சாரு பூங்காவினுள் நுழைவதை கண்டவர்கள் அவள் கண்களுக்கு தெரியாத வண்ணம் மறைந்தவாறு இருந்தார்கள்.

 

உள்ளே வந்து அவர்கள் இருவரையும் பூங்கா முழுதும் சுற்றி தேடியவாறே இருந்த அவளின் கரம்பற்றிய வேலனோ “மதி” என்று மென்மையாக அழைக்க 

 

அவனின் பிடியிலிருந்து தன் கரத்தை எடுக்க முடியாமல் தவித்தவளோ “பிளீஸ் வேலன்.. கைய விடுங்க”

 

அதை கேட்டு கையை விடுவித்தவன் “எல்லாரும் உங்க அப்பா போல இருக்க மாட்டாங்க மதி.. நான் போலீஸ்ன்னு ஒரே காரணத்துக்காக உன் காதல எப்படி உன்னால தூக்கி போட முடியுது” 

 

“ம்.. நிக்கிகிட்ட எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சிக்கிட்டீங்க போல.. பட் அதுவும் நல்லது தான்..”

 

“நான் கேட்ட கேள்விக்கு.. இது பதில் இல்ல”

 

“ஒருவேள.. உங்க காதல ஏத்துக்கிட்டு கல்யாணம் பண்ணி சந்தோஷமா குழந்த கூட பெத்துகிட்டு வாழுறோம்ன்னு வைங்க.. ஒருநாள், இந்த போலீஸ் வேலையால நமக்குள்ள சண்ட வந்துச்சுன்னு வைங்க… இல்ல கண்டிப்பா வரும்.. அப்புறம்.. எனக்கும் எங்க அம்மா நிலமை தான் வரும்.. இதுனால வேதனை கஷ்டம் எல்லாம் எனக்கும்.. என்னோட குழந்தைக்கும் மட்டும் தான்.. நான் அம்மா இல்லாம கஷ்டபட்ட மாதிரி என்னோட குழந்தையும் கஷ்டபட நான் விரும்பல.. என் குழந்தைக்கு அம்மாவா நான் உயிரோட இருக்கணும் நினைக்கிறேன்.. புரிஞ்சிக்கோங்க..

 

ஏற்கனவே நடந்தத மறக்க முடியாம பைத்தியமா சுத்திக்கிட்டு இருக்கேன்.. இதுல நீங்க வேற மேலும் மேலும் ஸ்ட்ரெஸ் கொடுக்குறீங்க.. நிஜமாலே.. நீங்க என்மேல வச்சிருக்குற லவ் உண்மைனா.. இதுக்கு மேலயாவது டிஸ்ட்ரப் பண்ணாம என்ன நிம்மதியா வாழ விடுங்க”

 

“இங்க பாரு மதி.. நீ எல்லாத்தையும் தப்பான கண்ணோட்டத்தோட பாக்குற.. முத பழசெல்லாம் மறந்துட்டு.. நெகட்டிவா யோசிக்காம பாஸிட்டிவா  யோசிச்சு பாரு” 

 

“ஓ.. இவ்வளவு பேசுறீங்களே.. அன்னைக்கு லவ் சொல்ல வந்து சொல்ல முடியாம வேலை தான் முக்கியம்ன்னு போன ஆளு தான நீங்க.. பின்ன எப்படி உங்கள நம்ப சொல்லுறீங்க”

 

இதை கேட்டு வாயடச்சு போய் நிற்பவனை கண்டவள் “நீங்களும் என் அப்பா மாதிரி தான்கிறதுக்கு இந்த ஒரு விஷயம் போதும்ல.. எதாவது பேசுங்க என்ன பதில காணும்.. வாயடச்சு போயிட்டீங்க போல.. உண்மைய சொல்லணும்ன்னா.. உங்கள லவ் பண்ணினது உண்மை தான்.. எப்போ நீங்க போலீஸ்ன்னு தெரிஞ்சிதோ அப்போவே ஒரு போலீஸ லவ் பண்ணினத நினைச்சி எனக்கே என்மேல வெறுப்பு.. அந்த வெறுப்பு உங்கமேல இருந்த காதல இல்லாம பண்ணிடுச்சு.. இதுக்கு மேல எப்படி தெளிவா சொல்லி புரிய வைக்கிறதுன்னு.. எனக்கு தெரியல” என்று நிக்கிக்கு அழைக்க, 

 

அழைப்பை ஏற்றவளிடம் “ஏய்.. எங்கடி இருக்க.. உடனே பார்க்கு வெளிய வா” என்று கூறி, அழைப்பை துண்டித்தவள் வேலனை பாராமல் அங்கிருந்து பூங்காவின் வெளியே வந்து தன் வண்டியின் அருகில் அவளுக்காக காத்து கொண்டிருந்தாள்.

 

இப்போது புகழ் “என்னாச்சி பார்ட்னர்.. அவ என்ன சொன்னா” 

 

“பார்க்க்கு வெளிய வர சொல்லுறா… சரி நான்.. அப்போ போறேன்”

 

“சரி வா.. நானும் வாரேன்”

 

“எதுக்கு.. மறுபடியும் அவள எதாவது டென்ஷன் பண்ண போறீயா” 

 

“எதுவும் பேச மாட்டேன்டி.. வா போலாம்” என்று இருவரும் நடந்து கொண்டிருக்க,

 

“புகழ்” என்று ஒருவர் அழைக்க,

 

அவரை கண்டு தன் கைகளால் சலுட் அடிக்க, அவரும் அதை வாங்கிக்கொண்டு அவர்களுடனே நடந்தவாறு “என்ன புகழ் கேஸ்லாம் எப்படி போகுது”

 

“போகுது சார்.. ஒரு தடையமும் கிடைக்கல கண்டிப்பா ரிஸ்க்கா தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்”

 

“புரியுது.. பட் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறது நல்லது.. ஏற்கனவே ரெண்டு மூணு பொண்ணுங்க காணாம போயிட்டாங்க.. இனி யாரும் மிஸ் ஆக கூடாது”

 

“கண்டிப்பா சார்..” என்று  இவனிடம் பேசியவாறு வெளியே வந்தவரோ விழிகள் விரித்து “சாரு..” என்று கூற அதே சமயம் வேலனும், அங்கு வந்து சேர்ந்தான் 

 

அவரை கண்டு மேலும் கோபம் கொண்டவளோ நிக்கியை கூட வண்டியில் ஏற்றாமல் அங்கிருந்து விரைந்தாள்.

 

அவளின் கோபம் கண்டு பயந்த நிக்கியோ, அவர்களிடமிருந்து விடை பெற்று வேகமாக ஆட்டோவில் ஏறி அங்கிருந்து வீட்டை நோக்கி சென்றாள்.

 

அவர்கள் இருவரும் சென்றதும் புகழ் அவரிடம் “சார்.. உங்களுக்கு சாருவ தெரியுமா..”

 

அதை கேட்டு, அவனை ஒரு பார்வை பார்த்தவரை கண்டவனோ “அவள பாத்ததும் சாருன்னு அவ பேர கரெக்ட் சொன்னீங்க.. அதான் கேக்குறேன்” 

 

“என் பொண்ண.. எனக்கே எப்படி தெரியாம இருக்கும்”

 

அதை கேட்டு அதிர்ந்த வேலனோ “வாட்.. மதி உங்க பொண்ணா.. அப்போ அவ வெறுக்கிற அப்பா.. நீங்க தானா”

 

அதற்கு புன்னகையை பதிலாக கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

*********************************

 

வீட்டிற்கு வந்து தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியவளோ தன் அறையில் உள்ள பொருள்களை எல்லாம் தூக்கி வீசி சேதபடுத்தி தன் கோவத்தை வெளிக்காட்டி கொண்டிருக்க,  ஆட்டோவில் வந்திறங்கிய நிக்கியோ தன் தோழியை காண வேகமாக அவளின் அறைக்குள் நுழைந்தவள், அவள் நிலை கண்டு பதறி

 

“ஏய் சாரு.. எல்லாத்தையும் தூக்கி வீசி உடைக்குற அளவுக்கு கோவபடுறது உன் உடம்புக்கு நல்லது இல்ல.. பிளீஸ் ஸ்டாப் இட் சாரு”

 

தான் கூறியதை கேட்காமல், அறையில் ஒரு பொருள் விடாமல் அனைத்தையும் உடைத்து கொண்டிருபவளை கண்ட நிக்கியோ “இப்போ நிறுத்த போறீயா.. இல்லையா” என்று கேட்டவாறு, அவளை தடுக்க அருகில் சென்றவளின் காலில் கீழே உடைக்கபட்டிருந்த கண்ணாடிகள் அவளின் பாதத்தை பதம் பார்க்க, அதனால் ஏற்பட்ட வலியில் “அம்மா..” என்று கத்தியவளை கண்ட சாருவோ, 

 

தன் செயல்களை நிறுத்திவிட்டு தன் தோழியை அழைத்து வந்து படுக்கையில் அமரவைத்தவள் முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அவளின் பாதத்தின் கீழ் அமர்ந்து, அவள் காலிலுள்ள கண்ணாடி துண்டுகளை பிடுங்கி எறிந்துவிட்டு காயத்திற்கு மருந்து போட்டுவிட்டு கொண்டிருப்பவளிடம்

 

“சாரி சாரு.. அண்ணா ரொம்ப கெஞ்சி கேட்டாரு… அதான் சொல்லிட்டேன்”

 

அதை கேட்டு புன்னகைத்தவள் “இதே மாதிரி புகழ் அண்ணா உன்ன பத்தி என்கிட்ட கேட்டா.. நானும் சொல்லனும்ல.. ச்சே மறந்தேபோயிட்டேன்.. அதான் மேடம் முன் எச்சரிக்கையா சத்தியம் வேற வாங்கிட்டீங்களே” 

 

அதை கேட்டு தலை குனிந்தவளை ஒரு பார்வை பார்த்தவள், அவளின் காலில் கட்டிட்டு எழுந்து சென்று அலங்கோலமாக இருக்கும் தன் அறையை சரி செய்தாள்.

 

இரவு தங்கை வந்து காயத்தை பற்றி விசாரிக்க மருத்துவமனையில் கீழே உடைந்திருந்த கண்ணாடி பார்க்காமல் கால் வைத்ததில் வந்த காயம் என்று சொல்லி சமாளித்துவிட்டாள்.

 

இப்படியே அன்றைய பொழுது கழிய, மறுநாள் இருவருமே வேலைக்கு விடுப்பு எடுத்து வீட்டியில் இருந்தார்கள்.

 

காலை சாப்பிட்டு முடித்த சாரு மதியம் சமைக்க தொடங்கிவிட்டாள்.

 

தாமதமாக தூங்கி எழுந்தவள் காலில் கட்டுயிருப்பதால் பல் மட்டும் துலக்கிவிட்டு சாப்பிட வந்தவளோ தன் தோழியை பார்த்தவாறே சாப்பிட தொடங்கினாள்.

 

சாப்பிட்டுவிட்டு தன் கட்டிட்டு இருந்த காலை ஊனாமல் தங்கையையும் சிறுவர்களையும் காண மெதுவாக படி ஏறி மாடி செல்ல,

 

அவள் செல்லும் வரை பார்த்து கொண்டிருந்த சாருவின் முன் புகழும் வேலனும் வந்து நிற்க, அவர்களை கண்டவளோ “என்ன தான வேணும்.. இப்படி விடாம.. என்ன எதுக்கு படுத்துறீங்க வேலன்”

 

அவளின் வீட்டிற்கு வந்திருப்பதை தன்னவளுக்கு செய்தி அனுப்பி தெரிவித்தவனோ சாருவிடம் “சாரு.. ஒரு பத்து நிமிஷம் அவன பேசவிடு.. அண்ணனுக்காக ஒரு பத்து நிமிஷம் மட்டும் டைம் கொடுமா”

 

“ம் சரி.. பேசுங்க” என்று மார்பின் குறுக்கே கைகட்டி நிற்க, 

 

இப்போது வெளியே சென்ற வேலனோ இருவரை அழைத்து கொண்டு உள்ளே வர, அதே சமயம் மாடி கதவை சாத்திவிட்டு படி இறங்க கஷ்டபடுபவளை கண்டு அவளருகில் சென்ற புகழோ அவளை தன் இரு கரங்களில் தாங்கி கொண்டு வந்து சோஃபாவில் அமர வைத்துவிட்டு “மச்சான் நீ பேசு” என்று கூறியவனை கண்டு பெண்ணவளின் முகம் அவளையும் மீறி சிவக்க, அதை கட்டுபடுத்தி அவர்கள் பேசுவதை கவனிக்க தொடங்கினாள்.

 

தான் அழைத்து வந்த இருவரையும் கைகாட்டிய வேலனோ “சாரு.. இவங்க ரெண்டு பேரையும் யாருன்னு தெரியுதா”

 

“இவரு.. நான் போலீஸ்னா வெறுக்க காரணமானவரோட நண்பன்.. இவங்க என் அம்மா செத்தது அப்புறம்.. எனக்கு இன்னோரு அம்மாவா இருந்து  பாத்துகிட்ட என்னோட டீச்சர்”

 

அதை கேட்டவன், அவளின் தந்தையின் நண்பனை பேச சொல்லி சைகை காட்ட, அவள் முன்னே வந்தவர் “நான்.. உன் அப்பாவோட பிரெண்ட் டாக்டர் முரளிகிருஷ்ணன்.. எனக்குன்னு  சொந்தமா மூணு ஹாஸ்பிட்டல் இருந்துச்சு.. பத்து வருஷத்தக்கு முன்னடி.. உன்னோட அம்மா இறந்த அதே நாள் தூத்துக்குடில இருந்த என்னோட ஒரு ஹாஸ்பிட்டல் பாம் வெடிச்சு சிதறிட்டு.. என்னோட எதிரிங்க என்மேல இருந்த பகைல ஹாஸ்பிட்டல்ல பாம் செட் பண்ணிருக்காங்க.. அன்னைக்கு உன் அப்பா மட்டும் கரெக்ட்டான நேரத்துல வரலன்னா ஹாஸ்பிட்டலோட சேந்து நாலு அஞ்சு கர்ப்பிணி பெண்களும் சிதறிருப்பாங்க” என்று கூறி முடிக்கவும் 

 

வேலனோ “ஏதோ வேணும்ன்னே உன் அப்பா உன்னோட அம்மா கால் அட்டென்ட் பண்ணாத மாதிரி பேசுனீயே.. இப்படி ஒரு சிச்சுவேஷன்ல இருக்கிற உன் அப்பாவாலே எப்படி கால் அட்டென்ட் பண்ணி பேச முடியும்..” என்று முடித்தவன் அடுத்து அவள் ஆசிரியரை பேச சொல்லி சைகை காட்டினான்.

 

அவளின் ஆசிரியாரோ “சாருமா, உன் அப்பா காப்பத்துனா அஞ்சாறு கர்ப்பிணி பெண்கள்ல என்னோட தங்கச்சியும் ஒருத்தி.. இன்னொரு விஷயம் என்னன்னா உன் அம்மா இறந்ததும்.. உன் அப்பா என்கிட்ட வந்து என் பொண்ண உங்ககூடவே வச்சி பாத்துக்கோங்கன்னு கெஞ்சினாரு.. நானும்.. அவரு என் தங்கச்சிய காப்பாத்துன நன்றியுணர்வுக்காக சரின்னு சொல்லி.. உன்ன திருநெல்வேலிக்கு அழைச்சிட்டு வந்தேன்.. 

 

ஆனா.. உனக்கு தங்க இடமும், சமைச்சு கொடுத்தத தவிர வேறு எதுவும் நான் செய்யல.. உனக்கு ஸ்கூல் காலேஜ் ட்ரெஸ் எல்லாத்துக்கும் ஒரு அப்பாவா செலவு பண்ணினாரு.. சில நேரங்கள்ல உனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு சாப்பிட பாத்து பாத்து வாங்கி வந்து.. நீ இல்லாத நேரம் கொடுத்துட்டு போயிருவாரு.. இப்படியே தள்ளி இருந்தே ஒவ்வொரு விஷயமும் உனக்கு செஞ்சாரு..” கூறி முடிக்கவும் 

 

வேலனோ “இப்போ சொல்லு உன் அப்பாக்கு உன்மேல பாசம் இல்லாம தான் இதெல்லாம் உனக்கு செஞ்சிருக்காரா போலீஸா இருக்கிற உன் அப்பாக்கு வேலை மட்டும் தான் முக்கியம்ன்னு சொன்னீயே.. ஆனா.. அவரு தான் பெத்த பிள்ளையும் முக்கியம்ன்னு ப்ரூப் பண்ணியே காட்டிட்டாரு.. இப்போ.. இதுக்கு என்ன சொல்ற” என்று கூறி முடித்தவன் “சார்.. உள்ள வாங்க” என்று அழைக்க, 

 

அதை கேட்டு உள்ளே வந்தவரோ தன் மகளின் அருகே சென்று, அவள் கையை பற்றி “என்ன மன்னிச்சிடுமா.. அன்னைக்கு நடந்த சம்பவத்துல சைலண்ட்ல இருந்த என்னோட போன் மிஸ் ஆயிடுச்சு.. உன் அம்மா பண்ணின கால் மட்டும் இல்ல.. உன் அம்மா இறந்தது அப்புறம் எனக்கு தகவல் சொல்ல கால் பண்ணினவங்க கால் எதுவுமே எனக்கு தெரியாது..” என்று நிறுத்தி அழுதுவிட்டு

 

“நான் உன் அம்மா கல்யாணம் பண்ணிக்கிற முன்னாடி.. என் வேலைய  எப்படி இருக்கும்ன்னு சொல்லி சம்மதம் வாங்கி தான் கல்யாணமே நடந்துச்சு.. கல்யாணம் முடிஞ்சு கொஞ்சம் நாள் லீவ்ல இருந்தேன்.. அதுக்கு அப்புறம் வந்த ரிஸ்க்கான கேஸ் எல்லாம் ஹன்டில் பண்றதுக்காக வீட்டுக்கு அடிக்கடி வர முடியாம போச்சு.. உன் அம்மாவுக்கு அதெல்லாம் பிடிக்காம போலீஸ் வேலைய விட்ருங்கங்கன்னு சொல்லி டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டா.. அதுல இருந்து எப்போ நான் வீட்டுக்கு வந்தாலும் போலீஸ் வேலைய விடுங்க விடுங்கன்னு அத மட்டும் சொல்லுவா.. ஒரே கட்டத்துல டார்ச்சர் தாங்காம நைட் அவ தூங்குன அப்புறமும் வரதும் மார்னிங் அவ எந்திக்குற முன்னாடியும் வேலைக்கு கிளம்பி வந்திருவேன்.. நீ பிறந்தது அப்புறம் உன்ன பாக்குறதுக்காவே வீட்டுக்கு அடிக்கடி வருவேன்.. அப்போவும் விடாம சண்ட போடுவா.. அதுனாலயே பண்டிகை டைம்ல கூட வந்து உன் சந்தோஷ்த்த கெடுக்க வேண்டாம்ன்னு வீட்டுக்கு வர மாட்டேன்.. அதுக்காக என்மேல தப்பில்லன்னு சொல்ல மாட்டேன்..

 

அவளுக்கு புரியவச்சி அவளுக்காக டைம் ஸ்பெண்ட் பண்ணிருக்கணும்.. பண்ணாதது என்னோட தப்பு தான்.. உன் அம்மாவுக்கு நான் பண்ணினதுக்கு கடைசியில அவ முகத்த பாக்கிற வாய்ப்பு கூட எனக்கு கிடைக்கல.. என்ன மன்னிச்சிடுமா” என்று அவள் கைபற்றி கதறி அழ,

 

அதற்கு வேலனோ “சாரு.. நீ ஒரு ரிப்போர்ட்டர்.. உனக்கும் சில நேரங்கள் வேலை அதிகமா இருக்கும்.. ஏன்.. நைட் அங்க ஸ்டே பண்ணி வொர்க் பண்ண கூட வாய்ப்பு இருக்கு… இதெல்லாம் தெரிஞ்சி உன்ன கல்யாணம் பண்ணிக்கிறவரு.. சடன்னா எனக்கு இதெல்லாம் பிடிக்கல.. இந்த வேலை உனக்கு வேண்டாம் விட்டுடுன்னு சொன்னா விட்டுட்டு வந்துருவியா.. இல்லல.. இதை தான அவரும் பண்ணிருக்காரு”

 

இதையெல்லாம் கேட்ட பெண்ணவளுக்கு யோசிக்க கூட முடியாதா குழப்பம் வேகமாக, தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டவளோ அனைத்தையும் சிந்திக்க தொடங்கினாள்.

 

தொடரும்..

                                 – ஆனந்த மீரா 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்