Loading

என் உயிர் – 8 🧬

அனைவரும் அரக்க பறக்க மருத்துவமனைக்கு செல்ல, இந்திரா கிழிந்த காகிதங்களையே வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தார்.

அரை மணி நேரமாகியும் நகராமல் இருந்தவரை அம்மண்டபத்தில் வேலை செய்யும் பணியாள் ஒருத்தி  அவரின் தோள்  கொட்டு சுயத்திற்கு கொண்டு வர முயற்சி செய்ய, திடீரென்று தீப்பட்டது போல் துடித்து கொண்டு நகன்றவர் அருகில் நின்றிருந்த பெண்னை சரமாரியாக கன்னத்தில் பதம் பார்த்து விட்டார் .

அதில் அரண்டு அருகில் உள்ளவர்கள் பதறி கொண்டு விலகினார்கள். பின்பு, இந்திரா தலை முடியை பிடித்து கத்தி கூப்பாடிட்டார். அனைவரும் மிரண்டு பார்க்க, துடிப்பான இளசுகள் அவரை அடக்க முயற்சி செய்தனர். முடியாததால் வயதின் மூத்தோரின் ஆலோசனைப் படி பலம் கொண்டு கன்னத்தில் அடித்தான் ஒரு இளையவன்.

அதில் மயங்கிய இந்திராவை மருத்துவமனையில் சேர்த்தனர் கண்மணி சேர்ந்த அதே மருத்துவமனையில்.

🏥 மருத்துவமனை

“சின்ன வயசு …. இப்போ  தான் கல்யாணம் ஆகிருக்கு…. ஏன் இப்படி …… “

“என்ன உங்க பாட்டி பாதி பாதியா பேசுது ? லூசா அது? ” நிலவன் வனஜாவை பார்த்துக் கொண்டே கேட்டார்.

கேள்வி கேட்டு நேரமாகியும் பதில் வரவில்லை  என்று நிலவன் திரும்பி பார்க்க , அவனின் எதார்த்தமான பேச்சு வியக்கத்தக்கதாத இருந்தது கவிக்கு . அதனால், அதிசயமாக அவனைப் பார்த்தாள்.

அவளின் அர்த்தம் புரிந்ததால் “இங்க பாரு…. நீ ஒன்னும் எனக்கு பழகாத ஆள் இல்லை. அதுமாதிரி தான் நானும் உனக்கு. என்ன உனக்கு மகி பிடிச்சதால என்னை அப்படி நினைக்க தோணல . எனக்கும் உன் மேல எதுவும் தோணல. காதல் கல்யாணம் மேலலாம் எனக்கு எந்த இன்ட்ரஸ்டும் (Interest) இல்லை. ஏன்னு உனக்கே தெரியும். சோ, கல்யாணம் பண்ணி லவ் பண்ணனும். வி வில்  டேக் டைம் . (நம்ம கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொள்வோம் ) “என்று கண் சிமிட்டி கூறினான்.

அவனின் இயல்பான பேச்சு தன்னை கவர்வது போல் இருந்தது. ஆனால் , அதனை உணரும் முன்பு தன் நிலையை மாற்றி கொண்டாள்.

அதன் பின் அவன் கேட்ட கேள்வி ஞாபகத்திற்கு வர “ஏன்? “என்று வினவியவளை புருவ முடிச்சுடன் அவன் காண “இல்லை பாட்டி பத்தி கேட்டீங்களே அதான் ” என்று அவளே விளக்கவுரை கொடுத்தாள்.

அவனின் கண் அசைவிலேயே தனக்கு அனைத்தும் புரிகிறதே என்று ஒரு வித ஆச்சர்யம் மற்றும் திருப்தி கலந்த உணர்வோடு இருந்தாள்.

அவனின் முக மாற்றத்தை ஒவ்வொன்றாக கவனித்தவன் இறுதியில் அவள் சாதாரண நிலைக்கு திரும்பியவுடன் ” இல்லை இந்த கிழவி வெரி ஸ்ட்ராங் லேடி…. அயன் லேடி…. போல்ட் லேடி னு சொன்னாங்க …. பாத்த இப்போ தான் பேச கத்துகிட்ட மாதிரி பேசுது ” என்று அவன் பதில் கூறினாலும் அவளின் முக மாற்றம் தனக்கு இவ்வளவு துல்லியமாக புரிகிறதே என்று ஆச்சர்யம் கொண்டான்.

அவள் மெலிதாக அவனைப் பார்த்து முறைக்க , அதில் புன்முறுவல் இவன் முகத்தில் தோன்ற  செல்வி சடாரென்று “அம்மா உன்னை தான் பாக்குறாங்க …. கிட்ட போ ” என்று அவளைத் தள்ள,

“கரடி”

” என்ன? “

“ஒன்னுமில்லையே” என்று  பல்லைக் காண்பித்த நிலவனை கண் இடுங்க பார்த்த செல்வி ,

“நல்லாவே கேட்டுச்சு! “

“கேட்கனும் தான் சொன்னதே ” என்று தலையை சொறிந்து கொண்டே கீழே குனிந்து கூறி விட்டு கவியின் அருகில் நின்றான்.

ஏற்கனவே பாச மழையில் இருவரும் கரைய , அதனைக் கண்டு தலையை சொறிந்த நிலவன்” இங்க பாரு அத்தை…. உன் மக கல்யாணம் நின்னதுக்கு அழுகுறியா ? இல்லை உன் மகளுக்கு என் கூட கல்யாணம் ஆனதுக்கு அழுகுறியா? “

கண்மணி “ஏன்டா இப்படி சொல்லுற ? “

” ஏன் இப்படி பேசுறீங்க ? ” கண்மணியுடன் கவியும் ஒரு சேர கேட்க, பின்னால் நிற்கும் வனஜாவை ஓரக்கண்ணால் திரும்பி பார்த்தான் நிலவன்.

வனஜா நிலவன் முதுகில் கைவைத்து தலையை ஆட்டி சந்தோஷத்தை பிரதிபலிக்க, அவளின் கேள்வி அனைவரின் மனதிற்கும் விடையாக இருந்தது.

திருமலை கடையில் வேலைப் பார்ப்பவன் அருகில் நிற்க, அனைவருக்கும் காபியை வாங்கி வரச் சொன்னார். பின்பு, செவிலியர் உள்ளே வந்து திருமலையை டாக்டர் அழைப்பதாக கூற , திருமலை, தீரன் மற்றும் நிலவன் முவரும் மருத்துவரைக் காணச் சென்றனர்.

“சார் ! உங்க மனைவிக்கு ஃபர்ஸ்ட் அட்டாக் . மைல்டுலாம் இல்லை. இதுக்கு நீங்க தகுந்த டிரீட்மெண்ட் எடுத்தா அடுத்தடுத்து வராம பாத்துகலாம்”

திருமலை எதுவோ பேச வரும் முன் “சார் இங்க விட டெல்லி நல்லாருக்கும் தான ? ” நிலவன் முந்திக் கொண்டு கேட்டான்.

“தாராளமா “

அதன் பின் திருமலை ஒன்றும் பேசாமல் தலையை குனிந்து கொண்டார். பிற விஷயங்களை நிலவன் மற்றும் தீரன் தெரிந்து கொண்டு மூவரும் கண்மணி இருக்கும் அறைக்குள் நுழைந்தனர்.

டாக்டரின் அறையில் இருந்து கண்மணியின் அறைக்கு உள்ள இடைவெளி இரு நிமிடம் தான். அந்த இரு நிமிடத்தில் திருமலையோ தீரனோ வாயைத் திறக்கவில்லை . நிலவன் தான் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டான் திருமலையிடமும் செவிலியரிடமும்.

உள்ளே திருமலை , தீரன் , நிலவன் என்று அடுத்தடுத்து உள்ளே நுழைய நிலவனின் மனதில்

“எந்த பெண்ணோடும்
எழுவது காமமே
அடி …..
உன்னோடு தோணலயே
சிறு முந்தானை மூடிடும் தெய்வமே
உன்ன முத்தாட தோணலயே

சுத்தமுள்ள உத்தமிகுணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு
தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிப்போச்சு”

என்று ரீங்காரமிட்டு கொண்டிருந்தது  கவியின் செயலில். அவன் மனதிற்குள் புலப்பட்டதை மூளைக்கு செலுத்தி விட்டான். எதையும் விடாக் கொண்டனாக இல்லை என்று நினைக்காமல் மனம் போன போக்கை பின்பற்றி கொண்டான். இறுதியில் அவனுக்கும் புரிந்தது காதல் வயப்பட்டான் என்று . அதோடு அவள் தன் மனைவி என்பது அவளின் நீண்ட முடியின் ஓரத்தில் அவன் கட்டிய மஞ்சள் நிற தாலியின் முடிச்சின் மீதம் பளிச்சு என்று தென்பட்டது.

அதனால் உரிமையாகவே அவளின் பின்னழகை ரசித்தான். இருந்தும் அவளின் காதுகளில் ஊஞ்சலிட்டு கொண்டிருக்கும் ஜிமிக்கி வேறு எங்கும் திரும்பதவாறு அவனைக் கவர்ந்தது.

முதுகில் எதுவோ ஊடுருவது புரிந்து திரும்பி கவி பார்க்க, ஒற்றை புருவம் உயர்த்தி கண் சிமிட்டினான். அதில் பெண்ணவள் அதிர்ந்து திரும்பினாள். ஆனால், அவள் வெட்கி தான் திரும்பினாள் என்று யார் கூறுவது.

செவிலியர் அழைத்த பின்பே இருவரும் சுயத்திற்கு வந்தனர். வெளியில் நின்று வாசலை மறைத்து நிற்கும் நிலவனைக் கண்டு முறைக்க , அவன் சிரித்துக் கொண்டே விலகினான்.

அடிப்படை சிகிச்சை முறைகளைப் பார்த்து விட்டு , மருத்துவர் கூறியதாக மருத்துவமனையில் இருந்து கிளம்புவதற்கான ரிப்போர்ட்டும் , பிற ஆவணங்களையும் கொடுத்தார்.

கவி அனைத்து ரிப்போர்ட்டுகளையும் வாங்கி பார்த்துக் கொண்டிருக்க, திருமலை கண்மணியிடம் டெல்லியில் சிகிச்சை பெறுவதை மெதுவாக கூறினார்.

அவர் அதிர்ந்து “என்னங்க? ” என்று கூறவும், வெளியில் “திருமலை” என்று கூப்பிடுவதும் ஒரு சேர இருந்தது.

திருமலை மனைவியைப் பார்த்துக் விட்டு எழாமல் வெளியில் எட்டிப் பார்க்க, அதனைப் புரிந்து தீரன் எழுந்து நடக்கும் முன் , “தள்ளுடா எவன் கத்துறது?  ” என்று வனஜா முந்தி கொண்டு சென்றார்.

வனஜா தள்ளியதில் தீரன் அதிர்ந்து ஒரு அடி பின்னால் நகர, அதனைக் கண்டு கொண்டு நிலவன் கமுக்கமாக சிரித்தான். பின்னர், வெளியில் கேட்ட சலசலப்பில் கண்மணியை தவிர அனைவரும் வெளியில் வர, வனஜா முந்திகொண்டு உள்ளே வந்து “இங்க என்ன டான்ஸா ஆடுறாங்க? அம்பூட்டு பேரும் எட்டி பாக்குறீங்க? உள்ள போங்க “என்று இவர்களை அதட்டி விட்டு, பின்னால் திரும்பி ” இனிமே மக கிகனு எவனாச்சும் வந்தா வகுந்துடுவேன்” என்று கூறிவிட்டு , ஒரு இருக்கையில் அமர்ந்து ஆசுவாசப்பட்டு கொண்டார்.

சிறிது நேரம் கண் மூடி இருந்து கண் திறக்கையில் நேர் எதிரில் இருந்த செல்வி ஆவென அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதே நேரம் , நிலவன் கண்மணியின் கையைப் பிடித்து எதுவோ கூறிக் கொண்டிருந்தான்.

” என்ன டி எதுக்கு என்ன இப்புடி பாக்குற ? “

” இல்லை நான் கூட நீ தான் மெயின் வில்லியா இருப்பனு நினைச்சேன். ஆனால் “

“ஏன்டி என்னைய வில்லி அளவுக்கா நினைச்சா …… எனக்கும் நல்ல மனசு இருக்குடி. அததான சொல்ல வர ” என்று சிரித்துக் கொண்டே வனஜா கூற,

” இல்லை நீ காமெடி பீஸ்ஸுனு இப்போதான் தெரியுதுனு சொல்ல வரேன் ” என்று செல்வி அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள். ஆனால், நக்கல் இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

அதில் வனஜா மீண்டும் காளி அவதாரம்  எடுத்து கத்துவதற்குள் “டார்லிங் உன் மருமகளை என்னனு கேளு ? ” என்று நிலவன் கூறியவுடன் ,

” உன்னை வந்து கவனிச்சுக்குறேன் ” என்று கையை நீட்டி எச்சரித்து விட்டு கண்மணியிடம் சென்றார்.

என்ன என்று விசாரித்த பொழுது கண்மணி டெல்லிக்கு வருவதில் சம்மதம் இல்லை என்பதும் திருமலையும் அதற்கு எதுவும் சொல்லாததே காரணம்.

“ஏன் ? ” ஒற்றை வார்த்தையில் வனஜா கேட்க,

“நீங்க, அவங்கலாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க ? “

அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு “நான் எதுக்கு இங்க இருக்கணும்? நானும் டெல்லிக்கு  தான் வரேன். அதோட திருமலையும் கூட வருவான். டாக்டர் சொன்னதுக்கு அப்புறம் மிச்சம் பேசிக்கலாம் “

இப்பொழுதும் கண்மணி கையை பிசையை “இன்னும் என்ன? ” வனஜா எரிச்சலுடன் கேட்க ,

” இல்லை கல்யாணம் பண்ணி பொண்ணு கொடுத்த வீட்ல போய் இவ்வளவு நாள் தங்குறது……. “

அவர் இழுத்ததில் தீரனுக்கும், நிலவனுக்கும் கோபம் வர , இதில் கவி வேறு முனுக்கென்று கண்ணீர் விட, அதுவே நிலவனுக்கு ஏக போக கோபமாக மாறியது. ஆனால்,  வனஜா முந்திக் கொண்டு “அதுக்கு முன்னாடி அவன் உன் அண்ணன். அதுக்கும் முன்னாடி எனக்கு அவன் ஒன்னு விட்ட அண்ணன் மகன் “

இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பதை போல் வனஜா அருகில் கடையில் வேலை செய்பவனை அழைத்து வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கேட்டு விட்டு, தீரனிடம் வீட்டிற்கு சொன்ன நேரத்தில் வருமாறு கூறி விட்டு சென்று விட்டார்.

கண்மணியை டிஸ்சார்ஜ் செய்து விட்டு அனைவரும் நல்ல நேரத்தில் வர , கவி திருமலை கவிதாயினி அனுநிலவனாக வீட்டிற்குள் நுழைந்தாள். இருவரும் அவர்களை அறியாமல் சுண்டு விரலால் பின்னிக் கொண்டனர். சில பல சடங்குகள் முடிந்து இரவு எட்டு மணி அளவில் அனைவரும் ப்ளைட்டில் பயணம் மேற்கொண்டனர்.

நாமும் சென்று விட்டு  நாளை டெல்லியில் சந்திப்போம் டாடா…….. 😁😁

கீர்த்தி ☘️

படிக்கிற எல்லாரும் எனக்கு ரேடிங்க்ஸ் அன்ட் ரிவ்யூஸ் கொடுத்தா நானும் என்னை செதுக்குவேன். 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்