என் உயிர் – 3 🧬
உள்ளே வந்த கவிக்கு வாசலிலேயே கால்கள் பின்னிக் கொண்டது. கண்ணீர் பீறிட்டு வந்தது. தான் காண்பது கனவா நினைவா என்று புரியாமல் இருந்தாள். காலையில் அரை குறையாக சாப்பிட்டதோடு வயலில் இருந்து நடந்து வந்ததும், செல்வி கூறியது பற்றி சிந்தித்துக் கொண்டே வந்ததும் உடல் மனம் இரண்டும் வலுவிலந்து இருந்தது.
அந்த சோர்வோடு சிறு வயதில் தாயும், தந்தையும் கடைக்கு செல்ல, அப்பத்தா கவனித்தாலும், என்றோ ஒரு நாள் வந்து தனக்கு சரிசமமாக விளையாடுவதும், தான் கேட்காமலேயே அனைத்தும் வாங்கி கொடுக்கும் மாமாவைக் கண்டதும் இருந்த கொஞ்சமே கொஞ்சம் சத்தும் இழந்து தோய்ந்து மயங்கி விட்டாள்.
தீரன் கண்மணியின் உடன்பிறப்பு. அக்காலத்திலேயே கல்லூரி படிப்பை முடித்து பேங்கில் வேலை பார்த்தவர். அவர்கள் ஊரில் அவரே முதலில் இவ்வாறு படித்து வேலை பார்த்தார். வேலை கிடைத்து வெளியில் சென்றவர் அங்கேயே செட்டில் ஆகி விட்டார். என்றோ திருவிழாவிற்கு, விசேஷத்திற்கு என்று தான் வருவார்.
அவரின் தாய் தந்தை இறப்பிற்க்கு பின் அதுவும் குறைந்து விட்டது. என்றோ ஒரு நாள் தங்கை அழைத்தாள் மட்டுமே வருவான். அவ்வாறு கண்மணி அழைக்கும் பொழுது வந்த தீரன், கூடவே தனது மனைவி மற்றும் மகனை அழைத்து வந்தார்.
மகனை பார்க்கையில் கவிதாயினியை விட வயது அதிகம் போல் இருந்தது. பின்னர் தான் தெரிந்தது தீரனின் காதல் விஷயம். எங்கு இதனால் கண்மணியின் வாழ்க்கை பாதிக்கப்படுமே என்று நினைத்து கூறாமல் இருந்து விட்டனர். சொந்தத்தில் கல்யாணம் செய்வதில் இதுவும் ஒரு பிரச்சனை. பிறக்கும் பொழுதே சொல்லி வைத்து விடுவதால் வீட்டினர் எப்படி இருந்தாலும் வாக்கின் படி திருமணம் செய்து வைத்து விடுவர்.
அதனால் , காதல் விஷயம் பற்றி சொன்னவுடன், தீரனின் காதலியான கமலத்தை சந்தித்து, இருவரின் பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் முன் கல்யாணம் நடைபெற்றது. அதிலிருந்து இவன் வாழ்க்கை நன்றாகவே சென்றது. பின்னர் திருமலை மற்றும் கண்மணிக்கு திருமணம் நடைபெற்றது . அதன் பின் அடுத்தடுத்து கண்மணியின் பெற்றோர்கள் தவறி விட, கண்மணியிடம் மட்டும் தனது வீட்டு விஷயத்தினை பகிருவான். எதிர்பாராத விதமாக பிரசவத்தின் போது கமலம் இறந்து விட, கண்மணி தான் துடித்து போனாள்.
ஆனால், கமலத்தின் பெற்றோர்கள் ஆதரவாக இருந்து இன்று வரை தீரன் மற்றும் அவரது மகனை நன்கு கவனித்து கொள்கின்றனர். தீரனுக்கு பெண் பிள்ளை மேல் கொள்ளை பிரியம். அதனாலேயே அதிகம் தங்கை பிள்ளையை கொஞ்சுவான். இவ்வாறு செய்வது திருமலையின் அன்னை மற்றும் தமக்கைக்கு பிடிக்காமல் ஒரு தடவை வரும் பொழுது பெரும் பிரச்சனையை உண்டு பண்ணி, தீரனே “நான் இனிமேல் வரவில்லை ” என்று கூறும் அளவிற்கு செய்து விட்டனர். அப்பொழுது கவிக்கு ஐந்து அகவை .
கிட்டதட்ட பதின்மூன்று வருடங்களாக தன்னை காண வராத மாமன் இன்று வந்தது சந்தோஷத்தை விட பேரானந்தை கொடுத்தது. அதில் தான் மயங்கி விழுந்தாள்.
அவள் கண் முழிக்கையில் அருகிலமர்ந்து இருந்த தாய் தந்தையரை தாண்டி பதைபதைப்புடன் வாசலில் நின்று கொண்டிருக்கும் மாமா தான் கண்களுக்கு தென்பட்டது.
அவரைக் கண்டு முறைத்துக் கொண்டு முகத்தைத் திருப்ப, தீரன் சிரித்துக் கொண்டே அறையை விட்டு வெளியில் சென்றார். அதில் இன்னும் கடுப்பாகி தாய் தந்தையரை விலக்க, அப்பத்தா முன்னால் வந்து ” என்ன செல்லம் எங்கிட்ட தான் வருவியா? ” என்று கேட்டவுடன், ஒன்றும் கூறாமல் கண்கள் சுருக்கி பார்த்து விட்டு, அதனைக் கடந்து “மாமா …….. ” என்று கத்தி கொண்டே சென்றாள்.
“பொசக்கெட்ட சிறுக்கி…. இவ்வளவு நாள் அவன் தான எல்லாம் பாத்தான் . அப்படியே பாஞ்சுக்கிட்டு போறா …. ” என்று கூறி இன்னும் புலம்ப, முதன் முறையாக தனது கணவனை கண்டு அர்த்த பார்வை வீச, திருமலை ஒரு நிமிடம் திடுக்கிட்டு விட்டு இத்தனை வருடம் பிரிந்திருந்த ஏக்கம் எனப் புரிந்து அன்னையின் வாயை அடைத்தார்.
ஏனென்றால் இவ்வாறு பேசித் தான் வரவிடாமல் செய்தது என்று அங்குள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால், யாரும் காட்டிக்கொள்ளவில்லை.
” அம்மா மகிக்கு நான் எப்படியோ அப்படி தான கவிக்கும் அவன் மாமானா உசுரு “
“என்னடா புதுசா உன் பொண்டாட்டி வீட்டுக்கு ஒத்து ஊதுற . இவ்வளவு நாள் இல்லாத உன் பொண்டாட்டி ஜனங்க இன்னிக்கு வந்ததும் தெனாவட்டு கூடிருச்சோ. இவ்வளவு நாள் நம்ம சோறு போடலைனா அவ…. “
” அம்மா …… மரியாதையா பேசுங்க. அவளுக்கும் வயசு வந்திடுச்சு. அவ ஒன்னும் சும்மா உட்காந்து சாப்பிடலை. வீட்டையும் கவனிச்சு எனக்கு உதவி பண்ணுறா . மனசுல வச்சுக்கோங்க “
அதன் பின் வனஜா அமைதியாகவா இருப்பார். ஏற்கனவே தீரன் வந்ததே பிடிக்கவில்லை. அந்த கடுப்போடு இதுவும் சேர புலம்ப ஆரம்பித்து விட்டார். ஆனால், உண்மை கண்மணி மற்றும் திருமலைக்கு மட்டுமே வெளிச்சம்.
திருமலை போலத் தான் தீரனும். தங்கை வாழ வந்த வீடு என்பதால் தான் அமைதியாக இருப்பார். இன்று அவர் பேசிய பேச்சிற்கு எழுந்து பேச வந்தார். அதனைக் கவனித்து தான் திருமலை பேசி நிறுத்தினார். அவ்விஷயம் கண்மணிக்கு புரிந்ததோடு தீரனுக்கும் புரிந்ததால் தனது தங்கையை முடிந்தளவு முறைக்க மட்டுமே முடிந்தது.
அந்நேரம் “கொஞ்சம் வாயை மூடுங்களேன் ” என்ற சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க, ஒரு நொடி தான் அதிர்வு, அதன் பின் துரிதமாக வேலை செய்தனர் அனைவரும் .
🌆 டெல்லி
செழியன் விருது வாங்கியதற்காக பிரபல நட்சத்திர ஹோட்டலில் சிறப்பு விழா நடைபெற்றது. விருது வாங்கியதற்கு சமமான மகிழ்ச்சி இவ்விழா நடைபெறுவதில் ஏற்பட்டது அவருக்கு .
ஏனெனில் இதை நடத்துவது அவரின் ஒரே புதல்வன் தவப் புதல்வன் ஆதவ் செழியன். அவனே செழியனின் வாரிசு. அவரின் ஆஸ்திக்கும் , அவரது அறிவுக்கு ஒரே வாரிசு. அவரை போலவே இவனும் அறிவியல் துறையில் கால் பதித்துள்ளான்.
இவரைப் போல் இல்லையெனும் முப்பது அகவையில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளான். ஆனால், சொல்லும் அளவிற்கு பெரிய விருது இல்லை. ஆனால், செழியன் தேவைக்குரிய வசதிகள் இல்லாவிடினும் அவரது மகன் வயதில் ஸ்காலர்ஷிப் மூலம் படித்து பெரிய பதவியில் இருந்ததோடு அப்பொழுதே முனைவர் பட்டம் (Ph.d) வாங்கியுள்ளார். அதோடு இரு ஆய்வுகளில் முக்கிய பங்காளராகவும் இருந்தார். அதனால், தனது முப்பது ஐந்து அகவைக்குள் அவ்விறு ஆய்வுகளும் அவருக்கு கிட்டதட்ட இருபது விருதுகளை வாங்கி கொடுத்தது.
ஆனால், தன் மகன் பிறந்ததில் இருந்து சகல வசதிகளோடு உயிரியல் துறையில் மிகவும் சிறந்து விளங்கிய கேம்பிரிட்ஜ் பல்கலைகழத்தில் படிக்க வைத்தார். இருந்தும் மகன் மேல் அதிருப்தி வரவில்லை. ஏனென்றால் அவனும் முயன்று கொண்டு தான் இருக்கிறான்.
இதை நினைத்து கொண்டிருந்தவரின் பின்னால் யாரோ கை வைக்க, அதில் சுய நினைவு பெற்று திரும்பி பார்க்க, வியந்து போன செழியன் அவரை பரபரப்புடன் வரவேற்றார்.
” வாங்க மிஸ்டர் ரகுவேந்தர் . ஹவ் ஆர் யூ? ஐ ஆம் வெரி ஹேப்பி டு சீ யூ இன் திஸ் மொமண்ட். கம் சிட் ” என்று கூறி, அருகில் நின்றிருந்த வெயிட்டரிம் இருந்து இவரே பழச்சாறை எடுத்து அவரிடம் நீட்டினார்.
இதையெல்லாம் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த ஆதவ் செழியனுக்கு எரிச்சல் வந்தது. “தனது தகப்பன் எவ்வளவு பெரிய மனிதன். இவரிடம் ஏன் தான் இவ்வளவு அடங்குகிறாரோ ” என்று நினைத்து மருகியவன் கண்டுகொள்ளாமல் அவனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.
ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு தனது மகனை அழைத்தார். வேண்டா வெறுப்பாக ஒரிரு வார்த்தைகள் பேசி விட்டு நகன்று விட்டான். அது செழியனுக்கு புரிந்தாலும் அமைதியாக இருந்தார். விழாவும் ஆரம்பம் ஆகியது.
❤️♥️♥️♥️
சஞ்சய் அடித்ததில் கைகளை கன்னத்தில் வைத்துக் கொண்டு பாவமாக நின்றுக் கொண்டிருந்தாள் சீமா. பூஜா தனக்கு விழ வேண்டியது இந்த அடி என்று புரிந்து அமைதியாக நழுவப் பார்க்க, நிலவன் சஞ்சயின் பின்னால் நின்று அவளைத் தீப்பார்வைப் பார்த்தான்.
அதில் கால்கள் தன்னிச்சையாக நின்றுவிட்டது. இருவரும் அமைதியாக இருக்க, பின்னிருந்து வந்த சீமாவின் தாய் பரமேஸ்வரி கத்திக் விட்டார். அப்பார்ட்மெண்ட் அருகிலிருக்கும் வீடுகளில் இருந்து எழுந்து வந்து விடுவரோ என்கின்ற அச்சத்தில் சஞ்சய்யின் பெற்றோர்கள் சமாதானம் செய்ய முன்னே வந்தனர்.
எப்பொழுதும் இது போல் நடக்கும். தன்னுடைய காரியம் நிறைவேற பரமேஸ்வரியின் ஆயுதம் இவ்வாறு கத்துவதே. ஆனால், இம்முறை சஞ்சய்க்கும் கோபம் வெளியில் எட்டிப்பார்த்து விட்டது. அதில் சட்டென்று தனது தாய் தந்தை வருவதற்கு முன் கதவை சடாரென்று மூடி விட்டான்.
அதில் இன்னும் கோபம் எழுந்து மேலும் கத்த, அருகில் புதிதாக குடிவந்திருக்கும் அறுபது வயதுடைய முதியவர் தூக்கம் கெட்டு வெளியில் வந்து எட்டி பார்த்தார். பரமேஸ்வரி கத்துவதை கண்டு என்னவென்று வினவ, அண்ணன் வீட்டினரின் மேல் உள்ள கோபத்தில் இவர் மேல் பாய்ந்தார்.
“வந்துட்டான் நாட்டாமை செய்ய . இம்சை! மத்தவங்களாம் கண்டுக்காம இருக்கிற மாதிரி இந்தாளும் போனா என்ன? இல்லையா என் அண்ணன் கிட்ட போயாச்சும் எதுக்கு இப்படி கத்துறாங்க? அக்கம் பக்கத்தில தூங்க வேணாமானு கேட்கனும்? இப்படி எதுவும் இல்லாம நம்மள கேக்குது கெழடு ச்சை…. “என்று அவர் பாட்டிற்கு புலம்பினார்.
சீமா தான் எங்கு அவரின் காதில் விழுந்து விடப் போகிறதோ என்று பதறி தாயை அடக்க, அவரோ ” இதுனால தாண்டி அவன் உன்ன முட்டாளா பாக்குறான் ” என்று இன்னும் கடுகடுத்து கூறினார்.
அதில் சீமாவின் முகம் தோய்ந்தது . ” ஏன் மா நீயும் இப்படி பேசுற ? “
அவளின் முக வாட்டத்தை கூட கவனிக்காது ” பின்ன, நம்ம இருக்கிறது டில்லி. இவனுக்கு தமிழும் தெரியாது. பின்ன எதுக்கு என்ன அடக்குற ? “
♥️♥️♥️♥️
டில்லியில் சிறப்பு விழா நடத்த என்ன காரணம் மிஸ்டர் ஆதவ் செழியன் ?
♥️♥️♥️♥️♥️
டேய், வேலைக்காக டில்லி வந்தா பத்ததாது டா? ஹிந்தி சீக்கிரமா கத்துகனும். படிப்பு வரலை வரலைனு சொல்லி சொல்லியே தப்பிச்சுக்கிட்டு இருக்க நீ? என்று ஒருவன் மகிலனை வெளுத்து கொண்டிருந்தார்.
கீர்த்தி ☘️