வாரங்கள் வேகமாகக் கடக்க, அதிகாலை நேரம் “கீச் கீச்” என்ற பறவைகளின் சத்தத்தில் மூடி இருக்கும் இமையைத் திறந்தாள் ப்ரணீதா. தன் மேனியை மெத்தையாக எண்ணித் துயில் கொள்ளும் பிரணவை சற்று தள்ளிப் படுக்க வைத்து விட்டு, தன்னை சுத்தபடுத்திக் கொண்டு நடைப்பயிற்சி செய்ய பின்னே இருக்கும் தோட்டம் நோக்கிச் சென்றாள்.
நாள் முழுவதும் நடக்கும் பல போராட்டங்களுக்குப் பொறுமையைத் தாக்குப் பிடிக்க உதவுகிறது இந்த பயிற்சி. எப்பொழுதும் போல் அன்றும் அவளுக்காகக் காத்திருந்தான் மாதவ், “ப்ரீ” என்று பேசத் தொடங்க, அவனை தன்னால் முடிந்த மட்டும் முறைத்து விட்டு கோபத்துடன் முன்னேறி விட்டாள்.
ஒரு வாரமாக இது தான் தொடர்கதையாக இருக்கிறது. அன்று அவனது கனவை அறிந்து கொண்ட நொடி அவள் சென்றதோ மாதவ்வை பார்க்கத் தான்.
“என்ன ப்ரீ இந்த நேரத்தில். தூங்கலையா” என்று தூங்கக் கலக்கத்தில் கேட்க, அது எல்லாம் எங்கே அவள் கண்களுக்குத் தெரிந்தது.
“பிரணவ் ட்ரீம் என்ன தெரியுமா” என்று எதிர் கேள்வி கேட்க, ஒரு நிமிடம் தடுமாறி பின் “தெரியும்…. பைக் ராஸிங்” என்றான்.
“அப்ப நம்ம அவனுக்கு பிடிச்சதைச் செய்ய வைக்கலாம்” என்ற ப்ரணீதா வை கவலையுடன் பார்த்தவன் “நாங்க பண்ண அதே தப்பை நீயும் பண்ணாதே ப்ரீ. எங்களுக்கு ரேஸிங் எல்லாம் சுத்தமா பிடிக்கலை. நினைக்கவே ரொம்ப பயம். இருந்தும் அவனுக்காகத் தான் பயத்தையும் மீறி அவனுக்கு சப்போர்ட் பண்ணோம். கடைசியாக நாங்க பயந்த விஷயம் தானே நடந்துச்சு” என அவனைப் புரியாமல் பார்த்தவள்,
அவள் பார்வையைப் புரிந்து கொண்டு “அவனுக்கு நடந்த அச்சிடேன்ட் சாதாரணமாக எங்களுக்குத் தோன்றலை. அவன் எப்படி வண்டியை ஓட்டுவான் என்று எல்லாருக்கும் தெரியும் அப்படி இருக்கிறவன் ரேஸிங் இல்லாத நேரத்தில் கண்டிப்பா வேகமாகப் போய் இருக்க மாட்டான். எதோ நடந்து இருக்கு. வேண்டாம் அவனுக்கு அது எதுவும் ஆக வேண்டாம்” என
“அவனுக்கு வேண்டாம்னு நீ எப்படி சொல்லுவ அவனுக்கு என்ன வேண்டும்னு அவனுக்குத் தெரியும். உங்க பயம் தான் அவனுக்கு எதிரியே. நம்ம எண்ணம் தானே வாழ்க்கை. உங்களால் முடியாதா விட்டுடுங்க நான் பார்த்துகிறேன். அவனை எப்படிச் சரி பண்ணனும்னு எனக்குத் தெரியும். கண்டிப்பா அவனை நான் சரி பண்ணிடுவேன் அந்த நம்பிக்கை போதும் எனக்கு” என்று அவனை முறைத்து விட்டுச் சென்றவள் அதன் பின் இந்த ஒரு வாரமும் அவனிடம் பேசவில்லை.
அவன் எப்பொழுதும் பிரணவ்வின் நல்லதையே பெரிதும் எதிர் பார்ப்பான். அவனின் கனவு தான் அவனின் உயிர்ப்பு என்றால் தானும் அவனுக்கு உறுதுணையாக இருக்க நினைத்தான்.
சென்னையின் மற்றோரு பகுதி ஆள் நடமாட்டம் பெரிதும் இல்லது ஆங்காகே சில கட்டிடங்கள் கொண்டு அமைதியாக இருந்தது. பல ஏக்கர் கொண்டு அமைந்து இருந்தது அந்த விருந்தனர் மளிகை. வெளிநாட்டு கார் சொல்லாமல் சொல்லியது உள்ளே இருப்பவரின் பணபலத்தை. அவன் பியூஷ் கோயல், கோயல் குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஒற்றை வாரிசு.
“அவன் திரும்ப நம்ம வழியில் வாரான் போல, கூடாதே. அவனுக்கு என்ன பிடிக்குமோ அதை அவன் கிட்ட இருந்து பிரிச்சிடலாமா” என்றவன் கையில் பிரணவ் சமீபத்தில் முகம் கொள்ளா புன்னகையுடன் ப்ரணீதாயுடன் இருக்கும் புகைப்படம் இருக்க,
அவனது பி ஏ “நான் பார்த்துட்டு உங்களுக்கு ரிப்போர்ட் பண்றேன் சார்” என்று அறையை விட்டு வெளியேறி விட,
அவனது விழியோ ஒரு வித மயக்கத்துடன் புகைப்படத்தில் இருக்கும் ப்ரணீதாவை ரசிக்க, காரமோ அவளின் நிழல் உருவத்தை வருடிக் கொண்டு இருக்க, இதழோ “கமிங் போர் யூ பேபி” என்று முணுமுணுத்தது.
அவனுக்கும் இந்த இருவருக்கும் எந்த சம்மதமே இல்லை. நேருக்கு நேர் சந்தித்தது கூட இல்லை. ஆனால் என்னோ ஒரு பகை.
அன்று விநாயகர் சதுர்த்தி. எல்லா பக்கமும் கணேசனின் திருவுருவமே நிறைந்து இருந்தது. மாதவ் தான் சென்று சாமி சிலை வாங்கி வருவதாகச் சொல்ல, கூடவே நானும் வருவேன் என்று அடம் பிடித்துச் சென்றான். அவன் கிளம்பிய பின் தான் குளித்து அதிசயமாக அன்று புடவை அணிந்து வந்தாள் ப்ரணீதா.
முதல் முதலாக அவள் கல்யாண நாள் அன்று தான் அணிந்தாள். அதை ரசிக்கும் மனநிலையில் அப்பொழுது அவள் இல்லை. இன்று கீழே பிரணவ் என்ன கலாட்டா செய்கிறானோ என்று பதட்டத்தில் வேகமாகக் கட்டி கொண்டு வந்தாள்.
இந்திரா “வா மா இரண்டும் வெளியே போய் இருக்காங்க. சாமி சிலை முழுசா வருமா என்று சந்தேகம் தான்” என்று சிரித்துக் கொண்டே சொல்ல, அவளும் அதில் மென்மையாகப் புன்னகைத்துக் கொண்டாள்.
“என்ன அத்தை பண்ணனும்” என்று பொறுப்பாக கேட்க, “பெருசா எதுவும் நமக்கு வேலை இல்லை. கடலை ஊற வெச்சிருக்கேன். கொழுக்கட்டைக்கு மாவு ரெடி. மாதவ் பிள்ளையாரையும் அப்படியே பழங்களையும் வாங்கிட்டு வந்தால் சாமி கும்பிட வேண்டியது தான்” என
அவளும் இதனை எல்லாம் கேட்டு விட்டு “ஓகே அத்தை நான் பூஜை ரூமை கிளீன் பண்ணிட்டு இங்க வேலையை ஸ்டார்ட் பண்றேன்” என்றாள்.
இவள் பூஜை அறையைச் சுத்தம் செய்வதற்கும் அவர்கள் பிள்ளையாரை எடுத்து வரவும் சரியாக இருக்க, மனையில் வைத்து சில அலங்காரங்களைச் செய்து விட்டு பிரணவ்வைப் பார்த்து “இன்னைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு என்ன தொல்லை பண்ணக்கூடாது” என, சரி சரி என்று தலையை ஆட்டிக் கொண்டான்.
மாதவ் தன் தந்தை அனுப்பிய சில முக்கியமாக பைலை பார்க்க தனது அறைக்குச் சென்று விட்டான். இந்திரா பக்கத்தில் இருக்கும் கோவிலில் அபிஷேகம் என்று அழைக்க அவரும் செல்ல, ப்ரணீதா மட்டும் கிட்சேனில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவளின் தொலைபேசி அலற , ‘இந்த நேரத்தில் யாரு’ என்று மாவு பிசைந்து கொண்டு இருந்த கையேடு வர, “பிரணவ் கண்ணா இந்த போனை காதில் வை” என்றதும், அவனும் அப்படியே செய்ய ஜான்வி தான் அழைத்து இருந்தாள்.
“பிரணவ் விற்கு நாளையிலிருந்து டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிடலாம்” என அவளும் சரி என்று மேலும் சில விஷயங்கள் பேசி விட்டு வைக்க, அடுத்த நிமிடம் அதிர்ந்தே போனாள்.
ஒரு கையில் போனை வைத்துக் கொண்டு இருந்த பிரணவ், இவள் சேலை மறைக்காத இடையை தன் மற்றைய கையால் கொடு வரைந்து கொண்டு இருந்தான். அவனுக்கு டிரீட்மென்ட் என்ற எண்ணத்தில் பேசி கொண்டு இருந்தவள் இதனைக் கவனிக்கவே இல்லை.
வார்த்தை தொண்டையில் அடைக்க “எ… என்ன பண்ற பிரணவ்” என்ற கேள்வி மிக மெலிதாக கேட்க,
“நேத்து ஒரு படத்தில் அந்த ஆண்ட்டி போன் பேசிட்டு இருக்கும் போது பக்கத்திலிருந்த அங்கிள் இப்படி தான் பண்ணாரு. எதுக்குன்னு அந்த ஆண்ட்டி கேட்க அவரு ஹெல்ப் பண்றேன்னு சொன்னாரு. நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்றவன் முன்னை விட அழுத்தமாக அவளின் இடையைப் பற்ற, அவளுக்கு புது விட உணர்வுகள் எல்லாம் தோன்றி மூச்சு விடவே கஷ்டப்பட்டாள்.
நிற்பது வேறு ஹால், அவன் கையை பற்றி “கண்ணா எனக்கு ஹெல்ப் எல்லாம் வேண்டாம். இப்படி எல்லாம் யார் கிட்டவும் பண்ணக் கூடாது. பேட் பாய் சொல்லிடுவாங்க சரியாய். இனி நான் இல்லாத அப்பப் படம் பார்த்த உதை தான் விழும்” என்று உள்ளே செல்ல திரும்பியவளை இடையோடு அனைத்து கொண்டான்.
இவளுக்கு ஐயோ என்று ஆகிவிட்டது. எப்பொழுது வேண்டுமென்றாலும் யாரவது வர வாய்ப்பு இருப்பது புரிந்து “என்ன கண்ணா வேண்டும் ஏன் இப்படி எல்லாம் என்னைத் தொல்லை பண்ற” என்று கண்களை இறுக்க மூடிக் கொண்டே கேட்க,
“தெரியலையே. ஆனா இப்படி பண்ண பிடிச்சு இருக்கே. நான் இங்க ஒரு முத்தா தரவா” என்று பின் இருந்தே அவளின் கன்னத்தைச் சுட்டி கட்ட,
“பிரணவ் கண்ணா சொன்ன கேளு இது எல்லாம் வேண்டாம் நான் சமைக்கணும்” என்று அவனை ஒதுக்கி வைத்து விட்டு செல்ல, அவனோ பாவமாக கிட்சேன் உள்ளே செல்லும் அவளைத் தான் பார்த்து கொண்டு இருந்தான்.
‘ஒழுங்கா அவன் கன்னத்தில் சொல்லும் போதே காட்டி இருக்கலாம்’ என்று நினைக்கும் அளவுக்கு அடுத்துப் படுத்தி விட்டான்.
அவள் சென்றதும் ஒரு நிமிடம் பாவமாகப் பார்த்தவன் அடுத்த நிமிடமே அவனின் பிறவிக் குணம் வெளியே வந்தது. ‘என் பரி எப்படி எனக்கு வேண்டாம் சொல்லலாம்’ என்று அதே சிறு கோபத்துடன் இவனும் சமையலறை நோக்கிச் செல்ல,
மாதவ் வேலை எல்லாம் முடித்து விட்டு வெளியே வர, மேலே இருந்தே அவன் கிட்சேன் செல்வது தெரிந்தது. “பாவம் இவனுக்கு போர் அடிக்குது போல. இப்பவே இந்த ஒர்க் முடிக்கச் சொன்ன அப்பாவைக் கட்டையால் அடிக்கணும். எத்தனை முறை சொல்றது எல்லா வேலையும் நைட் செய்றேன்னு” என்று தனக்குள் பேசிக் கொண்டே கிட்சேன் நோக்கிச் சென்றவன் இருவர் இருந்த நிலையைக் கண்டு பதறித் திரும்பி நின்று கொண்டான்.
‘ஐயோ வெக்கமா இருக்கே’ என்று மெல்லிய புன்னகையுடன் கண்ணை மூடி கொண்டே பின் பக்கமாக சென்று விட்டான்.
ஒன்றின் மேல் அவன் வைத்த தீரா காதல் அவனை நிலைகுலைய வைத்து இருக்க, அவனைச் சரி செய்ய வருகிறதோ இந்த புது வித காதல்.
உயிரோட்டங்கள் தொடரட்டும்
நிலானி தாஸ்