“சொல்லலாம் சொல்லலாம் இப்ப என்ன அவசரம். நம்ம உள்ள வந்து ரொம்ப நேரம் ஆகுது வெளியே போகலாமா இல்லை என் அண்ணா எதோ நான் உன் கூட சண்டைப் போடுகிறதா நினைக்கக் போறான்” என
“ஹலோ என் மாம்ஸ் பற்றித் தப்பா பேசுற வேலை எல்லாம் வேண்டாம்” என
“ஓ… உன் மாம்ஸ் க்கு பெரிய சப்போர்ட் தான் நீ. ஆனா தப்பாச்சே…” என்று பட் என்று அவளின் இதழில் ஒரு மென் முத்தம் பதித்து விலக,
அவனைப் பார்த்து “இவ்வளோ தானா இதை விட என் கண்ணா ஸ்ட்ரோங்கா கொடுப்பான்” என, ‘இது யாரு கண்ணா’ என்று ஒரு நிமிடம் யோசித்தாலும் வந்ததும் அவனை பார்த்து அவள் முணுமுணுத்த வார்த்தைத் தானே இது என்று புரிய,
“உன் கண்ணா எப்படிக் கொடுத்தான் என்றெல்லாம் தெரியல என்னோட ஸ்ட்ரோங் நீ பார்ப்ப தானே அப்ப தெரியும் வாயாடி இது எல்லாம். இப்ப வரியா இல்லை இன்னும் கொஞ்ச நேரம் இருந்த என்னை என்னாலே கண்ட்ரோல் பண்ண முடியாது. அப்பறமா நம்ம நாளைக்கு தான் வெளியே போவோம்” என்று அவளை இழுக்க,
அவளோ தயங்கிக் கொண்டு “இன்னும் நீங்க எதுவுமே சொல்லல.எப்ப என்னைப் பார்த்தீங்க எங்க பார்த்தீங்க” என “எல்லாமே இப்பவே சொல்ல முடியாதே செல்லம்மா. பொறுமையா சொல்றேன் இப்ப வா” என்று அவள் கையைப் பற்றி அழைத்து வர,
ஜான்வி இந்திரா விற்கு உதவியாகச் சமையலறைக்கு சென்று இருக்க, மாதவ் தனியாகக் கடிகாரத்தையும் இவர்கள் அறையும் தான் மாற்றி மாற்றிப் பார்த்து கொண்டு இருந்தான்.
இருவரும் கோர்த்த கையுடன் வெளியே வருவதைக் கண்டு “என்னடா ஒரேடியா அவ காலில் விழுந்து பாவமன்னிப்பு எதுவும் கேட்டியா என்ன. கோவமா போன பிள்ளைச் சிரிச்சிட்டே வருதே” என
“மாம்ஸ் உனக்கு விஷயம் தெரியாதுல இவன் என்னை எப்போ இருந்தோ லவ் பண்றதா சொல்கிறான். நீங்களே கேளுங்க” என்று முதல் வேலையாக அவனை மாட்டி விட,
“ரொம்ப நல்லவ டி நீ….” என்று சொல்லும் போதே அங்கே வந்து விட்டனர் ஜான்வி மற்றும் இந்திரா.
எல்லாரும் அவன் முகத்தையே ஆர்வமாகப் பார்க்க, “பெருசா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க அவ்வளோ பெருசு எல்லாம் இல்லை. இரண்டே வரியில் சொல்லிடலாம்” என
“அதையாவது சொல்லு தொல்லையும்” என்று பார்க்க,
“இவளை முதன்முதலா பார்த்தது ஸ்கூலில் தான். முதல் பார்வையில் என்னை அப்படியே இவை பக்கம் இழுத்துகிட்டா மாயக்காரி. இவதான் என் எதிர்காலம் எல்லாம் தீர்மானிச்சிட்டேன். ஆனா இவள் ரொம்ப குட்டி பொண்ணு தானே அதான் வெயிட் பண்ண நினைச்சேன். பட் அதுக்குள்ள அந்தக் கோகுல் ஜான்வி கிட்ட தப்ப நடக்கப் பார்த்தான்.
ஒரே சண்டை. எனக்கு இந்த விஷயத்தை வெளியே சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. அதான் அங்க இருந்து வெளியே வந்துட்டேன். வந்தாலும் இவ என் கண் பார்வையில் தான் இருந்தா. எனக்கு அச்சிடேன்ட் நடக்கிறதுக்கு முன்னாடி வரை என் கண் பார்வையில் தான் இருந்தாள்.
ஆனால் எனக்கு இப்படி ஆனதும் எனக்கும் அவளும் இருந்த இடைவேளை ரொம்ப தூரம் ஆகிடுச்சு. எனக்கு ஹாஸ்பிடலில் இருந்த போது கல்யாணம் ஆகிடுச்சுனு தெரிஞ்சதும் ஒரு நிமிஷம் என் உலகம் சுத்தறதையே நிறுத்திடுச்சு.
அதான் அப்ப சத்தம் போட்டேன். வீட்டுக்கு வந்ததும் இவளைப் பற்றி விசாரிக்கச் சொன்னேன். கேட்ட ஆள் தான் தப்பா போய்டுச்சு. அவன் மாதவ் தான் மாப்பிள்ளைன்னு நினைச்சு என் கிட்ட இவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு சொல்லிட்டேன். எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.
நானே காதல் தோல்வியில் இருந்தா இவ கர்ப்பமா இருக்கானு அடுத்த ஷாக். இதுல நான் நியூசிலாந்து போற பிளான் வேற. போயிட்டு வந்து மொத்தமா பார்த்துக்கலாம்னு நினைச்சேன். அப்பவே பார்த்து இருக்கலாம்னு இப்ப தோன்றுது” என
“ஸோ பிட்டி” என்று மாதவ் மற்றும் ஜான்வி சொல்ல, ப்ரணீதா எதோ யோசித்து “நான் காலேஜில் படிக்கும் போது ஒரு பையன் என் கிட்ட லவ் சொல்லிட்டு நெஸ்ட் டே சாரி தங்கச்சி சொன்னதுக்கு காரணம் நீங்களா” என
“பின்ன வேற யாரு. அடியேன் தான்” என பின் “ஆமா கேட்கணும் இருந்தேன் இந்த நந்தா எங்க. என் கிட்ட பேசவே இல்லை” என
“அவன் தங்கையைப் பார்க்க போனான் சீக்கிரமாவே வருவான்” என்று மாதவ் சொல்ல, தீடிரென “ஆமா உன் மேட்டர் அவனுக்குத் தெரியுமா” என்று சந்தேகமாக கேட்க,
“தெரியும். அதான் அவன் மேல கோவமா இருந்தேன். என் லவ் தெரிஞ்சும் எப்படி இவன் என் கல்யாணத்தைப் பண்ண விட்டேன்னு. இப்ப தான் நிம்மதியா இருக்கு” என
இந்திரா “அட பாவமே… அவன் தான் டா இவளுக்குத் தாலிபாக்கியம் கெட்டி சொன்னதும் நம்ம பிரணவ்விற்குப் பண்ணலாம்னு சொன்னதும், அதை என் மனசு நம்பி யாரு பேச்சும் கேட்காமல் இவன் பேச்சைக் கேட்டு இப்படி எல்லாம் பண்ணேன்” என ‘நல்ல நண்பன்’ என்று தான் அனைவருக்கும் தோன்றியது.
எல்லாரும் சுற்றியே இருக்க இருவரும் எதிர்பார்த்த தனிமை அவர்களுக்குக் கிடைக்கவே இல்லை. அவர்கள் எதிர்பார்க்கும் தனிமைக்குக் காத்திருந்தனர்.
தனிமைக் கிட்டியதோ????