ப்ரணீதா ஒரு வாரமாக ரேஸ் பைக் ஓட்ட கற்றுக் கொண்டு, இப்பொழுது நன்றாகவே ஓட்டினாள். இன்று தான் பிரணவ்வை அழைத்து கொண்டு போகும் எண்ணத்தில் இருந்தாள்.
அதை இந்திராவிடம் சொல்ல “இப்ப எதுக்குமா இது எல்லாம். அவனைச் சரி பண்ண போறேன்னு ஹாஸ்பிடலா அழைச்சிட்டு போற. எனக்கு என் பையன் அங்க எல்லாம் போகிறது பிடிக்கல தான் இருந்தும் உனக்காகத் தான் சும்மா இருக்கேன். ஆனா இப்ப என்ன என்றால் அவன் மறந்த இதை எல்லாம் எதுக்கு அவனுக்குச் சொல்லி தர. எனக்கு அவன் என் கூடவே வாழ்க்கை முழுக்க இருந்த போதும். அது இப்படியே இருந்தாலும் சரி” என்று மகன் தன்னுடன் இருக்க வேண்டும் என்று என்ன பேசுகிறோம், பேசுவது சரியா தவறா என்று கூட யோசிக்காமல் பேசி விட,
ஒரு நிமிடம் சுருக் என்று வலித்தது. பின் “நீங்க ரொம்ப நல்ல அம்மாவா இருக்க நினைக்கிறீங்க. பட் இது தப்பு அத்தை. நீங்க பண்றது உங்களுக்கு புரியுதா கல்யாணம் என்றா என்னனு கூட புரியாம நீ சொன்னிங்க என்ற ஒரே காரணத்திற்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார்.
கல்யாணம் பண்ணிட்டோம்னு வாழ்க்கையை வாழ ஆரம்பிக்க முடியாதே. இவருக்கு மனசில் என்ன இருந்ததோ உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. இருந்தும் நான் போராடுறேன். கண்டிப்பா அவர் எதையோ மிஸ் பன்றாரு அத்தை. உங்களுக்குப் புரியலையா.
நீங்க அவர் சுயத்தை இழந்தாலும் உங்க கூடத் தான் இருக்கணும்னு நினைக்கிறீங்க. ஆனால் நான் அவர் என் கூட இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி அவரோட சுயமாக எண்ணத்தில் சந்தோசமா இருக்கனும், அவரோட முடிவை அவரே எடுக்கணும்னு நினைக்கிறேன். அவருக்குனு ஒரு அடையாளம் வேண்டும் தானே. நான் நினைக்கிறதில் தப்பு ஒன்றும் இல்லையே.
இவருக்கு அடிப்பட்ட கொஞ்ச நாளிலே நீங்க டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணி இருந்த அவங்க இந்த நேரம் சரி ஆகி இருக்கக் கூட வாய்ப்பு இருக்கு. ஆனால் உங்க பயம் அதைச் செய்ய விடல. உண்மை தானே அத்தை.
இவர் திரும்ப ரேஸ்க்கு போவார். ரொம்ப நல்லாவே திரும்ப வருவார். அதை நான் உறுதியா சொல்றேன். ஒரு முறை தான் அத்தை சிங்கம் விழும் அடுத்த முறை அது எழுத்துக்கும் போது மொத்த காடும் அது கட்டுப்பாட்டில் தான் இருக்கும். என்னை நம்புங்க உங்க பையனைப் பழைய மாதிரி மாற்றி காட்டுறேன்” என்று பிரணவ்வை அழைத்துச் செல்ல,
அதுவரை இவர்கள் பேசியதைக் கேட்ட மாதவ் “ப்ரீ சொல்றதும் சரி தானே அம்மா. நம்ம பண்ண யோசிக்காத பல விஷயத்தை அவ கண்டிப்பா யோசிச்சு இருப்ப. அவனுக்கு எதுவும் ஆக விட மாட்ட. நீங்க இப்படியே யோசிச்ச நாளைக்கு என் பொண்டாட்டி என்ன நினைப்பா. என் பசங்க தான் என்ன நினைப்பாங்க” என்று அவரின் எண்ணத்தை மாற்ற,
“அதுக்கு முதலில் கல்யாணம் பண்ணனும் சார்” என்று கிண்டலாகச் சொல்ல,
“உங்களை பற்றி எனக்கு தெரியாதா. உங்க கண்னுக்குச் சின்ன பையன் மட்டும் தான் தெரியும். நான் எல்லாம் கண்ணுக்கு தெரியுவேன. இருந்தும் நான் உங்க மேல கஷ்டப்படாமல் நானே ஒரு பொண்ணை பார்த்து வெச்சு இருக்கேன்” என்று வெக்கப்பட்டு கொண்டே சொல்ல,
“கருமம் இப்படியே போய் சொல்லாத அந்த பொண்ணு ஓடிடும். வெட்கப்படச் சொன்ன இவன் எதோ கருமத்தை மெரிச்ச மாதிரி முகத்தை வெச்சிட்டு இருக்கான்” என்று தலையில் அடித்து கொண்டு செல்ல, அவனோ தன் தாயை கோவமாகப் பார்த்து விட்டு தன் தேவதையைக் காணச் சென்றான்.
ஜான்வி வண்டியை பார்க் செய்து விட்டு ஹாஸ்பிடல் உள்ளே செல்ல நினைக்க, அவள் முன்னே வந்து நின்றான் மாதவ்.
“ஹாய்” என
“நீங்க என்ன இவ்வளவு தூரம். எதாவது வேலைய வந்து இருக்கீங்களா” என, ஒரு வித தயக்கத்துடன், “இல்ல உங்க கிட்டக் கொஞ்சம் பேசணும்” என
அவனை உற்று நோக்கி “என்ன விஷயம். சீக்கிரமா சொல்லுங்க” என்று பறக்க,
“அது…. நீங்க…. நான்….. நாம….”என்று பேசமுடியாமல் தடுமாற, ஒரு நிமிடம் ஆழ்ந்து மூச்சை எடுத்து விட்டு, “என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறிங்களா. நல்ல பார்த்துப்பேன்” என
அவனை வெறிக்கும் பார்வை பார்த்தவள் “சரி வராதுங்க நீங்க வேற பொண்ணை பார்த்துக்கோங்க” என
“:வேற பொண்ண…. எனக்கு என்ன இது தான் வேலையா உங்களைப் பார்த்தேன் ரொம்ப பிடிச்சுது அதான் கேட்டேன். என்னமோ நான் எல்லா பொண்ணுங்க கிட்டவும் இதே தான் கேக்கற மாதிரி சொல்றிங்க. உங்களுக்கு பிடிக்கலை தானே விடுங்க நான் என்ன செய்யணும்னு எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று கோபத்தில் கத்தி விட்டு இரண்டடி முன்னே சென்றவன், என்ன நினைத்தானோ திரும்பிப் பார்க்க, அவள் அதே இடத்தில் அதிர்ந்து நிற்பது தெரிந்து,
‘உனக்கு என்னடா புதுசா இந்த கோபம் எல்லாம்’ என்று தன்னையே திட்டிக்கொண்டு, அவள் கையை பற்றியவன் ‘சாரி ஜானு. எதோ கோபம் அதான் மன்னிச்சுடு. எனக்கு நீ மட்டும் போதும் எவ்வளவு நாள் இல்ல, மாசம் வேண்டுமென்றாலும் வெயிட் பண்றேன் பட் நெகடிவ் ரிசல்ட் மட்டும் வேண்டாம். நான் கொஞ்சம் விக் என்னால தாங்கிக்க எல்லாம் முடியாது. வெயிட் பண்ணிட்டு இருப்பேன் உன் பதிலுக்காக” என்று அவளைப் பார்த்துக் கொண்டே செல்ல, அவள் கண் முன்னே அவளின் கடந்த காலம் நிழல் ஆடியது.
மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவள் தான். ஆனால் பிறந்த கொஞ்ச நாளிலே அவள் சந்தோசம் பறிப்போனது. பணத்துக்கும் சந்தோஷத்துக்கும் தான் சம்பந்தம் இல்லையே.
அவளின் ஐந்தாவது வயதில் அவளின் தாய் தந்தை இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. முதலில் எல்லாம் சிறிய சண்டையாகத் தொடங்கி பின்னாளில் பெரிய பெரிய சண்டையாக மாறியது.
மனம் ஓத்துப் போகாத போதும் சமுதாயத்திற்காக ஒன்றாக இருக்க நினைத்தனர். அது தான் அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு. இவளுக்கு ஜோதி என்ற அக்கா இருந்தாள். இருந்தாள் ஆனால் இப்பொழுது இல்லை. காரணம் இவர்கள் தான்.
பத்து வயதில் ஹாஸ்டல் சேர்ந்து பள்ளிப் படிப்பை முடித்தாள். வீட்டுக்குச் செல்லவே பிடிக்காது எப்பொழுதும் சண்டை மட்டுமே. எல்லாத்துக்கும் சண்டை மட்டுமே.
வெறுத்தே போயினர் கல்யாணத்தின் மீதும் காதலின் மீதும். அவளின் வெறுப்பு இன்னும் அதிகம் ஆகியது அவளின் பெற்றோரின் முடிவால்.
ஜோதி கல்லூரி படிப்பை முடித்தயுடனே நான் நீ என்று யார் முதலில் மாப்பிள்ளை பார்க்கிறோமே அவர்களே வெற்றி பெற்றவர் போல் நினைத்துக் கொண்டு சரியாக விசாரிக்காமல் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்தனர்.
ஜான்வி தன் அக்கா இந்த மோசமான சூழலிலிருந்து வெளியே போனால் போதும் என்று நினைத்தாள். ஆனால் அவள் நினைக்காதது அவள் இதை விடப் பெரிய கொடுமையில் மாட்டப் போகிறாள் என்று.
கல்யாணம் ஆனா கொஞ்சம் நாள் தான் அவள் சிரித்து இருப்பாள். அதன் பின் அவள் உதட்டில் மட்டும் அல்ல அவள் கண்ணில் கூட சிரிப்பு என்பது மருந்துக்கும் இல்லை.
மூன்றே மாதத்தில் திரும்பத் தாய் வீட்டுக்கே வந்தாள். உணர்வற்று, உயிரற்று. என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. ஜான்வி படித்துக் கொண்டு இருக்கும் பெண் தானே என்ன பெரிதாகச் செய்து விட முடியும்.
ஒரு வருடம் கழித்து விசாரித்துப் பார்த்தாள், விஷயம் அறிந்து அதிர்ந்து போனாள். அவன் ஏற்கனவே திருமணம் ஆனவன். அதுமட்டும் இல்லாமல் அந்த பெண்ணை அடித்தே கொன்றதும் இவனே. ஜோதி ரொம்பவே சாதுவான பெண். அவனின் கொடுமையை தாங்க முடியமால் வீட்டிலும் சொல்ல முடியாமல் தன் முடிவைத் தானே தேடிக் கொண்டாள். இதை எதுவுமே விசாரிக்காமல் பெண் கொடுத்த தாய் தந்தை மீது பெரும் கோவம்.
அப்பொழுது தான் அவள் தாய் தந்தையைக் கடைசியாகப் பார்த்தது. அதன் பின் அவள் அவர்களைச் சந்திக்கவே இல்லை. ஐந்து வருடம் ஆகிறது. வருடங்கள் தான் கண்டத்து உள்ளது. வெறுப்பு என்றும் மாறவில்லை.
அலைபேசி ஒலியில் நிழலிலிருந்து நிஜத்திற்கு வந்தவள் டிஸ்பிலேவில் ப்ரணீதா பெயர் கண்டு, ஒரு நிமிடம் மாதவ் எண்ணத்தில் தயங்கி பின் எடுத்தாள்.
“சொல்லு ப்ரீ மா” என, “எப்ப ஹாஸ்பிடல் வரணும் ஜானு. டைமிங் சொல்லி அப்ப தான் நான் அதுக்கு ஏற்ற மாதிரி இவனுக்கு ப்ரசிட்டிஸ் டைமிங் எல்லாம் பார்க்கணும்” என
இருவரும் அதைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்க, ஒருவன் ப்ரணீதாவை சந்திக்கத் தயாராகி கொண்டு இருந்தான். யார் அவனோ???