அவசர சிகிச்சைப் பிரிவின் முதல் பகுதியான பச்சை நிற அவசர பகுதியில் பப்புபை அனுமதித்திருந்தனர்.
“பேஷன்டோட அட்டென்டர் யாருங்க. என்ன ப்ராப்ளம்…”
நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பப்புவை கவனிக்கும் செவிலியர் அழைத்தார்.
“ நான் தான் மேம்…” வண்டிக்காரன் முன்வந்து நின்றான்.
“ஓகே… பேஷன்ட் நேம் என்ன…”
“சாரி… தெரியல மேம்” என்றான் வண்டிக்காரன். அவனை சற்று சந்தேகமாகப் பார்த்த செவிலியர்
“ஓகே உங்க பெயர்…”
அவன் குழப்பமாக நோக்க,
“இன்ஃபார்மன்ட் நேம் ஃபில் பண்ணணுமே சார்” என்றிட ,
அவனும் “ குறிஞ்சி வேந்தன்…” என்றவன், விதுராவிடம் பேசியதைத் தவிர்த்து மற்றவற்றைச் சுருக்கமாகக் கூறினான்.
செவிலியரும் , “ எங்க ரூல்ஸ்படி இங்க இருக்குற கான்ஸ்டபிள் ஒருத்தருக்கு நாங்க இர்ஃபார்ம் பண்ணுவோம். பேஷன்ட் ஸ்டேபிள் ஆனதும் அவங்க வாக்குமூலம் வச்சு மேற்கொண்டு கேஸ் ஃபைல் ஆகுமானு கன்ஃபார்ம் ஆகும்” என்றார்.
“ஓகே மேம். நோ ப்ராப்ளம்… போலிஸ் ல இன்ஃபார்ம் பண்ணும்போது செங்கல்பட்டு மெடிக்கல் காலேஜ்ல தான் அசிஸ்டன்ட் ப்ரொபசரா இருக்கேன்னு சொல்லிடுங்க… அன்ட் பேஷன்ட் ஆல்ரெடி கால்சியம் டிவிசிட்க்கு சிக்ஸ் மந்த்ஸ் பேக் மெடிசின் எடுத்திருக்காங்க. இப்போ சிம்டம்ஸ் பார்த்தா அப்படி தான் இருக்கு. கொஞ்சம் ஃபாஸ்டா…” என்றான்.
“அல்ரெடி அசெஸ் பண்ணி மெடிசின் போட்டாச்சு சார். பேஷன்ட் அட்டென்டர் சைட் எந்த ரெஸ்பான்ஸ் ஆர் கொஸ்டின் எதும் வரல… ஆல்சோ பில் பே பண்ணுமே… “ என்றார் செவிலியர்.
அவன் எதுவும் சொல்லாமல் புன்னகைக்க, “ இப்ப பில் நீங்க பே பண்றீங்களா… ஆர்… “ என்று இழுத்தார்.
“இவங்க ரிலேட்டிவ் ஒருத்தங்க இங்க தான் ஸ்டாஃப் ஆஹ் இருக்குறதா சொன்னாங்க… “ என்றான்.
“ஓ அப்படியா… அவங்க பெயர் எதனா தெரியுமா… ஒன் மினிட், அது எப்படி உங்களுக்குத் தெரியும்… பேஷன்ட் மெடிக்கல் ஹிஸ்டரி கூட சொல்றீங்க” என்று சந்தேகமாப் பார்க்க, விதுராவிடம் அலைபேசியில் பேசியதைக் கூறினான். அவரும் சரி என்பதாகத் தலையசைத்தார்.
அந்த நேரம்,
“ அய்யய்யோ.. என் காதல் அல்ப ஆய்சுல போதே… நான் என்னத்த பண்ணுவேன்
இந்த நாசமா போறவ அவளும் காதல் பண்ணாம… என்னையும் காதல் பண்ண விடாம பண்ணிபுட்டாளே…” என்ற கத்தல் கேட்க, என்ன சத்தமோ என்பதாக உள்ளே வந்தனர் செவிலியரும் குறிஞ்சி வேந்தனும்.
அங்கோ நெஞ்சில் கைவைத்த வண்ணமாக நீல நிற உடையில் மருத்துவமனையின் சின்னம் பொருத்திய செவிலிய உடையில் நின்றிருந்தாள் இளவயது பெண்ணொருத்தி.
“டேய்… அடேய் மீரா… என்னாச்சுடி உனக்கு… “ என்று செவிலியர் தட்ட, “ என் காதல் அல்பாயிசுல போகுதுக்கா” என்று புலம்பினாள் மீரா.
அந்த சமயம் , “ ஏன் அதோடு விட்ட, எப்பயும் சொல்லுவியே… என் எட்டு வருஷ காதோலுனு… அதையும் சொல்லுடி…” என்றபடி வந்து நின்றாள் விதுரா.
“என்ன விதுக்குட்டி… இவ என்ன பெனாத்திட்டு இருக்குறா... கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு. இப்ப வந்து எதோ காதல் அல்பாயுசுல போகுதுனு உளருறா…என்னவாம் கதை இவள்து” என்றிட,
“அது ஒரு காமெடி கதை… விடுக்கா… இப்ப என் ஃப்ரெண்ட வளவன அட்மிட் பண்ணியதா சொல்லி கூட்டிட்டு வந்தாங்க…” என்றிட,
“அது நீதானா… கால்சியம் டிவிசிட் விதுக்குட்டி… இவரு தான் இன்ஃபார்மன்ட் “ என்று விளக்கமளித்தவர், நெஞ்சில் கைவத்தபடி நின்றிருந்த மீராவை முதுகில் சற்று வலிக்கும்படி தட்டி ஓரமாக நிறுத்தி வைத்தார்.
“தேங்க் யூ சார் “ என்றவள் கூர்ந்து அவன் முகம் நோக்கி, “ நீயா… “ என்று அதிர்ந்தாள் விதுரா.
“நீயா இருப்பனு நான் எதிர்பார்க்கவே இல்ல…” என்று அதிர்வோட கூறினாள் விதுரா.
“நானும் நீயா இருப்பனு எதிர்பார்க்கவே இல்ல…” என்று சந்தோஷ சாரல் மனதில் தோன்ற கூறினான் குறிஞ்சி வேந்தன்.
தன்னுள் எழுந்த கோவத்தை அடக்கிய விதுரா, “தேங்க்ஸ் ஃபார் தி ஹெல்ப்… இப்ப நீங்க கெளம்புறீங்களா…போலீஸ் பிரசியூஜர் எதுலயும் உங்கப் பெயர் வராது. சோ நீங்க கிளம்புனா பெட்டரா இருக்கும்” என்று எரிச்சல் மிதுந்தக் குரலில் கூறினாள் விதுரா.
“ஐயோ என் எட்டு வருச காதல்… போச்சே… போஓஓஓ… “ என்று புலம்பியபடி இருந்த மீரா தொப்பென மயங்கி சரிந்தாள்.
“டேய் டேய்… என்னடா இது… புடிடா புடிடா… அட்டென்டர் அக்கா… கொஞ்சம் வாங்களேன்” என்று குரல்கொடுத்தாள் விதுரா. பின் துரிதமாக அவளும் மற்ற செவிலியரும் இணைந்து தூக்க முயன்றனர். சற்று கடினமாக இருந்தாலும் இடையில் வேந்தன் வந்து உதவிட, தூக்கி பப்புவிற்கு அடுத்த படுக்கையில் போட்டனர்.
“இவ என்ன பொத்துனு விழுந்துட்டா” என்று கேட்ட செவிலியர் அவளுக்கு அருகில் சென்று தட்டிப்பார்க்க, எந்தவித மாற்றமும் தெரியவில்லை.
கை நரம்பு பிடித்து இதயத்துடிப்பை சோதனை செய்ய சற்று வேகமாக இருந்தது.
“டேய் பல்ஸ் னைன்டி(90) கிட்ட இருக்குடா… டேக்கிகார்டியா போகுமோ… எதுக்கும் டாக்டரைக் கூப்பிடு” என்றவர், துரிதமாக 22ம் எண் கொண்ட நீல நிற வென்பிளான் எடுத்து, மீராவின் கைகளில் நரம்பு தேடி அதனைப் போட்டு விட்டார்.
இந்தப் பக்கம் மருத்துவருக்குத் தகவல் கொடுத்தவள், “அக்கா சிபிஜி (cbg) மிஷின் எங்க க்கா வச்சுருக்கீங்க… இவ பட்டினி கிடந்து விழுந்தாளானு தெரியலயே… மேடம் விரதம் விரதம்னு அடிக்கடி பட்டினி இருக்குறாங்க…” என்றவள், ஊசியினால் நடுவிரலில் சற்று குத்தி, குருதி எடுத்து சர்க்கரையின் அளவைக் காட்டும் இயந்திரத்தில் பொருத்தி நோக்க, அது ‘70’ என்பதாகக் காட்டியது.
“நான் சொல்லல… மேடம் சுகர் லெவல் எழுபதுல இருக்கு… இதுல எட்டு வருஷ காதோல பாட்டு ஒரு கேடு…” என்று கடுப்பாய்க் கூறினாள். அதற்குள் மருத்துவர் வர, மீராவை ஆராய்ந்தவர், “சிஸ்டர் இந்த நர்ஸ்கிட்ட பாடில கொஞ்சம் சேஞ்சஸ் தெரியுதுல… எதுக்கும் நீங்க நான் எழுதி தர்ற டெஸ்ட் மட்டும் எடுங்க… ரிசல்ட் வந்ததும் கன்பார்ம் பண்ணிக்கலாம்…” என்றவர் ஒரு சில இரத்த பரிசோதனைகளை மேற்கொள்ள கட்டளை இட்டார்.
அதோடு பப்புவை வந்து நோக்கியவர், “ஹவ் ஆர் யூ ஃபீல் நவ்…” என்று கேட்க, அதற்கு பப்புவும் , “ இப்ப பெட்டர் தான்… பட் ரொம்ப பாடி பெயினா இருக்கு…” என்றான்.
“நம்ம கட்டுப்பாட்ட மீறி கைவிரல்கள் எல்லாம் உட்பக்கமா இறுக்கமா மாறுது இல்லையா… எதிர்பாராத விதமா அவ்வளவு ஃபோர்ஸ் குடுக்குறதால பெயின் குறைய கொஞ்சம் டைம் எடுக்கும். ஹாஃப் அன் ஆர் வெயிட் பண்ணுங்க… பொறுத்து பாத்துட்டு அப்புறமா பெயின் கில்லர் போட்டுக்கலாம்” என்றவர் அடுத்த நோயாளியை கவனிக்க சென்றார்.
படுத்திருந்த பப்பு சற்று எழுந்து அமர முயல, உடல் ஒத்துழைக்கவில்லை. ஒரே நாளில் எதோ பெரிய வியாதியில் சிக்கியது போன்ற மாயை உருவாக்கி உடல் சோர்ந்தது. ஒரு ஓரமாக நின்றிருந்த வேந்தன், அவன் நிலை உணர்ந்து எழுந்து அமர உதவினான்.
“ஹலோ மிஸ்டர் நான் உங்களைக் கிளம்ப சொன்னேன் தானே… இன்னும் கிளம்பாம இருந்தா என்ன அர்த்தம்…” என்று விதுரா காய்ந்திட, அவன் பதிலேதும் சொல்லாமல் புன்னகை சிந்தியவன் எதுவும் கூறாமல் கிளம்பிச் சென்றான்.
பெருமூச்சொன்னை இழுத்து விட்டவள், மீராவிற்கு எடுக்க வேண்டிய பரிசோதனைக்காக இரத்தம் எடுக்க ஆயத்தமானவள் முதலாவதாக NS எனப்படும் திரவத்தை வென்பிளான் வழியாகப் பொருத்திவிட்டு, மற்றொரு கரத்தில் இரத்தம் எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பினாள்.
“என் எட்டு வருச காதலு… போச்சே போச்சே “ என்று கத்தியபடி மீரா எழுந்து அமர்ந்தாள்.
“அட கருமமே… இவ என்னடி எட்டு வருச காதலுனு புலம்புறா…” என்று குழப்பமாய் கேட்டார் அந்தச் செவிலியர்.
“இவளோட பெரும் ரோதனையாப் போச்சுக்கா… இருங்க “ என்றவள், அரை குறையாக மயக்கம் தெளியாமல் இருந்த மீராவைத் தட்டி படுக்கையில் துயில் கொள்ள வைத்தாள்.
“தலைவி பாரிவேந்தன்னு ஒருத்தனை பத்து வருஷம் முன்னாடி விரும்புனா. ஆனா அவன் மீனானு ஒரு பொண்ண விரும்பி கல்யாணம் பண்ணிட்டான்” என்றிட , “அச்சோ பாவம் தான் இந்த மீரா பொண்ணு” என்று பரிதாபப்பட, “க்கும்… மேடம்க்கு வயசு அப்போ பதிமூன்று, அவனுக்கு வயசு இருபத்தைந்து” என்றிட, “எதே…”என்று அதிர்ச்சியாக நோகினார் செவிலியர்.
“பப்பி காதல்… இவளுக்கு காலேஜ் படிக்கும்போதே அலையன்ஸ் பாத்து ஜாதகத்துல கோளாறுனு கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்ணிட்டு இருந்தாங்க. அப்ப இருந்து என் எட்டு வருஷ காதோல் னு பொலம்புவா.
அப்ப கூட அவனுக்கு கல்யாணம் ஆனது தெரியல. நாங்க காலேஜ்ல இருந்து அரவிந்த் ஐ (eye) ஹாஸ்பிடலுக்கு விசிட் போயிருந்தோம். அப்ப தான் பார்த்தா அவனும் அவன் புள்ளைக்கு கண்பார்வை மங்கலா இருக்குனு வந்திருந்தான். மேடம் ஷாக்காகிட்டாங்க.
அன்னைக்கு நைட் கோல்டுனு அமாக்சிலின் டேப்லெட் இரண்டு போடுறதுக்கு பதிலா அவில் (avil) டேப்லட் இரண்டு போட்டுட்டா… அதோட எஃபெக்ட் என்ன பேசுறோம்னு தெரியாம எட்டு வருச காதல் னு உளருவா… அதுல இருந்து சரியா தூங்காம இருந்தா தூக்க கலக்கத்துல எட்டு வருச காதலுனு புலம்ப ஆரம்பிச்சுடுவா.
இவ தொல்லை தாங்காம பாரினு பெயர் உள்ள அலையன்ஸா தேடி அது கிடைக்காம சாரதினு பெயர் வச்ச மனுஷன பாரினு பெயர் மாத்தி கல்யாணம் பண்ணி வச்சாங்க…
அப்படி பண்ணியும் அப்பப்போ என் எட்டு வருஷ காதோல்னு ஸ்டார்ட் பண்ணுவா… அப்ப எல்லாம் மிஸ்டர். பாரிசாரதி தட்டிக் கொடுத்து நல்லா தூங்க வச்சுடுவாரு. எல்லாம் காலக்கொடுமை க்கா “ என்றவள் உதட்டில் புன்னகை மலர்ந்தது.
எத்தனையோ காரியங்களில் துவண்டு போகும்போது ஒரு ஆறுதல் மீராவும் அவள் கணவனும் தான். பப்பு இந்த மூன்று வருடங்களாகத்தான் பழக்கம். அதற்கு முன்பிருந்தே , பள்ளிப் பருவத்தில் இருந்தே பழக்கம்… நெஞ்சை அடைக்கும் சில உண்மைகளை மறைக்காமல் வெளிப்படுத்தும் இடம் மீராவிடமே. பப்புவிடம் உள்ள உரிமை வேறு இவளிடம் உள்ள உரிமையே வேறு.
****
“ஹலோ… மிஸ்.மது இருக்காங்களா…”
“எஸ். மதுதான் பேசுறேன். வாட் யூ வான்ட்…”
“நான் குறிஞ்சி வேந்தன் பேசுறேன்டா பாப்பா”
“தெரியுது தெரியுது. யாரப்பத்தி இன்பர்மேஷன் வேணுமாம் சாருக்கு” என்று தெனாவட்டாக மது கேட்க,
“எல்லாம் என் நேரம்… புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிருக்கு “ என்றவன், “மிஸ்டர். வளவன் அன்ட் மிஸ். விதுரா” என்றவன் , சற்று நிதானமாகி
“இப்ப என்கிட்ட ஃபோட்டோஸ் இல்ல… பொண்ணோட ஃபோட்டோவ நைட்டுக்குள்ள சென்ட் பண்ணுறேன். பையனோடது நாளைக்கே தரேன். விதுராவோட மேரிட்டல் ஸ்டேட்டஸ் அன்ட் ஃபேமிலி பத்தி விசாரிச்சு சொல்லுடா “ என்றான்.
“என்னடா அண்ணா வாலிப காதல் தலைதூக்கிப் பார்க்குதோ… ஆனா இது யாரு புதுசா வளவன்… உனக்கு காம்பெடிஷனா இருப்பானோ…” என்று மது அவசரமாகக் கேட்க,
“டேய் நான் கேட்ட இன்பர்மேஷனே மேரிட்டல் ஸ்டேட்டஸ்டா… அவளுக்கு கல்யாணம் ஆகி இந்நேரம் குழந்தையே இருக்கும்… போடா போ… “ என்றவன் வலி நி
றைந்த சிரிப்போடு அலைபேசியை அணைத்து வைத்தான்.
*****
காலம் கடந்து யோசிக்கும் மனதுக்கு விடை என்ன கிடைக்குமோ…
தொடரும்…
நல்ல வெச்சுட்ட ஒரு ஆப்பை.. பப்பு பாவம்.. நீ இப்படி முக்கோண காதலை எழுதறதை நிறுத்திட்டு லவ் அண்ட் லவ்ல ஒரு காதல் கதையை எழுது.. முடியலடா அடேய் முடியல..
மீ அண்ட் மனசாட்சி: உன் கதைனா உன் இஷ்டத்துக்கு எழுதுவீயா.? எழுதுவீயா.? மண்டைலயே நாலு போடு போட போறேன் பாரு
🤣🤣🤣🤣
Thank you sis