அதிகாலை ஆதவன் தன் கடமைகளை சரி வர செய்ய.. இங்கு மாயாவுக்கு தலைவலி எடுத்தது இரவு முழுதும் அழுததனால் வந்த வினை..
மாயா அம்மா அகிலா வந்து காஃபி கொடுத்து விட்டு மாயா,” உன்கிட்ட கொஞ்சம் கதைக்கனும் வரியா..?
“மா என்னமா வாமா” வந்து உக்காரேன்..
“இல்ல மாயா.. நம்ம வெளிய போய்ட்டு பேசலாம்..”
“வாவ் சூப்பர் மா..”என்று கூறிவிட்டு இருவரும் கோவிலுக்கு சென்றனர்..
மாயா அன்று நீல நிற சல்வார் அணிந்து இருந்தாள்..
இருவரும் சாமி கும்பிட்டு விட்டு குளக்கரையில் அமர்ந்தனர்..
“மா சொல்லுமா..?
என்று மாயா கூறினாள்
மாயா அம்மா:”அது இல்ல பாப்பா, உனக்கு மேரேஜ் பண்றத பத்தி ஐடியா என்ன ?
மாயா:மா இதுக்கு தான் கூப்டியா..?
அகிலா:ஆமா டி உன் அப்பா தான் கேட்க சொன்னாரு..
மாயா:மாப்பிள்ளை யாரு மா ?
மாயா அம்மா :அந்த ஆஷிஷ் தான் மாயா..!!
மாயா:என்னமா? அவன் யாருனே தெரியாது பழகுனது கூட இல்ல..
அகிலா: ஏன் டி? அவனுக்கு என்ன குறை இருக்கு? அவங்க எவ்ளோ வசதியானவங்க..
மாயா:வசதி வச்சிட்டு நான் என்னமா பண்ண போறேன்..?
அகிலா:சரி டி சரியான காரணத்தை உங்க அப்பா கிட்ட சொல்லிரு..நான் பக்கத்துல ஒரு வேலை இருக்கு..போய்ட்டு வந்துறேன் என்று மாயா அம்மா கிளம்பி விட்டார்..
மாயா கார்த்திக்கு கால் செய்தாள்.. கார்த்திக் எடுக்கவே இல்லை..ஐந்து முறை அடித்து விட்டு எடுக்காமல் போக..
அவன் ஆபிஃஸ்கே கிளம்பி விட்டாள்..
இங்கு கார்த்திக்கோ “இவ எதுக்கு கால் பண்றா இந்த டைம்ல..”எரிச்சலடைந்து தன் வேலையை தொடர்ந்தான்..
சார்…”உங்கள பார்க்க மாயா வந்துருக்காங்க ஏதோ அர்ஜென்ட்டாம்” என்று வந்தான் அங்கு வேலை செய்யும் ஆள்.
கார்த்திக்: இன்னிக்கு.. “இவளுக்கு ஒரு முடிவு கட்டனும்” என்றபடி அரை மணிநேரம் நேரம் அனுமதி வாங்கி விட்டு
பக்கத்திலிருக்கும் பூங்காவிற்கு சென்றனர்..
மாயா தான் ஆரம்பித்தாள்..
மாயா:ஏன் கார்த்திக் கால் பண்ணா கூட எடுக்க மாட்டியா?
கார்த்திக்: ஏன் நீ நல்லா தான இருக்க
உனக்கு என்ன ஏதாச்சுமா ஆச்சு?
” நீ கம்பெனி எம்.டி நான் ஒரு சாதாரண எம்ப்ளாயி..”
உன்ன மாறிலாம் எனி டைம் மொபைல் வச்சுட்டு உக்காந்துட்டு இருக்க முடியாது…
கார்த்திக்கு படிக்கும் காலத்தில் கூட அடிமனதில் ஒரு சின்ன தாழ்வுமனப்பான்மை இருந்துக்கொண்டே இருக்கும்..மாயாவை பிடிக்கும் நேரமெல்லாம்…இந்த மனம் அவன் காதலை கொன்று விடும்
மாயா:கார்த்திக்,”எனக்கு
மாப்பிள்ளை பாத்துருக்காங்க,
எங்க வீட்ல.. “
ஆனால் இன்னமும் உன்னை தான் விரும்புறேன்..
இனிமேலும் உன்ன தான் விரும்புவேன்….!!
என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?
கார்த்திக்:வாட்..??”விளையாடாத மாயா உன் பேமிலிக்கும் எனக்கும் ஏணி வச்சா கூடா எட்டாது”
மாயா:ஸ்டாப் இட் கார்த்திக் ,”உனக்கு பிரச்சினை நானா?? இல்ல என்னோட ஸ்டேடஸ்ஆ??என்று குரலை உயர்த்தினாள்..
கார்த்திக்:இரண்டும் தான் மாயா..!!!
மாயா:ஓகே ஃபைன், கார்த்திக் உனக்கும் எனக்கும் தான் மேரேஜ் நடக்கும் இந்த மாயா நடத்திக் காட்டுவா.. என்றபடி கிளம்பி விட்டாள்..
கார்த்திக்கு ஒன்றும் புரியவில்லை.. யோசனையுடன் கிளம்பி விட்டான்..
💕💕💕💕💕
ஆஷிஷ் :என்ன ஆச்சு அங்கிள்? மாயா ஓகே சொல்லிட்டாளா?
விகாஷ் :இல்ல ஆஷிஷ், அவ டைம் கேட்டுருக்கா..அவங்க அம்மா சரியா சொல்லல…
ஓகே, “அங்கிள் நல்ல முடிவா சொல்லுங்க “என்று ஆஷிஷ் தான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு கிளம்பி விட்டான்..
விகாஷ் இதுபத்தி மாயா கிட்ட பொறுமையா தான் பேசனும் என்று நினைத்துக் கொண்டார்..காரணம் மாயா அன்புக்கு அடிபணிபவள்..
❤️❤️❤️❤️❤️❤️
கார்த்திக் ஆஃபிஸ்லில் சோர்வாக இருந்தான்.இவனுக்கு நெருங்கிய முறையில் நண்பர்கள் என்றால் அது அவன் டீம்மெட் மித்ரா மற்றும் வீரா தான்.
மித்ரா வசீகர தெத்துப்பல் அழகி.அவளை பார்க்கும் போது ஒரு கவரும் தன்மை அனைவருக்கும் வந்துவிடும்.அவளாகவே சென்று அனைவரிடமும் பழகும் குணமுடையவள்.கார்த்திக்கிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வாள்.
வீராவுக்கு மித்ரா மேல் கிரஷ்.
மித்ராவுக்கு கார்த்திக் மேல் கிரஷ்.
கார்த்திக்கோ மாயாவை எப்படி எதிர்க்கொள்வது என்று காதலும் இல்லாமல் கிரஷ்ஷும் இல்லாமல் நட்பும் இல்லாமல் ஏதோ ஒரு உறவாக நினைத்துக் கொண்டு வாழ்கிறான்.
டீம்மெட் மித்ரா: “என்னாச்சு கார்த்திக் ,ஏன் ஒரு மாறி இருக்க?
இல்ல மித்து எனக்கு மனசே சரி இல்லை..சில குழப்பத்துக்கான தீர்வுகள் கிடைக்கவே மாட்டிக்குது.பிராஜெக்ட்ஸ் வேற முடிக்கனும் அதான்
மித்ரா:கார்த்திக் எல்லா பிரச்சினைக்கும் தீர்வு இருக்கு.. கொஞ்சம் ஆறப்போடு.. காலம் பதில் சொல்லும்.அப்புறம் பிராஜெக்ட்ஸ் பத்தி கவலைப்படாத நம்ம இரண்டு நாள்ல பண்ணா போதும்.
என்று அவன் கையில் காஃபியை திணித்து விட்டு வேலை பார்க்க கிளம்பி விட்டாள்..
கார்த்திக் மனம் மாயா சொன்ன வார்த்தைகளையே திரும்ப திரும்ப சொன்னது..பணம் இருந்தா என்ன வேணா செஞ்சிறலாமா?” பார்க்கலாம் டி”என்று அவனும் தன் வேலையை தொடர்ந்தான்..
இங்கு மாயாவுக்கும் அவன் நினைவு தான்..
ஒருமுறை பள்ளியில் ஆண்டு விழா இறுதி ஆண்டு..
அன்று மாயா அழகாக வந்தாள்..
பலரும் சைட் அடிக்க அவளோ கார்த்திக்கிடம் தான் வந்து நிற்பாள்..
மாயா:நான் எப்படி இருக்கேன் டா?
கார்த்திக்: ஐஸ்வர்யா ராய் அழகில்லைனாலும் ஓகே பரவாயில்லை டி.
மாயா :போடா, என்று அடிக்கத் தொடங்கினாள்.
“உன் புருஷன் பாவம்டி…அடிவாங்கியே செத்துருவான்” என்று சொல்லிக் கொண்டே ஓடுவான்…
அவள் உள்ளுக்குள் வந்தது என்னவோ கார்த்திக் தான்..
தன்னுடைய நோட் பேடை எடுத்து கிறுக்கத் தொடங்கினாள்..
எங்கு சென்றாலும் உன் நினைவுகள் வாட்டி வதைக்குதடா…காதலை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று தெரியாத ம
டச்சி நான்..
அன்று செய்த பிழை இன்னும் உன்னில் ஆறாத ரணமாக ஆக்கிவிட்டேன்….
தொடரும்….
- Select