Loading

உணர்ந்திடுமோ இக்காதல் 💜 உரைத்திடுமோ 

அத்தியாயம் 1💜

இருவரின் ஆசைப்படி இணைந்தாலும் சொல்லப்படாத காதலில்  

காதல் இல்லை என்று 

கண்ணியம் தவறாது

அவன் அவள் நினைவொன்றே போதுமென்று

திடமாய் யோசித்து

தீர்க்கமாய் முடிவெடுத்து

அதுவே சரியென்று செயல்படுத்தி

உண்மை இதுவென தெரிந்த பின் 

இணைசேர துடிக்கும்  ஜோடிகளின் கதை”

 

எழில் கொஞ்சும் காலை பொழுது

மெதுவாய் கண்விழித்து எட்டி பார்க்கும் சூரியன்

அங்கும் இங்கும் காரணமின்றி பறந்து தன் உற்சாகத்தை வெளிப்படுத்தும் பறவைகள்

காற்றுடன் கை வீசி கிளைகளை அசைத்து ஆடும் மரம்

பாய்மர மக்கள் பசி ஆற்றிட நிப்பேனா என துள்ளி குதித்தோடும் நீரோடை 

ஜனங்கள் பற்றி சொல்லவா வேண்டும்

இவ்வளவு அழகாய் இருக்கும் அந்த காலை பொழுதை கண்டு ரசித்திட தெரியா மக்கள் தன் தேவைகள் என நாளும் ஒன்றை உருவாக்கி கிடைக்காத நிம்மதியை தேடி சந்தோசத்தை இழந்து அமைதி இல்லாமல் கடமை  என நினைத்து ஓடி இப்பொழுது வாழ்வும் சுமையென  ஆனது…

அழகிய ஒர் மண்டபம் 

தருண் தாரூவிக்கா என்னும் பெயரை சுமந்து நின்றது அந்த பல அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த வரவேற்பு பலகை 

பலகையின் வலப்பக்கம் ராதா காதலோடு விழி நோக்கி தன் காதலை கோகுல கண்ணனுக்கு புரிய வைத்துவிட்ட சந்தோசத்தில் மிதக்க

இடது பக்கம் சிரிப்பு என்றால் என்ன என கேட்கும் வண்ணம் இணைந்து இருந்த ஜோடி 

அவளின் திருமணத்தை எண்ணி மகிழ்ந்திட   முடியாத நிலையில் அவள் தாரூவிக்கா நான்கு அறைக்குள் அலங்காரம் என சொல்லி அடைத்து விடப்பட்டாள்

இங்கே தருண் குழப்பான மனநிலையில் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடித்து கொண்டு இருந்தான்…

ஆக மொத்தம் இவங்க கல்யாணத்துல இவங்கலுக்கே சந்தோசம் இல்லை சுத்தம் விளங்கும் 🤦

“அம்மா நாழி ஆயித்து மணமகனை வர சொல்லுங்கோ” என குரல் கொடுக்க 

மிடுக்கான நடையில் இயல்பான இவனுக்கு உரித்தான திமிர் பார்வையுடன் அமைதியாக வந்து அமர்ந்தான்.

ஐயர் சொல்லும் மந்திரங்களை நா மட்டும் கடமைக்கு என சொல்லிக் கொண்டு இருக்க மனம் அதன் கட்டுபாட்டில் இல்லாது பரிதவித்து கொண்டிருந்தது… 

மணப்பெண்ணை அழைத்து வாங்க‌ என கூற 

பெண்ணுக்கே உரித்தான நடையில் குனிந்த தலை நிமிராமல் ‌வந்து அமர்ந்தாள்

அருகில் தானே இருக்கிறாள் அவளை பாக்காமல் காரியமே கருத்தாய் ஓம ஹூண்டத்தில் பதனமாய் நெய் ஊற்றி கொண்டிருக்கிறான்.

அனைவரின் நல் ஆசியுடன் இருவரின் திருமணமும் அழகாய் நடந்தேறியது…

பல அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தார்கள்..

அமைதியாய் வந்து அமர்ந்தவளை ஒரு முறை பார்த்து விட்டு

நீ இங்க படுத்துக்கோ நா சோஃபாவில் படுத்துக்கிற என இயந்திரமாய் பேசி சென்றவனை கேள்வியாய் பார்த்தவள் அவளின் விதியை நினைத்து விரக்தியில் சிரித்து கொள்ள மட்டுமே முடிந்தது..

இருவரும் படுத்து விட்டனர் ஆனால், தூக்கம் தான் வருவேன்னா என்றது. 

புது இடம் என்பதாலோ இல்லை அவனின் அந்த இடைவெளியோ … ஏதோ ஒன்றை நினைத்து கரித்த அவள் கண்கள் எப்பொழுது உய்வெடுத்தது என்பது அவளேக்கே தெரியவில்லை… 

மெல்ல கண் விழித்தவள் அப்பொழுது தான் கவனித்தாள்  மணி 8 என காட்ட “அச்சோ” என தலையில் அடித்து கொண்டவள் நேற்றின் நினைவில் மூழ்கினாள் அவன்  சொன்னது தூக்கம் வராமல் தவித்தது நைட் தூங்கவே லேட் மெதுவாய் அறை சுற்றி பார்த்தவள்  அவன் இல்லை என்பது உணர்ந்து மெதுவாய் எழுந்து குளித்து முடித்து விட்டு வந்தாள்…

தயக்கமாய் அவள் நடந்து வர

ஓய் தாரூ,”இங்க வா என்ன மேடம் நல்ல தூக்கமா” என கண்ணடித்து கூற 

பதில் கூறாமல் மெதுவாய் சிரித்து மட்டும் வைத்தாள்

சரி வா வா அத்தை கூப்டாங்க என கூறி இழுத்து கொண்டு போனாள் தருணின் செல்ல தங்கை ஆத்விகா … 

இருவரும் ஒரே கல்லூரி ஓரே டிபார்ட்மெண்ட் ஓரே க்ளாஸ் என்பதாலே மிகவும் நெருங்கிய தோழியாகிருந்தனர்

“அம்மாடி வாடா” என்ன முகம் வாடி போய் இருக்கு ?

அங்க இங்கன்னு அலகழிச்சு புள்ள பாவம் கஷ்ட்ட பட்டுட்டா இனி நீ நல்லா ரெஸ்ட் எடுடா இப்ப மட்டும் போய் சாமிக்கு விளக்கு போட்டுட்டு வந்து எங்களுக்கு உன் கையால ஒரு ஸ்வீட் ரெடி பண்ணி கொண்டு பாப்போம்”

இவ்வளவு பாசமாக பேசும் மாமியாரை யாருக்குத்தான் பிடிக்காது குரலில் இவ்வளவு கணிவு கரிசனை காட்டிடும் இவளின் மாமியாரின் குணம் நன்கு அறிந்தவள் தானே  அதனாலயே இதமாய் சிரித்து அனைத்திற்கும் சரியென்றே தலையாட்டினாள்.

அரிசியை கழுவி, தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு துணியின் மேல் போட்டு பேன் காற்றில் பத்து நிமிடங்கள் ஆறவிட்டு எடுத்து மிக்ஸியில் சேர்த்து, கொரகொரப்பாக பொடித்து அரைத்து கொண்டாள்..

ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து பாலை ஊற்றி காய்ச்சி, அதில் பொடித்த அரிசி பொடியை சேர்த்து கைவிடாது கலந்து கொண்டே இருந்தாள்.

அடுத்து ½ கப் சர்க்கரை   மீண்டும் கிளறி விட்டு அதில் 10 முதல் 12 பிளான்ச் செய்யப்பட்ட பாதாம் மற்றும் பிளான்ச் செய்யப்பட்ட 10 முதல் 12 பிஸ்தாவை சேர்த்தாள்..இது தருணுக்கு பிடித்த ஸ்வீட்…

சுட சுட பால் பிர்னி பாயசம் கொண்டு வந்து கொடுக்க அனைவர் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி ரசித்து குடிக்கும் அவர்களை சிரிப்போடு பார்த்தவள் முகம் சட்டென வாடியது.. 

தருண் கடமைக்கென குடித்து முடித்து வெளியே சென்று விட்டான்..

இவர்களின் உட்கட்சி பூசல் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

சரியாக மூன்றே மாதம் முடிந்திருக்க  அவளே மெல்ல ஆரம்பித்தாள்..

நமக்குள்ள செட் ஆகும்னு தோனல நானும் சரியாகும்ன்னு நம்பி தான் இருந்தேன் ஆனா இது சரிவராது

உங்களுக்கும் இந்த மேரேஜ்ல விருப்பம் இல்லைன்னு நல்லாவே புரியுது அதனால நாம பிரிஞ்சரலாம் ..

கவலை படாதிங்க mutualஅ டிவர்ஸ்க்கு நானே சைன் பண்றேன் ப்ராஸஸ் வொர்க் பாத்துகிறேன் என கூறி இன்னும் பதில் வராமல் இருக்க அவன் முகத்தை பார்த்தாள்

அவனும் அவளைதான் பார்த்து கொண்டு இருந்தான் 

இரண்டு நிமிடம் அவளின் முகத்தையே உற்று பார்பவனின் வீச்சு தாங்காமல் முகத்தை திருப்பி கொண்டாள்

சரி ,என ஒற்றை வார்த்தையில் முடித்து எழுந்து சென்றவனை  மறையும் வரை வெற்று பார்வை பார்த்தவளின் கண்ணின் ஓரம் சிறு  துளி விழி தாண்டும்  முன்னே அதை இமை மூடி உள் வாங்கி கொண்டாள் …அவளின் வீட்டிற்கு நடையை கட்டினாள் கண்ணின் ஓரம் சிறு  துளி விழி தாண்டும் அதை இமை மூடி உள் வாங்கி கொண்டாள் …

“ஏங்க  இவ ஏன் இப்படி வந்து உக்காந்துருக்கான்னே  தெரியல

என்ன ஏதுன்னு விசாரிங்க போய்” 

“அவ நா கேட்ட எதுவும் சொல்ல மாட்ற

எனக்கு ஒன்னும் புரியல,

ஒத்த புள்ளைய போயிட்டான்னு ரொம்ப செல்லம் கொடுத்தீங்க “

“அவ கண் அசைக்கிறக்கு முன்னாடியே வாங்கி கொடுத்து .. வயசு புள்ளன்னு கண்டிக்காம விட்டுடீங்க

என்னையும் எதுவும் சொல்ல விடல இப்ப பாருங்க கட்டி கொடுத்த மூனு மாசத்துல  வாழ்க்கைய தொலைச்சுட்டு வந்து உக்காந்துருக்கா “

ஊர் உலகம் என்ன சொல்லும் அக்கம் பக்கத்தில இப்பவே அப்படி இப்படின்னு அரசல் புரசலா நம்ம புள்ளைய பத்தி தான் பேசுறாங்க

இனி இவ நிலைமை என்ன? என கண் கசங்கியவளை முறைத்து விட்டு,

“ந்தா இப்ப என்ன ஆயிபோச்சுன்னு உக்காந்து ஒப்பாரி வைக்கிற

நம்ம புள்ளைய பத்தி கண்டவன் ஆயிரம் சொல்லுவான் பெத்தவ உனக்கு எங்க போச்சு புத்தி? 

பேசுனாங்கலாம் இங்க வந்து மூக்க சிந்திட்டு இருக்க 

அவ என் புள்ள அவ மேலே எந்த தப்பும் இல்லைன்னு அவ இங்க வந்து உரிமையா உக்காரும் போதே புரிஞ்சுகிட்ட 

நீ தானா பத்து மாசம் சுமந்து பெத்த உனக்கு கூடவா அவ என்ன நிலைமைல வந்துருப்பான்னு தெரில? 

வந்த புள்ளைக்கு அருசனையா நாலு வார்த்தை பேசி ஆறுதல் சொல்லாம இப்படி அழுது என் புள்ளைய எச்சா அழ வைக்கிற? 

எதும் பிரச்சினைன்னா நம்ம வீட்டுக்கு வராம அவள எங்க போக சொல்ற

ஊருக்கு பயந்து என் புள்ளைய நா பாக்காம இருக்க முடியுமா இல்லை ஒதுக்கி தா வைக்க முடியுமா? 

கல்யாணம் பண்ணி கொடுத்த கையோட கடமை முடிஞ்சுதுன்னு கண்ண மூடி படுக்க சொல்றியா இல்லை நீ என்ன ஆனாலும் எவ்ளோ கஷ்ட பட்டாலும் புருசன் வீடுதா கதின்னு மனசாட்சி கொண்ணு வாழ சொல்றியா?

“போ போய் அவளுக்கு என்ன வேணும்னு பாரு”

“நா போய் என்னன்னு பேசிட்டு வர 

அதுவரைக்கும் ஊர் என்ன சொல்லும்னு சொல்லி அவள அழ வைக்காத”

என கூறிவிட்டு நடந்தார் அந்த பெரிய மனுசர் வீராய்யா பேருக்கும் குணத்துக்கும் பக்காவ பொருந்தும்

சிறுக சிறுக ஆரம்பித்து இப்போ ஊர்லயே ஒரளவு நல்ல பேரோட அரிசி மண்டி நடத்திட்டு வராரு..

கட்டி கொடுத்த வித்த மாடு எனக்கு சம்மந்தம் இல்லைன்னு கை விரிக்கிற ஒரு சில பெற்றோர் இருக்க மறு பக்கம் மானம் மரியாதை கௌரவம் லொட்டு லொசுக்குன்னு தன்னோட வசதி காட்ட பொண்ணு வாழ்க்கை என கூட பாராமல் தன் பெருமையை நிலைநாட்ட துடிக்கும் பெற்றோரும் இருக்க 

இவர் மட்டும் விதி விலக்காய் பெண்ணவளின் மனதை படித்தவராய் நடந்து கொண்டார் பின் தன் மார்பிலும் தோளிலும் போட்டு வளர்த்த செல்ல புதல்வி யின் வாழ்க்கை கேள்வி குறி ஆவதை அவர் மட்டும் எப்படி விரும்புவார் 

அவள்  மரகதம் தாரூவிக்கா வின் வெகுளி தாய் சின்ன வயசுல இருந்தே குடும்பம் … குடும்ப கௌரவம் மானம் என சொல்லி சொல்லியே வளந்தவள் 

பாசம் அக்கறை  என கூறி சிறையில் வைக்கப்பட்டவள் 

நல்ல கணவன் வாய்க்க அவளின் சிறை வாசத்திற்கு மட்டுமின்றி அவளின் ஆசைகளுக்கும் விடுதலை அளிக்க பட்டது..

இருப்பினும் அவர்கள் கற்றுக் கொடுத்த கௌரவம் மானம் மரியாதை  பயம் மட்டும் போகவில்லை..

என்ன தான் இருந்தாலும் பெற்றவளின் அன்பு மட்டும் சும்மாவா? 

அவளுக்கு மட்டும் தன் மகள் பாசம் இல்லாமலா  இருக்கும்?

“பொத்தி பொத்தி வளத்த பிள்ளை கட்டிக் கொடுத்த மூன்று மாதத்தில் வாழ மாட்டேன்” என வந்தாள் அவளின் மனம் பாடு வார்த்தைகளால் சொல்ல முடியுமா என்ன … ?

கண்ணீரை அழுத்தி துடைத்து சென்றாள்..

“தாரூ இங்க பாரு நீ  ஓன்னும் சொல்ல  வேண்டா எங்களுக்கு தெரியவும் வேண்டா ,

நீ தான்டா எங்களுக்கு முக்கியம் நீ உனக்கு என்ன சரின்னு படுதோ பண்ணு ஆனா இப்படி ஒடுங்கி போய் உக்காராத  பெத்த மனசு தாங்கலடி”

“நீ வா வந்து ஒரு வாய் சாப்பிட்டு நல்லா தூங்கி எந்திரி எல்லாம் சரியாய் போயிரும்”

அதுவரை இறுக்கமாய் அமர்ந்தவள் அம்மாவின் கரம் தலை வருட

அணை திறந்த வெள்ளமாய் மரகதத்தை அணைத்து கண்ணீர் வடித்தாள்..

தாய் அவளுக்குள் இருக்கும் சக்தி யாருக்கு உண்டு கணவரிடம் வடித்த ஒரு துளி கூட தன் மகளிடம் கிட்டவில்லை…

ஆறுதலாய் தலை நீவி 

“விடுடா பாத்துகலாம் நீ வா வந்து சாப்பிடு”அம்மா இருக்கேன்‌டா உனக்கு…

ஏன் என்ன என கேட்டிருந்தால் கண்டிப்பாக சொல்லிருப்பாள் தான் ஆனால் அவளை மீண்டும் மீண்டும் அதை‌ நினைத்து அழ வைக்க அவளுக்கு விருப்பம் இல்லை….

அன்னை அவளின் மடியில் தலை வைத்து அழுதவள் அப்படியே உறங்கி போக  தலை கோதியவாறே  விட்டம் பார்த்தவளின் விழியோரம் கண்ணீர் எட்டி பார்த்தது துடைக்கவும் மறந்து விட்டத்தையே வெறித்து கொண்டு இருந்தாள் மரகதம்…

“வாங்க வாங்க என்ன இது யாரோ வீட்டுக்குள்ள வர மாதிரி வரது 

உரிமையா வர வேண்டாமா ?

“வாங்க வந்து உக்காருங்க என்ன எங்க மகளை பாக்க வந்தீங்களா?

அம்மாடி அன்னம் ,”போய் மருமக புள்ளைய கூட்டி வா” என 

எதுவும் பேச விடாமல் பேசி முகம் கொள்ளா சிரிப்புடன் வந்து அமர்ந்தார் குணசீலன்

பேருக்கேற்றாற் போல் குணத்தில் உயர்ந்தவர்!!!

இவர் இவ்வாறு பேசுவதை பார்த்தவர் தன் மகள் வீட்டிற்கு வந்தது எதும் தெரியாது போலேயே

‘இவ்வளவு இனிமையான குடும்பத்தை இவள் ஏன் வேண்டாம்” என உதறினாள்

இவர்களின் அன்பை நாம் ஏளன படுத்திவிட கூடாது!

மாப்பிள்ளை வரட்டும் அவரிடமே கேட்போம் என மனதில் குறிப்பெடுத்தவர் 

அமைதியாய் இருக்க

அட என்ன சம்பந்தி பேசாம இருக்கீங்க?

என கூற,

சரியாய் தருண் கீழே இறங்கி வர,தாரூவின் அப்பா வந்திருப்பதை கவனித்தவன் எதற்காக வந்துள்ளார் என்பதையும் நன்கு அறிதிருந்தான்.

அவன் வர மாப்பிள்ளை என்ற மரியாதைக்கு எழப்போக,

உக்காருங்க சம்மந்தி நாம என்ன இன்னைக்கு நேத்தா பழகினோம் 

எதுக்கு இந்த மரியாதை ?என கூறவும் சிறு சிரிப்புடன் அமர்ந்தார்..

அவனும் அருகில் வந்து விட 

தம்பி உங்களுக்குள்ள எதும் பிரச்சினையா ?

“இல்லை நா ஏன் கேட்கிறனா அவ எதுனாலும் சகிச்சு போற புள்ள 

இரண்டு பேரும் பொறுப்பா இருக்கீங்க 

நீங்க  ஒன்னா இருந்தா சந்தோசமா இருப்பீங்கன்னு நம்பி தான் கொடுத்தோம் 

இப்ப என்னடான்னா அவ இனி இந்த வாழ்க்கை வேண்டாம்னு வந்து உக்காந்துருக்கா எனக்கு ஒன்னும் புரியல”என ஆற்றாமையில்  பேச

என்ன சொல்ற வீரா?

“வாழ்க்கை வேண்டாம்ன்னா அப்படி என்ன ஆச்சு 

எங்களுக்கு எதுவும் தெரியலேயே ப்பா”

ஏன்டா தருண், வீரா சொல்றது எல்லாம் உண்மையா?என தன் மகனால் எதுவும் நடந்திருக்காது என்ற நம்பிக்கையும் பல நட்பின்  ஆழத்தை இந்த ஒரு திருமணம் அழித்து விடுமோ என்ற பயத்திலும் கோபமாய் கேட்க…

“ஆமா ப்பா” தாரூக்கும் எனக்கும் செட் ஆகும்னு தோனல

அவ வாழ்க்கை என்னால கெட்டு போக வேண்டாம்னு தான் நானே டிவர்ஸ்க்கு அப்ளே பண்ற ன்னு சொன்ன.. 

வேறெதுவும் கேட்காதீங்க 

வீரா அங்கிள் மேலே அவங்க குடும்பத்து மேலே எனக்கு நிறையா மரியாதை இருக்கு பாசமும் இருக்கு ஆனா இந்த கல்யாணம் இது வேண்டாம்…

அப்போ மருமக வீட்டவிட்டு போக நீதான் காரணம் அப்படிதானா? என குரலில் சற்று கடுமை கூட்டி கேட்க

“ஆமாம்” என்பதாய் தருண்  தலை குனிய,

அடிக்க ஓங்கியவர் அப்படியே நின்றார்..

உன்ன நம்பி வந்த பொண்ண இப்படி மூனு மாசத்துல வேண்டாம்னு சொல்ல உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு?

உன்னதான் கேட்கிறேன்

அப்படி என்னப்பா உனக்கு ஆயி போச்சுன்னு நீயே முடிவு எடுத்துருக்க?

நாங்கலாம் இருக்கோம்னு நினைச்சியா ?

“சரி விடு என்கிட்டையாவது  சொல்லிருக்கலாம்ல ?

நான் தான, “என் பையன் உங்க பொண்ண கண் கலங்கமா பாத்துபான்னு சொல்லி வாக்கு கொடுத்த நா இங்க ஒருத்தன் இருக்கான்னு இல்லை இவன் ட்டா ஏன் சொல்லனும்னு நினைச்சியா  செத்துடான்னு நினைச்சியா” என ஆத்திரத்தில் கத்த,

கூடி இருந்த குடும்பம் முழுவதும் கலங்கியது..

ஏய் ,என்னப்பா நீ ?

“பேசக் கூடாதுல பேசிட்டு இருக்க சின்னஞ் சிறுசுக எதோ பிரச்சினைல  முன் அனுபவம் இல்லாம. இப்படி பண்ணீருச்சுங்க நாம தான வயசுல பெரியவங்க ன்ற முறையில எடுத்து சொல்லனும்”

நீயும் இப்படி பேசுனா நீயாயமா? குண சீலா என அவரை கட்டு படுத்தினார் …

வீராய்யா வின் சொல்லிற்கு மட்டுமே தணியும் குணசீலனின் கோவம் பல வருட நட்பின் அடையாளம் அல்லவா இவர்களின் இந்த அன்னுனியம்.. 

தாரூவிக்கா அவளையும் வர வைச்சு பேசிய போதும் என்ன பல அறிவுரைகள் கூறிய போதும் அவர்களின் முடிவில் மாற்றம் இல்லை என்பதை உணர்ந்து வேறு வழியின்றி அவர்களின் முடிவிற்கு இசைந்தனர் பெற்றோர்…

ஆனால் இந்த நிமிடம் வரை தருண் தான் விவாகரத்து கேட்டதாக இரண்டு குடும்பமும் நம்பியது அப்படி நம்ப வைத்தான் என்று கூறலாம் பின் கட்டியவளை யாரேனும் அவதூறு கூறிவிட்டால் கணவன் மனம் அவளை விட இரண்டு மடங்கு உடைந்து விடும் என்ற பயமே அதிகம்…

இயந்திரமாய் நாட்கள் நகர்ந்தது

குணசீலன் தருணிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்தார் குடும்பத்தாரும் சிறு கோபத்தில் தான் இருந்தனர் பெற்றவள் பாவம் என்ன செய்வாள் பெற்றெடுத்த பிள்ளை கல்லால் அடித்தாலும் துடைத்து விட்டு சிரிக்கும் மனம் அல்லவா அதிலும் தருணின் கள்ளகபடம் இல்லா அவனின் தாய்க்கு கோபம் கூட கண்ணீர் கொண்டே காட்டுவாள் .. அவனுக்கு என் இப்பொழுது இருக்கும் ஒரே ஆறுதல் அவன் தனிமை மற்றும் தாயின் மடி.. 

சட்டப்படி பதிவு செய்யப்படாத திருமணம் இது குலதெய்வ வழிபாடு இரு வீட்டாரின் குடும்ப விருந்து மாமன் மச்சான் அழைப்பு விருந்து என அனைத்திற்கும் சென்று முடித்து விட்டு இதோ நாளை தவறாமல் பதிவு செய்து விட வேண்டும் என நினைத்த திருமணம் பதிவு செய்யாமலேயே முடிவு பெற்றது …

என்னதான் ஆயிரம் வலிகள் சொல்லாமல் மறைத்தாலும் தருண் தாரூவிக்கா வின் மனம் இதில் ஒன்றை நினைத்து ஆறுதல் கண்டது 

” இனி உனக்கு பிடிச்ச பொண்ண கட்டிக்கோ நீ சந்தோசமா இருக்கிறதா பாத்த அது எனக்கு போதும் “

நாட்கள் அதன் போக்கில் செல்ல இருவர் மட்டும் கடந்த காலத்தில் சிக்கி தவிர்த்தனர் …

என்றும் போல் தன் அழுகை சந்தோசம் என அனைத்தும் கொட்டி தீர்க்கும் இடமாய் திகழும் அருவிக்கு சென்றாள்

அவள் வீட்டில் இருந்து இரண்டரை கிமீ தொலைவில் இருக்கும் அந்த குட்டி அருவியில் எந்நேரமும் நீர் இருந்தே பசுமை காக்கும் ….

அதனாலேயே அங்கு போக்குவரத்து அந்த ஊர் மக்கள் செய்வதில்லை இருக்கும் ஒரு வளத்தை அழித்து விட எண்ணமும் இல்லை…

ஆரவாரம் இல்லாத இந்த அருவி தான் இவளின் முழுநேர தோழி

வழக்கம் போல் தன் கவலைகளை கண்ணீராய் கூறியவள் போதும் என  எழுந்து வீட்டை நோக்கி நடந்தாள்

“ஏய் தாரூ தாரூ” 

என அழைக்கும் சத்தம் கேட்க 

திரும்பி பார்க்க அவளின் பால்ய சிநேகிதி இன்முகத்தில் சிறு கோபம் கொண்டு முறைத்து கொண்டு இருந்தாள் துளசி.. 

இவளும் தருண் தாரூவிக்கா ஆத்விகா அனைவரும் ஒரே கல்லூரி 

என்னடி நா கத்திட்டு இருக்க நீ வாட்டுக்கு கண்டுக்காம போற?

“கேக்கல துளசி “என குரலில் வலிமை இன்றி சொல்ல

“ஏதோ சரியில்லை “என்று உணர்ந்தவள் என்ன என்று விசாரிக்க

முதலில் சொல்ல மறுத்தவள் பின் அத்தனையும் கொட்டி தீர்த்தாள் அழுகையுடன்

ஏய் என்னடி சொல்ற தருண் வேற பொண்ண லவ் பண்றானா ?அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல் அவள் கேட்க,

“ஆமா துளசி அவனுக்கு வேற பொண்ண பிடிச்சுருக்கு “

“அவன் என்னை லவ் பண்ணலடி 

நான் தான் பையத்தியம் மாறி தருண் தருண்னு நினைச்சுட்டு இருந்திருக்க …

ஆனா அவனுக்கு அப்படி இல்லை போலடி”

“இருந்திருந்தா நா போறேன்னு சொல்லும் போது சரின்னு சொல்லிட்டு போயிருப்பானா சொல்லு ..?.

அதா,என்னால ஏன் கஷ்டம்னு வந்துட்ட

என கேள்வியும் அதற்கு பதிலும் என அனைத்தும் கூறினாள்

இதை கேட்டவள் தலை வெடித்து விடும் போல் இருந்தது..

என்ன காரியம் பண்ணீட்டு வந்துருக்க தாரூ நீயென்ன லூசா ? அவன் வேற பொண்ண லவ் பண்ணா உன்ன‌ ஏன்டி கட்டிகனும்?

“அம்மா அப்பா க்காக” என கூறியவளை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்து கொண்டு இருந்தாள். 

ஆமா அம்மா சொன்னாங்க அப்பா சொன்னாங்கன்னு உன்ன கல்யாணம் பண்ணல  …‌அவ லவ் பண்றது என்னமோ உண்மைதான்… ஆனா,

ஆனா,

அந்த பொண்ணே நீதான் டி

இதை கேட்டவளின் மனதில் பல நாள் பூட்டிய வீட்டில் விளக்கை ஏற்றியது போல் பிரகாசம் மின்னியது அவள் விழியில்…

நான் கேட்டது உண்மைதான இதை நம்பலாமா .. இவ நம்மள சரி பண்ண இப்படி சொல்றாளா ஆனா இப்படி அவ சொல்ல வேண்டிய அவசியமில்லையே இது உண்மையா‌ இருந்தா ஏன் தருண் என்ட்ட சொல்லல ன்னு அவள் சொல்வதை நம்பாமல் ஆனந்தத்தை கூட இழுவையில் வைத்திருந்தாள் அவள் தாரூவிக்கா..

தாரூவிக்கா தருண் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் இவர்களுடைய அம்மா அப்பா நட்பும் இவர்களால் உருவானது தான்

இப்பொழுது நண்பர்கள் ஏன் காதலர்கள் ஆகக்கூடாது என்ற கேள்விக்கு பதிலாய் அமைந்தவர்கள் … 

சிறுவயதில் இருந்தே ஒன்றாக இருந்தாலோ என்னவோ தருண் தாரூவிக்கா ஆத்விகா அனைவரும் நெருங்கிய உறவுகளாய் மாறினர்

தாரூவிக்கா தன் நாளின் பெரும் பகுதியை தருணிடன் விளையாடுவதிலேயே கழித்தாள் 

மழலை பருவம் முடித்து பள்ளி பருவம் தொடங்க சண்டை போட்டு மூவரும் ஓரே பள்ளியில் சேர்த்தனர் அங்கு மூவருக்கும் கிடைத்த தோழிதான் துளசி 

பன்னிரண்டாம் வகுப்பு வரை நண்பனாய் மட்டும் பார்த்தவள் 

நண்பர்களின் கலாய் உந்த அவன் காட்டும் இவள் மீதான அன்பு எப்பொழுது காதல் என மாறியது என்பது அவளுக்கே வெளிச்சம் 

ஆனால் கூற விரும்பவில்லை அவளுக்குள் வைத்தே ஓவ்வொரு நிமிடமும் அவனுடன் கற்பனையில் பேசி பழகினாள் …

இதோ என கல்லூரி வாழ்க்கை அழைக்க நான்கு பேரும் அதே கல்லூரியில் சேர்ந்தனர் 

அவளின் காதல் சிறிதளவேனும் குறையவில்லை மேலும் மேலும் கூடியது அவன் மீதான காதல் 

இதற்கிடையில் தான் அவனும் ஒரு பொண்ணை விரும்புவதாக தெரிய வர உடைந்து போய் விட்டாள் 

அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அவனின் அந்த காதலி அவள் தான் என்று

அதன் பின் அவனின் பார்வையை அறவே தவிர்த்தாள் அவனின் காதல் தன்னால் பறிப் போகக் கூடாது

தான் நல்ல தோழியாய் பார்த்தவள் தன்னை காதலனாய் கணவாய் நி

னைத்திருந்திருக்கிறாள் என்று நினைக்கவே அவள் உள்ளம்  பதை பதைத்தது

இங்கு இவனுக்கும் அரசல் புரசலாக தாரூவிக்காவின் காதல் தெரிய வர அந்நொடியே காதலை விட்டான்

இந்நிலையில் தான் இருவரின் திருமணமும் நிச்சயிக்கப்பட்டது 

இருவீட்டாரின் பெற்றோரும் இவர்களின் காதலை உணர்ந்தவராய் அவர்கள் கூறும் முன்பே அனைத்தும் நடந்தேறியது…..!

தொடரும்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்