Loading

இமைகளின் இடையில் நீ..3

 

தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த புதியவனை, “வாவ் சினிமா ஹீரோ மாதிரி செம்ம அழகா இருக்காங்களே..!!” என்று வியப்பாக மனதில் நினைத்த எழில் அவனை விழியகலாமல் பார்த்து கொண்டு இருந்தாள்..  அவள் பார்வையில் வியப்பும் ஆர்வம் மட்டுமே.. அதுவும் சில நொடிகள் மட்டுமே நீடித்தது.. அழகை ரசிக்கும் ஆர்வம் மட்டுமே அவள் விழிகளில்..

 

 

இருவரின் அருகில் வந்த ஆடவன், இருவரையும் ஒரு நொடி ஆராய்ச்சியாக பார்த்தவன் “என்ன பிராப்ளம்?.. ஆர்பாட்டம் இல்லாத அழுத்தமான குரலில் கேட்க, அவனின் தோரணை அஷ்வினிற்கு புகைச்சல் கொடுக்க அவனை மட்டம் தட்டும் நோக்கில் “நீ தான் இந்த ஹோட்டல் மேனேஜரா?..” என்று அவனை ஒருமையில் விளித்து அதட்டலாக கேட்க

 

”அயாயோ சார்..! அவர் இந்த ஹோட்டல் எம்..” என்று  ரிசப்ஷனிஸ்ட் மறுத்து எதையோ கூற வர, அவளைத் தன் கண் பார்வையில் அடக்கியவன், அஷ்வினை பார்த்து “உனக்கு என்ன பிரச்சினை என்று நீ சொல்லவே இல்லை..” என்று குரல் மாறாமல் கேட்க,

 

அந்த ஆடவன் தன்னை ஒருமையில் அழைத்து பேசியவனை, அதுவும் தன் வருங்கால மனைவி முன் தன்னை மரியாதை இல்லாமல் பேசியதில் வெகுண்டவன், கை முஷ்டியை மடக்கி தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு, 

 

 

“உனக்கு எவ்வளவு தைரியம் என்னை வா போ என்று மரியாதை இல்லாமல் பேசுவ.. உங்க ஹோட்டல் எம்டி ய கூப்பிடு..” என்று கட்டளையிட, “நீ கொடுப்பது தான் திரும்ப கிடைக்கும்.. உங்க செல்ஃரெஸ்பெக்ட் விட்டு கொடுத்த கஸ்டமரை கன்வின்ஸ் செய்ய கூடாது என்று எங்க எம்டி கட்டளை.. சோ கிவ் ரெஸ்பெக்ட்..! அண்ட் டேக் ரெஸ்பெக்ட்..” என்றவன் பேச்சை 

 

 

காதில் வாங்காத அஷ்வின் அதை கண்டு கொள்ளாமல் “கஸ்டமருக்கு கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் தரமாட்டிகிறிங்க.. ரூம் இருந்தும் இல்லை என்று சொல்றிங்க இப்படி இருந்தால் இந்த ஹோட்டல் நல்லா போகும்..” என்று நக்கலாக கூறிய அஷ்வின் முதல்ல இவங்களை வேலை விட்டு தூக்குங்க.. அப்படி செய்யலேன்னா உங்க வேலையும் இல்லாமல் போகும்..” என்று அந்த ரிஷப்சனிஸ்ட்டை புகார் கூறிய அஷ்வின் தன் எதிரே நின்றிருந்தவனிடம் கட்டளையிட்டு, எச்சரிக்க கைகளை மார்பின் குறுக்காக கட்டிக்கொண்டு பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக அஷ்வினை பார்த்திருந்த ஆடவன்,

 

 

“அவங்க நாங்க சொன்ன வேலையை தான் செஞ்சாங்க மிஸ்டர்.. அதோட என் வேலை பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம்.. உங்க கூட  இந்த பாப்பா இருக்கிறதால் நீ ஹீரோயிசம் காட்ட முயற்சி செய்றிங்க என்று எனக்கு நல்லாவே புரியுது பிரதர்.. ஆனால் பாருங்க அதை இங்க எங்க ஹோட்டல்ல காட்ட முடியாது பிரதர்.. எங்க ஹோட்டலுக்கு ரூல்ஸ் ஒண்ணு இருக்கே.. 

 

 

அதை எங்களால் பிரேக் பண்ண முடியாது.. சோ உங்க ஹீரோயிசத்திற்கு தகுந்த மாதிரி நீங்க வேறு ஹோட்டல் பாருங்க பிரதர்.. இதையும் மீறி நீங்க எங்க ஹோட்டல் பத்தி கம்ப்ளெயிண்ட் செய்தால், நீங்க தான் எங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி வரும்..” என்று எச்சரிக்க

 

 

 

“என்ன சார் மிரட்றிங்களா?.. பணம் எனக்கு ஒரு விசயமே இல்லை.. கொஞ்சம் பணம் கொடுத்தால் போதும் இந்த ஹோட்டலை இல்லாமல் செய்ய ஒரு மணிநேரம் கூட ஆகாது..” என்று அஷ்வின் மிரட்ட  லேசாக உதடு வளைத்து தலையசைத்து அதை ஏற்றுக் கொண்டு தாராளமாக செய்ங்க மிஸ்டர்.. நாங்களும் வேறு ஹோட்டல் வேலை சேர்ந்துப்போம் எங்க எம்டி எங்களுக்கு சம்பளம் தர மாட்டிகிறாங்க..” என்றவனின் குரலில் நிச்சயமாக நக்கல் நையாண்டி இருந்ததை எழில் உணர்ந்தாள்.. ஆனால் அஷ்வின் உணராமல், 

 

 

நான் சொன்னது சரியா போச்சு வர கஸ்டமரை இப்படி இன்சல்ட் செஞ்சா ஹோட்டல் எப்படி ரன் ஆகும் உங்களுக்கு சம்பளம் எப்படி வரும்.. நான் கம்ப்ளெயிண்ட் கொடுக்க தான் போறேன்..” என்று சொன்றதையே சொல்லி கொண்டு இருந்த அஷ்வினை பொறுமை இழந்து பார்த்தவன் எங்க ஹோட்டல் ரூல்ஸ் சொல்லிட்டோம், கம்ப்ளெயிண்ட் செய்தால் என்ன ஆகும் என்று 

 

 

நாங்க வார்ன் பண்ணிட்டோம் இதுக்கு மேல நீங்க கம்ப்ளெயிண்ட் கொடுக்க நினைச்சா தாராளமா கொடுங்க..” என்றவன், “அவங்க நம்பர் உங்க கிட்ட இருக்கா?.. இல்லைனா ரிசப்ஷன்ல கேட்டு வாங்கிக்கோங்க..” என்று கேலியாக கூற, அவனின் நக்கல் பேச்சில் முகம் கன்ற நின்றிருந்த எழிலிற்கு வயிற்று வலி வேறு இன்னும் அவளை வாட்ட,

 

 

 

“ப்ளீஸ் அஷ்ஷீ நம்ம வீட்டுக்கு போகலாம்.. எனக்கு முடியலை..” என்று வலியில் முகம் சுளித்தபடி கூற இருவரையும் சில நொடிகள் கூர் விழிகளால் அளவிட்ட அந்த ஆடவன், இனி நீங்க இங்க இருப்பதும் கிளம்புவதும் உங்க விருப்பம்..” என்று அசட்டையாக கூறிய அந்த ஆடவன், அங்கிருந்து கிளம்ப,

 

 

“அஷ்ஷீ ப்ளீஸ் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நம்ம வீட்டுக்கு போகலாம்..” என்று எழிலின் பலவீனமான குரல் நடந்து கொண்டிருந்தவனின் நடையை நிறுத்த வைத்து அவளை திரும்பி பார்க்க வைத்தது.. 

 

 

“உனக்கு என்ன செய்யுது லிட்டில் கேர்ள்?..”  என்று நேரடியாக எழிலிடமே அந்த ஆடவன் கேட்க, எழில் யாரை கேட்கிறாங்க?.. என்று நினைத்து சுற்றும் முற்றும் பார்க்க “உன்னை தான் லிட்டில் கேட்கிறேன்.. உனக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா?..” என்று மீண்டும் எழிலிடம் கேட்க, “லிட்டில் கேர்ளா?.. நானா?” வியப்பும் திகைப்புமாக பார்த்து கொண்டு இருக்க 

 

 

“மிஸ்டர்.! உங்களுக்கு அவகிட்ட என்ன பேச்சு அவ என்னோட ஃபியான்சே..” என்று அஷ்வின் அந்த புதியவனை அதட்ட, “ஓ அதனால் தான் அவங்க எனக்கு முடியலேன்னு  ரொம்ப நேரமா சொல்லிக்கிட்டே இருக்காங்க, நீங்க கவனிக்காமல் என் கூட ஆர்க்கியூமெண்ட் செய்வதில் மும்முரமாக இருக்கிங்களா?.. என்று நக்கலாக கேட்க

 

 

“அது உங்களுக்கு தேவை இல்லாத விசயம் அதை நான் பார்த்துக்கிறேன்.. அதோடு அவ லிட்டில் இல்லை என்னோட பேபி மைண்ட் இட்..” என்று அந்த ஆண்டவனிடம் கோபமாக கூறிவிட்டு “உன்னை வீட்டில் விட்டு வந்து இவங்களை கவனிச்சிக்கிறேன்” என்று கருவிக் கொண்டு எழிலை அழைத்து செல்ல, எழிலை பார்த்த அந்த புதியவன் “ஓ காட்..!!” என்று ஒரு நொடி திகைத்து மறுநொடி

 

 

 

“லிட்டில் கொஞ்சம் நில்லு..! என்றபடி எழிலின் அருகில் வந்தவன், அஸ்வினிடம் திரும்பி, வார்த்தைக்கு வார்த்தை உங்க பேபி என்று  மட்டும் சொன்னா பத்தாது.. அப்போ இருந்து உடம்பு சரி இல்லைன்னு சொல்லிட்டு இருக்காங்களே என்னன்னு பாத்தீங்களா?.. அவங்க ட்ரெஸ் பின் பக்கம் பாருங்க..” என்று கோபமாக கூற, அவன் கூறியதில் எழிலுமே திகைத்து சற்று திரும்பி தன் பின் பக்கம் பார்த்தாள்.. 

 

 

அங்கு அவள் உடையில் சிவப்பு திட்டுக்களாக ரத்த கறை படிந்திருக்க, அதை பார்த்த எழிலிற்கு அவமானமும் அழுகையும் சேர்ந்து வர அங்கிருந்த இருக்கையில் முகத்தை மூடிக் கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டாள்..  “ஹேய் பேப் உனக்கு பீரியட்ஸ் ஆகிருச்சா?..” என்று அஷ்வின் முகம் சுளித்தபடி கேட்க, அவன் முகச்சுளிப்பில் முகம் கன்ற அவள் ஆம் என்று தலையை மட்டும் அசைத்து அழுதபடி இருக்க,  

 

 

“இந்த தேதி எல்லாம் முன்னாடி நீ தெரிஞ்சிக்க மாட்டியா பேபி.. இப்படியே என் கார்ல வந்தா கார் எல்லாம் இந்த ப்ளட் ஆகிடும் எனக்கு இதை பாரத்தாலே அருவருப்பாக இருக்கும்..  நான் உனக்கு வேற கேப் புக் பண்றேன் நீ அதுல போ பேபி.. பயப்படாத நான் உன் பின்னாடி தான் வருவேன்.. எழுந்திரு வா போகலாம்..” என்று அவளை எழுப்ப

 

 

அஷ்வின் பேச பேச எழிலிற்கு மிகவும் அவமானமாக இருந்தது.. அதுவும் இவ்வளவு நேரம் தங்களை ஏளனமாக பார்த்து பேசிய அந்நிய ஆடவன் முன் இப்படி பேசியது முள் கம்பியில் மாட்டிய ஆட்டு குட்டியாக துடித்தாள்..

 

 

அவள் மனநிலையை நன்றாக புரிந்து கொண்டு அஸ்வினிடம் வாதாடாமல் எழிலிடம் திரும்பி “இங்க பாருங்க லிட்டில் இது நீங்க நினைக்கிற மாதிரி இது ஒண்ணும் அருவருப்பான விசயம் இல்லை..  பெண்களுக்கு இயற்கை கொடுத்த  வரம்..  நிஜமாகவே நீ எனக்கு இப்ப லிட்டில் கேர்ள் மாதிரி தான் தெரியறிங்க.. அதனால் என்றபடி எழிலை நெருங்கியவன்,

 

 

அவள் என்ன என்று உணரும் முன்பே தன் கோர்ட்டை கழட்டி எழிலின் இடையோடு கட்டி விட்டிருந்தான்.. எழில் அவன் செயலில் உறைந்து போய் அமர்ந்திருக்க, “இப்ப எழுந்து நில்லு லிட்டில்..” என்று கூற  “இங்க என்ன நடக்குது?.. ஹலோ யார் நீங்க?.. இதெல்லாம் என் பேபிக்கு நீங்க ஏன் செய்றிங்க..?” என்று அஷ்வின் இருவருக்கும் இடையே வந்து நின்றபடி கேட்டவன், 

 

 

அந்த ஆடவன் எழில் இடையில் கட்டியிருந்த கோர்ட்டை கழட்டி கிழே போட்டவன் தான் அணிந்திருந்த கோட்டை எழிலிற்கு கட்டி விட்டு, “தேவை இல்லாத விசயத்தில் தலையிடாதிங்க என்று அந்த ஆடவனை எச்சரித்து எழிலை நிற்க வைக்க, அவள் வலியில் முகம் சுளிக்கவும், “நான் வேணா உன்னை தூக்கவா லிட்டில்” என்று கேட்டுக் கொண்டே கைகளை விரித்து வைத்து எழிலை தூக்க வர, அதற்குள் அஷ்வின் எழிலை தூக்கி இருந்தான்..

 

 

“என் ட்ரெஸ் அழுக்காக ஆனாலும் பரவாயில்லை.. நானே உன்னை தூக்கறேன் பேபி..” என்றவாறே எழிலை தூக்கி கொண்டு அந்த ஹோட்டலை விட்டு வெளியேறினான்..

 

 

அஷ்வின் கைகளில் இருந்த எழிலிற்கு நடப்பதை நம்ப முடியவில்லை.. அவ்வளவு நேரம் தங்களை கேலியாக, ஏளனமாக பார்த்து பேசிக்கொண்டு இருந்தவன், திடீரென்று தன் மீது அக்கறை காட்டி அன்பாக பேசியதோடு மட்டுமில்லாமல், அவன் உடையை தனக்கு கட்டி விட்டது எல்லாம் நம்ப முடியாத வியப்பாக இருந்தது..

 

 

அதிலும் தான் அதை ஏற்றுக் கொண்டது தன்னை நினைத்து இன்னும் வியப்பாக இருந்தது.. அதெப்படி முன்ன பின்ன அறிமுகம் இல்லாத பெண்ணிடம் இப்படி நடக்கலாம்?..” என்று கோபமாக நினைத்தபடி அஷ்வின் கைகளில் இருந்தவாறே அந்த ஆடவனை முறைத்துப் பார்க்க

 

 

அவனோ அவளை பார்த்து கண்சிமிட்டி சிரித்தான்.. அவன் கண்களை பார்த்து கொண்டே இருக்க அவர்கள் பின்னாடியே வந்தவன், “லிட்டில் இவர் தான் உன்னை வேற கார்ல அனுப்பறேன் சொன்னாரே நான் என் கார்ல ட்ராப் செய்றேன் வா லிட்டில்..” என்று கூறிக்கொண்டே அஷ்வின் அருகில் வர, 

 

 

“ஒண்ணும் தேவை இல்லை.. என் பேபியை நான் என் கார்ல கூட்டிட்டு போவேன்..” என்ற அஷ்வின் அவளை தன் காரில் அமர வைத்து ஓட்டி சென்றான்.. தனக்கு பீரியட்ஸ் என்றதும் முகம் சுளித்தபடி ஒதுங்கி நின்ற அஷ்வின் இப்போது தன்னை தூக்கி செல்வதும், தன் காரில் அமர வைப்பதும் கண்டு இப்போது தான் எழிலிற்கு அனைத்தும் புரிந்தது.. 

 

 

அந்த ஆடவன் அஷ்வினை தூண்டி விடுவதற்காக தன்னிடம் அக்கறை காட்டுவது போல் நடித்திருக்கிறான்.. ஒரு பொம்மை தன் கையில் இருக்கும் வரை அதை அசட்டையாக வைத்திருக்கும் குழந்தை, அதே பொம்மையை இன்னொரு குழந்தை பிடுங்க வரும் போது இது தன் பொம்மை உனக்கு தர மாட்டேன் என்று உரிமை உணர்வு வருமே.. அப்படி ஒரு உணர்வை தான் இந்த ஆடவன் அஷ்வினிற்கு வரவழைத்திருந்தான்.. அருவருப்பில் விலகி நின்ன அஷ்ஷிவை விரும்பி வர வச்சிட்டாங்களே..” என்று வியப்பாக நினைத்த மறு கணமே

 

 

ஆனால் இப்படி யாரோ ஒருவர் தூண்டி விட்டு தான் அஷ்வின் தன் மீது அக்கறை காட்ட வேண்டுமா என்று மனம் கசந்தது.. மாலையில் புது உடை எடுத்து கொடுத்து  அன்பு காட்டிய அஷ்வினிற்கும், தன் உடையில் ரத்தக்கரை பார்த்து முகம் சுளித்தபடி விலகி நின்ற அஷ்வினிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை கண்டு மனம் குழம்பி இருந்தாள்.. அவனை பற்றி கணிக்க முடியாமல், “எப்படியோ இப்ப வீட்டுக்கு போனால் போதும் என்று நினைத்து இருக்கையில் கண்மூடி அமர்ந்து கொண்டாள்..

 

 

எழில் அஷ்வினுடன் காரில் சென்றதை கைகள் கட்டிக் கொண்டு பார்த்து கொண்டிருந்த ஆடவன் “பாவம் அந்த லிட்டில் கேர்ள்.. ஓ காட் அந்த லிட்டில் கேர்ள் சந்தோஷமாக இருக்கணும்.. அவளுக்கு துணையாக இருங்க” என்று சிறு வேண்டுதல் வைக்க, “அதற்கு இப்போது வாய்ப்பில்லை தம்பி..” கடவுளின் மைண்ட் வாய்ஸ் அவனுக்கு கேட்கவில்லை..

 

 

“இப்போ தான் பார்த்த அந்த பொண்ணு மேல உனக்கு எதுக்கு அக்கறை?..” மனசாட்சி அவனிடம் கேள்வி எழுப்ப.. “இது அக்கறை இல்லை ஒரு மனிதாபிமானம்.. அந்த இடத்தில் வேறு யார் இருந்தாலும் இப்படி தான் செஞ்சிருப்பேன்.. உடனே நீ கண்டதை நினைச்சு கேள்வி கேட்காமல் அமைதியாக உள்ளே இரு..” என்று தன் மனதை அடக்கியவன்,  ஹோட்டல் உள்ளே சென்றான்..

 

 

தன் அறைக்கு வந்து இருக்கையில் அமர்ந்த நொடி அவனின் செல்ஃபோன் சத்தம் எழுப்ப,  அழைப்பது யார் என்று பார்த்தவன், முகம் மலர அதை உயிர்ப்பித்து, “விது மச்சி எப்படி டா இருக்க?.. எப்படா மும்பையில் இருந்து வந்த?.. என்று உற்சாகமாக கேட்டபடி இருக்கையில் தளர்வாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தவன் எழில், அஷ்வினை சுத்தமாக மறந்துவிட்டிருந்தான்..

 

இனி வரும் காலங்களில் இந்த லிட்டில் கேர்ள் தன் உறக்கத்தை களவாட போவதை உணராமல் தன் நண்பனிடம் உற்சாகமாக பேசிக் கொண்டு இருந்தான்

 

இமை சிமிட்டும்…

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்