Loading

அத்தியாயம் 8

சன்ஜீவ களுத்துறைக்கு சென்று இரண்டு வாரங்கள் ஆனது..அன்று தான் ஜெனனிக்கு ஃபோனில் இருந்து ஈமெயில் வந்து இருக்க, ஃபோனை எடுத்து பார்க்கும் எண்ணம் இல்லாது தலையணையில் முகம் புதைத்து அழுது கரைத்துக் கொண்டு இருந்தாள் அவள்…

 

ஐந்து வருடம் அவனுக்காக காத்திருக்கும்படி சொல்லிவிட்டு சென்றவனை நினைத்து நினைத்து உள்ளுக்குள் மருகிக் கொண்டு இருப்பவளால் சித்தம் கலங்கி போனது போல் சுற்றி திரிந்து கொண்டு இருந்தாள் ஜெனனி..

 

அவனின் காதலை உணர்த்தி விட்டுச் சென்றாலும் , அவள் மனதில் அவனுக்கான காதலை உணர்த்தவில்லையே என்ற ஆதங்கமே அவளுக்குள் மேலோங்கி இருக்க..“ சொறி சன்ஜு உன் மேல இருக்குற லவ்வை என்னால சொல்ல முடியாம போயிருச்சே ” வாய்விட்டே தலையணையில் முகம் புதைத்துவாறு சொல்ல..

 

அவளை தேற்றி ஆறுதல் படுத்தவோ ஒரு தோள் இல்லையே என்று அவள் நினைத்து கொண்டு இருக்க..

 

அந்த இரவில் அவளின் ஃபோன் ஒலித்தது..ரிங் டொன் சத்தத்தை குறைத்து வைத்திருந்ததால் அவளுக்கு மட்டுமே அழைப்பின் ஒலி செவியில் கேட்க..

 

யார் இந்த நேரத்தில் என்று அவள் மனம் நினைக்காமல் இல்லை..ஃபோனை அவசரமாக எடுத்து பார்த்த வேளையில் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வர..அதுவோ  ஏர்டெல் சிம் ( Airtel Sim ) எண்ணாக இருந்தது..

 

“ இந்த இரவுல ஏர்டெல் கம்பெனி காரன் கால் பண்ண மாட்டானே ” என்று நினைக்க.. அவளின் நுனி மூக்கு கடிக்க ஆரம்பித்தது..ஆள் காட்டி விரலால் மூக்கை தேய்த்துக் கொண்டே “ ஏர்டெல் காரனா இருந்தா கால் கட் பண்ணிடலாம் ” என்று அவள் நினைத்து இருக்க..அடுத்த நிமிடமே தவிடு பொடியாக போகிறது என்று அறியாது பெண்ணவளோ,

 

அழைப்பு ஏற்று காதில் வைத்தாள்.. ஏர்டெல் ( Airtel) நிறுவனத்தில் இருந்து அழைத்ததாக அவளுக்கு தெரியவில்லை..“ ஏர்டெல் கம்பெனி காரன் இல்லையா? அப்ப யாரா இருக்கும் ” ஃபோனை காதில் இருந்து எடுத்து பார்த்த வேளையில்,

 

“ ஜெனி..” அவளின் பெயரை சுருக்கி அழைத்து இருக்க..ஒரு நிமிடமும் தாமதிக்காது அழைப்பை காதில் வைத்ததும் “ ஜெனி ” அதே குரல் அவளுக்கு தெரியுமே குரலுக்கு உரியவனை மீண்டும் கண்கள் கரித்து கொண்டு வந்தது..“ சன்ஜு ” அழுதுக் கொண்டே அவனை அழைக்க..

 

கட்டிலில் அமர்ந்திருந்தவனுக்கோ ஒரு மாதிரியாக மனம் பாரமாகிப் போனது..“ சன்ஜு ” தலையணையில் முகம் புதைத்தவாறு அவள் அழவே,

 

அவனுக்கு கஷ்டமாகிப் போக,‘ காதலை சொல்லி இருக்க கூடாதோ , ஃபோனில் அழைத்து இருக்க கூடாதோ ’ அவன் மனம் நினைக்க..

 

அவன் விழிகளும் கலக்கமுற்றது..“ சொறி ஜெனி உன்னட்ட காதலை சொல்லி உன்ன கஷ்டப்படுத்திடேன்ல ” சிங்களத்தில் அவன் கேட்க..

 

“ அப்படி சொல்லாதீங்க சன்ஜு.. நான் தான் உங்களுக்கு என் காதலை சொல்ல முடியாம தவிச்சுட்டு இருக்கேன் ” என்று வேதனை குரலில் அவள் சொன்னாள்..

 

“ நீ காதலை சொல்லாட்டியும் உன் கண்ண பார்த்து உடனே எனக்கான காதல் உன்னட்ட தெரிஞ்சிதே!..” விழி ஓரம் வழிந்த கண்ணீரை பெருவிரலால் துடைத்தான்..

 

“ பொய் சொல்றீங்க..” அழுகை நிறுத்தி சண்டைக்கு தயாராகி விட்டாள் அவள்..“ ஜெனி அத்தடமய் மம கியன்னே ( ஜெனி உண்மையா தான் நான் சொல்றன்) ” அவன் சொல்ல..

 

“ என்னமோ போங்க..” என்றவளிடம் “ சரி அத விடு.. நான் இல்லன்னு மேடம் ரொம்ப ஃபீல் பண்ணி அழுதீங்களோ? ” அவனை நினைத்து அழுது இருப்பாள் என்று அவனுக்கு தெரியும் அதனாலே அவளின் வாய் வழியே கேட்க விரும்பினான்..

 

களுத்துறை சென்றதோடு ஹொஸ்டல், அதன் பிறகு புது நண்பர்கள், படிப்பு , பயிற்சி என பல்கலைகழகத்தில் அவனுக்கு நேரம் சென்றிட, இன்று அவளுக்கு அழைத்து பேசியே ஆக வேண்டும் என முடிவுடனே அவளுக்கு அழைத்திருந்தான்..

 

“ நீங்க போன நாள்ல இருந்து அழுதுட்டே இருக்கேன் தெரியுமா ? ம்மா என்ன பார்த்து ‘ஏன் ஒரு மாதிரியா சுத்திட்டு இருக்க ’ எண்டு கேட்டு சந்தேக பார்வை வேற , இதுல ப்பா நான் கேட்ட கலர் பூந்தி ( தேன்மிட்டாய்) கொண்டு வந்து கொடுக்காதனாலயோ புள்ள சோகமா இருக்கு எண்டு நினைச்சி தினமும் நைட் வரும் போது பூந்தி கொண்டு வருவார்.. எனக்கு அது பிடிக்கிறதே இல்ல கலர் டய் கலக்குறானே அது தெரிஞ்சதுல இருந்தே சாப்டவே மாட்டேன் அத சொன்னதுக்கு பிறகு தான் வடைய கொண்டு வந்து தறார் தெரியுமா ? ” சோகமாக சொல்ல..

 

“ அப்ப உனக்கு என்ன தான் பிடிக்கும் சொல்லு அத சொல்லு.. ” அவள் இயல்புக்கு திரும்பி விட்டாள் என்று நிம்மதியுடன் பேச்சை வளர்த்தான்..

 

“ படிச்சி முடிச்சி பட்டம் எடுத்துட்டு வாங்க அப்ப சொல்றேன்..ச்சா இப்ப தான் ஞாபகமே வந்துது என் ஃபோன் நம்பர் எப்படி உங்களுக்கு தெரியும் ” என்று அவள் கேட்க..

 

“ நாங்க போன இங்கிலிஷ் அகாடமில கிளாஸ் ப்ரண்ட்ஸ் வாட்சப் க்ரூப் ஓபன் பண்ணாங்களே! எங்க கிளாஸ் மேம் திடீர் எண்டு எக்ஸாம் வச்சா இன்பார்ம் பண்ற மாதிரி க்ரூப்…” 

 

“ ஆ.. ஞாபகம் இருக்கு அதுக்கு தான் ஓபன் பண்ணாங்க.. அந்த க்ரூப் ல நீங்களும் இருந்தீங்களா? ” இடைமறித்து அவள் பேசிட, “நான் இருந்தேன் அதுல தான் உன் நம்பர் எனக்கு கிடைக்கவும் மொபைல்ல சேவ் பண்ணி வச்சுட்டேன் இப்ப அதுதான் எனக்கு ஹெல்ப் ஆச்சு ” இவன் சிங்களத்தில் சொல்ல…

 

அவன் இருக்கும் கட்டிலின் அடுத்த பக்கத்தில் ஒருவனுக்கு இவன் பேசுவது காதில் விழ..தலை தூக்கி சன்ஜீவனை பார்க்க முகம் கொள்ளா புன்னகையுடன் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான்..

 

கண்ணை கசக்கி எழுந்து சன்ஜீவனின் தோளில் அவன் தட்ட..நண்பனை திரும்பிப் பார்த்ததும் திருட்டு முழி முழித்தான் அவன்..

 

“ ஃபோன் ஏகே கவுத பங்..(ஃபோன்ல யாரு டா )” அவன் கேட்க..“ ஏக..மகே யாழுவக் பங் அஜந்த ( அது..என் ப்ரண்ட்டு டா அஜந்த) ” சமாளிப்புடன் சொல்ல..

 

அவன் ஒற்றை புருவம் ஏறி இறங்கியது..ஃபோனில் ஜெனனி “ சன்ஜு யார் கூட பேசிட்டு இருக்கீங்க..? ” அவள் குரல் கேட்டதும்..

 

“ அடோ ஃபோன் ஏகே கெல்லெக்கே கத ஹன்டக் பங்..உம்ப பொரு கிவ்வனே..( அடேய்..ஃபோன்ல பெட்ட ஒண்டுட குரல் டா..நீ என்கிட்ட பொய் தானே சொன்ன..) ” ஜெனனி குரல் கேட்டு அவன் சொல்ல..“ ஷ்…ஹெமிங் கதா கரன்ன அஜந்த..சொறி பங் கெல்லெக் தமய் ( ஷ்..மெதுவா கதை அஜந்த..சொறிடா பெட்ட தான்) ” என்க..

 

“ ஏஹம கியபன்..உம்ப ஆதரே கரன கெல்லெக்த சன்ஜீவ..? ( அப்படி சொல்லு..நீ லவ் பண்ற பெட்டயா சன்ஜீவ? ) ” மெல்லமாக அஜந்த அவனுடன் பேச..

 

“ ஏஹம தெயக் நே பங் மகே ஸ்கோலே பந்தி கெல்லெக் தமய் ( அப்படி எதுவும் இல்ல டா..என் ஸ்கூல் கிளாஸ் பெட்ட தான்..) ” அவன் சொல்ல..

 

அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது “ ஓ ஏஹமத..ஏக நெமய் ஏயா தெமல கெல்லெக்த தெமலென் கதா கரன்னே உம்பட தெமல தேரேனவத சன்ஜீவ? ( ஓ..அப்படியா ? அது சரி அவ தமிழ் பெட்டயா? தமிழ்ல கதைக்கிறா? உனக்கு தமிழ் விளங்குதா சன்ஜீவ ? ) ” வியப்புடன் கேட்க..

 

“ தெமல சுட்டய் கதா கரன்ட தன்னே, ஏத் ஏயா கதா கரன்ன தெமல மட தேரேனவா ( தமிழ் கொஞ்சம் தான் கதைக்க தெரியும்.. ஆனா அவ கதைக்கிற தமிழ் எனக்கு விளங்கும்..) ” என்றான்…

 

“ ஏகத் ஹொந்தய் பங்.. இக்மனின் நிதா கன்ன ஹெட்ட உதேன்ம நெகிடின்ன ஓனேனே பிராக்டிஸ்சுத் தியனா பங்..( அதுவும் நல்லது தான்டா..கெதியா படு நாளைக்கி காலைல எழும்பணும்.. பிராக்டிஸ்சும் இருக்கு டா..) ” சொல்லிவிட்டு அவன் தூங்கிவிட , “ ஹரி பங் ( சரிடா) ” என்றவன் “ ஜெனி ” அவன் அழைத்ததும் “ ஸ்..ஸ்.. ஆ..” அவள் கத்த…

 

“ ஜெனி என்ன ஆச்சு ..” இவன் அங்கிருந்து பதற..“பதறாதீங்க கட்டில்ல தலைய இடிச்சுகிட்டேன்..” தலையை தேய்த்தவாறு,

 

“ கட்டில்ல இடிச்சுகிட்டியே! ” யோசித்தவன் “ ஏய்.. கட்டிலுக்கு அடில இருந்தா பேசுற நீ..” சிரிப்புடன் கேட்க..

 

“ என்ன சிரிப்பு இந்த நேரத்துல யார் கூட கதைக்கிற எண்டு ம்மா வந்த என் ரூம் கதவை தட்டவா? ” சிணுங்களுடன் கேட்க..

 

“ பிஸ்சு கெல்லே! ( முட்டாள் பெட்ட) ” என்றான்..“ முதல்ல கட்டில் அடில இருந்து வெளிய வா நீ அங்க இருந்து கதைச்சா தான் உங்க அம்மா காதுல விழும்..” அவன் சொன்னவுடனே கட்டிலுக்கு கீழே இருந்து வெளியே வந்தாள்….

 

“ நான் வெளிய வந்துட்டேன்… ஃபோன்ல யாரோ பொடியன் கதைக்கிற குரல் கேட்டுச்சே..ஏதோ பிராக்டிஸ் எண்டு சொன்னாங்க யுனிவர்சிட்டில அதெல்லாம இருக்கு ?..” கட்டிலில் சமனம் கொட்டி அமர்ந்து அவனிடம் கேட்க…

 

“ ஓ..அதுவா என் ப்ரண்ட்டு தான் நல்ல பொடியன் ஒரு ரூம்ல மூனு பேர் இருக்கோம்..இப்படி ரெண்டு ப்ரண்ட்ஸ் எனக்கு கிடைப்பாங்க எண்டு எதிர்பார்க்கவே இல்ல.. ரெண்டு பேர்ல ஒருத்தன் தூக்க கலக்கத்துல எழும்பி யார் கூட கதைக்கிற எண்டு விசாரிச்சுட்டு படுத்துட்டான்..ஆமா நீ யுனிவர்சிட்டிக்கு அப்ளை பண்ணிட்டியா? ” பயிற்சி பற்றி அவள் கேட்டதை மறைத்து அவன் பேச்சை மாற்றி அவளுடன் பேசினான்..

 

“ சரி சரி.. உங்களுக்கு நல்ல ப்ரண்ட்ஸ் கிடைச்சதே சந்தோஷம் தான்.. அதெல்லாம் அப்ளை பண்ணிட்டேன் சன்ஜு.. நான் உங்ககிட்ட கேட்கணும் நினைச்சேன் என்கிட்ட ஐஞ்சு வருஷம் கழிச்சி வாறன் எண்டு சொன்னீங்க..ஆனா உங்க வீட்டுல மூனு வருஷம் எண்டு சொல்றாங்களே..” 

 

“ ஓகே..அட அத விடுமா வீட்டுல யாரும் ஃபீல் பண்ண கூடாது எண்டு சும்மா தான் மூனு வருஷம் எண்டு சொன்னேன் ” உதட்டை குவித்து மூச்சை வெளி விட்டவன் , நெஞ்சில் கைவைத்து கொண்டான் ‘ இப்படி இவகிட்ட மாட்டிக்கவே வீட்டுல சொல்லி இருகாங்களே நல்ல வேள தப்பிச்சுட்டேன்’ மனதில் நினைக்க..“ ஓ.. அப்படியா ம்ம்..” பேசிக் கொண்டு இருக்கும் போது “ஜெனனி யார் கூட இந்த நேரத்துல பேசிட்டு இருக்க..” வசந்தா குரல் கேட்டதும்..

 

அதிர்ந்து போய் “ அய்யோ அம்மா! சன்ஜு பாய்..மிஸ் யூ இன்னொரு நாள் பேசுவோம்.. உங்க கூட கதைச்சது ஐ ஆம் வெரி ஹாப்பி ஆனா நான் உங்க கிட்ட கதைக்கிறது அம்மாக்கு கேட்டுட்டு போல குட் நைட்..” அவனை பேச விடாது அழைப்பை துண்டித்து ஃபோனை மேசையில் வைத்துவிட்டு சத்தமில்லாமல் கட்டிலில் ஏறி , 

 

போர்வையை போர்த்தி தூங்கிவிட்டாள்…

 

அவள் அழைப்பை துண்டித்தும் உதடு சிரிப்பில் விரிந்தது..அவளுடன் பேசிய மகிழ்ச்சியிலே உறங்கி விடுவான் அவன்…

 

“ மூனு வருஷம் கெதியா ஓடிட்டா நல்லா இருக்கும்..” என்று அவன் பெருமூச்சுடன் சொல்லிவிட்டு ஃபோன் திரையில், அவளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை அவன் வருடி, “ மிஸ் யூ ஜெனி” அவளுக்கு இதழ் பதித்துவிட்டு படுக்கையில் வீழ்ந்து உறக்கத்தில் ஆழ்ந்தான்…

 

தூக்கத்திலும் இரு வாரங்களுக்கு பிறகு இருவர் உதட்டிலும் புன்னகை மறையவில்லை..

 

 

தொடரும்….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்